இடுகைகள்

அப்பாவின் பேராசையை ஒழித்து நல்லவராக்கும் தோமா! - சவுண்ட் தோமா - திலீப், நமீதா பிரமோத்

படம்
  சவுண்ட் தோமா - திலீப்புடன்(தோமா) சாய்குமார்(பௌலோ) சவுண்ட் தோமா  - ஶ்ரீலஷ்மியுடன் தோமா சவுண்ட் தோமா திலீப், நமீதா பிரமோத், முகேஷ், சுரேஷ்   வெஞ்சரமூடு   வட்டிக்கு பணம் கொடுக்கும், ஊரில் நிறைய தொழில்களை நடத்தும் தொழிலதிபருக்கு மூன்றாவதாக மகன் பிறக்கிறான். பிரசவத்தில் அம்மா, காலமாகிறார். மகனுக்கு தொண்டையில் பிரச்னை உள்ளது. அதற்கு அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், மனைவி இறந்துவிட்டாள். அந்த இழப்போடு ஏராளமான பணத்தை இப்போது   பிறந்த குழந்தைக்கு செலவிடவேண்டுமா என தந்தை நினைக்கிறார். இதனால் அந்த குழந்தைக்கு உதடு பிளவுபட்டு, வளரும்போது குரல் சரியாக வருவதில்லை. குட்டி என்றால் குண்ணி என சத்தம் வருகிறது. குட்டன் பிள்ளை என அவர் சொன்னால் குண்டன் பிள்ளை என்றுதான் சத்தம் வெளியே கேட்கிறது. இதனால் அவருக்கு ஊரில் சவுண்ட் தோமா என பெயரே உருவாகிறது. வட்டிக்கடைக்காரருக்கு மூன்று மகன்கள் (மத்தாய், ஜாய் குட்டி, தோமா) உள்ளனர். அவர்களால் தனக்கு என்ன பிரயோஜனம் என்று பார்த்துத்தான் செலவு செய்கிறார். உண்மையான பாசத்தை அவர் உணர்ந்தாரா, தோமா   தனது வாழ்க்கையை எப்படி நடத்தினான், அவன

தலைமையாசிரியரின் உண்மையான மகனாக மாறும் குற்றவாளியின் மகன்! திலக்கம் - திலீப், காவ்யா மாதவன்

படம்
  திலக்கம் திலீப், காவ்யா மாதவன், நெடுமுடி வேணு, ஹரிஶ்ரீ அசோகன், கொச்சி ஹனீபா கிராமத்திலுள்ள தலைமை ஆசிரியர். சிறுவயதில் தொலைந்து போன உண்ணி என்ற பெயருடைய மகனை பதினேழு ஆண்டுகளாக தேடுகிறார். நாகப்பட்டினத்தில் கிடைக்கும் ஒருவர், தலைமையாசிரியர்   தனது மகன் என கூறி உண்ணியை வரைந்த விதமாகவே இருக்கிறார். ஆனால் சித்த சுவாதீனம் இல்லை. அவரை கிராமத்திற்கு கூட்டி வந்து சிகிச்சை அளிக்க முயல்கிறார். உண்மையில் அவர் கூட்டி வந்த நபர் உண்ணியா இல்லையா, நினைவு திரும்பியதும் எதனால் அவர் அப்படி ஆனார் என தகவல்களை கூற முடிந்ததா என்பதே கதை. ஆற்றுக் கரையோரம், திலீப், இறந்துபோனவருக்கு பிண்டம் வைக்கிறான். அதை ஆற்றில் கரைத்துவிட்டு எழும்போது படிக்கட்டின் மேலே வயதானவர் இளைஞர் ஒருவரோடு நிற்கிறார். அவனைக் கூர்மையாக பார்த்துக்கொண்டே இருக்கிறார். காட்சிகள் பின்னோக்கி நகர்கின்றன. தலைமையாசிரியருக்கு மகள் ஒருத்தி, மகன் ஒருவன். இதில் மகளுக்கு திருமணமாகிவிட்டது. வரதட்சணை பிரச்னை மாப்பிள்ளையோடு இருக்கிறது. அதெல்லாம் தாண்டி அவரது வம்சத்தை மகன் உண்ணி நடத்திக்கொண்டு போவான் என மகனைப் பற்றி நாளிதழில் பதினேழு ஆண்டுகளாக விளம்

பெண்களை அடைத்து வைத்து மாரத்தான் வல்லுறவு கொண்ட குற்றவாளி

படம்
  டெக்சாஸின் எல்பாசோ எல்லை அருகே உள்ள இடம்தான், சியூடாட் ஜூவாரெஸ். மெக்சிகோவில் உள்ள இந்தப் பகுதியில்தான் அதிகளவு பெண்கள் கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இங்கு,   கொலை, வல்லுறவு காரணமாக நடைபெறும் குற்றங்கள் அதிகம். 1990ஆம்ஆண்டில், தொடர் கொலைகாரர்களின் விளையாட்டு மைதானம் என மெக்சிகோவின்   ஜூவாரெஸ் அழைக்கப்பட்டது. இங்கு, போதைப்பொருட்களின் புழக்கம் அதிகம். மேலும் இது தொடர்பாக இங்கு நடைபெறும் வன்முறைக் குற்றங்களின்   எண்ணிக்கையும்   அதிகம். 2003ஆம் ஆண்டு எல்பாசோ டைம்ஸ் என்ற பத்திரிகை, இங்கு ஆண்டுக்கு 340 கொலைகள் நடைபெறுவதாக கூறியது. ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு, கொலையாகும் நபர்களின்   எண்ணிக்கை   370 என எண்ணிக்கையை உயர்த்திக் கூறியது. தொடர் கொலைகாரர்களின் நிலம், மைதானம் என கூறினாலும் இங்கு நடைபெறும் கொலைகளுக்கு எந்த கொலைகார ர்களும் பொறுப்பே ஏற்கவில்லை. காவல்துறையினர் சந்தேகப்படும் ஆட்களையெல்லாம் பிடித்து சிறையில் வைத்திருந்தனர். ஆனாலும் ஜூவாரெஸில் உள்ள பெண்கள் தெருக்களில் இறங்கே நடுங்கும் நிலைதான் அங்கிருந்தது. குற்றங்கள் குறையவே இல்லை. தொண்ணூறுகளில் கொல்லப்பட்டவர்களில் முக்கியமான

நீதிபதியிடம் பிணத்தின் இடதுகாலை ஸ்னாக்ஸாக சாப்பிடக் கேட்ட குற்றவாளி

படம்
  மனித இறைச்சியை உண்பது என்பது டெலிகிராம், டெய்லி புஷ்பம் நாளிதழ்களில் கலோக்கியலாக எழுதப்படுவதாக் பரபரப்பாகிறது. ஆனால் இதெல்லாம் வரலாற்றுக்கு புதிதல்ல. பல்வேறு மக்களின்   இனக்குழுக்களில் கன்னிபாலிசம் எனும் மனித இறைச்சி உண்ணும் பழக்கம் உண்டு. தொடர் கொலைகாரர்களைப் பொறுத்தவரை பாலியல் ரீதியாக, செக்ஸ் ரீதியாக தீவிரம் கொண்டவர்களுக்கு மனித இறைச்சி உண்ணும் பழக்கம் இருந்திருக்கிறது. இதற்கான எடுத்துக்காட்டுகளை குற்றம் சார்ந்த செய்திகளில் எளிதில் பார்க்கலாம்.   மெக்ஸிகோ நாட்டில், ஆஸ்டெக் இனக்குழுவினர் பதினைந்தாயிரம் மக்களுக்கும் மேல் பலியிட்டு, அதை உணவாக உண்டிருக்கிறார்கள். பேரரசர் மாக்டெஸூம்பா தான் தேர்ந்தெடுத்து உடலுறவு கொண்ட சிறுவர்களைக் கொன்று உணவாக்கி சாப்பிட்டிருக்கிறார்.அதை விருந்தாக படைத்திருக்கிறார். இப்படி இறந்தவர்களை தியாகிகளாக அந்த மக்கள் கருதினர். சங்க காலத்தில் கூட போரில் வெற்றி பெறுவதற்காக கழுத்தை அறுத்து கொன்று கொல்வதை உறுதிமொழியாக ஏற்கும் வீரர்கள்   தமிழ்நாட்டில் இருந்திருக்கின்றனர். மேட் மேக்ஸ் ப்யூரி ரோட்டில் கூட தலைவருக்காக வீரமரணம் என ஒரு கூட்டம் நாயகனை கொல்வதற்காக வரும். த

கடவுளின் ஆணைக்கு இணங்கி பெண்களை கொலை செய்தவர் - ஹார்வி லூயிஸ்

படம்
  ஹார்வி லூயிஸ் பெண்களைக் கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி. சட்டம் சீர்திருத்தம் செய்யப்பட்ட காலத்தில் அதன் பயனை அனுபவித்தார். இப்படி சட்ட ரீதியாக பயன் பெற்றவர் அதைப் பயன்படுத்தி திருந்தியிருக்கலாம். ஆனால், ஹார்வி அப்படி ஏதும் செய்யவில்லை. 1951ஆம் ஆண்டு மரணதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்த பிறகு   1960ஆம் ஆண்டு,   பிணை வழங்கப்பட்டது. ஹார்வியைப் பொறுத்தவரை சிறைக்கு முன்னும் பிறகும் எந்த மாற்றமும் இல்லை. கொள்ளை, கொலை, தாக்குதல் என்றுதான் வாழ்ந்தார். இதற்காக, 1965ஆம் ஆண்டு பதினைந்து ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் நல்லவிதமாக நடந்துகொண்டதற்காக தண்டனை குறைக்கப்பட்டு   1969ஆம் ஆண்டு விடுதலையானார். தண்டனைகள், சிறை என்பதெல்லாம் ஹார்வி விஷயத்தில் எதிர்மறையாகவே மாறிப்போனது. சமூகத்தையும், அதில் இடம்பெற்ற பெண்களையும் கடுமையாக வெறுக்கத் தொடங்கினார். இரண்டு முறை விதவைப் பெண்களை திருமணம் செய்தார். ஆனால் யாரிடமும் நெருக்கமாக இல்லை. அவர் பாட்டிற்கு காரை எடுத்துக்கொண்டு தனியாக சுற்றி வந்துகொண்டிருந்தார். இதனால் ஹாரியின் திருமண

பெண்களைக் கொன்று தோட்டத்திலும், வீட்டிலும் புதைத்து வைத்த கொலைகாரர்!

படம்
  கிறிஸ்டி - ஜான் ரெஜினால்டு ஹாலிடே 1898ஆம் ஆண்டு யார்க்‌ஷையரில் பிறந்தவர். சிறுவயதில் இருந்தே பெற்றோரின் அன்பு கிடைக்காதவர். வீட்டில் பெற்றோரால் தண்டனை மட்டுமே அளிக்கப்பட்டவர். இதனால் அடிக்கடி குற்றங்கள் செய்து சிறை சென்று வர தொடங்கினார். பள்ளியில் படிக்கும்போது, போலீஸ்துறையில் கிளர்க் ஆவதுதான் கனவு. ஆனால், அங்கு செய்த திருட்டு காரணமாக பள்ளியை விட்டு விலக்கப்பட்டார். பிறகு அப்பாவின் கார்பெட் தொழிற்சாலையில் வேலைசெய்தார். ஆனால் அங்கும் திருட்டை தொடர்ந்த காரணத்தால், வீட்டை விட்டே அடித்து விரட்டப்பட்டார். பிறகு ராணுவத்தில் சேர்ந்தவர், முதல் உலகப்போரில் பங்கேற்று காயம்பட்டு   ஐந்து மாதங்கள் கண் பார்வையை இழந்திருந்தார். பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பேச்சு சரியாக வரவில்லை. 1920ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பிறகு ஒரு விபத்தில் சிக்கி தலையில் கடுமையாக அடிபட்டது. தற்காலிக பணியாக அஞ்சலகத்தில் வேலை செய்தார். அங்கும் மனிதர் சும்மாயிருக்கவில்லை. ஏராளமான பணவிடைகளை திருடினார். இதற்காக குற்றம்சாட்டி புகார் கொடுக்கப்பட, ஏழு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.ஜானின்   வாழ்க்கை முழுக்க துக்க

சுயத்தை அழித்து காதலை அடையாளம் காண்போம் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
        தென் தேர் ஈஸ் லவ் ஜே கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கம்   குழந்தைகளின் வளர்ப்புக்கு நிறைய பெற்றோர் பொறுப்பேற்று கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்த பொறுப்பை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பது மாறுபடுகிறது. குழந்தைகள் எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது, அவர்கள் என்ன வேலையை செய்யவேண்டும் என பெற்றோர் தீர்மானித்துக் கூறுகிறார்கள். தங்கள் பிள்ளைகள் சமூகத்தில் முக்கியமான இடத்தை அந்தஸ்தை அடைய வேண்டுமென நினைக்கிறார்கள். இதற்குள்தான் அவர்கள் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை ஒரு பகுதியாக வைத்திருக்கிறார்கள். சமூகத்திற்கு பொருத்தமான மனிதர்களாக்க அவர்களை உருவாக்கி போர், முரண்பாடு, கொடூரங்களை செய்யும் விதமாக மாற்றுகிறார்கள். இப்படி பிள்ளைகளை வளர்ப்பதை அக்கறை, அன்பு என்று கூறமுடியுமா? ஒரு செடியை, விதையூன்றி வளர்க்க நாம் நிறைய விஷயங்களை செய்கிறோம். மண்ணைச் சோதித்து, மரக்கன்றை நட்டுவைத்து அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றுகிறோம். ஆனால் பிள்ளைகளை வளர்க்கும்போது, அம்முறையின் வழியாக  அவர்களை மெல்ல கொல்கிறோம். உண்மையில் நீங்கள் பிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்கள் என்றால், உலகில் போர் நடைபெறக் கூடாது. நீங்கள் நேசிக

ஆலன்சேரி தம்பிரான்மார்களின் நட்பும், பிணக்கும்! - ஆலன்சேரி தம்பிராக்கள் - நெடுமுடி வேணு, திலீப்

படம்
  ஆலன்சேரி தம்பிராக்கள் - மலையாளம் - திலீப் ஆலன்சேரி தம்பிராக்கள் -மலையாளம் - திலீப் ஆலன்சேரி தம்பிராக்கள் திலீப், நெடுமுடி வேணு, ஹரிஶ்ரீ அசோகன் ஆலன்சேரி என்ற கிராமம். அங்கு சட்டங்களைப் போடுவது இரண்டு தம்பிரான்மார்கள். ஒருவர் சங்கீதம் பாடும் பாகவதர். அடுத்து, களறி சொல்லிக் கொடுக்கும் சாத்தன் குருக்கள். இருவருமே நண்பர்கள். ஒருவர் சொன்னால் இன்னொருவர் சரி என்று கேட்டுக்கொள்ளும் அளவுக்கு இருவருக்கும் புரிந்துணர்வும் நெருக்கமும் இருக்கிறது. இருவரும் தங்களுக்குத் தெரிந்த சங்கீதம், களறி பயட்டு என இரண்டையும்   தங்களது மகன்களுக்கு மட்டும் சொல்லித் தந்து வருகின்றனர். இவர்களின் நட்பை பார்த்து ஊரே வியக்கிறது. ஊர் முழுக்க தம்பிரான்மார்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிறது. அதேசமயம். பாகவதருக்கு பிரச்னை என்றால் சாத்தன் குருக்கள் களறி கற்ற ஆட்களோடு அங்கு வந்து அடி பின்னிவிடுவார். அதேபோல் சாத்தன் குருக்களுக்கு சிக்கல் என்றால் பாகவதர் அங்கு செல்வார். தனித்தனி வீடுகளில் தத்தம் மகன்களோடு வாழ்ந்து வந்தாலும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காத நட்பு தம்பிரான்களுக்குள் உள்ளது. அதை குலைப்பது போல ஒரு பெண்ணொருத

இரு குடும்பங்களின் பகையைத் தீர்க்கும் காரியஸ்தன் - காரியஸ்தன் - திலீப், அகிலா சசிதரன், ஹரிஶ்ரீ அசோகன்

படம்
  காரியஸ்தன் - மலையாளம் -திலீப் அகிலா சசிதரன் - திலீப் - காரியஸ்தன் காரியஸ்தன் திலீப், அகிலா சசிதரன், சுரேஷ் வெஞ்சரமூடு, ஹரிஶ்ரீ அசோகன் நட்பாக பழகிய இரு குடும்பங்கள் பிரிந்துகிடக்கின்றன. குடும்பங்கள் பிரிவதற்கு காரணமான ஒருவரே பின்னாளில் அதை ஒன்றாக சேர்க்க முயல்கின்றார் ஒருவர். அவ்வளவே கதை. வடக்கு, கிழக்கு என இரு குடும்பங்கள் முதலில் சுவர்களே இல்லாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றன. இரண்டு குடும்பங்களுமே மூடநம்பிக்கை கொண்ட ஆணாதிக்க வாதி குடும்பங்கள்தான். தங்கள் குடும்பத்திற்குள் திருமண உறவு செய்ய நினைக்கிறார்கள். ஆனால் கிழக்கு குடும்பத்தைச் சேர்ந்த மூத்தபிள்ளைக்கு, ஏற்கெனவே ஒரு காதல் இருக்கிறது. ஆனால்,அவரது அப்பா சொன்னதால் அவரது பேச்சையும் உடனே தட்டமுடியவில்லை. டௌரி பணமாக பத்து லட்சத்தையும் பெண் வீட்டார் கொடுத்துவிடுகிறார்கள். இந்த நிலையில் ராஜன் என்ற கல்யாண மாப்பிள்ளை, சுசீலன் என்பவரிடம் டௌரிப் பணத்தைக் கொடுத்துவிட்டு, வடக்கு குடும்பத்திடம் பணத்தை சேர்க்குமாறு சொல்லிவிடுகிறார். பிறகு, கல்யாண வீட்டிலிருந்து தப்பி, தனது காதலியோடு ரயிலில் ஏறப்போகிறார். இவர்களது காதலை அறிந்து ராஜனுக

விவாகரத்தான ஆசிரியையைக் காதலிக்கும் மாணவன்! - கிறிஸ்டி - மேத்யூ, மாளவிகா மோகனன்

படம்
  கிறிஸ்டி 2023 மலையாளம் கிறிஸ்டி இயக்கம் ஆல்வின் ஹென்றி திரைக்கதை – பென்யாமின், ஜிஆர் இந்துகோபன் மாணவன் தன் ட்யூசன் ஆசிரியையைக் காதலிக்கும் கதை. பூவார் எனும் கடற்கரை கிராமத்தில் நடக்கிறது. கதை, ராய் என்ற மாணவனின் பார்வையில் நடைபெறுகிறது. இதனால் அவனது பார்வையில்தான் ட்யூஷன் ஆசிரியையை பார்வையாளர்கள் பார்க்க முடியும்.   சுமாரான படிப்பு, அதிக நேரம் நண்பர்களுடன் விளையாட்டு, நடனம் ஆடுவது என சுற்றுவதுதான் ராயிற்கு விருப்பம். ஆனால் தேர்வில் வெல்ல கொஞ்சமேனும் படிக்கவேண்டுமே? ஜாலி, கேலி மட்டுமே போதாது அல்லலவா? எனவே, பெற்றோர் அவனுக்கு ட்யூஷன் சொல்லித்தர கிறிஸ்டி என்ற ஆசிரியையை ஏற்பாடு செய்கிறார்கள். ராய்க்கு முதலில் கிறிஸ்டி ஜோசப்புக்கு ஏதோ பிரச்னை இருப்பதாக தோன்றுகிறது. பிறகு மெல்ல அவள் சொல்வதைக் கேட்டு படிக்கிறான். பரீட்சையிலும் படித்து வெல்கிறான். அதேசமயம் கிறிஸ்டி சேச்சியுடன் அவன் பழக்கமும் தொடர்கிறது. அவன், அவள் தேர்வுக்குச் செல்ல, உறவினர் திருமணத்திற்கு செல்லவென பல்வேறு உதவிகளைச் செய்கிறான். அவள் சிரிப்பதை, நட்பாக பேசுவதை காதலென நினைத்துக்கொள்கிறான். கிறிஸ்டிக்கு மாலத்தீவில் ஆசிர