இடுகைகள்

உணவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அல்ட்ரா புரோசசஸ்ட் ஃபுட்ஸ்! - பதப்படுத்தப்பட்ட பொருட்களில் என்ன இருக்கிறது?

படம்
  நுட்பமாக பதப்படுத்தப்பட்ட பொருட்கள் குழந்தை உணவுகள், கார்பன் பானங்கள், நொறுக்குத்தீனிகள், பிஸ்க், பிரட், காலை உணவாக சாப்பிடும் உணவுகள், இனிப்புகள், உடனடியாக சூடு செய்து உண்ணும் உணவுகள்   இந்த வகைமையில் வரும். பழச்சாறு சார்ந்த பொருட்கள், மால்டோடெக்ஸ்ட்ரின், டெக்ஸ்ட்ரோஸ், கோல்டன் சிரப், சோயா புரதம், நீரேற்றம் செய்யப்பட்ட எண்ணெய்கள், குளூட்டேன், மோனோசோடியம் குளுட்டமேட், செயற்கை நிறமிகள், அடர்த்திக்காக சேர்க்கும் வேதிப்பொருட்கள், கெடாமல் வைத்திருக்கவும், செரிமானத்திற்காகவும் சேர்க்கப்படும் பொருட்களும் இதில் உண்டு. நுட்பமாக பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு, அடிமைப்படுத்தும் விதமான பொருட்கள் உள்ளன. இதன் விளைவாக ஒருவருக்கு உடல் பருமன், இரண்டாம் நிலை நீரிழிவு நோய், இதயதசை தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இந்த உணவுகளில் புரதம், ஜிங்க்,, மெக்னீசியம், வைட்டமின் ஏ, சி,டி, இ, பி12 ஆகியவை குறைவாக இருக்கும். வயிற்றில் உள்ள செரிமானத்திற்கு உதவும் பாக்டீரியாக்களை இந்த உணவு பாதிக்கிறது. காமில் அஹ்மது கார்டியன் வீக்லி படம் - பின்டிரெஸ்ட்

தெரிஞ்சுக்கோ - பூனைக்குடும்பம்

படம்
  தெரிஞ்சுக்கோ - பூனைக்குடும்பம் காட்டுவிலங்குகளில் அதாவது நிலத்தில் வேட்டையாடுவதில் சிறந்தவை பூனைக்குடும்ப விலங்குகள்தான். சிங்கம், புலி, சிறுத்தை, பனிச்சிறுத்தை, சீட்டா ஆகியவை வலிமையும் அபாரமான வேட்டைத்திறனும் கொண்டவை. காட்டில் வாழும் சிங்கத்தின் ஆயுள் 13-15 ஆண்டுகளாகும். சிங்கத்தின் கர்ஜனை முழக்கம் 5-8 கி.மீ தொலைவு வரை கேட்கும்.   பனிச்சிறுத்தை, 5,859 மீட்டர் உயரத்தில் வாழக்கூடிய திறன் பெற்றது. இரவில் வேட்டையாடும் புலியின கண்பார்வை திறன், மனிதர்களை விட ஆறுமடங்கு ஆற்றல் வாய்ந்தது. அமெரிக்காவில் வாழும் பூனை குடும்ப விலங்குகளில் பெரியது ஜாகுவார்தான். 1.7 மீட்டர் நீளத்தில், 120 கிலோ எடை கொண்டதாக உள்ளது. இரவில் உணவுக்காக மட்டும் ஜாகுவார் பத்து கி.மீ. தொலைவுக்கு பயணிக்கிறது. ஜாகுவாரின் குட்டிகள் பிறக்கையில் கண்பார்வை இல்லாமல் பிறந்து, பதினான்கு நாட்களுக்குப் பிறகு பார்க்கும் திறன் பெறுகின்றன. பூனை குடும்ப விலங்குகளில் இது பொதுவான அம்சம். புலிகளில் ஒன்பது துணைப்பிரிவுகள் உள்ளன. பலி, காஸ்பியன், ஜாவன் ஆகிய பிரிவுகள் ஏறத்தாழ அழிவின் விளிம்பில் உள்ளன. கடந்த 150 ஆண்டுகளில் ப

மனிதர்கள் இல்லாத சூழலில் உயிர்பிழைத்து வாழுமா நாய்கள்?

படம்
  மனிதர்கள் இல்லாத உலகம் ஓடிடிகளில், இணையத்தில் உள்ள மனிதர்கள் பலரும், உலகம் அழியும் சூழலில் மனிதர்கள் எப்படி பிழைப்பது என யோசித்து வருகிறார்கள். இதைப்பற்றி நாவல், சிறுகதை, குறும்படம், வெப்தொடர், திரைப்படம் என படைப்புகளை   எடுத்துவருகிறார்கள். நோயோ அல்லது அணு ஆயுதங்கள் கொண்ட போராலோ மக்கள் பேரழிவை சந்தித்து மீண்டும் உலகில் வாழத் தொடங்குவதுதான் கதை. இந்த மையப்பொருளை அப்படியே மனிதர்கள் இல்லாத உலகில் விலங்குகள் குறிப்பாக நாய்களை வைத்து யோசித்துப் பார்த்தால் எப்படியிருக்கும்? பல்லாண்டுகளுக்கு முன்னரே வீட்டு விலங்கான நாய், மீண்டும் காட்டுக்குத் திரும்பி உணவுக்காக வேட்டையாட முடியுமா, மனிதர்கள் துணையில்லாமல் தன்னைக் காத்துக்கொள்ளுமா என்ற கேள்வி முக்கியமானது. இதே கேள்வியை பூங்காக்களில் உள்ள மனிதர்களைக் கேட்டால், அது சாத்தியமே இல்லை என்று கூறி காரணங்களை அடுக்குவார்கள். ஆனால், அது அவர்கள் பார்வைக் கோணத்தில் சரியாக இருக்கலாம். முழுக்க உண்மையல்ல.   தொடக்கத்தில் சில நாய் இனங்கள் இப்படி தடுமாறினாலும், விரைவில் சூழலுக்கு ஏற்ப தன்னை பொருத்திக்கொள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். காட்டுக்குள

உணவு வீணாவதால் உருவாகும் மீத்தேன் வாயு!

படம்
  ஆண்டுதோறும் 1.4 பில்லியன் டன் உணவுப்பொருட்கள் வீணாகி வருகின்றன. உற்பத்தியாகும் மூன்றில் ஒரு பங்கு உணவுப்பொருள், வீணாகிவருவதாக ஐ.நா அமைப்பு கூறுகிறது. உணவு வீணாவது எந்தெந்த நிலையில் நேரிடுகிறது? உற்பத்தி, அதை ஓரிடத்திலிருந்து சந்தைக்கு கொண்டு செல்வது, விற்பனை, வீட்டு பயன்பாடு என பல்வேறு செயல்களில் உணவு வீணாகிறது. உலக நாடுகளில் நாற்பது சதவீதம் உணவுப்பொருட்கள் அதன் விற்பனை நிலையில்தான் வீணாவது தெரிய வந்துள்ளது. மனிதர்கள் சாப்பிட உற்பத்தியாகும் உணவுப்பொருட்கள் வீணாவது, பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த உணவுப் பொருட்கள் பட்டியால் தசை உருகி கிடக்கும் மக்களுக்கு சென்று சேருவது பல்வேறு உலகளவிலான பொருளாதார கொள்கைகளால் தடுக்கப்படுகிறது.   மக்களுக்கு பயன்படாமல் கெட்டு அழுகிப்போகும் பொருட்களால் வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுவான மீத்தேனின் அளவு கூடுகிறது. உணவு வீணாவதால் உலகளவில் 28 சதவீத வேளாண்மை நிலங்களின் பயன்பாடு சீர்கெடுகிறது.   60 க்யூபிக் கி.மீ அளவு நீர் வீணாகிறது. வீணாகும் உணவை உற்பத்தி செய்யும் செயல்முறையில் வெளியாகும் கார்பன் அளவு 3.6 பில்லியன் டன் ஆகும். உணவை உற்பத்தி செய்ய ப

அதிவேக வேளாண்மை விரிவாக்கத்தால் சிதைந்துபோன சூழல் சமநிலை!

படம்
  உரங்களால் கெட்டுப்போன சூழல் சமநிலை 1960ஆம் ஆண்டு அதிக விளைச்சல் தரும் விதமாக வேளாண்மை துறை மாற்றப்பட்டது. ஏனெனில் அதிகளவு மக்கள்தொகை உருவாகத் தொடங்கிய சூழல். இதனால் காடுகள் அழிக்ககப்பட்டு நன்னீர்நிலைகள் வேளாண்மைக்கு பயன்படுத்தப்படத் தொடங்கின. உணவு உற்பத்தி அதிகரித்தது உண்மை. அதேநேரம் வறுமை, உணவு வீணாவது, மக்களுக்கு இடையே பொருளாதார பாகுபாடு, வசதிகளைப் பெறுவதில் பெரும் இடைவெளி ஆகியவையும் ஏற்பட்டன. உலக நாடுகளில் பல கோடி மக்கள் பட்டினியாக கிடந்தனர். அடிப்படையான நுண் ஊட்டச்சத்து சிக்கலும் எழத் தொடங்கியது. உணவுக்கு கொடுத்த விலை எந்திரமயமாதலுக்கான முதலீடு, தொழிலாளர்கள், உரம், பூச்சிக்கொல்லி ஆகியவை காரணமாக வேளாண்மை துறை முன்னேற்றம் கண்டது. அதிக விளைச்சல் கொண்ட பயிர் ரகங்கள் உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக இயற்கையில் சூழல் ரீதியான பின்விளைவுகள் உருவாயின.   மாசுபாடு, பல்லுயிர்த்தன்மை அழிவு, மண்ணின் வளம் அழிவது, ஒரேவிதமான பணப்பயிரை பயிரிடுவது, பண்ணை விலங்குகளின் நலனில் கவனக்குறைவு ஆகியவற்றை உலக நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொண்டன. நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய உரங்களின் தேவை அதிகமா

ஒரே சமயத்தில் சங்கிலித் தொடராக நடைபெறும் சூழல் பிரச்னைகள்!

படம்
இந்தியாவில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட மிக் 21 விமானங்கள் எப்படி அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது, அப்படியான சூழலில் விமானியை குறை சொல்லி அரசு தப்பிக்குமோ சூழல் பிரச்னையும் இதேபோலத்தான் நேருகிறது. ஏழை மக்களின் உணவு உண்ணும் பழக்கத்தை குறை சொல்கிறார்கள். தொழிற்சாலைகள் செய்யும் பித்தலாட்டங்களை மறந்துவிடுகிறார்கள். எல்லாம் வாங்கும் இனாமிற்கான விசுவாசம் வேறொன்றுமில்லை.  கடலில் வெப்பநிலை உயரத் தொடங்கினால், உடனே பவளப் பாறைகள் அழியத் தொடங்குகின்றன. ஆண்டுதோறும் பவளப்பாறைகள் அழியும் அளவு கூடி வருவதால் விரைவில் அதன் பாதிப்பை உணரத் தொடங்குவோம் என சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.சூழல் பாதிப்பிற்கு மக்கள் இறைச்சி சாப்பிடுவதை குறைக்கவேண்டுமென சில பத்திரிகைகள் எழுதி வருவதை இப்படித்தான் பார்க்கவேண்டும். பல நாடுகள் நாங்கள் பொருளாதாரத்தில் முன்னேறிய பிறகு சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம் என சூளுரைத்து பேசுகின்றன. காசுக்கு மண்டியிடும் ஊடகங்களும் அரசியல் தலைவர்களின் பேச்சை குழப்பமின்றி வெளியிட்டு விசுவாசம் காட்டுகின்றன. முன்னேறியபிறகு மனிதர்கள் பூமியில் உயிர்வாழ இருப்பார்களா என்பதே சூழல் போராட்டக்

விளம்பரங்களை கண்டு ஏமாறாதீர்- எடை குறைப்பு எனும் பெரும் வணிகம்

படம்
  உடல் எடை குறைப்பு உடல் எடையைக் குறைப்பதற்கு மக்கள் இன்னதான் செய்வது என்றில்லாமல் மாத்திரை, அறுவை சிகிச்சை மூலம் குடலை சுருக்குவது, உடற்பயிற்சி என ஏராளமான முயற்சிகளை செய்துவருகிறார்கள். ஆனாலும், உடல் எடை பற்றிய அதீத அக்கறை தீரவே இல்லை. ஜிம்கள் பலவும் உடல் எடையை விரைவில் குறைக்கலாம் என்று சொல்லித்தான் மாதசந்தா சேகரித்து வருகிறார்கள். உடல் எடை அதிகரித்ததில், வரலாறு, தொழில்நுட்ப முன்னேற்றம், நாகரிகம் என பல்வேறு விவகாரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒல்லியாக ஒருவர் இருக்க முயல்வது புதிதானதல்ல. கிரேக்க கடவுள்கள், விக்டோரியா கால மனிதர்களை கட்டான உடல் வடிவத்திற்கு உதாரணமாக கூறுவார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான காலகட்டம் கையில் கிடைத்த உணவுப்பொருட்களை மக்கள் சாப்பிடத் தொடங்கினர். அப்படியான நெருக்கடியான காலகட்டத்திற்குப் பிறகுதான், உடல் பருமன் பிரச்னை அதிகரிக்கத் தொடங்கியது. அந்த நேரம் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் பல்வேறு இடங்களில் விற்கப்படத் தொடங்கின. பள்ளி, கல்லூரி, அலுவலகம் என பல்வேறு இடங்களில் ஸ்னாக்ஸ், குளிர்பானங்களைக் காசு போட்டுப் பெறும் விற்பனை இயந்திரங்கள் வைக்க

அமெரிக்கர்களுக்கு ஏற்படும் உடல் பருமன் பாதிப்பு!

படம்
  உடல் பருமன் நேரடியாக சுற்றி வளைக்காமல் உண்மையைச் சொல்லவேண்டுமெனில், அமெரிக்காவில் உடல் பருமன் என்பது கட்டுப்பாட்டை மீறி சென்றுகொண்டிருக்கிறது. 2017-2020 காலகட்டத்தில் உடல் பருமன் அளவு 12 சதவீதமாக அதிகரித்துள்ளது என அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும்   கட்டுப்பாட்டு அமைப்பு தகவல் தருகிறது. வயது வந்தோருக்கு ஏற்படும் உடல் பருமன் அளவு 4.5 சதவீத அளவாக உள்ளது. வெறும் கலோரிகளை மட்டும் அடையாளம் கண்டு அவற்றை எரிப்பது எனபது உடல் எடையைக் குறைப்பதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. உணவுமுறை, உடற்பயிற்சி என இரண்டுக்கும் இடையில் அதிக இடைவெளி இருந்தது. இதனால், உடல் எடையை ஒருவர் குறைக்க முயன்றாலும் எதிர்பார்த்த அளவில் உடனே பயன் கிடைக்கவில்லை. உடலில் மூளையுடன் தகவல்தொடர்பு கொள்ளும் ஏராளமான உயிரியல் பொருட்கள் உள்ளன. உணவுமுறை மாறி, எடை குறைப்பிற்கு ஒருவர் தயாராகும்போது அவை பல்வேறு தாறுமாறான சமிக்ஞைகளை மூளைக்கு கொடுக்கின்றன. இதனால் ஒருவரின் உடல் செயல்பாடுகள் மாறுகின்றன. எடை குறைப்பிற்கு பல்வேறு உடற்பயிற்சிகளை ஒருவர் செய்தாலும் கூட, அவை பயனில்லாமல் போவது இப்படித்தான். உடலில் கொழுப்பை பல்வேறு இடங்க

கொழுப்பை முதன்மையாக கொண்ட கீட்டோ உணவுமுறை!

படம்
  கீட்டோ உணவுமுறை கீட்டோஜெனிக் உணவு கீட்டோ உணவு முறைக்கு, என்ன அர்த்தம். பெயர் ஃபேன்சியாக கொண்ட உணவுமுறை என்பதல்ல பதில். குறைந்த மாவுச்சத்து, அதிகளவு கொழுப்பு கொண்ட உணவுமுறை என்று அர்த்தம். தினசரி இருபது அல்லது முப்பது கிராம் அளவுக்கு மாவுச்சத்தை எடுத்துக்கொள்ளும் உணவுமுறை கீட்டோ. ஒரு ஆப்பிளில் உள்ள மாவுச்சத்தின் அளவு. உணவுமுறையில் மாவுச் சத்தைக் குறைத்தால் ஒருவருக்கு ஏற்படும் பசியின் வேகம் குறையும். இதன் வழியாக உடல் எடை குறையும். மாவுச்சத்து, புரதம் ஆகிய இரண்டையும் குறைத்துவிட்டு உடலின் தேவைக்கான ஆற்றல் கொழுப்பு மூலம் பெறப்படுகிறது.   ஒருவரின் உடலுக்கான ஆற்றல்   70-80 சதவீதம் கொழுப்பிலிருந்தும். 15-20 சதவீதம் வரை புரதத்தில் இருந்தும், 5-10 சதவீதம் வரை மாவுச்சத்தில் இருந்தும் பெறப்படுகிறது. அமெரிக்கர்கள், தமது உடல் ஆற்றலை மாவுச்சத்திலிருந்து 50 சதவீதமும், புரதத்திலிருந்து 15 சதவீதமும், கொழுப்பிலிருந்து 30 சதவீதமும் பெறுகிறார்கள். புரத தேவையைக் குறைத்து உணவுமுறையை அமைத்துக்கொண்டு வாழ்ந்தால் 65 வயதுக்கு மேலும் நலமுடன் வாழ முடிவதாக ஊட்டச்சத்து அறிவியல் தொடர்பான ஆய்வறிக்கை தகவல் கூ

உடல் எடையைக் குறைக்க என்னென்ன வகையான உணவுகளைச் சாப்பிடலாம்?

படம்
  எடை குறைப்புக்கான உணவுகள் என்னென்ன? எடை குறைப்புக்கு உதவும் உணவுகள் க்ரீன் டீ க்ரீன் டீயை சர்க்கரையோடு போட்டுக் குடித்தால் உடல் எடை குறையாது. இப்படி டீ குடிப்பதை நீங்கள் பழக்கமும் ஆக்கிக்கொள்ளக்கூடாது.   சர்க்கரை அல்லது க்ரீம் என ஏதுமில்லாமல் க்ரீன் டீயை வெந்நீரில் போட்டுக் குடித்தால் நல்லது. மாவுச்சத்தை உடல் உட்கிரகிக்க க்ரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உதவுகின்றன. இதிலுள்ள காஃபீன் உங்களை உற்சாகப்படுத்துகிறது. உடற்பயிற்சியோடு க்ரீன் டீயை இணைத்துக்கொள்வது நல்லது.   ஆப்பிள் சிடார் வினிகர் உணவில் சர்க்கரை, எண்ணெய் இல்லாமல் சிடார் வினிகரைப் பயன்படுத்தினால் கலோரி கூடாது. உடல் எடைக் குறைப்பில் பங்கம் ஒன்றும் நேராது. உணவு உண்ணும் முன்னர் சிடார் வினிகரை நீங்கள் சாப்பிட்டால் ரத்த அழுத்த உயர்வைக் குறைப்பதாக கூறுகிறார்கள். ஆதாரம் என்று கேட்டால் ஆய்வாளர்கள் அதைப்பற்றித்தான் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். உடல் எடையைக் குறைக்க நினைத்தால் ஃபில்டர் செய்யப்படாத சிடார் வினிகரைப் பயன்படுத்துங்கள். பிஸ்தா ஒவ்வொரு கவளம் சோற்றுக்கும் கலோரி கணக்குப் பார்ப்பவர்களுக்கு பிஸ்தா பருப்பு ச

உடல் எடை குறைப்பில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன? - அலசல்

படம்
  உடல் எடை குறைப்பு உடல் எடையைக் குறைப்பது என்பது, மிகப்பெரிய வணிக சேவையாக மாறிவிட்டது. உண்மையில் உடலின் எடையைக் குறைப்பது அவ்வளவு எளிதாக என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் கூறவேண்டும். ஆனால் உடல் எடை குறைப்பது நிச்சயம் என ஏராளமான நூல்கள் எழுதப்பட்டு வெளிவந்துள்ளன. தமிழில் பா.ராகவன் எழுதியுள்ள பேலியோ டயட் இந்த வகையில் முக்கியமான நூல். ஒருவரின் உடல் எடையைக் குறைப்பதில் அவரது மரபணுக்களுக்கு முக்கியமான பங்குண்டு. எழுத்தாளர் பா.ராகவன், தனது பேலியோ டயட் அனுபவங்களை குங்குமத்தில் தொடராக எழுதினார். அதுதான் பின்னாளில் தொகுக்கப்பட்டு நூலானது. பாராவுக்கு, பேலியோ டயட் வேலை செய்தது என்றால் அதேபோல இன்னொருவருக்கு அப்படியே அதே முறையில் வேலை செய்யும் என்று கூறமுடியாது. உடல் மிக சிக்கலான இயந்திரம். குறிப்பிட்ட காலத்திற்கு டயட் முறை வேலை செய்யும்தான். ஆனால் பிறகு உடல் மீண்டும் தனது இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். என்ன பிரச்னை? உடல் எடை குறைப்பதில் ஒருவரின் அடிவயிற்றுக் கொழுப்பு மட்டுமே கரைகிறது என மேலோட்டமாக புரிந்துகொள்வது தவறு. நம்மில் பலருக்கும் உடல் எடை அதிகரிப்பது, உணவுப்பொருட்களை அதிகமாக சாப

உணவுக்குப் பின்னர்/ முன்னர் எப்போது நொறுக்குத்தீனியை சாப்பிடலாம்? - ஆசையோடு சாப்பிட்டாலும் உடல் எடையைக் குறைக்கலாம்!

படம்
  பொதுவாகவே, எனக்கு உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு போவதில் அலர்ஜி. ஆனாலும், அம்மாவுக்கு ஓட்டுநராக சிலசமயங்களில் விழாவுக்கு போய், வண்டிக்கு அருகில் பாதுகாத்து நிற்பது வழக்கம். இந்தவகையில் பெரியம்மா ஒருவரின் பேத்திக்கு பூப்புனித நீராட்டுவிழா நடைபெற்றது. அவர் பெருநகரில் டீ கடையோடு இணைத்து ஹோட்டல்   ஒன்றை வைத்திருக்கிறார். அதை மெஸ் என்று கூறலாம். மைதாமாவைப் பயன்படுத்தி புதுமையாக தோசை, போண்டா, வடை சுடுவதில் பெரியம்மா கடை மாஸ்டர்கள் விற்பன்னர்கள்.   பெரியம்மா, பெருநகரில் ஹோட்டல் மூலம் ஏராளமாக சம்பாதித்தார். இதன் காரணமாக, அவருக்கு, ஏராளமான ஆட்கள், நலம்விரும்பிகளாக நண்பர்களாக சேர்ந்துகொண்டனர்.   பேத்தியின் விழாவிற்கு ஏராளமான ஆட்கள் வந்து, இருசக்கரம், கார் என வசதிப்படி வந்து சிறப்பித்தனர். மண்டபத்தின் சாப்பிடும் பந்தி விரைவில் நிரம்பிவிட்டது. அப்படியிருந்து போட்டி போட்டு   சாப்பிட்டு வந்த சித்தி ஒருவர், எனது அம்மாவிடம் ‘’எல்லாம் நல்லாத்தான் இருந்துதுக்கா. ஆனா ஒரு குறை. ஐஸ்க்ரீம் தரலியே?’’ என்றார். ‘’ஒரு ஐஸ்க்ரீமில் என்னங்க, வெளியில் வாங்கிக்கொள்ளலாம் வாங்க’’ என்று நான் சொன்னதில் இருந்து அவர் இ

எடை குறைப்பிற்காக சாப்பிடும் உணவைக் குறைக்கவேண்டுமா? - மிஸ்டர் ரோனி

படம்
  எடை குறைப்பு கேள்விகள் எடை குறைப்புக்காக குறைந்தளவு உணவை சாப்பிட்டாலும் போதுமா? ஒருவரின் உடல் அமைப்பு, அவர் செய்யும் வேலை பொறுத்து சாப்பிடும் உணவின் அளவு மாறுபடும். வேலையைப் பொறுத்து ஒருவர் தனது   சாப்பிடும் இடைவேளையை அமைத்துக்கொள்ளலாம். மூன்று வேளை உணவு என்பது கட்டாயமல்ல. பசித்தபிறகு சாப்பிடுவது நல்லது. உடலுக்கு உணவு என்பது அடிப்படையானது. எனவே, உடலின் பசித் தேவையைப் பொறுத்து உணவை சாப்பிடுவது நல்லது. ஊட்டச்சத்தான முறையில் உணவை அமைத்துக்கொள்வது சிறந்தது. பல்வேறு வகை சத்துகளை கொண்டதாக உணவை அமைத்துக்கொண்டால் வயிறு நிறைந்துவிட்ட உணவு ஏற்படும். உடல் எடை குறைப்பதில், உடல் உறுப்புகளுக்கான அவசிய சத்துகள் கிடைப்பதை மறந்துவிடக்கூடாது.   கவலை, மகிழ்ச்சி ஆகிய உணர்வுகள் மேலோங்கும்போது, உணவு சாப்பிடுவதை முடிந்தளவு குறைத்துக்கொள்வது முக்கியம். இவையே உடல் பருமனை ஊக்குவிக்கிறது. எடை குறைவை உறுதிப்படுத்துவது எப்படி? தினசரி காலையில் எடை மெஷின் மீது ஏறி நின்று எடை குறைந்ததா என்று பார்க்க அவசியமில்லை. வாரத்திற்கு ஒருமுறை எடையை சோதித்தால் போதுமானது. தினசரி செய்யும் உடற்பயிற்சி, நீர், எடுத்துக்

உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப்பொருட்கள்!

படம்
  natashapehrson.com உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுப்பொருட்கள் இன்று ஏராளமான டயட்கள் நடைமுறையில் உள்ளன. நீங்கள் எந்த டயட்டை பின்பற்றினாலும் சில உணவுப்பொருட்களுக்கு உரிய தனித்தன்மைகள் உண்டு. அந்த வகையில் அவை ஒருவரின் உடலை மெலிதாக்குகிறது. பழக்கமாக்கிடுங்க என விளம்பர பாணியில் கூற முடியாது. ஆனால் வாய்ப்பு கிடைத்தால் மறக்காமல் வாங்கி சாப்பிடுங்கள் என்று வைத்துக்கொள்ளுங்களேன். யோகர்ட் யோகர்ட்டை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கி சாப்பிட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் பழக முயற்சிக்கலாம். அதில், குறைந்தபட்சம் இரண்டுக்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் அதில் இருக்க வேண்டும். லாக்டோபேசில்லஸ் பல்கேரியஸ், ஸ்ட்ரெப்டோகாகஸ் தெர்மோபிலஸ் ஆகியவை பாக்டீரியாக்களுக்கு உதாரணம். யோகர்டை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, ஜிம்மில் செய்யும் தசை அழகு பயிற்சியை ஆதரித்து வளப்படுத்தும். யோகர்ட்டை பிளெயின் என்ற வகையில் வாங்கி பயன்படுத்தவேண்டும். குறிப்பிட்ட ஃபிளேவர் வகையில் வாங்கினால் அதில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். யோகர்டில் சர்க்கரைக்கு பதிலாக பழங்களை இனிப்புக்காக சேர்த்து சாப்பிடலாம். கால