இடுகைகள்

கலவரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேச பாதுகாப்பு சட்டம் என்பது பசுக்கொலைகளை உள்ளடக்கியது அல்ல! முன்னாள் நீதிபதி கோவிந்த் மாத்தூர்

படம்
            கோவிந்த் மாத்தூர் , முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம் , தேர்தல் ஆணையத்தின் மீது கொரோனாவை பரப்பிய காரணத்திற்காக வழக்கு பதியவேண்டும் என்று கூறியுள்ளதே ? நீங்கள் நீதிமன்றம் இயங்கும் விதத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் . நீதிமன்றம் சொல்லும் ஒவ்வொரு வாக்கியங்களையும் ஆராய்ந்தால் கடினமாகவே இருக்கும் . நீதிமன்றங்கள் இப்படி கூறுவது இயல்பானதுதான் . இதனை தலைப்புசெய்தியாக ஊடகங்கள் மாற்றுகின்றன . ஆனால் இதனால் முக்கியமான விஷயங்கள் மக்களின் கவனத்திற்கு வராமல் போகின்றன . நீதிபதிகள் தங்கள் வரையறைகளைத் தாண்டி நடந்துகொள்கிறார்கள் என்று புகார்கள் கூறப்படுகின்றனவே ? உயர்நீதிமன்றம் இப்படி நடந்துகொள்வதாக தெரிந்தால் உடனே உச்சநீதிமன்றத்தை அணுகலாம் . அதில் எந்த தவறும் இல்லை . நீதிமன்றங்கள் நடந்துகொள்வதற்கான விதிமுறைகள் உள்ளன . தவறுகள் கண்டறியப்பட்டால் அவை மெல்ல சரிசெய்யப்படுவது உறுதி . பெருந்தொற்று காலத்தில் நீதிமன்றத்தின் செயல்பாடு எப்படியிருக்கவேண்டும் என நினைக்கிறீர்கள் ? அவர்களின் பணி என்ன ? அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளைக் காப்பதுதான

கிழிந்து தொங்கும் சுயசார்பு இந்தியா திட்டம்!- ஆக்சிஜன் கொடுப்பது எப்படி?

படம்
                ஆத்மா நிர்பாரத மிஷன் கடந்த ஆண்டு மே 12 இல் பிரதமர் மோடி , ஐந்து அம்சங்களைச் சொல்லி ஆத்மாநிர்பாரத திட்டத்தை அறிமுகப்படுத்தினார் . உலகம் நமக்கு கற்றுத்தந்துள்ள பாடங்களில் சுயசார்பும் ஒன்று . இதனை ஈஷாபந்தா என்ற நூலில் கூட கூறியிருக்கிறார்கள் . தன்னிறைவு பெற்ற இந்தியா என்பது அதுதான் என பேசினார் . அதற்குப்பிறகு மத்திய அரசு அறிவிக்கும் நிதிசார்ந்த திட்டங்களுக்கு சுயசார்பு , தன்னிறைவு ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன . அக்டோபர் , நவம்பரில் மானியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன . பிறகு கொரோனா பாதிப்பு ஒருநாளுக்கு மூன்றரை லட்சம் பேரை பாதித்தவுடனே ஆத்மாநிர்பார் கோஷங்கள் தடுமாறத் தொடங்கின . உடனே இந்திய அரசு தனது சொந்த நாட்டு பெருமைகளை ஒரம்கட்டிவிட்டு அமெரிக்க வழங்கிய நூறு மில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவிகளைப் பெற்றது . இதில் ஆயிரம் சிலிண்டர்கள் , 15 மில்லியன் என் 15 மாஸ்குகள் , ஒரு மில்லியன் சோதனைக் கருவிகள் உள்ளடக்கம் . இருபது முதல் முப்பது மில்லியன் தடுப்பூசிகள் ஆஸ்ட்ராஜெனகாவும் அடங்கும் . இதோடு சீனாவும் இந்தியாவுக்கு பல்வேறு உதவிகளை வழங்க முன்வந்தது . எல்லை

மம்தாவை எங்கள் கட்சியினர் கொச்சைபடுத்தி பேசவில்லை! மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

படம்
          அமித்ஷா உள்துறை அமைச்சர் விவசாயிகள் போராட்டத்தில் பாஜகவின் அணுகுமுறை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது . பஞ்சாப்பில் உள்ள சீக்கியர்களை மத்திய அரசு சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறதே ? சீக்கியர்களுக்கு என்று தனிச்சட்டம் கிடையாது . நாடு முழுக்க உள்ள விவசாயிகளுக்கு இந்த சட்டங்கள் பொருந்தாதா என்ன ? அவர்கள் வெவ்வேறு பெயர்களில் போராட்டங்களை நடத்தட்டும் . உண்மை என்னவென்றால் , நாட்டின் சட்டம் இப்படித்தான் உள்ளது . இது அந்த மாநிலத்தில் கட்சியை பாதிக்காதா ? அங்கு கட்சிக்கு சில சவால்கள் உள்ளன என்பது உண்மைதான் . அதை சரி செய்ய நாங்கள் உழைத்து வருகிறோம் . விவசாய சட்டங்கள் மக்களுக்கு உதவக்கூடியவை என்று கூறுவதற்கு முயன்று வருகிறோம் .. விரைவில் மக்களே அதனை உணர்ந்துகொள்வார்கள் . விவசாயிகளுக்கு ஆதரவாக ஷிரோன்மணி அகாலிதளம் உங்கள் கூட்டணியை விட்டு பிரிந்துபோய்விட்டது . அவர்களுடன் பேசினீர்களா ? நாங்கள் அக்கட்சி தலைவர் பர்காஷ் சிங் பாதலுடன் பேசினோம் . ஆனாலும் அவர் கூட்டணியை விட்டு விலகிவிட்டார் . என்ன செய்வது ? நாங்கள் அனைத்து கட்சிகளுடனும் பேச

மதவாத குழுக்களுக்கு கேரளத்தில் எந்த வரவேற்பும் கிடைக்காது! கேரள முதல்வர் பினராயி விஜயன்

படம்
          பினராயி விஜயன் கேரள முதல்வர் உங்கள் இடதுசாரி அரசை மோசமாக காட்சிபடுத்துவதோடு , அதனை பலவீனப்படுத்தவும் மத்திய அரசு முயற்சிக்கிறது என்று கூறிவருகிறீர்கள் . ஏன் அப்படி கூறுகிறீர்கள் ? எங்கள் அரசு மீதான தாக்குதல் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது . அப்போது பஞ்சாயத்து தேர்தலில் இடதுசாரி அரசு வெற்றி பெற்றிருந்தது . ஊடகங்களை விலைக்கு வாங்கிய பாஜக தலைவர்கள் அரசு மீது குற்றச்சாட்டுகளை வீசத் தொடங்கினர் . மத்திய ஏஜென்சிகளை பயன்படுத்தி மாநில அரசின்போது பல்வேறு வழக்குகளைத் தொடுத்தனர் . என்மீது புகார் கொடுத்தவர் தற்போது அதனை மறுத்துவருகிறார் . அவரின் பெயரை நான் கூற விரும்பவில்லை .    தங்க கடத்தல் வழக்கு பற்றி முன்னதாகவே பிரதமருக்கு எழுதியிருக்கிறேன் என்று சொன்னீர்கள் . வழக்கு விசாரணை எங்கு தவறாகிப்போனதுழ பிரதமருக்கு கடிதம் எழுதியது உண்மைதான் . தங்கத்தை சட்டவிரோதமாக கடத்துவது என்பது பொருளாதாரத்திற்கு ஆபத்தானது . விசாரணை தொடங்குவதற்கு ஆதரவாக நின்றேன் . ஆனால் மெல்ல மத்திய அரசின் விசாரணை எங்கள் அரசின் கொள்கைகளுக்கு எதிராக திரும்பிவிட்டது . நீங்கள் முன்னர் காங்

நவகாளி யாத்திரை! - கலவரத்தை நிறுத்திய காந்தியின் பயணம்

படம்
  நவகாளி யாத்திரை! - கலவரத்தை நிறுத்திய காந்தியின் பயணம் ஆங்கிலேயர் ஆட்சியின் பிடியிலிருந்து இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரமடைந்தது. அதற்கு முன்னதாகவே இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை, சமாளிக்க முடியாத ஒன்றாக மாறத் தொடங்கியிருந்தது. இதன்விளைவாக, இந்தியா சுதந்திரமடைந்த நாளின்போது கூட காந்தி கலவரங்களைத் தடுப்பதற்கான பணியில் இருந்தார்.   1946 ஆம் ஆண்டு முஸ்லீம் லீக் கட்சி, தனிநாடு கோரிக்கைக்காக தொடர்ச்சியாகப் போராடி வந்தது. இந்நோக்கத்தை அரசுக்கு வலியுறுத்த பேரணி நடத்த முடிவானது.  இறுதியாக, ஆகஸ்ட் 16 ஆம் தேதியை நேரடி நடவடிக்கை நாளாக அறிவித்தது முஸ்லீம் லீக் கட்சி.  முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த இடங்களில் நடந்த கட்சிப் பேரணி, திடீரென வன்முறைப் பாதைக்குத் திரும்பியது. இதன் விளைவாக, கோல்கட்டாவில் வாழ்ந்த இந்துக்களின் கடைகளும், வீடுகளும் கொள்ளையிடப்பட்டன. இதற்கடுத்த நாள் இந்து அமைப்புகள், முஸ்லீம்களின் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தினர். பல்லாயிரக்கணக்கான மக்கள், இக்கலவரத்தில் பலியானார்கள்.  கலவரத்தை முடிவுக்கு கொண்டுவருவது எப்படி என வழிதெரியாமல் ஆங்கில அரசும் திகைத்து நின

எம்மி விருதுக்கு சென்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான படம்!

படம்
        எம்மி விருதுக்கு சென்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான படம்! இந்தியா பர்னிங் என்ற படம்தான் 2020ஆம் ஆண்டிற்கான செய்திப்பட தொகுப்பாக சிறப்பு பிரிவில் இடம்பெற்றது. பத்திரிகையாளர் இசோபெல் இயுங் என்பவர் இச்செய்திப்படத்திற்காக இந்தியாவில் காஷ்மீர், அசாம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று அதனை பதிவு செய்துள்ளார். முக்கியமாக பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமியிடமும் நேர்காணல் பெற்றுள்ளார். இந்த படம் எம்மி விழாவில் விருது பெறவில்லைதான். ஆனால் இதில் இடம்பெற்றது என்பதே பெருமைக்குரியது என்கிறார் இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான காஷ்மீரைச் சேர்ந்த அஹ்மத் கான். நாங்கள் விருது பெறவில்லையென்றாலும் இந்த படம் இதயப்பூர்வமாக எடுத்தபடம் என்பதில் சந்தேகமில்லை. இப்பணிகளை நாங்கள் தொடர்வோம் என்று கூறுகிறார்.   இப்படத்தில் இவர் அசாம் பகுதி போராட்டங்களை எடுக்க உதவியுள்ளார். அகதிகள் முகாம் அமைக்கும் பணி, அஹ்மத் கானின் அம்மா குடியுரிமை பட்டியலில் விடுபட்டுள்ள சிக்கலை பதினாறு நிமிட படம் பதிவு செய்துள்ளது. சட்டம் அங்கீகார

அமெரிக்காவின் புதிய ஆயுதம்! - மக்களை விரட்ட புதிய ஆயுதம் உருவாக்கப்பட்டுவிட்டது

படம்
        sample image       அமெரிக்காவின் புதிய ஆயுதம் !   அமெரிக்க கடற்படையினர் தற்போது புதிய ஆயுதம் ஒன்றைச் சோதித்துவருகின்றனர் . கொலராடோ நகரைச் சேர்ந்த ஹர்கைண்ட் டைனமிக்ஸ் என்ற நிறுவனம் , மின் அதிர்ச்சி துப்பாக்கிகளை உருவாக்கி வருகிறது . இந்த ஆராய்ச்சிக்கு அமெரிக்கா அரசின் பாதுகாப்புத்துறை நிதியுதவி அளிக்கிறது . இக்கருவியின் பெயர் ஸ்பெக்டர் (Small arms pulsed electronization tetanisation at extended range). இதனை நூறு மீட்டருக்கும் அதிகமாக தூரத்திலிருந்தும் மனிதர்கள் மீது இயக்கி தாக்க முடியும் என்று கூறுகிறது தயாரிப்பு நிறுவனம் . இத்தாக்குதல்களுக்கு உள்ளாகுபவர் , மின் அதிர்ச்சியால் தாக்கப்பட்டு மயங்கி விழுவர் . தற்போது வரை அமெரிக்காவில் பயன்படுத்தி வரும் டாஸர் என்ற கருவி வயர் மூலம் மனிதர்களுக்கு மின் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது . இது எட்டு மீட்டர் தூரத்திற்குள்தான் செயல்படும் . இதனால் ஏற்படும் அதிர்ச்சி , பாதிப்பு பற்றி சாதக , பாதக கருத்துகள் நிறைய இருக்கின்றன . ஆனால் அடிப்படையில் இதில் போலீசார் மூலம் தாக்கப்படுபவர் மின்னதிர்ச்சி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துவிடுவார்

டிஜிட்டல் வரலாற்றை மாற்றி எழுத முடியுமா? - மாட்டிக்கொண்ட விக்கிப்பீடியா

படம்
இன்று எந்த தகவல்கள் தேவை என்றாலும் பலரும் சொடுக்குவது விக்கிப்பீடியாவைத்தான். சிலர் இதனை பல்வேறு எடிட்டர்கள் திருத்துவதால் தகவல்கள் சரியாக இருப்பதில்லை என்று பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தை நாடுவார்கள். ஆனால் அதிலும் கூட தொன்மையாக தகவல்கள்தான் இருக்கும். நடப்பு சம்பவம், விருதுவாங்கிய நபர் என்றால் விக்கிப்பீடியாவில் எளிமையாக அவர் பற்றி தகவல்களை பதிவிட்டு பக்கங்களை உருவாக்க முடியும். தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் இந்துத்துவா குண்டர்கள், போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தினர். சிலர் உத்தரப்பிரதேசத்திலிருந்து துப்பாக்கியோடு களத்தில் குதித்து போராட்டக்காரர்கள்  மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் தொடுத்தனர். டில்லியில் அண்மையில் தேர்தல் வெற்றியை ருசித்த அரவிந்த் கெஜ்ரிவால் நமக்கு எதற்கு வம்பு என்று போராட்டக்காரர்கள் மீது நடந்த தாக்குதல், முஸ்லீம் வீடுகளை எரித்த சம்பவ இடத்திற்கு கூட வராமல் நடுநிலை காத்தார். நிச்சயம் வரலாறு இதற்காகவே அவரை நினைவுகூரும். இந்த வெறுப்புவாத கலவரத்தை தூண்டிவிட்டவர்களில் முக்கியமானவர்கள

உங்கள் உரிமைக்காக கல்வி பெறுங்கள்! - மிஸ் மேஜர் கிரேசி!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் மிஸ் மேஜர் கிரிஃபின் கிரேசி அமெரிக்காவில் பிறந்த மனித உரிமைப் போராளி. ஸ்டோன்வால் கலவரம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஆர்வமாக கலந்துகொண்டவர். மாற்றுப்பாலினவருக்கான அங்கீகாரத்திற்காக பல்வேறு பேரணிகளை நடத்தியிருக்கிறார். நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். சிகாகோவின் தெற்குப்பகுதியில் 1940 ஆம் ஆண்டு பிறந்தார். பிறப்பால் ஆணாக இருந்தவர், இளம் வயதிலேயே தன்னை பெண்ணாக உணரத்தொடங்கினார். 1950களில் அவரின் பாலினத்தை அறிவிப்பதை நினைத்துப் பாருங்கள். அமெரிக்காவில் தன் கருத்துகளை வெளியிட்டு கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தார். மேலும் பல சம்பவங்களில் மாற்றுக்கருத்து கொண்டவர்களால் தாக்கவும் பட்டிருக்கிறார். தன் உடலை பெண்ணாக மாற்ற ஹார்மோன் மருந்துகள் தேவை என்பதை உணர்ந்தார். அதற்கு காசு சேர்க்க, விபசாரத்தை நாடினார். திருட்டுகளில் ஈடுபட்டார். பிற சட்டவிரோத செயல்களையும் செய்தார். ஏனெனில் வாழ அப்போது வேறுவழி இருக்கவில்லை.  நாம் நம்மைப் பற்றிய விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டிருக்க வேண்டாம். நமக்கென இருக்கும் இடத்திற்கு செல்லலாம் என்று தன் மனதில் தோன்றிய கர

சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் ஏன்?

படம்
முஸ்லீம் எழுத்தாளர்கள் அஞ்சுவது ஏன்? பாஜக அரசு கருத்தியல் ரீதியாக தொடர்ந்து சிறுபான்மையினரை அச்சுறுத்தி வருகிறது. இதன் விளைவு எப்படியிருக்கிறது? அரசு அளிக்கும் தடுப்பூசியைக் கூட தன் இனத்தை அழிக்கும் முயற்சியாக பயப்படும் அளவுக்கு சென்றிருக்கிறது. இது மட்டுமல்லாமல் முஸ்லீம் மக்களை தொடர்ச்சியாக கிண்டல் செய்வது, உரிமை கேட்பவர்களை பாகிஸ்தானுக்கு செல்லக்கூறுவது என நிலைமை எல்லை மீறி சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு குறிப்பிட்ட ஒருவரைக் குறைசொல்வதை விட நாட்டின் நிலை அப்படி யோசிக்க சொல்லுகிறது என புரிந்துகொள்ளலாம். நாட்டின் நிராதரவான நிலையை எப்படி மக்களிடம் அரசு ஒப்புக்கொள்ளும்.? உடனே பாகிஸ்தான்தான் பிரச்னைக்கு காரணம், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள்தான் இந்தியாவின் பிரச்னைக்களுக்கு மூல ஊற்று என பற்றி வைத்தால் போயிற்று. அனைத்து ஊடகங்களும் கைப்பிடியில் இருக்க கவலை என்ன? நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய குழந்தையை நான் பெற்றெடுத்தேன். அப்போது அவளை முஸ்லீம் பெயரைச் சொல்லி எப்படிக்கூப்பிடுவது பிரச்னை ஏற்படுமா என்றுகூட பயந்துகொண்டிருந்தேன் என கூறுகிறார் எழுத்தாளர் நாசியா எரும். மதரி