இடுகைகள்

நாவல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆறுதலின் பேராறு - ரூஹ் - நாவல் - ல.ச.கு

படம்
  லஷ்மி சரவணக்குமார் ல.ச.கு - ரூஹ் நாவல் ரூஹ் லஷ்மி சரவணக்குமார் முஸ்லீம்களின் வாழ்க்கை, அவர்களுக்கு கிடைக்கும் ஆன்மிக தரிசனம், அதை நோக்கிய பயணம் என பல்வேறு விஷயங்களை மனமுருகும் மொழியில் பேசுகிற நாவல் ரூஹ். கொமோரா என்ற நாவல் முழுக்க உள்ள கோபம், வன்மம், வன்முறை குதப்புணர்ச்சி என ஒரு வித வெறுப்பின் சூடு குறையாமல் இருக்கும். அதன் ஒருபகுதியாக இருக்கவேண்டிய நூல் இது. ஆனால், ஆசிரியரின் முடிவால் தனி நாவலாக மாறியிருக்கிறது.   ரூஹ் நாவலில் ஒப்பீட்டளவில் வன்முறை சற்று குறைவு. ஆனால்   இதிலும் பால்ய கால கேலி கிண்டல், அவமானத்திற்கு பழகுதல், காயப்படுதல், பலவந்த ஓரினப் புணர்ச்சி, தடவுவதல், கைவேலை ஆகியவை உண்டு. ஆனால் இதெல்லாம் நாவலின் சிறுபகுதிதான். இதையெல்லாம் கடந்த தன்மை,விருப்புவெறுப்பற்ற இயல்பை நோக்கி நாவல்   செல்கிறது. நீதி, அநீதி, நியாயம், அநியாயம், நல்லது , கெட்டது என்ற நிலையைக் கடந்து உடல், மனம் என அனைத்தையும் ஒருவன் ஒடுக்கி அதன் வழியாக இறைவனைச் சென்றடைவது, அந்த நிலையிலிருந்து பிறரின் வாழ்வுக்காக இறைவனிடம் யாசிப்பது, பிரார்த்திப்பது என மாறும் வாழ்க்கை பற்றிய விவரணைகள் மனதை பித்தாக்குகி

கலாசாரத்தை இழந்த குற்றவுணர்ச்சி! - தந்தைக்கோர் இடம் - அன்னி எர்னோ - எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி- நாவல்

படம்
    தந்தைக்கோர் இடம் அன்னி எர்னோ பிரெஞ்சிலிருந்து தமிழில் – எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி காலச்சுவடு பதிப்பகம் மூல நூல் – லா பிளேஸ்   2022ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் அன்னி எர்னோவின் நூல். பிரான்சில் வாழும் அன்னி, தனது பெற்றோர்,தனது வாழ்க்கை பற்றி எழுதியுள்ள   சுயசரிதைக் கதைதான் தந்தைக்கோர் இடம். நாவல் 74 பக்கங்களைக் கொண்டது. எனவே, வேகமாக வாசிப்பவர்கள் வாசிக்கலாம். ஆனால் முடிந்தவரை நிதானமாக வாசிப்பதே நல்லது. இதன் மூலம் கதையில் வரும் நாயகியின் அப்பா பற்றி முழுமையாக புரிந்துகொள்ள முடியும். பிரான்சிலுள்ள ஒய் எனும் ஊரில் வாழ்பவர், நாயகியின் அப்பா. இவர் தொழிற்சாலைத் தொழிலாளியாக இருந்தவர். அதிக படிப்பறிவு இல்லாதவர். அதனால், ஏற்பட்ட தாழ்வுணர்ச்சி அவருக்கு இறக்கும் நாள்வரை மனதில் உள்ளது. அதன் விளைவாக அவர் என்னென்ன விஷயங்களைச் செய்கிறார். தனது கல்வி கற்ற மகளிடம் எப்படி நடந்துகொள்கிறார், அவரது நண்பர்களை எப்படி வரவேற்கிறார் என்பதைக் கதையில் விவரித்து கூறியிருக்கிறார் எழுத்தாளர் அன்னி எர்னோ. நாவலின் தொடக்கமே, ஆசிரியர் வேலை கிடைத்த மகள், இரண்டு நாட்களுக்குப் பிறகு   இறந்துப

யூதமக்களின் வாழ்க்கையை உலகப்போர் பின்னணியில் அங்கதமாக விவரிக்கும் நாவல்! ஷோஷா - ஐசக் சிங்கர்

படம்
  ஷோஷா ஐசக் பாஷாவிஸ் சிங்கர் தமிழில் கமலக்கண்ணன் போலந்து நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஐசக் பாஷாவிஸ் சிங்கர் இத்திய மொழியில் எழுதிய நாவல். தமிழில் கமலக்கண்ணன் வெகு சிரத்தையெடுத்து மொழிபெயர்த்திருக்கிறார்.   போலந்து நாட்டில் உள்ள யூதக்குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஆரோன் கிரடிங்கர். இவர்கள் யூத மத ராபி குடும்பம். இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஆரோன், இன்னொரு மதம் சார்ந்த பஷிலி – செல்டிக் ஆகியோரின் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுகிறான். பஷிலியின் பெண்தான் ஷோஷா. இவள் புத்திசாலி கிடையாது. ஆனால் ஆரோன் சொல்லும் கதைகளையெல்லாம் பொறுமையாக கேட்பவள். ஆரோனுக்கு மிக நெருக்கமான அவனை கிண்டல் செய்யாத தோழி, அவள் மட்டுமே. ஆரோன் தனது அப்பா படிக்க கூடாது என்று சொல்லும் நூல்களை படித்துத்தான் தனது இலக்கிய வாழ்வை தொடங்குகிறான். அவர்களது குடும்பம் பிழைக்க பல்வேறு இடங்களுக்குச் செல்கிறது. ஆரோனின் தம்பி யூத மத வழக்கப்படி ராபி ஆகிறான். ஆனால் ஆரோன் இலக்கியவாதியாக எழுத்தாளனாகிறான். தமிழ் எழுத்தாளர்கள் தமிழ்நாட்டில் எழுதிய நூல்களின் ராயல்டிக்கு ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்கும் நிலை. போலந்திலும் கூட அப்படித்

வலி, வேதனையின் வரலாற்றை விவரிக்கும் நாவல் இஸ்தான்புல் - நிலவறைக் கைதிகளின் குறிப்புகள்

படம்
    இஸ்தான்புல்  புர்கான் சென்மெஸ் துருக்கி நாவல் தமிழில் முகமது குட்டி காலச்சுவடு இந்த நாவல் இஸ்தான்புல் நகரில் வாழும் மனிதர்களை அங்குள்ள அரசு கடத்தி சிறையில் அடைக்கிறது. அடைக்கப்படும் மனிதர்கள் யாவருமே சர்வாதிகார அரசுக்கு எதிரானவர்கள். அவர்களை அடித்து உதைத்து சித்திரவதை செய்து புரட்சி இயக்கத்தை அழிக்க அரசு நினைக்கிறது. அப்படியான முயற்சியில் கைதாகும் பல்வேறு மனிதர்களின் நினைவில்தான் கதையின் பாதை பயணிக்கிறது. கதையில் இஸ்தான்புல் நகரே ஒரு பாத்திரம் போல வருகிறது. அங்கு விற்கும் பல்வேறு உணவுகள், ஏழை மக்களின் வாழ்க்கை, அவர்களுக்கு நம்பிக்கை தரும் பல்வேறு கோஷங்கள் என கதை சுவாரசியமாக உள்ளது. நாவிதன் காமோ, திமிர்த்தோ, டாக்டர், குஹெய்லன் மாமா, மாமாவின் உறவினரான இளம்பெண் என கதை நெடுக வரும் பாத்திரங்கள் குறைவுதான். நிலவறை சிறையில் வாழும் மனிதர்கள் தங்களின் கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்த்து தங்களின் கதையை வாசகர்களுக்கு முன்வைக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது, எதனால் சிறைக்கு பிடித்து வரப்பட்டார்கள், அவர்களை விட்டுச்சென்றவர்களின் வாழ்க்கை என கதை வேதனையான சித்திர

சொத்துக்காக சிறுமியின் உயிரைப் பறிக்க காஷ்மோரா பூதத்தை ஏவும் கும்பல்! துளசிதளம் - எண்டமூரி வீரேந்திரநாத்

படம்
  துளசிதளம்  எண்டமூரி வீரேந்திரநாத் தமிழில் கௌரி கிருபானந்தன் அல்லயன்ஸ்  துளசிதளம் நாவல் தலைப்பை அறிந்தவுடன் கோட்டயம் புஷ்பநாத் நாவல் போல இருக்குமோ என யாருமே நினைக்கலாம். ஆனால் உண்மையில் கதை அப்படி அமையவில்லை.  ஶ்ரீதர், சாரதா, துளசி, அனிதா, நாராயணன் ஆகிய பாத்திரங்கள் முக்கியமானவை. துளசி என்ற ஶ்ரீதர் - சாரதா தம்பதிக்கு பிறக்கும் மகளுக்கு ஶ்ரீதரின் நிறுவன முதலாளி சொத்துக்களை எழுதி வைக்கிறார். இந்த சொத்து துளசிக்கு பத்து வயது ஆனபிறகு  கிடைக்கும். அப்படி அவள் பத்து வயதுக்குள் இறந்துவிட்டால், சொத்து கிருஷ்ணா என்ற ஆசிரமத்திற்கு கிடைக்கும். சொத்துக்காக ஆசிரம தலைவர் செய்யும் அதீத செயல்பாடுகளும் அதற்கான எதிர்வினையாக ஶ்ரீதர், அவரின் நண்பர் நம்பூதிரி, வழக்குரைஞர் லட்சுமிபதி, மருத்துவர் பார்த்தசாரி, ஹிப்னாட்டிச பேராசிரியர் ஆகியோர் என்ற செய்கிறார்கள் என்பதுதான் இறுதிப்பகுதி.  நாவலில் எண்டமூரி வீரேந்திர நாத்தின் புத்திசாலித்தனத்தை எங்கு வியக்கிறோம் என்றால் அது நூலின் இறுதிப்பகுதியில்தான்.அதில் காஷ்மோரா பூதம் அதிருப்தியடைந்து துளசியை விட்டுவிட்டதா, அவளைக் கொல்லும் முயற்சியை ஹிப்னாட்டிச பேராசிரியர் தா

காடுகளை பாதுகாக்க அதை நேசிக்கும் பளியன் செய்யும் கொலை - கானகன் - லஷ்மி சரவணக்குமார்

படம்
  கானகன் (நாவல்) லஷ்மி சரவணக்குமார்   பளியர்களின் வாழ்க்கையை பேசும் நாவல். பளியக்குடிகள் காடுகளை நேசித்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு வேலை என்பது விவசாயம் சார்ந்த்துதான். அதுவும் கூட காட்டின் இயல்பறிந்து நடப்பதுதான். அதை அழித்து தன் வழிக்கு கொண்டு வருவது அல்ல. ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்காமலா இருக்கும்? அப்படியான அழிவுகளை தொடங்கி வைப்பவனாக இருக்கிறான் தங்கப்பன். நாவல் முழுக்க வரும் பாத்திரம் வேட்டைக்காரரான தங்கப்பன்தான். இவன்தான் வேட்டை என்பதை வாழ்நாள் முழுக்க தொடரும் தன்னை மறக்கும் நிலையாக, பாலுறவு போன்று பார்க்கும் மனிதன். இதனால்தான் தங்கப்பனுக்கு வேட்டை என்பது முக்கியமான ஒன்று. இந்த வேட்டையாடும் வெறியான மனநிலையை கஞ்சா தோட்ட முதலாளிகள், விவசாய பண்ணைக்காரர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். நாவலின் முதல் காட்சியே காட்டின் அழிவைத் தொடங்கி வைக்கும் நிகழ்வுதான். காட்டின் உணவுச்சங்கிலியை பாதுகாக்கும் குட்டி ஈன்ற பெண் புலியை வேட்டையாடி கொல்கிறார்கள். அதில் தங்கப்பன், மாட்டுப் பண்ணை நடத்தும் அன்சாரிக்காக புலியை வேட்டையாடுகிறான். இதில் ஏற்படும் வினை அதற்கான விளை

குழந்தை கடத்தப்பட அவளை மீட்கப் போராடும் தாயின் கதை! - 400 டேஸ் - சேட்டன் பகத்

படம்
  400 டேஸ்  சேட்டன் பகத் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் சியா அரோரா என்ற பதிமூன்று வயது சிறுமி கடத்தப்படுகிறாள். அவள் காணாமல் போய்விட அவளது குடும்பம் படும் துயரமும் அதை தீர்க்க சியாவின் அம்மா ஆலியா அரோரா எடுக்கும் முயற்சிகளும் தான்  கதை.  பெடோபில்லே என சொல்லுவார்கள். குழந்தைகளை கடத்தி அவர்களை வல்லுறவு செய்யும் மனிதர்கள்... அவர்களைப் பற்றியதுதான் கதை. இதனால் 400 டேஸ் என்ற ஆங்கில நூல் முக்கியத்துவம் பெறுகிறது.  இந்த நாவலிலும் சேட்டன் பகத்தின் யூஷூவலான அத்தனை அம்சங்களும் உண்டு. காதல், மோதல், செக்ஸ், நட்பு, (கணவன், மனைவிக்கு இடையிலான மோதல், குடும்ப பிரச்னை, உணவு ஆகியவை எல்லாம் புதியது).  கதையில் முக்கியப் பாத்திரங்கள் கேஷவ் ராஜ் புரோகித் , சௌரப் மகேஷ்வரி, ஆலியா அரோரா, மணிஷ் அரோரா, புரோகிதர் சாஸ்திரி, இன்ஸ்பெக்டர் சௌதாலா, சப் இன்ஸ்பெக்டர் வீரென், சியா அரோரா, குட்டி பாப்பா சுகானா அரோரா.  கேஷவ் ராஜ்புரோகித்தின் வாழ்க்கையைத் தான் சேட்டன் தொடக்கத்தில் மெதுவாகச் சொல்லுகிறார். குடிமைத்தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கும் வாலிபர். கூடவே வயது 30 என்பதால் கேஷவின் பெற்றோர், அவருக்கு கல்யாணம் பார்த்து வைக்க அலைபாய்

நாட்டை துண்டாடிய காந்தி, ஜின்னாவின் முரண்பட்ட கருத்துகள்! - புத்தகம் புதுசு

படம்
  புத்தகம் புதுசு  ரைட்டர் - ரெபல், சோல்ஜர், லவ்வர் - தி மெனி லிவ்ஸ் ஆஃப் அக்யேயா  அக்ஷயா முகுல்  வின்டேஜ் புக்ஸ் 2017ஆம் ஆண்டு அக்ஷய முகுல் இந்து பிரஸ் அண்ட் மேக்கிங் ஆஃப் இந்து இந்தியா என்ற நூலை எழுதினார். இதில் மதம், அரசியல், தேசியம் என நிறைய விஷயங்களைப் பேசியிருக்கிறார். இந்த நூலை ஜாலியாக படிக்கலாம் என்றும் சொல்ல முடியாது. கல்விக்கானது என்றும் கூறமுடியாது.  இப்போது எழுதியுள்ள இந்த நூல் சச்சிதானந்த ஹிரானந்தா வாத்சியாயன் வாழ்க்கையைப் பேசுகிறது. இவரது வாழ்க்கை இரண்டு உலகப்போர்களை மையமாக கொண்டது. அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏவுடன் கொண்டுள்ள உறவு, தனிப்பட்ட காதல் உறவு என பல்வேறு விஷயங்களை முகுல் நூலில் விவரிக்கிறார். இந்தி இலக்கியத்தில் முக்கியமான புனிதர் ஆனது பற்றி எழுதியிருப்பது வாசிக்க சுவாரசியமாக உள்ளது.  கிரிம்சன் ஸ்பிரிங் நவ்தேஜ் சர்னா ஆலெப் ஜாலியன் வாலாபாக் படுகொலையை ஒன்பது நபர்கள் பார்க்கிறார்கள். இவர்களில் சிலர் ஆங்கிலேயர்கள், இந்தியர்கள், படித்தவர்கள் என உள்ளனர். இவர்களின் மனப்போக்கில் அந்த சம்பவம் எப்படி பதிந்துள்ளது என்பதை நாவலாக எழுதியுள்ளார் ஆசிரியர்.  எ கன்ட்ரி கால்டு சைல்

நகர இளைஞரை மயக்கும் இயற்கையின் பேரழகு! வனவாசி - விபூதிபூஷன் வந்தோபாத்யாய

படம்
  வனவாசி விபூதிபூஷன் வந்தோபாத்யாய விடியல் ரூ.270 மொழிபெயர்ப்பு - த.நா.சேனாபதி நகரவாசி ஒருவர், எப்படி வனத்துக்குள் வேலை செய்ய வந்து வனவாசி ஆகிறார் என்பதே கதை.  தினந்தந்தி போல ஒருவரியில் கதையை இப்படி சொன்னாலும் படிக்கும்போது நாம் பார்க்கும் மனிதர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நாவல் முடியும் வரை புதிய மனிதர்கள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறார்கள். நாவலின் புதிய பாணி என கொள்ளலாம்.  கல்கத்தாவில் விடுதி ஒன்றில் தங்கி வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்தான் கதை நாயகன். விடுதி மெஸ்சில் அக்கவுண்ட் வைத்து சாப்பிடுபவருக்கு, வேலை கிடைத்தால் தான் சாப்பாட்டுக்கடனை அடைக்க முடியும். இந்த நிலையில் நண்பர் அழைத்தார் என விழா ஒன்றுக்கு செல்கிறார். அங்கு நிம்மதியாக சாப்பிட்டுவரும்போது கல்லூரி நண்பர் ஒருவரைப் பார்க்கிறார்.  அவர் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் மூலம் பூர்ணியா எனும் காட்டுப்பகுதியில் உள்ள நிலங்களை கவனித்துக்கொள்ளும் வேலைக்கு செல்கிறார். நகரில் இருக்கத்தான் இளைஞருக்கு விருப்பம். ஆனால் வேலை வேண்டுமே என்பதற்காக ஜமீன் காரியாலயத்திற்கு செல்கிறார். அங்கு செல்வதற்கான பயணமே காரியாலய வாழ்க்கை 

சூரியவம்சிகளை அழிக்க பாசுபாஸ்திரத்தை ஏவும் சிவன்! - வாயுபுத்திரர் வாக்கு- அமிஷ் திரிபாதி

படம்
  சிவா முத்தொகுதி வாயு புத்திரர் வாக்கு அமிஷ் திரிபாதி வெஸ்ட்லேண்ட் முதல் இரு பாகங்களில்... இதுவரை..... குணாக்களின் தலைவரான சிவன், நீலகண்டர் என அடையாளம் காணப்படுகிறார். அவரை அடையாளம் கண்ட சூரிய வம்சிகள் தங்களுக்கு ஏற்ப அவரை மூளைச்சலவை செய்கின்றனர். இதனால் சோமரஸம் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து சந்திரவம்சிகளால் உருவானது என நம்புகிறார். இதனால் போர் நேரிடுகிறது. இதில் சந்திரவம்சிகள் தோற்றுப்போகின்றனர் அயோத்யாவின் ஸ்வத்பீட மன்னர் திலீபர், தோற்றுப்போனாலும் அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் சூரியவம்சிகள் பக்கம் நீலகண்டர் இருப்பது அவரை நிலைகுலைய வைக்கிறது. உண்மையில் நீலகண்டர்  சூரியவம்சி மற்றும் சந்திரவம்சிகளுக்கு பொதுவான ஆளுமை, கடவுள். இதை நீலகண்டர் உணர வாசுதேவர்கள் உழைக்கிறார்கள். டெலிபதி மூலம் அவரிடம் தொடர்புகொண்டு மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் சொல்லுகிறார்கள்.  சிவனுக்கு இயல்பிலேயே டெலிபதி திறன் உள்ளது. ஆனால் அதனை செயல்படுத்த சற்று உயர்ந்த இடத்திலுள்ள கோவில்களுக்கு செல்லவேண்டியுள்ளது. முதல்பாகத்தில் சிவன் நீலகண்டராக மாறுகிறார். தேவகிரி செல்கிறார். சூரியவம்சி மன்னரான

தனது நண்பனைக் கொன்றதற்கு பழிவாங்க நாகர்களை தேடி பயணிக்கும் சிவன்! - நாகர்களின் ரகசியம் - சிவா முத்தொகுதி 2

படம்
  நாகர்களின் ரகசியம் அமிஷ் திரிபாதி பவித்ரா ஸ்ரீனிவாசன் வெஸ்ட்லேண்ட் அமிஷ் திரிபாதி குணாக்களின் பிரதிநிதியான சிவா, நீலகண்டராக மெலூகா நாட்டினரால் வணங்கப்படுகிறார். இந்த நேரத்தில் அவருக்கு அவர் செய்யும் செயல்பாடுகளை விளக்க கோவிலில் வாசுதேவர்கள் உதவுகின்றனர். இவர்கள் சிவாவின் மனதில் எழும் கேள்விகளுக்கு கூட பதில் சொல்லும் வல்லமை பெற்றவர்கள். இந்த நேரத்தில் ப்ரஹஸ்பதி என்ற ஞானி ஒருவரை சிவா சந்திக்கிறார். இவர்தான் மந்த்ரமலை என்ற இடத்தில் சோமரஸத்தை ஆய்வு செய்து தயாரிக்கிறார். அதை மேம்படுத்த முயன்றுவருகிறார்.  சதியை மணம் செய்துகொள்ள சிவன் விரும்புகிறார். இதற்கான வழிமுறையை வாசுதேவர் தான் சொல்லித் தருகிறார். அதன்படி சிவா சதியின் மனத்தை வெல்கிறார். திருமணம் நடைபெறுகிறது. விகர்மாவான சதியை மணந்துகொள்ள மெலூகாவில் உள்ள விகர்மா சட்டத்தை மாற்றுகிறார். சட்டத்தை எப்போதும் மீறாத சதி, காதல் வந்தபிறகு அவளால் சிவனை தவிர்க்க முடியாமல் போகிறது.  இந்த நூலில் முக்கியமான விஷயம் நாகர்கள் யார் என்பதுதான். நாகர்களை மெலூகர்கள், ஸ்த்பவ நாட்டைச் சேர்ந்த மக்கள், காசி மக்கள் என பலரும் நாகர்களை வெறுக்கிறார்கள். இத்தனைக்கும
படம்
  சிவா முத்தொகுதி -  மெலூகாவின் அமரர்கள் அமிஷ் திரிபாதி தமிழில்  - பவித்ரா ஸ்ரீனிவாசன் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் ராமர் இறந்தபிறகு நடக்கும் கதை. அயோத்யா, தேவகிரி ஆகிய நாடுகளை சந்திரவம்சி, சூரியவம்சி ஆகியோர் ஆளுகின்றனர். இதில் சூரியவம்சி ஆண்மைய சமூகம். சந்திர வம்சி, பெண் மைய சமூகம். இவர்களை நல்வழிப்படுத்துவதற்காக அவதரிப்பவரே நீலகண்டவர். ஆனால் இவரை இரு இனத்தாரும்தான் கண்டுபிடிக்கவேண்டும். யாராவது ஒருவர் புறம் நீலகண்டர் நின்றால், மற்றொரு சமூகம் அழிந்துவிடும்.  இது  முத்தொகுதியின் அடிப்படையான கதை.  மெலூகாவின் அமரர்கள் கதை, மானசரோவரில் வாழும் ழங்குடி இனமான குணாக்களிலிருந்து சிவன் என்பவர் மெலூகர்களின் நகரிற்கு வருவதில் தொடங்குகிறது. குணாக்களை வழிநடத்தும் இனக்குழு தலைவன் சிவா. இவர்களை ஒழித்துக்கட்ட நினைக்கும் எதிரிகளை எதிர்த்து போரிட்டுக்கொண்டே மெலூகாவிற்கு வந்து சேர்கிறார்கள். பழங்குடிகள் என்றால் எப்படி, வேட்டையாடிய விலங்குகளின் தோலைத்தான் அணிந்திருக்கிறார்கள். மது, மரிஜூவானா ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள். இவர்களை மெலூகாவிற்கு நந்தி ராணுவ தளபதி அழைத்து வருகிறார். எதற்காக பழங்குடிகளை அழைத்து வந்

கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம் ஆங்கில மொழிபெயர்ப்பில்.... - புதிய நூல்கள் அறிமுகம்

படம்
  புதிய நூல்கள் அறிமுகம் வீ மூவ் குர்நாய்க் ஜோகல் செர்பன்ட் டெய்ல் 499 இங்கிலாந்தில் குடியேறிய ஆசிய மக்கள் பற்றிய கதைகளை நூலில் கூறுகிறார்கள். மேற்கு லண்டன் பகுதியில் ப்ரீத்தி வாழ்கிறாள். இவளது பாட்டி பஞ்சாபி மொழியைப் பேசுகிறாள். இருவருக்குமான இடைமுகமாக இருப்பது ப்ரீத்தியின் அம்மாதான். இவர்களது உலகம் சார்ந்த சிக்கல்களை ஆசிரியர் விவரித்திருக்கிறார்.  நியூ அனிமல் எல்லா பாக்ஸ்டர் பிகாடர் 799 அமெலியா, இறந்து போனவர்களின் உடல்களை அலங்கரிக்கும் தனது குடும்ப நிறுவனத்தில் வேலை செய்கிறாள். அவள் ஆன்லைனில் தனது காதலைக் கண்டுபிடிக்கிறாள். இடையில் அந்த உறவை இழக்கிறாள். பாலுறவு, இறப்பு, துக்கம் என பல்வேறு விஷயங்களை அவள் எப்படி அடையாளம் காண்கிறாள் என்பதே கதை. வலி என்பது உடல்தோறும் மாறிக்கொண்டே இருப்பதை வாசிக்கையில் வாசகர்கள் எளிதாக உணரலாம்.  லாஸ்ட் கேர்ள் சனா ஷெட்டி ஹார்ப்பர் கோலின்ஸ் இந்தியா 299 சிம்லாவில் நடைபெறும் திரில்லர் கதை. இங்கு பணியில் ஓய்வு பெற்ற அதிகாரி வனெஸ்ஸா தனது கணவர் அடியனோடு வாழ்கிறார். ஒருநாள் சாலையோரத்தில் உள்ள புதர்ப்பகுதியில் பெண் ஒருவர் அடிபட்டு குற்றுயிராக கிடப்பதைப் பார்த்து அ

மரப்பாச்சி சொன்ன ரகசியம் நாவல் - இனி இலவசமாக யாரும் அச்சிட்டு விற்கலாம்!

படம்
  பல்வேறு ஊடகங்களில் வேலை பார்த்து வந்த பத்திரிகையாளர் திரு.பாலபாரதி அவர்களின் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை பேட்டி இது. இந்த பேட்டிக்கு முன்னரே, தனது வலைத்தளத்தில் மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலை யார் வேண்டுமானாலும் அச்சிட்டு விற்றுக்கொள்ளலாம் என அனுமதியை வழங்கிவிட்டார்.  மின்னூல், ஊடக படைப்பாக்கங்களுக்கு அனுமதி தேவை என கூறியிருப்பது பொதுவுடமை ஆட்களுக்கு சற்றே கஷ்டமாக இருக்கலாம்.  குழந்தைகள் மீதான  பாலியல் வல்லுறவு பற்றிய கதையைப் பேசும் நூல்  மரப்பாச்சி சொன்ன ரகசியம். இலவசமாக, எழுதிய ஆசிரியருக்கு ராயல்டி தராமல் அச்சிட்டுக்கொள்ளலாம் என்று கூறிய முயற்சிக்கு எந்தளவு ஆதரவு இருக்கும் என்று தெரியவில்லை. ஏதாகிலும் இப்படி வெளிப்படையாக அறிவித்த திரு. பாலபாரதி அவர்களுக்கு நன்றி கூறவேண்டும்.  எழுத்தை வாழ்க்கையாக வாழ்வாதாரமாக கொண்ட எழுத்தாளர்கள் இப்படி துணிச்சலாக அறிவிப்பை வெளியிட நிறைய நெஞ்சுரம், விட்டுக்கொடுத்தல் தேவை. செல்லுமிடமெங்கும் தன்னை இடதுசாரி சிந்தனையாளர் என தைரியமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் திரு. பாலபாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்.   நூல், பாலபாரதி டாட் நெட் வலைத்தளத்தில்

அமெரிக்காவை திகைக்க வைக்கும் அழகிய இரும்பு பட்டாம்பூச்சி! - லாரா - ரா.கி.ரங்கராஜன் - நாவல்

படம்
  லாரா  ஷிட்னி ஷெல்டன் (தி ஸ்டார்ஸ் ஷைனிங் டவுன்) தமிழில் - ரா.கி. ரங்கராஜன்  அல்லயன்ஸ் வெளியீடு ரூ.400 லாரா கேமரான் என்ற கட்டுமான உலகின் மகத்தான தொழிலதிபர் பற்றிய ஏற்றமும் வீழ்ச்சியும் பற்றிய கதை.  ஸ்காட்லாந்தைப் பாரம்பரியமாக கொண்ட குடும்பம் லாராவினுடையது. ஆனால் அவளது அப்பாவிற்கு வாழ்க்கையில் பெரிய லட்சியம் கிடையாது. அதாவது வயிற்றுப்பாட்டை சமாளிக்க கூட திறனில்லாத தறுதலை. இந்த நேரத்தில் அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பத்தை ஏற்படுத்திக்கொள்கிறார். அவருக்கு பிறக்கும் இரட்டை குழந்தைகளில் பெண் குழந்தை மட்டுமே பிழைக்கிறது. ஆண் குழந்தை பிறந்தவுடனே இறந்துபோகிறது.  இது தான் நாயகியின் அறிமுக காட்சி. ராஜ மௌலி படம் போல நினைக்க ஏதுமில்லை. எல்லாமே அவமானங்கள்தான். லாட்ஜ் ஒன்றை நிர்வாகம் செய்து அதில் கிடைக்கும் வாடகை வருமானத்தை ஓனரிடம் ஒப்படைத்தால் கிடைக்கும் தொகையை வைத்துத்தான் லாராவின் அப்பா, விலைமாது விடுதியில் போதையேற்றிக்கொண்டு கிடக்கிறார்.  இப்படியிருக்க மெல்ல லாரா லாட்ஜில் உள்ள விவகாரங்களை கவனிக்கிறாள். பிறகு அப்பா, விபத்தாகி படுத்துவிட அனைத்து விஷயங்களையும் அவளை கவனிக்கும்படி ஆகிறது. வ

கல்வியைக் கற்கும் பெண்களே திருமண வயதைத் தீர்மானிக்கவேண்டும்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புள்ள இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமா? இன்று நான் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துக்கொண்டு நண்பர் சக்திவேலைப் பார்க்க சென்றேன். படம் பார்க்கலாம் என்றார். தினசரி மூன்று படங்களைப் பார்க்கும் சினிமா விரும்பி அவர். நான் உங்களுடன் பேசினாலே போதும் என்றேன். மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக பேசும் மனிதர்.  திறக்கக்கூடாத கதவு - ரா.கி.ரங்கராஜன் எழுதிய நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். பேய்க்கதை. தியாகு என்பவர் கதையை சொல்கிறார். நல்ல ஆவி, அதை முடக்கும் கெட்ட ஆவி என கதை சுவாரசியமாக செல்கிறது. நண்பர் சக்திவேலிடம் சுவிசேஷங்களின் சுருக்கம் - லியோ டால்ஸ்டாய் எழுதிய நூலை படிக்க வாங்கி வந்தேன். நேரம் ஒதுக்கி படிக்கவேண்டும். மனம் முழுக்க வேலை பற்றிய அலுப்பு உள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை.  கணினி பழுதாகிவிட்டது. அதுவும் ஒருவகையில் நல்லதுதான். இப்போதுதான் நூல்களை ரிலாக்ஸாக படிக்க முடிகிறது.  நன்றி! அன்பரசு  11.12.2021 ------------------ அன்பு நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமா? வீட்டில் உள்ளோரையும் கேட்டதாக சொல்லுங்கள். சுவிசேஷங்களின் சுருக்கம் நூலை 50 பக்கங்கள் ப

12G பஸ்சில் சில ஆண்டுகளுக்குப் பிறகு இனிய பயணம்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புள்ள நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா? ஜனவரி 3 இதழ் வருவதற்கான எழுத்துவேலைகள் தொடங்கிவிட்டன. கிறிஸ்மஸிற்கு கூட அலுவலகத்தில் விடுமுறை விடவில்லை. வேலை செய்யும் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் சிறப்பு விடுமுறை. 50 இதழ்கள் வெளிவர வாய்ப்புள்ளது. மேன்ஷனில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை  10க்கும் மேல் போய்விட்டது. எனவே, சமையல் செய்வதை நிறுத்திவிட்டேன். கொஞ்சம் வயிற்றுக்கு பொருந்தி வரும் உணவகங்களில் சாப்பிட்டுவருகிறேன்.  தாரகை - ரா.கி.ரங்கராஜன்  எழுதிய நாவலைப் படித்து வருகிறேன். மாஃபியா கும்பலால் பாதிக்கப்படும் பெண் ட்ரேஸி எப்படி திருடி ஆகிறாள், அவளது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்ததா என்பதுதான் கதை. முழுக்க வெளிநாடுகளில் நடக்கிறது. 361 பக்கங்கள் படித்திருக்கிறேன். ரொமான்டிக் என்ற தெலுங்குப்படத்தைப் பார்த்தேன். படத்தில் பெரிதாக எதிர்பார்த்து பார்க்க ஏதுமில்லை. காதல் காட்சிகளை மட்டும் கவனம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். வேறொன்றும் இல்லை. சிறிய பட்ஜெட் படம்.  நன்றி! அன்பரசு 9.11.2021 --------------------------- அன்புள்ள முருகு அண்ணாவுக்கு, வணக்கம். நலமா?  திறக்கக்கூடாத கதவு - ரா.கி.ரங்கராஜன் நாவலைப