இடுகைகள்

ரத்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடற்பயிற்சி எதற்காக?- இதயம், நுரையீரல் செயல்பாடுகளை அறிவோம்.

படம்
                உடலை எப்படி அசைக்க முடிகிறது ? உடலிலுள்ள தசைகள் ஒன்றாக இயங்கினால் மட்டுமே நமது கைகால்களை அசைத்து நகர முடியும் . தசைகள் உள்ளிழுக்கப்படும் தன்மை கொண்டவை . வெளித்தள்ளும் திறன் இல்லாதவை . தசைகள் இழுக்கப்படும்போது உடல் உறுப்பு குறிப்பிட்ட திசையில் நகரும் . இன்னொரு தசை உள்ளிழுக்கப்படும்போது இன்னொரு திசையில் உறுப்புகள் நகரும் . தசைகள் குழுவாக இயங்குவதால் நாம் உடலை அனைத்து திசைகளிலும் நகர்த்திக்கொள்ள முடியும் . வளைக்கலாம் நேராக்கலாம் . முழங்கையின் முன்பகுதி உயர்ம் குறைவாக இருக்கும் பின்பகுதி பைசெப்ஸ் அமைந்துள்ளது . பைசெப்ஸ் தசைகளை ட்ரைசெப்ஸ் தளர்த்துகிறது . முழங்கையை எளிதாக மடக்கும் இணைப்பு எலும்புகளும் இங்குள்ளன . இதனை தெளிவாக பார்க்க கைகளின் அமைப்பு அல்லது பாடி பில்டர்களின் கைகளைப் பார்க்கலாம் . உடற்பயிற்சி காரணமாக அவர்களின் தசை அமைப்புகள் தனியாக தெளிவாக தெரியும் . எதற்காக உடற்பயிற்சி ? உடற்பயிற்சி செய்பவர்களுக்கு தசைகள் பெரிதாகவும் வலிமையாகவும் உருவாகும் . புதிய தசை நார்கள் உருவாகும் . எனவே தினசரி நீங்கள் செய்யும் வேலைகளைப் பொறுத்து இருப

உலக மக்களை அதிகம் பாதிக்கும் பூஞ்சை பாதிப்பு! கேண்டிடா ஆரிஸ்

படம்
  அதிகரிக்கும் பூஞ்சைத்தொற்று! வைரஸ், பாக்டீரியா நோய்த்தொற்றுகளுக்கு நிகராக பூஞ்சைகளால் ஏற்படும் நோய்த்தொற்று பாதிப்பும் அதிகரித்து வருகிறது. ஸ்டெபைலோகாகஸ் ஆரியஸ் (Staphylocaccus aures), குளோஸ்டிரிடியம் டிஃபிசிலே (clostridium difficille) ஆகிய பூஞ்சைகள் ஆன்டிபயாடிக் மருந்துகளை செயல்படாமல் தடுக்கின்றன. இதன் காரணமாக நிமோனியா, கொனோரியா, செப்சிஸ், காசநோய் ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன. இப்போது உலகில் ஏற்படும் 90 சதவீத நோய்த்தொற்றுக்கு காரணமாக கேண்டிடா ஆரிஸ் (Candida auris) எனும் பூஞ்சையே காரணமாக உள்ளது. இதைத் தடுக்கும் மருந்துகளுக்கு எதிரான ஆற்றலை மெல்ல வளர்த்துவருகிறது இந்த நுண்ணுயிரி.  கேண்டிடா ஆரிஸ் இப்பூஞ்சை வீடு, தோட்டம் என பல்வேறு இடங்களில் காற்று மூலம் பரவுகிறது. பயிர்கள் வளருவதற்கு, மதுபானங்கள் தயாரிப்பிற்கு என பூஞ்சைகள் பயன்பட்டுவந்தன. கி.பி.500க்குப் பிறகு பூஞ்சைகளின் தாக்குதல் மனிதர்களின் மீது தொடங்கியது. இதற்கான மருத்துவ சிகிச்சை 1950ஆம் ஆண்டு  கண்டறியப்பட்டது. அசோல்ஸ் என்ற மருந்து கண்டறியப்பட்டது. இதை சாப்பிடும்போது ஏற்படும் பக்கவிளைவுகள் பின்னாளில் குறைந்தன. தற்போது நம்மிடம் பூஞ்ச

குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜி ஆபத்து!

படம்
  குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜி ஆபத்து!  குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு செயல்முறையில், உணவு ஒவ்வாமைக்கான விதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை.  நவீன கால குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவுகளான வேர்க்கடலை, முட்டை , பால் ஆகியவை ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். ஒவ்வாமைக்கு முக்கிய காரணம் உணவுதான். ஆயினும், குழந்தைகளின் பள்ளி, அவர்களின் வீடு, நிகழ்ச்சிகள் ஆகிய இடங்களில் கூட ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.  உணவு மூலமாக ஏற்படும் ஒவ்வாமை பாதிப்பு பொதுவானது. ஆனால், அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ஆபத்து. கடந்த ஆண்டு, உணவு விடுதியில் பாதுகாப்பான உணவு என்று நம்பிச் சாப்பிட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த இருவர் ஒவ்வாமை பாதிப்பில் இறந்தனர். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சி பெறாத நிலையில் என்னாகும்? இங்கிலாந்து அரசு தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு திட உணவுகளை குறிப்பிட்ட வயது வந்தபிறகுதான் சாப்பிட வழங்கவேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.  தற்போது இங்கிலாந்தில் ஒவ்வாமை பாதிப்பு 7 சதவீதமாக உள்ளது. அங்கு கடந்த இருபது ஆண்டுகளில் ஆறுமடங்கு அதிகமாக ஒவ்வாமை நோயாள

கொலைகாரக்கருவிகளும் கண்டறியப்பட்டவைதான்!

படம்
                புதிய சாதனங்கள் வாழ்க்கையை நடத்த உதவுகின்றன . அதற்கான கண்டுபிடிப்புகள் நடந்த அதேசமயம் . மதத்திற்கு எதிராக நடைபெறும் அறிவியல் புரட்சிகளை ஒடுக்க பல்வேறு கொடூரமான கருவிகளை மதவாதிகள் கண்டுபிடித்தனர் . இதனால் பல்வேறு கொடூரமான கருவிகள் உருவாயின . அரசுக்கு எதிரானவர்கள் , மதத்திற்கு ஊறு விளைவிப்பவர்கள் , கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் என அனைவரையும் பயத்தின் பிடியில் வைக்க ஏராளமான கொலைக்கருவிகள் , சித்திரவதை சாதனங்கள் உருவாக்கப்பட்டன . அவற்றில் சிலவற்றை பார்ப்போம் . காளைக்குள் கொதிகலன் குற்றவாளியை உலோகத்தில் உருவான காளையின் வயிற்றுக்குள் இறக்கிவிடுவார்கள் . அதன் வயிற்றின் கீழே நெருப்பை மூட்டினால் என்னாகும் ? உள்ளே இருப்பவர் உயிரோடு ரோஸ்ட் ஆவார் . மரணம் உறுதி . ஆனால் அதனை ரசிக்கும் விதமாக செய்யவேண்டுமே ? மரண பயத்தில் அலறுபவரின் குரல் வெளியே டிடிஎஸ் ஒலியில் கேட்கும்படி செய்வதற்கான ஒலி அமைப்பு காளையில் கழுத்து பக்கம் அமைக்கப்பட்டிருந்தது . இந்த ஒலி விலங்கின் உறுமலாக கேட்கும் . இதனை பெரிலஸ் என்று க்ரீஸ் நாட்டு கண்டுபிடிப்பாளர் உருவாக்கினார் . இதில் வதைபடுபவர்கள

ஆந்திரப் பிரதேசத்தில் பிச்சைக்கார ர்களுக்கும், வீடற்றோருக்கும் உணவு வழங்கும் மூன்று ராணுவ வீரர்கள்! - பெருகும் இளைஞர்களின் ஆதரவு

படம்
                  ஆதரவற்றோருக்கு உணவு ! ஆந்திரப்பிரதேசத்தில் மூன்று ராணுவ வீரர்கள் , ஆதரவற்றோருக்காக உணவு வழங்கி வருகின்றனர் . இப்பணியை கடந்த மூன்று ஆண்டுகளாக செய்து வருகின்றனர் . பலசா ரயில் நிலையத்தில் உள்ள பிச்சைக்காரர்கள் , வீடற்ற மக்களுக்கு விவேகானந்தா சேவா சமிதி என்ற பெயரில் அமைப்பை நிறுவி உதவிகளை வழங்கி வருகிறார்கள் . ரபகா கிரண் , பன்னி , தர்மா ஆகிய மூவரும்தான் இந்த பணியில் இறங்கி பல்வேறு உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள் . கிரண் இந்தோ திபெத் ராணுவ வீரர் என்றால் மற்ற இருவரும் அசாம் ரைபிள்ஸ் , எல்லைப்பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் . தொடக்கத்தில் பலசா பகுதியிலுள்ள உணவகங்களில் மீதியாகும் உணவைப் பெற்று பிச்சைக்காரர்களுக்கும் , உணவு தேவைப்படுவோருக்கும் வழங்கத் தொடங்கியுள்ளனர் . இந்த மூன்று ராணுவ வீரர்களின் பணியைப் பார்த்துவிட்டு மாவட்டத்திலுள்ள 600 இளைஞர்கள் இவர்களின் விவேகானந்தா சமிதி பணியில் இணைந்துள்ளனர் . மண்டசா , சோம்பேட்டா , ஹரிபுரம் என மூன்று பகுதிகளுக்கு உணவு அளிக்கும் பணி விரிவடைந்துள்ளது . இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு தன்னார்வலர்க

தன் குடும்பத்தை வெட்டிக்கொலை செய்தவர்களை ரத்தப்பொரியலாக்கும் சென்னகேசவரெட்டி! - சென்னகேசவரெட்டி- விவி விநாயக்

படம்
                    சென்னகேசவ ரெட்டி   Director: V. V. Vinayak Produced by: Bellamkonda Suresh Writer(s): Paruchuri Brothers (dialogues) ரெட்டி குடும்பங்களுக்குள் நடக்கும் நீதி , அநீதி போராட்டம்தான் படம் .   கிராமத்தில் உள்ள பள்ளியில் சென்ன கேசவ ரெ ட்டியின் சிலை உள்ளது . அதனை பற்றி பிரார்த்தனை கூட்டத்தில் பெருமையாக சொல்லும் ஒருவர் , அவர் எங்கிருந்தாலும் திரும்ப நம் ஊருக்கு வருவார் என்கிறார் . அதேநேரம் பெரிய மாளிகை போன்ற வீட்டில் ஒரு போட்டோவை எடுத்துப் பார்க்கும் தேவயானியை , அவரது கணவர் அடித்து உதைக்கிறார் . அதில் இருப்பவர் வேறு யார் , சென்ன கேசவ ரெட்டிதான் . பிறகு கதை மும்பைக்கு செல்ல அங்கு அசிஸ்டெண்ட் கமிஷனராக தன் போக்கில் அரசியல்வாதிகளுக்கு போக்கு காட்டி நீதியை நிலைநாட்டும் அதிகாரி வேறு யார் பாலையாதான் . வாலிபராக இருக்கிறார் . இவரை கல்லூரியில் பார்க்கும் மருத்துவப்படிப்பு படிக்கும் பெண் தங்கள் ஊர் பெரியவருக்கு தகவல் சொல்ல , அவர் இவரைப் பார்க்க வந்து உண்மையைத் தெரிந்துகொள்கிறார் . ஆனால் அவர் யார் என்ற உ்ண்மையை சொல்லக்கூடாது என தங்கள் ஊரைச் சேர்ந்த பெர

வொயிட் காலர் டிரெஸ்ஸில் ரத்தவெறியாட்டம்! எ கம்பெனி மேன் 2012

படம்
        Movie: A Company Man Country: South Korea Release Date: Oct 18, 2012 Director: Im Sang Yoon    ஹியூங் டூ என்பவர் இரும்பு தொழிற்சாலை ஒன்றில் விற்பனை பிரிவில் வேலை பார்க்கிறார். அவரின் உடைகள், ஆபீஸ் அப்படி தோற்றம் காட்டும். ஆனால் ஆபீசிற்கு கீழே  உள்ள பாதாள அறைகளில் முழுக்க யாரை போட்டுத்தள்ளவேண்டும் என அசைன்மெண்டை நிறைவேற்றும் ஆபீஸ், துப்பாக்கிகள், பிளான் என அனைத்தும் தயாரிக்கப்படுகிறது. என்சிஎம் என்ற அந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார் ஹியூங் டூ. ஒருமுறை போலீஸ் அலுவலகத்தில் நடக்கும் அசைன்மெண்டில், ஒருவனைக் கொல்ல பள்ளியை விட்டு இடைநின்ற ஆளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அவனைக் கொன்றுவிடுவதுதான் திட்டம். ஆனால் அவனது இளம் வயது ஹியூங்கை யோசிக்க வைக்கிறது. அதனால் அவனை உயிர்பிழைக்க வைத்து, பராமரிக்கிறார். அவனது குடும்பத்திற்கு பண உதவிகளை செய்கிறார். ஒருகட்டத்தில் பிறரை கொலை செய்யும் நிறுவனத்தின் வேலை கூட ஹியூங்கிற்கு எதற்கு இந்த வேலை என்று தோன்றுகிறது. அப்போதுதான் அவருக்கு ஆபீசில் கொலைகளை பிறருக்கு செய்யச்சொல்லி வழங்கும் இயக்குநராக பணி உயர்வு கிடைக்கிறது.  அதேசமயம் அவர் காப்பாற்றி

உடற்பயிற்சிகளை செய்யும்போது என்ன நடக்கிறது?

படம்
மிஸ்டர் ரோனி உடற்பயிற்சி செய்யும்போது உடலில் என்ன நடக்கிறது? உடற்பயிற்சிகளை அர்னால்டு போஸ்டர் பார்த்து நாம் செய்யும்போது, உடலெங்கும் ரத்த ஓட்டம் வேகமாகும். இதன் விளைவாக உடலுக்கு கிடைக்கும் சிக்னல், உடலின் கொழுப்பை கரைத்து சக்தியாக்கு என்பதுதான். தசைகளில் அடர்த்தியான உடற்பயிற்சியின் அளவைப் பொறுத்து லேக்டிக் அமிலம் உற்பத்தியாகிறது. உடல் பாகங்களில் மூளைதான் அதிகளவு ஆற்றலை எடுத்துக்கொள்கிறது. உடற்பயிற்சியின்போதும் இதுதான் நடக்கிறது. இதயத்தில் அட்ரினலின் சுரப்பு அதிகரித்து இதயத்தின் துடிப்பு அதிகரிக்கிறது. ரத்த நாளங்களின் அளவும் பெரிதாகிறது. நுரையீரல் மட்டும் சும்மாவா, சாதாரண அளவை விட பதினைந்து மடங்கு அதிகமாக ஆக்சிஜனை உள்வாங்கி வெளியிடுகிறது. இருபது லட்சம் வியர்வை சுரப்பிகள் கொண்ட தோலில் இருந்து 1.4 லிட்டர் வியர்வை ஒருமணிநேரத்திற்கு வெளிவரும்.  உடற்பயிற்சியின் முக்கியமான நல்லவிஷயம், உடலில் கால்சியம் வீணாவதைத் தடுத்து, எலும்புகளின் வளர்ச்சியைத் தூண்டுகிறது. நன்றி - பிபிசி

விளையாட்டை நேர்மையாக விளையாட உதவுகிறோம்!

படம்
மினி பேட்டி! ஆலன் பிரெய்ல்ஸ்போர்டு, ஆய்வக இயக்குநர் இங்கிலாந்து விளையாட்டு வீரர்களை எப்படி சோதிக்கிறீர்கள்? கோடைக்காலத்தில் எங்களுக்கு வரும் மாதிரிகள் குறைவு. ஆனால் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடக்கும்போது தினசரி 250 மாதிரிகளைச் சோதிப்போம். கடந்த ஆண்டு மட்டும் 13 ஆயிரம் மாதிரிகளை சோதித்தோம். ரத்தம், சிறுநீர் ஆகிய மாதிரிகளின் மூலம் சோதனைகள் செய்கிறோம். இன்று பெரும்பாலும் சிறுநீர் மாதிரிகள் அதிகம் வருகின்றன. இதில் என்னென்ன சவால்களைச் சந்திக்கிறீர்கள்? சோதனைகளை சரியாக செய்வதற்கான நேரம்தான். வேறென்ன? போட்டிகளில் பங்கேற்றும் வீர ர்களை சரியான முறையில் சோதிக்க நிறைய நேரம் தேவை. அப்போதுதான், ஏமாற்றும் வீரர்களை சரியான முறையில் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் செய்கிற இந்த பணியால் விளையாட்டி கவனிக்கிற ஆர்வத்தை இழந்து விட்டீர்களாழ நான் விளையாட்டு வீரன் அல்ல. என்னுடைய பணி ஆய்வு செய்வதுதான். நான் இதில் மோசடி செய்யும் வீர ர்களை அடையாளம் காட்டி வருகிறேன். விளையாட்டை விதிமுறைகளுக்குட்பட்ட விளையாட்டாக இருக்க உதவுகிறோம். அதில் எனக்கு மகிழ்ச்சிதான். நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ்  

மருந்துகளும் தடைகளும்! - நோய் மருந்துகளுக்கு தடை!

படம்
விளையாட்டு உலகில் ஒருவர் தங்கம் வெல்வது முக்கியமானது. அதற்குப் பிறகு அவரின் உடலின் ரத்தம், சிறுநீர் சோதனை நடைபெறும். இதில்தான் வெற்றி பெறும் பல்வேறு வீர ர்களும் மாட்டிக்கொள்கின்றனர். இதில் தடை செய்யப்பட்ட மருந்துகளை அவர்கள் பயன்படுத்தினால் பதக்கம் பறிக்கப்படும். இரண்டாம் நிலையிலுள்ள வீரருக்கு அப்பதக்கம் வழங்கப்படும். இது பெரிய அவமானம். தடை செய்யப்பட்ட மருந்துகளை சாப்பிடுகிறோம் என்பதே வீர ர்களுக்கு தெரிவதில்லை. காரணம் இதிலுள்ள நிறைய குழப்பங்கள்தான். டெஸ்டோஸ்ட்ரோன் நமது உடலில் இயல்பாக சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்தான் இது. ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்ட்ரோன் அதிகமாக சுரந்தால்தான் அவர்களின் உடல் எலும்புகள் வளர்ச்சி பெறும். தசைகள் வளர்ச்சி சீர் பெறும். இதனை விளையாட்டு வீர ர்கள் தம் எடையைக் கூட்ட தசைகளை வலிமைப்படுத்த பயன்படுத்துகின்றனர். எப்ஹெட்ரின் ஆஸ்துமா பாதிப்பைக் குறைக்க பயன்படுத்தும் மருந்து. இதுவும் எடையை அதிகரிக்கவும், உடல் உறுப்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் இந்த மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். டையூரெட்டிக்ஸ் சிறுநீரக கற்களைக் கரைக்கவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்

அரிதினும் அரிய ரத்தம்! - எப்பிரிவு தெரியுமா?

படம்
அரிதினும் அரிய ரத்த வகைகள்! ரத்த வகைகளை பொதுவாக நீங்களே அறிவீர்கள். ஏ, பி, ஓ, ஏ பாசிட்டிவ், பி பாசிட்டிவ்,  நெகட்டிவ் என குறிப்பிடுவார்கள். இதனைக் கூற இதிலுள்ள ஆன்டிஜென் விஷயங்கள்தான் காரணம். ரத்த செல்களின் மேல் கோட்டிங்காக இருப்பதுதான் ஆன்டிஜென்கள். இதில் ஏ,பி முதன்மையானவை. இதில் ரீசஸ் டி எனும் ஆன்டிஜென் அதிகம், குறைவு என்பது மட்டுமே கணக்கில் கொண்டு ரத்த வகை பிரிக்கிறார்கள். உலகளவில் 35 ரத்த குரூப்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இத்தனை வகை இருந்தால், அதனைச் சொன்னால் நோயாளிக்கு கூடுதலாக காய்ச்சல் இரண்டு டிகிரி எகிற வாய்ப்பிருக்கிறது. எனவே சுருக்கமாக அ,ஆ போல ஏ,பி,ஓ என்று குறிப்பிடுகின்றனர். நூற்றுக்கணக்கான ஆன்டிஜென்கள் நம் ரத்தத்தில் உண்டு. அதில் நாம் 35 வகைகளை மட்டுமே ரத்தப்பிரிவாக வரிசைப்படுத்தியுள்ளோம். உங்களது ரத்தப்பிரிவிலுள்ள ஆன்டிஜென், உலகிலுள்ள 99 சதவீத மனிதர்களிடையே இல்லாமல் இருந்தால் நீங்கள்தான் அடுத்த ஸ்பைடர்மேன். ஆம். அரிதினும் அரியவர். ரீனல்(Rhnull ) எனும் ரத்தப்பிரிவு உலகிலேயே அரிதானது. காரணம் இந்த ரத்தப்பிரிவுக்கு ரத்தம் அளிக்க உலகிலேயே ஒன்பது பேர்தான் தயாரா

ரத்தத்தில் காஃபீன் எவ்வளவு நேரம் இருக்கும்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி  காபி, கோலா ஆகியவற்றிலுள்ள காஃபீன் நம் உடலில் எவ்வளவு நேரம் ஆக்டிவாக இருக்கும்? லியோ காபியில் சுரத்தே இல்லாத காபியை ஆஹா பேஷ் பேஷ் என சொல்லி குடித்தால் பிரமாதமாக காலை விடியும். குடித்தவுடனே ரத்தத்தில் 45 நிமிடங்கள் கழித்து வித்தியாசத்தை உணர்வீர்கள். ஆனால் இதே காஃபீனை மாத்திரையாக எடுத்துக்கொண்டீர்கள் என்றால், காஃபீன் ரத்தத்தில் பரவ 60 அல்லது 75 நிமிடங்கள் ஆகும். ஆறுமணிநேரங்களுக்குப் பிறகு காபீன் அளவு பாதியாக குறைந்துவிடும் என்பதே உண்மை. இதன் அர்த்தம், மாலை ஏழுமணிக்கு மாமி மெஸ்ஸில் காபி குடித்தால், இரவு பதினொரு மணிக்கு படுக்கும்போதும் ரத்தத்தில் காபீன் அழுத்தம் இருக்கும். நன்றி: பிபிசி படம் -டெம்போ இங்க்லீஸ்

வயதானவர்களை காப்பாற்றுமா இளம் ரத்தம்

படம்
pexels.com வயதானவர்களுக்கு வரும் முதுமைப் பிரச்னைகள், கோளாறுகள், நோய்களை இளைஞர்களிடமிருந்து பெறும் ரத்தம் தீர்க்கும் என ஆய்வுகள் வெளியாகியுள்ளன. எப்போதும்போல இந்த ஆய்வையும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களே கண்டுபிடித்துள்ளனர். ரத்தத்தில் அப்படி என்ன மேஜிக் இருக்கிறது? இளைஞர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாதான் இதற்கு காரணம். பிளாஸ்மா என்பது ர த்தத்தில் உள்ள ஓர் நீர்மம். இதில் ரத்த செல்கள் இருக்காது. ரத்தம் உறைதல் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டால், வயதானவர்களுக்கு உதவுவது இந்த பிளாஸ்மாதான். ஆனால் இந்த ஆராய்ச்சி எந்தளவுக்கு பயன் தரும், வெற்றி சதவீதம் ஆகியவற்றை அமெரிக்காவின் எஃப்டிஏ கூறவில்லை. தொற்றுநோய், அலர்ஜி, மூச்சுவிடுதலில் பிரச்னை, இதயநோய்கள் ஆகியவை இம்முயற்சியில் உள்ள ஆபத்துகள். ஆனால் விரைவில் இதற்கான சோதனைகள் தொடங்க உள்ளன.  எஃப்டிஏ, இதுபோன்ற சிகிச்சைகளுக்கு முன்னதாக மருத்துவரிடம் ஆலோசித்துக்கொண்டு செய்யுங்கள் என மக்களை பொறுப்பாக எச்சரித்து விலகிக்கொண்டு விட்டது. இதற்கான சோதனையை இதே அமைப்பு அங்கீகரித்துள்ளது வேறு விஷயம். இத்தகைய சோதனையை செய்யும்போது அரசு அங்கீகாரத்தை மக்கள் சரி