இடுகைகள்

20 ஆயிரம் ரூபாயில் இபைக் தயாரித்துள்ள பாஸ்கரன்!

படம்
  நியூஸ் ஜங்க்ஷன்  20.7.2021 அபாரம்! இபைக்! தமிழ்நாட்டின் விழுப்புரத்தைச் சேர்ந்தவர், பாஸ்கரன். இவர் இயந்திர பொறியியல் படித்துள்ளவர், 20 ஆயிரத்தில் இ பைக்கை உருவாக்கியுள்ளார். ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கி.மீ. தூரம் செல்லும் வாகனம் இது. ஓய்வுநேரத்தில் பழைய சைக்கிள் ஒன்றை வாங்கி, இ பைக்கிற்கு ஏற்பட 18 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை மாற்றினார். ”30 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த இபைக்கில் சார்ஜ் தீர்ந்துவிட்டாலும் பெடல் மூலம் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளலாம்” என்றார் பாஸ்கரன்.  https://www.newindianexpress.com/good-news/2021/jul/19/as-fuel-prices-rise-man-spends-rs-20k-makes-e-bike-that-goes-up-to-50-km-2332149.html போராட்டம்!  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல மாக்ரன் அறிவித்த நோய்த்தொற்று கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராடும் மக்கள்! இடம் பிரான்ஸ், பாரீஸ் ஆஹா! கண்டுபிடிப்பு! கேரளத்தைச் சேர்ந்த இந்திரியம் பயாலஜிஸ்ட் நிறுவனம், பாம்பின் விஷத்தை கண்டுபிடிக்கும் சென்சார் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. 52 நச்சுப்பாம்புக்களைக் கொண்டுள்ள இந்தியாவில் பாம்பு தீண்டுவதால், ஆண்டுதோறும் தோராயமாக 50 ஆயிரம் மரணங்களு

காமத்துப்பாலை எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என அடையாளம் காட்டும் பாட்காஸ்ட்!

படம்
  ஜியோ சாவன் ஆப்பைத் திறந்து பாஸ்வேர்டு பஞ்சாயத்துகளை முடித்துவிட்டால், அடுத்து பாட்காஸ்டை திறங்கள். அதில்தான் வள்ளுவம் பேசும் காமம் என்ற பாட்காஸ்ட் உள்ளது. கட்டுமானக்கலைஞரான ஆதவன் சுந்தரமூர்த்தி திருக்குறளில் உள்ள காமத்துப்பால் குறள்களை விளக்கிப் பேசுகிறார்.  ஆரம்பமே அதிரடிதான். தன்னை பாட்காஸ்ட் தொடரில் ஆய்த எழுத்து என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். பொதுவாக போர், வன்முறை, கோபம் என பலவற்றையும் பேசும் நாம்  அன்பைப் பேசும் இடங்களில் மௌனமே சாதிக்கிறோம். பள்ளிகளில் இதனை பலரும் நினைவுகூரமுடியும். ஆண், பெண் உடல் வேறுபாடுகளை அறிவியலில் நூலில் பார்த்து கூச்சப்படுவது, தமிழில் காமத்துப்பாலை ஜஸ்ட் லைக் தட் மனப்பாடம் செய்துவிடுங்கள் என சொல்லிவிட்டு தமிழ் ஆசிரியர், ஆசிரியை நகர்ந்து விடுவதன் காரணம் என்னவென்று இன்றுவரை யாருக்கும் புரியாது.  பவா செல்லத்துரை மூலம் ஊக்கம் பெற்று பாட்காஸ்டை உருவாக்கியுள்ள ஆதவன், பகிர்ந்துகொள்ளும் முதல் எபிசோட் விஷயங்களும் இதுதான். சிம்பிளான இன்ட்ரோவாக அமைகிறது. டிசம்பர் 2020இல் வள்ளுவம் பேசும் காமத்தைத் தொடங்கியிருக்கிறார். காமத்துப்பாலில் காதல், காமம், அன்பு, பிரிவு,

மதிய உணவுத்திட்டம் பெண் குழந்தைகளை வலுவாக்கியுள்ளது! - புதிய ஆராய்ச்சி அறிக்கை

படம்
  தமிழ்நாட்டில் மதிய உணவுத்திட்டம் முன்னாள் முதல்வர் காமராஜரால் அமலாகி, பின்னர் எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா, கருணாநிதி என அடுத்தடுத்து வந்த முதல்வர்களால் விரிவுபடுத்தப்பட்டது. 1993 முதல் 2016ஆம் ஆண்டு வரை வெளியான தகவல்களை வைத்து நேச்சர் கம்யூனிகேஷன் என்ற இதழில் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.  அரசின் மதிய உணவுத்திட்டம் மூலம் குழந்தைகளும், தாய்மார்களும் வயதுக்கேற்ற உடல், மன வளர்ச்சி பெற்றுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 23 ஆண்டுகளாக நடைபெற்ற மதிய உணவுத்திட்டம் பற்றிய ஆராய்ச்சிகள் இதை வெளிக்காட்டியுள்ளன. 2005ஆம் ஆண்டு மதிய உணவுத்திட்டம் நிறைய மாற்றங்களைப் பெற்றன. இதன் விளைவாக பெண் குழந்தைகளின் ஊட்டச்சத்து பாதிப்பு குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.  இந்தியாவில் மூன்றில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி பேசும் உணவுத்துறை வல்லுநர்கள், குழந்தை கருவாக தாயின் வயிற்றில் இருக்கும்போது, ஊட்டச்சத்து பற்றாக்குறையை சரிசெய்வதற்கான முயற்சிகளை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். 13-32 சதவீதம் வரையில் குழந்தைகளின் உயரம், எடை ஆகியவை சீராக இருக்க மதிய உண

போராட்டக்காரர்களை உளவுபார்க்கும் பீகாசஸ்

படம்
  இந்தியாவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், போராட்டக்காரர்கள் என பல்வேறு நபர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதாக பீகாசஸ் எனும் ஸ்பைவேரின் மீது குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.  இந்த ஸ்பைவேரை இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான என்எஸ்ஓ தயாரித்துள்ளது.  பல்வேறு நாட்டு அரசுகள் இந்த ஸ்பைவேரை தீவிரவாத த்தை தடுக்க பயன்படுத்துகின்றன என்று என்எஸ்ஓ கூறியுள்ளது.  2019ஆம் ஆண்டு வாட்ஸ் அப் நிறுவனம், தனது பயனர்கள் மட்டுமன்றி ஃபேஸ்புக் பயனர்களும் பீகாசஸ் ஸ்பைவேரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று  கூறியது.  எப்படி இன்ஸ்டால் செய்கிறார்கள்? அதுவும் புதுமையான முறையில்தான். எளிமையாக மிஸ்டுகால் ஒன்றைக் கொடுத்து அதன் வழியாக ஸ்பைவேரை ஆப்பிள், ஆண்ட்ராய்டு போன்களில் இறக்குகின்றனர். மிஸ்டுகாலுக்கு ஒருவர் தொடர்பு கொண்டாலும் சரி இல்லையென்றாலும் சரி பீகாசஸ் உள்ளே வந்துவிடும்.  பீகாசஸ் போனில் உள்ளதே அதனை பயன்படுத்துபவர்களுக்கு தெரியாது என்பது இதன் சிறப்பம்சம். தொடர்புகள், குறுஞ்செய்திகள், கேமரா, மைக்ரோபோன் என அனைத்து தகவல்களையும் பதிவு செய்து தனது முதலாளிக்கு விசுவாசமாக ஸ்பைவேர் அனுப்பிவிடுகிறது.  மூலம

சூரிய ஒளி, ஆக்சிஜன் பட்டால் மட்கிப்போகும் பிளாஸ்டிக்!

படம்
  செய்திஜாம் ஆஹா! மறுசுழற்சி! சூரிய ஒளி பட்டாலே மட்கும் வகையில் புதிய பிளாஸ்டிக் வகையை சீனாவின்  ஹூவாஸாங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் உள்ள தனித்துவமான மூலக்கூறுகள் ஒளி, தண்ணீர் பட்டால்  உடனே ஒரே வாரத்தில் மட்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இப்படி மட்கும்போது சக்சினிக் அமிலத்தை வெளியிடுகிறது. இதனை மருந்து தயாரிப்பில் அல்லது உணவு உற்பத்தியில் பயன்படுத்தமுடியும். இந்த பிளாஸ்டிக் ஆராய்ச்சி பயன்பாட்டுக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும்.  https://www.indiatimes.com/technology/science-and-future/plastic-sunlight-disintegration-one-week-544896.html வெள்ளத்தில் நகரம்! மழை வெள்ளத்தில் சாலைகள் மிதக்கும் காட்சி! இடம், ஜெர்மனி, பிளெஸ்ஸம் அப்படியா! பற்றாக்குறை! குஜராத் மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பதினொன்றாம் வகுப்பிற்கு தேர்ச்சியானார்கள். இதனால் அங்குள்ள 20 மாவட்டங்களில் 3000 கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. பள்ளி தலைமையாசிரியர், கூடுதல் மாணவர்களை படிக்க வைக்க ஒற்றைப்படை, இரட்டைப்படை முறை, ஷிப்ட் முறை ஆகியவற்றை பின்பற்றலாம் என

சிறுநீரக அமைப்பு எப்படி செயல்படுகிறது? - அறியாத புதிய தகவல்கள்

படம்
            சிறுநீர் அமைப்பு எப்படி செயல்படுகிறது ? உடலில் அறுபது சதவீதம் நீர் உள்ளது . அப்படி நீர் இருப்பதுதான் உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த உதவுகிறது . ரீனல் அமைப்புதான் உடலில் உள்ள நீரின் தன்மையைக் கட்டுப்படுத்தி தேவையில்லாத கழிவுகளை சிறுநீராக வெளியேற்ற உதவுகிறது . இந்த அமைப்புதான் சரியான அளவில் சிறுநீரை வெளியேற்றி உடலிலுள்ள நீரின் அளவை கண்காணிக்கிறது . இதில் பாதிப்பு ஏற்படும்போது மனிதர்களுக்கு கழிவுநீர் ரத்தத்தில் கலக்கும் ஆபத்து உள்ளது . சிறுநீர்ப்பையில்தான் பெரும்பாலான கழிவுநீர் தேக்கப்பட்டிருக்கும் . இதன் கொள்ளளவு எட்டும்போது சிறுநீர் கழிப்பதற்கான உந்துதல் தோன்றும் . இதன் வேகம் அதிகரிக்கும்போதுதான் முட்டுச்சந்து என்றால் உடனே ஜிப்பை இறக்கி ஆக்ரோஷத்தை தணிக்கிறோம் . சிறுநீரகத்தில் நெப்ரான்கள் உள்ளன . இவற்றில் உள்ள ஃபில்டர்தான் , குளோமெருலஸ் . இதில் ரத்த நாளங்களின் வலையமைப்பு உள்ளது . இவற்றில் உள்ள சுவர் போன்ற அமைப்பு , கழிவுகளை வடிகட்டுகிறது . இப்படி வடிகட்டிய நீர் ட்யூபில் என்ற இடத்திற்கு செல்கிறது . சோடியம் , பொட்டாசியம் , புரதம் ஆகியவை உறிஞ்சப்பட்டு கழிவ

டிம் பெர்னர்ஸ் லீயின் ஆராய்ச்சிக்கு கிடைக்காத அங்கீகாரம்! - சூப்பர் பிஸினஸ்மேன்

படம்
        சூப்பர் பிஸினஸ்மேன் ! டிம் பெர்னர்ஸ் லீ இந்த தலைப்பின் கீழ் இவரைப் பற்றி எழுதினாலும் கூட டிம் பெர்னர்ஸ் லீயை தொழிலதிபர் என்று கூற முடியாது . இணையத்தை இவர்தான் உருவாக்கினார் . இன்று உலகம் முழுக்க பல்வேறு ஸ்டார்ட்அப்கள் உருவாக்கப்பட்டு செயல்பட இவரது கண்டுபிடிப்பு முக்கியமான காரணம் . கிடங்கு ஒன்றில் பொருட்களை வைத்துக்கொண்டு இணையத்தில் கடையை திறந்து அதனை விற்க முடியும் தொ்ழில்நுட்பத்தை யாராவது முன்னர் சொல்லியிருந்தால் நம்புவார்களா ? இணையம் அதனை சாத்தியப்படுத்தியது .    வேர்ல்ட் வைட் வெப் என்பதை லீ கண்டுபிடித்தார் . இவரது உதவியின்றி கூகுள் , அமேசான் ஆகிய நிறுவனங்கள் உருவாகியிருக்கவே முடியாது . உலகம் முழுக்க உள்ள மக்கள் ஒன்றாக இணைய லீ வழியமைத்தார் . இன்டர்நெட் என்பதை ஏராளமான கணினிகள் இணைக்கப்பட்டுள்ளதை வைத்து வரையறுக்கலாம் . இன்டர்நெட்டை 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ராணுவ அமைச்சகம் கண்டுபிடித்தது . 1969 ஆம் ஆண்டு அக்டோபர் 29 என்பதுதான் இன்டர்நெட்டின் பிறந்தநாள் என்று கூறலாம் . லீ , 1955 ஆம் ஆண்டு லண்டனில் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தார் . இவரது