நிலச்சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்குத் தேவை!
நிலச்சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்குத் தேவை ! பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் பயன்பெற்றோரின் எண்ணிக்கை 11.17 கோடியாக உள்ளது . இந்த திட்டத்தில் பயன்பெற ஒருவருக்கு விவசாயம் செய்வதற்கான சொந்த நிலம் இருப்பது அவசியம் . விவசாயிக்கான தகுதி இருந்தாலும் சில விதிகளால் அவர்கள் இத்திட்டத்தில் பங்கு பெறாமல் போவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன . ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை விவசாய கணக்கெடுப்பு அறிக்கையை மத்திய அரசு வெளியிடுகிறது . 2015-16 ஆம்ஆண்டு அறிக்கையில் நிலங்களை உரிமையாக வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 14.6 கோடியாக அதிகரித்துள்ளது . 2010-11 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 13.8 கோடியாக இருந்தது . இவர்கள் அனைவருமே நிலங்களை உரிமையாக கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என தேசிய விவசாயக்கொள்கை (2006) தகவல் தெரிவிக்கிறது . எனவே , இவர்கள் ஒருவரின் நிலத்தில் விவசாயக் கூலியாக பணியாற்றி வந்தாலும் கூட அவர்களையும் விவசாயிகள் பிரிவில்தான் சேர்ப்பார்கள் . நிலங்களுக்கு சொந்தக்காரர்கள் , அதில் பணியாற்றுபவர்கள் என பலரையும் ஆய்வு செய்யும் பணிக்கு முதலில் அரசு பெரிய முக்கிய