இடுகைகள்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் முதியோர் இல்ல பெண்கள்!

படம்
  கோவையில் ஆர்எஸ் புரத்தில் உள்ளது ஆதரவற்றோர் இல்லம். அந்த இல்லத்தைச் சேர்ந்த முதியோர், தங்களுக்கு அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை உணவுகளை வழங்கி வருகின்றனர்.  கோவை கார்ப்பரேஷன், ஈர நெஞ்சம் என்ற தன்னார்வ அமைப்பு ஆகியவற்றின் ஆதரவு உதவியுடன் ஆதரவற்றோர் இல்லம், மாணவர்களுக்கு டீ, பிஸ்கெட், நீர்மோரை வழங்கிவருகிறது. தினசரி மாலை நான்கு மணிக்கு அரசுப்பள்ளி மாணவர்கள் இங்கு வருகின்றனர். இல்லத்தில் வாழ்பவர்கள் அனைவருமே குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள்தான். அவர்கள் இன்று தாங்கள் வாழும் சமூகத்தையே குடும்பமாக நினைக்கிறார்கள் என்றார் ஈர நெஞ்சம் அமைப்பின் தலைவரான மகேந்திரன்.  முதியோர் அமைப்பினர் முதலில் பள்ளிக்கே சென்று டீ, பிஸ்கெட், சுண்டல், ஆகியவற்றை வழங்கி வந்திருக்கின்றனர். பிறகுதான் மாணவர்களே முதியோரை தேடி வரத் தொடங்கியிருக்கின்றனர். காலை உணவு கூட நாங்கள் வழங்க நினைத்தோம். ஆனால் அதற்கான நிதி உதவிகளைப் பெற்றால்தான் சாத்தியம் என்கிறார் ஆதரவற்றோர் இல்லத்தில் வாழும் லஷ்மி அம்மாள். அண்மையில் தெருவில் ஆதரவற்று கிடந்த பெண்ணை மீட்டு இல்லத்தில் சேர்த்தனர். பிறகு அந்த பெண்ணின் உறவினர்களைத் தேடியப

மோசடிகளை தடுக்க க்யூஆர் கோடை ஏடிஎம் கார்டு போல பயன்படுத்தலாம்!

படம்
  க்யூஆர் கோட் மூலம் ஏடிஎம் மில் பணம் எடுக்கலாம்! பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் குறைவாக நிரப்பப்படுகிறது. இல்லையெனில் அவுட் ஆப் சர்வீஸில் இயந்திரம் இருக்கும். இதையெல்லாம் தாண்டி செயல்பட்டால் ஏடிஎம் இயந்திரம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் மெனு ஆப்சன்களைக் கொண்டிருக்கும். பணத்தை எடுக்க டெபிட் கார்டுகள் உதவுகின்றன. இதில் நிறைய மோசடிகள் நடந்து வந்தன. அதையெல்லாம் ஒழிக்க கார்டுகளைக் கூட நவீனப்படுத்தி ஒருவரின் பெயர் இல்லாமல் தயாரிப்பது, கார்டை ஸ்வைப் செய்யாமல் காட்டினாலே போதும் என நிறைய ஆப்சன்களை உருவாக்கினார்கள்.  இப்போது ஆர்பிஐ போனை ஏடிஎம் கார்டாக பயன்படுத்த யோசனை ஒன்றை சொல்லியிருக்கிறது. ஏடிஎம் சென்று யுபிஐ வசதியை இயக்கி, போனைத் திறந்து யுபிஐ வசதிக்காக பாரத் பே, சிட்டி யூனியன் மணி பிளஸ், அல்லது படுஸ்லோவாக வேலை செய்யும் யூனியன் பேங்க் ஆப்பைப் பயன்படுத்தலாம். ஏடிஎம் ஸ்க்ரீனில் உள்ள க்யூஆர் கோடை போனில் வெரிபை செய்தால் போதும். காசை மெஷினில் நிரப்பிப் பெற்றுக்கொள்ளலாம. இதற்கு முக்கியமாக இணைய வசதி கொண்ட போன் அவசியம். இல்லையெனில் பணத்தை எடுக்க முடியாது.  அதேசமயம் டெபிட், கிரடிட் கார்டுகளைப் பயன்ப

தனியாளாகப் போராடும் தொழிலதிபர்! - ரென் ஜெங்ஃபெய்

படம்
  நம்பிக்கையை சிதைத்த குற்றச்சாட்டு!   2019ஆம் ஆண்டு ஹூவெய் நிறுவனத்திற்கு கடுமையான சரிவு. அப்போது அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சியில் இருந்தார். நீதித்துறை, ஹூவெய் நிறுவனத்திற்கு எதிராக ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கியது. 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கனடாவில் இருந்த ரென்னின் மகள் மெங் வாங்சூவை விமானநிலையத்தில் கைது செய்து அவமானப்படுத்தினர்.   இதைப்பற்றி ரென் டைம் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்,  எனக்கு அமெரிக்கா ஊக்க சக்தியை அளித்த நாடு. எனது தொழில்சார்ந்த அறிக்கையில் கூட அதைக் குறிப்பிட்டுள்ளேன். இன்று எங்கள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட நான் அமெரிக்காவை வெறுக்கவில்லை. நாங்கள் சீன நாட்டில் செயல்படும் நிறுவனம்தான். அரசின் விதிகளுக்கு உட்பட்டு நிறுவனத்தை நடத்துகிறோம். நாங்கள் அமெரிக்க அரசு கூறுகிற குற்றச்சாட்டுப்படி, கொல்லைப்புற வழியாக பிற நாடுகளை உளவு பார்க்கிறோம் என்றால் இத்தனை நாடுகளில் நாங்கள் எப்படி பணியாற்ற முடியும். நாங்கள் 170 நாடுகளில் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறோம் என்றார்.   ரென், சீன மொழியில் தான் பேசுகிறார். அதை பிபிசி, டைம் ஆகிய ஊடகங்கள் மொழிபெ

குஜராத்தில் சிறுபான்மையினரின் குரல்! - ஜிக்னேஷ் மேவானி

படம்
  மத்திய அரசின் தேசதுரோக குற்றச்சாட்டுக்காக குஜராத்தின் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி அசாம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு அலைகழிக்கப்பட்டவதை அறிவீர்கள். ஜிக்னேஷ் பற்றி சில விஷயங்களைப் பார்ப்போம்.  அவனுக்கு புரட்சியில் ஆர்வமிருக்கிறது. எப்போதும் அதை துடிப்பாக பேசிக்கொண்டிருப்பான். நான் புரட்சி என்பது நடந்தால் 1947க்கு முன் நடந்திருக்கவேண்டும் என்று கூறுவேன். ஆனால் அவன் புரட்சி காரணமாக சிறைக்கு போவதற்கும் தயார் என்றுதான் கூறுவான் என்றார் ஜிக்னேஷ் மேவானியின் தந்தை நட்வார்பாய் பார்மர்.  பிரதமர் மோடி பற்றி ஒரே ஒரு ட்வீட் பதிவை எழுதியதற்காக எம்எல்ஏவான ஜிக்னேஷை காவல்துறை அலைக்கழித்தது. அதுவும் மாநிலம் விட்டு மாநிலம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படி மாநிலம் விட்டு மாநிலம் வந்து கைது செய்வது கொலை, கொள்ளை குற்றங்கள் என்றே இதுவரை இருந்தது. பாஜக அரசின் கைங்கர்யத்தில் இது  அரசியல்வாதிகளுக்கும் மாறியுள்ளது. ட்வீட் குற்றம் மட்டும் சிறையில் அடைக்க பத்தாதோ என நினைத்த காவல்துறை பெண் காவலரைத் தாக்கினார் என மற்றொரு குற்றச்சாட்டையும் பதிவு செய்தது. ஆனால் நீதிமன்றத்தில், வழக்குப்பதிவு பல் இளித்துவ

நோயை எதிர்க்கும் போராட்டத்தில் தன்னை உணர்ந்துகொள்ளும் தந்தையின் கதை! ட்ரெயின் டு பூஸன்

படம்
  டிரெய்ன் டு பூஸன் 2016 Director:  Yeon Sang-ho Sequel:  Peninsula கொரியப் படம். ஜோம்பிகளை மையமாக கொண்ட படம்தான். படம் ஜோம்பிக்கான காரணம், அதன் வைரஸ், அதன் வெவ்வேறு வடிவங்கள் ஆகியவற்றைப் பற்றி பேசவில்லை. ஜோம்பிகள் தாக்கும்போது அதை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை படம்பிடித்திருக்கிறார்கள். இப்படி உணர்ச்சிகளோடு சிறப்பாக ஒன்று சேர்வதால் படம் மகத்தான வணிக வெற்றியைப் பெற்றுள்ளது.  காங் வூ, டான் லீ ஆகியோர் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். காங் வூ, நிதி நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவர் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று வாழ்கிறார். குழந்தை அவருடன் இருக்கிறது. காங் வூ தனது தாய், குழந்தையுடன் ஒரே வீட்டில் இருக்கிறார். இந்த நேரத்தில் அவரது மகளுக்கு பிறந்த நாள் வருகிறது. மகள், அம்மாவைப் பார்க்க போகலாம். அதுதான் எனது ஆசை என்கிறாள். இதனால், அவளை பூஸன் நகருக்கு ரயிலில் கூட்டிச்செல்கிறார் காங் வூ. அப்படி போகும்போது ரயிலில், ஜோம்பி பெண் ஒருவர் ஏறிவிடுகிறார். கூடவே ரயில் பணியாளர் பெண் ஒருவரைக் கடித்துவிடுகிறார். இதனால் ரயில் முழுக்க ஜோம்பிகள் பெருக, இருபது பேர் மட்டுமே இதில் பிழைக்

ஒலியே இல்லாத உலகை உருவாக்க முயல்பவனின் வாழ்க்கையில் வரும் இசை! குவ்வா கோரிங்கா -

படம்
  குவ்வா கோரிங்கா தமிழில்  காதல் பறவைகள் சத்தமே பிடிக்காமல் அலர்ஜியாக இருப்பவன், தாயின் இசை ஆர்வத்தை நிறைவேற்றுவதற்காக வயலின் இசைக்கும் பெண் என இருவரும் அருகருகே அறை அமைந்தால் எப்படியிருக்கும்.  அதுதான் படத்தின் கதை.  படத்தில் லாஜிக் பார்க்க நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஆனால் அதை பார்க்காமல் இருந்தால் படம் ரசிக்கும்படி இருக்கும். குறிப்பாக சத்யதேவ், பிரியா லால் ஆகியோரின் இரு அறைகளும் ஒருவர் பேசுவதை எளிதாக பிறர் கேட்பது போல இருப்பது.  இதுதான் படத்தின் முக்கியமான அம்சம்.  சத்யதேவைப் பொறுத்தவரை அவருடைய இயல்பில் எளிதாக படத்தில் நடித்து விடுகிறார். ஆனால் பிரியா லால் விஷயத்தில் இது சரியாக நடக்கவில்லை. அதாவது, தன்னை பிரியா பயன்படுத்திக்கொண்டார் என்பதை அவரது அப்பா மூலம் சத்யதேவ் அறியும் காட்சி. அதற்கு பின்னான பிரியா லாலின் காட்சிகள் அழுத்தமானவை. அதில் பிரியா அந்தளவு அழுத்தமாக நடிக்கவில்லை.  படத்தில் சத்யதேவின் பாத்திரத்திற்கு சைலன்சர், பிரியாவுக்கு வயலின் என்று பெயர். நிஜப் பெயரை விட இதுவே படத்தின் தன்மைக்கு மிக பொருத்தமாக ஒத்து வருகிறது. சத்யாவுக்கு, அதிக சத்தம் வராத ஒரு எஞ்சினை தயாரிப்பதே கனவ

10 நிமிட டெலிவரி பயன் தருகிறதா?

படம்
  பத்தொன்பது நிமிட டெலிவரியைப் பார்த்திருப்பீர்கள். பீட்ஸா கம்பெனிகள்தான் வேகமான டெலிவரி என்ற விஷயத்தை உருவாக்கியது. இந்தவகையில் அவர்கள் 45 நிமிடத்திலிருந்து 30 நிமிடத்திற்கு மாறினார்கள். இப்போது பிளிங்இட், பிக் பேஸ்கட், ஸ்விக்கி, ஜோமோடோ, டன்சோ என பலரும் இருபது நிமிட டெலிவரி சிஸ்டத்தில் வேலை செய்கிறார்கள். இதில் கூட டெலிவரி செய்யும் ஆட்கள் நகரங்களில் வேகமாக செல்வது,சிக்னல் விதிகளை மீறுவது என செல்கிறார்கள். இதோடு பைக் டாக்சிகளும் ஓடுவதில் பலருக்கும் குழப்பமாகிறது.  இத்தனையும்  தாண்டி ஸெப்டோ என்ற நிறுவனம் மார்க்கெட்டில் உள்ளே வரும்போதே பத்து நிமிட டெலிவரி என்று கூறி உள்ளே நுழைந்தது. இதனை தொடங்கியவர்கள் ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் படிப்பை முடிக்காத இரு இளைஞர்கள். ஒன்பது மாத நிறுவனமான இதன் இயக்குநர் ஆதித் பலிச்சா. இவரது நிறுவனம் இப்போதைக்கு 11 நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது. எதிர்காலத்தில் 24 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.  200 மில்லியன் நிதி திரட்டிய நிறுவனத்தின் மதிப்பு 900 மில்லியன் ஆகும்.  ஆதித் பலிச்சா (வலதுபுறம்) வேகமாக பொருட்களை டெலிவரி செய்த ஆர்டர் செய்பவர்களின் அருகில் கடைகள் இருக்