இடுகைகள்

குழந்தைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பயாலஜிகல் ஈ தடுப்பூசியை குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம்!

படம்
              டாக்டர் மரியா எலினா பாட்டசி பயாலஜிகல் ஈ தடுப்பூசிக்குழு நீங்கள் ஆராய்ச்சி செய்துவரும் பயாலஜிகல் ஈ தடுப்பூசி பற்றி கூறுங்களேன் . கடந்த ஆண்டு நாங்கள் கோவிட் -19 க்கான தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியில் இறங்கினோம் . இந்தக்குழு ஆராய்ச்சியை வேகமாகவும் நுட்பமாகவும் செய்வதோடு இதற்கான சோதனைகளும் நடைபெறவுள்ளன . அரசிடம் சோதனை நடத்தவும் அதனை விரிவுபடுத்தவும் அனுமதி கிடைத்துள்ளது . உலகளவில் மருத்துவ சோதனை நடத்தவும் சிஇபிஐ போன்ற அமைப்பிடம் அனுமதி பெற்றுள்ளோம் . முதல்கட்ட சோதனைகளுக்கான முடிவுகள் எப்போது கிடைக்கும் ? விரைவில் முதல் கட்ட சோதனைகளை ஆராய்ச்சியாளர்கள் முடித்து முடிவுகளை வெளியிடுவார்கள் என நினைக்கிறேன் . மூன்றாவது கட்ட சோதனைக்கான அனுமதி பெற்றுள்ள நிலையில் அடுத்த வாரமே இதுபற்றிய தகவல்களை வெளியிடுவார்கள் என்று நினைக்கிறேன் . மாறியுள்ள வைரசுக்கு எதிராக தடுப்பூசி எப்படி மேம்பட்டுள்ளது என்று கூறுங்கள் . நாங்கள் எங்கள் ஆய்வகத்தில் பயாலஜிகல் ஈ தடுப்பூசிக்காக இணைந்து பணியாற்றி வருகிறோம் . இந்த ஊசி , இப்போது மாறியுள்ள டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக சிறப்பா

மூளையில் சுரக்கும் எக்ஸ்ட்ரா டோபமைன் குற்றத்திற்கு ஆதாரமூலமா?

படம்
          குற்றமும் மனமும் டெட் பண்டியைப் பற்றி நாளிதழ்களில் வாசித்திருப்பீர்கள் . அமெரிக்காவில் பெண்களை தாக்கி சித்திரவதை செய்து கொல்வதில் புகழ்பெற்றவர் . குற்றம் செய்வதில் டாக்சி டிரைவர் ஜெஸ்பர்சனைப் போன்ற மனமுடையவர் . முதல் குற்றம் , இரண்டாம் குற்றம் என அவரது கொலை செய்வதின் அடிமைத்தனம் கூடிக்கொண்டே சென்றது . டெட் பண்டியைப் பற்றிய குறிப்பிடதக்க அம்சம் , செய்த குற்றத்தை புத்திசாலித்தனமாக செய்து காவல்துறைக்கு தண்ணி காட்டியதுதான் . 1978 ஆம் ஆண்டு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பிப்ரவரி மாதம் புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் தங்குமிடத்தில் நுழைந்தார் . அங்கு நான்கு பெண்களை படுகாயப்படுத்தி இரு பெண்களைக் கொன்றார் . 1976 ஆம் ஆண்டு டெட்டுக்கு பெண்களை கடத்துவது தொடர்பான விசாரணை நடைபெற்றது . அப்போதே அவர் டஜன் கணக்கிலான பெண்களை கொன்றிருந்தார் . ஆனால் அப்போது நீதிமன்றம் அவர் எப்படிப்பட்ட கொலைகாரர் என்பதை அறியவில்லை . பல்வே்று உளவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட பெண்களின் உடலிலிருந்து காயங்களைப் பார்த்து கொலை செய்தவர் ஆபத்தான மனிதர் என முடிவுக்கு வந்தனர் . இதுபற்றி ஆராய்ச்சி செய்த டாக்டர் அல் கா

பழக்கங்களின் நதிமூலம், ரிஷி மூலம்! - நல்ல பழக்கங்களை எப்படி தொடர்வது?

படம்
          பழக்கங்கள் எப்படி உருவாகின்றன ? குழந்தைகளாக இருக்கும் யாரும் பழக்கத்தை தானாக வே பழகுவதில்லை . கர்லான் மெத்தையில் குழந்தையை படுக்க வைத்திருக்கு்ம்போது கூட அதற்கு அதன் தேவை என்னவென்று முதலில் தெரியாது . ஆனால் தினசரி அதில் படுத்து தூங்குபவர்களுக்கு அதன் பயன்பாடு என்னவென்று தெரிந்துவிடும் . பல்வேறு பழக்கங்களை குழந்தைகள் வீட்டில்தான் கற்கிறார்கள் இவற்றைக்கூட பெற்றோரைப் பார்த்துதான் கற்கிறார்கள் . அதிலும் குழ்ந்தைப்பருவத்தில் கற்கும் பல்வேறு பழக்கங்களை அவர்கள் வயது முதிரும்போது கைவிடுகிறார்கள் . அப்படியும் நல்ல பழக்கங்கள் நீடித்திருந்தால் , பின்னாளில் அவை வாழ்க்கைக்கு உதவலாம் . இப்போதும் கூட சிலர் குழந்தையாக இருக்கும்போது கற்ற கைவிரல்களை சூப்புவது , காது மடல்களை இழுத்துக்கொண்டே நடப்பது ஆகிய பழக்கங்களை சிலர் எப்போதும் செய்வார்கள் . அனைத்து நல்ல பழக்கங்களுமே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தும்தான் . இதனை புரிந்துகொண்டு அதற்கேற்ப மனவலிமையோடு பழக்கங்களை தொடர்ந்தால் மட்டுமே அதற்கான விளைவுகளைப் பெறமுடியும் . நல்ல பழக்கங்களை தொடர்வதற்கு அதற்

நல்ல பழக்கங்களை குழந்தைகள் பின்பற்ற பரிசு கொடுங்கள்!

படம்
            குழந்தைகளின் மூளை வளர்ச்சி வேகம் ! குழந்தைகளின் மூளை வளர்ச்சி முதல் ஐந்து ஆண்டுகளில் வேகமாக இருக்கிறது . ஆனாலும் கூட அவர்கள் உலக அனுபவங்களைப் பெற்றும் முதிர்ச்சி அடையும் வரை அவர்களால் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாது . இதனால்தான் தனக்கு வேண்டும் என்பதை பிடிவாதம் பிடித்து அழுவது , கோபம் கொள்வது , வருத்தப்படுவது , பொறாமையுறுவது ஆகியவற்றை வெளிப்படையாக காண்பிக்கிறார்கள் . இதே விஷயங்கள் முதிர்ச்சியுள்ள மனிதர்களுக்கு உண்டுதான் . ஆனால் ஏன் வெளிப்படுவதில்லை ? காரணம் அப்படி வெளிப்படுவது நமது சமூக அந்தஸ்துக்கு பொருத்தமானதில்லை எனநம்புகிறோம் . குழந்தைகள் தங்களுக்கு ஏற்ற அல்லது வெளியிடங்களில் பார்க்கும் , கேட்கும் , பேசும் விஷயங்களை கவனிக்கிறார்கள் . அதனை கற்றுக்கொள்வதை இன்டக்டிவ் லேர்னிங் என்று கூறுகிறார்கள் . குழந்தைகளின் மூளைவளர்ச்சி பெறாத நிலையில் வெடிக்கும் எரிமலை போல உணர்ச்சிகளை கொட்டுவார்கள் . ஆனால் அவர்களின் வயது மூன்று அல்லது நான்கு என ஆகும்போது , கவனம் , உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் கட்டுப்பாடு இருக்கும் . நினைவுகளை கையாள்வதும் பின்னாளில்

பிறர் பேசும் கதைகளை நீங்கள் கேட்டு வெளிப்படுத்துவதில்லை! - சுதாமூர்த்தி, எழுத்தாளர்

படம்
  சுதா மூர்த்தி உங்களுக்கு நிறைய திறமைகள் உண்டு என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டு வருகிறோம். குழந்தைகளுக்கான  நூல்களை எழுதுகிறீர்கள். கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள். கணினி பற்றியும் எழுதுகிறீர்கள். எப்படி எழுத்தார்வம் பிறந்தது? இங்கு ஆங்கில மீடியத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு சிண்ட்ரெல்லா, ஸ்னோவொயிட் கதைகளை எழுதுகிறார்கள். அக்கதைகளைத் தான் சொல்லுகிறார்கள். பெற்றோர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். ஆனால் அந்த கதைகள் நமக்கு பொருந்தாது. நம்முடைய கூட்டு குடும்ப முறை, கலாசாரம், விழாக்கள் ஆகியவற்றுக்கு மேற்கத்திய கதைகள் பொருந்தாதவை. எனவே நான் அதற்கு ஏற்ப இந்திய பண்பாட்டு தன்மை கொண்ட கதைகளை ஆங்கிலத்தில் எழுத தொடங்கினேன்.  நீங்கள் முதலில் கன்னட மொழியில் எழுத தொடங்கினீர்கள் அல்லவா? நான் பத்தாவது வரையில் கன்னடப் பள்ளியில்தான் படித்தேன். பிறகு 50வயது வயதில் ஆங்கிலத்தில் எழுத தொடங்கினேன். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிலுள்ள டிஜேஎஸ் ஜார்ஜ் நான் எழுதுவதை பெரிதும் ஊக்குவித்தார்.  கன்னடத்திலிருந்து ஆங்கிலத்திற்கு எழுத தொடங்கியது கடினமாக இருக்குமே? உண்மைதான். இதுபற்றி அம்மாவிடம் புலம்பியிருக்கிறேன்.

குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜி ஆபத்து!

படம்
  குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜி ஆபத்து!  குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு செயல்முறையில், உணவு ஒவ்வாமைக்கான விதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை.  நவீன கால குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவுகளான வேர்க்கடலை, முட்டை , பால் ஆகியவை ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். ஒவ்வாமைக்கு முக்கிய காரணம் உணவுதான். ஆயினும், குழந்தைகளின் பள்ளி, அவர்களின் வீடு, நிகழ்ச்சிகள் ஆகிய இடங்களில் கூட ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.  உணவு மூலமாக ஏற்படும் ஒவ்வாமை பாதிப்பு பொதுவானது. ஆனால், அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ஆபத்து. கடந்த ஆண்டு, உணவு விடுதியில் பாதுகாப்பான உணவு என்று நம்பிச் சாப்பிட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த இருவர் ஒவ்வாமை பாதிப்பில் இறந்தனர். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சி பெறாத நிலையில் என்னாகும்? இங்கிலாந்து அரசு தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு திட உணவுகளை குறிப்பிட்ட வயது வந்தபிறகுதான் சாப்பிட வழங்கவேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.  தற்போது இங்கிலாந்தில் ஒவ்வாமை பாதிப்பு 7 சதவீதமாக உள்ளது. அங்கு கடந்த இருபது ஆண்டுகளில் ஆறுமடங்கு அதிகமாக ஒவ்வாமை நோயாள

கருப்பின ஆப்பிரிக்க அமெரிக்க எழுத்தாளராக அறியப்பட நினைக்கிறேன்! - எழுத்தாளர் ஸ்டெபானி எல் பிளேர்

படம்
              ஸ்டெபானி எல் ப்ளேர் குயானிஸ் அமெரிக்க எழுத்தாளர் உங்கள் நூலை பேஸ்புக் வழியாக அறிமுகப்படுத்தினீர்கள் . அதில் சாக்லெட் நிறத்தில் உள்ள என்னைப்போன்ற பெண்ணின் கதைகளை யாரும் படித்திருக்க மாட்டீர்கள் என்று சிறுமி கூறுவது போல அமைத்திருந்தீர்கள் . அதற்கு என்ன காரணம் ? நான் ப்ரூக்ளினில் வளர்ந்தேன் . அங்கு உள்ள அழுத்தம் வேறுவிதமானது . உங்களுக்கு நீங்கள் அங்கு குடியேறியுள்ளீர்கள் என்பது எப்போதும் தோன்றிக்கொண்டே இருக்கும் . அச்சூழலில் அதிகளவு உணர்ச்சிகளை வெளிப்படுத்த நேரமில்லாதபடி தினசரி வேலைகள் நெருக்கும் . பொதுவாக அங்கு வாழும் வெளிநாட்டினர் அனைவருமே ஏழைகள் என்ற எண்ணம் அமெரிக்கர்களுக்கு உண்டு . என்னைப் பொறுத்தவரை நிறம் , இனம் , வேறுநாடு என்பதைச் சார்ந்து பிறர் என்னைப் பற்றிய முன்முடிவுகளை மனதில் கொண்டிருப்பார்கள் . இதுபோன்ற பிரச்னைகளை கரீபிய குடும்பங்கள் நிறைய எதிர்கொள்ள வேண்டியுள்ளது . அமெரிக்க மதிப்புகளை கரீபியர்கள் ஏற்றுக்கொள்வதிலும் தடுமாற்றங்கள் உள்ளன . உங்கள் குடும்பத்தில் நிலைமை எப்படி இருந்தது ? உங்களையும் கரீபிய குடும்பத்தினர் அமெரிக்க கண் கொ

இந்தியாவில் பாதிக்கும் மேலான பெண்களுக்கு ரத்தசோகை பிரச்னை உள்ளது! - யுனிசெப் ஊட்டச்சத்துத்துறை தலைவர் அர்ஜன் டி வக்த்

படம்
      அர்ஜன் டி வக்த்   அர்ஜன் டி வக்த யுனிசெப் ஊட்டச்சத்து துறை தலைவர் ஆந்திரம் , தெலுங்கானாவில் யுனிசெப் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க என்ன வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது ? நாங்கள் இந்திய அரசின் போஷான் அபியான் என்ற திட்டத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறோம் . தெலங்கானா , ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நாங்கள் பல்வேறு செவிலியர்கள் நர்ஸ்கள் ஆகியோரோடு இணைந்து பணிபுரிந்து வருகிறோம் . இவர்களோடு இணைந்து குழந்தைகளுக்கு உணவு , தாய்ப்பால் அளிப்பது பற்றி விழிப்புணர்வு அளித்து வருகிறோம் . யுனிசெப் அமைப்பு , உலக உணவு திட்டத்துடன் இணைந்து ஐசிடிஎஸ் அதிகாரிகளோடு பணியாற்றி வருகிறது . கர்நாடகம் , ஆந்திரம் , தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பொது விநியோக முறையை மேம்படுத்தி வருகிறோம் . குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை குறைப்பது எப்படி ? குழந்தை பிறந்த முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஆப்டிமல் நியூட்ரிஷன் என்று கூறும் வகையில் உணவுகளை வழங்கவேண்டும் . அதுதான் அவர்கள் பிழைத்திருக்கச் செய்யும் . இதோடு தாய்ப்பாலை ஊட்டுவது . இது குழந்தைக்கு பிழைத்திர

வலைத்தளங்கள் புதுசு!

படம்
          வலைத்தளங்கள் புதுசு ! Filmedinyorkshire.co,uk நிறைய படங்களில் வரும் இடங்களைப் பார்க்க ஆசைப்பட்டிருப்போம் . ஆனால் அவை எங்கே இருக்கிறது என தெரியாமல் அலைவோம் . அந்த பிரச்னையைத் தீர்ப்பதற்காகவே இந்த வலைத்தள முயற்சி . பிலிம்டுஇன்யார்க்ஷையர்வலைத்தளத்தில் படங்கள் வரிசைப்படுத்தப்பட்டு , அந்த படத்தில் வரும் இடங்கள் எங்கே என சுட்டிக்காட்டப்படுகிறது . இதுவொரு ரசிக்கத்தக்கமுயற்சியாக உள்ளது . faberchildrens.co.uk இந்த வலைத்தளம் ஃபேபர் குழுமத்தின் முயற்சி . பெற்றோர் , குழந்தைகள் , ஆசிரியர்களுக்கான நூல்கள் இதில் கிடைக்கின்றன . குழந்தைகள் செய்யவேண்டிய பயிற்சிகளை இந்த வலைத்தளத்திலிருந்து பெறமுடியும் . கதை வீடியோக்களாக பெற்று குழந்தைகளுக்கு உதவலாம் . எழுத்தாளர்களை சமூகவலைத்தளம் வழியாக பின்பற்றலாம் . அவர்களின் நூல்களை இங்கேயே வாங்கிப்படிக்கலாம் . குழந்தைகளுக்கான ஐடியாக்கள் இருந்தாலும் தாராளமாக சொல்லலாம் . அதற்கும் பரிசு வழங்கி கௌரவிக்கிறார்கள் . Wordsoflife.org..uk 12 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கான பல்வேறு எழுத்துக்கள் , வார்த்தைகள் சார்ந்த பயிற்சிகளை

பெண்கள் அத்துமீறலை தைரியமாக பேசவேண்டும்!

படம்
சன்னி லியோன் பெயரைச் சொன்னாலே ஐட்டம் சாங்குக்கு ரெடியாகும் கூட்டம் சத்தியமாக நம் இந்தியர்கள்தான். ஆபாச பட நடிகையாக இருந்து இந்திப் படவுலகில் இன்றும் கிராக்கி உள்ள நடிகையாக திகழ்கிறார் சன்னி லியோன். நீங்கள் தத்தெடுத்த குழந்தைகள் உட்பட மூன்று பேர் வீட்டில் உள்ளனர். எப்படி சமாளிக்கிறீர்கள்? கஷ்டம்தான். எங்கள் வீட்டில் இரண்டு இரட்டையர்கள், நான்கு வயது பெண்குழந்தை ஒன்று உள்ளது. தினந்தோறும் அவர்கள் வளர்ந்து வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுக்கான டைம் டேபிளை போட்டு அதற்கேற்ப அவர்களுக்கான விஷயங்களை செய்து வருகிறேன். அவர்களுக்கான உணவு, உடை, படிப்பு, விளையாட்டு ஆகியவை அதற்கான நேரங்களில் நடைபெறுமாறு ஏற்பாடுகளை செய்துள்ளேன். அவர்களைப் பார்த்துக்கொள்ள தனி பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நான் கண்காணித்து வருகிறேன்.  குழந்தைகளின் மீதான கவனிப்பை எப்படி செலுத்த முடிகிறது? நானும் என் கணவர் டேனியலும் குழந்தைகளை வளர்க்க நினைத்தபோது சில விஷயங்களை பேசி தீர்மானித்துக்கொண்டோம். இருவரும் ஒருவரையொருவர் கவனிக்கவில்லையென்று சண்டை போடக்கூடாது. குழந்தைக

குழந்தைகளுக்கு சரி, தவறு தெரியுமா? - மிஸ்டர் ரோனி பதில்

படம்
மிஸ்டர் ரோனி டிம்மர் ஸ்விட்சுகள் மின்சாரத்தை அதிகம் சேமிக்கின்றனவா?  திருகும் இந்த வகை ஸ்விட்சுகள் எளிதாக இயக்க முடிவது இதன் சிறப்பம்சம். ஆனால் இதனால், மின்சாரம் சேமிக்கப்படுகிறது என்று கூறமுடியாது. இதனை அணை நீரை சேமித்திருப்பது போல புரிந்துகொள்ளலாம். இதனால் மின்சாரம் சேமிப்பது போல தோன்றலாம். ஆனால் பிற ஸ்விட்சுகளைப் போலவே இதுவும் செயல்படுகிறது. 2 குழந்தைகள் பிறக்கும்போதே சரி, தவறு என்பதைப் புரிந்துகொண்டு பிறக்கிறார்களா? உளவியலாளர்கள் குழந்தைகள் வளர வளர வெளிப்புறச்சூழலைப் பெற்று அறிவை வளர்த்துக்கொண்டு சரி தவறுகளைப் புரிந்துகொள்கின்றனர் என்று முடிவுக்கு வந்தனர். ஆனால் உண்மையில் குழந்தைகள் பிறக்கும்போதே சரி, தவறு என்ற விஷயங்களை புரிந்துகொள்கிறார்கள் என்று தற்போது சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 2010ஆம் ஆண்டு அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றிய ஆராய்ச்சி ஒன்றை செய்தனர். இதில் பிறந்து மூன்று மாதங்களான குழந்தைகள் மலைத்தொடர் வடிவிலான உருவத்தை உருவாக்குகின்றனர் என்று தெரியவந்துள்ளது. சில எழுத்துகளையும் அடையாளம் கண்டுபிடிக்க முய