இடுகைகள்

தடை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யாத்திரைகளை விட மக்களின் உயிர் முக்கியம்! - புஷ்கர்சிங் தமி, ஜார்க்கண்ட் முதலமைச்சர்

படம்
  புஷ்கர் சிங் தமி உத்தர்காண்ட் முதலமைச்சர் உங்கள் மாநிலத்தில் தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கிவீட்டீர்களா? 50 சதவீத மக்களுக்கு முதல் தடுப்பூசியை வழங்கிவிட்டோம். மத்திய அரசு எங்களுக்கான தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரித்தால் விரைவில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகளை வழங்கிவிடுவோம்.  சுற்றுலாபயணிகளை எப்படி கட்டுப்படுத்துவீர்கள்? பொதுமுடக்கத்தில் வீட்டிலேயே அடைந்து கிடந்தவர்கள், இப்போது வெளியே வருகிறார்கள்.  இதனை அரசாக நினைத்து தடுக்க முடியாது. மக்கள்தான் வெளியே வருவதை அவர்களாகவே கட்டுப்படுத்திக் கொண்டால்தான் உண்டு.  உத்தர்காண்டில் சில மாதங்களில் பல்வேறு முதல்வர்கள் மாறிவிட்டார்கள். நீங்கள்  உங்கள் நிலையைப் பொறுத்து கடினமான முடிவுகள் எடுக்க முடியுமா? என்மேல் நம்பிக்கை வைத்த கட்சிக்கார ர்கள், தொண்டர்கள், பிரதமர் மோடி ஆகியோருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான முதல்வர் ஆவேன் என நினைத்தே பார்க்கவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் நிகழ்காலத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறேன்.  கன்வார் யாத்திரைகளுக்கு அனுமதி மறுத்தது கடுமையான முடிவுதான் அல்லவா? இ

ஒரு நாட்டில் எதற்கு இருவிதமான விதிகளை மத்திய அரசு கடைபிடிக்கிறது? - ஓமர் அப்துல்லா

படம்
                  ஓமர் அப்துல்லா அரசியல் கட்சி தலைவர் காஷ்மீரில் அண்மையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது . அதில் மத்திய அரசை எதிர்க்கும் ஓமர் அப்துல்லாவும் இடம்பெற்றார் . இதுபற்றி அ வரிடம் பேசினோம் . உங்களையும் , உங்களது அப்பாவையும் சிறையில் அடைத்தது இதே அரசு . இப்போது அவர் நடத்தும் கூட்டத்தில் எப்படி பங்கேற்றீர்கள் ? மத்திய அரசுதான் எங்களை சிறையில் அடைத்தது . இப்போது அவர்களேதான் எங்களை வரவேற்பு பேசுகிறார்கள் . நீங்கள் கேட்கும் கேள்விக்கு அவர்கள்தான் பதில் சொல்லவேண்டும் . அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் சொல்லியிருக்கிறார் . இதயத்திலிருந்து தொலைவாக , டெல்லியிலிருந்து தொலைவாக என்று அவர் கூறினார் . இதற்கு என்ன அர்த்தம் ? இப்படி நம்பிக்கை குறைந்துபோக என்ன காரணம் என்று அவர்தான் கூறவேண்டும் இந்த சந்திப்பில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லையா ? இது தொடக்கம்தான் . ஒரு கலந்துரையாடல் அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துவிடும் என்று நினைக்க முடியாது . பெரிய செயல்முறையின் சிறிய பகுதிதான் இது . 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம

திரைப்படங்களின் தணிக்கையை கையில் எடுக்கும் மத்திய அரசு! - புதிய சூப்பர் சென்சார் விதிகள் அறிமுகம்

படம்
                        திரைப்படங்களுக்கான புதிய சட்டம் 2021       கடந்த வாரம் திரைப்படங்களுக்கான புதிய விதிகள் வெளியிடப்பட்டன . இந்த விதிகள் 1952 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்டத்தை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன . இதன்படி திரைப்படத் தணிக்கை அமைப்பு படத்தை திரையிடலாம் என குறிப்பிட்ட பிரிவில் படத்தை அனுமதித்தாலும் கூட அதனை திரும்ப சோதிக்க மத்திய அரசுக்கு அதிகாரத்தை வழங்குகிறது . இந்த சட்டம் பற்றி பார்ப்போம் . படங்களில் சர்ச்சைக்குரிய வசனங்கள் , காட்சிகள் இடம்பெற்றிருந்தால் அதற்கு சென்சார் அமைப்பு சிலசமயங்களில் சான்றிதழ் தரமுடியாது என்று கூறி திரையிட அனுமதி மறுக்கும் . அந்த சமயங்களில் இதற்கான தலைமை அமைப்பான ட்ரிப்யூனலில் முறையிட்டால் பெரும்பாலும் படத்தை வெளியிடுவதற்கு அனுமதி கிடைத்துவிடும் . மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்னர் இந்த அமைப்பை கலைத்துவிட்டு , இனிமேல் நீதிமன்றங்களே படத்தை திரையிடலாமா , வேண்டாமா என்று முடிவெடுக்கும் என்று கூறிவிட்டது . இதனை திரைத்துறையினர் பலரும் இது சாத்தியமாக என்று கேள்வி எழுப்பி விமர்சித்திருந்தனர் . புதிய விதிகள் உருவாக்கப்பட்டு

குடிநோயைக் கட்டுப்படுத்த எக்ஸ்டஸி உதவுமா?

படம்
                ஆல்கஹால் குடிக்கும் பழக்கம் உலகளவில் அதிகரித்து வருகிறது . மது அருந்துவது என்பது பெரும்பாலான மேற்கு நாடுகளில் கலாசாரமாகவே உள்ளது . ஆனால் தொடர்ச்சியாக குடித்து குடிநோய்க்கு உள்ளாவதை எப்படி தடுப்பது என்பது மருத்துவ்துறையில் முக்கியமான பிரச்னையாக உள்ளது . இதற்கு எம்டிஎம்ஏ வேதிப்பொருளைப் பயன்படுத்தி சைக்கோதெரபி கொடுக்க முடியுமா என ஆராய்ந்து வருகின்றனர் . இங்கிலாந்தில் மட்டும் மது அருந்துவதால் ஆண்டிற்கு எட்டாயிரம் பேர் மரணத்தை தழுவுகின்றனர் . நாட்டில் எழுபது சதவீத வன்முறையும் உருவாகிறது . இப்படி மது அருந்துபவர்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு 3.5 பில்லியன்களாக உள்ளது . மது அருந்துவதை அடிமைத்தனமாக மாறியது என்ற உண்மை தெரியாமல் இங்கிலாந்திலுள்ள ஆண்கள் 9 சதவீதமும் , பெண்கள் 3 சதவீதமும் மதுவில் மிதக்கின்றனர் . இவர்களது வாழ்க்கை மதுவைச் சார்ந்தே அமைந்துள்ளது . 3,4 மெத்திலின்டையாக்சி மெத்தாம்பீட்டமைன் அல்லது எக்ஸ்டசி என பொதுவாக அழைக்கப்படும் எம்டிஎம்ஏ வேதிப்பொருள் பயன்படுகிறது . இதனை மருத்துவத்துறையில் பிடிஎஸ்டி பிரச்னைக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள் . மதுவில் ப

மேல் முறையீட்டிற்கு உயர் நீதிமன்றம்தான் செல்லவேண்டும் என சொல்லும் மத்திய அரசின் புதிய சீர்திருத்தம்! - ட்ரிப்பியூனல் அமைப்பு கலைக்கப்படுகிறது

படம்
                காணாமல் போகும் ட்ரிப்யூனல் மத்திய அரசு , தற்போது புதிய சீர்திருத்தமாக திரைப்படங்களை மேல் முறையீட்டிற்கு அனுப்பும் ட்ரிப்பியூனலை கலைத்துள்ளது . இதனால் சர்ச்சைக்குரிய மையப்பொருளைக் கொண்ட படங்கள் உயர்நீதிமன்றத்தில் தங்கள் படங்களை திரையிடுவதற்கான அனுமதியை பெற வேண்டியிருக்கும் . 1983 ஆம் ஆண்டு திரைப்பட ஒளிப்பதிவு சட்டம் 1952 படி ட்ரிப்பியூனல் அமைக்கப்பட்டது . இதில் தலைவர் உட்பட ஐந்து பேர் இருப்பார்கள் . இவர்களை உறுப்பினர்களாக கருதலாம் . கூடுதலாக ஒளிபரப்புத்துறை அமைச்சக செயலரும் இருப்பார் . மத்திய தணிக்கை வாரியத்தின் கருத்திற்கு எதிராக திரைப்பட்ட தயாரிப்பாளர்கள் ட்ரிப்பியூனில் தங்கள் படங்களின் திருத்தங்களுக்கு எதிராக முறையிட்டு நீதி பெறலாம் . மத்திய தணிக்கை வாரியத்தில் தலைவர் தவிர்த்து 23 உறுப்பினர்கள் இருப்பார்கள் . இவர்கள் படங்களைப் பார்த்து திருத்தங்களை கூறி அதற்கான பல்வேறு சான்றிதழ்களை வழங்குவார்கள் . யு , யு / ஏ , ஏ என பல்வேறு வித சான்றிதழ்களை வழங்குவார்கள் . ஏ சான்றிதழ் பெற்ற படங்களை டிவியில் ஒளிபரப்புவது கடினம் . பொதுமக்களின் பார்வையிடலுக்கு வரு

ராகுல்காந்தி ஜல்லிக்கட்டை பார்க்க வந்ததில் எந்த அரசியல் நோக்கமுமில்லை! கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கமிட்டி தலைவர்

படம்
                    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே . எஸ் . அழகிரி ராகுல்காந்தி மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு வந்துள்ளது பல்வேறு சர்ச்சைகளுக்கு இடமளித்துள்ளதே ? ஐக்கிய முற்போக்கு கூட்டணி காலத்தில்தான் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டது ..? ஜல்லிக்கட்டிற்கு பிரச்னை வந்தது 2014 இல்தான் . உச்சநீதிமன்றம் இதற்கான தடை ஆணையை பிறப்பித்தது . பின்னர் இத்தீர்ப்பை எதிர்த்து மனுவும் பதியப்பட்டது . ஐக்கிய முற்போக்கு கூட்டணி தமிழர் விளையாட்டு தொடர்வதற்கான முயற்சிகளை செய்தது . அவர்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால் தமிழர் விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருக்காது . ஆனால் முன்னாள் அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ் இதற்கு எதிர்ப்பதமாக கருத்துகளை கூறுகிறாரே ? இந்த விவகாரத்தில் அரசுக்கு பல்வேறு கருத்துகள் இருந்தன . 1960 இல் உருவாக்கப்பட்ட விலங்குகளை துன்புறுத்தும் சட்டம் தொடர்பானவை அவை . ஜெயராம் ரமேஷ் கூறிய கருத்துகள் சட்டத்தின்பாற்பட்டவை . கேபினட் கமிட்டி ஜல்லிக்கட்டை தடை செய்யும் விஷயத்தை ஆதரிக்கவில்லை . இதற்கு காரணம் திமுக , மாநில அரசிடமிருந்து வந்த அழுத்தங்கள்த

ஓடிடி பிளாட்பாரங்களுக்கான தணிக்கை தடை பாதிப்பை ஏற்படுத்துமா? டேட்டா கார்னர்

படம்
                  நவம்பர் 9 அன்று , இணையத்தில் வெளியாகும் படங்கள் , பாடல்கள் , பேச்சு உள்ளிட்ட அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டது . இதனை தகவல்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை கட்டுப்படுத்தும் . இதன் கீழ் இனி அனைத்து ஓடிடி சேவை வழங்கும் நிறுவனங்களும் , சமூக வலைத்தளங்கள் , இணையதளங்கள் வரும் . இந்த நிறுவனங்கள் இருக்கும் வெளிநாட்டு முதலீடுகளுக்கும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது . இந்த வகையில் 26 சதவீதம் வெளிநாட்டு முதலீடுகள் மட்டுமே இவற்றில் இருக்கும் . மேற்கண்ட முதலீட்டிற்கு மேல் உள்ள செய்தி நிறுவனங்ளள் இதுபற்றிய விவரங்களை மத்திய அரசுக்கு வழங்கவேண்டும் . இதில் நிறுவனத்தின் இயக்குநர் , தலைவர் , உறுப்பினர்கள் என பல்வேறு விவரங்கள் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது . அக்டோபர் 15, 2021 ஆம் ஆண்டிற்குள் வெளிநாட்டு முதலீடுகள் 26 சதவீதமாக்கப்படவேண்டும் என்ற மத்திய அரசு காலவரம்பு நிர்ணயித்துள்ளது . இதுபற்றி டிஜிபப் நிறுவனம் , மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஊடகங்களை கட்டுப்படுத்த நினைக்கிறது . அரசின் இதுபோன்ற

சிபிஐயை உள்ளே நுழையாமல் தடுத்து நிறுத்தும் மாநிலங்கள்! - வளர்ந்து தேய்ந்த சிபிஐ

படம்
    சிபிஐ விளையாட்டு !     மத்தியில் பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் பல்வேறு வழக்குகள் தூசு தட்டி எடுத்து ஆளும் அரசு , முதல்வர் , அமைச்சரவை உறுப்பினர்கள் என அனைவரின் மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன இதில் தீர்ப்பு வருவது யாருக்கும் முக்கியமில்லை . சேற்றை வாரியிறைத்து அவமானப்படுத்துகிறோம் அல்லவா ? அந்த மட்டுக்கு சிபிஐ சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது . 1946 ஆம் ஆண்டு டில்லி சிறப்பு காவல்துறை சட்டம் மூலம் சிபிஐ துறை உருவாக்கப்பட்டது . இந்த அமைப்பு முதலில் மத்தியஅரசு ஊழியர்களின் ஊழல் புகார்களை விசாரிக்கவே அனுமதிக்கப்பட்டது . இதில் உள்ள பிரிவு ஆறின் படி இந்த அமைப்பை விசாரிக்க அனுமதிப்பது தொடர்பான உரிமை டில்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்கள் நீங்களாக பிற மாநிலங்களுக்கு உள்ளது . சிபிஐ அமைப்பு முன்னர் மத்திய அரசின் தனிப்பட்ட , ஓய்வூதியம் மற்றும் குறைதீர் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டது . அடிப்படையில் எளிமையாக புரிந்துகொள்ள பிரதமர் இதனை இயக்குவார் என்று கூறலாம் . இந்த அமைப்பின் செயல்பாடு என்பது வெளிப்படைத்தன்மை கொண்டதல்ல . இதனை தகவல் உரிமைச்சட்டத்தின்படி கேள்விகேட்