இடுகைகள்

பயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு காரணம் என்ன?

படம்
  இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புக்கு அமெரிக்க வர்த்தக மையம் தாக்குதல் மட்டுமே காரணம் அல்ல. அதற்கு முன்னரே இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு இடையே முன்விரோதம் , பகை, வன்மம் என எல்லாமே உண்டு. அதனை ஊக்கப்படுத்தியது தாக்குதல் நடத்திய பத்தொன்பது தீவிரவாதிகள் என்று கூறலாம்.  கிறித்துவம், இஸ்லாம் என்ற இரு மதங்களுமே நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள். இதில் இஸ்லாமைப் பொறுத்தவரை அவர்கள் பிறரிடமிருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். இதனை இலக்கியவாதிகள் கூட பயன்படுத்தி காபிர்களின் கதைகள் என எழுதுகிறார்கள். இதன் வழியாக அவர்கள் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்று தெரியவில்லை.  புர்கா அணிவது, குல்லா அணிவது என தங்களை தனித்தே காட்டிக்கொள்ளும் இஸ்லாமியர்கள் அனைத்து நாடுகளிலும் இணக்கமான தன்மை கொண்டவர்களாக இல்லை. அமெரிக்காவில் இந்த வேறுபாடுகளை துல்லியமாக அடையாளம் காண்கிறார்கள். முஸ்லீம்களின் புனித நூலில் போர் என்பதை இயல்பானதாக ஏற்றுக்கொள்வதால், வன்முறையான குணம் கொண்டவர்கள் என முஸ்லீம்களை அடையாளப்படுத்த தொடங்கினர். 2010ஆம்ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் அமெரிக்கர்களில் பாதிப்பேர் முஸ்

நாட்டை திகிலில் உறைய வைத்த கொலைகாரர்

படம்
 புத்திசாலியான குற்றவாளி முடிஞ்சா என்னைப் பிடி என சொல்லிவிட்டு குற்றங்களை செய்து விட்டு ஓடுபவர்களைத்தான் புத்திசாலி என காவல்துறை ஏற்கும். இதில் டாக்டர் ஹெச் ஹெச் ஹோல்ம்ஸ் என்பவரை இப்படிக் கூறலாம். இவர் ஸ்வீனி டாட் என்பவரை தனது ரோல்மாடலாக வரித்துக்கொண்டு வேலை செய்தார்.  ஸ்வீனி டாட் என்பவர் நாவிதராக வேலை செய்து வந்தார். அவரைப் பொறுத்தவரை முடிவெட்டுவது, ஷேவிங், அண்டர் ஷேவிங் என்பதெல்லாம் ஹாபி. முழுநேர வேலை, சேரில் உட்கார்ந்தவர்கள் அப்படியே கீழேயுள்ள அறைக்கு லிவரைத் தள்ளி கொண்டுபோய் சேர்த்து கொல்வதுதான். பிறகு அவர்களின் பணத்தை திருடிக்கொண்டு உடலை அழித்துவிடுவது.  இவரைப் பற்றிய செய்தியைப் படித்த ஹோல்ம்ஸ் உடனே தனது வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டார். இவர், வேடிக்கை மற்றும் லாபத்திற்காக கொலைகளை செய்யத் தொடங்கினார். ஹோட்டல் ஒன்றைக் கட்டி அதில் தான் கூட்டி வரும் இரைகளை சித்திரவதை செய்வதற்கான அறைகளை அமைத்தார். அலறல் கேட்காத சவுண்ட் ப்ரூப்  வசதி, சித்திரவதை அறைகள்,  உடலை வேக வைக்கும் ஸ்டவ் என வேற லெவலில் அமைத்தார். தனது காதலிகள், மனைவிகள், வணிக பங்காளிகள், குழந்தைகள் என ஏராளமானோரை தடயமே இல்லாமல் கொன்

மூளையில் சுரக்கும் எக்ஸ்ட்ரா டோபமைன் குற்றத்திற்கு ஆதாரமூலமா?

படம்
          குற்றமும் மனமும் டெட் பண்டியைப் பற்றி நாளிதழ்களில் வாசித்திருப்பீர்கள் . அமெரிக்காவில் பெண்களை தாக்கி சித்திரவதை செய்து கொல்வதில் புகழ்பெற்றவர் . குற்றம் செய்வதில் டாக்சி டிரைவர் ஜெஸ்பர்சனைப் போன்ற மனமுடையவர் . முதல் குற்றம் , இரண்டாம் குற்றம் என அவரது கொலை செய்வதின் அடிமைத்தனம் கூடிக்கொண்டே சென்றது . டெட் பண்டியைப் பற்றிய குறிப்பிடதக்க அம்சம் , செய்த குற்றத்தை புத்திசாலித்தனமாக செய்து காவல்துறைக்கு தண்ணி காட்டியதுதான் . 1978 ஆம் ஆண்டு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பிப்ரவரி மாதம் புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் தங்குமிடத்தில் நுழைந்தார் . அங்கு நான்கு பெண்களை படுகாயப்படுத்தி இரு பெண்களைக் கொன்றார் . 1976 ஆம் ஆண்டு டெட்டுக்கு பெண்களை கடத்துவது தொடர்பான விசாரணை நடைபெற்றது . அப்போதே அவர் டஜன் கணக்கிலான பெண்களை கொன்றிருந்தார் . ஆனால் அப்போது நீதிமன்றம் அவர் எப்படிப்பட்ட கொலைகாரர் என்பதை அறியவில்லை . பல்வே்று உளவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட பெண்களின் உடலிலிருந்து காயங்களைப் பார்த்து கொலை செய்தவர் ஆபத்தான மனிதர் என முடிவுக்கு வந்தனர் . இதுபற்றி ஆராய்ச்சி செய்த டாக்டர் அல் கா

பௌர்ணி நிலவு ஒளி மனிதர்களின் மனநிலையை பாதிக்கும்! - உண்மையும் உடான்ஸூம்

படம்
      கரப்பான் பூச்சிகள் இல்லாத உலகம் சாத்தியம் ! ரியல் : கதிர்வீச்சிலும் கூட சமாளித்து வாழும் என்று கூறப்படுவது , கரப்பான் பூச்சி . மனித இனத்திற்கு பாக்டீரியா , ஒவ்வாமை பிரச்னைகளை ஏற்படுத்தியபடி வாழும் இந்த பூச்சி இனம் , பத்தாயிரம் ஆண்டுகளாக நம்மோடு வாழ்ந்து வருகிறது . மரம் , இலை ஆகியவற்றை உண்டு , நைட்ரஜன் சத்தை நிலத்திற்குப் பெற்றுக் கொடுக்கிறது . இயற்கையின் உணவுச்சங்கிலியில் கரப்பான் பூச்சி முக்கியமானது . எனவே , அவற்றால் ஏற்படும் தொற்றுநோய்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வதே புத்திசாலித்தனம் . அதன் இனத்தை ஹிட் ஸ்ப்ரே அடித்து கொல்ல நினைக்காதீர்கள் . தற்போதைக்கு இம்முயற்சி சாத்தியமல்ல . உலகிலுள்ள அனைத்து மக்களும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யத்தொடங்கினால் சூழல் மேம்படும் ! ரியல் : நிச்சயமாக சூழல் மேம்படும் . இந்திய குடிமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய முயன்றால் , கழிவுகளை நிலத்தில் கொட்டுவது குறையும் . இந்தியாவின் நகர்ப்புற பகுதிகளில் ஆண்டுதோறும் 62 மில்லியன் டன்கள் கழிவுகள் உருவாகின்றன . இந்த எண்ணிக்கை 2030 இல் 165 மில்லியனாக

கொரோனா பீதியால் விரட்டப்படும் மக்கள்! - இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலம்

படம்
toi வேலைதேடி வெளிமாநிலங்களுக்கு சென்ற வட இந்திய மக்கள் இப்போது தம் மாநிலங்களுக்கு வேகமாக திரும்பி வருகின்றனர். காரணம், கொரோனா வைரஸ் பீதியால் பல்வேறு இடங்களிலும் வேலை இல்லை. அதற்காக பசியோடு கிடக்க முடியுமா? அரசு மக்களுக்கு பயண ஏற்பாடுகள் செய்கிறதோ இல்லையோ அவர்கள் நடக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் இப்போது பல்வேறு சோதனைகள் செய்யாமல் அவர்களை கிராம மக்கள் உள்ளே அனுமதிப்பதில்லை என்று முடிவெடுத்து அவர்களை புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர். மேற்கு வங்கம், பீகார், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தராகண்ட் மக்கள் பலரும் ஊர் நோக்கி திரும்பத் தொடங்கியுள்ளனர். ஆனால் இவர்களை ஊருக்குள் விடாமல் கிராம மக்கள் தடுத்து வைத்துள்ளனர். ராஜஸ்தானின் தகவல்லி கிராமத்தைச் சேர்ந்த இடம்பெய்ரந்து சென்ற மக்கள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முறையாக சோதனைகள் நடைபெறாத நிலையில் மூன்று நாட்களுக்கு மேலாக கிராமத்திற்கு வெளியில் காத்திருக்கின்றனர். ”கேரளம் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த மக்களை சோதித்த பிறகே கிராமத்திற்கு அனுமதிக்க அரசு உத்தரவு. அரசின் உத்தரவுக்கு முன்னர் அங்கு சென்றவர்களையும் அங்கு

அதிக இரைச்சலுக்கு நாய்கள் பயப்பட்டு பதுங்குவது ஏன்?

படம்
பிபிசி மிஸ்டர் ரோனி திடீரென தரை அதிரும் சத்தம் கேட்டால் நாய்கள் நடுங்கி பெட்டின் அடியில் பதுங்குவது ஏன்? நாய்கள் மட்டுமல்ல ஆறறிவு படைத்த மனிதர்கள் கூட இடிக்கு, பட்டாசுக்கு, வெடிகுண்டுக்கு பயந்து பதுங்குவது உண்டு. நாய்கள் பயப்படுவது அதிகமாக இருபதற்கு காரணம், அவற்றின் கேட்கும் திறன் மிக கூர்மையாக இருப்பதுதான். காரணம், திருவிழாவில் போடும் வேட்டுச்சத்தம் கேட்டால் கூட எங்கள் வீட்டு நாய் பெட்டுக்கு அடியில் போய் பதுங்கிவிடும். இதற்கு ஒலி பற்றிய பயம்தான் காரணம். 2015ஆம் ஆண்டு ஆஸ்லோ பல்கலைக்கழகம் செய்த ஆய்வுப்படி, வயதான நாய்கள் அதிக ஒலிக்கு பயந்து நடுங்குவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மகிழ்ச்சியோ துக்கமோ அதற்கு ஏற்றபடி நாயை பழக்கப்படுத்த முடியும் என்று இவர்கள் கூறுகின்றனர். அது சாத்தியமா என்று நாயை வளர்ப்பவர்கள்தான் சொல்ல வேண்டும். நன்றி - பிபிசி 

வித்தியாசமான போபியாக்கள்! - பயம்தான் பிரதானம்

படம்
பாபாபோபியா இது கத்தோலிக்க மத தலைவரான போப்பை பார்த்தால் வரும் பயம். பெண்களுக்கு வருமா? ஆண்களுக்கு வருமா என்று தெரியவில்லை.  சோசெராபோபியா பெற்றோரைப் பெற்றவர்களைப் பார்த்து வரும் பயம். தாத்தா, பாட்டியைப் பார்த்து வரும் பயம் என்றால் ஈசியாக புரியும் என நினைக்கிறேன்.  சோம்னிபோபியா தூங்கிவிடுவோமோ என நினைத்து பயப்படுவது. அனிமேஷன் படிப்பவர்களுக்கு வரும் வியாதி இதுதான் என இப்போது தெரிகிறது.  சாந்தோபோபியோ நிறங்களைப் பார்த்து மனதில் ஏற்படும் குலை நடுக்கத்தை இப்படி சொல்கிறார்கள்.  ஆம்பலோபோபியா சென்டர் ஆப் தி அட்ராக்சனைப் பார்த்து வருவது. அதுதாங்க, தொப்புளைப் பார்த்து வருவது.  ஹீலியோபோபியா சூரியன், வெளிச்சம், எல்இடி பல்புகளை பார்த்து ஒருவர் ஜகாவாங்கினால் அவருக்கு இந்தப் பிரச்னை என புரிந்துகொள்ளலாம்.  அராய்ச்சி புட்டிரோ போபியா பீநட் பட்டர் சாப்பிடும்போது வாயின் மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ளுமோ என பயப்படும் பழக்கம். நம்மூரில் இதனை பிரெட்டும் ஜாமும் என்று கூட மாட்டிக்கொள்ளலாம். இல்லையெனில் இருக்கவே இருக்கிறது அப்படியே அள்ளித் தின்னும

பயம் ஏற்பட்டால் என்னாகும் தெரியுமா?

படம்
பயப்படும்போது உடலுக்குள் என்ன நடக்கிறது? நாம் பிறந்த தில் இருந்து நம்மை அடையாளம் காட்டுவதாக இருப்பது ஒலிதான். அது அழுகையாக, வீறிடலாக முதலில் இருக்கிறது. பின்னர், அது சூழலைப் பொறுத்து மாறுபட்டு ஏற்படுகிறது. ஆண்கள் பெரும்பாலும் உடைந்து அழுவது கிடையாது. பெண்கள் அழாமல் இருக்க வைப்பது சிரமம். பொதுவாக அபாயத்தை பார்த்து ஏற்படும் அலறல் சத்தம் மூளையிலுள்ள அமிக்டலா பகுதியை உசுப்புகிறது. இதன் விளைவாக உடல் முழுக்க அந்த அபாயத்திலிருந்து தப்ப வேண்டும் என்று நமக்கு உணர்த்துகிறது. இதனை எப்படி உணர்வீர்கள்? பாம்பு, தேள் போன்ற கொல்லும் அல்லது கடுமையாக வலி ஏற்படுத்து உயிரிகளை அருகில் பார்த்தால் உடல் தன்னிச்சையாக தன்னை பாதுகாத்துக்கொள்ள நினைக்கும். அப்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். உங்களுக்கு ஒரே விஷயம்தான் தோன்றும். அந்த இடத்திலிருந்து காயம்படாமல் நாம் தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அது. இப்போது உடலின் உறுப்புகளுக்குள் ஏற்படும் மாற்றம் பற்றி பார்ப்போம். கண்கள் கண் பார்வையின் திறன் கண்ணாடி போட்டிருந்தாலும் அதிக விழிப்பாக மாறும். உயிர் பிழைக்க வேண்டுமே? இதனால் நீங்கள் பார்க்காத கவனி

அதிகரிக்கும் சுயமருத்துவ சோதனைகள்

படம்
மருத்துவர்களிடம் செல்வதற்கு முன்னதாக நோய் பற்றி அறியும் பழக்கம் இன்று அதிகரித்திருக்கிறது. செகண்ட் ஒப்பீனியனாக நோய் பற்றி அறிவது செலவு குறித்தும், மருந்து குறித்தும் அறிய இது உதவுகிறது. அதேசமயம், உடலுக்கு தகுந்தாற்போல அல்லாது நோய் குறித்த பொதுவான தன்மைகளைப் படிக்கும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. இதனை சைபர் காண்டிரியா என்று குறிப்பிடுகின்றனர். 205 ஐடி பணியாளர்களிடம் இது குறித்த ஆய்வு செய்யப்பட்டது. இதில் 19.5 சதவீதம் பேர் இணையத்தில் நோய் குறித்து தகவல்களைத் தேடுவதும், 20 சதவீதம் பேர் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் போது அதுகுறித்து இணையத்தில் தேடுவதும் தெரிய வந்துள்ளது. 24.4 சதவீதம் பேர் பாடல், படங்கள் பார்த்துக்கொண்டிருந்தாலும் திடீரென  நோய் குறித்து இணையத்தில் தேடியுள்ளனர்.  10.7 பேர் நோய் குறித்து பாதிப்புகள் குறித்தும் படிக்கின்றனர். 17.6 சதவீதம் பேர் இணையத்தில் படித்த நோயின் பாதிப்பு தங்களிடம் உள்ளதாக நினைத்து அஞ்சி நடுங்குகின்றனர். இதில் இணையத்தில் உள்ள பாதிப்புகளால் 9.8 சதவீதம் பேர் கவலைப்பட்டுக்கொண்டே உள்ளனர். இணையத்தில் தான் படிப்பதை மருத்துவரிடம் விவரிக்கும்

அதிர்ச்சி ஏற்பட்டால் உடல் நடுங்குகிறதா?

படம்
பயம் ஏற்படும்போது உடல் நடுங்குவது ஏன்? பொதுவாக உருட்டுக்கட்டை போன்ற நாயைப் பார்க்கும்போது, எக்ஸ்எல் சைஸ் ஆன்டியைப் பார்க்கும்போது, ஆண்டு இறுதியில் இன்கிரிமெண்டாக போடும் ஆயிரம் ரூபாயைப் பார்க்கும்போது உடல் நடுங்கும், நாக்கு குழறும். காரணம், மூளையிலுள்ள அமிக்தலா எனும் பகுதியில் மேற்சொன்ன அசம்பாவிதங்கள், ஆச்சரியங்கள் நடக்கும்போது, அட்ரினலின் சுரக்கத் தொடங்கும். பயம், சண்டை இரண்டுக்குமான டபுள் டூட்டி ஹார்மோன் இதுவே. சூழலைப் பொறுத்து ஆச்சரியப்படவோ, ஆவேசப்படவோ காரணம் இந்த சுரப்பிதான். அட்ரினலின் அளவு அதிகரிக்கும் போது உடலின் தசைகளால் நடுக்கமுறுவதைத் தடுக்க முடியாது. மெல்ல இதயத்துடிப்பை அமைதியாக்க நான்கைந்து முறை மூச்சை இழுத்து விட்டால் எதிர்பார்ப்பு, அதிர்ச்சி குறைந்து உடல் நார்மல் மோடுக்கு வரும். தகவல், படம்: பிபிசி

பயத்தை கடப்பது எப்படி?

படம்
பயத்தை எப்படிக் கடப்பது? தொகுப்பு: லோக்கல் ப்ரூஸ்லீ புரிந்துகொள்ளுங்கள் முதலில் பயம் என்பதை எதுகுறித்து என தெளிவுக்கு வருவது அவசியம். அவசரப்படாதீர்கள். இதனை உளவியல் மருத்துவர் சோதனைகள் மூலம் உறுதி செய்து பீஸ் வாங்குவார். அவர் வேலையை நாம் கெடுக்க முடியாது.  Cognitive Behavioural Therapy (CBT)   என்பதுதான் அவர் உங்களுக்கு அளிக்கும் சிகிச்சை.  பயம், உங்களது கருத்து, ஆளுமை பயம் தொடர்பாக ஏற்படும் உடல் மொழி, அசைவுகள் ஆகியவற்றை மருத்துவர்கள் நோட்பேடில் குறித்து வைத்து அதற்கேற்ப சிகிச்சை வழங்குவார்கள்.  நீங்களே உங்களது பயம் குறித்து உங்களுடன் உரையாடலாம். அல்லது அது குறித்து நண்பர்களிடம் பகிரலாம். இதன் மூலம் பயம் குறித்த பாதிப்பிலிருந்து வெளியே கொண்டு வர உங்களது ஆத்ம நண்பர்களே உதவுவார்கள். நச்சு தாங்க முடியல என்றுதான்.  மீள்வதற்கான பயிற்சி சிலந்தி அல்லது கூட்டமாக உள்ள இடம் உங்களுக்கு பிரச்னை என்றால் சிலந்தியை கையில் ஓடவிட்டு ரசிக்கும் உத்தம வில்லன்கள் உங்கள் செட்டிலேயே இருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து அதனைப் பார்த்து பயத்திலிருந்து வெளியே வாருங்கள். கூட்டம் பயமென்ற