பாலியல் வல்லுறவுக்குள்ளான தங்கைக்கு நியாயம் தேடி நகரம் வரும் கிராமத்து மனிதனின் வாழ்க்கை! - நரசிம்முடு
நரசிம்முடு Director: B. Gopal Produced by: Chengala Venkat Rao Writer(s): P. Ravi Shankar பஸ்ஸில் ஜெயசித்ராவின் பெண்ணை கல்லூரி மாணவர்கள் மானபங்கம் படுத்த முயல்கிறார்கள் . அவர்களை அடித்து உதைத்து மூஞ்சி முகரையை பெயர்க்கிறார் என்டிஆர் ஜூர் . ஆனால் ஒரு வார்த்தை பேசுவதில்லை . முழுக்க அடிதான் . பதினைந்து பேர்களை அடித்து நொறுக்கி புத்தூர் கட்டு போட வைத்ததிற்காக அவரை போலீசார் கைது செய்கிறார்கள் . அங்கு வரும் ஆசிஷ் வித்யார்த்தி ( கமிஷனர் ) என்டிஆரைப் பார்த்து எரிச்சலாகி விசாரணை செய்ய முயல்கிறார் . ஆனால் என்டிஆருக்கு பேச்சு வராது ஊமை என்று சொல்ல ஆசிஷ் அமைதியாகிறார் . என்டிஆரின் கண்களை மட்டும் அவரால் மறக்கவே முடியவில்லை . என்டிஆரை , ஜெயசித்ரா தான் வாழும் காலனிக்கே கூட்டி வருகிறார் . கொண்டுவீடு எனும் கிராமத்திலிருந்து ஹைதராபாத்திற்கு என்டிஆர் எதற்கு வந்திருக்கிறார் என்பதுதான் பிளாஷ்பேக் கதை . இந்த படத்தில் வரும் ரேஷன் கார்டில் என்டிஆர் பெயரை அவரது மொத்த கிராமமுமே சேர்த்திருக்கிறார்கள் . இக்காட்சியை அப்படியே சுட்டு எங்கள் ஆசான் படத்தில் வைத்திரு