இடுகைகள்

வேலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகம் சுற்றிவர தனியாக கிளம்பும் பெண்கள் - சாகச பயணத்தின் மேல் உருவாகும் புதிய மோகம்

படம்
  இன்று உலகம் தொழில்நுட்பம் சார்ந்து நிறைய மாறியிருக்கிறது. அதேசமயம், ஆண், பெண் என பாலின வேறுபாடுகளும் அதிகரித்திருக்கின்றன. பொருளாதார வலிமையில் பெண்கள், ஆண்களுக்கு நிகர் இணையாக ஏன் அவர்களையும் கடந்து சென்றுவிட்டார்கள். வீடு, அலுவலகம் கடந்து புதிய இடங்களுக்குச் செல்ல பெண்கள் விரும்புகிறார்கள். அதற்கு   பொருளாதார வலிமையும் கைகொடுக்கிறது. லீவு போட்டுவிட்டு அல்லது வேலையை விட்டு விலகிச் செல்ல துணிச்சலான மனமும் இருக்கிறது. அப்புறம் என்ன? உடனே பையை எடுத்துக்கொண்டு கிளம்பவேண்டியதுதானே? பெங்களூருவில் எஃப்5 எஸ்கேப்ஸ் என்ற நிறுவனம், பெண்களுக்கு மட்டுமேயான பயணங்களை திட்டமிட்டு ஏற்பாடு செய்துகொடுக்கிறது. தங்கும் இடம், சாப்பாடு என அவசிய விஷயங்களை, இந்த நிறுவனமே பார்த்துக்கொள்கிறது. பெண்கள் முடிவு செய்யவேண்டியது ஒன்றுதான். குழுவாக செல்வதா அல்லது தனியாக செல்வதா என்பதை முடிவு செய்வது மட்டும்தான். இந்த நிறுவனம் 300க்கும் மேலான சுற்றுலாக்களை ஏற்பாடு செய்துள்ளது. 30க்கும் அதிகமான முறை, பெண்களின் குழுக்களை   சுற்றுலா அனுப்பி வைத்துள்ளது. இந்த நிறுவனத்தில் 7 ஆயிரம் பெண்கள் பயணித்துள்ளனர். வாண்டர் வும

சாதாரண டைப்ரைட்டரில் ஏஐயை இணைத்தால்.... தொழில்நுட்ப வல்லுநர் அரவிந்த் சஞ்சீவ்

படம்
  இப்போது எல்லோருமே சாட் ஜிபிடி, அதானி பங்கு, மோசடி, வாழ்க்கை, எதிர்காலம், வேலை போய்விடுவோமோ என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் சாட் ஜிபிடி சொல்லும் பதில்களில் உள்ள சரி தவறு என்பதைப் பற்றி நாமும் விவாதங்களை செய்யப்போவதில்லை. பிங் தன்னுடைய தேடுதல் தளத்தில் சாட் ஜிபிடியை இணைத்துள்ளது. அதுபோல ஏஐயை வேறு ஏதாவது சாதனங்களில் இணைக்க முடிந்தால் எப்படியிருக்கும்? யோசித்ததோடு அதை தனது திறமை மூலம் சாத்தியப்படுத்தி இருக்கிறார் இளைஞரான அரவிந்த் சஞ்சீவ். ‘’ஏஐ யைப் பயன்படுத்தி சோதனைகளை செய்வது, மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்குமான உறவை மேம்படுத்தும்’’ என்கிறார். இவர், இ காமர்ஸ் தளத்தில் வாங்கிய சாதாரண டைப்ரைட்டரை ஏஐ ஆற்றல் கொண்டதாக மாற்றியிருக்கிறார். இதற்கென சில மாறுதல்களை எந்திரத்தில் செய்திருக்கிறார்.   இந்த எந்திரம், ஓபன் ஏஐயின் சாட் ஜிபிடி 3 மாடலில் இயங்குகிறது. அரவிந்த் பயன்படுத்துவது, எண்பதில் வெளியான பிரதர்ஸ் நிறுவனத்தின் டைப்ரைட்டர். சாதாரண டைப்ரைட்டரில் எப்படி ஏஐயை இணைக்கும் யோசனை வந்தது? எல்லாம் ஒரு கலைதாகம்தான் அப்படி ஒரு திசை நோக்கி செலுத்தியிருக்கிறது. அரவிந்

கடிதம் எழுதி நீண்டநாட்களாகின்றன - வே.பாபு- குமார் சண்முகம் - கடிதங்கள்

படம்
  கடிதம் எழுதி நீண்ட நாட்களாகின்றன… குமார்- எப்படி இருக்கிறாய்? வனாந்தரத்தில் காணாமல் போன குயில் குரல் போல இருக்கிறது உன் பதிலின்மை… என்னவாயிற்று? ஏதாவது படித்தாயா? வேலைபளு அதிகமா? நான்   எதுவும் படிக்கவோ, எழுதவோ இல்லை. தக்கை நண்பர்கள் அனைவரும் நலம். தக்கையில் குறிப்பிடும்படியாக எதுவுமில்லை. வீட்டில் அனைவரும் நலமா? சிவராஜ் அவ்வப்போது தொடர்புகொண்டு பேசுகிறார். தொகுப்பு கூடிய விரைவில் கொண்டு வரலாமென்று இருக்கிறேன். கடிதம் எழுதி நீண்ட நாட்களாகின்றன.                                                                                           வே.பாபு சேலம் 25.03.2006 படம் - பின்டிரெஸ்ட்

மறந்துவிட்டாயா நண்பா? - கடிதங்கள்- குமார் சண்முகம்

படம்
  மறந்துவிட்டாயா நண்பா? 786 வள்ளியம்பாளையம் 31.3.2001 அன்புள்ள என் உயிர் நண்பன் குமாருக்கு, அப்பாஸ் எழுதுவது., நான் இங்கு நலமாக இருக்கிறேன். அதுபோல அங்குள்ள நலத்தை அறிய ஆவலாக உள்ளேன். விடுமுறையில் நீ என்னை மறந்து இருக்கலாம். ஆனால், என்னால் உன்னை மறக்க முடியவில்லை. நீ எங்கு வேலை செய்கிறாய் என்று குறிப்பிடவும்.   அப்படியே எனக்கும் ஒரு வேலை இருந்தால் பார்க்கவும் என்று சொல்லி இருந்தேனே? நீ என்னை மறந்துவிட்டாயா? நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும். அதனால் இந்த வாரம் அல்லது அடுத்தவாரம் ஞாயிற்றுக்கிழமை   நீ என் வீட்டுக்கு வரவும். இடையில் மடல் வரையவும். மறந்திடாதே..நீ என்னை மறந்தாலும் நான் உன்னை மறவேன்.                                                                                            இப்படிக்கு.. எம் அப்பாஸ் படம் - பிக்சாபே

உலகமே வேண்டும் என அத்தனைக்கும் ஆசைப்படும் அஞ்சல் ஊழியரின் வாழ்க்கைப்பாடு! - அஞ்சல் நிலையம்

படம்
  அஞ்சல் நிலையம் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி தமிழில் பாலகுமார் எதிர் வெளியீடு   சார்லஸ் புக்கோவ்ஸ்கி நன்றி- காமன்ஃபோக்ஸ்  ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்த அமெரிக்க கவிஞரான சார்லஸ் எழுதியுள்ள நாவல்தான் அஞ்சல் நிலையம். இந்த நூல் அவரின் சுயசரிதை என கூறப்படுகிறது. நாவலின் இறுதிப்பகுதியை நீங்கள் படித்தால் அதை உணர்வீர்கள்.   நாவல் முழுக்க அஞ்சல் வேலை, அதிலுள்ள பிரச்னைகள், அதை எதிர்கொண்டு வேலை செய்யும் ஹென்றி சின்னஸ்கி என்ற ஊழியரின் செயல்பாடு, அவரின் மேலதிகாரிகள், சின்னஸ்கியின் பிற ஆர்வங்களான குதிரைப்பந்தயம், பெண்களை இஷ்டப்படி புணருவது என விவரிக்கப்பட்டுள்ளது. நூலை நீங்கள் சிரித்துக்கொண்டுதான் படிப்பீர்கள். அந்தளவு செய்யும் வேலையை , சந்திக்கிற மனிதர்களை   பகடி செய்கிறார் சார்லஸ். குறிப்பாக பணத்திற்காக வேலை செய்து அந்த வேலையே அவர்களது மனதை, உடலை   எப்படி உருக்குலைக்கிறது என்பதை வேடிக்கையான மொழியில் சொல்கிறார். நாவலின் அங்கத மொழி இல்லாதபோது நூல் சாதாரணமாகவே தோன்றும். அதிலும் அஞ்சலக வேலை, இடங்களை நினைவு வைத்துக்கொள்வதற்கான திட்டங்களை கடுமையாக அங்கதம் செய்திருக்கிறார். கூடவே, அலுவ

மெல்ல தற்கொலைக்கு தூண்டும் குறைபாடு - மேஜர் டிப்ரசிவ் டிஸார்டர் -எம்டிடி

படம்
  மேஜர் டிப்ரசிவ் டிஸார்டர் வேலை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு, எண்டோவ்மென்ட் பாலிசி கட்ட வேண்டிய காலம் என சம்பாதிப்பவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் சிக்கல்கள் உருவாகலாம். பொறுப்புகள் மனதிற்கு சுமையாகத் தோன்றும்போது மனச்சோர்வு உருவாகிறது. இதனை ஒருவர் எளிதில் கையாள முடிந்தால் வெளியே வந்துவிடலாம். ஆனால் மனச்சோர்வு புதிர்ப்பாதையாக தோன்றும்போது, அவர்களுக்கு திகைப்பாகிவிடும்.  மேஜர் டிப்ரசிவ் டிஸார்டரைப் பொறுத்தவரை ஒருவருக்கு முதலில் ஏற்படும் மனச்சோர்வுக்கு மட்டுமே காரணம் இருக்கு்ம். அதாவது சில வகை தூண்டுதல். அதற்குப் பிறகு ஏற்படும் மனச்சோர்வுக்கு எந்த காரணமும் இருக்காது. இந்த மனநல குறைபாடு உள்ளவர்களுக்கு சோகம் என்பதை விட அனைத்திலும் எரிச்சல் இருக்கும். தினசரி செய்யும் செயல்களிலும் அது தீவிரமாக வெளிப்படத் தொடங்கும்.  பொதுவான சமூக நிகழ்ச்சிகளில் மனச்சோர்வு குறைபாடு உள்ளவர்கள் பங்கேற்க மாட்டார்கள். சாப்பிடுவதைக் கூட ரசிக்க முடியாது. செய்கிமா 2 மெட்டல் இசையைக் கூட ரசிக்க மாட்டார்கள். சரியாக தூங்க முடியாது. உடலில் வலி இருப்பது போல தோன்றும். அவர்களுக்கு இந்த பிரச்னையிலிருந்து வெளிய

மழையால் ஏற்படும் மந்தநிலை - கடிதங்கள் - கதிரவன்

படம்
  மழையால் மந்தநிலை ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? இன்று அதிகாலை முதல் மழை பெய்துகொண்டே இருக்கிறது . சூரியனைப் பார்க்கவே முடியவில்லை . டீ குடிக்க வெளியே போனால் மழை விடவில்லை . அந்த இடத்திலும் போட்டி போட்டு ர . ரக்கள் அதிமுக ஆபீசுக்கு வந்துவிட்டார்கள் . அவ்வை சண்முகம் சாலை முழுக்க ஆம்புலன்ஸ் நீளத்திற்கு வண்டிகளைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டனர் . போக்குவரத்து நெரிசலுக்கு வேறு என்ன காரணங்கள் வேண்டும் ? ஸ்கைலேப் என்ற தெலுங்குப்படம் பார்த்தேன் . ஆந்திராவில் உள்ள ஏழைமக்கள் வாழும் ஊர் . அந்த ஊரின்மீது விண்கல் வந்து மோதப்போவதாக செய்தி . அது மக்களை எப்படி பாதிக்கிறது என்பதே படக்கதை . இதனூடே ஜமீன்தார் மகள் கௌரி எப்படி உண்மையான பத்திரிகையாளராகிறாள் , மருத்துவ உரிமம் தடைபட்ட ஆனந்த் எப்படி தனது முதல் கிளினிக்கை கிராமத்தில் தொடங்கி வெல்கிறான் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள் . இன்று ஆபீசில் ஒரு கட்டுரை மட்டுமே எழுதினேன் . மழை பெய்தால் மனம் வேலையில் குவிய மாட்டேன்கிறது . படிக்கவேண்டிய அறிவியல் இதழ்கள் நிறைய உள்ளன . அவற்றையும் இனி படிக்க வேண்டும் . துப்பறியும் சாம்பு - 2 நூலி

தொய்வாகும் உடலால் ஆற்றல் இழக்கும் மனம் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  தொய்வடையும் உடலால் பலவீனமாகும் மனம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? நாளிதழ் வேலைகள் கடுமையாகிவிட்டன . ஒருங்கிணைப்பாளரைப் பார்த்தால் ரேபீஸ் வந்த நாயைப் போலவே தெரிகிறது . குரல் அப்படித்தான் . சீப் டிசைனரே இன்று ஒருவித பதற்றத்தில் குரல் உயர்த்தி கூச்சல் போடத் தொடங்கிவிட்டார் . இப்படி வேலை செய்தால் படிப்பவர்களுக்கு எப்படி சந்தோஷம் கிடைக்கும் என்று தெரியவில்லை . எனக்கு நெருக்கடி சூழல்தான் அமைகிறது . 2022 ஆம் ஆண்டு தங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் . உங்கள் மனதில் நினைத்துள்ள ஆசைகள் நிறைவேற பிரார்த்திக்கிறேன் . தாரகை - ரா . கி . ரங்கராஜன் எழுதிய நாவலைப் படித்தேன் . 624 பக்கம் . சில நாட்கள் இடைவெளியில் தான் படிக்க முடிந்தது . வேலைச்சுமை தான் காரணம் . செரிமான பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது . பழங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும் . உடல் நலிவுற்றால் மனதும் பலவீனமாகிவிடுகிறது . புத்தாண்டில் டைரி வாங்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளேன் . போனமுறை வாங்கியதில் அதிகம் எழுதவில்லை . இனியும் எழுதுவேனா என்று தெரியவில்லை . உங்கள் பெற்றோரைக் கேட்டதாக சொல்லுங்கள் . நன்றி ! அன்பரசு 29

பழைய நண்பரோடு நடந்த உரையாடல் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பழைய நண்பரோடு பேச்சு ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? வீட்டில் உள்ளவர்களையும் கேட்டதாகச் சொல்லுங்கள் . நான் இன்றுதான் நெல்சனின் டாக்டர் தமிழ்ப்படம் பார்த்தேன் . சீரியசான பிரச்னை தான் ; அதை அணுகுகிற முறை காமெடியாக இருந்தது . நிறைய இடங்களில் வசனமாக இல்லாமல் காட்சி ரீதியாகவே காமெடி செய்திருக்கிறார்கள் . நடித்த எஸ்கேவுக்கு மட்டுமல்லாமல் பார்க்கும் நமக்கே புதிய அனுபவத்தை படம் தருகிறது . இதை எழுதும்போது நீங்கள் ஜெய்பீம் படத்தைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன் . சூர்யா தனது தொண்டு நிறுவனம் மூலம் செய்யும் சமூக சேவைகளில் திரைப்படங்களையும் புதிதாக இணைத்திருக்கிறார் . துணிச்சலான முயற்சி . தியேட்டரை விட ஓடிடி இதற்கு சரியான தளம் . இப்போதைக்கு தமிழில் அமேசான் நிறுவனத்திற்கு சூர்யா மட்டுமே அம்பாசிடராக இருக்கிறார் . அந்திமழையில் பெண்கள் மனதைப் புரிந்துகொள்வது பற்றி பலரும் தங்கள் கருத்தை எழுதியிருந்தனர் . சிறப்பிதழ் வாசிக்க நன்றாகவே இருந்தது . தீபாவளி அன்றும் இங்கு மழை பெய்தது . துவைத்துப் போட்ட துணிகள் முழுமையாக காயவில்லை . நாளை அலுவலக வேலை உள்ளது . உடுத்திச்செல்ல த