இடுகைகள்

பகிர்தலின் பகல்வேளைகளும், இரவுப்பொழுதுகளும்

பகிர்தலின் பகல்வேளைகளும், இரவுப்பொழுதுகளும்                                                       கஸரக்கட்டன் பகிர்தல் பல்வேறு அபாயங்கள் குறித்தும் பேசலாம். ஆனால் அதில் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. பாதுகாப்பின்மை இருக்கிறது. நம் மனம் எப்போதும் ஒரு பாதுகாப்பு தேடுகிற ஒன்றாக இருக்கிறது. சாய்ந்து கொள்ள மொட்டைமாடி சுவர் தேவைப்படுகிறது. சென்னையில் லோகேஷ் என்னும் திரைப்பட போஸ்டர்களை வடிவமைக்கும் ஒருவரை சந்தித்தேன். ஆள் மிக இறுக்கமானவர் போல. நிறைய பேர் வாழ்க்கையில் கபடி விளையாடியிருக்கிறார்கள் இதைச் சொல்லக் காரணம் அவரின் சினிமா தளம்தான். முகத்தில் எந்தவித உணர்ச்சியும் தெரியவில்லை என்று பயமாக இருந்தது. எப்போதும் போல நான் பேசி என்னை நானே கிண்டல் பகடியாக பேசினாலும் நகரத்திற்குரிய போக்கில் எந்த பதிலும் பேசாமல் அதிகபட்சமாக ‘ம்’ என்றார். ஒவ்வொரு  மனிதனும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டியவன்தான். பகலை சமாளித்துவிடலாம். ஆனால் இரவு அப்படி அல்ல. மனதை கலங்கடிக்கக் கூடியது. அப்படியே மனதினுள்ளிருக்கும் அனைத்தையும் ஓட விடும் கண்முன்னே. அதனால் இரவு நேரத்தில் ஒரு மனிதனை அணுக முயற்சி செய்தால் பலன் கிடை

உணர்ச்சிவசப்படும் முரட்டு இயக்குநன்

உணர்ச்சிவசப்படும் முரட்டு இயக்குநன்                                                       ஹனிரியாஸ்       அனுகந்தனுடன் இயல்பாகவே வி.காபோவிற்கு நல்ல நெருக்கம் ஏற்பட்டுவிட்டதோ என்று நினைக்கும்படி நிகழ்ச்சிகள் இருக்கிறது. ஆய்வு செய்யவெல்லாம் எனக்கு விருப்பமில்லை. சமூகத்தின் மீது மாறாத கோபம் கனலும் ஒவ்வொரு உயிரும் எனக்கு நண்பர்களே என வி.காபோ காற்றில் சபதமெடுப்பார். அவருக்கு அ.கவை மிகப்பிடிக்கும். ஆனால் இவருடன் இருப்பது தொடர்ந்து நம்மை நாமே துன்பத்தில் சிக்கவைத்துக்கொள்ள விரும்புகிறோம் என்றே அர்த்தமாகும். வேசிகள், பிச்சைக்காரர்களிடம், எவரிடமும் எளிதாகப்  பேசி பிரியம் கொள்ளும் துணிச்சல்காரர். மூச்சுவிடுவதற்கு அடுத்து புகைபிடிப்பது தான் முக்கியம் என்று நம்பி கடைபிடித்து கழிவறையில் புகையாய் நிற்க வைத்திருக்கும் மனித நேயம் கொண்ட நெஞ்சு அ.கவுடையது என்பார் வி. காபோ.       புகையிலிருந்து தப்பிக்க வி.காபோ வேகமாக வெளியே வந்தார். வேகமாக மூச்சை விட்டார். மனச்சமநிலை பத்துக்கு பத்து என்ற அறையில்தான் சமநிலைக்கு வந்துவிட்டது என்பதை உணர்ந்தார் வி.காபோ.       அறையின் வெம்மை கடுமையாக வி.காப

சென்னை பயணித்தார் எழுத்தாளர் வின்சென்ட் காபோ!

சென்னை பயணித்தார் எழுத்தாளர் வின்சென்ட் காபோ!                                           மெட்ரோ கார்னர் ‘முனி’ வின்சென்ட் காபோ (வி.காபோ), புத்தக மொழிபெயர்ப்பு ஒன்றிற்காக மடிக்கணினி ஒன்றினைப் பெற அனுகந்தன் என்னும் கடும் முரட்டுத்தனமும், துணிச்சலான அன்பும் கொண்ட துணை இயக்குநர் ஒருவரை சந்தித்தார். அவரின் அறையில் தங்க இடம் கிடைத்துவிட்டது. அறை பற்றிக்கேட்டால் வாய்திறக்க மறுக்கிறார் அனுகந்தன். பின் பேசியது இதுதான். ‘’ சோறு தின்னியான்னா கூட கேட்க மாட்டீங்கறான் என்ன ஊருடா இது? மிஷினு மாரி ஓடறானுவ, ஒடியாரானுவ ’’ பேபி ஏலப்பன் எனும் இயக்குநர் ஒருவரிடம்தான் அனுகந்தன் வேலை செய்கிறாராம். அவரிடம் கூட்டிச்சென்றார். பேபியின்அறை முழுக்க பல்வேறு சினிமா போஸ்டர் கட்டிங்குகளாலேயே தன் அறையின் சுண்ணாம்புச்செலவை தவிர்த்திருந்தார். சுண்ணாம்பிற்கு இடம் விட்டால்தானே! அறையின் ஒவ்வொரு கதவுகளிலும் ஒரு வாசகம் குறும்பாக எழுதப்பட்டிருந்தது. உ.தா கழிவறையில் தினசரி நான்கு காட்சிகள் என்ற வாசகம். நந்தம்பாக்கம் வர்த்தசபை சென்றிருந்த அனுபவம் வேறுமாதிரி. தினகரன் நாளிதழ் நடத்திய கல்வி குறித்த கண்காட்சி நடைபெற

நிற்காத கரைச்சலப்பா !

நிற்காத கரைச்சலப்பா !                                           செட் புரோட்டாக்காரன் நாள் முழுவதும் இப்படியே கழிந்துவிடும் என்று நான்கு கண்ணன் நினைத்திருக்கவில்லை. நெல்லை தீபம் என்ற இனக்குழு உணவகத்தில் உணவு சாப்பிட்டபோதும், அவனின் கடாபுடா சத்தம் பிறருக்கு கேட்குமளவு அதிகரித்துவிட்டது. காலையில் இட்லி சாப்பிடத்தொடங்கியபோதே பெவிக்கால் கம்பெனியுடன் இனக்குழு ஓட்டல்காரர் ஏதோ டைஅப் வைத்திருப்பாரோ என்று நினைக்கும்படி இட்லி வாழை இலையில் கையில் பிய்க்க பிய்க்க வழுக்கி ஓடியது. நான்கு கண்ணன் ஓட்டல்காரரைப் பார்த்தபோது, நாளைக்கு உலகம் உறுதியாக அழிந்துவிடும் என்பது போல் தனுஷ் படத்தை அவ்வளவு ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தார். கையில் பிட்டு சாப்பிட முடியாத பரிமாண முதிர்ச்சியைப் பெற்ற இட்லியை உள்ளே போட பெரும் முயற்சி தேவைப்பட்டது. சட்னி, சாம்பார் என்று பெயரிடப்பட்ட எதனோடும் இட்லி சேராது தனித்தியங்கும் முடிவைக் கொண்டிருந்தது. வழுக்கிச் செல்லும் இட்லியைப் பிடிக்க இடது கையையும் பயன்படுத்தலாமா என்ற சிந்தித்துக்கொண்டே நான்கு கண்ணன் உணவு உண்டார். தாராபுர எழுத்தாளரின் அணுக்கத்தொண்டர் துணை இய

கிரிவலம் செல்வோமாப்பா?

கிரிவலம் செல்வோமாப்பா?                                                 குண்ட் முனீஸ்ராஜ் ஸமீரா திடீரென திருவண்ணாமலை போய்விட்டார். கனவு மாதிரியில்ல இருக்குது. மெட்ராசுல சும்மா பன்ன தின்னுட்டு அலஞ்சுட்டு இருந்தாரு. அப்பத்தான  கதயில ஒரு திருப்பம். அவரோட அண்ண சம்சாரம் ஏதோ கெட்டவார்த்தயில் மெசேஜ் அனுப்ப கோவணம் கட்டாம வண்டி ஏறிட்டாப்புல ஸமீரான்னு வெள்ளோடு இன்டலிஜென்ஸ் ரிப்போர்ட் சொல்லுது. ஆமா மல புல்லா பிச்சக்காரனுவ திரியறானுவ. இதுல ஸமீரா மட்டும் என்ன? இந்தாளோட அண்ணமாரு நல்ல வெவரம். யார எப்படி யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சவரு. இந்த ஸமீரா பேசறது, எழுதறதுன்னு புத்திசாலி மாறி தெரியும். ஆனா ஒண்ணும் புரியாத பைத்தியக்கார வெகுளிப்பய. அதனாலதே அந்த வாழ வந்த புள்ளயெல்லாம் இந்தாள அந்த அசிங்கம் பண்ணுது. அண்ணமாரு வூட்டுல பொருளெல்லாம் எடுத்துவைக்க கூப்பிட, இந்தாளு சட்டுனு பரதேசி,பண்டாரத்துக்கு வூட்டுல எடமுண்டானு கேட்டுவைக்க அண்ணமாரு தலய தூக்கிக்கூட பாக்குல. விஷயம் தெரிஞ்சிருச்சேன்னு ச்சீனு போயிருச்சு. ஏய்யா வக்கரோ உன்ற ஹீரோயின எல்லோரும் ஏத்துக்கோணுமா என்ன? அவளும் அவ எலி மூஞ்சியும். ஒடுங்கின டால்டா டப்பி

நல்லநூல் வெளியீட்டாளருடன் இருளறைப் பேச்சு - 1

                                 1           நல்லநூல் வெளியீட்டாளருடன் இருளறைப் பேச்சு                                           சோனி எம் போனி நீ உருப்படி ஆகணும்னா குயில  நம்பாதே என ஏவல், பில்லி, சூனியக்காரரின் மறுபிறப்பு என சத்தியம் பண்ணாத குறையாக ஆயில்யம் கூறியதால் இந்த வாதனையே வேண்டாம் என்று ஸமீரா முடிவெடுத்து, போறண்டா பதிப்பகத்துக்கு போறண்டா என அடுத்த தெலுங்கு தமிழ் டப் பட டைட்டிலை உதிர்த்துவிட்டு சென்றார். லாலே லா…ல..லா லாலே என்ற கும்பெனி பாட்டை பாடி கிளம்ப வைத்து மகிழ்ந்தோம். மாலை திரும்பி வந்தபோது வேலை பற்றிக் கேட்க பேய்முழி விழித்து வேலையின் முடிவை தெரியப்படுத்தியவர், திடீரென நினைவு வந்தது போல ‘டீ நல்லார்ந்துது’ என்றார். ‘’ யோவ் டீயக்குடிக்க நீயி ஏய்யா தி.நகரு போவோணும். இங்க குடிக்க முடியாதா? இல்ல கெடைக்காதா? முக்குல சாத்தூரு தெய்வீகச்சிரிப்புகிட்டயே வாசமா குடிச்சிருக்கலாமல்ல ’’ என்றான் ஈரோட்டான்.  எதற்கும் அசைந்து கொடுக்காத ஸமீரா தன் பயணத்தை சொல்ல ஆரம்பித்தார். அலைபேசியின் மின்கலசக்தியூட்டி( சார்ஜர் எவ்வளவு எளிமைன்னு புரியுதா) உடைந்துபோனதால் நேரம் தெரி

திரைப்படம் குறித்த சில சொற்கள், விளக்கங்கள்

திரைப்படம் குறித்த சில சொற்கள், விளக்கங்கள் தமிழில்: லாய்ட்டர் லூன், சார்லி ட்ராம்ப் 1.பல வகையான நிலைகள் Author இயக்குநர்/ எழுத்தாளர்        ப்ரெஞ்ச்சிலிருந்து உருவான வார்த்தை ஆதர் என்பதாகும். ஆதர் எனும் கருத்து புதிய அலை ப்ரெஞ்ச் விமர்சகர்களால் 1940 1960 வரை மிகப்புகழ்பெற்றதாக இருந்தது. மேலும் இயக்குநர் திரைப்படக்கலையில் முக்கியமான தலைமை கர்த்தா என்பதை உறுதியாக கூறியது இந்த காலகட்ட வரலாறு.  சிறந்த உறுதியான மனநிலை கொண்ட இயக்குநர், எழுத்தாளர்/ ஆசிரியர் திரைப்படத்தில் தனது பார்வையை அழுத்தமாக பதிய வைப்பதோடு, தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்டூடியோ ஆகியவற்றின் மீதான அழுத்தங்களையும் சுமக்கவேண்டிய பொறுப்பு உள்ளது. Exterior        காட்சியானது கதவுக்கு வெளிப்புற வெளியில் படமாக்கப்படுவது எக்ஸ்டீரியர் எனப்படும். வெளிப்புறம் போல ஸ்டூடியோவில் அல்லது அதற்கான இடம் தேடி அதிலும் படமாக்கப்படுவது உண்டு. Eyeline        ஒரு கதாபாத்திரத்தின் விருப்பம், நோக்கம் எதனை விரும்புகிறார் என்று குறிப்பிடப்படுவது ஆகும். Genre        திரைப்படத்தின் வகை எதுவென புரிந்துகொள்ளும்படியான மரபான காட்