கிரிவலம் செல்வோமாப்பா?

கிரிவலம் செல்வோமாப்பா?
                                                குண்ட் முனீஸ்ராஜ்

ஸமீரா திடீரென திருவண்ணாமலை போய்விட்டார். கனவு மாதிரியில்ல இருக்குது. மெட்ராசுல சும்மா பன்ன தின்னுட்டு அலஞ்சுட்டு இருந்தாரு. அப்பத்தான  கதயில ஒரு திருப்பம். அவரோட அண்ண சம்சாரம் ஏதோ கெட்டவார்த்தயில் மெசேஜ் அனுப்ப கோவணம் கட்டாம வண்டி ஏறிட்டாப்புல ஸமீரான்னு வெள்ளோடு இன்டலிஜென்ஸ் ரிப்போர்ட் சொல்லுது. ஆமா மல புல்லா பிச்சக்காரனுவ திரியறானுவ. இதுல ஸமீரா மட்டும் என்ன? இந்தாளோட அண்ணமாரு நல்ல வெவரம். யார எப்படி யூஸ் பண்றதுன்னு தெரிஞ்சவரு. இந்த ஸமீரா பேசறது, எழுதறதுன்னு புத்திசாலி மாறி தெரியும். ஆனா ஒண்ணும் புரியாத பைத்தியக்கார வெகுளிப்பய. அதனாலதே அந்த வாழ வந்த புள்ளயெல்லாம் இந்தாள அந்த அசிங்கம் பண்ணுது. அண்ணமாரு வூட்டுல பொருளெல்லாம் எடுத்துவைக்க கூப்பிட, இந்தாளு சட்டுனு பரதேசி,பண்டாரத்துக்கு வூட்டுல எடமுண்டானு கேட்டுவைக்க அண்ணமாரு தலய தூக்கிக்கூட பாக்குல. விஷயம் தெரிஞ்சிருச்சேன்னு ச்சீனு போயிருச்சு. ஏய்யா வக்கரோ உன்ற ஹீரோயின எல்லோரும் ஏத்துக்கோணுமா என்ன? அவளும் அவ எலி மூஞ்சியும். ஒடுங்கின டால்டா டப்பி. காயலாங் கடக்காரனே சும்மா போட்டுட்டு போவச்சொல்லுவான். சீக்கரத்துல வளயத்தோண்டிட்டா வூட்டுக்குள்ளாரயே!

ஸமீரா திங்கிறதுல ஒண்ணும் நல்ல ஆளுமில்ல. கங்காணிச்சித்தர் சாதாரணமில்ல. எல்லாரையும் நல்லா யூஸ் பண்ணிக்கறதுல இந்தாளு அண்ணமாரை வெட மேல இருப்பாப்பல. கரண்டு இல்லாம சீக்கடில அப்படியே கெடந்துருக்காப்பல இந்தாளு. சித்தரு சோறு இல்லாம எப்படி உசுரோட இருக்கறதுன்னு ஏதோ வித்தகளையல்லா சொல்லிக்குடுக்க பாத்திருக்கறாரு. காத்த சாப்பிட்டு உசுரோட இருக்கற வித்தய கங்காணிச்சித்தன் டிரை பண்ணீட்டு இருக்கறாரு. இது தற்போதைய நெலமைதான். அப்பறமா இன்னும் மோசமாவுமப்பா.

ராத்திரியாச்சுன்னா சீக்கடி சங்கப்பாட்டல்லா காதுல பாடுதுப்பா இந்த கொகையில. சித்தன் சில சமயம் வந்து தேங்கா தின்னுட்டு படுப்பாரு. மலச்சிக்கலாமாப்பா. காத்தக்குடிக்கறவருக்கே ஏதோ சிக்கலு வருது பாருங்க மக்கா.



கருத்துகள்