இடுகைகள்

சாக்லெட்டின் சுவை எங்கிருந்து வருகிறது?

படம்
mirror சாக்லெட்டுகளின் கதை முதன்முதலில் சாக்லெட்டுகள் இப்போது இருப்பது போல பாராக, சிறியவையாக கெட்டியான பொருளாக கிடைக்கவில்லை. மத்திய அமெரிக்காவில் கசப்பு பானமாக கண்டறியப்பட்டது. ஐரோப்பாவின் சந்தைக்கு வந்தபோது அதில் சர்க்கரை சேர்த்து பருகி வந்தனர். பின்னர் சாக்லெட்டை பதப்படுத்தி அதனை இன்றைக்குப் பார்க்கும் காட்பரீஸ், அமுல் டார்க் சாக்லெட் கொண்டு வந்துள்ளனர். சாக்லெட் தயாரிப்பு என்பது ஏறக்குறைய திராட்சையைப் பறித்துப் போட்டு பக்குவப்படுத்துகிறார்களே அதைப் போன்றதுதான். காபி பீன்ஸ்களை மெல்ல பதப்படுத்தி சாக்லெட்டைத் தயாரிக்கிறார்கள். சாக்லெட் என்றால் முழுமையாக சாக்லெட் மட்டுமே இருப்பதில்லை. சாக்லெட்டுடன் சர்க்கரை, பால் பொருட்கள், வாசனையூட்டும் பொருட்கள் ஆகியவற்றை கலக்குகின்றனர். வெள்ளை சாக்லெட்டில் பால் பொருட்களோடு கோகோ பட்டர் மட்டுமே இருக்கும். சாக்லெட்டில் குறைந்தளவு காஃபீன் காணப்படுகிறது. கூடவே ஊக்கமூட்டியான தியோபுரோமைன் எனும் வேதிப்பொருளும் உள்ளது. உலகளவில் சுவிட்சர்லாந்து நாட்டுக்காரர்கள் 9 கி.கி சாக்லெட்டை ஆண்டுக்கு தின்று வருகிறார்கள். இன்று சாக்லெட் த

உளவியலும் அதன் மேம்பாடும்!

படம்
கடந்த நூற்றைம்பது ஆண்டுகளாக உளவியல் துறை சிறப்பான முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. உளவியல் சார்ந்த விஷயங்களுக்கு க்ரீஸ், பெர்சியா ஆகிய நாட்டு ஆராய்ச்சியாளர்களே முன்னோடியாக இருந்து வந்துள்ளனர். உளவியல் துறை அடைந்த முன்னேற்றங்களைக் குறித்து பார்ப்போம். கிரேக்கம் கி.பி 1550ஆம் ஆண்டி எபிரஸ் பாபிரஸ் எனும் இதழில் மன அழுத்தம் பற்றி எழுதப்பட்டுள்ளது. கிபி 47- 370 காலகட்டத்தில் டெமோகிரைடஸ் உணர்வுகளின் மூலம் நாம் பெறும் அறிவு குறித்து உலகிற்கு அறிவித்தார். ஹிப்போகிரேட்டஸ் மனநலன்களுக்கான மருந்துகளை எப்படி தயாரிப்பது என்று அதற்கான விதிமுறைகளை வகுத்தார். கிபி 387 இல் பிளேட்டோ, மனிதனின் மூளைதான் மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு காரணம் என்று கூறினார். 350ஆம் ஆண்டில் அரிஸ்டாட்டில் (பிளேட்டோ மாணவர், பின்னாளில் பிளேட்டோ சொன்ன கருத்துகளை மறுத்தவர்) டி அனிமா, டபுலா ரசா  எனும் உளவியல் சார்ந்த பதங்களை அறிமுகப்படுத்தினார். விளக்கினார். 300-30 காலகட்டத்தில் ஸெனோ, ஸ்டோய்சம் எனும் மனநிலை பற்றிய தன்மையை கற்பித்து வந்தார். இதனை 1960 இல் சிபிடி என்று பழக்க வழக்கம் சார்ந்த தெரபியாக உளவியலாளர்கள் வர

உணவுத்துறையில் பயன்படும் பூஞ்சைகள்!

படம்
பூஞ்சைகளை அறிவோம்! பூஞ்சைகள் நுண்ணுயிரிகளில் முக்கியமானவை. இவை காளான்களை புரதம் மிக்க உணவாக மாற்றுகின்றன. நேரடியாக இல்லாவிட்டாலும் பிரெட், சீஸ், சோயா சாஸ் ஆகியவற்றை உருவாக்குவதில் முக்கியமான பங்களிப்பை வழங்குகின்றன. பூஞ்சைகள் பல்வேறு உணவுப்பொருட்களை பதப்படுத்துதலில் பயன்படுகின்றன.  பூஞ்சைகளில் நூற்றுக்கும் அதிகமான நச்சு இனங்கள் வட அமெரிக்காவில் காணப்படுகின்றன. இறைச்சிக்கு மாற்றான உணவுப்பொருகளில் பூஞ்சைகள் பயன்படுகின்றன. விஷமுள்ளவை, விஷமற்றவை என்பதில் பெரிய வேறுபாடுகள் கிடையாது. கவனமாக காளான் குடைகளை பார்த்தால் மட்டுமே அறிய முடியும். இதில் உருவாகும் நச்சை மைக்கோடாக்சின் என்கின்றனர். மைக்கோடாக்சின் என்பது பொதுப்பெயர்தான். காளான்களில் மட்டுமே உருவாகும் நச்சை அமாடாக்சின் என்கிறார்கள். வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளில் ஆஸ்பெர்கில்லஸ் பேவஸ் எனும் பூஞ்சை வளருகிறது. இதனை கவனிக்காமல் விலங்குகளோ மனிதர்களோ சாப்பிட்டு விட்டால் கல்லீரல் கெட்டு இறப்பு நேரும். மனிதர்களுக்கு கல்லீரல் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு உள்ளது. நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்

உருளைக்கிழங்கில் அப்படி என்னதான் இருக்கிறது?

உருளைக்கிழங்கில் என்ன இருக்கிறது? தெற்கு அமெரிக்காவில் முதல் பயிராக விளைவிக்கப்பட்டு ஏழாயிரம் ஆண்டுகளாகிறது. உருளைக்கிழங்கு பல்வேறு பட்டினி, பஞ்ச காலங்களில் முக்கியமான உணவுப்பொருளாக இருந்திருக்கிறது. அப்படி இல்லாத காலங்களில் தீனிப் பொருளாக சிப்ஸ், ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் என்ற பெயரில் பரிமாறப்பட்டுள்ளது. இன்றும் சமோசாவில் உருளைக்கிழங்கை விட்டால் கதி மோட்சமில்லை. பெருமளவு விலை ஏறாத காய்கறி இது ஒன்றுதான். அதனால்தான் எப்போதும் ஓட்டல் சாம்பாரில் இதனை மிதக்க விடுகின்றனர். உருளைக்கிழங்கு புகழ்பெற்றதற்கு காரணம் அதிலுள்ள ஸ்டார்ச்தான். இதில் விட்டமின் சி, பி6, ஆன்டிஆக்சிடன்ட்ஸ், பொட்டாசியம் ஆகியவை உள்ளது. நார்ச்சத்து அதிகம். வேகவைத்து சாப்பிட்டால் சத்துகள் கிடைக்கும். பொரித்தால் கொழுப்பு ஏறிவிடும். உருளைக்கிழங்கிலும் பின்னர் நமது உடலிலும்தான். கேக், ஐஸ்க்ரீம், சாலட், பிஸ்கெட் என பல்வேறு பொருட்களின் தயாரிப்பில் உருளைக்கிழங்கு நிலைய வித்வான் போல எப்போதும் இருக்கும். காரணம் அனைத்து காய்கறிகளை விட காசு குறைவு. மாவுச்சத்து அதிகம். 1995ஆம்ஆண்டு விண்வெளியிலும் உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட

சோயா பால் குடித்தால் ஹார்மோன் மாறுமா?

மிஸ்டர் ரோனி சோயாபீன்ஸ் பயன்படுத்தினால் பெண்களைப் போன்ற உடல் அமைப்பு ஆண்களுக்கு வருமா? பசுவிலிருந்து பெறும் பாலுக்கு மாற்றாக சோயா பாலை ஆரோக்கிய வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். சோயா பாலை அதிகம் பயன்படுத்தினால் உடலில் ஹார்மோன் மாற்றம் ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் நாம் நினைப்பது போல பெண்களுக்கான மார்பகங்கள் ஆண்களுக்கு உருவாகி விடாது. உணவுதான் உடலை உருவாக்குகிறது. எனவே அது சோயா உணவுகளுக்கும் பொருந்தும். பிற உணவுகளை விட அதிக புரதம் கொண்டது சோயா. நாம் சாதாரணமாக சமைத்து சாப்பிடும் பீன்ஸ் எடமாமே என்று ஜப்பானில் அழைக்கப்படுகிறது. இது முதிர்ச்சியடையாத பீன்ஸ். முதிர்ச்சி அடைந்த பீன்ஸ் மூலம்தான் டோபு, பால், சாஸ் உள்ளிட்டவை பெறப்படுகிறது. முதிர்ச்சியடைந்த பீன்ஸ் மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். பழமையான முறையில் தயாரிக்கப்படும் சோயா சாஸில் ஆன்டி ஆக்சிடன்கள் அதிகம். இன்று நவீன முறையில் பல படிமுறைகளைத் தவிர்த்துவிட்டு சந்தைக்காக வேகமாக தயாரிக்கின்றனர். இதனால் அவற்றில் சத்துகள் குறைவு. அடிப்படையான முறையில் தயாரிக்கப்படும் சோயா சாஸிலுள்ள ஆன்டி ஆக்சிடன்களின் அளவு

ஆதியில் சொல் இருந்தது! - மின்னூல் தரவிறக்க முகவரி

படம்
டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கன் கிரானிக்கல், வயர் இணையதளம் ஆகிய இடங்கள் வெளிவந்த நேர்காணல்களின் மொழிபெயர்ப்பு நூல் ஆதியில் சொல் இருந்தது. இந்த நூலை நாம் ஏன் படிக்கவேண்டும் என்றால், நடப்பு காலத்தில் பேச்சுரிமை எழுத்துரிமைக்கான அச்சுறுத்தலாக சூழல் நிலவுகிறது. அதைப்பற்றி இந்நூலில் பல்வேறு ஆளுமைகள் பேசுகின்றனர். இந்நூலில் நம் அடிப்படை உரிமைகளுக்காக போராடும், நடப்பு சூழலை புரியவைக்கும் கேள்வி பதில்கள் உள்ளன. தேசியவாதம், வளரும் பிரிவினைவாதம், இந்தி சினிமாத்துறையின் எதிர்காலம், ஐஐடிகளில் நடைபெறும் இந்துத்துவ ஆட்களின் தலையெடுப்பு, செயற்கை நுண்ணறிவின் வேகம், சிறுவயதில் விளையாட்டை லட்சியமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை என பல்வேறு விஷயங்களை அறிந்துகொள்ள முடியும். நூலை பீடிஎஃப் வடிவில் தரவிறக்கி வாசிக்க..... நூலை இபப் வடிவில் தரவிறக்கி படிக்க...  http://www.mediafire.com/file/49jvn2kam1u44f2/asi_ivw.pdf/file http://www.mediafire.com/file/u91m32hdr4ex8pz/ASI_ivw.epub/file

கோவிட் பாதிப்பும் அரசு செய்யவேண்டியதும்!

படம்
வரும் மே 15க்குள் இந்தியாவில் கோவிட் -19 நோய் பாதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரம் முதல் 13 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. என்ன பிரச்னை? அடிப்படையே பிரச்னைதான். கழிவறைகளையே ஜென்ம சனி பிடித்தவனுக்கு ஏற்படும் சிரமங்களை ஒத்து கட்டுபவர்கள் மருத்துவமனை படுக்கைகளை மட்டும் வைத்திருப்போமா என்ன? இந்தியாவில் பத்தாயிரம் பேருக்கு 07 சதவீத படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளது. இதுவே தென்கொரியாவில் பத்தாயிரம் பேர்களுக்கு 6 சதவீத படுக்கைகள் உள்ளன. இந்தியர்கள் கொரோனா பாதிப்பிற்கு முன்னதாகவே நீரிழிவு உயர் ரத்த அழுத்தம் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் கொரோனா தொற்றும்போது அதன் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். அரசு என்ன செய்யவேண்டும்? கோவிட் -19 நோய் பாதிப்பைக் கண்டறிய இலவச மையங்களை அமைக்கவேண்டும். அதற்கான சிகிச்சையும் விலையின்றி அளிக்க  முன்வரவேண்டும். மருத்துவமனை படுக்கைகளை அதிகரிக்கவேண்டும். மக்கள் கூடுமிடங்களை தடை செய்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்படி செய்யவேண்டும். மக்கள் வீடுகளில் தஞ்சமடைந்து கிடப்பதால், வேலையிழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. இ