இடுகைகள்

தொன்மைக்காலத்தில் நோயாளிகளை சித்திரவதை செய்த அறுவைசிகிச்சை கருவிகள்!

படம்
            பீதியூட்டும் பண்டைய அறுவை சிகிச்சை உபகரணங்கள் ! நவீன அறுவை சிகிச்சை உபகரணங்கள் பார்க்க அழகாக இருந்தாலும் , தொடக்கத்தில் அப்படி இல்லை . கரடுமுரடாக இருந்த ஆயுதங்களை டிரிம்மிங் செய்து செதுக்கியது போலவேதான் இருக்கும் . அதனைப் பார்த்தே வைத்தியம் செய்துகொள்ளாமல் ஓட்டம் பிடித்தவர்கள் உண்டு . ஆனாலும் சிகிச்சை செய்யாவிட்டால் எப்படி அரைவைத்தியன் லெவலுக்கு வருவது ? எனவே நோயாளிகளை பிடித்து கட்டி வைத்து மண்டையில் ஓட்டை போட்டு சூடுபோட்டு என பண்ணாத சித்திரவதைகள் கிடையாது . ஆனாலும் இதற்காக நீங்கள் கவலைப்பட்டு ஐ . நாவில் புகார் கொடுக்கவேண்டியதில்லை . அதனால்தான் , புதிய கருவிகள் உருவாக்கப்பட்டன . டிரெபான் இன்று நமக்கு காலையில் ஹேங்ஓவரால் தலைவலிக்கிறது என்றால் உடனே ஆஸ்பிரின் மாத்திரை ஒன்றை எடுத்து போட்டால் போதும் . ஆமாங்க ஆமாம் என தலைவலி தலையாட்டிக்கொண்டே ஓடிவிடும் . ஆனால் கி . பி .6500 காலகட்டத்தில் நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் தலைவலி பிரச்னையை கொடூரமாக இயக்குநர் பாலா ஸ்டைலில் அணுகியிருக்கிறார்கள் . அதற்கான கருவிதான் டிரெபான் . தலைவலிக்கு தீர்வு எப்படி கருவி எ

கொரோனாவை சந்தித்து மீண்டு வந்த இந்திய புத்தக கடைகள்! - நிலையை எப்படி சமாளித்தனர்?

படம்
            தாக்குப்பிடித்த புத்தக கடைகள் ! உலகம் முழுவதும் பொதுமுடக்கம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது . புத்தக கடைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன ? அப்படி தப்பி பிழைத்த புத்தக கடைகள் பற்றி இங்கு பார்ப்போம் . என்ன சாகசங்கள் செய்து ்தங்களை காப்பாற்றிக்கொண்டனர் என்பதை பார்ப்போம் . பாக்தண்டி புனே நேகா , விஷால் பிபாரியா ஆகியோர்தான் இந்த புத்தக கடையை நடத்தி வந்தனர் . பொதுமுடக்கத்தை எதிர்கொள்ள இவர்களுக்கு கிடைத்த ஐடியா , கிப்ட் வ வுச்சர்கள்தான் . அதனை தங்களது வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ள கூறினர் . அப்படி வாங்கியவறை பிற்காலத்தில் பயன்படுத்திக்கொள்ளமுடியும் . இப்படிக் கிடைத்த தொகை மூலம் மூடப்பட்ட நாட்களை சமாளித்துள்ளனர் . ஆன்லைனில் வலைத்தளங்கள் கொடுக்கும் தள்ளுபடிகளை புத்தககடைகள் கொடுக்க முடியாது என்பது நிதர்சனம் . எங்களது வாடிக்கையாளர்கள் மூலமே நாங்கள் இன்றுவரை இயங்கி வருகிறோம் என்கிறார்கள் நேகா அ்ண்ட் கோ . விட்டுக்கொடுக்காமல் இருந்தது . புத்தக கடை என்பதை முழுமையான அனுபவமாக மாற்றியது இக்கடையின் வெற்றி என்கிறார்கள் . ரச்சனா ஸ்டோர்ஸ் காங்டொக் ரா

ஊடகங்கள் பெருகியுள்ள காலத்தில் கோவிட் மரணங்களை எப்படி மறைக்க முடியும்? - சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா

படம்
            நேர்காணல் கே . கே . சைலஜா தற்போதைய நோய்த்தொற்று என்பது நிபாவை விட எப்படி வேறுபட்டது என்கிறீர்கள் ? நிபா நோ்ய்த்தொற்றுதான் எங்களை இன்று எச்சரிக்கையாகவும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ளவும் உதவின . நிபாவின் மரண சதவீதம் அதிகம் என்றாலும் கோவிட் 19 அளவுக்கு வேகமாக பரவ வில்லை . கோழிக்கோட்டிலுள்ள வௌவால்கள் மூலம் நிபா பரவியது . எனவே நாங்கள் மக்களை வெளியே வரவேண்டாம் என்று சொன்னோம் . கோவிட் 19 வெளிநாட்டிலிருந்து நமது நாட்டிற்கு வந்தது . கேரளத்திலுள்ள விமானநிலையங்கள் நான்கு . அதன் மூலம் வந்திறங்கிய மக்கள் மூலம் நோய்த்தொற்று வேகமாக பரவியது . இதனால் 14 மாவட்டங்களில் உடனடியாக நோய்த்தொற்று பரவி பாதித்தது . இரண்டாவது அலை பரவுவதால் , மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமா ? பொதுமுடக்கம் என்பது இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படவில்லை . எனவே , மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்று நினைக்கிறேன் . மக்களை ஏற்கெனவே அடைத்து வைத்தது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது . நாங்கள் இப்போது நோயிலிருந்து மக்களை காப்பாற்றவே முயன்று வருகிறோம் . கொர

சமூக வலைத்தளங்களில் பாலியல் கல்வி நடத்தும் புதிய தலைமுறை மருத்துவர்கள்!

படம்
          ஆன்லைனில் செக்ஸ் கல்வி நடத்துகிறார்கள் ! இன்றைய புதிய தலைமுறை மருத்துவர்கள் சமூக வலைத்தளங்களில் பாலியல் கல்வியை விழிப்புணர்வுக்காக பிறருக்கும் பரப்புரை செய்கிறார்கள் . இவர்களுக்கு ஏராளமான பார்வையாளர்களும் கிடைத்துள்ளனர் . இந்தியாவில் ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைத்து கல்லூரி நடத்த ஆசைப்படுபவர்களை அதிகம் . இந்த சூழலில் வளரும் ஆணோ , பெண்ணோ இருவருக்குமே தங்கள் உடல் பற்றியும் , அதன் ஆரோக்கியம் பற்றியும் பலவித கேள்விகள் , ஐயங்கள் இருக்கும் . ஆனால் இதைப்பற்றி வெளிப்படையாக யாரிடம் கூறுவது ? ஆலோசனை பெறுவது என்பதில் தயக்கம் நிலவுகிறது என்பதே உண்மை . யோனியில் கசியும் திரவத்தின் நிறம் மாறுபடுவது பற்றிய கேள்விகளுக்கு கூட இங்கு பெண்ணின் உடல் சார்ந்தும் , அவள் நடத்தை சார்ந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன . இப்படி கேள்வியை யாரிடம் கேட்பது எனத் தவிப்பவர்களுக்கு ஆதரவாக இரும்பில் முதுகெலும்பு கொண்ட புதிய தலைமுறை மருத்துவர்கள் சமூக வலைத்தளத்தில் இயங்கி வருகிறார்கள் . இவர்கள் , தாங்கள் இயங்கும் சமூக வலைத்தளத்தில் கூட பாலியல் சார்ந்த விழிப்புணர்வுக்கு பலமுறை தடை

பிரியாணி மவுசு பெற்றது எப்படி?

படம்
              அனைத்து காலங்களிலும் கலக்கும் பிரியாணி ! தமிழகத்தின் தவிர்க்க முடியாத உணவு என்றால் எதனைக் குறிப்பிடுவீர்கள் ? வேறு சாய்ஸே கிடையாது பிரியாணிதான் . அனைத்து தடைகளையும் தாண்டி தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது . பிரியாணி . எண்ணெய்யில் வறுக்கப்படும் உணவு என்பதுதான் இதற்கான அர்த்தம் . இறைச்சி , முட்டை கலந்த பிரியாணி அனைத்து இடங்களிலும் கிடைப்பதோடு , ஒருவருக்கு அல்லது ஒரு கூட்டத்திற்கே என்றால் கூட தாக்குப்பிடிக்கும் திருப்தி படுத்தும் உணவாக மாறியுள்ளது . அடிப்படையில் பிரியாணி என்பது பெர்சியா நாட்டு உணவு . மொகலாயர்களின் இந்திய வருகையின்போது இங்குள்ள மக்களுக்கு இந்த உணவு அறிமுகமாகிறது . பெரு நகரங்களில் சமைக்கப்படும் பிரியாணி , இடத்தைப் பொறுத்து மாறுபடும் . மதுரையில் சீரக சம்பா அரிசியில் அதிக கறியுடன் சமைக்கப்படும் பிரியாணி சென்னையில் பாஸ்மதி அரிசியில் பெரும்பாலும் சமைக்கப்படுகிறது . எப்படி அனைத்து மக்களிடமும் பிரியாணி வெற்றி பெற்றது என்றால் , கறி , முட்டையுடன் கூடிய சத்தான உணவு . முழு சைவ சாப்பாட்டை விட குறைந்த விலையில் வாங்கி சாப்பிட முடியும் . இத்

காலப்பயணம் செய்து தன் தாயின் உயிரைக் காப்பாற்றும் மகனின் பாசம் வென்றதா? - ஆலிஸ் - கொரியத் தொடர் - 16 எபிசோடுகள்

படம்
                  ஆலிஸ் கொரிய தொடர் 16 எபிசோடுகள்     Genre: Science fiction, Romance Developed by: SBS TV Written by: Kim Kyu-won, Kang Cheol-gyu, Kim Ga-yeong August 28 – October 24, 2020   டிவியில் காலப்பயணம் மாதிரி மையப்பொ ருளை எடுத்து ரசிக்க வைக்கமுடியுமா ? ஏன் முடியாது என்று சொல்லி சாத்தியமாக்கியிருக்கிறார் ஆலிஸ் தொடர் இயக்குநர் . காலப்பயணம் என்றால் ஏராளமான சிஜி காட்சிகள் தேவை , தேடுதல் , கொலை , குற்றங்கள் தேவை என்று பலர் நினைப்போம் . ஆனால் இந்த தொடர் முழுக்க உணர்ச்சிகரமான உறவுகளை மட்டுமே மையமாக வைத்து எடுத்திருக்கிறார்கள் . இதனால் பெரிய ஜிம்மிக்ஸ் வேலைகள் , எதிர்கால மனிதர்களின் தொழில்நுட்பம் என்று கவலைப்படவேண்டியதில்லை . பார்க் ஜின் , காவல்துறையில் வேலை செய்யும் கேப்டனுக்கு அடுத்த இரண்டாம் நிலை அதிகாரி . இவரது மேலதிகாரி கோ . இவர்தான் அம்மா இறந்தபிறகு , பார்க் ஜின்னை தனது பிள்ளை போல வீட்டில் தங்க வைத்து வளர்க்கிறார் . இதற்கு என்ன காரணம் என்று தேடினால் , 2010 க்கு கதை செல்கிறது . அங்கு ஜின்னின் அம்மா , அப்பா இல்லாமல் பையனை 19 ஆண்டுகளாக வளர்க்க

முன்னாள் காதலியின் காதலை சேர்த்துவைத்து தன்னுடைய காதலைக் காப்பாற்றும் நாயகனின் கலாட்டா கதை! - அல்லுடு அதுர்ஸ் - சாய் சீனிவாஸ்

படம்
                அல்லுடு அதுர்ஸ்    Director: Santosh Srinivas Produced by: Gorrela Subrahmanyam Writer(s): Santosh Srinivas, Srikanth Vissa (Dialogues) படத்தின் கதை என்று பார்த்தால் , காதலே செட் ஆகாது என்று நினைத்து விரக்தி அடைந்தவனுக்கு ஏற்படும் காதலும் , அதில் ஏற்படும் பிரச்னைகளும்தான் . எளிமையான லைன்தான் . ஆனால் படத்தை எடுக்கும் இயக்குநருக்கு என்ன குழப்பமோ , சோறு வைக்க நினைத்து அதற்குள் நூடுல்ஸை வேக வைத்து பருப்பு குழப்பில் சாஸ் ஊற்றி படத்தை எடுத்திருக்கிறார் . இதனால் படத்தில் எந்த காட்சியும் நிறைவு தரவில்லை . சாய் சீனிவாஸ் நடித்த சீதா என்ற தெலுங்குப்படம் பலரும் தெலுங்குப்படம் என்றால் இப்படித்தானா எனும்படி மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்கள் . அந்த நேரத்தில் இப்படியொரு படமா ? பெரிய சறுக்கல் . சீனு , பள்ளி செல்லும்போது வசுந்தரா என்ற சக மாணவியை ப் பார்க்கிறான் . அவள் செய்யும் உதவிகளால் மெல்ல ஈர்க்கப்படுகிறான் . ஆனால் அது காதலாக மெல்ல மாறும்போது அவள் அவனிடம் ஏதும் சொல்லாமல் வேறு ஊருக்கு சென்றுவிடுகிறாள் . இந்த நேரத்தில் இனி பெண்களே வேண்டாம் என வே

வளர்ச்சியை மட்டும் பேசினால் அசாமில் வெற்றி பெற முடியாது. இன அடையாளத்தை பேச வேண்டியது அவசியம்! - ஹிமான்சு பிஸ்வா சர்மா

படம்
          ஹிமான்சு பிஸ்வா சர்மா அசாம் மாநில அமைச்சர் , பாஜக அசாமின் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் நீங்கள் . ஆனால் துறை சார்ந்த சாதனைகளை கைவிட்டு இடம்பெயர்ந்து வந்தவர்கள் பற்றிய பிரச்னைகளை மட்டுமே பிரசாரத்தில் பேசுகிறீர்களே அது ஏன் ? பிரிவினை காலத்திலிருந்து அசாம் மாநிலத்தில் இடம்பெயர்ந்து வந்து வாழ்பவர்களின் பிரச்னை உள்ளது . லோக்பிரியா கோபிநாத் போர்டோலாய் , பிமலா பிரசாத் சலிகா ஆகியோர் இப்பிரச்னையைத் தீர்க்க போராடினர் . ஆனாலும் கூட இதற்கு முடிவு கிடைக்ககவில்லை . மேலும் இங்கு முஸலீம்கள் வாழும் பகுதிக்கு சென்றீர்கள் என்றால் அனைத்து அரசு திட்டங்களும் சென்று சேர்ந்திருக்கின்றன என்று அங்கு வாழும் முஸ்லீம்கள் சொல்லுவார்கள் . ஆனால் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என்று உறுதியாக நிற்பார்கள் . நாங்கள் இதனை மாற்ற நினைக்கிறோம் . அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறோம் . அசாமிலுள்ள இந்து , முஸ்லீம்கள் , இடம்பெயர்ந்து வந்த முலலீம்கள் என அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறோம் . அசாம் மாநிலத்தில் வெறும்மே வளர்ச்சியை மட்டும் பேசினால் தேர்தலில் வெற்றி பெறமுடியாது . இங்கு மக்களின் அடையாளம்