இடுகைகள்

வேலைக்கு பயணிக்கும் தொலைவு - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  ஒருவர் மாங்காடு, அல்லது மடிப்பாக்கத்திலிருந்து ராயப்பேட்டை வருவது என்றால் தினசரி அவர் எத்தனை மணிக்கு கிளம்பவேண்டும்? கணித லாஜிக் கிடையாது என்பதால் மனதில் தோன்றும் விடையை நீங்கள் சொன்னால் போதும். குறைந்தது 30 நிமிடங்களை பயணத்திற்கென ஒதுக்கவேண்டும். போக்குவரத்து நெரிசல் கூடினால் அமைச்சர்கள் நகர்வலம் வந்தால் இன்னும் நேரம் கூடும்.  1994ஆம் ஆண்டு சீசர் மார்செட்டி, பயணம் செய்வதில் மனிதர்களின் குணங்களை பற்றி ஆராய்ந்தார். இதனை மார்செட்டி கான்ஸ்டன்ட் என்று அழைக்கின்றனர். இவரது ஆய்வுப்படி ஒருநாளில் ஒருவர் ஒரு மணிநேரத்தை பயணத்திற்கென ஒதுக்கிவிடுகிறார். இந்த வகையில் அமெரிக்காவில் 30 நிமிடங்கள் என கணக்கு போட்டால், அமெரிக்காவில் 27, இங்கிலாந்தில் 29, கனடாவில் 26 நிமிடங்கள் செலவாகின்றன.  காலம்தோறும் எப்படி நகரங்கள் மாறுகின்றன, அதற்கேற்ப பயணம் செய்து மனிதர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை மார்செட்டி ஆய்வு செய்தார். இப்போது அதுதொடர்பான தகவல்களைப் பார்ப்போம்.  1800களில் ரோம், வெனிஸ், பெர்லின் ஆகிய நாடுகளில் மக்கள் தினசரி வேலைக்கு நடந்து சென்ற தூரம் 5 கி.மீ.  ஒருவரால் முப்பது நிமிடங்களில் நடக்க முட

கொசுக்கள் ஏற்படுத்தும் பேரழிவு!

படம்
கொசுக்கள் ஏற்படுத்தும் பேரழிவு உலகில் பத்தில் ஒருவருக்கு கொசுக்கள் பல்வேறு நோய்களை பரப்புவதாக வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இப்போது அதனை முற்றாக அழிக்கும் ஆய்வுகளும் கூட உலக நாடுகளில் நடந்து வருகின்றன. ஆனாலும் கூட இதற்கான முழுமையான தீர்வுகள் நமக்கு கிடைக்கவில்லை.  பாலூட்டிகள், முதலைகள் என  பல்வேறு விலங்குகளிடமிருந்து ரத்தத்தை கொசுக்கள் உறிஞ்சி எடுக்கின்றன. மனிதர்களை மட்டுமே இப்போது குறிவைத்து தாக்கினாலும் இதற்கு காரணம், பிற விலங்கினங்களின் எண்ணிக்கை குறைந்துபோனதுதான்.  இருவாழ்விகள், பாலூட்டிகள், மீன்கள், புழுக்கள் ஆகியவற்றிடமிருந்தும் கொசுக்கள் ரத்தத்தை உறிஞ்சி உணவைப் பெறுகின்றன. கூடுதல் போனஸாக விலங்குகளுக்கு பல்வேறு நோய்களையும் பரப்புகின்றன.  கொசுக்கள் இரவு நேரத்தில் பூக்களின் மீது சென்று அமர்ந்து மகரந்தசேர்க்கைக்கு  உதவுகின்றன என்று பொதுவாக பலரும் கூறுகின்றனர். இதற்கு அறிவியல் ஆதாரங்கள் அதிகம் கிடையாது என லாரி ரீவ்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.  இதுபற்றிய முழுமையான தகவல் ஸ்மித்சோனியல் இதழில் வெளியா

செக்ஸ் என்பது இரண்டாம் பட்சம்தான்!

படம்
  செக்ஸ் என்பது இரண்டாம் பட்சம்தான் கொலை செய்யும்போது, ஒருவரைக் கொல்வதே சீரியல் கொலைகார ர்களுக்கு பாலுறவின் உச்ச இன்பத்தை கொடுக்கிறது. அதனை எப்படி சித்திரவதை மூலம் நீட்டிப்பது என்பதை மட்டுமே அவர்கள் யோசிப்பார்கள்.  இப்போது இந்தியாவில் ராஃபியா என்ற முஸ்லீம் பெண்ணை கூட்டு வல்லுறவு செய்து கொன்றிருக்கிறார்கள். கழுத்தை அறுத்து, மார்பகங்களை வெட்டிஎடுத்தது, கழுத்தை அறுத்தது ஆகியவற்றை அவர் குற்றுயிராக இருக்கும்போது செய்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஊழலை வெளியே சொல்லிவிடுவார் என நினைத்து துறைசார்ந்த அதிகாரிகளே இதனை செய்திருக்கிறார்கள்.   இதன்மூலம் அந்த கொலைகார ர்கள் தங்களது அதிகாரத்தை வெளிப்படுத்துகிறார்கள். இதில் மாறுபாடான விஷயம், வல்லுறவு என்பதுதான். பொதுவாக சீரியல் கொலைகார ர்களுக்கு இரையை கொல்வதே முக்கியம். அதில் உடலை வெட்டுவது, கண்களை தோண்டி வெளியே எடுப்பது, பாலுறுப்பில் கண்ணாடி பாட்டில்களை திணிப்பது, அமிலத்தை ஊற்றி முகத்தை சிதைப்பது ஆகியவை நடக்கும். ஆனால் வல்லுறவை பெரும்பாலும் அவர்கள் செய்வதில்லை. விந்தணுக்களை வைத்து குற்றவாளிகளை நெருங்கும் வாய்ப்பு அதிகம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள

திருமண வல்லுறவு பற்றி விவாதித்துத்தான் தீர்வு காண முடியும்! - டாக்டர் உபேந்திர பக்ஷி

படம்
நேர்காணல் உபேந்திர பக்ஷி வார்விக் பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் மதுரா வல்லுறவு வழக்கு ஒன்றில் வல்லுறவு தொடர்பான சட்டத்தை உருவாக்க உச்ச நீதிமன்றத்திற்கு  பகிரங்க கடிதம் எழுதியவர்களில் உபேந்திராவும் ஒருவர்.  அண்மையில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் திருமண உறவில் கணவர் வற்புறுத்தி உறவு கொண்டால், அது சட்டத்திற்கு புறம்பானது அல்ல. வல்லுறவு கிடையாது என கூறியுள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன? அந்த நீதிபதி அப்படி கூறியுள்ளதற்கு சட்டம் முக்கியமான காரணம். ஏனென்றால் கணவர் மனைவியை உறவுக்கு கட்டாயப்படுத்தினால் அதனை குற்றமாக பார்க்க சட்டப்பிரிவுகள், ஏன் சட்டமே கிடையாது. அவர் அப்படி கூறியதில் தவறு ஏதும் கிடையாது. இதற்காக காவல்துறை வழக்குப்பதிவு செய்யவேண்டியதில்லை. மக்களின் குடியுரிமை பற்றியது. திருமணமான பிறகு நடக்கும் வன்முறை, வல்லுறவு பற்றி நம்மிடையே சட்டம் இல்லாத து நீதிபதியின்  குற்றம் அல்ல.  நீதிமன்றங்கள் இதில் மாறுபட்ட கருத்துகளை கொண்டுள்ளது ஏன்? உச்சநீதிமன்ற சட்டப்படி பதினெட்டு வயதிற்கு கீழுள்ள பெண்களோடு உறவு கொள்வது, வல்லுறவு என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. வழக்குரைஞர் செய்ய முடியாததை நீதிமன

கொலை செய்ய சிறந்த ஆயுதம்! - சைக்கோ டைரி

படம்
  ஆயுதம் செய்வோம் சீரியல் கொலைகார ர்களின் டேவிட் பெர்கோவிட்ஸ், ஜான் ஆலன் முகமது, ஜான் லீ மால்வோ ஆகியோர்தான் துப்பாக்கியைப் பயன்படுத்தி இரையை போட்டுத்தள்ளியவர்கள். கத்தி, சுத்தியல், ரம்பம், இறைச்சிவெட்டும் கத்தி என வேறுபட்ட ஆயுதங்களை சீரியல் கொலைகாரர்கள் பயன்படுத்துகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை ஆயுதம் என்பது பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது கிடையாது.  மண்டையிலேயே போட்டு பிடிக்கும் பெண்களை, குழந்தைகளை, ஆன்டிகளை கையில் எடுக்கும் ஆயுதம் பயமுறுத்தவேண்டும். கொடூரமாக சித்திரவதை செய்யவேண்டும். ஆனால் அவர்கள் நெடுநேரம் உயிருடன் இருக்கவேண்டும். இதுதான் பொதுவான சீரியல் கொலைகார ர்களின் மனநிலை. துப்பாக்கியை எடுத்து டுபுக் என சைலன்ஸரை சொருகி போட்டுத்தள்ளினால் அதில் என்ன சுவாரசியம் இருக்கப்போகிறது? எனவே, இரும்பு கம்பி, கண்ணாடி பாட்டில், கத்தி, கபடா என தேடும் சீரியல் கொலைகார ர்கள் துப்பாக்கியை வேறு ஆயுதம் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே எடுப்பார்கள். டேவிட் பெர்கோவிட்ஸ், துப்பாக்கியால் தான் எளிதாக ஒருவரை கொல்ல முடிகிறது என்பதால் அதனைத் தேர்ந்தெடுத்தார்.  ஆண்களைப் பொறுத்தவரை இதில் வேடிக்கை அதிகம் இருக்கவேண

சாணியைக் கொடுத்தால் கேஸ் இலவசம்!

படம்
  சாணியைக் கொடுத்தால் கேஸ் இலவசம்! உடனே எங்கே என்றுதானே அனைவரும் கேட்பார்கள். தமிழ்நாட்டில் அல்ல. பீகார் மாநிலத்திலுள்ள மதுபானி மாவட்டத்தில் இப்படி திட்டம் அமலுக்கு வந்துள்ளது. சுகேத் எனும் கிராமத்தில்  கிராம மக்களுக்கு இலவசமாக கிடைத்த கேஸ் சிலிண்டர்களை தொழுவத்திலுள்ள சாணி, குப்பைகளைக் கொடுத்து இலவசமாக எரிவாயும் நிரப்பிக்கொள்ளலாம். இதனை உருவாக்கியவர்கள் இருவர். இருவருமே சமஸ்பூர் மாவட்டத்தில் மத்திய விவசாய பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கிறார்கள். ஒருவரின் பெயர் ராஜேந்திர பிரசாத், மற்றொருவர் ரமேஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா.  மத்திய அரசு கிராம மக்களுக்கென இலவசமாக கேஸ் சிலிண்டர்களை உஜ்வாலா திட்டத்தின்படி வழங்கி வருகிறது. இதை நான் ஆச்சரியமாக கவனித்தேன். அப்போதுதான் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அதனை எரிவாயு நிரப்ப போதுமான பணம் கிராமத்து ஏழை மக்களிடம் இல்லை என்பதை அறிந்தேன். அதற்காகத்தான் பசுக்களின் சாணியைக் கொடுத்து எரிவாயுவை நிரப்பும் மாடலை உருவாக்கினோம் என்றார் ஸ்ரீவஸ்தவா. பீகாரின் முசாபர் நகர், ஜார்க்கண்டின்  டியோகர் நகரிலுள்ள கோவில்களுக்கு கடவுளுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், இலைகள் ஆகியவற்றை

டிஜிட்டல் கல்வியும், வளாக கல்வியும் மாற்றங்களை தரும்!

படம்
  கலப்புக் கல்வி தற்போது பல்கலைக்கழகங்கள்  இயங்கத் தொடங்கியுள்ளன. ஆன்லைன் கல்வியுடன் இனி வளாக கல்வியும் தொடர அதிக வாய்ப்புகள் உள்ளன.  சிறப்பான இணைய இணைப்பு உள்ள இடங்களில் ஆன்லைன் வகுப்புகள்  நல்ல பயனைக் கொடுத்துள்ளன. இதனை குறைவான கட்டணத்தில் உலகில் உள்ள யாருமே அணுக முடியும் என்பது முக்கியமானது.  சுயமாக கற்றல் ஆன்லைனில் பாடங்கள் நடைபெற்றாலும் அதனை புரிந்துகொள்ளவும் மேற்கொண்டு பாடங்களிலுள்ள விஷயங்களை அறியவும் இணையம் உதவுகிறது. பாடங்களைப் பற்றி எளிதாக கருத்துக்களை கூறமுடிவது முக்கியமான சாதக அம்சம்.  வெளிநாட்டிலும் கல்வி ஆன்லைன் கல்வி முறையில் நாட்டின் எல்லைகள் தலையிடமுடியாது. இம்முறையில் வெளிநாட்டு மாணவர்களும் கூட விரும்பினால் கட்டணம் கட்டி பாடங்களை படிக்க முடியும்.  ஆன்லைன் கல்விமுறையை இந்திய கல்வி நிறுவனங்கள் மேம்படுத்தினால் எதிர்காலத்தில் ஏராளமான வெளிநாட்டு மாணவர்களைப் பெற முடியும்.  வயது வந்தவர்களுக்கான கல்வி முதலில் கல்வி கற்பது என்பது வயது வரம்பைத் தாண்டி வளரவில்லை. ஆன்லைன் முறை அதனையும் மாற்றியுள்ளது. கொரோனா காலத்தில் திறனில் பின்தங்கியுள்ளவர்கள் கூட புதிய ஆன்லைன் படிப்புகளை படிக்க