மொழிபெயர்ப்பாளர்களை ஏன் மதிக்க வேண்டும்?
மொழிபெயர்ப்பாளர்களை ஏன் மதிக்க வேண்டும்? டிம் பார்க்ஸ் தமிழில்: எதிராஜ் அகிலன் நீங்கள் நேசித்து வாசிக்கும் மிலன் குந்தேராவை எழுதியது யார்? விடை: மைக்கேல் ஹென்றி ஹைம். அறிவார்ந்த எழுத்தாளர் என்று கருதப்படும் ஓரான் பாமுக்கை? அவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மௌரீன் ஃப்ரீலி. கற்பனை வளம் கூடிய பாண்டித்யம் மிக்க ராபர்ட்டோ காலஸ்ஸோ? ம்ஹ்ம். நான்தான். தன் வேலையை முடித்துவிட்ட பிறகு மொழிபெயர்ப்பாளன் காணாமல் போய்விடவேண்டும். படைப்புத்திறன் மிகுந்த, கவர்ச்சிமிக்க, பேரெழுத்தாளர் மட்டுமே புவியெங்கும் வியாபித்து நிற்க விரும்புவார். அவருடைய வாசகர்களில் பெரும்பான்மையோர் உண்மையில் அவருடைய எழுத்தை வாசிப்பதில்லை என்ற யதார்த்தத்தை ஜீரணிக்க முடியாது. நான் மொழிபெயர்ப்பு பணிகளிலும் ஈடுபடுவதுண்டு என்ற தகவல் என் புதினங்களை வாசிக்கும் வாசகர்களை அதிருப்தி கொள்ள வைப்பதை அவர்களை சந்திக்கும்போது கண்டிருக்கிறேன். தான் முக்கியமான எழுத்தாளர் என்று நம்பும் ஒருவர் செய்யக்கூடாத காரியமாக மொழிபெயர்ப்பு பணியினை பார்க்கிறார்கள். ஒரு மொழிபெயர்ப்பாளர