இடுகைகள்

சிகிச்சை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

என்னை மட்டுமே எனக்குப் பிடிக்கும் - நார்ச்சிஸ்ட் டிஸார்டர்

படம்
  இன்று உலகில் வாழும் இளைஞர்கள் பெரும்பாலும் நார்ச்சிஸ்ட் மனநிலை கொண்டவர்கள்தான். இவர்கள், அனைத்து விஷயங்களிலும் தாங்களே முன்னிலை பெறவேண்டும், மையமாக இருக்கவேண்டுமென நினைப்பார்கள். இதனால்தான் போன்களில் இன்ஸ்டா ரீல்ஸ், ஃபேஷன், நேபாளம் வரை பைக்கில் ட்ரிப் என பல்வேறு லட்சியங்களைச் சொல்லுவார்கள். எப்படி பிரபலமாவது என யோசிப்பார்கள். அவர்களது நண்பர்களையும் தங்களை பாராட்டியே ஆகவேண்டும் என வலியுறுத்துவார்கள். கோரஸ் பாடவே நண்பர்களை வைத்திருப்பார்கள். சுயமோகிகளை யாரும் விமர்சனம் செய்யமுடியாது. அப்புறம் என்னுடைய உடலின் ஒவ்வொரு அங்குலமும் அவ்வளவு பர்ஃபெக்ட் தெரியுமா? என வம்புச்சண்டைக்கு வந்துவிடுவார்கள். எதிர்கொள்வது கடினம்.  நார்ச்சிஸ்ட் என தன்னை மட்டுமே விரும்பும் மனநிலை கூடுதலாகி, ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறையும்போது தற்கொலை செய்துகொள்வார்கள். குறிப்பாக, வயதாகும்போது இயல்பாகவே ஆண், பெண்ணின் அழகு குறையும். அப்போது தன்னை  பிறர் நினைக்கவேண்டும், அழியாப்புகழை அடைய தற்கொலை செய்துகொள்வார்கள்.  இலக்கிய எடுத்துக்காட்டாக லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரீனினா நாவல் உள்ளது. ஆயிரம் பக்கங்களுக்கு மேல் செல்

இரண்டு குறைபாடுகளுக்கும் இடையில் -- பார்டர்லைன் டிஸார்டர்

படம்
  நியூரோசிஸ், சைகோசிஸ் ஆகிய குறைபாடுகளுக்கும் இடையில் உள்ளவர்கள் என்ற அடிப்படையில்தான் பார்டர்லைன் பர்சனாலிட்டி டிஸார்டர் என பெயர் உருவானது.  இக்குறைபாட்டை உளவியல் ஆய்வாளர் சிக்மன்ட் பிராய்ட், நியூரோட்டிக் என குறிப்பிட்டார். மேலும் இதனை அந்தளவு ஆபத்தான குறைபாடாக அவர் கருதவில்லை.  பார்டர் லைன் பர்சனாலிட்டி டிஸார்டர் நோயாளிகளுக்கு, தங்களுக்கு நெருங்கியவர்கள் தன்னை விட்டுவிட்டு போய்விடுவார்கள் என்ற பயம் எப்போதும் இருக்கும். எனவே பயத்திலும், தவிப்பிலும், மன அழுத்தத்திலும் இருப்பார்கள். நண்பர்கள், தோழி, மனைவி என யாராவது வரச்சொல்லிவிட்டு காலதாமதம் செய்தாலோ அல்லது இன்னொருநாள் வருகிறேன் என்று சொன்னாலோ அதை இவர்க ளால் தாங்கிக்கொள்ள முடியாது.  தங்களை காயப்படுத்திக்கொள்வார்கள், தற்கொலை செய்துகொள்ள முயல்வார்கள். பொறுத்துக்கொள்வது என்பதே இவர்களுக்கு தெரியாத ஒரு வார்த்தை.  கஃபேயில் நண்பர்களின் நண்பர்கள் என அறிமுகமாகும் ஆட்களிடம் கூட பழகுவார்கள். சில மணி நேரத்திலேயே தனது அந்தரங்கமான விஷயங்களைப் பகிர்வார்கள். எதிரிலுள்ளவர் அட்டா என்னை இன்ஸ்டன்டாக நண்பராக ஏற்றுவிட்டாரே என மனம் குழைந்தால், விரைவில் அவர்

தனிமையோ தனிமை - ஸிஸோய்ட் மனிதர்களின் அடையாளங்கள்

படம்
ராசிகளுக்கான பொதுபலன்களைப் போல் அல்லாமல் ஸிஸோய்ட் பர்சனாலிட்டி டிஸார்டர் ஆட்களின் அறிகுறிகளைப் பார்ப்போமா? குடும்பம், அலுவலகம் என எங்குமே தனியாகத்தான் ஆவர்த்தனம் செய்வார்கள். இவர்களை குடும்ப நிகழ்ச்சி, சமூக குழு என எதிலும் ஒன்றாக சேர்க்க முடியாது. பெரிதாக எந்த உணர்ச்சியையும் காட்ட மாட்டார்கள். சமூக நிர்பந்தங்கள் அதிகரித்தால் வலியை மட்டும் உணர்ச்சியாக வெளிக்காட்டுவார்கள்.  காதலியுடன் வெளியே சுற்றுவது, டேட்டிங், மெழுகுவர்த்தியுடன் பாய் ஹோட்டலில் நெய்ச்சோறு என கனவுகண்டால் நடக்காது. திருமணம் செய்துகொள்வதிலும் ஆர்வம் இருக்காது. அப்படி வற்புறுத்தினாலும், உடலுறவு சார்ந்தும் பெரிய ஈடுபாடு இருக்காது. உணர்வுரீதியாக வற்றிப்போண கேணி போல இருப்பார்கள். எனவே, காதல், கல்யாணம் என பேசுவது நோ கமெண்ட்ஸ். சிம்ப்ளி வேஸ்ட்தான்.  கடற்கரைக்கு செல்வது, அஸ்தமனச்சூரியன் பார்ப்பது, இனிப்புச்சோளத்தை நண்பனின் காசில் வாங்கி சப்பித் தின்பது என்பதை ஸிஸோய்ட் நோயாளிகள் விரும்பமாட்டார்கள். தங்களது உணர்வை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதும் மிக அரிது.  அப்படியென்றால் என்னதான் செய்வார்கள். அவர்களுக்கான பொழுதுபோக்கை உருவாக்கிக்க

பாரனாய்ட்டும், ஸிஸோபெரெனியாவும் ஒரே குறைபாடா?

படம்
  ஆளுமை பிறழ்வு குறைபாட்டில் பாரனாய்ட் மற்றும் ஸிஸோய்ட் மற்றும் ஸிஸோடைபல் ஆகிய இரண்டுக்கும் சில ஒத்த அறிகுறிக்ள் உண்டு. அதாவது, நிகழ்காலம் மெல்ல மறந்துவிடும். புதிய பாத்திரங்கள், உலகத்தை உருவாக்கியபடி வாழ்வார்கள்.    ஸிஸோய்ட் குறைபாடு உள்ளவர்களுக்கு சமூக உறவுகள் குறைவாகவே இருக்கும். இவர்கள் தங்களது உணர்ச்சிகளையும் குறைவாகவே வெளிப்படுத்துவார்கள். தங்களுக்கே இப்படியென்றால் பிறரைப் பற்றி நீங்களே கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். கவலையே பட மாட்டார்கள்.  ஸிஸோடைபல் குறைபாடு உள்ளவர்களுக்கு, நெருங்கிய உறவுகளைக் கையாள்வது கடினமாக இருக்கும். இவர்களை எதிர்கொண்டு புரிந்துகொள்வது நெருங்கிப் பழகுபவர்களுக்கு சவால். அப்படியெனில் புதிதான ஆட்களுக்கு எப்படி இருக்கும்?பீதியூட்டும் குணம் கொண்ட மனிதர்களாக தெரிவார்கள் என்று அர்த்தம்.  ஆளுமை பிறழ்வு விவகாரத்தில் ஒருவருக்குள் பல்வேறு மனிதர்கள் எந்த வித ஒற்றுமையும் இல்லாமல் இருப்பது சாத்தியம். மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸார்டர் என  இதைக் கூறலாம். மனம் குறிப்பிட்ட வாழ்க்கை சம்பவத்தில் காயமுற்று அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கும்போது உயிரை, உடலைக் காக்கும் நோக்கத்த

ஆளுமை பிறழ்வின் அடிப்படை, அடையாளம் காணும் முறை

படம்
  ஆளுமை பிறழ்வு பல்வேறு வகையாக பத்து முக்கிய வகையாக இருப்பதைக் குறிப்பிட்டோம் அல்லவா. குறைபாடுகளைப் பார்க்கும் முன்னர் நாம் ஆளுமை என்பதை தெளிவாகப் பார்த்துவிடுவோம்.  ஆளுமை என்பது எப்படி உருவாகிறது, ஒருவர் வாழ்ந்து வரும் சூழ்நிலை, அவருக்கு கிடைக்கும் விஷயங்கள், கல்வி, குடும்ப சூழ்நிலை, இதனால் அவர் உலகை புரிந்துகொள்ளும் விதம். சிந்தனை, ஆகியவற்றை நாம் ஆளுமை உருவாக்கும் அம்சங்கள் எனலாம். நாட்டின் அதிபராக உள்ளவர் பற்றி கருத்து என்றால் அதை நீங்கள் அடுத்த பிரதமர் வேறு ஒரு கட்சி சார்ந்து தேர்ந்தெடுக்கப்படும்போது மாற்றி்க்கொள்ளலாம். ஆனால் ஒருவரின் ஆளுமை அப்படிப்பட்டதல்ல.  உளவியல் ஆய்வாளர் சிக்மண்ட் ஃபிராய்ட் இந்த வகையில் பல்வேறு ஆய்வுகளை செய்துள்ளார். காலப்போக்கில் இவரது சில யூகங்கள் தவறு என்றாலும் கூட உளவியல் ஆய்வில் முக்கியமான ஆய்வுப்பங்களிப்பு செய்தவர் இவர். இவரைப் பற்றி தமிழில் நிறைய நூல்கள் வந்துள்ளன. இணையத்தில் கூட இவரைப் பற்றி தேடிப்படிக்கலாம். ஒருவரின் ஆளுமை என்பது அவர் பிறந்து சில ஆண்டுகளிலேயே முடிவாகிவிடுகிறது என்று சிக்மண்ட் ஃபிராய்ட் கூறுகிறார். பிற விலங்கினங்கள் குட்டிகளாக பிறந்து

ஆளுமை பிறழ்வுக்கு என்ன காரணம்?

படம்
  ஆளுமை என்பதை நூல் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பார்கள். சுய முன்னேற்ற நூல்களில் ஆளுமை என்பது முக்கியமான வார்த்தையும் கூட. ஒருவர் பேசுவது, சிந்திப்பது, செயல்படுவது ஆகியவற்றில் தனது கலாசாரம் சார்ந்த தன்மைகளை தாண்டி இருப்பது ஆளுமைக் குறைபாடு அல்லது பிறழ்வு என கூறலாம். அதாவது சமூகத்தை சீர்திருத்துபவர்களை இதில் உள்ளடக்க முடியாது. குறிப்பிட்ட தன்மையில் யோசிப்பது, செயல்படுவது ஆகியவற்றால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உடல், மனம் என இரண்டுமே பாதிக்கப்படும் நிலை என புரிந்துகொள்ளலாம். உளவியலாளர், ஒருவருக்கு ஆளுமை பிறழ்வு உண்டா இல்லையா என சோதனை மூலம் உறுதி செய்ய முடியும். ஆளுமை பிறழ்வு அல்லது குறைபாடு வகையில் மொத்தம் பத்து வகைகள் உள்ளன. பாரனாய்டு, ஸிசோய்டு, ஸிசோடைபால், ஆன்டி சோசியல், பார்டர்லைன், ஹிஸ்டிரியோனிக், நார்சிஸ்டிக், அவாய்ட்ன்ட், டிபென்டன்ட்,ஆப்செசிவ் கம்பல்சிவ். இவற்றைப் பெயரைப் பார்த்தால் கொஞ்சம் திகைப்பாகவே இருக்கும். எப்படி உச்சரிப்பது என்பது முக்கியல்ல. என்ன அறிகுறிகள், பாதிப்பை குறைத்து கட்டுப்படுத்துவது மட்டுமே அவசியமானது. மனநல குறைபாடுகளுக்கு தீர்வு

மிரட்டும் பாம்பு, குறையும் சிகிச்சை!

படம்
  2020ஆம் ஆண்டில் பாம்புகளால் இறந்த மனிதர்களின் எண்ணிக்கை 78 என தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு சொல்லுகிறது. இதனை நேஷனல் ஹெல்த் புரோஃபைல் அமைப்பின் (என்ஹெச்பி)  தகவல் உறுதி செய்துள்ளது. கோடைக்காலம் வந்துவிட்டால் பாம்புகளின் வருகை வீடு, வயல், கிடங்கு என தொடங்கிவிடும். இதனை பிடிக்கவென பயிற்சிபெற்ற வல்லுநர்கள் உள்ளனர் கோவையில் நடப்பு ஆண்டில் அதிகளவாக 55 பேர் பாம்பு கடித்து இறந்துள்ளனர். இது தமிழ்நாட்டிலேயே அதிகளவு மரண எண்ணிக்கை.  நகரம், கிராமம் ஆகிய இடங்களில் பெரிய வேறுபாடு இன்றி பாம்புகள் மனிதர்களை கடித்துள்ளன. நகரங்களைப் பொறுத்தவரை தங்களின் வாழிடத்திற்காக பாம்புகள் நகர்ந்துசெல்லும்போது குறுக்கே வரும் மனிதர்களை கடிக்கின்றன. கிராமத்தில், மலம் கழிக்க செல்லும் பெண்களை பெரும்பாலும் தீண்டுகின்றன.  வாரத்திற்கு ஒருமுறை பாம்புகள் உணவு உண்கின்றன. அப்படி கிடைக்கும் உணவும் மனிதர்களின் தலையீட்டால் கிடைக்காமல் போகும்போது பாம்புகள் ஆவேசம் கொள்கின்றன. மனிதர்களை கடிக்கின்றன. என்ஹெச்பி தகவல்படி, இந்தியாவில் தமிழ்நாடு பாம்பு கடியால் மனிதர்கள் இறப்பதில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.  ஏப்ரல் 2021 - மார்ச் 2022

ஒமிக்ரான் அறிகுறி, மருந்துகள்!

படம்
  ஒமிக்ரான் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பெரிதாக அடையாளம் காட்டாது. மூச்சுக்குழலில் ஏற்படும் இருமல், சளி காய்ச்சல் என்றுதான் இதையும் அடையாளம் காண முடியும்.  சுவையுணர்வு, வாசனை முகரும் திறன் இல்லாமல் போவது ஆகியவற்றை பற்றி ஏதும் கூறப்படவில்லை. இதுவரை இதில் இழப்பு ஏதும் தெரியவில்லை.  ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிறையப் பேர் இறந்தது போல இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேராது என்று கூறப்படுகிறது.  சிகிச்சை  எல்லாமே அறிகுறிகளின்படிதான். ஓய்வு எடுக்கவேண்டும். உங்கள் மேலாளர் லீவ் அப்ளை செய்தால் தரமாட்டேன். நேராக வந்து லீவ் கேட்டாலும் சரியான காரணத்தை சொல்லவேண்டுமென வாட்ஸ் அப் அறிவிப்பில் கூட மிரட்டலாம். ஒமிக்ரானைப் பொறுத்தவரை இதுபோல எதற்கும் கட்டுப்படாது. ஊட்டச்சத்தான உணவைச் சாப்பிட்டு ஓய்வெடுத்தால் போதும்.  கொரோனாவுக்கு கொடுத்த மாத்திரைகளே போதுமானது. மேர்க், ஆன்டி வைரல் மாத்திரையான மோல்னுபிராவிர் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். மோனோகுளோனல் ஆன்டிபாடியைப் பயன்படுத்தினால் தாக்கம் 77 சதவீதம் குறையும்.  அறிகுறிகள் தென்பட்டால் ஒரே வாரத்தில் ஆன்டிபாடி காக்டெயிலை பயன்படுத்த வேண்டும். வயதானவர்களுக்கு இது மிக அவசியம்.

வட இந்திய தொழிலாளர்களுக்கு உதவிய திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய் கார்த்திகேயன்!

படம்
              டாக்டர் விஜய் கார்த்திகேயன் திருப்பூர் ஏராளமான வட மாநில தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கும் நகரமாக திருப்பூர் மாறியுள்ளது . இதனால் அங்கு பொதுமுடக்கத்தின்போது தேவையான உதவிகளை கவனமாக வழங்கும் தேவை இருந்தது . இதனை கச்சிதமாக நிறைவேற்றினார் மாவட்ட ஆட்சியர் விஜய் கார்த்திகேயன் . விஜய் கார்த்திகேயன் மருத்துவராக இருந்து குடிமைப்பணித்தேர்வு எழுதி ஆட்சியரானரர் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக செய்து பல்வேறு உணவுப்பொருட்களை மக்களுக்கு வழங்கியுள்ளார் . இவர் மட்டுமே 62,744 மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார் . இருபத்து நான்கு மணிநேரமும் செயல்படும் மையம் ஒன்றைத் தொடங்கி அதில் பல்வேறு தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் . இதன்மூலம் தேவைப்படும் உதவிகளை களத்தில் வழங்க மட்டுமே நகரத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தயாராக இருந்தனர் என்பது விஜய்யின் திட்டமிடலுக்கு சரியான உதாரணமாக இருக்கும் . திருப்பூர் கொரோனா போராளிகள் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி கொரோனா நோய்த்தொற்றுக்கு பாதிப்புற்றவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளனர் . இதற்கு பல்வேறு அரசு அதிகாரிகளும்

ஆந்திரப் பிரதேசத்தில் பிச்சைக்கார ர்களுக்கும், வீடற்றோருக்கும் உணவு வழங்கும் மூன்று ராணுவ வீரர்கள்! - பெருகும் இளைஞர்களின் ஆதரவு

படம்
                  ஆதரவற்றோருக்கு உணவு ! ஆந்திரப்பிரதேசத்தில் மூன்று ராணுவ வீரர்கள் , ஆதரவற்றோருக்காக உணவு வழங்கி வருகின்றனர் . இப்பணியை கடந்த மூன்று ஆண்டுகளாக செய்து வருகின்றனர் . பலசா ரயில் நிலையத்தில் உள்ள பிச்சைக்காரர்கள் , வீடற்ற மக்களுக்கு விவேகானந்தா சேவா சமிதி என்ற பெயரில் அமைப்பை நிறுவி உதவிகளை வழங்கி வருகிறார்கள் . ரபகா கிரண் , பன்னி , தர்மா ஆகிய மூவரும்தான் இந்த பணியில் இறங்கி பல்வேறு உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள் . கிரண் இந்தோ திபெத் ராணுவ வீரர் என்றால் மற்ற இருவரும் அசாம் ரைபிள்ஸ் , எல்லைப்பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் . தொடக்கத்தில் பலசா பகுதியிலுள்ள உணவகங்களில் மீதியாகும் உணவைப் பெற்று பிச்சைக்காரர்களுக்கும் , உணவு தேவைப்படுவோருக்கும் வழங்கத் தொடங்கியுள்ளனர் . இந்த மூன்று ராணுவ வீரர்களின் பணியைப் பார்த்துவிட்டு மாவட்டத்திலுள்ள 600 இளைஞர்கள் இவர்களின் விவேகானந்தா சமிதி பணியில் இணைந்துள்ளனர் . மண்டசா , சோம்பேட்டா , ஹரிபுரம் என மூன்று பகுதிகளுக்கு உணவு அளிக்கும் பணி விரிவடைந்துள்ளது . இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு தன்னார்வலர்க

பிளவுபட்ட மனதில் தோன்றும் கற்பனைகள்- ஸிசோபெரெனியா குறைபாடு

படம்
ஸிசோபெரெனியா ஸிசோபெரெனியா பாதிப்பு உலகிலுள்ள 1.1 சதவீத வயது வந்தோருக்கு இருக்கிறது. இந்த வார்த்தை கிரேக்கத்திலிருந்து வந்தது. இதற்கு பொருள், பிளவுபட்ட மனம். நேரடியாக பொருள் கொள்ளாதீர்கள். இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் கற்பனையில் பார்க்கும் விஷயங்களை நிஜம் என்று நம்புவார். அது சமூகத்திலிருந்து அவரது இருப்பை தூரமாக்கும். போதைப்பொருட்கள், மதுபான பழக்கம் கொண்டவர்களுக்கு நாளடைவில் இப்பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.. மரபணு ரீதியாக, தாயின் கருவறையில் இருக்கும்போது ஏற்படும் அசாதாரண மாற்றங்கள், சூழல் காரணங்கள் ஆகியவற்றை இக்குறைபாடு ஏற்படுவதற்கான காரணமாக சொல்லுகிறார்கள். மூளையிலுள்ள நியூரான்களில் அபரிமிதமாக சுரக்கும் டோபமைன், செரடோனின் ஆகியவற்றின் பாதிப்பினாலும் இக்குறைபாடு தீவிரமடைகிறது. குடும்பம் சார்ந்த பிரச்னைகளால் ஸிசோபெரெனியா ஏற்படுவதாக இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் கூறிவந்தனர். ஆனால் அதற்கு உறுதியான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. இக்குறைபாட்டிற்கு மருந்துகள் கிடையாது. கட்டுப்படுத்த முடியும். அதனோடு வாழப்பழகிக்கொள்வது சிறப்பு.   நேர்மறை எதிர்மறை அறிகுறிகளைப் பார்ப்போம்

கோவிட் பாதிப்பும் அரசு செய்யவேண்டியதும்!

படம்
வரும் மே 15க்குள் இந்தியாவில் கோவிட் -19 நோய் பாதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரம் முதல் 13 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. என்ன பிரச்னை? அடிப்படையே பிரச்னைதான். கழிவறைகளையே ஜென்ம சனி பிடித்தவனுக்கு ஏற்படும் சிரமங்களை ஒத்து கட்டுபவர்கள் மருத்துவமனை படுக்கைகளை மட்டும் வைத்திருப்போமா என்ன? இந்தியாவில் பத்தாயிரம் பேருக்கு 07 சதவீத படுக்கை வசதிகள் மட்டுமே உள்ளது. இதுவே தென்கொரியாவில் பத்தாயிரம் பேர்களுக்கு 6 சதவீத படுக்கைகள் உள்ளன. இந்தியர்கள் கொரோனா பாதிப்பிற்கு முன்னதாகவே நீரிழிவு உயர் ரத்த அழுத்தம் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் கொரோனா தொற்றும்போது அதன் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். அரசு என்ன செய்யவேண்டும்? கோவிட் -19 நோய் பாதிப்பைக் கண்டறிய இலவச மையங்களை அமைக்கவேண்டும். அதற்கான சிகிச்சையும் விலையின்றி அளிக்க  முன்வரவேண்டும். மருத்துவமனை படுக்கைகளை அதிகரிக்கவேண்டும். மக்கள் கூடுமிடங்களை தடை செய்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்படி செய்யவேண்டும். மக்கள் வீடுகளில் தஞ்சமடைந்து கிடப்பதால், வேலையிழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது. இ

அரசும் தனியாரும் இணைந்து பணிபுரிய வேண்டும்!

படம்
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட பத்து இத்தாலியர்களில் ஒருவர் குணமாகி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மீதமுள்ளவர்கள் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த மருத்துவமனை தலைவர் நரேஷ் திரேகானிடம் பேசினோம். அரசும் தனியாரும் இணைந்து மருத்துவத்துறையில் செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறதே? கொரோனா போன்ற சூழல்களில் அரசிடம் கூட போதுமான படுக்கை வசதிகள், மருந்துகள், தங்கும் அறைகள் இருக்காது. இச்சூழலில் தனியாரின் மருத்துவ வசதிகளை அரசு பயன்படுத்திக்கொள்ள முடியும். சரியான மருத்துவர்கள், மருத்துவக் கருவிகள், வெண்டிலேட்டர் ஆகியவை நம்மிடம் போதுமான அளவு இல்லை. கொள்ளைநோய் சிகிச்சைக்கான செலவும் அதிகம். எனவே, முடிந்தவரை நோய் யாருக்கும் அதிகம் பரவாமல் இருந்தால் மட்டுமே பாதிப்பு குறைவாக இருக்கும். அதற்காகத்தான் அரசு ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இப்போது பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கு சிகிச்சை செய்துள்ளீர்கள். இதிலிருந்து  பலருக்கும் சிகிச்சை செய்வதற்கான திறனை பெற்றுவிட்டீர்களா? நாங்கள் இப்போதுதான் இந்த நோயை சமாளிப்பதற்கான

கொரோனோ வைரசை முன்னரே கணித்த அமெரிக்க எழுத்தாளர்!

படம்
pixabay பொதுவாக எழுத்தாளர்களை தீர்க்கதரிசிகள் என்று சொல்லுவதுண்டு. காரணம், அவர்கள் கற்பனையாக யோசித்த விஷயங்கள் திடீரென நிஜத்தில் நடக்கத்தொடங்கும். இதுபோல உலகம் முழுக்க நடப்பது உண்டு. அண்மையில் கொரோனா வைரஸ் உலகம் முழுக்க வேகமாக பரவிவருகிறது. இதன் பாதிப்பை அமெரிக்க எழுத்தாளர் டீன் கூட்ஸ் 1981இல் தான் எழுதிய ஐஸ் ஆஃப் டார்க்னெஸ் என்ற நாவலில் குறிப்பிட்டுள்ளார். இதில் கொலைகார வைரஸின் பெயர் வூஹான் 400. இப்போது உலகம் முழுக்க பரவி வரும் வைரஸ் முதன்முதலில் பரவியது வூஹான் நகரத்திலிருந்துதான் என்பது நினைவுக்கு வருகிறதா? இந்நேரத்தில் மனதில் திகிலும் உடலில் நடுக்கம் இருந்தாலும் நீங்கள் வாசிக்கவேண்டிய இத்தகைய திகில் நாவல்களை சொல்லவேண்டியது எங்கள் கடமை. தி இலியட், ஹோமர் ஹோமர் எழுதிய கிரேக்க கவிதை. இது பிளேக் நோயால் அழிந்த மக்களின் துயர் பற்றி பேசுகிறது. அப்போலோவை கிரேக்க மக்கள் அவமரியாதை செய்ய அவர் கொடுக்கும் சாபத்தால் ஒன்பது நாட்களில் ஏராளமானவர்கள் இறக்கிறார்கள். இத்துயரத்தை இந்த நூல் பேசுகிறது.  தி கோப்ரா ஈவன்ட் – ரிச்சர்ட் பிரிஸ்டன் 1998 நியூயார்க் நகரில் கோப

ஒலி என்ன செய்யும் தெரியுமா?

படம்
giphy.com சத்தம் என்ன செய்யும் என்பீர்கள். ஆனால் ஸ்லேட்டில் சாக்பீஸ் எழுதும் ஓசை, குழந்தை அழும் ஓசை ஆகியவை காது கூதும் ஓசைகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ரயிலில் கால் சிக்கும்போதும், குழந்தைகள் பசியில் அழும்போது வீறிட்டு அழுவதையும் நாம் குறை சொல்லப் போவதில்லை. இந்த ஒலிகள் ஏன் நமக்கு காது கூசுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்பதை பற்றி மட்டுமே நான் பேச வருகிறேன். கரண்டியால் பீங்கான் டம்ளர்களில் மோதுவது மோசமான ஒலிகளில் ஒன்று. நம் காதுகளின் அமைப்பு குறிப்பிட்ட ஒழுங்கமைந்த ஒலிகளுக்கு பழகிவிடுகிறது. ஆனால் திடீரென ஒழுங்கற்ற ஏற்படும் விபத்து, கட்டிட உடைப்பு போன்ற ஒலிகளுக்கு காதுகள் இன்னும் பழக்கப்படவில்லை. காதுகளின் ஒலிஅளவுத் திறன் 2000 ஹெர்ட்ஸ் முதல் 4000 ஹெர்ட்ஸ்கள் வரை. பொதுவாக ஒலிகளை நீங்கள் கண்டுகொண்டாலும், பரவாயில்லை என சகித்துக்கொண்டாலும் அவை உளநிலையில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. பதற்றம், எரிச்சல், நிதானமிழப்பு, தூக்கமின்மை ஆகியவற்றை ஒளியை விட ஒலி எளிதில் ஏற்படுத்திவிடும். 2012 ஆம் ஆண்டு இதுபற்றி செய்த ஆய்வில் 74பேர் பங்கேற்றனர். இதில் பல்வேற

தற்கொலையில் சிறந்த அமெரிக்கா - சிதையும் இளைஞர்கள்!

படம்
giphy.com அமெரிக்காவை உள்ளிருந்து உடைக்கும் பிரச்னையாக தற்கொலை மாறி வருகிறது. ஆண்டுக்கு தோராயமாக 47 ஆயிரம் பேர் அங்கு தற்கொலை செய்து வருகின்றனர். அதற்கு முக்கியக் காரணம் அங்குள்ள குடும்ப அமைப்பாகவும் இருக்கலாம். ஆனால் தற்கொலைகள் நடந்து வருவது அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இரண்டாம் உலகப்போர் சமயங்களில் நடந்த இறப்புகளை விட தற்கொலை மரணங்களின் எண்ணிக்கை அதிகம். அதுவும் குறிப்பாக 10 -24 வயது பிரிவில்தான் அதிகளவு தற்கொலை மரணங்கள் ஏற்படுகின்றன. ஏறத்தாழ 2007-2017 வரையில் 56 சதவீதம் தற்கொலைகள் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. தற்கொலை ஏன் செய்துகொள்கிறார்கள் என்று டக்கென கூறிவிடமுடியாது. ஏதாவது நிராகரிப்பு, தோல்வி, விரக்தி, ஹிக்கிகோமெரி போல சாதிக்க எதுவுமே இல்லையென்ற எண்ணம் கூட காரணமாக இருக்கலாம். உளவியல் பிரச்னை என்றாலும் அமெரிக்கர்கள் உடனே நரம்புகளை அறுத்துக்கொண்டு செத்து விடுவதில்லை. 83 சதவீதம் பேர் மருத்துவர்களைச் சென்று சந்திக்கிறார்கள். பின்னரே தற்கொலைகளை சந்திக்கிறார்கள். அல்லது அதிலிருந்து மீள்கிறார்கள். அமெரிக்காவின் டென்னிசியிலுள்ள சென்டர்ஸ்டோன் மனநல மருத்துவ

உலகம் அழியக் காரணங்கள் என்ன? - புத்தக அறிமுகம்

படம்
புத்தக விமர்சனம் இந்த உலகம் அழியப்போகிறது? முதல் வேலையாக என்ன செய்வீர்கள்? உங்களைக் காப்பாற்றிக்கொண்டு அடுத்த வேலையாக எப்படி வீடு, குடும்பம் , நட்பை காப்பாற்றுவீர்கள்? அதைத்தான் இந்நூலில் ஆசிரியர் வால்ஸ் சொல்கிறார். டைம் பத்திரிகையில் பணிபுரிந்துள்ளவரான வால்ஸ், நாம் இன்று புதிதாக உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு, ஆன்டி பயாட்டிக் முதற்கொண்டு விளக்கி, அவை நம்மை காக்குமாக என்று பேசுகிறார். உலகம் அழியும் என்றால் அதற்கான காரணம் எதுவாக இருக்கும்? உடனே நமக்கு கற்பனை விரியலாம். டெர்மினேட்டர் படம் ரோபோக்கள் சிந்திக்க தொடங்கினால் மனிதர்கள் அழிவதைப் பேசுகிறது. அதைப்போலவே அணு ஆயுதப்போர், சூழல் அழிவு, எரிமலை வெடிப்பு ஆகிய விஷயங்களைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார் ஆசிரியர். பத்திரிகையாளர் என்பதால் அனைத்து விஷயங்களுக்கும் ஏராளமான ஆதாரங்களை முன்வைத்து பேசுகிறார். அறிவியல்பூர்வமாக உலகின் முடிவு என்ன என்பதை நீங்கள் அறிய வேண்டுமா? இந்த புத்தகத்தை பிடிஎஃப் தளத்தில் கள்ளத்தனமாக தரவிறக்கியேனும் படித்துவிடுங்கள். மனதில் ஏற்படும் மூர்க்கத்தனமான, பிடிவாதமான, குரூர எண்ணங்கள் ஆகிய