இடுகைகள்

மூளை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீரியல் கொலைகாரரின் உடலில் வெனோம் புகுந்தால்.... - வெனோம் 2 - டாம் ஹார்டி

படம்
  வெனோம் - லெட் தேர் பி கார்னேஜ் வெனோம் 2 Director: Andy Serkis Produced by: Avi Arad, Matt Tolmach, Amy Pascal, Kelly Marcel, Tom Hardy, Hutch Parker Screenplay by: Kelly Marcel     எடி பிராக் இந்த முறை ஆக்ரோஷமாக அடி உதையோடு உணர்கலக்குகிறார். சீரியல் கொலைகாரர் ஒருவர் சிறையிலிருந்து தப்பிவிடுகிறார். கூடுதலாக எடியின் உடலிலுள்ள வெனோமின் சக்தி கொண்ட ரத்தத்தை சுவைத்துவிடுகிறார். இதனால் அவரது உடலில் இன்னொரு வெனோம் உருவாகிறது. இதனை எதிர்த்து போராடி வெனோம் எப்படி வெல்கிறது என்பதுதான் கதை.    வெனோம் முதல் பாகத்தில் எடிக்கும் அவரது காதலிக்கும் காதல் செட்டாக  வாய்ப்பு இருக்குமா இல்லையா என்று சந்தேகம் அனைவருக்குள்ளும் இருந்தது. ஆனால் இந்த பாகத்தில் அதற்கு சுப மங்கலத்தை பாடிவிட்டார்கள். எனவே அடுத்தடுத்த பாகங்களில் ஆக்சன் காட்சிகள் இன்னும் பீதியூட்டும்படி இருக்கும் என நம்பலாம்.    முதல் பாகத்தை விட இந்த இரண்டாவது பாகத்தில் உணர்ச்சிகரமான காட்சிகள் அதிகம். சீரியல் கொலைகாரர் தனது மனநிலையைப் பற்றி பேசுவது, எடித்துடன் நட்பாக நினைப்பது, வெனோமுடன் எடித் ஈகோ பார்த்து சண்டை போடுவது என நிறைய பிரச்னைகள் படத்த

வலியை உணர்வது முக்கியமா?

படம்
                  வலியை , மகிழ்ச்சியை உணர்த்தும் நரம்பு அமைப்புகள் நாம் பூனையின் தலையை தொடும்போது உணரும் மென்மையான உணர்வு எப்படி வருகிறது ? இதற்கு நரம்பு அமைப்புகள்தான் காரணம் . வலியோ , மகிழ்ச்சியோ இந்த இரண்டுமே நரம்பு அமைப்புகளின் சென்சார்கள் மூலமே மூளைக்கு தெரிய வருகிறது . வலி என்பது உடலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை நாம் உணர உதவுகிறது . வலி எந்தளவு கூடுதலாக இருக்கிறதோ அந்தளவு பிரச்னை பெரிதாக இருக்கிறது என உணர்ந்து உடனே செயல்படவேண்டும் . வலி என்ற உணர்வு இல்லாதபோது நாம் நெருப்பில் கைவைத்தாலும் அது நம் கையை சுடும் என்று தெரியாது . இதனால் கை காயப்படும் அபாயம் உள்ளது . வலி என்பது நமது உயிரைக் காப்பாற்றும் புத்திசாலித்தனமான அறிகுறி . இந்த அறிகுறி தாவரங்களுக்கு கிடையாது . எனவே , அவற்றை வெட்டினாலும் தங்களது வலியை வெளிப்படுத்த முடியாது . மனிதர்களால் தங்களுக்கு ஏற்படும் வலியை பிறருடன் பகிர்ந்துகொள்ள முடியும் . வலியை உணர முடியாத தன்மை ஒருவருக்கு மரபணு காரணமாக ஏற்படலாம் . இதனை காக்னிடல் இன்சென்ஸிடிவிட்டி டு பெயின் என்கிறார்கள் . நீளமாக சொல்ல கடினமாக இருந்தால் சிஐபி . இப்படி ஒருவ

வாழ்க்கையை மாற்றும் பல்வேறு பழக்கங்கள், இதன் பின்னணியில் உள்ள உளவியல் ஆய்வுகள்!

படம்
                முடிவெடுக்கும் பழக்கம் ! உலகம் இன்று நவீனமாக மாறி வருகிறது . அதற்கேற்ப தினசரி வாழ்க்கையிலும் , தொழிலை சார்ந்தும் ஏராளமான முடிவுகளை எடுத்துவருகிறோம் . இதில் எது சரி , எது தவறு என்பதை உணர்வதற்கு காலம் தேவைப்படலா்ம் . ஆனால் இப்படி முடிவு எடுப்பதற்கான தகவல்களை நாம் எப்படி பரிசோதிக்கிறோம் , அலசுகிறோம் என்பதை புரிந்துகொள்வது அவசியம் . அப்போதுதான் ஆபத்தான காலங்களில் மனிதர்கள் உயிர்பிழைத்து வந்திருப்பதற்கான திறனை அறிய முடியும் . சுயநலன் , பொதுநலன் என இரண்டு சார்ந்தும் முடிவுகளை வேகமாக அல்லது நிதானமாக எடுப்பது நடைபெறுகிறது . இதில் முன்னுரிமை தருவதைப் பற்றி யோசிப்பதும் எப்படி நடைபெறுகிறது என்பதை அனைவரும் அறிந்துகொள்வது முக்கியம் . தள்ளுபடி ஆதாயங்கள் இயல்பாகவே மனித மனம் உடனடியாக பரிசுகளை ஆதாயங்களை எதிர்பார்க்க கூடியது . இதனால் உலகம் முழுக்க பொன்ஸி திட்டங்கள் இன்றும் கூட செயல்பட்டு மக்களை ஏமாற்றுகின்றன . இதுபற்றிய செய்திகளைப் படித்தாலும் கூட அதிக லாபம் என்ற சொல்லை மக்கள் கைவிடத் தயாராக இல்லை . இது அடிப்படையான மனிதர்களின் பழக்கவழக்கங்களை வடிவமைக்கிற தன்

பழக்க வழக்கங்களை நல்லது, கெட்டது என பிரிப்பது எப்படி?

படம்
              பழக்க வழக்கங்களில் நல்லது எது கெட்டது எது ? பழக்கவழங்கங்களை ஆராய்வது என்பது உயிரியலில் முக்கியமானது . ஒரு பழக்கத்தை ஒருவர் கற்றுக்கொள்ள முக்கியமானது , அதற்கு கிடைக்கும் பரிசுதான் . இந்த பரிசு கிடைப்பது உறுதியானால் மூளை அதற்கு பழகி விடும் . எனவே , பரிசு பற்றி யோசிக்கும் நேரம் அதற்கு மிச்சமாகும் . காலையில் உடற்பயிற்சி செய்துவிட்டு அதற்காக உங்களுக்கு நீங்களே ஒரு பரிசு அளித்துக்கொள்கிறீர்கள் என்றால் , அதற்கேற்ப மூளை அந்த பழக்கத்தை தொடர்ச்சியாக செய்யச் சொல்லும் . காய்கறிகளை உணவில் சேர்த்து சாப்பிடுவது என்பது அனைவருக்கும் பிடித்தமானது கிடையாது . இந்த செயல்பா்டை சுவாரசியமாக்குவதற்கு அவசியமில்லை . சிறுவயதில் இதனை சாப்பிடக் கொடுத்துவிட்டால் எப்படி சாப்பிடுவீர்களோ பிடித்திருந்தால் சாப்பிடு , இல்லையெனில் கடித்து விழுங்க வேண்டியதுதான் . சமூக வலைத்தளங்களை எப்போதும் சோதிக்கும் விஷயம் , மோசமான பழக்கவழக்கங்களில் சேரும் . நண்பர்களுடன் பிரைடு சிக்கனை பக்கெட்டாக வாங்கி , நீங்கள் மட்டுமே அதிக பீஸ்களை லபக்குவது எல்லாம் மோசமான பழக்கத்தில் சேர்த்திதான் . இதனை தொடங்கிவிட்டா

நல்ல பழக்கங்களை குழந்தைகள் பின்பற்ற பரிசு கொடுங்கள்!

படம்
            குழந்தைகளின் மூளை வளர்ச்சி வேகம் ! குழந்தைகளின் மூளை வளர்ச்சி முதல் ஐந்து ஆண்டுகளில் வேகமாக இருக்கிறது . ஆனாலும் கூட அவர்கள் உலக அனுபவங்களைப் பெற்றும் முதிர்ச்சி அடையும் வரை அவர்களால் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாது . இதனால்தான் தனக்கு வேண்டும் என்பதை பிடிவாதம் பிடித்து அழுவது , கோபம் கொள்வது , வருத்தப்படுவது , பொறாமையுறுவது ஆகியவற்றை வெளிப்படையாக காண்பிக்கிறார்கள் . இதே விஷயங்கள் முதிர்ச்சியுள்ள மனிதர்களுக்கு உண்டுதான் . ஆனால் ஏன் வெளிப்படுவதில்லை ? காரணம் அப்படி வெளிப்படுவது நமது சமூக அந்தஸ்துக்கு பொருத்தமானதில்லை எனநம்புகிறோம் . குழந்தைகள் தங்களுக்கு ஏற்ற அல்லது வெளியிடங்களில் பார்க்கும் , கேட்கும் , பேசும் விஷயங்களை கவனிக்கிறார்கள் . அதனை கற்றுக்கொள்வதை இன்டக்டிவ் லேர்னிங் என்று கூறுகிறார்கள் . குழந்தைகளின் மூளைவளர்ச்சி பெறாத நிலையில் வெடிக்கும் எரிமலை போல உணர்ச்சிகளை கொட்டுவார்கள் . ஆனால் அவர்களின் வயது மூன்று அல்லது நான்கு என ஆகும்போது , கவனம் , உணர்ச்சிகளை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் கட்டுப்பாடு இருக்கும் . நினைவுகளை கையாள்வதும் பின்னாளில்

மூளையில் ஏற்படும் மாற்றங்கள் நினைவுகளை பாதிக்கும்- இரு நோயாளிகளிடம் செய்த பரிசோதனைகள்

படம்
                  மூளையும் நினைவுகளும் மருத்துவத்துறையில் மூளை நரம்பியல் இன்று வெகுவாக முன்னேறிவிட்டது . ஆனால் அதில் ஏற்பட்ட துல்லியமான அனைத்து மாற்றங்களையும் வெகுஜன மக்கள் அறியமுடியாது . திரைப்படங்கள் அந்த வேலையை செய்தன . தலையில் அடிபட்டு நினைவுகளை இழந்தவர் , பைத்தியம் ஆனவர் , கோமா நிலைக்கு சென்றவர் என பல்வேறு மனிதர்களை செல்லுலாய்டில் உலவ விட்டனர் . இதில் சுந்தர் சி போன்ற இயக்குநர்களின் படங்களில் கட்டையால் அடித்தால் கண்டிப்பாக ரத்த த்தைவிட மயக்கம்தான் வரும் எனும் டுபாக்கூர் விஷயங்களும் வெளிவந்தன . பின்னாளில் அவரே தன்னுடைய படத்தில் லாஜிக் பார்த்தால் எப்படி என்று சொல்லிவிட்டதால் , அவரை விமர்சிக்க ஏதுமில்லை . இப்போது ஒரு நோயாளி பற்றி பார்ப்போம் . அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹென்றி மொலைசன் . இவரது ஏழு வயதில் மோட்டார் பைக் விபத்தில் தலையில் அடிபட்டது . அதிலிருந்து டெம்பொரல் லோப் பகுதி பாதிக்கப்பட்டு வலிப்பு பிரச்னைஉருவானது . வலிப்பு தொடர்பான மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்தினார் . ஆனாலும் 27 வயதில் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது . மருத்துவர் ஸ்கோவில்லே இவருக்கு

எதிர்காலத்தை கணிக்கும் முடிவுகளை எடுப்பதில் மூளையின் பங்கு!

படம்
              எதிர்காலத்தை கணிக்கும் மூளையின் திறன் நாம் பூமியில் இத்தனை ஆண்டுகாலம் பிழைத்திருக்கிறோம் என்றால் அதற்கு ஒரே காரணம் , நமக்கு கிடைத்த அனுபவங்கள்தான் . இதனை மூலதனமாக வைத்து எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களை ஓரளவுக்கு கணிக்க முடிந்தது . இப்படி செய்வது அனைத்து நேரங்களிலும் பயன் கொடுக்காதுதான் , ஆனால் இப்படித்தான் மனிதர்களின் வாழ்க்கை நகர்கிறது . இதற்கு மூளையிலுள்ள இருபகுதிகள் பொறுப்பேற்கின்றன . ஒன்று பாசல் கங்குலியா , அடுத்து செரிபெல்லம் . அனைவரின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட பகுதிகளை நினைவுகூர பாடல்கள் இருக்கும் . அப்படி நினைவுகளோடு பாடல்களை தாளத்தோடு இணைத்து பாட பாசல் கங்குலியா - செரிபெல்லம் என இருபகுதிகளும் உதவுகின்றன . போக்குவரத்து சிக்னலில் நிற்கும்போது பச்சை விளக்கு எப்போது எரியும் என கணித்து வண்டியின் ஆக்சிலேட்டரை முறுக்குவது எதிர்காலத்தை கணிக்கும் திறன்தான் . சாதாண வேலை செய்பவர்களுக்கு இந்தளவுதான் கணிப்பு உதவும் . விளையாட்டு வீரர்களைப் பொறுத்தரை பந்து வரும் திசையை நோக்கி வேகமாக கணித்து நகர்வது முக்கியம் . அப்படியில்லாதபோது விளையாட்டு நம

நினைவை எப்படி மூளை தட்டி எழுப்புகிறோம்? - மூளையிலுள்ள நினைவை பாதுகாக்கும் பகுதிகள் ஒரு பார்வை

படம்
          ஞாபகம் வருதா ? சிலரது கைகளை தொட்டால் பல்வேறு நினைவுகள் வரும் . சிலரது முகத்தை பார்த்தால் நமக்கு நெருக்கமானவர்களின் நினைவு பல ஆண்டுகளுக்கு சென்று உடனே ரீகேப் ஆகி மீளும் . சிலரது உடல்மொழி கூட நமக்கு தெரிந்தவர்களை திடீரென பெய்யும் அடைமழை போல நினைவுப்படுத்தி செல்லும் . இதெல்லாம் எப்படி நடக்கிறது ? மூளையில் அதற்கான பார்ட்டுகளை பிரம்மா தனது கையாலேயே செய்து வைத்திருக்கிறார் . உணர்வுரீதியான நினைவு , குறுகியகால நினைவு , நீண்டகால நினைவு என மூன்று வகை நினைவுகள் உள்ளன . உணர்வு ரீதியான உணர்வு சில நொடிகள் மட்டும்தான் நீடிக்கும் . குறுகியகால நினைவுக்கு ஆயுள் 20 நொடிகள் . நீண்டகால நினைவுக்கு ஆயுள் அதிகம் . நினைவுகளைப் பொறுத்தவரை அதனை முக்கியம் என்று நீங்கள் கருதினால் அது நிலைக்கும் . இல்லையென்றால் மண்டையில் நிற்காது . நடத்துநர் எச்சிலைத் தொட்டு டிக்கெட் கிழித்தாரா என்பது மூளையில் சேமித்து வைக்கவேண்டிய விஷயமில்லை . ஆனால் அவருக்கு சரியான காசை கொடுத்து டிக்கெட் வாங்கினோமா என்பது முக்கியம் . அதைவிட முக்கியமானது . அவரிடம் சொன்ன இடத்தில் இறங்கி நண்பனை சந்தித்தோமா என்பது நினைவு கொள்ளவேண்ட

புதிய பழக்கங்களை எப்படி கற்றுக்கொள்வது? - மூளையில் பழக்கவழக்கங்களை எப்படி பதிய வைக்கலாம்

படம்
            இலக்கு நோக்கிய பயணம் வாழ்வதற்கான நோக்கம் என்ன என்ற கேள்வியை தனது வாழ்நாளில் ஒருவர் சந்திக்கவேண்டும் . அப்படி சந்திக்காதபோது பிறரின் மீதான அக்கறை ஒருவருக்கு குறைந்துபோய்விடும் என டாக்டர் ரொமான்டிக் தொடரில் டீச்சர் கிம் கூறுவார் . குறிப்பிட்ட நோக்கம் இல்லாத வாழ்க்கை என்பது சலிப்பான மோசமான விஷயங்களுக்குத்தான் அழைத்துச்செல்லும் . முயல் தனது கேரட்டை எடுக்க வழிகாட்டிய புதிர் பலருக்கும் நினைவிருக்கும் . இதுபோல நோக்கங்களை மையமாக வைத்து முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும் . நோக்கங்களை தேடுவதை பயிற்சியாக கொண்டால் அதனை அடையும் வழி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை . பாதை நினைவிருக்கும் என்பதால் முயல் போலவே நமது மூளையும் எளிதாக அதனை அடைந்துவிட முடியும் . தூண்டுதல் பற்பசை விளம்பரத்தை பார்த்துவிட்டு தூண்டுதலில்தான் ஹைப்பர் மார்க்கெட்டை வேட்டையாட கிளம்புகிறோம் . சுத்தமான பற்கள் , நம்பிக்கை அளிக்கும் என ஸ்லோகனை பயன்படுத்துகிறார்கள் . இதுபோல தூண்டுதல்தான் பழக்கத்தை தொடங்க உதவும் . உடற்பயிற்சி , நல்லுணவு , தூயஆடை , ஆளுமை மாற்றங்கள் ஆகியவையும் பிறரைப் பார்த்து காப்பி