இடுகைகள்

டிவி ஆதிக்கம் என்ன செய்யும்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? டிவி நம்மை எப்படி அடிமைப்படுத்துகிறது? டிவியில் வரும் தொடர்கள் நம்மை அடிமைப்படுத்த உளவியல் முறையை கையாள்கின்றன. சாதாரணமாக ஒருவர் வெளியுலகை எதற்கு நாடுகிறார், பல்வேறு உறவுகளுடன் பேசுவதற்குத்தானே. டிவியின் தொடர்களில் ஏராளமான கேரக்டர்களை புகுத்தி நிஜ உலகை மறக்கவைப்பதுதான் டிவி சேனல்களின் வெற்றி. சோபாவில் அமர்ந்தாலே உலகின் அத்தனை குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் உங்களுடன் பேசினால் நிஜ உலகத்தின் தேவை என்ன? டிவி முன் கட்டுண்டு கிடந்தால் நிஜ உலகின் அத்தனை விஷயங்களும் உங்களின் கைவிட்டு போய்விடும். 

பிளாசிபோ மாத்திரைகளின் வரலாறு!

படம்
பிளாசிபோ மனம்! தொண்ணூறுகளிலிருந்து வளர்ந்துவரும் பிளாசிபோ மருந்துகள்(சர்க்கரை மாத்திரைகள்) உளவியல் ரீதியாக நோயாளிகளை குணமாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன. 2005 -15 காலகட்டத்தில் வலிநிவாரணிகளை விட பிளாசிபோ மாத்திரைகள் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றன.  அமெரிக்காவில் 46 சதவிகித மருத்துவர்கள் பிளாசிபோ மாத்திரைகளை நோயாளிகளுக்கு பரிந்துரைத்துள்ளனர்.  நீண்டகால நோய் காரணமாக வலியால் அவதிப்படுபவர்களுக்கு பிளாசிபோ உளவியல்ரீதியாக பயனளிக்கிறது. தற்போது குளூட்டேன் பிரச்னை எழுதுவதால் உடல்நலப்பிரச்னை தீவிரமாவதை நாஸிபோஸ்(Nocebos) என்று குறிப்பிடுகின்றனர்.  பதினான்காம் நூற்றாண்டுல் கத்தோலிக்க தேவாலயத்திலிருந்து பிளாசிபோ வார்த்தை பிறந்தது. இறந்தவர்களின் இறுதிச்சடங்கில் பாடும் பாடல்களிலிருந்து இவ்வார்த்தை உருவானது.  விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்களின் முதல் பிளாசிபோ சோதனையை செய்தார். 1889 ஆம் ஆண்டில் Elixir என்ற மாத்திரையை இங்கிலாந்து மருத்துவரான சார்லஸ் ப்ரௌன் செக்வார்டு தயாரித்து விற்கத்தொடங்கினார்.  1995 ஆம் ஆண்டில் ஹென்றி பீச்சர், தி பவர் ஆஃப் பிளாசிபோ என்ற நூலை பதிப்பித்து உலகெங்கும

வறுத்த பூச்சிகள்தான் எதிர்கால ஸ்நாக்ஸ்!

படம்
நியூஸ் ரூம்! உலகெங்கும் மனிதர்களுக்காக உருவாக்கப்படும் உணவு வீணாக்கப்படும் அளவு 1.43 கோடி டன்கள். சீனாவில் வீணாகும் உணவை சாப்பிட கரப்பான்பூச்சிகளை விவசாயத்துறை வளர்த்துவருகிறது. உணவுக்கழிவை சாப்பிடும் கரப்பான்பூச்சிகளை விலங்குகளுக்கு உணவாக மாற்றமுடியுமாம். விண்வெளி வீரர்களுக்கு ஏற்படும் காயங்களை சரி செய்ய 3டி பிரிண்டிங் நுட்பத்தை பயன்படுத்த ஐரோப்பிய ஏஜன்சி முடிவு செய்துள்ளது. இம்முறையில் செயற்கை தோல், எலும்புகள், உடல் உறுப்புகளை உருவாக்க ஆலோசித்து வருகிறது. ஜெர்மனியின் வால்டர் பிரெண்டல் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் பன்றியின் இதயத்தை பபூன் இன குரங்குகளுக்கு வெற்றிகரமாக பொருத்தி சாதனை செய்திருக்கிறார்கள். ஆறுமாத கண்காணிப்பில் பபூன் குரங்குகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்தவர்கள் மனிதர்களுக்கு இச்சோதனைகளை செய்ய உள்ளனர். இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய சூப்பர் மார்க்கெட் நிறுவனமான செய்ன்பரி, வறுத்த பூச்சிகளை ஸ்நாக்ஸாக விற்கத்தொடங்கியுள்ளது. உலகில் இரண்டு மில்லியன் மக்கள் பூச்சிகளை உணவாக ஏற்றுள்ளனர் என்கிறது பிபிசி இணையதள தகவல்.   

பெஸ்ட் பை லேபிள் தேவையில்லை!

படம்
நியூஸ் ரூம்! அண்மையில் வெளியான ஐ.நா அறிக்கை கார்பன் வெளியீட்டு அளவு அதிகரித்துள்ளதாக அபாய அலாரம் அடித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் 2டிகிரி செல்சியஸாக கார்பனை கட்டுப்படுத்தவேண்டும் என்பதே பாரீஸ் ஒப்பந்த விதி. உலகெங்கும் ஏடிஹெச்டி நோயால் பாதிக்கப்படும் நோயாளிகள் 20 ஆயிரம் பேரை கார்டிஃப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். ஏடிஹெச்டியால் அதிகம் பாதிக்கப்படும் 12 மரபணுக்களை கண்டறிந்துள்ளனர். நோய் தாக்குதலில் மரபணுக்களின் பங்கு 22 சதவிகிதமாக உள்ளது. தானியங்கி கார் நுட்பத்தை வெப் டெவலப்பர்கள் அறிய வசதியாக அமேஸான் நிறுவனம் பொம்மை கார் ஒன்றை உருவாக்கியுள்ளது. அமேஸான் வெப்சர்வீஸ் நிறுவனம் இதனை பொறுப்பேற்று தயாரித்துள்ளது. நிறுவன ஊழியர்களான பந்தயங்களும் உண்டாம். விலை ரூ.399 டாலர்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த டெஸ்கோ சூப்பர் மார்க்கெட், விற்பனையிலுள்ள 116 பழங்கள் காய்கறிகளிலுள்ள பெஸ்ட் பை லேபிள்களை அகற்றியுள்ளது. 69% வாடிக்கையாளர்களிடம் ஆய்வு செய்து இம்முடிவை எடுத்துள்ளது என்கிறது டெஸ்கோ. அமெரிக்காவில் பெஸ்ட் பை லேபிள்களின் மூலம் 40 சதவிகித உணவுப்பொருட்கள் வீணாகின்றன.

ஜெர்மனியின் கவிப்பெண்மணி!

படம்
ஜெர்மனி கவிக்குயில்! ஜெர்மனியிலுள்ள பெர்லினில் பிறந்த நெல்லி சச்ஸ்(1891-1970), புகழ்பெற்ற கவிஞர். இவ்வாண்டு அவரது 125 ஆவது பிறந்ததினம். குடல் புற்றுநோயால் மரணித்த நெல்லி, இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற ஆளுமை. வசதியான யூத தொழிலதிபரின் குடும்ப வாரிசான நெல்லி, நடனம் மற்றும் இலக்கியத்தை விரும்பிக் கற்று பதினேழு வயதில் கவிதைகளை எழுதத் தொடங்கிவிட்டார். 1930 ஆம் ஆண்டு நெல்லியின் தந்தை காலமானார். அப்போது நாஜி படையினரின் தொல்லை அதிகரித்து வந்தது. 1940 ஆம் ஆண்டு ஸ்வீடனின் அரச குடும்பத்தினரின் உதவிபெற்று ஜெர்மனியிலிருந்து நெல்லி மற்றும் அவரது தாய் தப்பிக்க உதவினார் ஸ்வீடன் எழுத்தாளர் செல்மா லாகர்லாஃப். ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமை அடைந்த நெல்லி சில மாதங்களிலேயே ஸ்வீடிஷ் மொழியைக் கற்று கவிதைகளை ஜெர்மனி மொழியில் மொழிபெயர்க்க தொடங்கினார். 75 வயதில் தனது இலக்கியப்பணிகளுக்காக நோபல் பரிசு பெற்ற நெல்லி(இவருடன் இஸ்‌ரேலிய எழுத்தாளர் யோசஃப் அக்னோன்), அறுபது வயதில் தன் முதல் கவிதைத் தொகுப்பை(In den Wohnungen des Todes ) பிரசுரித்தார்.     

உடலில் சிப்கள் பொருத்துவதே நம் வளர்ச்சி

படம்
உடலில் பொருத்தும் சிப்களில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? 2016 ஆம்ஆண்டு ஐரோப்பாவில் நடைபெற்ற CeBit நிகழ்வில் சிப்களை கைகளில் பொருத்துவது பற்றி விவரித்தனர். இந்த சிப்கள் எதிர்காலத்தில் நம் வீட்டுக்கதவை திறக்கும் சாவியாக, பொருட்களை வாங்கும் பணமாக என பல்வேறு பயன்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும். மருத்துவ காரணங்களுக்காக உடலில் சிப்களை பொருத்துவதற்கும் வேலைக்காக பொருத்துவதற்கும் வித்தியாசம் உண்டு அல்லவா? சில வேலைகளை திறம்பட செய்வதற்காக சிப்களை பொருத்துவதில் தவறில்லை. அது உங்கள் வேலைத்திறனை அதிகரிக்கிறது. மூளையில் பொருத்தப்படும் பேஸ்மேக்கர் கருவி திறனை அதிகரிக்கிறது என்றாலும் தற்கொலை எண்ணம், ஆக்ரோஷ உணர்வு போன்ற பக்கவிளைவுகளும் இல்லாமலில்லை. சிப் பொருத்தலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் சட்டங்கள் இன்னும் இயற்றப்படவில்லை. காஸ்மெடிக் ஆபரேஷன்கள் போன்றவைதான் இதுவும் என்பதால் பயப்பட அவசியமில்லை. என்னென்ன நோய்களுக்கு சிப்கள் வரத்தொடங்கியுள்ளன? இதயநோய் மற்றும் சர்க்கரை நோய்களுக்கான சிப்களை வெளிவரத்தொடங்கியுள்ளன. எதிர்காலத்தில் எமர்ஜென்சியின்போது நோயாளியின் உடலிலுள்ள

சிரிக்க சிந்திக்க எல்ஜி நோபல்!

படம்
காமெடி நோபல் பரிசு! 1991 ஆம்ஆண்டு தொடங்கப்பட்டு எல்ஜி நோபல் பரிசு சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அறிவியல் படைப்புகளுக்கானது. நிறுவனர் மார்க் ஆப்ரஹாம்ஸ். மருத்துவம் உடலின் 3 லட்சம் சிற்றறைகளில் உருண்டோடி வந்து சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. இச்செயல்முறையை வேகப்படுத்த மார்க் மிச்செல் மற்றும் டேவிட் வர்ட்டிங்கர் ரோலர் காஸ்டரில் பயணிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளனர். மானுடவியல் சிம்பன்சிகள் மனிதர்களின் பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறது என்பது ஆராய்ச்சி. அப்படியெனில் சிம்பன்சி போல நடந்துகொள்ளும் மனிதர்களும் உண்டு என சீரியஸாக கிச்சு கிச்சு மூட்டுகிறது தாமஸ் பர்சென், கேப்ரியல் அலினா சாசியக் ஆகியோரின் ஆராய்ச்சி. உயிரியல் வைனில் விழுந்து கிடக்கும் ஈ, ஆணா, பெண்ணா என வாசனை வழியாக கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி. வைனில் விழும் பெண் ஈக்கள் பெரோமோன் எனும் மனிதர்கள் கண்டறிய முடியும் வாசனையை வெளியிடுகின்றன என்பதை கண்டறிந்துள்ளது பால் பெக்கர் குழு. வேதியியல் எச்சில் மூலம் அழுக்கான தரைகளை தூய்மையாக்க முடியுமா என்பதே ஆராய்ச்சி. வேதிப்பொருட்களை விட எச்சிலை பயன்படுத்தி துடைத்தால்

பாலஸ்தீனியர்களின் இடங்களின் மேல் அவர்களுக்கு உரிமை கிடையாது

படம்
நேர்காணல் ”பாலஸ்தீனியர்களின் இடங்களை அபகரிப்பது அநீதியானது” ஓமர் ஷாகிர், ஆய்வாளர், மனித உரிமைகள் கண்காணிப்பகம். தமிழில்: ச.அன்பரசு பாலஸ்தீனத்திலுள்ள சட்டத்திற்கு புறம்பான ஆக்கிரமிப்புகளை பட்டியலிட்ட ஏர்பிஎன்பி, புக்கிங்.காம் உள்ளிட்ட இணையதளங்கள் அவற்றை உடனடியாக நீக்கியுள்ளன. இதற்கு முக்கியக் காரணம், மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட Bed and Breakfast on Stolen Land: Tourist Rental Listings in West Bank Settlements ம என்ற அறிக்கை. இது பற்றி ஓமர் ஷாகிப் நம்மிடையே உரையாடினார். நேர்காணலின் சுருக்கமான வடிவம் இது.  வெஸ்ட் பேங்க் பகுதியிலுள்ள இஸ்‌ரேலிய குடியிருப்பு பற்றிய தகவல்களை நீக்க ஏர்பிஎன்பி முடிவெடுத்தது ஏன்? பாலஸ்தீனத்தில் சட்டவிரோதமாக ஏற்பட்ட குடியிருப்புகள் பலவற்றை ஏர்பிஎன்பி தன்தளத்தில் பட்டியலிடப்பட்டிருந்தது. ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் செய்த ஒப்பந்தப்படி அங்கு பாலஸ்தீனியர்கள் விரும்பினாலும் தங்கமுடியாது. சட்டவிரோதமாக பாலஸ்தீனியர்களிடம் பறிக்கப்பட்ட நிலம். இதற்கு முன்பே இவ்விவகாரத்தை அங்குள்ள அமைப்புகள் முன்வைத்தன. பல்வேறு கட்ட ஆராய்ச்சி அறிக்கைகளை ச

உடலில் அரிப்பு ஏற்படுவதன் காரணம் என்ன?

படம்
அரிப்பின் காரணம் தெரியுமா? கொசு கடித்தாலும் சரி, கீழே விழுந்து காயம் ஆனாலும் சரி உடலில் அரிப்பு ஏற்படுகிறது. உடலில் ஏற்படும் ஒட்டுண்ணி தாக்குதலை உடல் தடுக்க அரிப்பை கருவியாக்குகிறது. “மூளை செல்களில் சுரக்கும் செரடோனின் வலி உணர்வை மூளைக்கு கடத்துகிறது. அதேசமயம் உடலில் பூச்சிகளால் அல்லது வேறு விதமாக பாதிப்பு ஏற்படும்போது அது குறித்த கவனத்தை தர அங்கு அரிப்பை தூண்டுகிறது” என்கிறார் வாஷிங்டன் மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சி மைய இயக்குநரான பேராசிரியர் ஸூ ஃபெங் சென். உடலிலுள்ள நோய்தடுப்பு செல்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது அதனை மனிதர்களுக்கு உணர்த்த அரிப்பு ஏற்படும் சிக்னலை நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்துகிறது. அதேசமயம் ஒருமுறை அரிப்பு ஏற்பட்டால் அது தொடர்வது என்ன காரணத்திற்காக குழப்பம் ஏற்படுகிறது. “அரிப்பு ஏற்படுவது என்பது தீவிரமாகாமல் அடுத்தடுத்த இடங்களுக்கும் பரவுகிறது” என்கிறார் பேராசிரியர் சென். கல்லீரல் நோய், அலர்ஜி, எக்சிமா பிரச்னைகளால் ஏற்படும் அரிப்பு என்பது தோலில் காயம் ஏற்படுமளவு நீளும். இதற்கான தீர்வு மருத்துவரை ஆலோசித்து உணவுமுறை, வாழும் சூழலை மாற்றுவது மட்டுமே.  

ஜஹாங்கீருக்கு பேரரசர் ஆகும் ஆசை இருந்தது

படம்
நேர்காணல் பார்வதி சர்மா, எழுத்தாளர் ஜஹாங்கீரை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? சில ஆண்டுகளுக்கு முன்பு பாபர் பற்றிய குழந்தைகள் நூல் ஒன்றை எழுதினேன். பிறகு, நாவல் எழுதுவதற்கான முனைப்பில் இருந்தேன். அப்போது என் நண்பர்கள் வரலாற்று நூல் ஒன்றை எழுதலாமே என பரிந்துரைத்தனர். ஜஹாங்கீரைத் தேர்ந்தெடுத்து எழுத நினைத்தேன்.  வரலாற்றில் ஜஹாங்கீர் பலவீனமான அரசர், குடிகாரராக அறியப்படுகிறார். அவரை சித்தரிப்பதில் என்ன வித சவால்களை சந்தித்தீர்கள்? அக்பரின் மகன் ஜஹாங்கீர். நீங்கள் கூறியதுதான் அவரைப்பற்றி பலரும் அறிந்த செய்தி. வேறு செய்திகளும் அவரைப்பற்றி யாருக்கும் தெரியாது. முகலாயர்கள் கூட அவரைப்பற்றி மறந்துவிட்டார்கள். அக்பரின் நிழலில் வளர்ந்தவருக்கு அடையாளம் கூட ஷாஜகானின் அப்பா என்பதுதான். இரண்டு மன்னர்களுக்கு இடையே ஜஹாங்கீர் காணாமல் போய்விட்டார் என்றுதான் கூறவேண்டும். அவர் மதுவில் மயங்கி கிடந்தார் என்பதில் பொய் இல்லை. ஆனால் பேரரசர் என்ற பதவியின் மேல் பேராசை கொண்டவர் ஜஹாங்கீர். எளிதாக அந்த விஷயம் நடக்கவில்லை என்பதோடு மகனுடன் ஒப்பிடப்படும் அவலத்தையும் அவர் சந்தித்தார்.  மனைவி நூர

மணி என்னப்பா? - மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
மணி என்னப்பா? எல்லாநேரத்திலும் ஒருவர் எப்படி விழிப்பாக இருக்க முடியும். ஆனால் கேள்விகள் வின்சென்டைப் பொறுத்தவரை  பொறுத்தவரை குறைவதில்லை. நண்பருடன் ஜாலியாக டீ சாப்பிடச்சென்றார். டீ டைம் முடிந்தும் பதட்டம் குறையாமல் இருந்தார். ஏன் பாஸ்? எடிட்டர்  ஆறுமணிக்குள் கட்டுரை கேட்டாரா என்ன? என்று கேட்டால் என்னை எரிப்பது போல பார்த்தார்.  கதையின் ஒன்லைன் சிம்பிள், வின்சென்ட் எங்கு சென்றாலும் அவரை மனநலம் பாதித்தவர்கள் மணிகேட்கிறார்களாம்.  என்ன ஒரு வீக்எண்ட் காமெடி என நினைத்தேன். பிளானிங்காக அல்ல; எதார்த்தமாக அவரின் நண்பர் மனோவை கேட்டபோதுதான் விபரீதம் புரிந்தது. அவரும் புதியதாக வாட்ச் வாங்கியிருந்த சமயத்திலும் வின்சென்டிடம் போகும்போது ஒருமுறை வரும்போது ஒருமுறை என மணி கேட்டு மிரட்டியுள்ளனர் பித்தர்கள்.  ஆகா, முன்னோர்கள் சாபம் விட்டுட்டாங்க, தேவனே என்னை திகைக்க வைக்காதீரும் என பைபிள் வாசகங்களை வானத்தை நோக்கி பேச ஆரம்பித்தார் வின்சென்ட். என்ன செய்வது, அவரவர் கர்மம் என விட்டுவிடமுடியுமா? என கட்டிப்பிடித்து தேற்றி ஆல் இஸ் வெல் சொன்னேன். உண்மையில் இது சற்று வித்தியாசமான பிரச்னைதான்.  வாட