இடுகைகள்

தமிழர்கள் தம்மை கண்டறிய ஓர் நூல்! - கீழடி - வரலாற்று பொக்கிஷம்!

படம்
கீழடி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மதுரை மற்றும் சிவகங்கை அருகிலுள்ள எல்லைப்பகுதியான கீழடியில் கிடைத்துள்ள பொருட்கள் பற்றிய விரிவான நூல் இது. தொல்லியல் துறை கமிஷனரான உதயசந்திரன் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் ஊக்கத்துடன் ஆராய்ந்து, பல்வேறு தொன்மைப் பண்பாட்டு எச்சங்களைக் கண்டறிந்துள்ளனர். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ் பிராமி எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன என்பதை நூல் முழுக்க அடிக்கடி சொல்கிறார்கள். இதற்குப் பின்னணியில் அதை மறுப்போரின் குரல்கள் அழுத்தமாக இருக்கலாம். அன்றைக்கு வாழ்ந்த மக்களின் கட்டடங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அணிகலன்கள்,  பானைத் துண்டுகள் என பலவற்றையும் பிரமாதமாக புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். டிரோன் விமானங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று நண்பர் கூறினார். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்தான் தமிழர்கள் கல்வி அறிவு பெற்றார்கள் என்பதை தகர்ப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதை முக்கியமாக கொண்டால் வரலாற்று நூலை நாம் திருத்தி எழுத வேண்டும். அதை நோக்கி நகர்வதற்கு கீழடி ஆய்வு முக்கியமானது. மத்திய அரசின் தலையீட்டால் ஆய்வை மத்திய தொல்லியல்

செக்ஸைப் பற்றிப் பேசுவது தவறு கிடையாது! - சேட்டன் பகத்

படம்
pixabay.com செக்ஸைப் பற்றி பேசுவது தவறு அல்ல! நன்றாக நினைவுபடுத்திப் பாருங்கள். உங்களில் எத்தனைபேர் பகிரங்கமாக செக்ஸைப் பற்றி பேசியிருக்கிறீர்கள். அல்லது அதன் பிரச்னைகளைப் பற்றிய ஆலோசனைகளைக் கேட்டிருக்கிறீர்கள். எனக்கு தெரிந்து இந்தியாவில் அதுபோன்ற நிகழ்வுகள் நடக்கவேயில்லை. நான் அண்மையில் நூல் ஒன்றில் ஒரு சம்பவத்தை படித்தேன். திருமணமான தம்பதிகளின் முதலிரவு அது. அன்று ஆண் சொர்க்க கதவை எவ்வளவோ முட்டிப் பார்த்ததும் திறக்கவில்லை. பெண்ணுக்கும் ஒன்றும் புரியவில்லை. அடுத்த வாரம் செக்ஸாலஜிஸ்டை அணுகுகிறார்கள். அவரிடம் பேசியபோதுதான் கணவருக்கு தெரிந்திருக்கிறது. தான் சாவி போட்டு திறக்கவேண்டிய பூட்டு தான் முயற்சித்த கதவுக்கு கீழிறக்கிறது என்று. அவர் பெண்ணின் சிறுநீர் துவாரத்தில் தன் ஆண்குறியை திணிக்க முயல, பெண் வலியில் அலறி துயரமான தேனிலவாக முடிந்திருக்கிறது அவர்களின் கல்யாண ராத்திரி. pixabay.com பெண்களைத் திரும்பி பார்க்காமல் மண்ணைப் பார்த்து நடந்து கற்பை காப்பாற்றி, கல்யாண பந்தத்தில் நுழைந்தால் இப்படித்தான். காரணம், வன்முறையை வெளிப்படையாக காட்டத்தெரிந்த நமக்கு காதலை, அன்பை, க

கூல்ட்ரிங்க்ஸிலுள்ள கார்பன் டை ஆக்சைடு சூழலைப் பாதிக்குமா?

படம்
மிஸ்டர் ரோனி குளிர்பானங்களில் கார்பனைப் பயன்படுத்துகிறார்கள். இதன்விளைவாக, சூழலில் கார்பன் அளவு அதிகரிக்குமா? இதற்கான பதிலை நான் நாமக்கல்லில் தயாரித்த டெய்லி - ஆரஞ்சு சோடாவை ஒரு சிப் அடித்தபடிதான் எழுதுகிறேன். நண்பர்களே, குளிர்பானத் தயாரிப்பு காரணமாக வெளியிடப்படும் கார்பன் வெளியீடு வேறு. அதனைக் குடித்துவிட்டு ஏப்பம் விடும்போது வரும் கார்பன் அளவீடு வேறு. மனிதர்கள் சராசரியாக பயன்படுத்தும் பொருட்களின் அளவுப்படி கார்பன் அளவு மதிப்பிடப்படுகிறது. நீங்கள் கூறும் கார்பன் அளவு என்பது தொழில்துறையில் அளவிடுவார்கள். மற்றபடி குறிப்பிட்ட பயன்பாட்டால் எவ்வளவு என அளவிடுவதுதான் சரியான அளவு. கார்பன் டை ஆக்சைடு குளிர்பானத்தில் மிக குறைவான அளவே இருக்கும். அதனால் கார்பன் அதிகரிப்பு என்பது மேலோட்டமாக பிரச்னையை புரிந்துகொள்வது என்றே எனக்கு படுகிறது. குளிர்பான பாட்டிலை குடித்துவிட்டு தீவைத்து எரிக்காமல் அதனை முறைப்படி மறுசுழற்சிக்கு அனுப்புங்கள். அதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும். கார்பனின் அளவையும் நாம் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியும். நன்றி - பிபிசி

முட்டைக்குள் உள்ள குஞ்சுகள் எப்படி சுவாசிக்கின்றன?

படம்
மிஸ்டர் ரோனி எப்படி பறவைகளின் குஞ்சுகள் முட்டைக்குள் மூச்சு விடுகின்றன? அதற்கு காரணம் முட்டைக்குள் இருக்கும் திசுப்பை அமைப்புதான். மேல்திறப்பு, கீழ் திறப்பு என இரண்டு விதமாக முட்டைக்குள் மெல்லிய இழை அமைப்புகளாக இந்த அமைப்பு அமைந்து குஞ்சுகளைப் பாதுகாக்கிறது. அத்தனை விஷயங்களையும் நான் மொழிபெயர்த்து எழுத முடியாது. மேலேயுள்ள படங்களை அவ்வப்போது பார்த்து புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே.... இரண்டாம் அடுக்கு இழை அமைப்பு முக்கியமானது. இதன் உதவியால் ஆக்சிஜனை மெல்லிய நுண்துளைகள் வழியா குஞ்சுகள் சுவாசிக்கின்றன. கார்பன் டை ஆக்சைடை இவை வெளியிடுவது மற்றொரு வழியாக... எனவே குஞ்சுகள் பாதிப்பின்றி உயிரோடு இருக்கின்றன. நன்றி - பிபிசி

அனைத்து விஷயங்களும் நம் நினைவில் இருந்தால்....

படம்
டாக்டர் எக்ஸ் கடையில் பொருட்களை வாங்க போகிறோம். கடைக்காரர் என்ன என்று கண்களை நிமிர்த்து பார்க்கும்போது சொல்ல முடியாமல் போகிறது. மனைவி படித்துப் படித்து சொன்ன பொருட்கள்தான். ஆனால் ஏதோ சிக்கலில் இஞ்சி, பூண்டு, கொத்தமல்லித் தூள், கறிவேப்பிலை மறந்துபோய்விடுகிறது. மனைவி தாளித்து கொட்டி அர்ச்சனை செய்தாலும் வயசாகுதில்ல என்று சமாளிக்கலாம். ஆனால் உண்மையில் மறப்பது என்றால் என்ன நம் மூளையின் திறன் குறைவு என்று பொருள் கொள்ளலாமா? பதில் - ஆலிவர் ஹார்ட், மெக்ஹில் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர்.  இல்லை. மறதி, ஒன்றை முழுக்க நினைவிலிருந்து அழிப்பது என்பது குறைபாடு அல்ல. அது இயல்பாக இயற்கையாக மூளையில் நடப்பது. நான் செய்து வரும் ஆராய்ச்சியில் இதனைக் கண்டுபிடித்துள்ளேன். நாம் எப்படி சில குறிப்பிட்ட விஷயங்களை படிக்கிறோம். அதனை மீட்டிங்கில், ஐடியா சொல்லுவதற்காக மனதில் குறிப்பிட்ட வித த்தில் கீவேர்டுகள் போட்டு சேமித்து இருப்போம். குறிப்பிட்ட விஷயங்களை பேசும்போது உடனே மூளைக்கு சிக்னல் கிடைக்க அந்த விஷயங்களை எடுத்துப் பேசுவோம். இதேபோல நாம் சேர்த்து வைத்த நினைவுகளை அழிக்கும் செயல்பாடுகளும் தொட

கேட்ஜெட்ஸை மழையில் காப்பாற்றுவது எப்படி?

படம்
மிஸ்டர் ரோனி மழைநாட்களில் என்னையும் கேட்ஜெட்ஸையும் எப்படி பாதுகாப்பது? மான் மார்க் குடைகளை பாத்திரக் கடைகளில் கேட்டு வாங்குங்கள். பட்டன்களை நன்கு அழுத்திப்  பார்த்துவிட்டு காசு கொடுங்கள். இதுதான் அடிப்படையானது. மற்றபடி ரெயின்கோட், வாட்டர் ப்ரூஃப் ஷூக்கள் போன்றதெல்லாம் உங்கள் பட்ஜெட் சம்பந்தப்பட்ட விஷயங்கள். எது சாத்தியமோ அதனை வாங்குங்கள். இவையெல்லாம் மழை, நீர் இறைத்துச் செல்லும் கார்கள் ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டு வாங்க வேண்டும். நன்றி - டி3 இதழ்

டெக் புதுசு! - மார்க்கெட்டில் புது டெக் ஐட்டங்கள்!

படம்
ஆப்பிள் வாட்ச் 5 ரெட்டினா திரை பார்க்க ரம்மியமாக இருக்கிறது. இதில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சென்சார்களின் உதவியால் பேட்டரி  பதினெட்டு மணிநேரம் தாங்குகிறது. எங்கு இருக்கிறோம், அந்த இடத்தின் அட்ச தீர்க்க ரேகைகள் என்ன ஓடுகின்றது வரையிலும் பார்க்க காம்பஸ் உள்ளது. கீழே விழும் அபாயத்தைச் சொல்லும் அம்சமும் இதில் உள்ளது. இசை காதலர்களுக்கு இந்த வாட்ச் ரொம்ப பிடிக்கும். இசையின் தரம் அப்படி. விலை  40 ஆயிரம் ஹெச்டிசி வைவ் காஸ்மோஸ் உலகம் முழுக்கவே ஏஆர், விஆர் என சென்றுகொண்டிருக்க ஹெச்டிசி அதில் அப்டேட்டாக முன்னணியில் உள்ளது.  ஆறு கேமராக்களைக் கொண்ட விஆர் செட் இது. உங்களிடம் கம்ப்யூட்டர் கேம்ஸ்களை தலைகீழாக படுத்துக்கொண்டு விளையாடும் திறன் இருந்தால் இதனை தேர்ந்தெடுக்கலாம். விலை - எப்படிக் கேட்டாலும் சொல்லவில்லை. ஆசுஸ் ரோக் போன் 2 கம்ப்யூட்டர் விளையாட்டுகளை போனில் விளையாடலாம். கம்பெனி அப்படித்தான் சொல்லுகிறது. 12 ஜிபி ராம், 6.59 இன்ச் திரை, க்வால்காம் ஸ்னாப்டிராகன்  புரோசசர் 855, 6000 எம்ஏஹெச் பேட்டரி  என அசத்துகிறது. விலை 37,000 ஐபால் இயர்வியர் பேஸ் ப

மின் வாகனங்களுக்கு அரசு உதவி! - நாம் என்ன செய்யவேண்டும் ?

படம்
  மின் வாகனங்களை வாங்குவதற்கு இந்திய அரசு 1.5 லட்சம் வரை வரிவிலக்கு அளிப்பதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளது  பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களை நம்பி இருப்பது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல என்ற வகையில் இதனை வரவேற்கலாம். தற்போது சந்தையிலுள்ள நிறுவனங்கள் இதனை எதிர்கொள்ள மறுத்தாலும் பின்னாளில் நிலை மாறும். அரசு பல்வேறு சலுகைகளை அளிக்கும்போது, மின் வாகனங்கள் சந்தைக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்திய அரசு, ஜிஎஸ்டி வரியிலிருந்தும் 5 சதவீதம் விலக்கு அளித்துள்ளது சிறப்பம்சம்தான். தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களோடு ஒப்பிட்டால், மின் வாகனங்களுக்கு தவணையில் வாங்கும் வசதிகள் என்பது குறைவுதான். ஆனால் அரசின் மானியங்கள் வழங்கப்பட்டால் மின் வாகனங்களை வாங்கும் விலை,  மக்களுக்கு பெரிய சுமையாக இருக்காது. அதேசமயம், மின் வாகனச்சந்தையில் இந்தியா இன்னும் தொடக்க நிலையில்தான் இருக்கிறது. வாகனச்சந்தையில் வேலை இழப்புகளைத் தடுக்க மின் வாகன பாகங்களை இந்தியாவிலேயே தயாரிப்பது ஒரே தீர்வு. இல்லையெனில் பேட்டரி, பாகங்கள் உள்ளிட்டவற்றை சீனாவிலிருந்து இறக்குமதி செய்

அபாகஸ் மூலம் கணிதம் வளருமா? - ஜப்பானில் புதிய முயற்சி!

படம்
கணிதத்தில் வெல்ல அபாகஸ் பயிற்சி! ஜப்பான் மாணவர்கள் தேசிய அளவிலான கணிதப்போட்டிகளில் வெற்றிபெற அபாகஸ் பயிற்சியை செய்து வருகின்றனர். உலகம் முழுக்கவே கணிதம் பற்றிய அறிவைப் பெறுவதில் ஆர்வமாக உள்ளனர். அதேசமயம் மரபான பல்வேறு கணிதப்பயிற்சிகளை கைவிட்டு வருகின்றனர். அதில் ஒன்றுதான் அபாகஸ். இதனை இன்னும் ஜப்பான் மாணவர்கள் கைவிடாமல் பயின்று வருகின்றனர். அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற கணிதப்போட்டியில் அபாகஸ் பயிற்சியின் திறன் உணரப்பட்டது. போட்டியில் கேட்கப்பட்ட கணிதக்கேள்வி ஒன்றுக்கு விடை ட்ரில்லியனில் வந்தது. இதனைக் கணினி, கால்குலேட்டர் எனத் தேடி எழுதுவதில்  தடுமாற்றம் இருந்தது. அப்போது அபாகஸ் பயிற்சி பெற்ற மாணவர்கள் எளிதாக விடை கண்டுபிடித்து எழுதினர்.  ஜப்பானில் 1970 ஆம்ஆண்டு கற்றுத்தரப்பட்ட அடிப்படை கணிதப் பயிற்சி அபாகஸ். பின்னர் அரசுப்பள்ளி பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. இன்று தனியார் பள்ளிகளில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனைக் கற்றுவருகின்றனர். கூடுதலாக, கணிதத் திறனுக்கான பயிற்சியாக அபாகஸ் மாறிவிட்டது. ஜப்பானில் அபாகஸை சோரபன் (Soroban) என்று குறிப்பிடுகின

செல்போனில் அதிகரிக்கும் சூதாட்ட மோகம்! - இங்கிலாந்து மருத்துவமனையின் தீர்வு!

படம்
அதிகரிக்கும் அடிமைத்தனம்! செய்தி: ஸ்மார்ட்போன்களின் வழியாக திரைப்படங்கள், விளையாட்டு, டிவி தொடர்கள் ஆகியவற்றின் மீதான அடிமைத்தனம் அதிகரித்துள்ளதாக இங்கிலாந்து அரசின் ஆய்வுகள் கூறுகின்றன. இன்று பேருந்துகளிலும், கார்களிலும் செல்பவர்கள் அனைவருமே போனில் ஏதாவது செய்தியைப் பார்த்துக்கொண்டே செல்கிறார்கள். அது திரைப்படமாக, விளையாட்டாக அல்லது சமூகவலைத்தள பதிவாக கூட இருக்கலாம்.  மது, புகையிலை போன்ற அடிமைத்தனத்தை இவை ஏற்படுத்துகின்றன என்று உளவியலாளர்கள் கூறி வருகின்றனர்.  இங்கிலாந்து அரசு அமைப்பான கேம்ப்ளிங் கமிஷன் 2017 ஆம் ஆண்டு ஆய்வொன்றைச் செய்தது. இதில் 4 லட்சம் பேர்களுக்கு மேல் ஆப் வழியாக சூதாட்ட விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். தற்போது இளைஞர்களிடையே  இணையம் சார்ந்து அடிமைத்தனம் அதிகரித்துள்ளது. “அடிமைத்தனத்தைப் பழக்கம், பொருட்களை தொடர்ச்சியாக கவனமின்றி பயன்படுத்துவது என்றுகூட கூறலாம்” என்கிறார் அடிக்சன் எனும் பத்திரிகையின் ஆசிரியரும், புகையிலை ஆராய்ச்சியாளருமான ராபர்ட் வெஸ்ட். இணையம் சார்ந்த நெட்ஃபிளிக்ஸ் அமேசான் நிகழ்ச்சிகளைப் பார்த்தாலும் தினசரி நடவடிக்கைகளை அவை பாதிக்காத

வலியில்லாத அழகு சிகிச்சை வருகிறது!- மூலக்கூறு சிகிச்சை முறை!

படம்
வலியில்லாத அழகு சிகிச்சை! கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் வலியற்ற முக அழகு சிகிச்சை முறையான மூலக்கூறு சிகிச்சை முறை கண்டறியப்பட்டுள்ளது. நோய்க்கு இணையாக மக்கள் அறுவை சிகிச்சைக்கு பயப்படுகின்றனர். காரணம், இதிலுள்ள வலி, ரத்தப்போக்கு, தையல் ஆகியவைதான்.  தற்போது அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் வலியற்ற அழகு சிகிச்சை முறையை கண்டறிந்துள்ளனர். இதற்கு மோலிக்குலர் சர்ஜரி (molecular Surgery) என்று பெயர். உடலிலுள்ள திசுக்களின் வடிவத்தை மாற்றிச்செய்யும் இச்சிகிச்சை, அழகு சார்ந்த விஷயங்களுக்கானது. ”எளிமையாக அனஸ்தீசியா கொடுத்து ஐந்து  நிமிடங்களில் இந்த மூலக்கூறு சிகிச்சையைச் செய்து முடிக்கலாம். இதன் செலவும் மிக குறைவானது” என்கிறார் மருத்துவர் மைக்கேல் ஹில். இம்முறையில் காது, மூக்கு ஆகியவற்றை சீர் செய்யலாம். சிறிய ஊசிகள், மின்சாரம், 3டி வடிவ பொருட்களை இதில் பயன்படுத்துகின்றனர். இதில் முகத்திலுள்ள குருத்தெலும்பில் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை செலுத்தி வளையும் தன்மைக்கு மாற்றுகின்றனர். பின்னர், அதனைத் தேவைக்கேற்ப மாற்றி அமைக்கின்றனர். திசுக்களை அழிக்காமல் குருத்தெலும்பை வளைக