கொரோனா பாதிப்பிலும் ஏழைகளுக்கு உதவும் நாயகிகள்!
pixabay கொரோனா நாயகிகள் தூலிகா குப்தா, ஜெய்ப்பூர் கோவிட் -19 நோய்த்தொற்று வேகமாக பரவிவருகிறது. அரசைப் பொறுத்தவரை விளக்கேற்றுவது, கைதட்டுவது இக்காலத்தை விழா போலவே கொண்டாடுகிறது. ஆனால் சாதாரண தினக்கூலி மனிதர்களுக்கு இதெல்லாம் உதவாது. பசியில் காதடைத்து போய் உட்கார்ந்திருப்பவர்களுக்கு கைதட்டி பாடுவது, நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றும் எண்ணம் இருக்குமா என்று தெரியவில்லை. இதற்கு எதிராக தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்குச் செய்து வருகிறார்கள். எந்த பேரழிவிலும் தன்னார்வமாக செயல்பட்டு மக்களுக்கு உதவும் நல்லுள்ளங்கள் உண்டு. அவர்களைப் பார்ப்போம். இந்திய கைவினைப் பொருட்கள் வடிவமைப்ப நிறுவனத்தைச் சேர்ந்த தூலிகா குப்தா, தனது துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு நெருக்கடியான இக்காலத்தில் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறார். ஊரடங்கு காலத்தில் இடம்பெயர்ந்த தொழிலாளர்களும, எங்களது துறைசார்ந்த கைவினைஞர்களும் உணவின்றி, பணமின்றி தடுமாறியதை டிவி செய்தி வழியாக பார்த்தேன். எனவே அவர்களுக்கு முடிந்தவரை உதவ முடிவெடுத்தேன் என்கிறார். இவர் தனது தொடர்புகளைப் பயன்படுத்தி, கைவினைக் கலைஞர்களுக்கு முக கவசம்