இடுகைகள்

தலித் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாதாளச்சாக்கடைகளின் மூடி வட்டமாக இருப்பது ஏன்? பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
                  கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசிப்பது ஆபத்தானதா ? கார்பன் உள்ள பொருட்களை எரித்தால் உருவாகும் வாயுவின் பெயர்தான் கார்பன் மோனாக்சைடு . மோசமான வாயுக்கள் சுவாசிக்க தடுமாற்றம் தரும் வாசம் வரும் . கார்பன்மோனாக்சைடை ஒருவர் சுவாசிக்கும்போது அதனை அறிய முடியாது . காரணம் , இதற்கு நிறம் . வாசனை கிடையாது . இந்த வாயுவால் நிறைய மக்கள் அமெரிக்காவில் இறந்துள்ளனர் . அமெரிக்காவில் இந்த வாயுவை தற்செயலாக சுவாசித்து நிறைய மக்கள் இறப்பை எதிர்கொண்டுள்ளனர் . அமெரிக்காவில் இப்படி ஆண்டுதோறும் 170 பேர் இறந்துள்ளனர் . சிலர் இதனை தற்கொலைக்கும் பயன்படுத்துகின்றனர் . இன்று தயாரிக்கப்படும் கார்கள் பலவும் 70 சதவீதம் கார்பன் மோனாக்சைடை குறைத்து வெளியிடுகின்றன . மரங்களை வெட்டி எரிப்பது , எரிவாயுவில் இயங்கும் ஜெனரேட்டர்கள் ஆகியவை கார்பன் மோனாக்சைடுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன . ஒருவர் இந்த வாயுவை சுவாசிக்கும்போது அவருக்கு சுவாசிப்பது கடுமையாகும் . ரத்தவோட்டத்தில் ஆக்சிஜனை விட எளிதாக இந்த வாயு கலப்பதால் , உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறையாகும் . இதன் விளைவாக , குமட்டல் , தலைவலி ஏற்

தலித் அரசு பணியாளர் தனது மகனை ஜீனியஸ் ஆக்க நடத்தும் சீக்ரெட் திட்டம்! சீரியஸ்மேன் - சுதீர் மிஸ்ரா

படம்
            சீரியஸ்மேன் சுதீர் மிஸ்ரா Director: Sudhir Mishra Writers: Niren Bhatt (additional screenplay), Manu Joseph (Based on the book by படம் பொறுப்புள்ள மனிதர்கள் என்ற நாவலைத் தழுவியது. இதனை மனுஜோசப் எழுதியுள்ளார். அறிவியல் கழகங்களில் பிராமணர்கள் எப்படி தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு பதவிகளை அடைய முயல்கிறார்கள் என்பது நாவலில் ஒரு கதை. மற்றொன்று அய்யன் மணி என்ற உதவியாளர் தனது மகனை ஜீனியஸ் ஆக நிரூபிக்க என்னென்ன தகிடுதத்த வேலைகளை செய்கிறார் என்பது மற்றொரு கதை.  படத்தில் அய்யன் மணி, அவரது மகனை  எப்படி ஜீனியஸாக மாற்றுகிறார், அதற்கு அவர் செய்யும் வேலைகள் என்ன, அதன் பாதிப்பு, ஆகியவற்றை சிறப்பாக விவரித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தியில் சீரியஸ்மென் டப் செய்யப்பட்டுள்ளது. தமிழில் படத்தைப் பார்க்கும்போது, அய்யன் மணி ஓஜாவை திருமணம் செய்துகொண்டுள்ளது கூறப்படுகிறது. சப்டைட்டிலில் அவர் தமிழ்ப்பெண் என வருகிறது. ஆனால் தமிழ் டப்பில் அவர் தெலுங்குப் பெண்ணாக காட்டப்படுகிறார். ஹோட்டலில் நீச்சல் குளத்தருகில் பிரசவக்காட்சி இதற்கு உதாரணம். தன்னைச்சுற்றி என்ன

இளம்பெண் கொல்லப்பட்டது சாதிரீதியான கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சிதான்! பிரசாந்த் குமார், ஏடிஜிபி, உ.பி

படம்
                வல்லுறவு நடக்கவில்லை! பிரசாந்த் குமார். ஏடிஜிபி, உத்தரப்பிரதேசம் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு எதற்கு இந்தளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? செப்.14க்குப் பிறகு உளவுத்துறை தகவல்படி, சாதி மோதல்கள் நடைபெறுவதற்கான முயற்சிகள் நடைபெறவிருக்கின்றன என்ற தகவல் கிடைத்தது. எனவே அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு வரும் மிரட்டல்களைத் தடுக்கவும், பாதுகாப்பு அளிக்கவும் காவல்துறையை பயன்படுத்தினோம். நாங்கள் பாதுகாப்பு வழங்காதபோது, பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தாலும் காவல்துறைதான் பொறுப்பு என்பார்கள். உள்ளூர் காவல்துறை, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது கடமைதான். இறந்துபோன பெண்ணுக்கு பாலியல் வல்லுறவு நடந்திருக்கும் என்கிறீர்களா? இன்னும் வழக்கு பற்றிய முறையான விஷயங்களை பதிவு செய்யவில்லை. சிபிஐ விசாரணை எதற்கு? வழக்கு வெளிப்படையாக நடக்கவேண்டும் என்பதற்காகத்தான். இதன் காரணமாக மாநில காவல்துறை, சிபிஐயோடு இணைந்து செயல்படவிருக்கிறது. சாதி மோதல்களை ஏற்படுத்த முனைந்த குழுவைக் கண்டுபிடித்துவிட்டீர்களா? இந்த சதியை கண்டுபிடிக்க நாங்கள் விசாரணை செய்து வரு

தலித்துகள் கழுதையில் ஏறி வந்தால் உயர்சாதியினர் சந்தோஷப்படுகிறார்கள்! - சந்திரா பான் பிரசாத்

படம்
    சந்திரா பான் பிரசாத் சந்திரா பான் பிரசாத் சமூக பொருளாதார செயல்பாட்டாளர், எழுத்தாளர். ஹாத்ராவில் தலித் பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு வல்லுறவு செய்யப்பட்டு இறந்துள்ளார். தலித்துகள் சார்ந்து இதுபோல நடைபெறும் கொடுமைகள் இன்றுவரை குறையவில்லை. இதற்கு என்ன காரணம்? இந்தியாவில் ஒரு சமூக அவசரநிலை நிலவுகிறது. 1932ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தம் டாக்டர் அம்பேத்கர், காந்தி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டது. இதன்பிறகு தலித்துகள் மெல்ல மையநீரோட்டத்திற்கு வந்தனர். பிறகு மெல்ல தலித்துகள் பிரச்னை மீது இரக்கம் கொள்ளத் தொடங்கினர். இப்போது அவ ர்கள் மீது வன்முறை நடத்தப்படுவது புதிய நாகரிகமாகிவிட்டது. 1970களில் இருந்த தீண்டாமை என்பது தலித்துகளை கொல்வதல்ல. வேட்டி அணியக்கூடாது, உயர்சாதிக்கார ர்கள் வந்தால் சைக்கிளில் வந்தால் கூட கீழே இறங்கி நடக்கவேண்டும், யாரையேனும் அவர்களது பெயர் சொல்லி கூப்பிட்டால் அவர்களை அடிப்பது ஆகியன அன்று நடந்தது. ஆனால்  இன்று ஹாத்ரா, லகிம்பூரில் நடப்பது போல கற்பழிக்கப்பட்டு கொடூரமாக சிதைக்கப்ட்டு கொல்லப்படவில்லை. ஆனால் அன்றும் கற்பழிப்புகள் நடந்தன. ஆனால் அவர்கள் யாரும் கொல்லப்படுவதில்லை. அத

பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல் - ராஜஸ்தான் முதலிடம்

படம்
கடந்த பத்தாண்டுகளில் பட்டியலினத்தவர்கள் மீது அதிகளவு தாக்குதல்கள் நடத்தப்பட்ட விவரம் வெளியாகியுள்ளது. கரகோஷத்துடன் முதல் இடத்தை ராஜஸ்தான் மாநிலம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 8,591 வழக்குகள் எஸ்சி, எஸ்டி இனத்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்காக பதியப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு இத்தாக்குதல்களின் அளவு 8,451ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நாகர் மாவட்டத்தில் நடைபெற்ற தலித்துகள் மீதான தாக்குதலில் ஒருவரின் ஆசனவாயில் ஸ்க்ரூ ட்ரைவரை செருகியுள்ளனர். இவர்கள் திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு இப்படி ஒரு குரூரமான தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சி செய்த முந்தைய காலத்திலும் தலித்துகள் மீதான தாக்குதல் குறையவில்லை. 2018ஆம் ஆண்டைவிட 2019ஆம் ஆண்டில் 50.67 சதவீதம் பட்டியலினத்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. 2018 இல் காவல்துறை பதிவுகள்படி 5,702 வழக்குகள்தான் பதிவாகியுள்ளன. இதில் 47 சதவீத தாக்குதல்கள் தலித்துகள் மீது நடத்தப்பட்டுள்ளது. குற்றச்சம்பவங்கள் நடக்கும் வேகமும் 31 சதவீதம் அதிகரித்துள்ளது. குற்றவழக்குகள் அதிகரிப்புக்கு முக்கியக்காரணம், காவல்நிலையத்திற்கு

சமூகநீதி பேசும் சமதர்ம நாயகர்கள்! - அன்புள்ள அப்பாவுக்கு..!

படம்
pexels 5 அன்புள்ள அப்பாவுக்கு, நலமாக இருக்கிறீர்களா? ராமகிருஷ்ண மட மருத்துவமனையில் சில சோதனைகளை செய்ய வேண்டியுள்ளது. மஞ்சள் காமாலைக்கான சிறப்பு சிகிச்சை தேவையா இல்லையா என்பதை முடிவு செய்ய இந்த சோதனைகள் தேவை என்று சொல்கிறார்கள். முத்தாரம் வார இதழ் இனி நம் வீட்டிற்கு வரும். உங்கள் பெயரிலேயே இதழ் வரும். சம்பளம் 4ஆம் தேதி கிடைத்தது. உள்ளாடைகள், பழங்கள் வாங்கினேன். அறைக்கும், அலுவலகத்திற்குமான தொலைவு பிரச்னையாகவே இருக்கிறது. மயிலாப்பூரில் அறை கிடைக்குமா என்று பார்க்கவேண்டும். குங்குமத்தில் நான் ஏதும் எழுதவில்லை. அப்படி எழுதினால் அந்த இதழை நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன். தலித் முரசு பணம் வாங்குவதற்கு பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. தலித்துகளே கூட குறிப்பிட்ட நிலைக்கு வந்ததும்,  அடுத்தவர்களை சுரண்டி பிராமணர்களைப் போலவே மாறிவிடுகிறார்கள். பேசுவது சமூகநீதி என்றாலும் அவர்களின் சிந்தனைகள், பேச்சு எல்லாவற்றிலும் சாக்கடை நாற்றம் அடிக்கிறது. ச.அன்பரசு 6.3.16

யாருடைய சிபாரிசு நீங்க? - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
3 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம். நலந்தானே? தினகரனில் இணைந்துவிட்டேன். இங்கு சம்பளக்கணக்கு தொடங்குவதற்கான பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டன. தலித் முரசு இதழில் வரவேண்டிய பாக்கி 2.796 ரூபாய் உள்ளது. இதற்காக அவர்களது அலுவலகம் சென்றேன். நீங்கள் எங்கள் கணினிகளை உங்களது உபயோகத்திற்காக தவறாக பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்றார் தலித் முரசு புனித பாண்டியன். இதைக் கண்டுபிடித்து சொன்னதற்காக நெடுஞ்செழியன் பெண் உட்பட பலரது பெயரையும் சொன்னார். நான் அப்படியெல்லாம் செய்யவில்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னேன். கொடுத்த  பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டேன். இவர்களுக்கு வேலை ஆகவேண்டுமென்றால், என்ன சாதி என்பது வரை கேட்டுக்கொண்டு இளிப்பார்கள். தேவையில்லை என்றால் மயிரே என்று மதித்துப் பேசுவது. சமூகநீதியே இவர்களின் கரங்களில்தான் இருக்கிறது. என்னை கோபப்படுத்திப் பார்க்க முயன்றார்கள். நான் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்த வில்லை. இந்த யுக்தியை எல்லாம் வேலை செய்த காலத்திலேயே பார்த்தாகிவிட்டது. முத்தாரத்தில் என்னைப் பார்த்து பேசுகிற பலரும், யாருடைய சிபாரிசு என குறுஞ்சிரிப்புடன் கேட்கிறார

முதல் மனிதர்களை சந்திப்போம்!

படம்
இந்தியாவில் அனைத்து விஷயங்களும் சாதி, மதம், நிறம், மொழி சார்ந்தே தீர்மானிக்கப்படுகிறது. காரணம், நிலப்பிரபுத்துவ மனநிலை, பாரம்பரியம். இதையெல்லாம் தாண்டி சமத்துவம், சகோதரத்துவம், சாதனைகளை நிறைய இந்தியர்கள் இந்தியாவிலும் , இந்தியா கடந்தும் செய்கிறார்கள். அப்படி முதன்முதலாக சாதித்த மனிதர்களை சந்திப்போம் வாருங்கள். கரிமா அரோரா -33 மிச்சலின் ஸ்டார் அங்கீகாரம் பெற்ற முதல் இந்தியப்பெண். இந்தியாவில் மருத்துவர், பொறியாளர் ஆக காட்டும் ஆர்வத்தை பிற துறைகளில் காட்டுவதில்லை. அதிலும் சமையலை அவர்கள் அவமானகரமான ஒன்றாக கருதுகிறார்கள். நான் இத்துறையில் சாதித்துள்ளேன். ஆனால் இத்துறையில் நானே முதலாகவும் கடைசியாகவும் இருக்கமாட்டேன் என்பது உறுதி என தெம்பாக பேசுகிறார் கரிமா. பாங்காங்கில் கா எனும் இந்திய உணவகத்தைத் தொடங்கினார். தொடங்கி பதினெட்டு மாதங்களில் மிச்சலின் ஸ்டார் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.  தற்போது வணிகநோக்கமின்றி, பழங்குடிகளின் உணவு வகைகளை சமைத்து மக்களுக்கு பரிமாற உள்ளார். இந்திய உணவுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்வதே இவரின் இலக்கு. அருணிமா சின்கா -30 எவரெஸ்ட் ஏறிய மாற்றுத்

ஸ்வச் பாரத் என்பது மாயக்கனவு! - பெசவாடா வில்சன்

படம்
பெசவாடா வில்சன் ஸ்வச் பாரத் கூட கழிவறைகளை கட்டுவதாகவே இருக்கிறது. ஆனால் அதனை இன்றுவரை சுத்தம் செய்பவர்களைப் பற்றி ஏதும் பேசுவதில்லையே? சாதியும் சுத்தமும் இந்தியாவில் பின்னிப்பிணைந்துள்ளது. எனவேதான் கழிவறைகளை கட்டுபவர்கள், அதனை சுத்தம் செய்பவர்களை பற்றி மறந்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றி பேசக்கூட அவர்கள் தயாராக இல்லை. அரசு இதனைக் கவனத்தில் கொள்வது தலித்துகளின் மரணங்களைக் குறைக்கும். அரசு, மனிதக்கழிவு அள்ளுபவர்கள் என்று 54,130 பேர்களை அடையாளம் கண்டிருக்கிறதே? அரசு கூறும் கணக்கு உலர் கழிவறைகளைச் சுத்தம் செய்பவர்களை மட்டுமே. பாதாளச்சாக்கடை மற்றும் கழிவுநீர் டேங்குகளில் இறங்கி சுத்தப்படுத்துபவர்களை அரசு இன்றுவரையும் கண்டுகொள்வதில்லை. உச்சநீதிமன்றம் கூறும் கருத்துகளை அரசு பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. வெறும் கருத்தாக சொல்வதை விட்டு குறிப்பிட்ட காலக்கெடு விதித்தால் நன்றாக இருக்கும். சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் உயிர்களும் பலியாகாமல் இருக்கும். உண்மையில் எங்களுக்குத் தேவை நீதிமன்றங்களின் அனுதாபம் அல்ல. உறுதியான உயிர்களின் பலிகளைத் தடுக்கும் நடவடிக்கை மட்

அரசு தன் கடமைகளை ஒழுங்காக செய்தாலே போதும்! - சேட்டன் பகத்

படம்
ஹைதரபாத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை உயர்கல்வி நிறுவனங்கள் எப்படி அரசியல் முறையில் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது எடுத்துக்காட்டாக உள்ளது. அம்மாணவர், கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு, கல்விக்கட்டணம் கட்டாததற்கு மனிதவளத்துறையின் தூண்டுதல் மூலம் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ரோஹித்தின் அரசியல் செயல்பாடுகள் பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது கல்லூரி நிர்வாகமே ஒழிய மனித வளத்துறை அல்ல. பண்டாரு தத்தாத்ரேயாவிடம், ஏபிவிபி மாணவர் அணி புகார் கொடுக்க அவர் உடனே மனித வளத்துறை அமைச்சரான ஸ்மிருதி ராணியிடம் தொடர்புகொண்டார். மனிதவளத்துறை கொடுத்த அழுத்தத்தால், கல்லூரி நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபட்ட ஐவரை விடுதியிலிருந்து நீக்கியிருக்கிறது. இந்த நடவடிக்கை ஏற்படுத்திய அழுத்த த்தால் மாணவர் ரோஹித்தின் உயிர் பறிபோயிருக்கிறது. இதில் அவர் தலித் என்பது அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு. இதில் நாம் பேச ஏதுமில்லை. அரசு, தரவேண்டிய உதவித்தொகையை தாமதமின்றி அனுப்பி வைத்திருக்கலாம் என்பது பற்றி இந்த விவகாரத்தில் யாரும் பேசவில்லை. அரசு தன் தரப்பிலான பிரச்னைகளை சரி செய்திருந்தால் போதுமானத