இடுகைகள்

நோய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மரபணுக்கள் ஏற்படுத்தும் பரம்பரை நோய்களை உணவு, உடற்பயிற்சி மூலம் தடுக்கலாம்!

படம்
                மரபணுவை வெ்ல்ல முடியுமா ? ஒருவரால் அவரது குடும்பம் காரணமாக ஏற்படும் நோய்களிலிருந்து தப்பிக்க முடியாது . ஆனால் அதற்கேற்ப உணவுப்பழக்கம் , உடற்பயிற்சி அமைவது அவசியம் . ஒருவரது குடும்பம் சார்ந்து மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு , புகைப்பிடிப்பது , அதிக கொழுப்பு , உடல் பருமன் , நீரிழிவு நோய் , அதிக ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படலாம் . சிலர் பிறக்கும்போது ரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருக்கும் , ரத்த தட்டுகளில் அழற்சி உருவாகியிருக்கும் . இவர்களுக்கு இதயத்தசை சார்ந்த நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது . முறையான உடற்பயிற்சி , உணவுமுறை ஆகியவற்றை ஒருவர் கையாளும்போது மரபணு ரீதியான பிரச்னைகளை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் . பழங்கள் , காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதோடு கொழுப்பு குறைவான உணவுகளையும் பானங்களையும் சாப்பிடலாம் . இதில் உப்பும் , சர்க்கரையும் கவனிக்க வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பு . உடற்பயிற்சி பொதுவாக முக்கியத்துவமானது . இதயத்தை வலுவாக்கும் என்று சொல்லும்படியான பயிற்சிகள் ஏதும் இல்லை . எனவே இதயத்தின் ஆர்டரியில் உள்ள கொலாட்டரலில் ரத்தவோட்டத்தை அதிக

வாழ்க்கையைக் காப்பாற்றும் பழக்க வழக்கங்கள்! - உடல், மனதின் இயல்பான பழக்கங்கள்

படம்
              ஆபத்து கால நடவடிக்கைகள் ! உடலைப் பொறுத்தவரை ஆயுளுக்கும் நமக்கு பாதுகாவலராகவே செயல்படுகிறது . மிகவும் இக்கட்டான நேரம் என்றால் உடல் தானியங்கியாக தன்னைப் பாதுகாத்துக்கொள்வதில் இறங்கிவிடும் . இதனை ஒருவர் தவிர்க்கவே முடியாது . நீரில் இறங்கினால் , நீச்சலடிப்பது , நெருப்பைப் பார்த்தால் அது ஏற்படுத்தும் விளைவுகளை அறிந்து எச்சரிக்கையாவது , நாய் துரத்தினால் இயல்பாகவே ஓடத் தயாராவது என சில விஷயங்களைக் குறிப்பிடலாம் . நவீன நகர வாழ்க்கையில் இந்த செயல்பாடுகள் ஒருவரின் சிந்தனை வாழ்க்கை முறையைப் பொறுத்து மாற்றங்களை காண்கிறது . அடிப்படையில் தன்னைக் காத்துக்கொள்வதுதான் இதில் முக்கியமானது . அப்படி சில அம்சங்களை கீழே காண்போ்ம் தாக்குதல் அல்லது தப்பித்தல் ஆபத்து என்று வரும்போது ஒன்று அதனை எதிர்ப்பது அல்லது அங்கிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொண்டு ஓடுவது என இரண்டில் ஒன்றைத் தான் தேர்ந்தெடுக்க முடியும் . அதுதான் விலங்காக இருந்து நாம் பெற்ற அடிப்படை இயல்பு . இன்று இதே அம்சம் வெவ்வேறு வகையில் வெளிப்படுகிறது . உயிருக்கு ஆபத்தான நிலையில் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது . உடல்

மூளையில் ஏற்படும் மாற்றங்கள் நினைவுகளை பாதிக்கும்- இரு நோயாளிகளிடம் செய்த பரிசோதனைகள்

படம்
                  மூளையும் நினைவுகளும் மருத்துவத்துறையில் மூளை நரம்பியல் இன்று வெகுவாக முன்னேறிவிட்டது . ஆனால் அதில் ஏற்பட்ட துல்லியமான அனைத்து மாற்றங்களையும் வெகுஜன மக்கள் அறியமுடியாது . திரைப்படங்கள் அந்த வேலையை செய்தன . தலையில் அடிபட்டு நினைவுகளை இழந்தவர் , பைத்தியம் ஆனவர் , கோமா நிலைக்கு சென்றவர் என பல்வேறு மனிதர்களை செல்லுலாய்டில் உலவ விட்டனர் . இதில் சுந்தர் சி போன்ற இயக்குநர்களின் படங்களில் கட்டையால் அடித்தால் கண்டிப்பாக ரத்த த்தைவிட மயக்கம்தான் வரும் எனும் டுபாக்கூர் விஷயங்களும் வெளிவந்தன . பின்னாளில் அவரே தன்னுடைய படத்தில் லாஜிக் பார்த்தால் எப்படி என்று சொல்லிவிட்டதால் , அவரை விமர்சிக்க ஏதுமில்லை . இப்போது ஒரு நோயாளி பற்றி பார்ப்போம் . அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஹென்றி மொலைசன் . இவரது ஏழு வயதில் மோட்டார் பைக் விபத்தில் தலையில் அடிபட்டது . அதிலிருந்து டெம்பொரல் லோப் பகுதி பாதிக்கப்பட்டு வலிப்பு பிரச்னைஉருவானது . வலிப்பு தொடர்பான மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்தினார் . ஆனாலும் 27 வயதில் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது . மருத்துவர் ஸ்கோவில்லே இவருக்கு

லிஸ்டர் பற்றிய ஐந்து சுவாரசியமான விஷயங்கள்!

படம்
          லிஸ்டர் பற்றி ஐந்து விஷயங்கள் ! லிஸ்டரின் அப்பா , தனது பதினான்கு வயதில் பள்ளிக்கல்வியை விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியே வந்தார் . பின்னாளில் அவர் உருவாக்கிய நுண்ணோக்கி , அதன் லென்ஸ் ஆகியவற்றுக்காக பணமும் புகழும் பெற்றார் . லிஸ்டர் ஏராளமான நுட்பமான பல்வேறு கருவிகளை உருவாக்கினார் . அதனை புத்திசாலித்தனமாக காப்புரிமை பெற்று வைத்திருந்தார் . அறுவை சிகிச்சை செய்த புண்களை தைக்கும் ஊசி , காதில் நுழைந்த பொருட்களை எடுக்கும் கொக்கி போன்ற கருவி , வயிற்றிலுள்ள உறுப்புகளை ஆராயும் கருவி என சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம் . லிஸ்டர் உருவாக்கிய ஆன்டிசெப்டிக் முறையை இங்கிலாந்தில் எதிர்த்தாலும் , பிரான்ஸ் , ஜெர்மனி ஆகிய நாடுகள் அரவணைத்துக்கொண்டு பயன்படுத்தினர் . பிரான்ஸ் ப்ரஸ்ஸியா போர்க்காலங்களில் இம்முறையை பரவலாக பயன்படுத்தினர் . இன்று மருத்துவர்கள் நோயாளிகளை நம்பர் அல்லது கேஸ் என்று சொல்லித்தான் கூப்பிடுவார்கள் . ஆனால் லிஸ்டர் இந்த ஏழை மனிதர் , இந்த நல்ல பெண்மணி போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி நோயாளிகளை தேற்றியிருக்கிறார் . தனது மாணவர்களிடம் நோயாளிகளின் நோ்

குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜி ஆபத்து!

படம்
  குழந்தைகளுக்கு ஏற்படும் அலர்ஜி ஆபத்து!  குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு செயல்முறையில், உணவு ஒவ்வாமைக்கான விதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை.  நவீன கால குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவுகளான வேர்க்கடலை, முட்டை , பால் ஆகியவை ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். ஒவ்வாமைக்கு முக்கிய காரணம் உணவுதான். ஆயினும், குழந்தைகளின் பள்ளி, அவர்களின் வீடு, நிகழ்ச்சிகள் ஆகிய இடங்களில் கூட ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.  உணவு மூலமாக ஏற்படும் ஒவ்வாமை பாதிப்பு பொதுவானது. ஆனால், அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டால் ஆபத்து. கடந்த ஆண்டு, உணவு விடுதியில் பாதுகாப்பான உணவு என்று நம்பிச் சாப்பிட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த இருவர் ஒவ்வாமை பாதிப்பில் இறந்தனர். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சி பெறாத நிலையில் என்னாகும்? இங்கிலாந்து அரசு தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு திட உணவுகளை குறிப்பிட்ட வயது வந்தபிறகுதான் சாப்பிட வழங்கவேண்டும் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.  தற்போது இங்கிலாந்தில் ஒவ்வாமை பாதிப்பு 7 சதவீதமாக உள்ளது. அங்கு கடந்த இருபது ஆண்டுகளில் ஆறுமடங்கு அதிகமாக ஒவ்வாமை நோயாள

செல்லப்பிராணிகளை குளோனிங் செய்யும் நிறுவனங்கள் வந்துவிட்டன! அடுத்து என்ன - குளோனிங்கில் அடுத்த கட்டம்?

படம்
                  பெருகும் குளோனிங் செயல்முறைகள் குளோனிங் செய்யும் செயல்முறை முன்னர் வேகமாக தொடங்கினாலும் பல்வேறு தடைகள் , விதிகள் காரணமாக தொடர்ச்சியாக நடைபெறவில்லை . ஆனால் தற்போது செல்லப்பிராணிகளை , போலீஸ் நாய்களை , அழியும் நிலையுள்ள விலங்குகளை குளோனிங் செய்து வருகிறார்கள் . முதன்முதலில் டாலி என்ற ஆட்டை குளோனிங் செய்து பிறக்க வைத்தனர் . இப்போது அந்த நிகழ்ச்சி நடைபெற்று 25 ஆண்டுகள் ஆகின்றன . முதலில் இம்முறையை எப்படி பயன்படுத்துவது என தடுமாற்றம் இருந்தது . ஆனால் தற்போது உருவாகியுள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் பூனை , ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை வணிகரீதியில் குளோனிங் செய்து தருகின்றன . அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரில் கர்ட் என்ற குதிரையை குளோனிங் முறையில் உருவாக்கினார்கள் . இந்த இனத்தில் 2 ஆயிரம் குதிரைகள் இருந்தாலும் கூட குளோனிங் செய்வதற்கான தரம் குறிப்பிட்ட இன குதிரை ஒன்றிடம் மட்டுமே இருந்தது . இப்படி நாற்பது ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட செல்களை வைத்து குளோனிங் செய்யப்பட்டது . இந்த கர்ட் குதிரை வளர்ந்து பெரியதாகி இனத்தை பெருக்கும்போது இழந்த மூதாதையர்களின் குணநலன

ஹோமியோபதி என்னென்ன நோய்களைத் தீர்க்கும் என்பதை விவரிக்கும் நூல்!

படம்
        ஹோமியோபதி டாக்டர் விஜய் ஆனந்த் கிழக்கு பதிப்பகம் இந்திய அரசு மெல்ல அலோபதி மருத்துவமுறைக்கான ஊக்கத்தை குறைத்து இந்திய மருத்துவமுறைகளுக்கு திரும்பி வருகிறது . ஆயுர்வேத மருத்துவர்கள் இனி வரும் காலத்தில் அறுவை சிகிச்சைகளும் செய்யக்கூடும் எனும்படியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது . அலோபதிக்கு நிகரான பல்வேறு மருத்துவ முறைகளில் ஹோமியோபதியும் ஒன்று . இந்த நூலில் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை விவரித்து அதன் அறிகுறிகளை தெளிவுபடுத்தி அதற்கான ஹோமியோபதி மருந்துகளின் பெயர்களையும் பரிந்துரைத்துள்ளார் மருத்துவர் . இதனால் நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்களையும் அறிகுறிகளையும் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது . பிற மருத்துவமுறைகளை அறிந்துகொள்வது சில நோய்களைத் தீர்க்க உதவும் என நம்பலாம் . இனி வரும் காலத்தில் ஒரே மருத்துவமுறையில் நோய்களுக்கான தீர்வுகளைத் தேடுவது கடினம் . அனைத்து மருத்துவமுறைகளையும் இணைத்து அதற்கான கருவிகளையும் மருந்துகளையும் பயன்படுத்துவது புத்திசாலித்தனம் . ஹோமியோபதி மருத்துவம் பற்றிய நூல் இந்த நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது . இதில் ந

எதிர்கால நோய் தீர்க்கும் மருத்துவமுறைகள்! - ஸ்டெம்செல், பாக்டீரியா, டிஎன்ஏ

படம்
          cc       எதிர்கால மருந்துகள், மருத்துவ முறைகள் முந்தைய கட்டுரையில் சொன்னதுபோல ஒருவரின் மரபணுக்களைப் பொறுத்து அவருக்கென மருந்துகளை தயாரிக்கலாம். இதனால் மருந்து வீணாகாமல் அவரின் உடலைச் சென்று அடையும், நோய் குணமாகும். இதனால் மருந்து நிறுவனங்களிடம் கமிஷன் வாங்கும் மருத்துவர்கள் கூட தடாலடியாக இந்த பிராண்டு மருந்து சிறப்பாக வேலை செய்யும் முடிவெடுத்து மருந்துகளை வழங்க வாய்ப்புண்டு. முன்பே நோயைத் தடுக்கலாம். இதுவும் கூட மரபணு ஆராய்ச்சியில் பெறும் பயன்தான். இதில் ஒருவரின் தந்தைக்கு ஏற்படும் நீரிழிவுநோய், உடல்பருமன், புற்றுநோய் ஆகிய விஷயங்கள் ஏற்படுமா என்று பார்த்து அதை தடுக்கும் முயற்சிகளை செய்யலாம். புற்றுநோய் ஏற்படுபவர்கள் எந்தெந்த பாகங்களில் நோய் தாக்கும் என்று பார்த்து அதனை அறுவை சிகிச்சை செய்து நீக்கி வருகிறார்கள். அதுபோலத்தான் இதுவும். கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக வாழ்பவர்கள் இந்த முறையை தேர்ந்தெடுக்கலாம். ஸ்டெம்செல் தெரப்பி இப்போதைக்கு ஸ்டெம்செல் தெரபி கொஞ்சம் காசு கூடியதாக இருக்கலாம். ஆனால், இதனை முயன்றால் பல்வேறு பிறப்பு குறைபாடுகளை முடிந்தளவு சரிசெய்ய முடியும் என்கிறார்கள். பா

காடுகளை அழித்தால் இனி வரும் காலத்தில் நுண்ணுயிரிகளின் தாக்குதல் கூடும்!

படம்
மரங்களை அழித்தால் நோய் பரவும் ! சோனியா ஷா , எழுத்தாளர் . ஆங்கிலத்தில் : சோபிதா தர் நீங்கள் 2016 ஆம் ஆண்டு எழுதிய பான்டெமிக் என்ற நூலில் கொரோனா தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது என்று முன்னரே கணித்து எழுதியுள்ளீர்கள் . எப்படி ? 2010 ஆம் ஆண்டு ஹைதியில் காலரா பாதிப்பு ஏற்பட்டது . பொதுவாக நாம் காலராவை ஏழைகளுக்கு வரும் நோய் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம் . ஆனால் காலரா பாதிப்பு நியூயார்க் , லண்டன் , பாரிஸ் ஆகிய பகுதிகளை பாதித்தது . இதனை நீங்கள் எப்படி புரிந்துகொள்வீர்கள் . நான் சீனாவில் இன்று நோய் பாதித்துள்ள பகுதிகளை முன்னரே சென்ற பார்வையிட்டுள்ளேன் . த வைரஸ் தாக்குதல்கள் பலமுறை ஒருவரைத் தாக்கும் என்பதை நோய்களின் வரலாறு பற்றி படித்தாலே அறிய முடியும் . நீங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் 300 வைரஸ் கிருமிகள் உருவாகியுள்ளதாக கூறுகிறீர்களே ? அது எப்படி ? நான் கூறியது உண்மைதான் . ஏறத்தாழ உலகில் பரவிய நோய்களில் 60 சதவீதம் விலங்குகள் மூலம் பரவியதுதான் . மிருகங்கள் இன்று வெப்பமயமாதல் மூலம் மனிதர்களின் வாழிடங்களுக்கு நெருக்கமாக வாழ்ந்த

சிலந்தி தான் கட்டிய வலையில் எப்படி மாட்டிக்கொள்ளாமல் இருக்கிறது?

படம்
giphy மிஸ்டர் ரோனி சிலந்தி தன் வலையில் இரைகளை எளிதாக வீழ்த்துகிறது. ஆனால் அதில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது எப்படி? சிலந்தி பசையை வாயிலிருந்து குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே குவித்து வைக்கிறது. அந்த இடங்களில் மட்டும் சிலந்தி நடந்து செல்வதில்லை. மேலும், அதன் கால்களில் வலையிலுள்ள பசையில் இருந்து விடுபடும்படியான அமைப்பு உள்ளது. நகம் போன்ற அமைப்பு அது. எனவே, சிலந்தி தான் கட்டியவலையில் சிக்கிக்கொள்வதில்லை. வைரஸ்கள்தான் நோயை ஏற்படுத்துகிறதா? அறிவியல்படி இல்லை என்றே கூறவேண்டும். ஆனால் அந்த பாதிப்பிற்கான தூண்டுதலாக இருக்கிறது என சொல்லலாம். எப்படியெனில், வைரஸ் பிற விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. நோய் பரப்பிய குறிப்பிட்ட விலங்குகளான வௌவால், பன்றி, கொசு ஆகியவற்றுக்கு எந்த பாதிப்பும் நேருவதில்லை. ஆனால் மனிதர்களுக்கு வாந்தி, பேதி, காய்ச்சல், உடல் கொப்புளங்கள் ஏற்படுகிறது. இதன் விளைவாக உள்ளுறுப்புகள் சேதமடைந்து மரணம் நேருகிறது. வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்திதான் காய்ச்சலை, உடல்நலிவை ஏற்படுத்துகிறது. வைரஸை முழுமையாக உடல் எதிர்ப்பதால் நமக்கு உடல் நலிவின் தீவ