எதிர்காலத்தை கணிக்கும் முடிவுகளை எடுப்பதில் மூளையின் பங்கு!
எதிர்காலத்தை கணிக்கும் மூளையின் திறன் நாம் பூமியில் இத்தனை ஆண்டுகாலம் பிழைத்திருக்கிறோம் என்றால் அதற்கு ஒரே காரணம் , நமக்கு கிடைத்த அனுபவங்கள்தான் . இதனை மூலதனமாக வைத்து எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களை ஓரளவுக்கு கணிக்க முடிந்தது . இப்படி செய்வது அனைத்து நேரங்களிலும் பயன் கொடுக்காதுதான் , ஆனால் இப்படித்தான் மனிதர்களின் வாழ்க்கை நகர்கிறது . இதற்கு மூளையிலுள்ள இருபகுதிகள் பொறுப்பேற்கின்றன . ஒன்று பாசல் கங்குலியா , அடுத்து செரிபெல்லம் . அனைவரின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட பகுதிகளை நினைவுகூர பாடல்கள் இருக்கும் . அப்படி நினைவுகளோடு பாடல்களை தாளத்தோடு இணைத்து பாட பாசல் கங்குலியா - செரிபெல்லம் என இருபகுதிகளும் உதவுகின்றன . போக்குவரத்து சிக்னலில் நிற்கும்போது பச்சை விளக்கு எப்போது எரியும் என கணித்து வண்டியின் ஆக்சிலேட்டரை முறுக்குவது எதிர்காலத்தை கணிக்கும் திறன்தான் . சாதாண வேலை செய்பவர்களுக்கு இந்தளவுதான் கணிப்பு உதவும் . விளையாட்டு வீரர்களைப் பொறுத்தரை பந்து வரும் திசையை நோக்கி வேகமாக கணித்து நகர்வது முக்கியம் . அப்படியில்லாதபோது விளையாட்டு நம