இடுகைகள்

பழக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்காலத்தை கணிக்கும் முடிவுகளை எடுப்பதில் மூளையின் பங்கு!

படம்
              எதிர்காலத்தை கணிக்கும் மூளையின் திறன் நாம் பூமியில் இத்தனை ஆண்டுகாலம் பிழைத்திருக்கிறோம் என்றால் அதற்கு ஒரே காரணம் , நமக்கு கிடைத்த அனுபவங்கள்தான் . இதனை மூலதனமாக வைத்து எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களை ஓரளவுக்கு கணிக்க முடிந்தது . இப்படி செய்வது அனைத்து நேரங்களிலும் பயன் கொடுக்காதுதான் , ஆனால் இப்படித்தான் மனிதர்களின் வாழ்க்கை நகர்கிறது . இதற்கு மூளையிலுள்ள இருபகுதிகள் பொறுப்பேற்கின்றன . ஒன்று பாசல் கங்குலியா , அடுத்து செரிபெல்லம் . அனைவரின் வாழ்க்கையிலும் குறிப்பிட்ட பகுதிகளை நினைவுகூர பாடல்கள் இருக்கும் . அப்படி நினைவுகளோடு பாடல்களை தாளத்தோடு இணைத்து பாட பாசல் கங்குலியா - செரிபெல்லம் என இருபகுதிகளும் உதவுகின்றன . போக்குவரத்து சிக்னலில் நிற்கும்போது பச்சை விளக்கு எப்போது எரியும் என கணித்து வண்டியின் ஆக்சிலேட்டரை முறுக்குவது எதிர்காலத்தை கணிக்கும் திறன்தான் . சாதாண வேலை செய்பவர்களுக்கு இந்தளவுதான் கணிப்பு உதவும் . விளையாட்டு வீரர்களைப் பொறுத்தரை பந்து வரும் திசையை நோக்கி வேகமாக கணித்து நகர்வது முக்கியம் . அப்படியில்லாதபோது விளையாட்டு நம

மூளையில் நினைவுகள் எப்படி பதிவாகின்றன?

படம்
            நீண்டகால நினைவுகள் நமது மூளையில் நீண்ட காலத்திற்கு நினைவுகள் எப்படி சேமிக்கப்படுகின்றன என்பதை விளக்கமாக பார்க்கலாம் . கவன ஈர்ப்பு பொதுவாக ஒரு இடத்திற்கு செல்லும்போது நம்மை கவனிக்க வைக்கும் சில அம்சங்கள் இருக்கும் . பெண்களின் லோஹிப் ஜீன்ஸ் , தொட்டிச்செடி கட்டிங் , உடைகள் , ஒருவர் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றை சொல்லலாம் . இவற்றின் ஆயுள் காலம் 0.2 நொடிகள்தான் . இவை முக்கியம் என நீங்கள் நினைத்தால் , அது மூளையிலுள்ள நியூரான்களை தூண்டுகிறது . தொடர்ச்சியாக இந்த தூண்டுதல் நடந்தால் அதுவே நீண்டகால நினைவாக சேகரிக்கப்படுகிறது . உணர்ச்சிகர ஈர்ப்பு உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் உணர்ச்சிகளோடு தொடர்புடையதாக இருந்தால்அது மூளையிலுள்ள அமிக்டலாவில் பதிவாகி நீ்ண்டகால நினைவாக வாய்ப்புள்ளது . நீங்கள் சோகமாக இருக்கும்போது இசைக்கப்படும் இளையராஜாவின் ஆறுதல் பாட்டு , தந்தையைப் போன்ற ஒருவரிடமிருந்து கிடைக்கும் பாராட்டு , நம்மைச் சார்ந்தவர்களிடமிருந்து கிடைக்கும் அங்கீகாரம் , மகிழ்ச்சியாக இருக்கும்போது பெய்யும் மழை என பலவிஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம் .

நினைவை எப்படி மூளை தட்டி எழுப்புகிறோம்? - மூளையிலுள்ள நினைவை பாதுகாக்கும் பகுதிகள் ஒரு பார்வை

படம்
          ஞாபகம் வருதா ? சிலரது கைகளை தொட்டால் பல்வேறு நினைவுகள் வரும் . சிலரது முகத்தை பார்த்தால் நமக்கு நெருக்கமானவர்களின் நினைவு பல ஆண்டுகளுக்கு சென்று உடனே ரீகேப் ஆகி மீளும் . சிலரது உடல்மொழி கூட நமக்கு தெரிந்தவர்களை திடீரென பெய்யும் அடைமழை போல நினைவுப்படுத்தி செல்லும் . இதெல்லாம் எப்படி நடக்கிறது ? மூளையில் அதற்கான பார்ட்டுகளை பிரம்மா தனது கையாலேயே செய்து வைத்திருக்கிறார் . உணர்வுரீதியான நினைவு , குறுகியகால நினைவு , நீண்டகால நினைவு என மூன்று வகை நினைவுகள் உள்ளன . உணர்வு ரீதியான உணர்வு சில நொடிகள் மட்டும்தான் நீடிக்கும் . குறுகியகால நினைவுக்கு ஆயுள் 20 நொடிகள் . நீண்டகால நினைவுக்கு ஆயுள் அதிகம் . நினைவுகளைப் பொறுத்தவரை அதனை முக்கியம் என்று நீங்கள் கருதினால் அது நிலைக்கும் . இல்லையென்றால் மண்டையில் நிற்காது . நடத்துநர் எச்சிலைத் தொட்டு டிக்கெட் கிழித்தாரா என்பது மூளையில் சேமித்து வைக்கவேண்டிய விஷயமில்லை . ஆனால் அவருக்கு சரியான காசை கொடுத்து டிக்கெட் வாங்கினோமா என்பது முக்கியம் . அதைவிட முக்கியமானது . அவரிடம் சொன்ன இடத்தில் இறங்கி நண்பனை சந்தித்தோமா என்பது நினைவு கொள்ளவேண்ட

புதிய பழக்கங்களை எப்படி கற்றுக்கொள்வது? - மூளையில் பழக்கவழக்கங்களை எப்படி பதிய வைக்கலாம்

படம்
            இலக்கு நோக்கிய பயணம் வாழ்வதற்கான நோக்கம் என்ன என்ற கேள்வியை தனது வாழ்நாளில் ஒருவர் சந்திக்கவேண்டும் . அப்படி சந்திக்காதபோது பிறரின் மீதான அக்கறை ஒருவருக்கு குறைந்துபோய்விடும் என டாக்டர் ரொமான்டிக் தொடரில் டீச்சர் கிம் கூறுவார் . குறிப்பிட்ட நோக்கம் இல்லாத வாழ்க்கை என்பது சலிப்பான மோசமான விஷயங்களுக்குத்தான் அழைத்துச்செல்லும் . முயல் தனது கேரட்டை எடுக்க வழிகாட்டிய புதிர் பலருக்கும் நினைவிருக்கும் . இதுபோல நோக்கங்களை மையமாக வைத்து முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும் . நோக்கங்களை தேடுவதை பயிற்சியாக கொண்டால் அதனை அடையும் வழி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை . பாதை நினைவிருக்கும் என்பதால் முயல் போலவே நமது மூளையும் எளிதாக அதனை அடைந்துவிட முடியும் . தூண்டுதல் பற்பசை விளம்பரத்தை பார்த்துவிட்டு தூண்டுதலில்தான் ஹைப்பர் மார்க்கெட்டை வேட்டையாட கிளம்புகிறோம் . சுத்தமான பற்கள் , நம்பிக்கை அளிக்கும் என ஸ்லோகனை பயன்படுத்துகிறார்கள் . இதுபோல தூண்டுதல்தான் பழக்கத்தை தொடங்க உதவும் . உடற்பயிற்சி , நல்லுணவு , தூயஆடை , ஆளுமை மாற்றங்கள் ஆகியவையும் பிறரைப் பார்த்து காப்பி

பழக்கங்களை எப்படி உருவாக்கிக்கொள்கிறோம்?

படம்
              பழக்கங்களை எப்படி உருவாக்கிக்கொள்கிறோம் ? மனிதர்களை பழக்கங்களால் உருவானவர்கள் என்று கூறலாம் . இங்கு நடந்துள்ள பல்வேறு மாற்றங்கள் மனிதர்களின் தொடர்ச்சியான பழக்கங்களால் உருவானதுதான் . விமானத்தில் உள்ளது போல ஆட்டோபைலட் முறையில் தினசரி செய்யும் பழக்கங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை உருவாக்குகிறது . பரிணாம வளர்ச்சியுப் இப்படிப்பட்டதே . இதன்மூலம் ஒன்றை நாம் புதிதாக தொடங்குவது பற்றி யோசிக்காமல் முக்கியமான செயல்களின் மீது எளிதாக கவனம் செலுத்தலாம் . முடிவுகளை முன்னரே யோசித்தல் பாலூட்டி உயிரினமாக மனிதர்கள் உயிருடன் இருக்க முக்கியமான காரணம் , இறந்த காலத்திலிருந்து நிறைய விஷயங்களை நாம் கற்றுக்கொள்வதுதான் . இதனால்தான் நெருப்பைக் கண்டால் சுடும் என விலகுவதும் , பாம்பைக் கண்டால் நடுங்குவதும் ஏற்படுகிறது . இந்த உணர்வுகள் பல நூற்றாண்டுகளாக நமது மரபணுவில் பதிந்து கடத்தப்பட்டுள்ளது . ஒரு செயலை செய்வதற்கு முன்னரே அதன் விளைவுகளை யோசிப்பதும் இப்படி உருவாகி வந்ததுதான் . சில சமயங்களில் இது தப்பானாலும் பெரும்பாலான நேரம் முடிவு எடுத்த வழியில்தான் செயல்

சிகரெட் பிடிப்பதை நிறுத்துவதற்கு உதவும் சிம்பிளான சில பழக்கங்கள்!

படம்
            சிகரெட் புகைப்பதை எப்படி நிறுத்துவது ? நடக்கலாம் குதிக்கலாம் ஓடலாம் பொதுவாக சிகரெட் பிடிப்பதற்கான துடிப்பு ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள்ளாகவே ஏற்படுகிறது . எனவே அந்த நேரத்தில் எழுந்து நடப்பதை வழக்கமாக்கி கொள்வது நல்லது . இதன்மூலம் உடனே சிகரெட் பிடிப்பதற்கான எண்ணம் ஏற்படாது . தினசரி உடற்பயிற்சி செய்வது என்பது மன அழுத்தத்தைப் போக்கும் . புகைப்பதை எழுதுங்களேன் எப்போது புகைப்பிடிக்க தோன்றினாலும் உடனே அதனை நோட்டில் எழுதி வையுங்கள் . இதன்மூலம் எந்த நேரத்தில் சூழலில் புகைப்பது தொடங்குகிறது என்பதை அறியலாம் . கொஞ்சம் பழங்கால டெக்னிக்காக இருந்தாலும் சூப்பரான வெற்றி சூத்திரம்தான் . தயங்காமல் பயன்படுத்தலாம் . ஆலோசனை குழுவாக , தனியாக ஆலோசனை செய்யலாம் . இதன்மூலம் பிறரின் அனுபவங்கள் இழப்புகள் ஆகியவை மற்றவருக்கு பாடமாக அமையும் . போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு குழு தெரபி கூட வழங்கப்படுகிறது .. ஒருவர் டூ ஒருவர் என ஆலோசனை செய்வது புகைப்பிடிப்பதில் பெரிய பலனை அளிக்காது . இணையத்தில் பல்வேறு ஆலோசனைகள் கிடைக்கின்றன . இதற்கென தொலைபேசி எண்களும் உ

பதற்றமான சூழலில் ஒருவருக்கு ஏற்படும் பழக்கங்கள்!- நகம் கடிப்பது, சிகரெட் பிடிப்பது, விரல் சூப்புவது, அளவுக்கதிகமாக சாப்பிடுவது்

படம்
          ஒருவர் பதற்றமான சூழ்நிலையில் இருக்கும்போது கவனித்திருக்கிறீர்களா ? நகங்களை கடிப்பது , பேனாவைத் தட்டுவது , தலைமுடியை சுருட்டுவது , விசில் அடிப்பது , குதிகாலை அசைப்பது என பல்வேறு உடல்மொழிகளை வெளிப்படுத்துவார்கள் . இதனை நாளடைவில் ஒரே மேனரிசமாக மாற்றிக்கொண்டு செயல்படுவார்கள் . இப்படி பழக்கங்களை கற்றுக்கொள்வது ஒருவருக்கு ரிலாக்சாக அமையும் . அல்லது அதிலிருந்து ஏதேனும் ஒரு விஷயத்தை அவர் பெறுவார் . அப்படியில்லாதபோது , அப்பழக்கத்தை ஒருவர் செய்யவேண்டியதில்லை . நகம் கடிப்பது பொதுவாக ஒருவருக்கு மனப்பதற்றம் ஏற்படும்போது இப்பழக்கம் ஏற்படுகிறது . உலகில் 44 சதவீத இளைஞர்களுக்கு இப்பழக்கம் உள்ளது . இவர்களின் பொதுவான வயது 19 முதல் 29 வயது வரையில் உள்ளது . குழந்தையாக இருந்து சிறுவன் அல்லது சிறுமியாக மாறுபவர்கள் இப்பழக்கத்தை கற்கிறார்கள் . அதுவும் கூட பிறரைப் பார்த்துதான் . விரல் சூப்புதல் இதுவும் கூட பாலருந்தும் குழந்தை , அந்த நினைவிலேயே தன்னை இருத்திக்கொள்வதற்கான நிலைதான் . இந்த பழக்கம் தொடரும்போது குழந்தையின் முன்பற்கள் வெளியே துருத்திக்கொண்டு தெரிவதற்கான வாய்ப்

ஆயுள் அதிகரிக்க சில டிப்ஸ்கள்!

படம்
ஆயுளை அதிகரிக்கும் பழக்கங்கள் உடனே ஆபீஸ் போவதை நிறுத்திவிடலாமா என்று கேட்காதீர்கள். அதை நிறுத்தினால் சோறு கிடைக்காது. அதை தவிர்த்து பிற விஷயங்களை செய்யவேண்டியதைத்தான் சொல்லுகிறோம். கேளுங்கள். வியர்வைக் குளியல் ஆஸ்பெட்டாஸ் ஷீட் போட்ட குளியல் அறையைத்தான் மேன்ஷனில் கட்டுகிறார்கள். துண்டைக் கதவில் போட்டுவிட்டு ஜட்டியுடன் அப்படியே உட்கார்ந்துவிடுங்கள். குபீரென வெப்பத்தில் வியர்க்கும். ஆம் . பிளான் அதுதான். நன்கு வியர்த்தால் உடலின் அழுக்குகள் கழிவுகள் வெளியேறிவிடும். பிறகு ஹமாம் போடாமலேயே குளிக்கலாம். ஆயுளும் அதிகரிக்கும் என ஜமா இன்டர்னல் மெடிசின் இதழ் 2015 இல் அறிக்கை வெளியிட்டது. ஏறத்தாழ 2000 பின்லாந்து ஆட்களிடம் செய்த ஆய்வு அறிக்கை முடிவு இது. வியர்வையால் இதயத்துடிப்பு அதிகரிப்பதை எளிய உடற்பயிற்சி என்கிறார்கள் ஆய்வாளர்கள். தியானம் வேதாத்ரி தொடங்கி கைலாசா நித்தியானந்தா வரையிலும் சொல்வது இந்த ஒன்றைத்தான். நமக்கு கண்ணை மூடினால் தியானத்தை தவிர அத்தனையும் வருகிறது என்பதால் இதை எங்கே சென்று முறையிட. விடுங்கள். அப்படி செய்தால், சிறிதுநேரம் மூளை, மனது ஆகியவற்றின் கொதிப்புக

கைவீசி நடக்கும் பழக்கம் தோன்றிய வரலாறு!

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி சாலையில் நடக்கும்போது கைவீசி நடக்கும் வழக்கம் எப்படி வந்திருக்கும்? நம் ஊரில் திருமணமானவர்கள் கைவீசம்மா பாட்டு பாடி நடப்பது மிக குறைவு. காதலி சமேதராக எழுந்தருளி நண்பர்களுக்கு எரிச்சல் தரும் முருகேசன்களும், பழனிசாமிகளும் இப்படிச் செய்வது உண்டு.  இதற்கான நதி மூலத்தை தேடினால் 3.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் போக வேண்டும். நாம் தோன்றிய காலத்திலிருந்து கைவீசம்மா கைவீசு சமாச்சாரம் இருக்கிறது. பாருங்கள் இன்று கூட, ஒரு இளம்பெண் அதாவது நேசிக்கிற பெண், தன் கையைத் தொட்டால் என பயங்கர ஃபீலாகிற ஆண்கள் உண்டு. . 2010 ஆம் ஆண்டு நெதர்லாந்தின் ஃப்ரீ பல்கலையைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோர்டு ப்ரூஜின், கைவீசும் பழக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்திருக்கிறார். கைவீசி நடப்பது கால்களின் வேகத்திற்கு இயல்பாக வரவேண்டும் என்பதால் உருவானது என்கிறார். கால்களை மாற்றிப்போட்டு நடக்கும்போது உருவாகும் விசையை கைகளை வீசி நடப்பது சமன்படுத்துகிறது என்பதுதான் விஷயம். நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்