இடுகைகள்

பிக் அப் ட்ரக்குகளின் வரலாறு

படம்
Ford F150 பிக் அப் ட்ரக்குகளின் வரலாறு டிடி மாடல் ட்ரக்குகளின் விலை(1917இல்)  600 டாலர்களாக இருந்தது. 1917-1927 காலகட்டத்தில் விற்ற மாடல் டி ட்ரக்குகளின் எண்ணிக்கை 1,60,000. 1925 ஆம் ஆண்டு ஏலம்போன ஃபோர்டு மாடல் டிடி ஹக்ஸ்டர் காரின் விலை 24 ஆயிரத்து 200 டாலர்கள். அதிகவிலை கொண்டு பிக் அப் ட்ரக் எது தெரியுமா? போர்டு 450 சூப்பர் டூட்டி - 86 ஆயிரத்து 505 டாலர்கள் மாடல் டி ட்ரக்கின் குதிரைத்திறன் 40 எஃப் 150 ட்ரக்கின் ஹார்ஸ்பவர் 450 2017 ஆம் ஆண்டு எஸ்யூவி மற்றும் ட்ரக்குகளின் சந்தை சதவீதம் 63% விரைவில் அமெரிக்காவில் ரிலீசாகவிருக்கும் கையூன் பிக்மன் சீன ட்ரக்கின் வேகம் மணிக்கு 28 கி.மீ. நன்றி: க்வார்ட்ஸ் 

பிரெக்ஸிட் பிரிவால் இங்கிலாந்துக்கு என்னாகும்?

படம்
பிரெக்ஸிட் பிரிவால் இங்கிலாந்துக்கு என்ன நடக்கும்? பிரிட்டன், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிவது உறுதி. இது தாமதமானாலும் நடக்கப்போகிறது. தனிநாடாக நிற்கும் வணிகம் உட்பட அனைத்தையும் இங்கிலாந்து அரசு தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக தெரசா மே பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறார். அடுத்த பதினைந்து ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி என்பது 9 சதவீதம் குறைவாகவே இருக்கும். ஐரோப்பிய யூனியனிலிருந்து கிடைத்து வந்த பொருட்கள் அனைத்தும் இனி கிடைக்காது. இதன் அர்த்தம், இங்கிலாந்து இனி சுங்கவரி அதிகமாக கட்டவேண்டி இருக்கும். இதனால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து 30 சதவீத உணவுப்பொருட்கள் இங்கிலாந்துக்கு வருகின்றன. நன்றி: தி கார்டியன்.காம்

லவ் இன்ஃபினிட்டி: காதல் இருக்கா? இல்லையா?

படம்
freepik லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: கா.சி.வின்சென்ட், பாக்ஸ்டர் எனக்கு ரூபா, மகாதேவி இவங்க மேல் கூட பெரிய கிரேஸ் கிடையாது. ஆனால் மைதிலி வேற லெவல். அவ அதிகம் பேசவில்லை என்றால் கூட ஏதோ ஒன்று அவளை நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கிறது. பெண்கள்கிட்ட நட்பாகறதுக்கு பெரிய விஷயம் ஒண்ணும் வேணாம். அவங்க சேஃபா இருக்கிறாங்க என்பதை நீங்க உறுதிபண்ணனும். அப்புறம் அவங்க பேசற முட்டாள்தனமான பேச்சை புன்னகை முகத்தோடு கேட்கணும். நிச்சயம் தீர்வு சொல்லவே கூடாது. ஏன்னா கௌன்சிலிங் நம்மோட தொழில் கிடையாது. So Letss Enjoy. நீ இப்போ Kangayam  பஸ் ஸ்டாண்ட் போறதில்லையா? அரச்சலூர் போனயாம். பசங்க தகவல் சொன்னாங்க. உன்கூட கண்டிப்பாக பேசியாகணும். இன்னும் எத்தனை நாளைக்கு Lr எழுதறது. பயங்கர கடுப்பா போச்சு எனக்கு. இனிமேல் Lr எழுதறதில்லைன்னு நினைச்சேன். ஆனா, முடியலை. எப்படி மாற்றிவிட்டாய் என்னை. வசியம் செய்த வசிய்க்காரி, வசீகரி(வசீகராவின் பெண்பால்) நீ. ஆனந்த விகடன் கிடைக்கல. இந்த வருஷம் எப்படியும் பத்திரிகையாளன் ஆயிடுவேன். மோகனா, மகாதேவி கிட்ட மட்டும் பேசறேன்னு சொல்ற. உன் Friends எல்லாம் பேச

லவ் இன்ஃபினிட்டி: காதல் இல்லைனா நட்பு தொடரட்டுமே!

படம்
Pexels.com லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: ரிஷ்வான், மீகா திங்கட்கிழமை காலேஜ் முடிஞ்சு நானும் முகமதுவும் நேராக பஸ்ஸைப் பிடித்தோம். எந்த இலக்கும் கிடையாது. ஈரோடு போய் நேராக படத்துக்குப் போய்விட்டோம். படத்தோட பேரு சொன்னா உனக்கே பிடிக்கும். ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே! படம் Super. கதை இதுதான். இப்போ நான் உன்னை Love பண்ணினேன். நீ பண்ணலை. அப்பவும் நான் உன்கூட பேசினேன்(ஓகே, கொஞ்ச நாள் கழித்துத்தான்) பழகினேன். முன்பு எவ்வளவு அன்பு உன்மேல் வைத்திருந்தேனோ அதைவிட அதிகமாத்தான் இப்போ இருக்கிறேன். இனிமேலும் அப்படித்தான். இதுதான் உண்மையான அன்பு. நான் உன்கிட்ட பேசாம பழகாம இருந்தேன் என்றால் இத்தனை நாள் உன்னை Love  பண்ணியதே சும்மா என்றாகிவிடும். எதையும் எதிர்பார்க்காம நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உன்னை நேசித்து கொண்டிருக்கிறேன் நான். இனி Story க்கு வருவோம். மேலே சொன்னது எக்சாம்பிள். ஷாம், ஸ்னேகாவை Love பண்ணுவான். ஷாமின் அத்தைப் பொண்ணு ஸ்னேகா. ஷாமோட பர்த்டேவுக்கு ஸ்னேகாகிட்ட நான் உன்னை Love பண்றேன்னு சொல்றாரு. ஆனா அவ Affection  வேற Love Feeling இல்லை என்று

வெப்பமயமாதல் அதிகரிக்கும் கார்பன் வெளியீடு

படம்
Scroll.in பஞ்சம் கார்பன் வெளியீட்டை அதிகரிக்கிறதா? வெப்பமயமாதல் காரணமாக ஏரிகளிலும், அணைகளிலும் வற்றிவரும் நீராதாரம் கரிம எரிபொருட்களை பயன்படுத்த ஊக்குவித்து கார்பன் வெளியீட்டை அதிகரிப்பதாக ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2001-2015 காலகட்டங்களில் கலிஃபோர்னியா, இடாகோ, ஓரேகான், வாஷிங்டன் ஆகிய அமெரிக்க மாநிலங்களில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சியில் இதனைக் கண்டுபிடித்துள்ளனர். ”நிலத்தடி நீர் குறையும் போது இயற்கை எரிவாயு அல்லது நிலக்கரி சார்ந்த மின்சார தயாரிப்புக்கு பல்வேறு நாடுகளும் முயற்சிப்பது தவிர்க்க முடியாத ஒன்று.” என்கிறார் ஆராய்ச்சியாளரான நோவா டிஃபன்பாக். அமெரிக்க மாநிலங்களில் சல்ஃபர் டை ஆக்சைடு(கொலராடோ, உடா, வாஷிங்டன், வியோமிங்), நைட்ரஜன் ஆக்ஸைடு(கலிஃபோர்னியா, கொலராடோ, ஒரேகான், உடா, வாஷிங்டன், வியோமிங்) வாயுக்கள் அதிகரித்துள்ளதன் காரணமாக மக்களுக்கு நுரையீரல் நோய்கள், அமிலமழை, காற்று மாசு ஆகியவை ஏற்படுவது குறித்த ஆய்வறிக்கை அண்மையில் வெளியானது. நீராதாரங்களின் பற்றாக்குறை காரணமாக  ஏற்பட்ட கார்பன் வெளியீடு 10 கோடி டன்களாக அதிகரித்துள்ள

பசுமை வீடுகள் கட்டலாம் வாங்க!

படம்
குங்குமம்\ ஷாலினி நியூட்டன் பரவும் பசுமைக் கட்டிடங்கள் பிஜூ பாஸ்கர்   இந்தியாவில் பிளாஸ்டிக் மற்றும் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி வீடுகளைக் கட்டும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பறவைகள், தேனீக்கள் தங்களுக்கான வீட்டை கட்டிக்கொள்ளும்போது மனிதர்களால் கட்ட முடியாதா? தற்போது இந்தியா முழுக்க குறிப்பிட்ட பகுதிகளில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே வீடுகளை கட்டிக்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலையைச் சேர்ந்த பிஜூ பாஸ்கர், அருகில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு தனது வீட்டை 45 நாட்களில் கட்டியுள்ளார். செலவு வெறும் 3.25 லட்சம் மட்டுமே.  “இயற்கைப் பொருட்கள் என்றாலும் பல ஆண்டுகள் உறுதியாக இருக்கும். நாங்கள் பிறரின் வீடுகளைக் கட்டுவதற்குக் காசு வாங்குவதில்லை. பதிலாக உணவுகளை அல்லது பொருட்களைக் கேட்டு வாங்கிக்கொள்வோம் ” என்றார் பாஸ்கர். கிராமத்தினருக்கு தன்னல்(Thannal) எனும் அமைப்பு மூலமாக வீடுகளைக் கட்டித்தந்து வருகிறார். கிடைக்கும் இடத்தில் விறுவிறுவென குறைந்த ஆட்களைக் கொண்டே வேலை பார்த்து பசுமை வீடுகளை எழுப்பிவிடுவது தன்னல் குழுவின் சாமர்த்தியம்.

ஜெய்ஸ் இ முகமது அமைப்பு மிகப்பெரிய வெற்றியை ருசித்திருக்கிறது

படம்
Scroll.in நேர்காணல் பத்திரிகையாளர் அனடோல் லீவன் தமிழில்: ச.அன்பரசு இந்தியா பாகிஸ்தானுடன் போர் தொடுப்பது இறுதியான தீர்வைத் தருமா? ராணுவ நடவடிக்கை சிறிய அளவில் தீர்வுகளைத் தரலாம். பாகிஸ்தானுக்கு பெரிய அளவு முதலீடு கிடையாது. அந்நாட்டிற்கு சீனா, சவுதி அரேபியா ஆகியோர் உதவுகின்றனர். ராணுவத்தாக்குதல் தொடங்கினால் இருநாடுகளுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நடப்பது நிச்சயம். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முயல்வதே இதற்கு தீர்வு. இந்தியாவுக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன?  இந்தியா அமெரிக்காவை அணுகி, பொருளாதார ரீதியில் பாகிஸ்தானுக்கு நெருக்கடிகளை அளிக்கலாம். ஆப்கன் பிரச்னையில் ட்ரம்ப் அரசுக்கு பாகிஸ்தானின் உதவி தேவைப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்கா இந்தியா சொன்னவுடன் அதற்கு உடனே சம்மதம் தெரிவித்து விடாது. மோடி பேச்சுவார்த்தைக்கான நேரம் கடந்துவிட்டது என்று கூறியிருக்கிறாரே? மோடி பேசுவது அனைத்தும் வெற்றுப் பேச்சு. இந்தியா பாகிஸ்தானுடன் போர் தொடுத்தால் அது பேரழிவாகவே இருக்கும். போரின் பின்னணியில் உருவாகும் தீவிரவாதம், அகதிகள் பிரச்னைகளை சமாளிப்பது சாதாரண காரியம் அல்ல. தாமதமாகவேனு

பி.டெக் வெப்சீரிஸ் எப்படி? - தருண் பாஸ்கரின் திரைக்கதை அசத்தல்

படம்
huffingtonpost பி.டெக் ஜீ5 தயாரிப்பு இயக்கம்: உபேந்திர வர்மா கதை, திரைக்கதை: தருண் பாஸ்கர்   Abhay Bethaganti , Kaushik Ghantasala, Madhulatha Reddy, Vishnu Mohan Chaitanya Garikipati, Meraj Ahmed and Arjun Chukkala பெல்லி சூப்புலு படத்திற்கு முன்பு எழுதிய கதை இது என தருண் பாஸ்கர் இன்ஸ்டாகிராமில் சொல்லி டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கும் பேட்டி தட்டிவிட்டார். அதனால் இதில் முக்கிய கேரக்டர்கள் தடுமாறினாலும் அந்த பிரச்னை இதனால்தான் என புரிந்து கொள்ள முடியும். பெல்லி சூப்புலு படம் எடுத்து தேசிய விருது வென்ற இயக்குநரின் வெப் சீரிஸ் என்று விரக்தி அடையக்கூடாது என்பது விமர்சனத்திற்கு முன்பே நாங்கள் கூறும் அட்வைஸ். மூன்று இளைஞர்கள் தங்கள் கனவைத் துரத்துகிறார்கள். அதில் அவர்கள் ஜெயித்தார்களா? இல்லையா என்பதே கதை. ஹரி, விக்ரம், அக்தர் என மூன்று இளைஞர்கள். இதில் மூவருக்கும் உள்ள ஒற்றுமை அனைவரும் பொறியியல் படிக்கும் மாணவர்கள் என்பதே. இரண்டாவது ஒற்றுமை மூவருக்கும் படிப்பைத் தொடர அதுதொடர்பான வேலைக்குச் செல்ல அணுவளவும் ஆர்வம் கிடையாது. ஹரி, காலேஜூக்கு அட்டன்டன்ஸ் கொடுத்துவிட்டு குழந்தைக

கருவூல உண்டியல் பத்திரம் தெரியுமா?

படம்
Quora பொருளாதாரம் அறிவோம் 2 கருவூல உண்டியல் இந்திய அரசு வெளியிடும் டி.பில்கள் அல்லது கருவூல உண்டியல் என்பவை, குறுகிய கால கடன் உபகரணமாகும். இவற்றை 91, 182,364 என மூன்று காலகட்டங்களில் இப்பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இவை ஜீரோ வட்டிவிகிதப் பத்திரங்கள் ஆகும். 91 நாட்கள் கொண்ட ரூ.100 மதிப்பிலான பத்திரம் ரூ.98.20 க்கு விற்கப்படும். கழிவு என்பது ரூ.1.80 வழங்கப்பட்டாலும் மதிப்பு என்பது ரூ.100க்குத்தான். வாரம்தோறும் புதன்கிழமை, கருவூல உண்டியல் பத்திரங்கள் ரிசர்வ் வங்கியால் ஏலமிடப்படுகின்றன. 91 நாட்கள் காலம் கொண்ட கருவூல உண்டியல் பத்திரங்கள் வாரம்தோறும் புதன்கிழமையும், 182, 364 நாட்கள் காலம் கொண்ட பத்திரங்கள் ஒருவாரம் விட்டு புதன்கிழமை ஏலத்திற்கு ஏற்கப்படுகின்றன. பத்திரங்களுக்கான பணம் அனுப்பீடு தொடர்பான வேலைகள் ஏலம் முடிந்தபின்னர் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. ஏலம் தொடர்பான செய்திகளை ரிசர்வ் வங்கி தன் பத்திரிக்கை வெளியீடு மூலம் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கிறது. சரஸ் நன்றி: இந்திய ரிசர்வ் வங்கி

லவ் இன்ஃபினிட்டி: எதிர்த்துப் பேசினா தப்பா?

படம்
freepik லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: மீகா, வில்லி ஜான்சன் எனக்கு தோல்வி பயம்ங்கிறது புதுசு கிடையாது. ஆனால் நடக்கிற சமயம் எனக்கு பயங்கிற டென்ஷன் ஆகும். விரும்பியது கிடைக்கும்போது கரும்பாக இனிக்கின்ற மனமே நினைத்தது நடக்காமல் போனால் நெஞ்சம் கொதிப்பது ஏன்? சொல் மனமே உனக்கு Phone பண்ணலாம்னு நினைத்தேன். நீதான் ஆத்தா வீட்டில் இருக்கிறாய். எப்படி பேச முடியும்னு நினைத்து பண்ணலை. ஏன் அப்பாகிட்ட சண்டை போடற. சண்டை போட்டா. உன் பிரச்னை தீர்ந்திடுமா. (What is the problem? I don't Know) என்னைப் பாரு. எங்கப்பா என்னை கண்டபடி திட்டினாலும் நான் பேசாம அமைதியா இருந்துருவேன். ஏன்னா அவங்க கிட்டதான் பணம் வாங்கணும். நம்ம அப்பாதானே திட்டறாங்க. இதுக்குப் போயி எதுக்கு உன் மனசை கஷ்டப்படுத்திக்கிறே? நான் தனியா இருக்கும்போது நினைப்பேன். என்னடா நாம் இந்த 19 வது வயசுல இந்தளவு கஷ்டத்தை அனுபவிக்கிறோமேன்னு. ஆனால் எந்தவொரு கசப்பான நிகழ்வுகளுக்கு பின்னாடிதான் இனிப்பான நிகழ்ச்சிகள் நடக்கும். எக்சாம்பிளுக்கு என்னையே எடுத்துக்க. என்னைப் பாராட்டுகிற வாயாலேயே திட்டும் வாங்குவேன். ஆ

சாக்லெட்டுக்கு விருது வென்ற கோவை இளைஞர்

படம்
லிவ்மின்ட் கோவையைச் சேர்ந்த அருண் விஸ்வநாதன் இத்தாலியில் நடைபெற்ற சாக்லெட் போட்டியில் வெற்றிபெற்று சித்ரம் கிராஃப்ட்ஸ் சாக்லெட் கம்பெனியை பிரபலப்படுத்தி உள்ளார். உலகளவிலான கம்பெனிகள் கலந்துகொள்ளும் போட்டியில் பங்கேற்ற அருண், மாம்பழ ஃப்ளேவர் சாக்லெட்டுக்காக வெண்கலப்பத்தகம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியரின் நிறுவனம் ஒன்று சாக்லெட்ட்டிற்கான விருது பெறும் முதன்முதல் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். 2018 ஆம் ஆண்டு நவம்பரில் சாக்லெட் போட்டியில் இறுதிக்குள் நம்பிக்கையுடன் காலடி எடுத்து வைத்தவர், அபாரமான வெற்றி பெற்று உலக அரங்கில் இந்திய சாக்லெட்டுகளுக்கான சந்தையையும் திறந்துள்ளார். அருண், கார்னெல் பல்கலையில் உணவு அறிவியல் பாடம் கற்றவர். எட்டுப்பேர் கொண்ட குழு, சித்திரம் சாக்லெட் நிறுவனத்தை நடத்துகிறது. சாக்லெட்டின் அடிப்படையான கோகோவை தமிழகம் மற்றும் கேரளத்திலுள்ள சில விவசாயிகளிடம் அருண் வாங்கிவருகிறார். கோவையில் உள்ள கஃபேயின் பின்புறம் சித்திரம் சாக்லெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இவர் சான்றிதழ் பெற்ற சாக்லெட் டேஸ்டரும் கூடத்தான். ”சாக்லெட் கம்பெனியின் பெயர், நிறம்