இடுகைகள்

சீப்பான சீனக்கம்பெனிகள் ஜெயித்தது எப்படி?

படம்
www.scmp.com சீனக் கம்பெனிகள் சாதித்தது எப்படி? இந்தியாவில் மொபைல் கம்பெனிகளுக்கு குறைவில்லை. ஆனால் தரம் என்று பார்த்தால், ஒனிடா, வீடியோகான், மைக்ரோமேக்ஸ் ஆகிய கம்பெனிகள் மேட் இன் இந்தியா என பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் இப்போன்களை வாங்கியவர்கள் சந்தோஷப்பட ஏதுமில்லை. அப்படியே மலிவான கொரிய போன்களுக்கு பெயரை மட்டும் லாவா, ஒனிடா, வீடியோகான் என வைத்து பரபரப்பான விற்றனர். இதில் நீங்கள் கவனிக்கவேண்டியது, மைக்ரோமேக்ஸ் போன்ற கம்பெனிகள் போன்களை வேகமாக விற்க முயற்சித்தனரே தவிர அதில் தரத்தையோ தனித்துவத்தையோ பராமரிக்க முயற்சிக்கவில்லை. இந்த நேரத்தில் இந்தியச் சந்தையில் சாம்சங் கோலோச்சிக் கொண்டிருந்தது. நோக்கியா சரிவில் இருந்தது. பிளாஸ்டிக் போன்களை அதிக விலை வைத்து விற்ற எல்ஜியின் சுவடையே காணோம். அப்போது பீக்கில் கிராக்கி காட்டியது கொரியா செட்டுகள்தான். திருவிழா செட்டு போல முத்துக்கொட்டை பல்லழகி என எங்கு பார்த்தாலும் சத்தம். அந்த நேரத்தில்தான் சீன போன்களாக ஹூவெய், ஆப்போ, விவோ களமிறங்கின. குறைந்த விலையில் ஐபோன் வசதிகளோடு போன் விற்றால் வாங்க மாட்டார்களா? தூள் கிளப்பிய

LGBTயினரை ஆதரிக்கும் போஸ்ட்வானா!

படம்
theconversation.com ஓரினச்சேர்க்கையாளர்களை ஆதரிக்கும் போஸ்ட்வானா! அண்மையில் போஸ்ட்வானா நாட்டு உயர் நீதிமன்றம், ஓரினச்சேர்க்கையாளர்களை குற்றவாளிகளாக்கும் சட்டத்தை அகற்றியுள்ளது. இந்த தீர்ப்பு வரும் ஜூன் முதல் அமலுக்கு வரவிருக்கிறது. கென்யாவில் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, வரும் மே மாதம் வெளியிடப்பட விருக்கிறது.  காலனிய ஆட்சிகாலச் சட்டப்படி, ஓரினச்சேர்க்கையாளர்களின் உறவு, சட்டம் 164 படி தண்டனைக்குரிய குற்றம். இதற்கு ஏழு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்க முடியும். இயற்கைக்கு புறம்பான செயல்பாடுகள் பிரிவில் ஐந்து ஆண்டுகள் தண்டனை விதிக்க முடியும்.  போஸ்ட்வானாவின் சட்டங்கள் அப்படியே இந்தியச்சட்டங்களைப் போன்றதே. 1830 ஆம் ஆண்டு தாமஸ் பாபிங்டன் மெக்காலே, இந்திய சட்ட கமிஷன் மூலம் ஓரினச்சேர்க்கை சட்டத்தை இயற்றினார். இந்தியா மற்றும் போஸ்ட்வானா சட்டங்கள் இங்கிலாந்து மன்னர் எட்டாம் ஹென்றியின்(1533) சட்டத்தைப் பின்பற்றி இயற்றப்பட்டது. 1960 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போஸ்ட்வானா, 2003 ஆம் ஆண்டுதான் சட்டங்களை நவீனப்படுத்த தொடங்கியது.  பிரிட்டிஷின் காலனி நாடுகளாக இருந்த பல்வேறு ந

கண்டுபிடிப்புகளின் தேசம் எது?

படம்
Church Militant கண்டுபிடிப்புகளின் தேசம் அமேசான் வலைத்தளத்தில் 238 கண்டுபிடிப்புகளுக்கான அப்ளிகேசன்கள் வந்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் வடக்குப்பகுதி நகரங்களில் அதிகளவு ஆராய்ச்சி தொடர்பான நடவடிக்கைகள் தென்படுகின்றன. 2000 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க காப்புரிமை அலுவலகத்தில்  கலிஃபோர்னியாவிலுள்ள சான்டா கிளாரா பகுதி அதிகளவு காப்புரிமைகளைப் பெற்றிருந்தது. மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரம் காப்புரிமைகள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதற்கடுத்து சான்டியாகோ நகரம் இடம்பெற்றுள்ளது. இதோடு பாஸ்டன், சியாட்டில் ஆகிய நகரங்கள் தொழில்நுட்பத்தில் சிறந்தவையாக உள்ளன. இதில் லாஸ் ஏஞ்சல்ஸ், டெட்ராய்ட், பீனிக்ஸ் ஆகிய நகரங்களும் உண்டு. ஆராய்ச்சிகள் அதிகரிக்க காரணம், கல்வி கற்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதும், கற்றவர்கள் அதிகரித்துள்ளதும், ஆராய்ச்சிகளுக்கு அதிகம் செலவழிக்கப்படுவதும்தான். சான்டா கிளாராவிலுள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் , சிலிகன் வேலிக்கான பொருளாதாரத்தை உருவாக்கும்படி ஏராளமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளன. பனிக்காலத்தின்போதும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் பல்

போலிச்செய்தி நாயகர்கள்!

படம்
Towards Data Science போலிச்செய்தி நாயகர்கள் ஆக்ஸ்ஃபோர்டு அகராதி, தகவல்களை சோதிப்பது என்பதை தகவல்களின் உறுதித்தன்மையை புலனாய்வு செய்து அறிவது என்று வரையறுக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் குளோபல் ஃபேக்ட் எனும் மாநாடு லண்டனில் நடைபெற்றது. இதில் தகவல்களைச் சோதிக்கும் உலகளாவிய நிறுவனங்கள் பங்கேற்றன. தகவல்களை சரியானபடி சோதித்து வெளியிடுவதில் உதவும் நிறுவனங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. இன்று இதழியலிலும் இது ஒரு சோதனைக்காலம். சரியான செய்திகள் என்று எதனையும் உறுதிப்படுத்தி வெளியிட முடியவில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடகங்களின் இடத்தை என்றோ எடுத்துக்கொண்டு விட்டன. காலையில் எழுந்ததும் அன்றைய நிகழ்ச்சிகளை, தூங்கிய பின் உலகில் நிகழ்ந்தவற்றை அறிய ஃபேஸ்புக் மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறது. நேரடியாக செய்தி என்பதை விட செய்தியின் தாக்கம், அதுபற்றிய மக்களின் கருத்து என ஊடகங்கள் செய்வதை மிக வேகமாக மக்களுக்கு பரப்புகிறது. காரணம், இதிலுள்ள மக்கள் பங்களிப்பது. அதேசமயம் இத்தளத்தில் பதிவிடப்படுபவை அனைத்தும் விருப்பு வெறுப்பற்றவை என்று கூற முடியாது.  உணர

பொய்களை உலகிற்கு சொல்வதே எங்கள் கடமை!

படம்
bbc இந்தியாவில் மோடி, பிரேசிலில் பொல்சனாரோ, ஹங்கேரியில் விக்டர் ஆர்பன்  உள்ளிட்ட உள்ளிட்ட வலதுசாரி தலைவர்கள் அரசியல் சூழலையே மாற்றியுள்ளனர். இவர்களின் தலைமையிலான இந்த அரசுகளுக்கு இடையிலுள்ள பொதுவான தன்மை, மக்களுக்கு ஆதாரமில்லாத பொய்களை, கட்டுக்கதைகளை கூறுவது. எதற்காக? தங்களுடைய நிர்வாகச் செயலின்மையை மறைப்பதற்காகத்தான். அதனை அம்பலப்படுத்துபவர்களும் இவர்களுக்கு இணையாகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பார்ப்போம். கோவிந்தராஜ் எத்திராஜ் பூம் லைவ் பாகிஸ்தான் இணையத்தளமாக வேர்ல்டு நியூஸ் அப்ஸர்வர், சொன்ன பொய்யை அம்பலப்படுத்தினார். அதில் அமெரிக்க தளவாட நிறுவனமான லோக்கீத் மார்ட்டின் இந்தியா மீது  தவறான செய்திகளை பரப்பியதற்காக வழக்கு தொடரவிருப்பதாக செய்தி வெளியிட்டது வேர்ல்ட் நியூஸ் வலைத்தளம். ஃபேக்ட்செக்கர்.இன் கடந்த நான்கு ஆண்டுகளில் பிரதமர் மோடி 35 விமானநிலையங்களை கட்டியதாக கூறியதை சூப்பர் டூப் என நிரூபித்தார்.  2014 -2018 ஆம் ஆண்டில் வெறும் ஏழு விமானநிலையங்களை மட்டும் கட்டியுள்ளதை வெளிப்படுத்தியது இந்த இணையதள சாதனை. இந்தியாஸ்பென்ட் எனும் தளத்தை

காதல் வந்தால் உடலுக்கு என்னாகிறது?

படம்
maureen mayieka  /pinterest ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர். ரோனி காதலில் விழுந்தால் என்னாகிறது உடல்? சூரியன் பனியாவதும், பனி எரிமலையாகத் தோன்றுவதும் நிகழ்வது இந்த உணர்ச்சியில்தான். காதலைத் தடுக்கும் குடும்பங்கள் எம கிங்கரர்களாக மாறுவதும் இதையொட்டித்தான். சமூகத்தை விடுங்கள். நம் உடலில் என்ன மாற்றங்களைக் காணலாம். ரத்தத்தில் காதல் நினைவுகள் கலந்தால் புரதம் விறுவிறுவென ஏறுகிறதா? மூளையின் நியூரான்கள் ஓவர் டூட்டி பார்ப்பதும் காதல் டைமில்தான்.  காதல் சமயத்தில் டோபமைன் மற்றும் ஆக்சிடோசின் சுரப்பதால் உடலில் கோகைன் அடித்தது போன்ற போதை ஏற்படும். வெட்கமின்றி சிரிப்பது இப்படித்தான் நிகழ்கிறது. Michelle Jacokes \pinterest மூளையில் சுரக்கும் வாசௌபிரசின் ஹார்மோன், உங்கள் காதலி மீது அதிகப்படியான காதலை ஏற்படுத்தும். எப்படி? அவர் தன் கல்லூரியிலுள்ள ஆண் தோழர் கூட பேசினால் கூட உங்களுக்கு ரத்தம் அழுத்தம் கிறுகிறு வென ஏறும். கூடவே காதலைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வேகத்தை செரடோனின்,  நோர்பைன்பிரைன் ஆகிய ஹார்மோன்களின் சுரப்பு தரும்.  suziuu \pinterest காதலில் விழுந்தால்,

லவ் இன்ஃபினிட்டி: ஒவ்வொரு பொண்ணும் ஒவ்வொரு டேஸ்ட்!

படம்
Autumn Rager லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: லக்கிலுக், கம்மவார் பாலாஜி 2002 ஆவது வருஷம்  மறக்க முடியாத பல விஷயங்கள் நடந்தது.அதில் முக்கியமானது, ரஞ்சனி அக்காவைச் சந்திச்சது. இவங்களுக்கு கணவர் கிடையாது. பெண் குழந்தை மட்டும்தான். கவி மூலமாக கிடைச்ச நட்பு இது. எங்கே நட்பு எனும் ட்ரெயினில் ஏறினோம்னா? நான் கவிதைன்னு ஈரோடு, அரச்சலூர், சிவகிரின்னு திரிஞ்சப்பவே வேதாத்ரி மகரிஷி எங்க ஊர்ல செம ஃபேமஸ். உடனே அவரோட கிளாஸ்ல சேருன்னு கவி பணம் கூட கொடுத்தா. சரி, என்னடா இதுன்னு கிளாஸ்ல சேர்ந்தேன். வித்தியாசமாக இருந்தது. அங்க சொன்ன பல விஷயங்களை பின்னாடி ஸ்டீபன் ஹாக்கிங் புக்ல படிப்பேன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலை. நான் காலேஜ் போனபோது, தாமரைப்பாளையத்துல வேதாத்திரி வகுப்புல சேர்ந்தேன். அங்கேயும் காதல் என்னை சும்மா விடலை. சுமதின்னு ஒரு பிளஸ்டூ படிக்கிற பொண்ணு வந்துக்கிட்டிருந்தது. ஊராளிக்கவுண்டர் வீட்டு புள்ள. வாளிப்புக்கு கேட்கணுமா. இந்த தடையெல்லாம் தாண்டித்தான் கற்கண்டு இனிப்பை நெத்தியில் தக்க வைக்க முயற்சி பண்ணினேன். முதலில் கண்களுக்குள் 89 வீடியோக்கள் ஓடி, சவீதா பீவி அ

போணியாகுமா போயிங்?

படம்
கடந்த ஆறு மாதங்களில் இரண்டு போயிங் விமானங்கள் விபத்தில் சிக்கிவிட்டன. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் போயிங் விமானத்தைப் பயன்படுத்துவதை மறுபரிசீலனை செய்யத் தொடங்கிவிட்டன. 737 விமானங்கள் இனி மாற்றியமைக்கப்பட்டு அடுத்து பயணிகள் விமானமாக மாற வாய்ப்புள்ளது. விமானத்தின் தானியங்கி கன்ட்ரோல்கள், வித்தியாசமான டிசைன் ஆகியவையும் தற்போத சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. இதுவரை தயாரிக்கப்பட்ட போயிங் 737 விமானங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 510. ஏர்பஸ் விமானங்களின் எண்ணிக்கை 8, ஆயிரத்து 737 737 விமானங்களில் லாபம் பார்க்க போயிங் நிறுவனத்திற்கு தேவைப்பட்டது. 376 மேக்ஸ் விமானங்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன.  இதுவரை விற்கப்பட்டுள்ள 737 மேக்ஸ் விமானங்களின் பங்கு 47%.  இன்னும் வழங்கப்படாத 737 மேக்ஸ் விமானங்களின் பங்கு 90%. மேக்ஸ் 8 விமானங்களுக்காக இதுவரை புக்கிங் ஆகியுள்ள தொகை 800 பில்லியன் டாலர்கள்.  நன்றி: க்வார்ட்ஸ்

லேடீஸ் டெய்லரின் சில்மிஷங்கள்? காமெடி காப்பாற்றுகிறது.

படம்
mirchi 9 ஃபேஷன் டிசைனர் S/o லேடீஸ் டெய்லர் இயக்கம் வம்சி ஒளிப்பதிவு நாகேஷ் பானெல் இசைமணிசர்மா கோதாவரி ஆற்றுப்புறம் உள்ள கிரியேட்டிவ் லேடீஸ் ஸ்பெஷலிஸ்ட் என்றால் என்ன புரிகிறது? அதேதான். சூப்பர் டெய்லர். பெண்கள் மிட்ஷாட், லாங் ஷாட், குளோசப் என கண்களால் பார்த்தே பெண்ணுக்கு உடை தைத்து அசத்துவது கோபாலத்தின்(சுமந்த் அஸ்வின்) ஸ்டைல். என்னதான் திறமையிருந்தாலும் கிராமத்தில் அதற்கென்ன மரியாதை இருக்கப்போகிறது? நானெல்லாம் அமெரிக்காவில் இருக்கவேண்டியன்டா பண்டு என நண்பனை இம்சிக்கிறார் கோபாலம். ஒருகட்டத்தில் ஜோசியரைப் பார்க்க, அவர் தொழிலில் ஜெயிக்க முடியுமோ இல்லையா பெண்கள் மேட்டரில் நீ கில்லி.மன்மத ரேகை உன்கையில் ஓடுது என உசுப்பிவிட கதை வேகமெடுக்கிறது. sulekha கோபாலம், மன்மதரேகையை சோதிக்க நினைக்கிறார். காசுள்ள பார்ட்டி கிராமத்தில் யார் என டாப் 10 லிஸ்ட் போட அதில் அம்முலு (மானசா ஹிம்வர்ஷா)முதலில் வந்து நிற்கிறார். இருமுறை பாத்ரூமுக்கு போய் எட்டிப் பார்த்து, ஒருமுறை லேசர்லைட்டை முகத்தில் அடித்தால் வராதா லவ்வு நீங்களே சொல்லுங்கள்? ஆனால் அதற்குப்பிறகு காவராஜூவி

தடுப்பூசி வதந்திகளைத் தடுப்பது எப்படி?

படம்
themetrofile.com.ng ஆரோக்கியத்தைக் குலைக்கும் வதந்திகள்  இந்தியாவில் குழந்தைகளுக்கு ஏற்படும் அம்மை நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசிக்கு (MR Vaccine) எதிரான வாட்ஸ்அப் வதந்திகள் பரவி வருகின்றன.  இன்று பலரும் உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவரைத் தேடி ஓடுவதில்லை. இணையத்தில் நோய், அதற்கான சிகிச்சை, மருந்துகள், செலவு ஆகியவற்றை மக்கள் முதலிலேயே திட்டமிட்டு விடுகின்றனர். இதனை செகண்ட் ஒப்பீனியனாக எடுத்துக்கொண்டால் நல்லதுதான். ஆனால், பொதுவான இணையத் தகவல்களைப் படித்துவிட்டு நாமே மருந்துகளை வாங்கி சாப்பிட்டால் அது சரியா? அம்மை தடுப்பூசி விவகாரத்தில் வாட்ஸ்அப் மூலம் பரவி வரும் வதந்திகள் இத்தகையதே. வதந்தி அபாயம் 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய தடுப்பூசித் திட்டத்தின் (Universal Immunization Programme)படி அம்மை நோய்க்கான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்பட்டன. இந்த ஆண்டின் ஜனவரியில் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. மும்பை, டில்லி உள்ளிட்ட சில பகுதிகளிலுள்ள மக்கள் அம்மைத் தடுப்பூசி, குழந்தைகளை மலடாக்கிவிடும் என எதிர்ப்பு தெரிவித்துள்ளது அரசை அதிர்ச்சிக்குள்ளாக்

அதிகரிக்கும் உடல்பருமன் ஆபத்து!

படம்
cheryl masterson/pinterest  உடல்பருமன் ஆபத்து! உடல் உழைப்பு சாராத பணியாளர்களுக்கு உடல் பருமன் அதிகரித்து வருவதாக எகனாமிக்ஸ் அண்ட் ஹியூமன் பயாலஜி இதழின் (Economics and Human Biology) ஆய்வறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியர்களில் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கணிதவியலாளர்கள், அறிவியலாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கைத் தகவல் தெரிவிக்கிறது. இது விவசாயிகள், மீனவர்கள், வீட்டுவேலை செய்பவர்கள் ஆகியோருக்கு  ஏற்படும் உடல் பருமனை விட அதிகமாக உள்ளது. பாடி மாஸ் இன்டக்ஸ்(BMI) எனும் கணக்கீடு மூலம் மனிதர்களின் எடை, உயரம் ஆகியவை அளவிடப்படுகின்றன.  இதில் பொறியாளர் பிரிவினரின் பிஎம்ஐ 1.17 கி.கி. ஆக உள்ளது. இருபிரிவினருக்கான பிஎம்ஐ வேறுபாடு 1.51 கி.கி. ஆக உள்ளது. 18.5 கி.கி.( ஊட்டச்சத்துக் குறைபாடு), 18.5 கி.கி. - 25 கி.கி(இயல்பான உடல் எடை), 25 கி.கி. - 30 கி.கி.(உடல் பருமன் ) என கணக்கிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம்(WHO).  உடல் உழைப்பு குறைவு, தனிநபர் வருமானம் உயர்வு ஆகிய காரணங்களால் கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியர்கள் உடல்