இடுகைகள்

யோசித்தால் மூளை பாதிக்கும் வாய்ப்பு உள்ளதா?

படம்
@ மிஸ்டர் ரோனி அதிகமாக யோசித்தால் மூளை பாதிக்கப்படுமா? இப்படி கேள்வி கேட்கவும் சிரமப்பட்டிருப்பீர்கள் அல்லவா? மூளைக்கு வேலை கொடுத்தால் அதிலுள்ள குளுக்கோஸ் விரைவில் காலியாகும். இதன் காரணமாக சர்க்கரை தாகம் ஏற்படும். நிறைய டீ குடிப்பீர்கள். காபி அல்லது பிஸ்கெட்,  சாக்லெட் என பெடிகிரி தவிர நிறைய உணவுகளைச் சாப்பிடத் தோன்றும். ஆனால் அதனை உடற்பயிற்சி என எடுத்துக்கொள்ளுங்கள். மெக்சிகோ சலவைக்காரி ஜோக் போல எதையாவது ஆர்வமாக கண்டுபிடிக்க முயற்சியுங்கள். மூளை யோசித்தாலும் இல்லாவிட்டாலும் 20 சதவீத சக்தியை எடுத்துக்கொள்ளும். எனவே அதனைப் பயன்படுத்துங்களேன். யோசிப்பதால் உடலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதாவது, பகல், இரவு பார்க்காமல் யோசிப்பது. இப்படி எனக்குத் தெரிந்து யோசிப்பது தஞ்சை பிரகாஷ் கதாபாத்திரங்கள்தான். நன்றி: ஹவ் இட் வொர்க்ஸ்

உலகிலேயே அதிக விலைமதிப்பு கொண்ட நாணயம்!

படம்
டாப் 5 கேள்விகள்  மிஸ்டர் ரோனி @ ஏன்?எதற்கு? எப்படி? காய்கறிகளை பழங்களை அப்படியே பச்சையாக சாப்பிடுவது நல்லதா? பண்ணைக் காய்கறிகள் என்பதன் அர்த்தம், அதில் மண் ஒட்டியிருக்க சாப்பிடுவது அல்ல. அம்முறையில் சில சத்துகள் உண்டுதான். ஆனால் சத்துகள் உடலால் செரிக்கப்பட அவை சமைக்கப்படுவது அவசியம். மேலும் மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் நேரடியாக சாப்பிட்டால் உடலைத் தாக்கும் அபாயம் உள்ளது. மெட்ரிக் அளவீட்டை ஏற்காத நாடுகளும் உண்டா? ஏன் இல்லாமல்? அமெரிக்கா, மியான்மர், லைபீரியா ஆகிய நாடுகள் உலக மெட்ரிக் அளவீட்டை ஏற்கவில்லை. அமல்படுத்தவில்லை. ஜப்பான் மன்னருக்கு பெரும் அதிகாரம் உண்டா? இரண்டாம் உலகப்போர் தோல்வி வரை இருந்தது. அதற்குப் பிறகு மன்னர் என்பது மரியாதைக்குரிய அடையாளமாக மாறி விட்டது. பெரிய அதிகாரங்கள் ஏதுமில்லை. செவ்விந்தியர்கள் கத்துவது போல படங்களில் நாம் கேட்கும் ஒலி உண்மையானதா? சுத்த டுபாக்கூர். செரோக்கி மற்றும் அபாசே ஆகிய பழங்குடிகள் தமக்குள் போர் நேரும்போது சிலவகை ஒலிகளை தகவல் தொடர்புக்காக எழுப்புவார்கள். ஆனால் அது படத்தில் காட்டியுள்ளது போல் அல்ல. படத்தில் ஒரே மாதிரிய

எலக்ட்ரிக் ஏரோபிளேன்கள் தேவையா?

படம்
இன்று உலகம் முழுக்க 20 ஆயிரம் பிளேன்கள் சுற்றி வருகின்றன. அதில் 300 கோடிப்பேருக்கும் மேல் பயணித்து வருகின்றனர். இதில் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு 4 சதவீதம். 2040க்குள் இதன் அளவு கூடும் என சூழலியலாளர்கள் அஞ்சுகின்றனர். 2016 ஆம் ஆண்டு சோலார் இம்பல்ஸ் எனும் விமானம் பேட்டரியில் இயங்கும்படி உருவானது. இதில் ஹைட்ரஜனைச் சேமித்து அதனை மின்திறனாக மாற்றினால் போதும். சாதாரண பேட்டரியை விட அதிக திறனோடு இயங்கும். மேலும் எலக்ட்ரிக் மோட்டாரை விமானத்தின் வால்புறம் வைத்தால் விமானத்தின் திறன் 85 சதவீதம் உயருமாம். 1. தற்போது 800 கி.மீ. வரை பறக்கும் சிறியவகை எலக்ட்ரிக் விமானங்களுக்கான தேவை உள்ளது. இதில் பறக்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஆசைப்படுகின்றனர். சாதாரண விமானத்தில் பறக்க செலவிடும் எரிபொருளின் அளவு, இங்கிலாந்தில் அமெரிக்காவில் வீட்டை சூடாக்க ஓராண்டுக்கு செலவிடும் எரிபொருளின் அளவுக்குச் சமம். 2. எலக்ட்ரிக் விமானத்திற்கான உருவாக்க முயற்சிகள் 1800 ஆண்டிலிருந்து நடைபெறுகிறது. நாசா அமைப்பு, டாம் நியூமன் என்பவரின் வேபர் எனும் மின் விமானத்திற்கு 2015 ஆம் ஆண்டு பரிசளித்துள்ள

விளையாட்டை நேர்மையாக விளையாட உதவுகிறோம்!

படம்
மினி பேட்டி! ஆலன் பிரெய்ல்ஸ்போர்டு, ஆய்வக இயக்குநர் இங்கிலாந்து விளையாட்டு வீரர்களை எப்படி சோதிக்கிறீர்கள்? கோடைக்காலத்தில் எங்களுக்கு வரும் மாதிரிகள் குறைவு. ஆனால் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடக்கும்போது தினசரி 250 மாதிரிகளைச் சோதிப்போம். கடந்த ஆண்டு மட்டும் 13 ஆயிரம் மாதிரிகளை சோதித்தோம். ரத்தம், சிறுநீர் ஆகிய மாதிரிகளின் மூலம் சோதனைகள் செய்கிறோம். இன்று பெரும்பாலும் சிறுநீர் மாதிரிகள் அதிகம் வருகின்றன. இதில் என்னென்ன சவால்களைச் சந்திக்கிறீர்கள்? சோதனைகளை சரியாக செய்வதற்கான நேரம்தான். வேறென்ன? போட்டிகளில் பங்கேற்றும் வீர ர்களை சரியான முறையில் சோதிக்க நிறைய நேரம் தேவை. அப்போதுதான், ஏமாற்றும் வீரர்களை சரியான முறையில் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் செய்கிற இந்த பணியால் விளையாட்டி கவனிக்கிற ஆர்வத்தை இழந்து விட்டீர்களாழ நான் விளையாட்டு வீரன் அல்ல. என்னுடைய பணி ஆய்வு செய்வதுதான். நான் இதில் மோசடி செய்யும் வீர ர்களை அடையாளம் காட்டி வருகிறேன். விளையாட்டை விதிமுறைகளுக்குட்பட்ட விளையாட்டாக இருக்க உதவுகிறோம். அதில் எனக்கு மகிழ்ச்சிதான். நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ்  

மருந்துகளும் தடைகளும்! - நோய் மருந்துகளுக்கு தடை!

படம்
விளையாட்டு உலகில் ஒருவர் தங்கம் வெல்வது முக்கியமானது. அதற்குப் பிறகு அவரின் உடலின் ரத்தம், சிறுநீர் சோதனை நடைபெறும். இதில்தான் வெற்றி பெறும் பல்வேறு வீர ர்களும் மாட்டிக்கொள்கின்றனர். இதில் தடை செய்யப்பட்ட மருந்துகளை அவர்கள் பயன்படுத்தினால் பதக்கம் பறிக்கப்படும். இரண்டாம் நிலையிலுள்ள வீரருக்கு அப்பதக்கம் வழங்கப்படும். இது பெரிய அவமானம். தடை செய்யப்பட்ட மருந்துகளை சாப்பிடுகிறோம் என்பதே வீர ர்களுக்கு தெரிவதில்லை. காரணம் இதிலுள்ள நிறைய குழப்பங்கள்தான். டெஸ்டோஸ்ட்ரோன் நமது உடலில் இயல்பாக சுரக்கும் செக்ஸ் ஹார்மோன்தான் இது. ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்ட்ரோன் அதிகமாக சுரந்தால்தான் அவர்களின் உடல் எலும்புகள் வளர்ச்சி பெறும். தசைகள் வளர்ச்சி சீர் பெறும். இதனை விளையாட்டு வீர ர்கள் தம் எடையைக் கூட்ட தசைகளை வலிமைப்படுத்த பயன்படுத்துகின்றனர். எப்ஹெட்ரின் ஆஸ்துமா பாதிப்பைக் குறைக்க பயன்படுத்தும் மருந்து. இதுவும் எடையை அதிகரிக்கவும், உடல் உறுப்புகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் இந்த மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். டையூரெட்டிக்ஸ் சிறுநீரக கற்களைக் கரைக்கவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்

அறம் சார் இதழியல் பணி! - தினமணி 85

படம்
குறுக சொல் நிமிர் கீர்த்தி! ஓர் பத்திரிகை ஏன் தொடங்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை வெளியிட்டு, அதன் பெயரைக்கூட வாசகர்கள் சூட்டி பத்திரிகை உருவாகிறது என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். தினமணி அப்படித்தான் உருவானது. வளர்ந்த நகரங்களில் இல்லாமல் விழுப்புரம், தருமபுரி போன்ற பகுதிகளில் பத்திரிகை பதிப்புகள் தொடங்கியது முதல் அனைத்தும் புதுமைதான். மத்திய, மாநிலச் செய்திகளை சார்பின்றி வெளியிடும் தன்மை தமிழகத்திற்கு புதியது. தினமணிக்கென்ற தனிக் கொள்கை தலையங்கம் மற்றும் நடுப்பக்க கட்டுரைகள். அன்றிலிருந்து இன்றுவரை அதனைச் சிறப்பாகச் செய்து வருகிறது. இக்கட்டுரைகளின் நேர்த்தி இன்றும் குறையாமல் இருப்பது ஆசிரியர்களின் கீர்த்தியைச் சொல்லுகிறது.  தினமணி 85  இதழ் வியாழன் அன்று வெளியிடப்பட்டது. மொத்தம் 96 பக்கங்கள். இதுவரை தினமணி இதழில் ஆசிரியர்களாக இருந்தவர்கள் பற்றி அவருடன் பணிபுரிந்தவர்கள் நேர்த்தியாக நினைவுகூர்ந்து கட்டுரைகளை செம்மையாக எழுதியுள்ளனர். 2007 ஆம் ஆண்டிலிருந்து தினமணி இதழின் ஆசிரியராக இருப்பவரான கி.வைத்தியநாதன், இதழ் பற்றிய தன் கருத்து இரண்டு பக்கங்களில் எழுதிய

பொழுதுபோக்குத்துறையில் சாதித்த ஓரினச்சேர்க்கையாளர்! - எலன்

படம்
மாற்றுப்பாலினச் சாதனையாளர்கள்! எலன் டிஜெனரெஸ் அறிமுகம் எலன், பொழுதுபோக்குத் துறையில் நாடறிந்த பிரபலம். 1994 ஆம் ஆண்டு, தி டுநைட் ஷோ வித் ஜானி கார்சன்  என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு டிவியில் முக்கியமான நேரத்தில் வரும் தொடரில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்தார். இச்சமயத்தில் இவரின் பாலினம் பற்றி அறிந்த மரபான கிறிஸ்தவர்கள், எலனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். தி எலன் டிஜெனரெஸ் ஷோ நிகழ்ச்சியிலிருந்து இவர் இந்த ஆண்டு விடைபெறுகிறார் என்று கிசுகிசுக்கிறார்கள்.  அமெரிக்காவில் 1958 ஆம் ஆண்டு பிறந்த எலனுக்கு இன்று 61 வயதாகிறது. பல்வேறு டிவி, நிகழ்ச்சிகள், அனிமேஷன் படங்களுக்கு டப்பிங், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என இவர் வெகு பிரபலமான ஆள். அமெரிக்காவின் லூசியானாவிலுள்ள மெடாய்ரே நகரில் பிறந்தவர். தாய், பேச்சுக்கலை பயிற்சியாளர். தந்தை, காப்பீட்டு முகவர். 1973 ஆம் ஆண்டு இவரது தாய், தந்தையை விவகாரத்து செய்துவிட்டு மறுமணம் செய்தார். புதிய தந்தையுடன் சென்ற எலன், அவரால் சில ஆண்டுகளுக்குப் பிறகு வல்லுறவு செய்யப்பட்டார். பள்ளிப்படிப்பையும் கல்லூரி பட

பொய் சொன்னால் போலீஸ் கண்டுபிடிப்பது இப்படித்தான்!

படம்
இந்துஸ்தான் டைம்ஸ் மிஸ்டர் ரோனி பொய் சொன்னால் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? உண்மையைச் சொல்லுங்க சார் என்று சொன்னால் எந்த குற்றவாளியும் தெரிந்த விஷயங்களை சொல்வதில்லை. எனவே குறைந்தபட்சம் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கையை, காலை முறித்துக்கொள்ளுமளவு சுதந்திரம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது. மாஜிஸ்டிரேட் கூட மாவுக்கட்டை பார்த்து பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டாயா என்று கேட்பதில்லை. அவருக்கும் பழகி யிருக்கும். நாம் கூறப்போவது சற்று ஜென்டிலமேன் தனமான விசாரணை முறை. இதில் இன்னொரு வகைதான் உண்மை கண்டறியும் சோதனை. இதில் நம் இதயத்துடிப்பு, கண்கள், நாடி என பல்வேறு விஷயங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கு டிமிக்கி கொடுக்கும் விஷயங்கள் அமெரிக்க உளவுத்துறையில் கற்றுத்தரப்படுகின்றன. 1921 ஆம் ஆண்டு ஜான் அகஸ்டஸ் லார்சன், லை டிடெக்டர் கருவியைக் கண்டுபிடித்தார். 1. குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கு தொடர்பான விவரங்களை முதலில் ஆராய்ந்து, கேள்விகளைத் தயாரிப்பார்கள். இக்கேள்வி முழுக்க குற்றம் சாட்டப்பட்டவரை பல்வேறு அடுக்குகளாக ஆராய்வதாக இருக்கும். ராபிட் ஃபயர் ரவுண்ட் போல கேள்விகளை எறிவார்கள

5ஜிக்கும் புற்றுநோய்க்கும் எந்த தொடர்புமில்லை!

படம்
மினி பேட்டி! டாக்டர்  ராபர்ட் டேவிட் கிரைமெஸ், இயற்பியலாளர் 5 ஜி பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் என்கிறார்களே? ஐ.நாவின் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு கூறிய தகவல்களை வைத்து இக்கேள்வியைக் கேட்கிறீர்கள். ஆனால் அது 2பி எனும் குறிப்பிட்ட ரேடியோ அலை சார்ந்தது. இந்த அலை புற்றுநோயை உண்டாகும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடையாது. ஸ்மார்ட் போன்கள் புற்றுநோய்கட்டிகளை மூளையில் உண்டாக்கும் என்பது உண்மையா? உலக நாடுகளில் பயன்படுத்தும் அனைத்து போன்களும் குறிப்பிட்ட அலைவரிசை கொண்ட கதிர்வீச்சை வெளியிடுகின்றன. இந்த போன்களில்தான் நாம் நெடுநேரம் நண்பர்களிடம் உறவுகளிடம் பேசி வருகிறோம். மேலும் இதில் பயன்படும் ரேடியோ அலைகள் உங்களை பாதிக்கும் அளவு அயனிகள் கொண்டவை அல்ல. 5ஜி அலைவரிசையில் டிரான்ஸ்மிட்டர்கள் அதிகம் பயன்படுகின்றன. இது ஆபத்தில்லையா? ட்ரான்ஸ்மிட்டர்களைப் பயன்படுத்துவதால் கதிர்வீச்சு அதிகம் என்று கூற முடியாது. தகவல்களை வேகமாக பரிமாறிக்கொள்ளவே இதனைப் பயன்படுத்துகின்றனர். 5 ஜி பற்றி மட்டும் ஏன் இத்தனை வதந்திகள் பரவுகின்றன? பிற தொழில்நுட்ப வசதிகள் போன்றதல்ல 5ஜி. உலகில் பல்வ

5 ஜி வந்தால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்?

படம்
இந்தியாவில் 4ஜி வேகத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவது ஜியோதான். கட்டை ரேட்டில் இந்த வேகமா என்று மிரட்டுகிறது. அதே வேளையில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவே பிஎஸ்என்எல் போராடி வருகிறது. இந்த லட்சணத்தில் தொழில்நுட்ப அப்டேட் ம்ஹூம் வாய்ப்பே இல்லை. ஏர்டெல்லிடம் மூச்சு பேச்சே காணோம். 5 ஜி என்பது முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றம். இதனை ஜியோ கையில் எடுக்க வாய்ப்புள்ளது. உலகம் 6 ஜி தொழில்நுட்பத்திற்கான ஆய்வுகளில் உள்ளது. ஹூவெய் போன்ற நிறுவனங்கள் இதனை சிறப்பாக வழங்கலாம். இப்போது அதன் பலன்களைப் பார்த்துவிடுவோம். தொழில்வளர்ச்சி விர்...... 5ஜி டேட்டா வேகத்தில் இணையம் தொங்காமல், படம் தரவிறக்குவது மில்லினியர்களின் கனவு. அதைக்கடந்து தொழில்துறை 89 சதவீதம் வளரும் என்கிறது பிஎஸ்பி எனும் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை. தொலைத்தொடர்பு சிறப்பு! ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் இன்னும் செலவு குறைவாக தங்கள் சேவைகளை வழங்கலாம். மின்சிக்கனமாகும். வேகம் அதிகரிக்கும். தடையில்லாத சிக்னல் மெட்ரோ ரயில்களில் சென்றாலும் கிடைக்கும். ஸ்மார்ட் வகுப்பறை! அனைத்து வகுப்புகளும் 5 ஜியில் இணைக்கப்பட்டிருக்கும். எனவ