இடுகைகள்

இந்தியாவின் அரசியல் மற்றும் கொள்கைகளை விரிவாக பேசும் நூல்

படம்
      புத்தகம் புதுசு! எ நியூ ஐடியாஸ் ஆப் இந்தியா ஹர்ஸ் மதுசுதன் ராஜீவ் மந்திரி வெஸ்லேண்ட் ப.384 ரூ.799 இந்தியாவின் அரசியல் மற்றும் கொள்கைகளை விரிவாக பேசும் நூல் இது. இத்துறையில் உள்ள ஆசிரியரின் அனுபவம் நூலின் பக்கங்களை வாசிக்க வைக்கிறது. ஹவ் டு ரைஸ் எ டெக் ஜீனீயஸ் சானெய்லா சயீத் ஹாசெட் ப. 256 ரூ. 599 நாம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்துக்கொண்டு கணினி தொடர்பான பல்வேறு தியரிகளை எப்படி கற்றுக்கொள்ளமுடியும் என பலரும் நினைப்பார்கள். ஆனால் அது சாத்தியம்தான் என்று சொல்லுகிறது இந்த புத்தகம். தி இன்கிரடிபிள் ஹிஸ்டரி ஆப் தி இந்தியன் ஓசன் சஞ்சீவ் சன்யால் ப.256 ரூ. 250 இந்தியப் பெருங்கடல் பற்றிய நிலப்பரப்புரீதியான வரலாற்றை பேசுகிறது இந்த நூல். நிறைய நுட்பமான தகவல்களை நூல் முழுக்க தூவியிருக்கிறார்கள். படித்து பரவசமடையுங்கள். குயின் ஆப் எர்த் தேவிகா ரங்காச்சாரி ப. 200 ரூ. 299 ஒன்பதாவது நூற்றாண்டில் ஒடிஷாவில் நடைபெறும் கதை. இதில் நாயகி பல்வேறு அரசியல் சதிகள், துரோகங்களை சந்தித்து எப்படி வெற்றி பெறுகிறாள் என்பதை சொல்லியிருக்கிறார்கள். TNIE

இரக்கம் வேண்டாம் வருமானம் வேண்டும் ! சேட்டன் பகத்!

படம்
        rediff     இரக்கம் வேண்டாம் வருமானம் வேண்டும் ! சேட்டன் பகத்! அண்மையில்தான் விவசாய மசோதாக்கள் மூன்று மக்களவையில் தாக்கலாகி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அவை சட்டமாக்க குடியரசுத்தலைவரும் கூட ஒப்புதல் வழங்கி்விட்டார். இம்மசோதாக்கள் விவசாயத்துறையில் சீர்திருத்தத்தை முன்மொழிகின்றன. இதனால் மசோதாக்கள் பற்றிய விமர்சனங்கள், எதிர்ப்புகள் உருவாகியுள்ளன. தற்போதைய முறையில் அரசு குறைந்தபட்ச விலையை விவசாயிகளுக்கு அளிக்கிறது. அவர்கள் தங்கள் பொருட்களை தனியாருக்கு அல்லது மாநில அரசுகளின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விற்று வருகின்றனர். இனிமேல் அப்படி உள்ளூரில், மாநிலத்தில் விற்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது. நல்ல விலை கிடைத்தால் பொருட்களை கிடங்கில் வைத்து நிதானமாக பொருட்களை விற்கலாம், மேலும் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு விவசாயம் செய்யமுடியும். சிலர் இம்மசோதாவை குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கும் முறையை ஒழிக்கிறது எனலாம். அதுதானே விவசாயிகளின் பொருட்களுக்கு விளைபொருட்களின் விலை தாழ்ந்தாலே ஏறினாலோ நஷ்டம் ஏற்படாமல் காக்கிறது என வாதிடலாம். இன்னொருவகையில் அரசிடம்

ஷியாம பிரசாத் முகர்ஜியின் வாழ்க்கை! - பிரிவினைவாதியா? இந்தியாவை ஒருங்கிணைக்க நினைத்தவரா?

படம்
    ஷியாம பிரசாத் முகர்ஜி ஷியாம பிரசாத் முகர்ஜி 1901ஆம் ஆண்டு ஜூலை 6 அன்று பிறந்தார். 1921ஆம் ஆண்டு பிஏ ஆங்கிலம் ஹானர்ஸ் படிப்பை பிரசிடென்சி கல்லூரியில் படித்தார். முகர்ஜி முதலில் இந்திய வங்க பிரிவினையை தீவிரமாக எதிர்த்தார். ஆனால் 1946ஆம்ஆண்டு வங்கத்தில் கொல்கத்தா, நோக்காளி ஆகிய இடங்களில் ஏற்பட்ட வன்முறை அவரது எண்ணத்தை மாற்றியது. ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதில் முழு உறுதியாக இருந்தவர் முகர்ஜி. மேற்கு வங்கத்தின் ஆளுநராகவும், சட்டமன்ற மேலவை தலைவராகவும் இருந்த ஹரேந்திர கூமர் முகர்ஜிதான், ஷியாம பிரசாத் முகர்ஜிக்கு வீட்டில் டியூசன் எடுத்த ஆசிரியர். முகர்ஜியின் தந்தை பெயர் சர் அசுதோஷ் முகர்ஜி. ஷியாம பிரசாத் முகர்ஜி, வங்க நிவாரண கமிட்டி ஒன்றை தொடங்கி பணியாற்றினார். பின்னர் அங்கு இருந்து இந்து மகாசபைக்கு சென்றார். அங்கு சென்றபிறகு, அந்த அமைப்பில் முஸ்லீம்கள் சேர பல்வேறு முயற்சிகளை எடுக்க நினைத்தார். ஆனால் அமைப்பின் தலைவர் வி.டி சாவர்கர் அதனை நிராகரித்தார். இதனால் அந்த அமைப்பிலிருந்து முகர்ஜி விலகிவிட்டார். 1923ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில ஆதிக்கம் அதிகம் இருந்தது. அங்கிரு

விவசாய மசோதாக்களை எதிர்த்து நாங்கள் மக்களோடுதான் நிற்போம்! ஹர்சிம்ரத்கௌர் பாதல்

படம்
        ஹர்சிம்ரத்கௌர் பாதல்     ஹர்சிம்ரத்கௌர் பாதல் முன்னாள் உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் எதற்காக மத்திய அமைச்சரவையிலிருந்து பதவியை ராஜினாமா செய்தீர்கள்? எனது கட்சியும் நானும் மத்திய அரசு அமல்படுத்திய மூன்று விவசாயத்துறை மசோதாக்களை தீவிரமாக எதிர்க்கிறோம். இவை விவசாயிகளுக்கு எதிர்ப்பானவை. அரசிடம் நான் என் தரப்பு வாதங்களை முன்வைத்தும் அவை பயன் தரவில்லை. அவை மக்களவையில் வெற்றி பெற்றுவிட்டன. வேறு வழியில்லாத நிலையில் நான் எனது பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். விவசாயிகளுக்கான முன்னுரிமையை  எங்களது கட்சி முதலில் இருந்தே அளித்து வருகிறது. அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றபோது நாங்கள் எங்களது கருத்தை ஜனநாயகப் பூர்வமாக முன்வைத்தோம். தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிடமும் எங்கள் மறுப்பை தெரிவித்தோம். ஆனால் அவர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை. எனவே, எங்களுக்கு வேறு வழியில்லாமல் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தோம். இ்ப்போது விவசாயிகளுடன் இணைந்து மசோதாவுக்கு எதிராக போராடி வருகிறோம். மசோதா அங்கீகரிக்கப்படும்போது கேபினட்டில் இருந்ததாக கூறுகிறார்களே? நான் அதை மறுக்கவில்லை. அப்போதும் எங்கள் கட்சியின் ஆட்சேபங்க

புலனாய்வு கட்டுரைகளில் சாதனை படைத்த செய்தியாளர்! - சர் ஹரால்டு ஈவன்ஸ்

படம்
    சர் ஹரால்டு ஈவன்ஸ்   புலனாய்வு செய்தியாளர்! சர் ஹரால்டு ஈவன்ஸ், 92 வயதில் கடந்த புதன்கிழமை அன்று மறைந்தார். பிரிட்டிஷ் அமெரிக்க ஆசிரியரான இவர் இத்துறையில் 70 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். புலனாய்வு செய்தியாளர்,  வார இதழ் நிறுவனர், புத்தக வெளியீட்டாளர், ஆசிரியர் என அவரது தலைமுறை சார்ந்து பல்வேறு சாதனைகளை படைத்தவர். இங்கிலாந்தில் வெளிவரும் சண்டே டைம்ஸ் ஆசிரியராக ஈவன்ஸ் பணியாற்றினர். இவரும் இவரது தலைமையின் கீழ் அமைந்த குழுவும், மனித உரிமை மீறல்கள், அரசியல் ஊழல்கள் என பல்வேறு சமூக சீர்கேடுகளை அவலங்களை வெளியே கொண்டு வந்த பெருமை உடையவர்கள். தாலிடோமைட் எனும் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு இழப்பீடு வேண்டி, ஈவன்ஸ் எழுதிய கட்டுரை பத்தாண்டுகளுக்குள் அவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தந்த்து. 14 ஆண்டுகள் சண்டே டைம்ஸில் பணியாற்றியர் பின்னாளில் டைம்ஸ்  பத்திரிகைக்கு மாறினார். ரூபர்ட் முர்டோக் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையை வாங்கியதுதான் காரணம். அவர் வாங்கியபிறகு ஈவன்ஸ் ஒரு ஆண்டுதான் அங்கு வேலை செய்தார். அதற்குப் பிறகு உரிமையாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து அமெரிக்காவுக்

அடுக்குமாடியில் விவசாயம்! - புதிய விவசாய முறையில் உற்பத்தி கொட்டுகிறது

படம்
  cc   அடுக்கு மாடியில் விவசாயம் ! இன்று விவசாயம் செய்வதற்கான குறைந்தபட்ச ஆர்வம் அனைவருக்கும் இருக்கிறது . ஆனால் அதற்காக தேவைப்படும் நிலம் என்பதை பலரும் தடையாக நினைத்து முடங்கிவிடுகின்றனர் . சிங்கப்பூரில் பள்ளிகள் , வணிக வளாகங்கள் , வாகன நிறுத்தங்கள் , பன்னடுக்கு வளாகங்கள் , குடியிருப்புகள் என எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் விவசாயம் செய்துவருகின்றனர் . ” இன்றைய சிங்கப்பூரில் விவசாய தலைமுறை என்பதே இல்லாமல் போய்விட்டது” என்கிறார் ஐ . நாவின் புதுமைத்திறன் மற்றும் சூழலுக்குகந்த விவசாய அமைப்பின் தலைவரான பிராட்லி பசெட்டோ . இன்று சிங்கப்பூரில் 1 சதவீத நிலப்பரப்பில் , அதாவது , 720 சதுர கி . மீ . பரப்பில் விவசாயம் சிறப்பாக நடைபெற்று வருகிறது . இந்நாடு , தற்போது 90 சதவீத உணவுப்பொருட்களை இறக்குமதி செய்துவருகிறது . 2030 க்குள் 30 சதவீத உள்நாட்டு உணவு உற்பத்தி என்பதே சிங்கப்பூர் அரசின் லட்சியம் . 2014 ஆம் ஆண்டில் இங்கு 31 வணிகரீதியான விவசாயப் பண்ணைகள் தொடங்கப்பட்டுவிட்டன . நாட்டில் விவசாயத்தை வளர்க்க 20.7 கோடி ரூபாயை அரசு மானியமாக அளித்துள்ளது . தொழில்நுட்பங்கள் எப்போது கூடுதல்

உணவுத்துறையில் ரோபோக்களின் பங்கு!

படம்
  cc   உணவுத்துறையி ல் ரோபோ ! அமெரிக்காவில் பிளென்டி என்ற உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம் உள்ளது . இந்நிறுவனம் , வீட்டின் உள்ளறைகளில் உணவுப் பயிர்களை வளர்க்கும் தொழிலை செய்துவருகிறது . இதனை பராமரிப்பது மனிதர்கள் அல்ல ரோபோக்கள்தான் . அந்த வகையில் கொரோனா பாதிப்பால் தற்போது உணவுத்துறையில் ரோபோக்களை நிறுவனங்கள் நாடத் தொடங்கியுள்ளன . காரணம் மனிதர்களிடமிருந்து நோய்த்தொற்று எளிதாக பரவும் ஆபத்துதான் . ” மக்கள் மனிதர்களின் கைபடாத காய்கறிகளை அச்சமின்றி சாப்பிட விரும்புகிறார்கள் . காய்கறிகளை முதல் நபராக மக்கள் தாங்களே தொட்டு சாப்பிட நாங்கள் உதவுகிறோம்” என்கிறார் பிளென்டி நிறுவன இயக்குநர் மேட் பர்னார்டு . இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரோபோக்கள் மூலம் தொடங்கப்பட்ட கஃபே எக்ஸ் நிறுவனம் , முதலீடு இன்றி தடுமாறியது . ஆனால் இன்று நோய்த்தொற்று காரணமாக மனிதர்கள் இல்லாத உணவகங்களுக்கு வரவேற்பு பெருகிவருகிறது . பிளென்டி போன்ற உணவுப்பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இ வலைத்தளங்கள் மூலம் ஏராளமான ஆர்டர்கள் வரத்தொடங்கியுள்ளன . பீட்சா விற்கும் நிறுவனங்களும் இப்போது மனிதர்களின் கைபடாமல் பீட

பசுமைத்திட்டங்கள் நகரங்கள் பாதிப்பைக் குறைக்க வாய்ப்பிருக்கிறதா? பசுமை வளைய திட்டங்கள் தொடக்கம்

படம்
      பிக்சாபே         பசுமை பாதுகாப்பு வளையம் ! பருவச்சூழல் மாறுபாடுகளால் உலக நாடுகள் அனைத்தும் வெள்ளம் , புயல் , வறட்சி , சுனாமி , நிலநடுக்கம் ஆகிய இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன . இதற்கு முக்கியக்காரணம் , அதிகரிக்கும் மக்கள் தொகையும் அதன்விளைவாக வேகமாக அழிக்கப்படும் காடுகளும்தான் . தற்போது இந்தியாவில் காடுகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன . 2100 ஆம் ஆண்டில் மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் பெரு நகரங்களில் வசிப்பார்கள் என்பதால் , நகரில் உள்ள பல்வேறு ஏரிகள் , குளங்கள் , சதுப்புநிலங்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் அவசியம் உருவாகி வருகிறது . ” மனிதர்களின் ஆரோக்கியம் இயற்கைச்சூழலோடு தொடர்புடையது” என்று ஐ . நா . அமைப்பின் தலைவர் அன்டானியோ குடாரெஸ் கூறியுள்ளார் . இயற்கைக் சூழல் பற்றி ஐ . நா அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது . அதில் , இயற்கையின் பன்மைத்துவச்சூழல் அழியும்போது , நுண்ணுயிரிகள் விலங்குகளிடமிருந்து மிக எளிதாக மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டது . தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் இயற்கைச்சூழலை பாதுகாப்பதற்கான பணிகளை

குஜராத்தில் மர்மமாக பலியாகி வரும் சிங்கங்கள்!

படம்
  cc   மர்மமாக பலியாகும் ஆசிய சிங்கம் ! கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி இந்தியப் பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் காடுகளிலுள்ள சிங்கங்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது என்று கூறினார் . அவர் கூறாமல் விட்ட விஷயம் , நடப்பு ஆண்டின் ஜனவரி மாதம் வரை 92 சிங்கங்கள் பலியாகி உள்ளதுதான் . நாட்டில் வாழும் சிங்கங்களில் 40 சதவீத சிங்கங்கள் , கடந்த மே மாதத்தில் மட்டுமே பலியாகி உள்ளன என்பது அதிர்ச்சியான செய்தி . ஆசிய சிங்கங்களின் கணக்கெடுப்பு என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது . பதினைந்தாவது முறையாக நடக்கவிருந்த கணக்கெடுப்பு பணி , கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக கைவிடப்பட்டிருக்கிறது . இந்தியாவில் ஆசிய சிங்கங்கள் குஜராத்திலுள்ள கிர் காடுகளில்தான் வாழ்கின்றன . இதுபற்றி தகவல்களை அறிய மே 29 அன்று சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இதற்கென தனி கமிட்டையை அமைத்தது . இதில் பெறப்பட்ட அறிக்கைகள் சிங்கங்களின் இறப்பை உறுதிசெய்துள்ளன .. ” இங்கு வாழும் சிங்கங்களை தாக்கிய வைரஸ் தீவிரமாக பரவியதால் சிங்கங்களின் மரணம் நிகழ்ந்துள்ளது நாங்கள் நோயுற்று சிகிச்சை பெற்றுவரும் இரண்டு சிங்

இணைய உலகை ஆளும் கருப்பு உலக ராஜாக்கள்! எதிர்கொள்வது எப்படி?

படம்
        பிக்சாபே   கருப்பு உலக ராஜாக்கள் ! இன்று நம்முடைய தினசரி நடவடிக்கைகள் பலவும் இணையம் சார்ந்ததாக , ஸ்மார்ட்போனிலேயே செய்துகொள்ள முடிவதாக மாறிவிட்டன . அலுவலகப் பணிகளை வீட்டிலிருந்தே இணையம் மூலம் செய்யமுடிகிறது . பல்வேறு கட்டணங்களை ஸ்மார்ட்போனிலிலுள்ள செயலிகள் மூலம் கட்ட முடிகிறது . அதேசமயம் , இதில்தான் பல்வேறு தில்லுமுல்லும் , மோசடிகளும் நடந்தேறுகின்றன . மார்ச் 11 அன்று , உலக சுகாதார நிறுவனம் கோவிட் -19 நோயை பெருந்தொற்றாக அறிவித்தது . இக்காலத்தில் மக்களுக்கு ஏராளமான ஸ்பாம் எனும் குப்பை மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன . இவற்றை அவசர உதவி தேவை என்று திறந்தவர்களின் தகவல்கள் திருடப்பட்டன . கணினியில் இருந்த தகவல்கள் அழிந்துபோயின . இதுபோன்ற சூழலைத் தடுக்கவே சீனா 1 லட்சம் , பாகிஸ்தான் 10 ஆயிரம் , இந்தியா 1000 பேர் என தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிக்கு எடுத்து தகவல்களை பாதுகாத்து வருகின்றனர் . இவர்களின் செயல்பாட்டை (Hackers as a service) என்று அழைக்கின்றனர் . பொருளாதார மந்தநிலை உள்ளபோதும் , ஹேக்கர்ஸ்களால் பல்வேறு இணையம் சார்ந்த குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன அண்மையில் சீன ஹேக்கர்கள் ,

குளோனிங் முறைக்கு உருவாகும் எதிர்ப்புகள்!

படம்
      காணாமல் போன குளோனிங் முறை ! நம்மைபோல இன்னொருவர் இருந்தால் எப்படியிருக்கும் ? இந்த எண்ணத்தை சாத்தியப்படுத்திய குளோனிங் ஆராய்ச்சிகள் தொடங்கி இருபது ஆண்டுகள் ஆகின்றன . ஆனால் இன்றுவரை டிஎன்ஏ விஷயங்களில் நிறைய முன்னேற்றங்களை அடைந்தும் , ஆராய்ச்சியாளர்கள் அதனை பெரியளவில் தொடரவில்லை . இம்முறையில் உள்ள இடர்ப்பாடுகள்தான் இதற்கு காரணம் . 1996 ஆம் ஆண்டு டாலி என்ற செம்மறியாடு குளோனிங்கில் உருவாக்கப்பட்டது . இம்முயற்சி வெற்றியடைய 277 முறை ஆராய்ச்சியாளர்கள் உழைக்கவேண்டியிருந்தது . அதைத் தொடர்ந்து முயல் , எலி , குதிரை , நாய் பல்வேறு விலங்குகளும் உருவாக்கப்பட்டன . குளோனிங் முறையின் மூலம் மனிதர்களின் வாழ்நாளை அதிகரிக்கும் முடியும் என்றுதான் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன . ஆனால் மனிதர்களிடமிருந்து பெறப்பட்ட செல்களால் உருவாகும் குளோனிங் நகலின் வாழ்நாள் குறைவாகவே உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டது . தானம் பெறப்பட்ட குரோமோசோம்களை கருவில் வைத்தாலும் அதன் தன்மை , மனிதர்களுடையதைப் போல இயல்பாக இல்லை . தானம் பெறப்பட்ட முட்டையிலிருந்து மையக்கருவை எடுப்பதும் கடினமானதாகவே ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்த