இடுகைகள்

மொழியைப் பேச தெரியாமல் இன்னொரு மொழி படத்தில் நடிக்க முடியாது! - அர்ஜூன் ராம்பால், இந்தி நடிகர்

படம்
  அர்ஜூன் ராம்பால், இந்தி நடிகர் அர்ஜூன் ராம்பால் இந்தி நடிகர் லண்டன் டயரிஸ் படத்தில் உங்களுடைய பாத்திரம் தனிப்பட்ட ரீதியில் தாக்கம் ஏற்படுத்தும்படி இருந்ததா? தனியாக யாரும் இல்லாமல் ரகசியங்களை தேடித்திரியும் துப்பறிவாளன் ஒருவரின் கதை. பொதுவாக நாம் அனைவரும் பெருந்தொற்று காலத்தில் தனியாக இருந்திருப்போம். அப்போது கூட நமக்கென குடும்பம், மனிதர்கள் என ஒரு வட்டாரம் இருந்திருக்கும். ஆனால் இப்படி ஏதுமின்றி ஒரு மனிதன் இருந்தால் எப்படியிருக்கும்? நான் ஏற்று நடித்த பாத்திரம் அப்படித்தான் எனக்குள் சுவாரசியமான தாக்கத்தை ஏற்படுத்தியது.  ஓடிடி உங்களுக்கு சவாலான பாத்திரங்களை வழங்கியதா? அப்படி சொல்ல முடியாது. கடந்த சில ஆண்டுகளாக நான் நடித்த பல படங்கள் தவறான தேர்வுகளைக் கொண்டவை. அபர்ணா சென்னின் தி ரேப்பிஸ்ட், தாக்கத் ஆகிய படங்களை நான் தேர்ந்தெடுத்தேன். இவை உண்மையில் நடந்த நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொண்டவை. நீங்கள் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுடன் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்ததே? நடிக்க கேட்டார்கள். எனக்கு தெலுங்கு மொழி தெரியாது. இந்த நிலையில் அங்கு போய் எப்படி நடிப்பது என நான் என்னால் முடியாது என மறுத்துவ

மார்க்கெட்டைப் புரிந்துகொண்டு வளர வேண்டும்! - ஐஸ்வர்யா ரெட்டி, கென்சு

படம்
  ஐஸ்வர்யா ரெட்டி, கென்சு ஐஸ்வர்யா ரெட்டி நிறுவனர், கென்சு ஐஸ்வர்யா, இந்திய வடிவமைப்பில் சற்று நவீனத்துவத்தை குழைத்து பல்வேறு நாற்காலிகள் மற்றும் உள் அலங்காரங்களை செய்து வருகிறார். இவரது வடிவமைப்பு மூலம் தொன்மையான இந்திய வடிவமைப்பில் அமைந்த பொருட்கள் நவீனத்துவ அழகுடன் மிளிர்கின்றன. 2019ஆம் ஆண்டில்தான் கென்சு என்ற சொகுசு பொருட்களுக்கான நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.  உங்கள் தொழிலில் முக்கியமான ஊக்கம் என்ன? எனது தந்தை நாகராஜ் ரெட்டி, எனக்கு பெரும் ஊக்கம் தருகிறார். குறிப்பிட்ட காலத்தில் வணிகம் செய்யும் நாகராஜ் பல்வேறு சவால்களை சந்தித்து தொழிலை செய்தவற்கான ஊக்கத்தை எனக்கு கொடுத்திருக்கிறார்.  நீங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்ன? மார்க்கெட்டை புரிந்துகொண்டு காலத்திற்கேற்ப மாறி வளர்ச்சி பெறவேண்டும் என்பதைத்தான் கற்ற பாடம் என்பேன்.  தொழில்முனைவோராக நீங்கள் கூற நினைக்கும் அறிவுரை என்ன? பொறுமை விடாமுயற்சி தொழிலுக்கு முக்கியம். எதுவுமே இல்லாமல் அடிப்படையின்றி முன்னேறி வளர்வது எளிதல்ல. நமக்கான நெட்வொர்க்கை நாம் உருவாக்கிவிட்டால் தொழிலை எளிதாக  செய்ய முடியும். வாடிக்கையாளர் கொடுக்கும் கருத்துகளை திற

பசித்த வயிற்றின் மீது எதற்கு கோபம்? - உணவு அரசியலால் தவிக்கும் குழந்தைகள்

படம்
  உணவை மக்களுக்கு விநியோகிப்பவர்கள் அதன் மீதான ஆதிக்கத்தை செலுத்துகின்றனர். எந்த உணவை மக்கள் சாப்பிடவேண்டுமென அறிவியல் பூர்வமான ஆய்வுகளை புறக்கணித்து தங்கள் மனதில் உள்ள நம்பிக்கையை புகுத்த தொடங்கிவிடுகின்றனர். இலவசமாக கொடுக்கும் உணவுகள் பெரும்பாலும் சைவமாகவே இருப்பது தற்செயலானது அல்ல.  கடந்த ஆண்டு, கர்நாடகத்தில் எம்என்எம் மகளிர் பள்ளியில் மதிய உணவுத்திட்டத்தில் இருந்து முட்டை திடீரென நீக்கப்பட்டது. இதற்கு உள்ளூரைச்சேர்ந்த அரசியல்வாதிகளே காரணம் என மாணவிகள் அறிந்தனர். கர்நாடகத்தில் கொப்பல் மாவட்டத்தில் அமைந்துள்ள அப்பள்ளியின் சுற்றுவட்டாரத்தில் ஊட்டச்சத்து சார்ந்த பிரச்னை நீங்காமல் இருக்கிறது. இந்த நிலையில் மதிய உணவுத்திட்டத்தில் இருந்து முட்டையை நீக்கினால் எப்படி? இதை அங்குள்ள மாணவி அஞ்சலி தீவிரமாக எதிரொலித்தார்.  தற்போது மத்திய அரசின் மதிய உணவுத்திட்டத்திற்கு பிஎம் போஷான் என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதை பெருமைப்படுத்தும் விதமாக இதுவரை உணவில் இருந்த முட்டையை நீக்கிவிட்டனர். இப்போது மதிய உணவில் சமைத்த காய்கறிகள் சேர்த்த உணவு மட்டுமே வழங்கப்படுகிறது.  நாங்கள் என்ன சாப்பிடவேண்டும் என

மரப்பாச்சி சொன்ன ரகசியம் நாவல் - இனி இலவசமாக யாரும் அச்சிட்டு விற்கலாம்!

படம்
  பல்வேறு ஊடகங்களில் வேலை பார்த்து வந்த பத்திரிகையாளர் திரு.பாலபாரதி அவர்களின் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை பேட்டி இது. இந்த பேட்டிக்கு முன்னரே, தனது வலைத்தளத்தில் மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலை யார் வேண்டுமானாலும் அச்சிட்டு விற்றுக்கொள்ளலாம் என அனுமதியை வழங்கிவிட்டார்.  மின்னூல், ஊடக படைப்பாக்கங்களுக்கு அனுமதி தேவை என கூறியிருப்பது பொதுவுடமை ஆட்களுக்கு சற்றே கஷ்டமாக இருக்கலாம்.  குழந்தைகள் மீதான  பாலியல் வல்லுறவு பற்றிய கதையைப் பேசும் நூல்  மரப்பாச்சி சொன்ன ரகசியம். இலவசமாக, எழுதிய ஆசிரியருக்கு ராயல்டி தராமல் அச்சிட்டுக்கொள்ளலாம் என்று கூறிய முயற்சிக்கு எந்தளவு ஆதரவு இருக்கும் என்று தெரியவில்லை. ஏதாகிலும் இப்படி வெளிப்படையாக அறிவித்த திரு. பாலபாரதி அவர்களுக்கு நன்றி கூறவேண்டும்.  எழுத்தை வாழ்க்கையாக வாழ்வாதாரமாக கொண்ட எழுத்தாளர்கள் இப்படி துணிச்சலாக அறிவிப்பை வெளியிட நிறைய நெஞ்சுரம், விட்டுக்கொடுத்தல் தேவை. செல்லுமிடமெங்கும் தன்னை இடதுசாரி சிந்தனையாளர் என தைரியமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் திரு. பாலபாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்.   நூல், பாலபாரதி டாட் நெட் வலைத்தளத்தில்

கொத்தடிமைகளை மீட்ட பார்வதி அம்மாள்!

படம்
”என்னுடைய அப்பா, அவரது நண்பரிடம் 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதனால் அவரிடம் நான் வேலை  செய்யும்படி சூழல் உருவானது. அப்பாவின் நண்பர் செங்கல் சூளை ஒன்றைத் தொடங்கினார். எனவே, எங்கள் குடும்பம் அங்கு வேலை செய்யத் தொடங்கியது. அதுதான் கொத்தடிமை முறை என்பது எனக்கு தெரியாது. ” செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றதும் பார்வதியின் கல்வி தடைபட்டது. தாத்தா, பாட்டி பார்வதியை பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று கூறினர். பள்ளியில் பிள்ளைகளை அடிப்பார்கள் என்று கூறி தடுத்துவிட்டனர். இதனால் வேலை மட்டுமே பார்வதி அம்மாள் அறிந்த விஷயம். காலையில் எழுந்தவுடன் பெற்றோருடன் வேலைக்கு செல்வார். பின்னாளில் மரம் வெட்டும் வேலைகளுக்கு சென்றார். இந்த வேலை, பார்வதியின் மாமனார் அவரது திருமணத்திற்காக வாங்கிய 2 ஆயிரம் ரூபாய் கடனுக்காக செய்யும்படி ஆனது.  பார்வதியும் அவரது கணவரும் அந்த செங்கல் சூளையில் சில ஆண்டுகள் வேலை செய்து கடனை கழித்தபிறகு வேறு சூளைக்கு மாறினார்கள். அங்கு முதலாளியிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்கள். இத்தொகையை வைத்து வீட்டுக்கு குடியேறி வாழ நினைத்தனர். இதற்குள் பிறந்த மூன்று குழந்தைகளை பார்வதி, அவரின்

நாகப்பட்டினத்தை பசுமையாக்கும் ஆசிரியர்! - அருள்ஜோதியின் அரிய பணி

படம்
  நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் அருள் ஜோதி. இவர் கொலப்பாடு கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 2018ஆம் ஆண்டு இயற்கை பேரிடராக ஏற்பட்ட கஜா புயலால் ஏராளமான மரங்கள் அழிந்துபோயின. இதைப் பார்த்து கவலைப்பட்டவர், அதோடு நின்றுவிடாமல் இயற்கையான பரப்பை மீட்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.  தனது ஆசிரியர் நாகராஜ், தந்தை சண்முக சுந்தரம் ஆகியோரின் ஊக்கத்தால் நேஷனல் க்ரீன் கார்ப்ஸ் எனும் அரசின் சூழல் திட்டத்தைப் பயன்படுத்தி மரக்கன்றுகளை நட்டு வருகிறார். இதில் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தி பசுமை செயல்களை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  வீதிதோறும் பழமரம், வீதிதோறும்  நிழல்மரம் எனும் இரு திட்டங்களை அருள்ஜோதி உருவாக்கியுள்ளார். இந்த வகையில் வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றாவது இருக்கும் நிலையை உருவாக மெனக்கெட்டுவருகிறார். இப்படி 200 வீடுகளில் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். தனிப்பட்டவர்களின் வீடுகளில் மரக்கன்றுகளை நடுவதும் பராமரிப்பதும் எளிது. ஆனால் பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு அதற்கு நீர்விட்டு பராமரித்து வருவது கடினமானது. இந்த சூழலையும் அருள்ஜோதி சமாளித்து வந்திருக்கிறார்.  மண்ணுக்கு சொந்த

எனக்கு விதிகள்தான் முக்கியம்! - பழுத்த மிளகாய் சோள முறுக்கு

படம்
  1 அன்புக்குரிய இனிய மக்களே, வணக்கம்.  நலமாக உள்ளீர்களா? நீங்கள் நலம் என்று பதில் தருவதை விட நாடு நன்றாக இருக்கட்டும் ஐயா, நான் அதற்குப் பிறகு தான் நலமாக இருப்பேன் என்று சொன்னால் நன்றாக இருக்கும். நான் அதைத்தான் விரும்புகிறேன் என்பதால், நீங்கள் கட்டாயம் அதைத்தான் கூறவேண்டும்.  இப்போது பாருங்கள் டிஜிட்டல் வழியில் ஏராளமாக மக்கள் செலவழித்து வருகிறார்கள்.  இதற்காகத்தான் அரசு, பணத்தை அச்சிடுவதை நிறுத்தி வைத்தது.சமயம் கிடைக்கும்போது பணத்தை செல்லாது என சொல்லிவிட்டு நான் வெளிநாட்டிற்கு போவது மூலம் நாடு நல்வழிக்கு திரும்பியுள்ளது.  எனக்கு விதிகள் தான் முக்கியம். நான் பொது மக்களோடு இணைந்துள்ளேன். முதலில் நாட்டைக் காப்பாற்றுவதுதான் முதல் பணி. பிறகுதான் எங்கள் சகோதர  குண்டர்கள் படை கிளம்பிட்ட பிரச்னைகளை சமாளிப்பது.  நம்முடைய தேசத்தில் தோமா தான் ராஜா. அவர் கூற்றுப்படி தர்மம்தான் முதலில் வழங்கப்பட வேண்டும். எனவே பல்வேறு ஒலைச்சுவடிகளில் இதைப்பற்றி படித்துள்ளதாக நாங்கள் தீவைத்து எரிக்கும் முன்னர் பண்டிதர்கள் கூறியதாக வன்முறை குழு 1 என்னிடம் தகவல் தெரிவித்தனர். எனவே, சாகும்போது ஒருவர் உண்மையை கூறியிரு

காமாத்திபுராவில் பெண்கள் தபால்நிலையம்! - சாதித்த ஸ்வாதி பாண்டே

படம்
  காமாத்திபுரா பெண்கள் அஞ்சல் நிலையம், மும்பை இன்று போஸ்ட் ஆபீஸ் ஊழியர்களைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? கால வெள்ளத்தில் தடுமாறிக்கொண்டிருக்கிற ஆட்கள் போலத்தானே? உணவு, மளிகை எல்லாம் இருபது நிமிஷத்திலிருந்து பத்து நிமிஷத்திற்கு மாறிக்கொண்டிருக்கிற நிலையில் காக்கி டிரஸ் போட்டுக்கொண்டு சைக்கிளில் ஊரை சுற்றி வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஒருவகையில் இவர்கள் தான் நிதானமாக வாழுங்கள் என குறியீடாக தங்கள் உடை, வாழ்க்கை மூலம் உணர்த்துகிறார்களோ என்னமோ? மும்பையில் பிரபலமான ஏரியா காமத்திபுரா. இங்கு பாலியல் தொழில்  நடைபெறுகிறது என்பதை சொல்லும் கடைசி ஆள் நாமாகத்தான் இருக்க முடியும். அகில உலக பிரபலமான ஆதி தொழில் இடம் இதுதான். இங்கு, பிரிவினை காலத்தில் வங்கதேசத்திலிருந்து வந்த அகதிகளின் குடும்பங்கள் பிழைப்பிற்கு என்ன செய்வதென தெரியாமல் விபச்சாரத்தில் இறங்கினர். இப்படித்தான் இங்கு இன்றுவரை விபச்சாரத்தொழில் நடைபெற்று வருகிறது. தொடக்கம் வங்கதேச அகதிகள் என்றால் உள்நாட்டிலும் பெண்களை கடத்தி இந்தியர்களும் தங்கள் பங்கிற்கு தொழிலை வளர்ச்சி பெற செய்ய உதவியுள்ளனர். வரலாற்றில் இதெல்லாம் முக்கியம்தானே?

விரைவில் வருகிறது ஸ்மார்ட்சிட்டி! - முழுமையாக நகரங்களைக் கண்காணிக்கும் ஒன்றிய அரசு!

படம்
  ஸ்மார்ட்சிட்டியை கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாட்டு மையங்கள் மொத்தம் 100 ஐ அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதில் 80 மையங்கள் அமைக்கப்பட்டுவிட்டதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. மீதியுள்ளவை ஆகஸ்ட் 15 அன்று நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அண்மையில் ஸ்மார்ட்சிட்டிகளுக்கான மாநாடு சூரத்தில் ஏப்.18 - 19 என இரு நாட்கள் நடைபெற்றது. இதில்தான் மேற்சொன்ன சமாச்சாரங்களை வீட்டுவசதித்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி கூறினார்.  ஸ்மார்ட்சிட்டி திட்டம் 100 நகரங்களை மேம்படுத்துவதை உள்ளடக்கியது. இவற்றில் தற்சார்பான பல்வேறு திட்டங்களை ஒன்றிய அரசு செய்யவிருக்கிறது. ஸ்மார்ட்சிட்டி திட்டம் 2015ஆம் ஆண்டு  ஜூன் 25 அன்று தொடங்கியது.  நகரங்களில் நடப்பதற்கான பிளாட்பாரங்கள், சைக்கிளில் செல்வதற்கான தனிப்பாதைகள், போக்குவரத்து சிக்னல்களை மேம்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் ஆகியவற்றை ஸ்மார்ட்சிட்டி திட்டங்களில் முக்கியமாக கருதுகிறார்கள்.  நகரை புனரமைப்பது, பசுமை பரப்பை அதிகரிப்பது, நிலப்பரப்பு சார்ந்த அதன் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது இதில் முக்கியமான அம்சங்கள்.  கட்டுப்பாட்டு மையங்க

பணத்தைப் பின்தொடரும் வன்முறையும் பேராசையும்! - தி டர்னிங் பாய்ன்ட்

படம்
  தி டர்னிங் பாய்ன்ட் தி டர்னிங் பாய்ன்ட் இத்தாலி திரைப்படம் நெட்பிளிக்ஸ்  இத்தாலியில் உள்ள அபார்ட்மெண்ட்டில் முழுப்படமும் நடந்து முடிகிறது. மாஃபியா டான் ஒருவரின் பணத்தை ஜேக் என்ற திருடன் கொள்ளையடிக்கிறான். தப்பிக்கும் முயற்சியில் அவன லூடோ என்ற இளைஞனின் வீட்டுக்கு வருகிறான். ஜேக் ,தான் அங்கு தங்க உதவினால், லூடோவிற்கு பணம் தருவதாக டீல் பேசுகிறான். மாஃபியா டான் தனது பணத்தை பெற எந்த எல்லைக்கும் செல்பவன். பணத்தை திருடன் எளிதாக திருடிப்போக காரணம், அவனது ஆள் என புரிந்துகொண்டு அவனைச் சுட்டுக் கொல்கிறார். இதனால் அடுத்து நாம்தான் என புரிந்துகொள்ளும் டானின் ஆட்கள் இருவர் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஜேக்கைப் பிடிக்க  வேகமாக தேடி வருகின்றனர். அவர்கள் திருடனைப் பிடித்தார்களா இல்லையா என்பதுதான் கதை.  பணத்தை பின்தொடர்ந்து வெறுப்பும், வன்மமும், பேராசையும் எப்படி வருகிறது என்பதுதான் படம் வன்முறை வழியாக காட்டும் மையக்கதை.  ஜேக் பணத்தை ஏன் திருடினான் என்பதை அவனே தனது வாய்மொழியாக லூடோவிடம் சொல்லுமிடம் முக்கியமான காட்சி. ஏறத்தாழ மாஃபியா தலைவனைப் பற்றியும் அவனது கொடூரமான குணத்தை அறிந்த பிறகு, ஜேக் தப்பிச்செல்வ

உணவைக் கெடாமல் பாதுகாக்க இத்தனை வேதிப்பொருட்கள் தேவை!

படம்
  உணவுப்பொருட்களில் பயன்படும் முக்கியப் பொருட்கள் பிரசர்வேட்டிவ். தொன்மைக்காலத்தில் உப்பு, வினிகர், வாசனைப் பொருட்கள், எண்ணெய் ஆகியவை பயன்பட்டன. இப்போது நிறைய வேதிப்பொருட்களை உணவுப்பொருட்கள் கெடாமல் இருக்க பயன்படுத்துகின்றனர். அவற்றைப் பார்ப்போம்.  ஸ்டேபிலைசர்ஸ் இதில் எமுல்சிஃபையர்ஸ், திக்னர்ஸ், ஜெல்லிங் ஏஜெண்ட்ஸ், ஹியூமெக்டன்ஸ், ஆன்டி கேக்கிங் ஏஜெண்ட்ஸ்  ஆகிய பொருட்கள் உள்ளடங்கும்.  இதெல்லாம் எதற்கு? உணவு கெட்டுப்போகாமல் இருக்கத்தான்.  நைட்ரேட்ஸ் -நைடிரைட்ஸ் இறைச்சியில் நுண்ணுயிரிகள் வளராமல் தடுக்கும் வேதிப்பொருள். இதனை சேர்த்தால் இறைச்சியில் சிவப்பு நிறம் கூடுதலாக இருக்கும்.  ஆன்டிபயாடிக்ஸ் பண்ணை விலங்குகளின் இறைச்சியில், பதப்படுத்தப்பட்ட கேன் உணவுகளில் பயன்படும் வேதிப்பொருள். எடுத்துக்காட்டு டெட்ராசைகிளைன்ஸ்.  ஹியூமெக்டன்ட்ஸ்  இவை, பொருளில் உள்ள ஈரப்பத தன்மையைக் குறைக்கிறது. இதன் காரணமாக பொருள் அதன் இயல்பான தன்மையில் சில காலம் நீடிக்கும். எடுத்துக்காட்டு துருவிய தேங்காய்.  ஆன்டி ஸ்டாலிங் ஏஜெண்ட்கள் சில பொருட்களில் சேர்க்கப்படுகின்றன. இவை பேக்கரி உணவுகளில் ஈரப்பதமும், மென்மையும் குறை