இடுகைகள்

நோயை எதிர்க்கும் போராட்டத்தில் தன்னை உணர்ந்துகொள்ளும் தந்தையின் கதை! ட்ரெயின் டு பூஸன்

படம்
  டிரெய்ன் டு பூஸன் 2016 Director:  Yeon Sang-ho Sequel:  Peninsula கொரியப் படம். ஜோம்பிகளை மையமாக கொண்ட படம்தான். படம் ஜோம்பிக்கான காரணம், அதன் வைரஸ், அதன் வெவ்வேறு வடிவங்கள் ஆகியவற்றைப் பற்றி பேசவில்லை. ஜோம்பிகள் தாக்கும்போது அதை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை படம்பிடித்திருக்கிறார்கள். இப்படி உணர்ச்சிகளோடு சிறப்பாக ஒன்று சேர்வதால் படம் மகத்தான வணிக வெற்றியைப் பெற்றுள்ளது.  காங் வூ, டான் லீ ஆகியோர் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். காங் வூ, நிதி நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவர் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று வாழ்கிறார். குழந்தை அவருடன் இருக்கிறது. காங் வூ தனது தாய், குழந்தையுடன் ஒரே வீட்டில் இருக்கிறார். இந்த நேரத்தில் அவரது மகளுக்கு பிறந்த நாள் வருகிறது. மகள், அம்மாவைப் பார்க்க போகலாம். அதுதான் எனது ஆசை என்கிறாள். இதனால், அவளை பூஸன் நகருக்கு ரயிலில் கூட்டிச்செல்கிறார் காங் வூ. அப்படி போகும்போது ரயிலில், ஜோம்பி பெண் ஒருவர் ஏறிவிடுகிறார். கூடவே ரயில் பணியாளர் பெண் ஒருவரைக் கடித்துவிடுகிறார். இதனால் ரயில் முழுக்க ஜோம்பிகள் பெருக, இருபது பேர் மட்டுமே இதில் பிழைக்

ஒலியே இல்லாத உலகை உருவாக்க முயல்பவனின் வாழ்க்கையில் வரும் இசை! குவ்வா கோரிங்கா -

படம்
  குவ்வா கோரிங்கா தமிழில்  காதல் பறவைகள் சத்தமே பிடிக்காமல் அலர்ஜியாக இருப்பவன், தாயின் இசை ஆர்வத்தை நிறைவேற்றுவதற்காக வயலின் இசைக்கும் பெண் என இருவரும் அருகருகே அறை அமைந்தால் எப்படியிருக்கும்.  அதுதான் படத்தின் கதை.  படத்தில் லாஜிக் பார்க்க நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஆனால் அதை பார்க்காமல் இருந்தால் படம் ரசிக்கும்படி இருக்கும். குறிப்பாக சத்யதேவ், பிரியா லால் ஆகியோரின் இரு அறைகளும் ஒருவர் பேசுவதை எளிதாக பிறர் கேட்பது போல இருப்பது.  இதுதான் படத்தின் முக்கியமான அம்சம்.  சத்யதேவைப் பொறுத்தவரை அவருடைய இயல்பில் எளிதாக படத்தில் நடித்து விடுகிறார். ஆனால் பிரியா லால் விஷயத்தில் இது சரியாக நடக்கவில்லை. அதாவது, தன்னை பிரியா பயன்படுத்திக்கொண்டார் என்பதை அவரது அப்பா மூலம் சத்யதேவ் அறியும் காட்சி. அதற்கு பின்னான பிரியா லாலின் காட்சிகள் அழுத்தமானவை. அதில் பிரியா அந்தளவு அழுத்தமாக நடிக்கவில்லை.  படத்தில் சத்யதேவின் பாத்திரத்திற்கு சைலன்சர், பிரியாவுக்கு வயலின் என்று பெயர். நிஜப் பெயரை விட இதுவே படத்தின் தன்மைக்கு மிக பொருத்தமாக ஒத்து வருகிறது. சத்யாவுக்கு, அதிக சத்தம் வராத ஒரு எஞ்சினை தயாரிப்பதே கனவ

10 நிமிட டெலிவரி பயன் தருகிறதா?

படம்
  பத்தொன்பது நிமிட டெலிவரியைப் பார்த்திருப்பீர்கள். பீட்ஸா கம்பெனிகள்தான் வேகமான டெலிவரி என்ற விஷயத்தை உருவாக்கியது. இந்தவகையில் அவர்கள் 45 நிமிடத்திலிருந்து 30 நிமிடத்திற்கு மாறினார்கள். இப்போது பிளிங்இட், பிக் பேஸ்கட், ஸ்விக்கி, ஜோமோடோ, டன்சோ என பலரும் இருபது நிமிட டெலிவரி சிஸ்டத்தில் வேலை செய்கிறார்கள். இதில் கூட டெலிவரி செய்யும் ஆட்கள் நகரங்களில் வேகமாக செல்வது,சிக்னல் விதிகளை மீறுவது என செல்கிறார்கள். இதோடு பைக் டாக்சிகளும் ஓடுவதில் பலருக்கும் குழப்பமாகிறது.  இத்தனையும்  தாண்டி ஸெப்டோ என்ற நிறுவனம் மார்க்கெட்டில் உள்ளே வரும்போதே பத்து நிமிட டெலிவரி என்று கூறி உள்ளே நுழைந்தது. இதனை தொடங்கியவர்கள் ஸ்டான்ஃபோர்ட் பல்கலையில் படிப்பை முடிக்காத இரு இளைஞர்கள். ஒன்பது மாத நிறுவனமான இதன் இயக்குநர் ஆதித் பலிச்சா. இவரது நிறுவனம் இப்போதைக்கு 11 நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது. எதிர்காலத்தில் 24 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்.  200 மில்லியன் நிதி திரட்டிய நிறுவனத்தின் மதிப்பு 900 மில்லியன் ஆகும்.  ஆதித் பலிச்சா (வலதுபுறம்) வேகமாக பொருட்களை டெலிவரி செய்த ஆர்டர் செய்பவர்களின் அருகில் கடைகள் இருக்

இந்திய சமூகத்தில் செக்ஸ் அனுபவிப்பதில் ஆர்வம் காட்டும் பெண்கள்!

படம்
1  இந்தியா டுடே இந்தியா முழுக்க ஒரே வாரம் மட்டும் பரபரப்பாக விற்கும். அந்த வாரம் அப்படி என்ன கவர் ஸ்டோரி என மனதிற்குள் கேள்வி ஓடுகிறதா? அது மக்களின் முக்கியமான வாழ்வாதார பிரச்னை என்னவென்று தெரியுமா? செக்ஸ்.  செக்ஸ் வாழ்க்கை இந்தியா முழுக்க எப்படியிருக்கிறது என சர்வே ரெடி செய்வார்கள். ஆணுறை பிராண்டுகளில் சர்வதேச பிராண்டுகள் வரை விளம்பரம் கொடுத்து அமர்க்களப்படுத்துவார்கள். இந்தியாடுடே, செக்ஸ் சர்வே என்பதற்காகவே தனியாக போட்டோஷூட் வேறு நடத்துவார்கள்.  பின்னே வாழ்க்கை பிரச்னை அல்லவா? செக்ஸ் சம்பந்தமான விஷயங்களின் ஆதாரமே பெண்கள்தான். அவர்கள்தான் இதில் முக்கியமான இயற்கை வளம். அதனை வெற்றிகொள்ளத்தான் ஆண்கள் அரும்பாடு படுகிறார்கள். இதற்காக டைம்ஸ் ஆப் இந்தியா முதல் இந்துஸ்தான் டைம்ஸ் வரை பல்வேறு டிப்ஸ்களை வாரம்தோறும் வெளியிட்டு மனித சமூகத்திற்கு அருந்தொண்டு ஆற்றுகிறார்கள்.  பழங்குடிகளைப் பொறுத்தவரை குறிப்பிட்ட வயதில் விருப்பமானவர்களை தேர்ந்தெடுத்து தனியாக தங்க வைக்கிறார்கள். இதில் பெண், ஆணோடு உறவு கொள்வது தொடங்கி வாழ்வது வரையிலான பல்வேறு பயிற்சிகள் முயன்று பார்க்கிறார்கள். இதனால் அவர்களது வாழ்க்க

அன்பெனும் தானியம் இந்திய மண்மீது - இந்தியா 75 -

படம்
  வெறுப்பு எப்படி பரவுகிறது என்றால் தொடர்ச்சியாக நரம்பில் சலைன் ஏற்றுவது போல மெல்ல மெல்ல தினமொரு செய்தியைக் கொடுத்து வெறியேற்றுகிறார்கள். அண்மையில் கிறிஸ்துவ மிஷனரியில் படித்த நண்பரொருவர், தான் படித்த இடம், கற்ற விஷயங்களைக் கூட மறந்துவிட்டு வீரத்துறவியின் காவி உடையே கட்டுமளவு துணிந்துவிட்டார். கலாசாரம் மாறாமல் இருக்கவேண்டும், தன்னைத் தவிர பிறர் அனைவரும் கட்டாயம் நேர்மையாக இருக்கவேண்டும் என சத்தியம் தர்மம் மானம் ஆகிய கொள்கைகளை பின்பற்றுபவர்.  ஒருநாள் நான் இன்னொரு நண்பரிடம் மதமாற்றம் பற்றி பேசும்போது, திடீரென உள்ளே புகுந்தவர் கிறிஸ்தவர்கள் வேண்டுமென்றே அதை செய்கிறார்கள். மக்களும் காசு பணத்திற்கு ஆசைப்பட்டு விலை போகிறார்கள் என்று சலித்துப்போய் கோபம் மேலிட பேசினார்.  நான் எனது விவாத நண்பரைப் பார்த்தேன்.அவர் புருவங்கள் சுருங்க வீரத்துறவி நண்பரைப் பார்த்தார்.  சூழலைப் பற்றி அவருக்குப் புரிய வைக்க  நானே பேசினேன்.   பிழைப்புவாதிகள் எல்லா இடத்திலும் உண்டு.இதில் குறிப்பிட்ட மதம் என்று வரம்புகள் எல்லாம் கிடையாது. ஒருவருக்கு தன்னுடைய மதம், சாதியில் கௌரவமில்லை. இழிவாக நடத்துகிறார்கள். இன்னொரு மதத்த

மேற்குலக நாடுகள் தம் நுகர்வைக் குறைத்துக்கொள்ளவேண்டும்! - அமிதவ் கோஷ், எழுத்தாளர்

படம்
  அமிதவ் கோஷ் எழுத்தாளர் தி லிவ்விங் மவுன்டைன் என்ற புதிய நாவலை எழுதியுள்ளார். இதில், மேற்குலத்தனமாக ஆக்ரோஷ வணிக திட்டங்களால் எப்படி பழங்குடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விவரித்துள்ளார். அவரிடம் பேசினோம்.  மனிதர்களால் ஏற்படும் இயற்கை மீதான பாதிப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்? ஆந்த்ரோபோசீன் என்ற வார்த்தைக்கு அர்த்தம், இன்று பெரிதுபடுத்தப்பட்டுள்ளது. மனிதர்களால் இயற்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்பது நேரடியான அர்த்தம். ஆனால் இதனை பெருமளவில் உருவாக்குபவர்கள், மேற்குலக நாடுகள்தான். ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்பு அனைவரையும் பாதிக்கிறது.  மேற்குலகில் தொழில்துறையினர் உருவாக்கிய மாடல் அங்கு வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளது. ஆனால் அதேமாடல் இந்தியாவில் செயல்பட வாய்ப்புள்ளதா? சிறுபான்மையான சமூகத்தில் வேண்டுமானால் மேற்குலக மாடல் வெற்றிகரமாக செயல்படலாம். ஆனால் காந்தி தொழில்மயமாதலின் ஆபத்தை உணர்ந்திருந்தார். 1928ஆம் ஆண்டில் இதைப்பற்றி தனது கருத்தை எழுதியிருந்தார். மேற்குலக நாடுகளைப் பற்றி நாமும் தொழில்மயமானால் உலகம் முழுக்க வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடத்தியது போலவே சூழல் மாறும் என்றார். மக்களி
  தூய ஆற்றலை நோக்கி நகரும் இந்திய அரசு! இந்தியாவின் மின்சாரத் தேவை, 2020ஆம் ஆண்டிலிருந்து இருமடங்காகி உள்ளதாக உலக ஆற்றல் முகமை (IEA) தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா, இன்றுவரையும் கூட மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் நிலக்கரியின் பங்களிப்பு 80 சதவீதமாக உள்ளது. பெருந்தொற்று காரணமாக முடங்கிய நிலக்கரி சுரங்கப்பணிகள் இயங்கத் தொடங்கிவிட்டன. தொழில்துறையினரும் முழுவீச்சில்  இயங்கத் தொடங்கிவிட்டனர்.  இதனால் மின்னாற்றலின் தேவை அதிகரித்துள்ளது. 2040ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்சாரத் தேவை, 5 சதவீதமாக உயரும் என உலக ஆற்றல் முகமை மதிப்பிட்டுள்ளது.  பிற ஆற்றல் ஆதாரங்களை விட நிலக்கரி சுரங்கங்களை அமைக்க குறைந்த முதலீடு போதுமானது.  தூய ஆற்றல் ஆதாரங்களான சோலார், நீர், அணுசக்தி ஆகியவை அதிக நிர்மாண முதலீடுகளைக் கொண்டவை. எனவே, மலிவான நிலக்கரித் தொழிலில் தொழிலதிபர்களின் முதலீடுகளும் அதிகம்.   மத்திய அரசு, 2021-22 காலகட்டத்தில் 3,793 கோடி ரூபாயை (மார்ச் 14 ) தூய ஆற்றல் ஆதாரங்களை மேம்படுத்த முதலீடு செய்துள்ளது. 2029 -30 காலகட்டத்தில் இந்தியாவின் தூய ஆற்றல்  பங்களிப்பு 40 சதவீதமாக இருக்கும் என மத்திய மின்துறை ஆணையத்

பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு எதிராக மாணவர்களிடம் பிரசாரம்!

படம்
  பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் சூழல் அமைப்பு! பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் மூலமாக உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிடுவது அதிகரித்தது. இதன் விளைவாக உருவான பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றி பலரும் கவலைப்படவில்லை. இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டி, வீட்டில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முயல்கிறது வாக் ஃபார் பிளாஸ்டிக் (Walk for Plastic)என்ற சூழல் அமைப்பு. இது, 2019ஆம் ஆண்டு பி.கௌதம் என்பவரால் தொடங்கப்பட்ட அமைப்பு. சூழல் பற்றிய பல்வேறு தன்னார்வ செயல்பாடுகளை சமூக வலைத்தளத்தில் பிரசாரம் செய்கிறது.  “எங்களது வாக் ஃப்ரம் ஹோம் என்ற பிரசார திட்டம், வீட்டில் சேரும் நாமறியாத பிளாஸ்டிக் குப்பைகளை அடையாளம் கண்டு அதனைக் கட்டுப்படுத்த, மறுசுழற்சி செய்ய உதவுகிறது” என்றார் கௌதம்.  கடந்த மாதத்தில், நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் பற்றிய விழிப்புணர்வை வாக் ஃபார் பிளாஸ்டிக் அமைப்பு பிரசாரம் செய்தது. பிளாஸ்டிக் பாட்டில்களை கைவிட்டு ஸ்டீல் பாட்டில்களுக்கு மாறியவர்கள் தங்களது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர். வாக் ஃப்ரம் ஹோம் திட்டத்தில், 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பங்கேற்று த

வலசைப் பறவைகளைப் பற்றி அறிய உதவும் ஆய்வு நூல்! - ஏ.சண்முகானந்தம்

படம்
  வலசை செல்லும் பறவைகளின்  வாழ்விடச்சிக்கல்கள் ஏ.சண்முகானந்தம் பாரதி புத்தகாலயம் 160 காடு, உயிர் ஆகிய இயற்கை சார்ந்த மாத இதழ்களை நடத்திய, நடத்தி வரும் ஏ.சண்முகானந்தம் எழுதிய நூல் இது.   நூலில் பல்வேறு பறவைகள், அதன் சரணாலயங்கள், ஏரிகள், சதுப்புநிலங்கள் பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன. பறவைகள் பற்றிய ஆதி முதல் அந்தம் வரையிலான நிறைய தகவல்கள் உள்ளன. நூல்களை இன்னும் அறிவியல் தகவல்களை சேர்த்து மேம்படுத்தியிருக்கலாம் என்பதை  வாசிக்கும் போது யாவரும் உணர முடியும்.  வலசை செல்லும் பறவைகளைப் பற்றிய தகவல்களை ஆராய்ச்சி செய்பவர்களை இந்த நூலை வாங்கிப் படித்தால் நிறைய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். மேலும் தகவல்களை ஆசிரியர் கூறிய இடங்களுக்கு சென்று கூட தெரிந்துகொள்ளலாம்.  வலசை என்றால் என்ன, எதற்காக பறவைகள் வலசை செல்கின்றன என்பதுபோன்ற தகவல்களை சிறப்பாக எழுதியிருக்கிறார். ஏ.சண்முகானந்தம் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளை பிறர் எளிதாக புரிந்துகொள்வது கடினம். பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருபவர், அதற்கான மொழியில் நூலை எழுதியிருக்கிறார். பயப்படவேண்டியதில்லை. அடிப்படையாக என்ன தெரிந்துகொள்ளவேண்டுமோ அதை நாம் தெரிந்துகொண
படம்
  சிவா முத்தொகுதி -  மெலூகாவின் அமரர்கள் அமிஷ் திரிபாதி தமிழில்  - பவித்ரா ஸ்ரீனிவாசன் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் ராமர் இறந்தபிறகு நடக்கும் கதை. அயோத்யா, தேவகிரி ஆகிய நாடுகளை சந்திரவம்சி, சூரியவம்சி ஆகியோர் ஆளுகின்றனர். இதில் சூரியவம்சி ஆண்மைய சமூகம். சந்திர வம்சி, பெண் மைய சமூகம். இவர்களை நல்வழிப்படுத்துவதற்காக அவதரிப்பவரே நீலகண்டவர். ஆனால் இவரை இரு இனத்தாரும்தான் கண்டுபிடிக்கவேண்டும். யாராவது ஒருவர் புறம் நீலகண்டர் நின்றால், மற்றொரு சமூகம் அழிந்துவிடும்.  இது  முத்தொகுதியின் அடிப்படையான கதை.  மெலூகாவின் அமரர்கள் கதை, மானசரோவரில் வாழும் ழங்குடி இனமான குணாக்களிலிருந்து சிவன் என்பவர் மெலூகர்களின் நகரிற்கு வருவதில் தொடங்குகிறது. குணாக்களை வழிநடத்தும் இனக்குழு தலைவன் சிவா. இவர்களை ஒழித்துக்கட்ட நினைக்கும் எதிரிகளை எதிர்த்து போரிட்டுக்கொண்டே மெலூகாவிற்கு வந்து சேர்கிறார்கள். பழங்குடிகள் என்றால் எப்படி, வேட்டையாடிய விலங்குகளின் தோலைத்தான் அணிந்திருக்கிறார்கள். மது, மரிஜூவானா ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள். இவர்களை மெலூகாவிற்கு நந்தி ராணுவ தளபதி அழைத்து வருகிறார். எதற்காக பழங்குடிகளை அழைத்து வந்

டிஜிட்டல் அடிமைத்தனம் - அறிகுறிகளை அறிவது எப்படி?

படம்
  டிஜிட்டல் அடிமை கொரோனா காலம், நமக்கு டிஜிட்டல் பொருட்கள் மீது பெரும் மோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பார்க்கலாம். இன்று நீங்கள் குறிப்பிட்ட நூல்களை கையில் எடுத்துச்செல்லவேண்டியதில்லை. அதற்கு பதிலாக போனை கையில் எடுத்துச்சென்றால்போதும். மடிக்கணினி கூட வேண்டியதில்லை. போனில் உள்ள இணைய வசதியை முடுக்கி, தேவையான நூல்களை நீங்கள் பெற்று படிக்கலாம். அதனை பல்வேறு தளங்களில் சோதித்து கூட பார்க்கலாம். புதிய நூல்களைக் கூட பணம் கொடுத்து தரவிறக்கிக்கொள்ளலாம். சுமை ஏதும் நம் தோளில் ஏறாது. புதிதாக கற்றுக்கொள்ள இணைய வழயில் ஏராளமான வழிகள் உள்ளன.  குறிப்பிட்ட ஒருவருக்காக காத்திருக்கிறோம் என்றால் அதற்காக வருத்தப்படவேண்டியதில்லை. நூல்களை ஃப்ரீதமிழ் இபுக்ஸ் அல்லது இண்டர்நெட் ஆர்ச்சீவ் சென்று வாசிக்கலாம். இணையத்தில் வேறு ஏதாவது விஷயங்களைப் பார்க்கலாம். குறிப்பாக, யூட்யூபில் பிலிப் பிலிப், கிச்சடி மிஸ்டர் தமிழன் போன்ற சேனல்களைப் பார்க்கலாம். நேரத்தை வீண் என்று ஸ்மார்ட்போன் உள்ளவர் எப்போது சொல்ல மாட்டார்.  எதிர்மறை பக்கம் என்பது சமூக வலைத்தளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர்