இடுகைகள்

லக் கீ உங்களுக்கும் கிடைக்கலாம்!

படம்
             லக் கீ தென்கொரியா    தென்கொரிய டிவி சீரியல்களில் துக்கடா வேடங்களில் நடித்து வரும் சீ ஜூங், நினைத்த வேகத்தில் முன்னேற முடியவில்லை.அவனது ஒரே ஆதரவான அப்பா சலூன் வைத்து நடத்துகிறார். அவர் அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கூட தனது மகனின் நடிப்பு ஆர்வத்தைப் பற்றி புல்லரிப்பாக பேசுவதோடு நம்பிக்கையும் கொண்டிருக்கிறார். ஆனால் மகனோ தான் தங்கியுள்ள அறைக்கு வாடகை கூட கொடுக்க முடியாமல் தூக்கு மாட்டிக்கொண்டு இறக்க நினைக்கிறான். அப்போது அவனுக்கு விதி வாய்ப்பு ஒன்றை வழங்குகிறது. விபத்தாகி நினைவிழந்த ஒருவரின் வீட்டு சாவி அவனுக்கு கிடைக்கிறது. அதை வைத்து அவன் தனது வாழ்க்கையை எப்படி மாற்றிக் கொண்டான் என்பதே கதை. உண்மையில் தமிழில் வெளிவந்த அறை எண் 305 இல் கடவுள் போலத்தான் கதையின் மையம் இருக்கிறது. கதாநாயகன் சீ ஜூங்கிற்கு ஒரு நூடுல்ஸ் வாங்கித்தரக்கூட ஆளில்லை. அவன் காதலித்த பெண்ணுக்கு இரண்டு மாதங்களில் திருமணமாகப் போகிறது. அவனது துக்கடா வேஷங்கள் பெரிய முன்னேற்றம் அடையவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அறை வாடகை கொடுக்க கூட கையில் நயா பைசா கிடையாது. இந்த லட்சணத்தில் அவன் வாழ்க்கையை நினைத்து அழ

மாணவர்கள் கல்வி கற்க உதவும் தி பைசைக்கிள் புராஜெக்ட்!

படம்
  தி பைசைக்கிள் புராஜெக்ட் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர், ஹேமந்த் சாப்ரா. இவர் 2009ஆம் ஆண்டு தி பைசைக்கிள் புராஜெக்டைத் தொடங்கினார். இதன்படி நகரங்களில் உள்ள சிறுவர்கள் பயன்படுத்திய சைக்கிள்களைப் பெறுகின்றனர். அதை பெயிண்ட் அடித்து பழுது நீக்குகின்றனர். பிறகு பள்ளிகளை தேர்ந்தெடுத்து அதில் நீண்ட தொலைவிலிருந்து வரும் மாணவர்களை பட்டியலிடுகின்றனர்.  அவர்களுக்குத்தான் சைக்கிள் வழங்கப்படுகிறது. இந்த பைசைக்கிள் புராஜெக்ட் திட்டத்தை ஹேமந்த் சாப்ரா, அவரது மனைவி சங்கீதா, பத்திரிகையாளர் சைமோனா டெரோன் ஆகிய மூவரும் தான். இதில் சைமோனா டெரோன் மூலம் தான் சமூகத்தில் உள்ள நிறைய மனிதர்களின் தொடர்பு கிடைத்தது.. இப்படித்தான் பழைய சைக்கிள்களைப் பெற்று அதை ஹேமந்த் சாப்ரா தனது வீட்டின் அருகில் உள்ள நஸீம் என்பவரிடம் கொடுத்தார். அவர், மாணவர்களுக்கென குறைந்த விலையில் பழைய சைக்கிள்களை நகாசு பார்த்து கொடுத்திருக்கிறார். இதற்கு முக்கியமான காரணம், நஸீமின் தம்பியும் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்தான்.  ஹேமந்த் சாப்ராவின் அப்பா, சிறுவயதில் ஒருமுறை சொன்ன சம்பவமே பைசைக்கிள் புராஜெக்ட் தொடங்கப்பட முக்கியமான காரணம். பள

75ஆவது சுதந்திர தினத்தில் மூடப்படும் அரசு பொதுத்துறை நிறுவனம்!

படம்
  75ஆவது சுதந்திர தினத்தில் மூடப்படும் அரசு பொதுநிறுவனம்! 1920ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்தியா கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனமாக அறிவிக்கப்பட்டு இயங்கியது.  1981ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த இந்திராகாந்தி, பிரிட்டிஷ்  இந்தியா கார்ப்பரேஷனை தேசியமயமாக்கி உத்தரவிட்டார்.  1991ஆம் ஆண்டு, பிஐசிஎல் நிறுவனம் நலிவுற்றதாக அறிவிக்கப்பட்டது.  2001ஆம் ஆண்டு மத்திய அரசு, பிஐசிஎல் நிறுவனத்தை பல்வேறு சீர்திருத்தங்களால் மீட்க முடியவில்லை என்று அறிவித்தது.  2017ஆம் ஆண்டு, நிதி ஆயோக் அமைப்பு, நிறுவனத்தை மூடிவிடலாம் என ஆலோசனை தெரிவித்தது.  உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் சிவப்பு நிற கட்டிடத்தில் அமைந்திருந்த பிஐசிஎல் நிறுவனம், லால் இம்லி என்ற பிராண்டில் செல்லமாக அழைக்கப்பட்டது. கம்பளி தொடர்பான பல்வேறு பொருட்களை தயாரித்து வழங்கிக் கொண்டிருந்தது.  இந்த நிறுவனத்தின் சிறப்பான செயல்பாடுகளால், மான்செஸ்டர் ஆப் ஈஸ்ட் என வழங்கப்பட்டது.  சிறப்பெல்லாம் பழைய கதை. இப்போது நிறுவனத்தை மூடப்போகிறார்கள்.  தேசிய டெக்ஸ்டைல் கார்ப்பரேஷன் (NTC) என்ற நிறுவனத்தையும் பிஐசிஎல் நிறுவனத்தோடு சேர்த்து மூடுகிறார்கள். இந்த

வினோத் மேத்தா, ஜே.கிருஷ்ணமூர்த்தி நமக்கு காட்டும் வழி என்ன? - கடிதங்கள் - கதிரவன்

படம்
  அன்பு நண்பர் கதிரவனுக்கு வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  இன்று மாலை நீங்கள் என்னுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. நான் இன்று உணவு பற்றிய அவுட்லுக் இதழ் ஒன்றை வாங்கிப் படித்தேன். ரூ.70. இவர்கள் சிறப்பிதழ் போல இதழை கொண்டு வருகிறார்கள். இவர்களின் போட்டியாளராக உள்ள பத்திரிகை, இந்தியா டுடே. வலதுசாரி கருத்தியலை அடிப்படையாக கொண்டது. இவர்கள் ஆண்டின் இறுதியில் கொண்டு வரும் செக்ஸ் சர்வே தான் உருப்படியான புத்தகம். அதை ஒட்டுமொத்த இந்தியாவே வாங்கிப் படிக்கும். அந்தளவு செலவு செய்து போட்டோஷூட் நடத்தி இதழை வெளியிடுவார்கள்.  அலுவலகத்தில் அறியாமையை கிரீடமாக அணிந்தவர்களிடம் எல்லாம் நின்று விவாதிக்கும் நிலைமை கஷ்டமாக உள்ளது. நான் வேலைக்கு வந்து அதைப்பற்றி மட்டுமே பேசுகிறேன். நான் உண்டு எனது வேலை உண்டு என பயணிக்கிறேன். பிறரைப் பற்றி மட்டம் தட்டும் ஏளனம் பேசும் தீய ஆன்மாக்கள் இங்கு அதிகம்.  வினோத் மேத்தா என்ற பத்திரிகையாளர் பற்றிய சுயசரிதை படித்தேன். தன் வாழ்க்கையில் சந்தித்த அரசியல் சிக்கல்கள், துணிச்சலான செயல்பாடுகள் என பல்வேறு விஷயங்களை நூலில் எழுதியிருக்கிறார். இப்போது வலசை செல்லும் பறவைகள் என்ற நூல

உடலைத் தாண்டி மூளைக்குள்ளும் செல்லும் வெப்பம்! - கடிதங்கள்- கதிரவன்

படம்
  14.4.2022 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? திருமண வேலைகளை நிறைவு செய்திருப்பீர்கள். நான் இன்று எனது அறைத்தோழர் மெய்யருள் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொன்னேன். தினகரனில் வேலை செய்தபோது கே.கே.நகரில் அறையில் தங்க வைத்து உதவினார். ஏப்ரல் 14 அம்பேத்கரின் பிறந்தநாள் வேறு. இப்போது நாடெங்கும் சமத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.  தமிழ் புத்தாண்டுக்கு விடுமுறை. அறையில் உட்கார்ந்து 2 அறிவியல் நேர்காணல்களை எழுதினேன். வெயில் உடல்சோர்வை எளிதாக உருவாக்கிவிடுகிறது. மதியம் கடும் வெக்கை. படுத்து தூங்கிவிட்டேன். வெளியில் எங்கும் செல்லவில்லை. பக்கத்து அறைவாசி, பட்டைசாதம் ஒரு பாக்கெட் கொடுத்தார். அதுவே மதியச்சோறு. பால் பொருட்கள் சேர்க்க கூடாது என சித்த மருத்துவர் ரெஜூநாத் முன்னரே எச்சரித்தார். அதிகரிக்கும் வெப்பம் காரணமாக நான் தயிரை உணவில் சேர்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளேன். வேறுவழி தெரியவில்லை.  அம்மா இன்று குலதெய்வ கோவிலுக்குச் சென்று வந்ததாக சொன்னாள். அவளது நம்பிக்கை அவளுக்கு உள்ளது. பயணம் மனதுக்கு ஆறுதல் தரும். சென்றவாரம் விகடனில் வந்த நீரதிகாரம் முன்கதை சுருக்கம் போல வந்து

வன்மமாக மாறும் வெறுப்பு - கடிதங்கள் - கதிரவன்

படம்
  3.4.2022 மயிலாப்பூர் அன்புள்ள கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  ரொம்ப நாட்களுக்குப் பிறகு நான் உங்களிடம் பேசி இருக்கிறேன். மகிழ்ச்சி. தம்பியின் திருமணம் சிறப்பாக நடக்க வாழ்த்துகிறேன். நாளிதழ் வேலைகள் தொடங்கிவிட்டன. இம்முறை துறை சார்ந்த வல்லுநர்களை தேடி எழுத வைக்க இருக்கிறேன். முயற்சி பலிதமாகுமா என்று தெரியவில்லை. கஷ்டம்தான். முயல்கிறேன். இன்று சக்தி சாரின் அறைக்குச் சென்றேன். வடபழனி. கேம்பஸ் என்ற ஹோட்டலில் புட்டும் கடலைக்கறியும் வாங்கிக் கொடுத்தார். டீப் வாட்டர். பவர் ஆஃப் டாக் என்ற இரு படங்களைப் பார்த்தேன். டீப் வாட்டர், மனைவி மீது கொலைவெறி பாசம் கொண்ட கணவரின் அதீத செயல்பாடுகளைப் பேசுகிறது. குறைந்த வசனங்கள். நிறைந்த உடல்மொழி என படம் எடுத்திருக்கிறார்கள்.  பவர் ஆஃப் டாக் படம், பெண் இயக்குநர் ஜேன் கேம்பியன் எடுத்தது. ஒருவரின் மனதில் உருவாகும் வெறுப்பு எப்படி வன்மமாக மாறி குற்றச்செயல்களுக்கு தூண்டுகோலாகிறது என்பதே படம். இந்து ஆங்கில நாளிதழில் சூழல் பற்றிய கட்டுரைகளை சிறப்பாக எழுதுகிறார்கள். இதை மொழிபெயர்த்து எழுத வேண்டும். எங்கள் நாளிதழ் இனி நூலகங்களில் கிடைக்கும் என்று ஆசிர

மனதைக் காப்பாற்றும் வாசிப்பும் எழுத்தும்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  21.3.2022 மயிலாப்பூர் அன்புக்குரிய கதிரவனுக்கு, வணக்கம்.  எப்படி இருக்கிறீர்கள்? தேர்தல் கால பணி செய்திகள் முடிவுக்கு வந்திருக்கும். சென்னையில் வெயில் தாக்கம் மெல்ல கூடி வருகிறது. எனது அறையில் அனல் வீசுகிறது. இரவு உறங்குவது கடினமாகி வருகிறது. காய்ச்சல் வந்தவரின உடல் போல வேர்த்துக் கொட்டுகிறது.ஏறிய வெப்பம் ஏறியதுதான்.  கடும் வெயில் நடுக்கும் குளிர் என இனி வாழ்க்கை நடக்கும். ஐஐடிஎம் பற்றிய செய்தி ஒன்று எழுதினேன். தாய் நாளிதழில் தாறுமாறு ஆபரேஷன் செய்ததில் செய்தி ஏதும் விளங்கவில்லை.  நான் எழுதிய அமைச்சர் பற்றிய ஒற்றைக் குறிப்பு, எடிட்டர் என்மீது கோபப்பட அத்தனை வாய்ப்புகளையும் தந்தது.  சந்தேகம் வந்தால் இனி எழுதாதே என்று சொல்லிவிட்டார்.  இந்த மாதம் நாளிதழ் வேலைகள் முடிந்தவுடன் ஊருக்குப் போக வேண்டும். பார்ப்போம் திட்டம் எந்தளவு சாத்தியமாகிறது என்று...தற்போதைக்கு எழுதுவதும், வாசிப்பதும், தேநீர் குடிப்பதும் பெரிய விடுதலையாக இருக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை சந்திக்காத புதிய மனிதர்களைச் சந்திப்பேன் என நினைக்கிறேன்.  பன்பட்டர்ஜாம் என்ற கட்டுரை நூலை எழுதிவருகிறேன். கோமாளியான சர்வாதிகாரி நாட்டு மக்

கண்ணில் தென்படும் டிஷர்ட் அழகிகள்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  12.3.2022 மயிலாப்பூர் அன்புள்ள தோழர் கதிரவனுக்கு, வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்? எங்கள் மேன்ஷனில் கேரளத்து சேட்டா ஒருவர் தங்கியிருந்தார். அவரைப் பற்றி எனக்கு நினைவில் உள்ள சித்திரம் மலமோ, சிறுநீரோ இதோ வந்துவிட்டது என்ற நிலையில்தான் அவருக்கு நினைவுக்கு வரும். உடனே 50 மீட்டர் தூரத்திலுள்ள பொதுகழிவறைக்கு உசேன் போல்ட் போல ஓடுவார். விஷ்க் என்ற காற்று உராயும் சத்தம் தான் கேட்கும். ஆள் கடந்திருப்பார். அண்மையில் தான் ஆளைக்காணோம். அறையைக் காலி செய்துவிட்டார் என்று தகவல் கிடைத்தது. அறையை சுத்தம் செய்த கோபி அண்ணா, சேட்டன் நிறைய மதுப்புட்டிகளை குடித்துவிட்டு எறிந்திருக்கிறார் என்றார். அடுத்தவர்களை பிரச்னை செய்யாமல் அறையில் வைத்து குடித்திருக்கிறார் என மகிழ வேண்டியதுதான்.  புதிதாக ஏழு பேர் தங்கும் அறையில் தங்கியுள்ளவர்கள், சினிமா ஆட்கள் போல. சில பெண்கள்  நடிக்கும் வாய்ப்புக்காக வந்துபோய்க்கொண்டு இருக்கிறார்கள். புதிதாக சந்தைக்கு வரும் டீஷர்டுகளை இந்த வகையில் அறிந்துகொள்ள ஆண்டவன் அருள் பாலித்திருக்கிறான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பித்து. என்ன சொல்வது? இன்று இதழின் சீஃப் டிசைனர் எழுதிய சிறுகதை தேற

5 ஜியால் முன்னேறும் துறைகள்! - போக்குவரத்து, சூப்பர் ஆப், விற்பனைத்துறை

படம்
  5 ஜி பயன்கள்  ஸ்மார்ட்போன் பயனாளர்கள் டேட்டா வேகம் பத்து மடங்கு அதிகரிக்கும். தரவிறக்க வேகத்திற்கு வட்டவடிவில் சுத்துவதை நீங்கள் பார்க்கும் துரதிர்ஷ்டம் நேராது. ஓடிடி தளத்தில் நிகழ்ச்சிகளை பார்ப்பது வேகமாகும்.  வீடு வீஆர் விளையாட்டுகளை எளிதாக விளையாடலாம். 8கே அளவிலான டிவிகளைப் பயன்படுத்தலாம்.  கல்வி  பெருந்தொற்றில் அறிமுகமான டிஜிட்டல் கல்வி இன்னும் வேகமாகும். நெடுந்தொலைவில் இருந்தாலும் கூட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எளிதாக கல்வி கற்றுத் தரமுடியும்.  விற்பனை விரல் முனையில் தட்டினால் பொருட்கள் வாசலில் வந்து நிற்கும். குரல் வழி ஆணை, உடல்மொழி மூலம் நீங்கள் எளிதாக பொருட்களை வாங்கலாம். பணத்தை வேகமாக செலுத்தலாம். அமேசான் கோ போல கேஷியர் இல்லாத சூப்பர் மார்க்கெட்டுகள் உருவாக வாய்ப்புள்ளது.  வங்கி மொபைலில் இருந்தே வங்கியில் செய்யும் அனைத்து விஷயங்களையும் செய்யலாம். வங்கிக்கு செல்வது என்பது மிக அரிதான நிகழ்வாக மாறும்.  விவசாயம்  பயிர் விதைப்பது தொடங்கி சாகுபடி வரையிலான அனைத்து விஷயங்களும் தொழில்நுட்ப ரீதியாக ஒழுங்குபடுத்தப்படும்.  உற்பத்தித்துறை இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் முறையில் சென்சார், கருவிகள

வீடு என்பது நம் அனைவருக்கும் முக்கியமானது! - விஷால் பரத்வாஜ், இந்தி சினிமா இயக்குநர்

படம்
  விஷால் பரத்வாஜ்  இந்தி சினிமா இயக்குநர் மாரேங்கே டு வாஹின் ஜாகர் என்ற பாடலுக்காக விஷாலுக்கு, தேசிய விருது கிடைத்துள்ளது.  உங்களுக்கு முன்னரே தேசியவிருது கிடைத்துள்ளது. இப்போது கிடைத்த விருது எந்த வகையில் முக்கியமாகிறது? பெருந்தொற்று காலகட்ட அவலத்தைச் சொல்லும் ஆவணப்படத்திற்கான பாடல் இது. நமக்கு பெருந்தொற்று காலத்தில் பிழைப்புக்கான பிரச்னை எழவில்லை. ஆனால், தினசரி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தான் தங்கள் வீட்டை எட்ட பல கி.மீ. நடக்க நேரிட்டது.இவர்களைப் பார்க்கும்போது எனது பிள்ளைகள், மனைவியோடு வீட்டில் பாதுகாப்பாக இருந்தது கடும் குற்றவுணர்ச்சியை அளித்தது.  இதனால்தான் ஆவணப்படத்தை இயக்கி அதற்கென பாடலை உருவாக்கினேன்.  நெட்பிளிக்ஸிற்காக கூஃபியா என்ற திரில்லர் படத்தை உருவாக்கியுள்ளீர்கள். இது சவாலைக் கொடுத்ததா? இல்லை. இப்படி இயங்குவது எனக்கு விருந்து சாப்பிடுவது போலத்தான். இந்த வாய்ப்பு எனக்குள்ளிருந்து குழந்தையை வெளியே கொண்டு வருவது போல இருந்தது. நான் சாகச நாவல்கள், உளவு நாவல்களை விரும்பி படிப்பவன்.  குட்டே என்ற படத்தை உங்கள் மகன் இயக்கியுள்ளார். நவம்பரில் வெளியா