இடுகைகள்

இரு கைகள் இல்லாமல் காலில் தேர்வு எழுதி ஆங்கில முதுநிலைப்பட்டம் வென்ற பெண்!

படம்
  நெருங்கிய உறவில் திருமணம் செய்வது மருத்துவ அறிவியல் அடிப்படையில் குழந்தைகள் ஊனமாக முக்கிய காரணம் என அறிந்திருப்பீர்கள். ஆனால் கிராமங்களில் இன்றும் சொத்து, உறவு என ஏதோ காரணம் காட்டி பெண்ணை அவளது தாய்மாமனுக்கு திருமணம் செய்வது நடந்து வருகிறது. ஆர்காடு கிராமம் முகையூர் கிராமத்தில் வாழ்ந்த வீரம்மாளின் மகள் மாயாவுக்கும் இப்படித்தான் அவளது மாமாவுடன் திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை பிறந்தபோதுதான் திருமணத்தில் கோரமான விளைவு தெரிய வந்தது. பிறந்த குழந்தைக்கு இரண்டு கைகளும் இல்லை. குழந்தையைப் பார்க்க வந்த உறவினர்கள், குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என கூறியிருக்கிறார்கள். ஆனால் பேத்தியை வீரம்மாள் அப்படியெல்லாம் கைவிடவில்லை. நான் உயிரோடு இருக்கும்வரை பேத்தி என்னோடு இருக்கட்டும் என நினைத்து குழந்தையை துணியில் பொதிந்து தூக்கி வந்துவிட்டார். இப்படி குழந்தை ஊனமாக பிறப்பதற்கு காரணம், உறவுமுறை திருமணம் என உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் கூறியிருக்கிறார். இப்படித்தான் வளர்ந்த பெண் குழந்தை வித்யா ஶ்ரீ இன்று ஆங்கிலப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவராக, அரசு ஆசிரியையாக மு

பழங்குடி மாணவர்களுக்காக பள்ளிக்கட்டிடம் கட்டியவர் - கிரிதரன்

படம்
    மரத்தின் கீழே மாணவர்கள் படிப்பதைப் பார்த்தால் என்ன நினைப்பீர்கள். ரவீந்திரநாத்தின் சாந்தி நிகேதனைப் போன்ற கல்விமுறையை இங்கேயும் பின்பற்றுகிறார்கள் என்றா? படித்தவர்கள், மாற்றுக்கல்வி முறையை கற்றுத் தரும் ஆட்கள் அப்படி நினைக்கலாம். ஆனால் சாதாரணமான மக்கள் நினைப்பது, பள்ளிக்கட்டிடம் எங்கே என்றுதான். அப்படித்தான் யதார்த்தமாக ஒரு கேள்வியை தனக்குள் கேட்டுக்கொண்டார் வேலூரின் காட்பாடியைச் சேர்ந்த கிரிதரன். அந்த கேள்விக்கு பதில் தே அவருக்கு மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஆம், கிரிதரன் பள்ளி மாணவர்களுக்காக 400 பேர்களிடம் நிதியுதவி பெற்று பள்ளிக்கட்டிடத்தைக் கட்டியிருக்கிறார். இன்னும் அதில் டிவி பொருத்தும் விரிவாக்கத் திட்டம் இருக்கிறதாம். சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது 39ஆம் வயதில் மருதவலியம்படி வந்து பார்த்தபிறகுதான் அவருக்கு பள்ளிக்கட்டிட யோசனை தோன்றியிருக்கிறது. மரத்தடியில் பாடம் கற்ற மாணவர்கள் பல்வேறு இயற்கைச்சூழல் பிரச்னைகளால் கல்வி கற்க முடியாத இடையூறுகள் இருந்தன. காற்று வேகமாக அடித்தால் ஆசிரியர் சொல்லும் வார்த்தைகள் காதில் கேட்காது.   முக்கியமாக இப்படி பாடம் கற்றுக்கொண்டிருந்த மா

பொருட்களின் தேவை அதிகரிப்பதால் ஏற்படும் விளைவுகள் - ஜே கிருஷ்ணமூர்த்தி - கேள்வி பதில்கள்

படம்
  அகம்புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள் கே. அன்பு அதன் தன்மையில் எத்தகையது? ப. அன்பு என்பது என்ன? அன்புக்கு உள்நோக்கம், அதன் பயன்கள் இல்லாமல் என்ன என்று கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். கவனமாக கேளுங்கள். அதிலிருந்து பதிலைப் பெறலாம். நாம் கேள்வியை ஆராயப் போகிறோம். பதிலைக் கண்டுபிடிக்க போவதில்லை. கணிதம் சார்ந்த கேள்வியை ஒருவருக்கு கொடுத்தால் அவர் உடனே பதிலைக் கண்டுபிடிக்க முயல்வார். கேள்வியை சரியாக புரிந்துகொள்வதே முக்கியம். அதன் போக்கில் நாம் பதிலைப் பெறலாம். பகவத் கீதை, திருக்குரான், பைபிள் அல்லது பேராசிரியர் என எதிலும் உங்களுக்கு விடை கிடைக்காது. கேள்வியைப் புரிந்துகொள்வதே அடிப்படையானது. அதில்தான் பதில் அடங்கியுள்ளது. அது பிரச்னையிலிருந்து வெளியே இல்லை.   இப்போது பிரச்னையைப் பார்ப்போம். அன்பு செலுத்துகிறீர்கள். ஆனால் அதற்கு எந்த நோக்கமும் இல்லை. அன்பு செலுத்தி அதற்கு பதிலாக அன்பையோ வேறு பயன்களையோ எதிர்பார்க்காமல் இருக்க முடியுமா? தான் கொடுத்த அன்பு திரும்ப கிடைக்கவில்லை என ஒருவர் காயம்படுகிறார். இப்போது நான் உங்களை நண்பராக ஏற்றுக்கொள்ள நினைத்து அழைப்பு விடுக்கிறேன். ஆனா

இரண்டாவது வாய்ப்பில் அரசியல்வாதியை திட்டம்போட்டு பழிவாங்கும் அரசு வழக்குரைஞர்! அகெய்ன் மை லைஃப்

படம்
  அகெய்ன் லைஃப் தென்கொரிய டிவி டிராமா எஸ்பிஎஸ்  லீ ஜூன் ஜி, கிம் ஜி யூன், கையாங் இயாங் இயக்குநர் ஹன் சுல் ஹூ வெப் நாவல் எழுத்தாளர் லீ ஹா நால் ராகுட்டன் விக்கி ஆப் சியோயில் உள்ள அரசு வழக்குரைஞர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்பவர், கிம் ஹியூ வூ. இவர் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினரான அதிகாரம் பொருந்திய ஜே டே சியோப் என்பவரை   விசாரணைக்கு அழைக்கிறார். அவருக்கு எதிரான சாட்சியத்தை வழக்குரைஞர் தக்க வைத்த தைரியத்தில் இதை செய்கிறார். ஆனால், சாட்சியத்தை கொன்றதோடு, தன்னை வழக்குரைஞர் நிறுவனத்திற்கு வரவைத்த கிம் ஹியூ வூவையும் இரக்கமே இல்லாத அடியாள் மூலம் அடித்து   போதை ஊசி போட்டு கொன்று கட்டிடத்தில் இருந்து தூக்கி வீச செய்கிறார் ஜே டே சியோப். இது முதல் எபிசோடில் நடந்துவிடுகிறது. கதை அம்புட்டுத்தானா என தோன்றுகிறதா அங்க தான் முக்கியமான ட்விஸ்ட்.   இறந்துபோன வழக்குரைஞர் கிம்மின் உடலில் இருந்து ஆத்மா தனியாக பிரிந்து இறந்துபோன கட்டிட மொட்டை மாடியில் நிற்கிறது. தனக்கு என்ன நேர்ந்தது என தெரியாமல் பதற்றத்தில் இருக்கிறது. அப்போது, அவரது அருகில் சிவப்பு உடை அணிந்த பெ

பூஜை செய்வதும், மந்திரங்கள் ஓதுவதும் ஏற்படுத்தும் விளைவுகள்! - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள் நான் வீட்டுக்குச் செல்ல விரும்புகிறேன். ஆனால் கல்லூரி முதல்வர் அதற்கு மறுக்கிறார். நான் அவர் கூறியதை மறுத்தால் நிறைய பின்விளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும். அதேசமயம் நான் அவர் கூறியதைப் பின்பற்றினால், எனது இதயம் உடைந்துபோகும். இப்போது நான் என்ன செய்வது? நீங்கள் உங்களின் பிரச்னையான நிலையை முதல்வரிடம் எடுத்துச் சொல்ல நம்பிக்கை இல்லாத நிலையைப்   பற்றி கூறுகிறீர்கள். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், அவரிடம் உங்கள் பிரச்னை பற்றி பேசுங்கள். நீங்கள் உங்களது நிலையைப் பற்றிக் கூறியும் கூட அவர்   தனது நிலையில் பிடிவாதமாக இருந்தால், அவரிடம்தான் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். ஆனால் அப்படி உங்கள் கோரிக்கையை நிராகரிப்பதற்கு கூட அவரிடம் சில காரணங்கள் இருக்கலாம். அதை நீங்கள் கண்டறிய வேண்டும். இங்கு இருதரப்பிலும் நம்பிக்கை தேவைப்படுகிறது. முதல்வர், மாணவரான நீங்கள் என இருதரப்பிலும் நம்பிக்கை வேண்டும்.   வாழ்க்கை என்பது ஒரு பக்கம் சார்ந்த உறவு கிடையாது. முதல்வர், மாணவர் என நீங்கள் இருவருமே மனிதர்கள். எனவே இருவருமே தவறு செய்ய வாய்ப்புள்ளவர்கள்தான

அறிகுறிகளை வைத்து நோய்களை கணிக்கும் முறை - அவசர சிகிச்சை மருத்துவம்

படம்
  நோயாளியின் குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கை பற்றிய குறிப்புகள் முக்கியமானவை. இவற்றை நாம் அறிந்தால் அவருக்கு எளிதாக சிகிச்சை செய்ய முடியும்.   குடும்ப விவரங்களை அறிவது எதற்கென்றால், நோயாளியின் குடும்பத்தில் பாரம்பரியமாக சில நோய்கள் உருவாகி வந்திருக்கலாம். அதை தெரிந்தால் அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது எளிது. இதய நோய்கள், த்ரோம்போயம்போலிக் நோய், குடல்வால், பித்தப்பை நோய், புற்றுநோய் ஆகியவை குடும்ப ரீதியாக ஏற்படும் நோய்கள். எனவே, இவற்றை ஆராய நோயாளி கூறும் விவரங்கள் அவசியம்.   மதுப்பழக்கம், புகையிலை பயன்படுத்துகிறாரா, போதைப்பொருட்கள் பழக்கம், திருமணம் ஆனவரா, நரம்பியல் ரீதியாக பாதிப்பு ஏதேனும் உள்ளதா என ஆராய்வதும் முக்கியமானது. இதையொட்டி கேட்கப்படும் கேள்விகளைப் பார்ப்போம். வலி எப்போது தொடங்கியது? வலி தொடங்கும்போது என்ன வேலை செய்துகொண்டிருந்தீர்கள்.? வலியின் உணர்வு எப்படி இருக்கிறது? இதற்கு முன்னர் இப்படி வலி ஏற்பட்டிருக்கிறதா? வலிக்கான அளவுகோலாக 0 லிருந்து பத்துக்குள் ஒரு எண்ணைச் சொல்ல முடியுமா? வலிக்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு

பட்டினி கிடப்பவருக்கு உணவு கொடுத்தால் அன்பாகாதா? ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்  வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள் என்ன? வாழ்க்கைதான். நீங்கள் வாழ்க்கையை எப்படியாக உருவாக்கிக் கொள்ளவேண்டுமென நினைக்கிறீர்களோ அதுவேதான். ஒருவரின் வாழ்க்கையில் லட்சியம், குறிக்கோள் என்பது என்ன? அதாவது தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கையில் உள்ள லட்சியத்தைப் பற்றி பேசவில்லை. பொதுவாக அனைவரின் வாழ்க்கையில் உள்ள லட்சியத்தைப் பற்றி கேட்கிறேன். லட்சியத்தை எப்படி கண்டுபிடிப்பீர்கள். யார் அதை உங்களுக்கு காட்டுவார்கள்? வாசிப்பதன் மூலம் அறிந்துவிடமுடியும் என நினைக்கிறீர்களா?   ஒரு எழுத்தாளர் லட்சியம் என்பதை தான் புரிந்துகொண்ட முறையில் எழுதுவார். இன்னொரு எழுத்தாளர் இன்னொரு முறையை பின்பற்றுவார். கஷ்டத்தில் உள்ள மனிதனைச் சென்று லட்சியம் என்னவென்று கேட்டால் மகிழ்ச்சியாக வாழ்வது என்பான். பசியில் இருப்பவனைக் கேட்டால், வயிறு நிறைந்திருப்பது என்பான், பெண்ணைக் கேட்டால், குழந்தை பெற்றுக்கொள்வது என்பாள், அரசியல்வாதியைக் கேட்டால், முக்கியமான அரசியல் தலைவராக ஆக வேண்டும் என்பார். சன்னியாசியைக் கேட்டால் அவருக்கு கடவுளைக் காண்பது அடைவது லட்சியம் என்பார். லட்சியம்,

பெற்றோரை கவனித்துக்கொள்ளும் கடமை, கனவுக்கு தடையாகுமா? ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள் நாம் வெற்றி பெற்றதும்   பெருமை என்ற உணர்வு உருவாகிறதே ஏன்? வெற்றி பெறும்போது பெருமை என்ற உணர்வு ஏற்படுகிறதா? வெற்றி என்பது என்ன? வெற்றிகரமான எழுத்தாளர், கவிஞர், ஓவியர்,   தொழிலதிபர் என்று கூறுகிறார்கள். இதற்கு அர்த்தம் என்ன?   நீங்கள் உள்முகமாக குறிப்பிட்ட கட்டுப்பாட்டைப் பெற்று சாதித்திருக்கிறீர்கள். பிறர் அந்த முயற்சியில் வெற்றி பெற முடியாமல் தோற்றுவிட்டார்கள் என்பதுதானே? நீங்கள் பிறரை விட சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்பதுதான் இதன் அர்த்தம். நீங்கள் வெற்றி பெற்றவராக, பிறருக்கு எடுத்துக்காட்டாக கூறப்படும் இடத்தை அடைந்துவிட்டீர்கள். இப்படி நினைக்கும்போது மனதில் உருவாகும் உணர்வுதான் பெருமை என்பது. நான் சிறப்பானவன். நான் என்ற உணர்வுதான் பெருமைக்கு முக்கியமான காரணம். வெற்றிகள் பெறும்போது பெருமை உணர்வு வளருகிறது. ஒருவர் தன்னை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து சிறப்பானவன் என்ற எண்ணதை பெறுகிறார். குறிக்கோள் கொண்டுள்ளவர் என்பது, ஒருவரின் நம்பிக்கையை அதிகரிக்கிறது. அதுதான் வலிமை, எதை நோக்கி செல்கிறோம், ஊக்கம் அளிக்கிறது. பிறரை விட நான் முக்கி

அவசர சிகிச்சையில் நோயாளிகளிடம் கேள்வி கேட்கும் முறைகள்!

படம்
    மூச்சு விடுவதில் பிரச்னை, கண்பார்வை மங்கலாவது, சிறுநீர் வெளியேற்ற சிரமப்படுவது, சமநிலை குலைந்து மயக்கமாவது, உணர்வுநிலை தேய்வுநிலை அடைவது, கவனம், சிந்திப்பது தேக்கம் பெறுவது ஆகியவற்றை   அவசர சிகிச்சையில் சேர்க்கலாம்.   காய்ச்சல் குழந்தைகளுக்கு காய்ச்சல் அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளில் ஒன்று. ஆனால் பெற்றோர் குழந்தைக்கு வரும் காய்ச்சலைப் பார்த்து பதற்றமாவார்கள். வைரஸ், பாக்டீரியா நோய்த்தொற்று, சிறுநீரகத் தொற்று, நிம்மோனியா, காயங்களால் ஏற்படும் தொற்று, மலேரியா, அறுவை சிகிச்சை செய்த நிலை, புற்றுநோய், ஒட்டுண்ணி, ஆர்த்தரைட்டிஸ்   என பல்வேறு நோய் பாதிப்புகளின் போது காய்ச்சல் ஏற்படும்.     ரத்தப்போக்கு உடலில் நடைபெறும் ரத்தப்போக்கு சிலசமயங்களில் வலி அல்லது வலியற்ற தன்மையில் இருக்கலாம். காயங்களிலிருந்து ரத்தம் வெளியேறுதல், யோனியிலிருந்து ரத்தம் வெளியாகுதல், சிறுகுடலில் ரத்தகசிவு, ரத்தசோகை,   வான் வில்பிராண்ட் நோய் (ரத்தம் உறையாத நிலை) ஆகியவற்றின் மூலம் ரத்தம் உடலில் இருந்து வெளியேறும். சமூக காரணிகள் குடிநோயாளிகள், வீடற்றவர்கள், ஆதரவற்று தன்னை பராமரிக்க முடியாதவர்கள், ப

கனவை நிறைவேற்ற உதவியவர்களை தேடிச்சென்று நன்றி சொன்னால்... தேங்க்யூ - விக்ரம்குமார்

படம்
  தேங்க்யூ சைதன்யா அக்கினேனி, மாளவிகா நாயர், ராஷி கண்ணா தனது குறிக்கோளில் சமரசமே இல்லாமல் முன்னேறுபவன், அதற்காக உறவுகளை உதறித்தள்ளினால் என்னாகும் என்பதே தேங்க்யூ. படம் மனிதர்களைப் பற்றிய நல்லுணர்வுகளை ஏற்படுத்த முயல்கிறது. அந்த வகையில் பாராட்டத்தக்கது. அபிராம் வைத்யா என்ற ஆப் ஒன்றை உருவாக்குகிறார். அவர் அமெரிக்காவில் வேலையில் சேரவே வருகிறார். ஆனால் அங்கு வந்து ஸ்டார்ட்அப்பாக வைத்யா நிறுவனத்தைத் தொடங்கி வெற்றி பெறுகிறார். இதற்கான முதலீட்டை அவரது   அபியின் காதலியும் எதிர்கால மனைவியுமான பிரியா கொடுக்கிறார். நாட்கள் செல்ல செல்ல நான்தான் அனைத்தையும் செய்தேன். இதில் பிறருக்கு எந்த பங்கும் இல்லை என்ற ஈகோ அபியிடம் தலைதூக்குகிறது. இதனால் நிறுவனத்தை தொடக்க காலத்தில் உருவாக்கிய   தன் நண்பர்களை வேலையில் இருந்து தூக்குகிறான். நாம் சாதித்தோம் என்பதை தான் சாதித்தேன் என மீட்டிங் ஹாலில் உள்ள போர்டில் மாற்றி எழுதும் அளவுக்கு தலைகனம் உச்சத்திற்கு செல்கிறது. இதனால் பிரியா அபியை விட்டு விலகுகிறாள்.   ஒன்றாக சேர்ந்து வாழ்வதால், உறவிலிருந்து விலகும்போது பிரியா கர்ப்பமாக இருக்கிறாள். அதைக்கூட அபியிட