சூப்பர் ஆட்சியர் சுகாஸ்!
பெண்களைக் காக்க மறந்த இந்தியா ! பேச்சளவிலும் விளம்பரங்களிலும் ' பேட்டி பச்சாவோ ' என இந்திய அரசு கூறினாலும் வல்லுறவு , பாலியல் தாக்குதல் , கடத்தல் சம்பவங்களில் இந்தியா முதலிடத்திலுள்ளதாக அண்மையில் வெளியான தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன் செய்த ஆய்வு கூறுகிறது . முதலாவதாக இந்தியாவும் அடுத்தடுத்த இடங்களில் ஆப்கானிஸ்தானும் , சிரியாவும் இடம்பெற்று அதிர்ச்சியளித்துள்ளன . அண்மையில் வெளியான 2016 தேசிய குற்றப்பதிவு ஆணைய (NCRB) அறிக்கையில் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கை உச்சம் தொட்டிருக்கிறது . சைபர் குற்றங்களின் அளவு 6.3% உயர்ந்துள்ளது . இதில் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் ஏற்படும் வன்முறை சம்பவங்களின் விகிதம் 32.6%. பாலியல் வல்லுறவில் டாப் இடங்களில் மத்தியப்பிரதேசமும் (4,882), உத்தரப்பிரதேசமும் (4,816) மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிராவும் (4,189) போட்டா போட்டியிடுகின்றன . இந்தியாவில் குற்ற சராசரியின் அளவு 55.2% என்றால் தலைநகரான டெல்லியில் மட்டும் பெண்கள் மீது அதிகரித்துள்ள குற்றங்களின் விகிதம் 160.4% உயர்ந்து கிறுகிறுப்பு தருகிறது .