இடுகைகள்

திருமணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மகளின் திருமணத்தை நடத்த பள்ளி ஆசிரியர் படும் பாடுகள் - விஷ்மயம் - இன்னொசன்ட், திலீப், ஶ்ரீதுர்கா

படம்
  விஷ்மயம் திலீப் , ஶ்ரீதுர்கா, இன்னொசன்ட், ஜெகதி ஶ்ரீகுமார் ஒரு பள்ளி ஆசிரியர், தனது கடன்களுக்கக நிலங்களை, அருகிலுள்ள குரூப்பு ஒருவருக்கு விற்கிறார். அவர் நிலத்தை வாங்கியதோடு சுற்றிலும் உள்ள மனிதர்களின் வீட்டிலுள்ள பொருட்களை திருடர்களை வைத்து திருடி வைத்து விற்று பணக்காரராக மாறுகிறார். அவரை எப்படி சுற்றிலும் உள்ள மக்கள் கண்டுபிடித்து திருத்துகிறார்கள் என்பதே கதை. படத்தில் முக்கியமான   மகேஷ் நாராயணன் என்ற ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் பாத்திரத்தில் இன்னொசன்ட் நடித்துள்ளார். தனது மறைந்துபோன மனைவியை சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு நினைத்துப் பார்த்து சந்தோஷப்படுவதும், அவளது நினைவாக மகளுக்கு பிரச்னை இல்லாத இடத்தில் மணம் செய்து வைப்பதுமான கனவு அவருக்கு இருக்கிறது. அவர் மகளுக்கு ஏழு பவுன் தங்கத்தை சேர்த்து வைத்திருக்கிறார். அதை குரூப் திருடி வைத்து திருமணத்தை தடுக்கிறார். அதை ஆசிரியரும், அவரது மகன் தினகரன், ஊர் மக்களில் அவரது நண்பர்களும் சேர்ந்து திருடி எடுத்து வர திட்டமிடுகிறார்கள். திருடப்போன இடத்தில் தற்கொலை செய்துகொள்ள முயலும் ருக்மணி என்ற பெண்ணையும் பார்த்து, தடுத்து   அவளையும் த

சுலைமான், உதயபுரம் மாளிகையின் தம்புராட்டியை காதலித்தால்... - உதயபுரம் சுல்தான் - திலீப், ப்ரீத்தா

படம்
  உதயபுரம் சுல்தான் - திலீப், ப்ரீத்தா உதயபுரம் சுல்தான் -மலையாளம் உதயபுரம் சுல்தான் மலையாளம் திலீப், ப்ரீத்தா, ஹரிஶ்ரீ அசோகன், ஜெகதி ஶ்ரீகுமார், அம்பிகா அவிட்டம் நாராயண வர்மா உதயபுரம் மாளிகையைச் சேர்ந்தவர். அரச வம்சம். இவரது குடும்பத்தில் இருந்து மாளவிகா என்ற பெண், அப்துல் ரஹ்மான் என்ற முஸ்லீம் காதலனை நம்பி வீட்டை விட்டு சென்றுவிடுகிறார்.   இந்த திருமணத்தால் மாளவிகாவின் அண்ணன்மார்கள் அப்துல் ரஹ்மானின் கால்களை அடித்து சிதைக்கிறார்கள். இதனால் உருவான பகை, தீர்வதாக இல்லை. மாளவிகாவின் சொத்து தொடர்பாக, வழக்கு போடப்பட்டு   நீதிமன்ற படியேறுகிறது. அதில் மருமகன் ரஹ்மான் வெல்கிறார். மாமனார் வர்மா தரப்பு தோற்கிறது. அதேசமயம், ரஹ்மான் - மாளவிகாவின் மகன் சுலைமான், வாய்ப்பாட்டு கலைஞன். சந்தர்ப்ப சூழல் காரணமாக தனது தாத்தாவின் வீட்டுக்கு உதயபுரம் மாளிகைக்கு வருகிறான். அங்கு, ஒரே பெண் வாரிசான கோபிகாவுடன் காதலாகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதே கதை. திலீப், ஜெகதி ஶ்ரீகுமார், இன்னொசன்ட் இருக்கும்போது காமெடிக்கு என்ன குறை…. கொச்சி ஹனீபாவும் முரட்டுத்தனமாக புத்திசாலியாக நகைச்சுவையை சலீம்

இரு கைகள் இல்லாமல் காலில் தேர்வு எழுதி ஆங்கில முதுநிலைப்பட்டம் வென்ற பெண்!

படம்
  நெருங்கிய உறவில் திருமணம் செய்வது மருத்துவ அறிவியல் அடிப்படையில் குழந்தைகள் ஊனமாக முக்கிய காரணம் என அறிந்திருப்பீர்கள். ஆனால் கிராமங்களில் இன்றும் சொத்து, உறவு என ஏதோ காரணம் காட்டி பெண்ணை அவளது தாய்மாமனுக்கு திருமணம் செய்வது நடந்து வருகிறது. ஆர்காடு கிராமம் முகையூர் கிராமத்தில் வாழ்ந்த வீரம்மாளின் மகள் மாயாவுக்கும் இப்படித்தான் அவளது மாமாவுடன் திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை பிறந்தபோதுதான் திருமணத்தில் கோரமான விளைவு தெரிய வந்தது. பிறந்த குழந்தைக்கு இரண்டு கைகளும் இல்லை. குழந்தையைப் பார்க்க வந்த உறவினர்கள், குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என கூறியிருக்கிறார்கள். ஆனால் பேத்தியை வீரம்மாள் அப்படியெல்லாம் கைவிடவில்லை. நான் உயிரோடு இருக்கும்வரை பேத்தி என்னோடு இருக்கட்டும் என நினைத்து குழந்தையை துணியில் பொதிந்து தூக்கி வந்துவிட்டார். இப்படி குழந்தை ஊனமாக பிறப்பதற்கு காரணம், உறவுமுறை திருமணம் என உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் கூறியிருக்கிறார். இப்படித்தான் வளர்ந்த பெண் குழந்தை வித்யா ஶ்ரீ இன்று ஆங்கிலப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவராக, அரசு ஆசிரியையாக மு

விவாகரத்து வழக்குரைஞருக்கும் காதலர்களை சேர்த்து வைக்கும் பெண்ணுக்குமான மோதல் - பிளான் ஏ, பிளான் பி

படம்
  பிளான் ஏ, பிளான் பி நெட்பிளிக்ஸ் - இந்தி  திருமணமானவர்களுக்கு வேகமாக விவாகரத்து பெற்றுத்தரும் வழக்குரைஞருக்கும், காதலர்களை அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து ஒன்றாக சேர்த்து வைக்கும் இளம்பெண்ணுக்கும் ஏற்படும் மோதல் காதல் இன்னபிற சம்பவங்களே கதை.  ஷேர்ட் ஸ்பேஸ் எனும் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்கள், பொதுவான கிச்சன் என உள்ள இடத்திற்கு இருவர் வாடகைக்கு வருகிறார்கள். ஒருவர், சுக்லா எனும் விவாகரத்து பெற்றுத் தரும் வழக்குரைஞர் - ரிதேஷ் தேஷ்முக். இன்னொருவர் தமன்னா. இருவரின் கொள்கைகளே வேறுபாடனவை என்பதால், இருவருக்கும் அடிக்கடி முட்டிக்கொள்கிறது. இருவரின் வாழ்க்கையிலும் தனிப்பட்ட பிரச்னைகள் உள்ளன. சுக்லா அவரது மனைவியுடன் வாழாமல் தனியாக வாழ்கிறார். அவரது மனைவி அவரது முதலாளியுடன் பாலுறவு கொண்டுவிடுகிறார். இதை சுக்லா அறிந்துகொண்டுவிடுகிறார். இதனால் மனைவியை விட்டு பிரிந்துவிடுகிறார். ஆனால் மனைவிக்கு     குற்ற உணர்ச்சியை உருவாக்கும்படி    விவாகரத்து தருவதில்லை. இதேபோல தமன்னாவுக்கும் ஒரு கதை இருக்கிறது. ரிதேஷ், தமன்னா என இருவரும் தங்கள் தனிப்பட்ட பிரச்னை கடந்து எப்படி வாழ்க்கையில் ஒன்றாக சேருகிறார்கள்

உடைந்துபோன திருமண உறவு - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பிரேக் இல்லாத வண்டியை இயக்குவது போல ... அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? எனது லினக்ஸ் கணினி பழுதானதால் இதுவரை எழுதிவந்த , எழுதி வைத்து சேமித் கோப்புகள் தானாகவே அழிந்துவிட்டன . சோதித்ததில் சில கோப்புகளை குப்பைத்தொட்டியில் பார்த்தேன் . மீட்க முடியவில்லை . அதை மீண்டும் எழுத வேண்டும் . லினக்ஸ் கணினியில் காணாமல் போன கோப்பைத் தேடுவது கடலில் கலந்துவிட்ட ஆற்று நீரை தனியாக பிரிப்பது போல கடினமாக இருக்கிறது . லினக்ஸ் அமைப்பு முறையை முழுமையாக கற்காமல் அதை பயன்படுத்துவது தவறு என இப்போது எனக்குத் தோன்றுகிறது . கணியம் சீனிவாசன் சார் உதவினாலும் கூட கோப்பை எளிதாக மீட்க முடியவில்லை . பேக்அப் எடுத்து வைத்திருக்கவேண்டும் என அரிய அறிவுரையைச் சொன்னார் . நல்ல அறிவுரை . ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டது . பிரேக்கிற்கு இணைப்பு கொடுப்பதற்கு முன்னரே வண்டியை சாவி போட்டு இயக்கியாயிற்று . வண்டி இப்போது சேட்டாவின் டீக்கடை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது . இந்த நிலையில் லபோதிபோ என கத்துவது , ட்விட்டரில் போடும் அட்வைஸ்களை சொல்லி என்ன செய்வது ... இனி க்ளவுட்டில் கோப்பைச் சேமித்து வ

சிங்கம் செத்துவிட்டது - மிருகராஜூ - சிரஞ்சீவி, சிம்ரன், பிரம்மானந்தம், நாகபாபு

படம்
                   மிருகராஜூ இயக்கம் குணசேகர் படத்தின் கதை எங்கே நடக்கிறது என்று கேட்டுவிடக்கூடாது ஏதோ ஒரு கிரகத்தில் நடைபெறுவதாக நினைத்துக்கொள்ளுங்கள். அதுதான் இந்த படத்திற்கும் நமக்கும் மஞ்சிதி... பழங்குடிகள் வாழும் காடு. அங்கு ரயில் செல்வதற்கான இருப்புபாதை கொண்ட பாலம் ஒன்றைக் கட்ட நினைக்கிறார்கள். ஆனால் அங்கு இருக்கும் சிங்கத்தால் கட்டுமான பொறியாளர் கொல்லப்படுகிறார். இதனால் புதிதாக அங்கு பெண் பொறியாளர் வருகிறார். ஆனால் அவருக்கும் இருக்கும் பெரிய பிரச்னை. ஆட்கொல்லியாக மாறிவிட்ட சிங்கம்தான். எத்தனை தான் இருக்கிறது என தெரியாமலேயே வேட்டையாடுவேன் என பெண் பொறியாளர் சொல்லுகிறார். ஆனால் பழங்குடி தலைவர் காட்டுக்குள் உள்ள ராஜூ என்ற பழங்குடி ஆளை சிங்கத்தை வேட்டையாட கூட்டி வருகிறார். அவருக்கும் பெண் பொறியாளருக்கும் உள்ள தொடர்பு என்ன, சிங்கத்தை வேட்டையாடினார்களா இல்லையா என்பதே கதை. படத்தில் சிரஞ்சீவியை விட அதிக காட்சிகளில் கிராபிக்ஸ் சிங்கம் ஒன்றுதான் நடமாடுகிறது. ஆனால் எதற்கு என்றுதான் தெரியவில்லை. பழங்குடிகள் சிங்கத்தின் மூலம் கொல்லப்படுவதை தடுக்க ராஜூ எடுக்கும் முயற்சிகள் என்பது ஒரு கதை. அடுத

கடல் தாண்டியும் பழிவாங்குவான் தெலுங்குவாடு!

படம்
              ஜெய் சிரஞ்சீவா சிரஞ்சீவி, பூமிகா சாவ்லா, சமீரா ரெட்டி     தனது தங்கை மகளை துப்பாக்கியை சுட்டு காண்பிக்கும் முறையில் கொல்லும் தீவிரவாத அமைப்பு தலைவனை தீர்த்துக்கட்டும் கிராமத்து விவசாயியின் கதை.  படத்தில் சிரஞ்சீவி, கிராமத்து விவசாயியாக வருகிறார். டிராக்டர் ஓட்டுகிறார். தங்கை பிள்ளையை கொஞ்சுகிறார். அதேவேகத்தில் அந்த சந்தோஷம் தொலைந்துபோக அதற்கு காரணமானவர்களை போட்டு பொளக்கிறார். இதுதான் கதை. இதற்குள் சிரஞ்சீவி இரண்டு பெண்களை காதலித்து அவர்களுடன் நிறைய பாடல்களை ஆடிப்பாடிமகிழ்விக்கிறார். கூடவே வேணு வேறு இருக்கிறார். காமெடிக்கு கேட்கவா வேண்டும்.  தொடக்க காட்சியில் அதிரடியாக இளம்பெண் ஒருவரை குழு வல்லுறவு பிரச்னையிலிருந்து அடி உதை மூலம் மீட்டு என்ட்ரி கொடுக்கிறார் ஆந்திரப் பிரதேச சூப்பர் ஸ்டார். பிறகுதான் ஹைதராபாத்திற்கு காப்பு கட்டுமளவு ரவுடிகளை அடித்து பிளக்கிறார். படத்தின் இறுதிவரை அவர் தனது தங்கை பிள்ளைக்காக மட்டுமே பழிவாங்குகிறார். வில்லனின் தீவிரவாத செயல்கள் மூலம் நிறையப் பேர் பாதிக்கப்படுவதை அழிவதைப் பற்றியெல்லாம் இயக்குநரும் கவலைப்படவில்லை. எனவே சிரஞ்சீவியும் கவலைப்படவில்

திருமண தோல்வியை விவாதிக்கும் சமூகம்! கடிதங்கள் - கதிரவன்

படம்
  5.12.2021 மயிலாப்பூர்  அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? எனது லினக்ஸ் கணினி பழுதானதால்  இதுவரை எழுதிவந்த கோப்புகள் தானாகவே அழிந்துவிட்டது. சோதித்ததில் குப்பைத்தொட்டியில் பார்த்தேன்.  அதை மீண்டும் எழுத வேண்டும். லினக்ஸ் கணினியில் காணாமல் போன கோப்பைத் தேடுவது கடலில் கலந்துவிட்ட ஆற்று நீரை தனியாக பிரிப்பது போல கடினமாக இருக்கிறது. லினக்ஸ் அமைப்பு முறையை முழுமையாக கற்காமல் அதை பயன்படுத்துவது தவறு என இப்போது எனக்குத் தோன்றுகிறது. கணியம் சீனிவாசன் சார் உதவினாலும் கூட கோப்பை எளிதாக மீட்க முடியவில்லை. பேக்அப் எடுத்து வைத்திருக்கவேண்டும் என அறிவுரை சொன்னார். நல்ல அறிவுரை. ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டது. பிரேக்கிற்கு இணைப்பு கொடுப்பதற்கு முன்னரே வண்டியை சாவி போட்டு இயக்கியாயிற்று. வண்டி இப்போது நாயரின் டீக்கடை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் லபோதிபோ  என கத்துவது, ட்விட்டரில் போடும் அட்வைஸ்களை சொல்லி என்ன செய்வது,  இனி க்ளவுட்டில் கோப்பைச் சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும். 60 பக்கத்தில் எழுதிய நூலை இப்போது திரும்ப எழுத வேண்டும். அத்தனையும் வீண

குருநாதரின் ஸ்பீடையும், ஸ்டாமினாவையும் நெருங்கவோ, மேட்ச் செய்யவோ முடியாது! கடிதங்கள் - கதிரவன்

படம்
  எனது ஆசான் திரு. கே.என்.சிவராமன் 21.10.2021 அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அப்பா, அம்மாவின் நலனை விசாரித்ததாக சொல்லுங்கள். நவ.1 இல் அரசு சொன்னபடி பள்ளி தொடங்கினால், எங்கள் மாணவர் இதழ் 15ஆம் தேதி தொடங்கும் என நினைக்கிறேன்.  பிரன்ட்லைன் இதழ்களுக்கு கட்டிய சந்தா இன்னும் இரு இதழ்களோடு முடிவுக்கு வருகிறது. இதில் வரும் கட்டுரைகள் படிக்க நிறைய தகவல்களோடு உள்ளன. எல்லாமே ஆழமாக கருத்துகளை கொண்டவரை. படிக்க சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இதழ் இதுவே. டி.கே. ராஜலட்சுமி என்ற கட்டுரையாளர் எனக்கு பிடித்தமானவர். எழுதும் கட்டுரைகளில் தனது மனிதநேயம், அக்கறையை எப்படியாவது சொல்லிவிடுகிறார்.  இப்போது ரெடிமேட் சட்டைதான் அணிகிறேன். ஃபேஷன் கம்போர்ட் என்ற கடையின் உடைகள் எனக்கு பொருத்தமாக இருக்கின்றன. அங்கு தான் 1450 ரூபாய்க்கு சட்டை, பேண்ட் வாங்கினேன்.  காலை எட்டு மணிக்கு ஆபீஸ் போய்விடுகிறேன். இதனை ஆசான் கேஎன்எஸ்சிடமிருந்து கற்றது. இப்போது ஆசான் என்னையும் மிஞ்சி ஏழுமணிக்கு ஆபீசுக்கு வந்துவிடுகிறார். இப்போதும் அவரின் உழைப்பு ஒரு அடி முன்னாடி தான் இருக்கிறது. வேகத்த

திரௌபதி முர்மு - முழுமையான தகவல் தொகுப்பு

படம்
  திரௌபதி முர்மு  சந்தால் பழங்குடிப் பெண்மணியான திரௌபதி முர்மு, இந்தியாவின் 15ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்காவை வென்றார். இந்த வெற்றி மூலம் குடியரசுத் தலைவராகும் முதல் பழங்குடி பெண், இரண்டாவது பெண்மணி என இரு சாதனைகளைச் செய்துள்ளார்.  பெயர்: திரௌபதி முர்மு பிறப்பு: 1958, ஜூன் 20ஆம் தேதி பிறந்த இடம்: உபர்பேடா, மாயூர்பன்ஞ், ஒடிஷா வயது: 64 உயரம்: 164 செ.மீ. எடை: 74 கி.கி. பெற்றோர்: பிரான்ச்சி நாராயண் துடு (Biranchi Narayan Tudu) கல்வி கற்ற இடம்:  யூனிட் 2 உயர்நிலைப்பள்ளி; 1979ஆம் ஆண்டு ராம்தேவி பெண்கள் பல்கலைக்கழகம் (பி.ஏ.), புவனேஸ்வர், ஒடிஷா  கல்விப்பணி:  உதவி பேராசிரியர், ஸ்ரீ அரபிந்தோ கல்வி ஆராய்ச்சிக்கழகம், ராய்ரங்பூர்; இளநிலை உதவியாளர், நீர்ப்பாசனத்துறை, ஒடிஷா மாநில அரசு (1979-1983) அரசியல் நுழைவு: 1997, பாரதிய ஜனதா கட்சி (ராய்ரங்பூர் நகர பஞ்சாயத்து கவுன்சிலர்); பஞ்சாயத்து தலைவர் (2000) வகித்த அரசு பதவிகள் : ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் (2015), ஒடிஷாவின் மீன்வளம் மற்றும் விலங்குநலத்துறை அமைச்சர்

மகனின் ராணுவ வேலையை மௌனமாக நிராகரிக்கும் பாச அம்மா! யுவகுடு - கருணாகரன் - தெலுங்கு

படம்
  யுவகுடு சுமந்த், பூமிகா சாவ்லா இயக்குநர் - ஏ.கருணாகரன் திரைக்கதை - ரங்கராஜ், நந்தகோபால் இசை - மணிசர்மா சிவா, கல்லூரி படிப்பை விட தன் அப்பா ராணுவ வீரராக இருந்து உயிரை விட்ட ராணுவத்தில் சேருவதுதான் லட்சியம். இதை அவன் தன் வீட்டிலுள்ள அம்மாவுக்கு கூட சொல்லாமல் செய்கிறான். அம்மா பள்ளி ஆசிரியராக வேலை செய்யும் ஊட்டிக்கு கல்லூரி விடுமுறையை கழிக்க வருகிறான். அங்கே திடீரென சிந்து என்ற பெண்ணைப் பார்த்து காதலில் விழுகிறான். அவனுக்காக அந்த பெண்ணை தேடிப்பிடிக்க சிவாவின் ஆசிரியை அம்மா முயல்கிறார். அந்த தேடல் சாத்தியமானதா இல்லையா என்பதுதான் கதை.  உண்மையில் இது காதலைச் சொல்லும் படம் கிடையாது. மற்றவர்களுக்காக நாம் படும் அக்கறை தான் முக்கியம். ஆணும் பெண்ணும் கொள்ளும் காதல் அந்தளவு முக்கியமல்ல என்றே செய்தி இறுதியில் சொல்லப்படுகிறது.  பிற தெலுங்கு படங்களை விட இந்த படம் வேறுபடுவது, காதலை சொல்லுகிற அல்லது இதுதான் காதல் என நினைத்துள்ள ஊகத்தனமாக விஷயங்களை உடைப்பதுதான்.  சிந்துவின் பாத்திரமே வித்தியாசமானது. அவள் இறுதிவரை சிவாவை காதலிக்க காரணங்கள் ஏதுமே இருப்பதில்லை. இருந்தாலும் ஒரு காட்சியில் சிவா, காதல் ஆவேச

காதலில் ஜெயிக்க சொல்லும் இரு பொய்கள் உண்மையானால்... அன்டே சுந்தரானிக்கி - நானி, நஸ்ரியா - விவேக் ஆத்ரேயா

படம்
  அன்டே சுந்தரானிக்கி நானி, நஸ்ரியா இயக்கம் விவேக் ஆத்ரேயா இசை  விவேக் சாகர் சிறுவயதில் நாடகம் நடிக்கும் சுந்தர், அதேபோல ஒரு நாடகத்தை பொய்களை மட்டுமே வைத்து நிஜவாழ்க்கையில் நடத்தினால்.... அதுதான் கதை.  விவேக் ஆத்ரேயாவின் சுவாரசியமான வசனங்களும், படம் நெடுக நீளும் ஆச்சரியமான குட்டி குட்டி விஷயங்களும் மகிழ்ச்சி தருகின்றன. படத்தை உணர்ச்சிகளின் தோராணமாக கட்ட இருக்கிறதே விவேக் சாகரின் இசை.  சுந்தர், பிராமணர். இவரது குடும்பம் பெரியது. எட்டு அண்ணன் தம்பிகள் உள்ளனர். ஆனால் ஆண்பிள்ளை என்றால் சுந்தர் மட்டுமே. இதனால், அவனை காப்பாற்றுவதே முக்கியப் பணி என சுந்தரின் அப்பா நினைக்கிறார் தனது மகனை பாதுகாக்க, அவர் ஜோசியரை நாடுகிறார். அவர் போடும் கண்டிஷன்களால் சுந்தரின் வாழ்க்கை  எந்த விஷயத்தையும் அனுபவிக்க முடியாமல் ஆகிறது. சைக்கிள் கூட லேடி பேர்ட் தான் கிடைக்கிறது. உபநயனப்படி குடுமி வைத்துக்கொண்டு பள்ளிக்கு போகிறான். அனைத்தும் ஜாதகம் தான் காரணம் என சொல்கிறார் சுந்தரின் அப்பா. இதில் உச்சமாக, காலையில் எழும்போது ததாசு தேவர் என்ற தெய்வத்தின் படம் சுந்தரின் அறையில் மாட்டப்படுகிறது.  இதையும் படத்தில் கிண்டல்

என்னை நானே மணப்பதில் பிறருக்கு என்ன பிரச்னை? - ஷாமா பிந்து

படம்
  இந்தியாவைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து. இவரது வயது 24. கடந்த இருபத்து நான்கு மணிநேரத்தில் இவரைப் போல் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்ட ஒருவரைப் பார்க்க முடியாது. இத்தனைக்கும் அவர் யாரையும் விமர்சிக்கவில்லை. திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்ற பதிவைத்தான் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதற்கு இத்தனை எதிர்ப்பு, ஒரு பெண் திருமணம் செய்துகொள்வதை ஏன் இத்தனை பேர் எதிர்க்கிறார்கள். அதில் தான் சூட்சுமம் உள்ளது. ஷாமா, தன்னைத்தானே கல்யாணம் செய்துகொள்ளப்போகிறார். இதனை சோலோகாமி என அழைக்கிறார். அவரிடம் பேசினோம்.  மணப்பெண், மனைவி இரண்டுக்குமான வேறுபாடு என்ன? நான் இளம்பெண்ணாக வளர்ந்தபோது எனக்கு திருமணம் செய்துகொள்ளத் தோன்றியது. நிச்சயம் நான் திருமணம் செய்துகொள்வேன். ஆனால் மனைவியாக இருக்கமாட்டேன் என உறுதியாக நினைத்தேன். திருமணம் செய்துகொண்டால் உங்கள் வீட்டை விட்டு செல்லவேண்டும். பிறரது வீட்டில் அவர்களின் விதிகளுக்கு ஏற்றபடி வாழ வேண்டும். இதைப்பற்றி யோசித்துக்கொண்டு இணையத்தில் தேடியபோது சோலோகாமி பற்றி தெரிந்தது. எனவே அதைப்பற்றி படித்து என்னை நானே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன். இந்தியாவில் இது முதல் ம

இந்திய சமூகத்தில் செக்ஸ் அனுபவிப்பதில் ஆர்வம் காட்டும் பெண்கள்!

படம்
1  இந்தியா டுடே இந்தியா முழுக்க ஒரே வாரம் மட்டும் பரபரப்பாக விற்கும். அந்த வாரம் அப்படி என்ன கவர் ஸ்டோரி என மனதிற்குள் கேள்வி ஓடுகிறதா? அது மக்களின் முக்கியமான வாழ்வாதார பிரச்னை என்னவென்று தெரியுமா? செக்ஸ்.  செக்ஸ் வாழ்க்கை இந்தியா முழுக்க எப்படியிருக்கிறது என சர்வே ரெடி செய்வார்கள். ஆணுறை பிராண்டுகளில் சர்வதேச பிராண்டுகள் வரை விளம்பரம் கொடுத்து அமர்க்களப்படுத்துவார்கள். இந்தியாடுடே, செக்ஸ் சர்வே என்பதற்காகவே தனியாக போட்டோஷூட் வேறு நடத்துவார்கள்.  பின்னே வாழ்க்கை பிரச்னை அல்லவா? செக்ஸ் சம்பந்தமான விஷயங்களின் ஆதாரமே பெண்கள்தான். அவர்கள்தான் இதில் முக்கியமான இயற்கை வளம். அதனை வெற்றிகொள்ளத்தான் ஆண்கள் அரும்பாடு படுகிறார்கள். இதற்காக டைம்ஸ் ஆப் இந்தியா முதல் இந்துஸ்தான் டைம்ஸ் வரை பல்வேறு டிப்ஸ்களை வாரம்தோறும் வெளியிட்டு மனித சமூகத்திற்கு அருந்தொண்டு ஆற்றுகிறார்கள்.  பழங்குடிகளைப் பொறுத்தவரை குறிப்பிட்ட வயதில் விருப்பமானவர்களை தேர்ந்தெடுத்து தனியாக தங்க வைக்கிறார்கள். இதில் பெண், ஆணோடு உறவு கொள்வது தொடங்கி வாழ்வது வரையிலான பல்வேறு பயிற்சிகள் முயன்று பார்க்கிறார்கள். இதனால் அவர்களது வாழ்க்க

தான் பார்த்த பெண்ணா, பெற்றோர் பார்த்த பெண்ணா- தெல்லவாரித்தே குருவாரம் - ஸ்ரீ சிம்கா, சித்ரா சுக்லா, மிஷா நரங்

படம்
  Director: Manikanth Gelli Music by: Kaala Bhairava Written by: Nagendra Pilla தமிழில் - விடிஞ்சா வியாழக்கிழமை தமிழ்ப்படம்  யூட்யூப் சேனல் வீரு, தனது வாழ்க்கைத்துணையை தானே தேடிய காதலில்  கண்டுபிடிக்கிறாரா அல்லது அவரது அப்பா தேடி வைக்கும் வரன் மூலம் கண்டுபிடிக்கிறாரா என்பதுதான் கதை.  வீரு, கட்டுமானத்தொழிலில் வேலை செய்து வருகிறார். நன்றாகத்தான் வாழ்க்கை  போகிறது. அவர் சிங்கிள் இல்லையா, அதனால் காதல் தேடி மது, நண்பர்கள் என  அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார். ஒருநாள் பப்பில் குடித்துவிட்டு ஒரு  க்ரூப் மீது வாந்தி எடுக்க அவர்கள் வீருவோடு  சேர்த்து அவர்களின் நண்பர்களையும் புரட்டி எடுக்கிறார்கள். காயங்களுக்கு டிங்க்சர் வைக்க மருத்துவமனைக்கு சென்றால், அங்கு  மருத்துவர் கிருஷ்ணவேணி என்கிற கிருஷ்ணாவை பார்க்கிறார்கள். மூன்றுபேரும்தான். ஆனால் வீரு காதலித்தால் அது டாக்டர் கிருஷ்ணாதான் என உறுதியாக இருக்கிறார்.  கிருஷ்ணாவும் கல்யாணம் செஞ்சுப்பியா என தந்திரமாக கேட்டு பதில் வந்தபிறகுதான், இருவரும்  காசை கரைக்க பல்வேறு உணவகங்கள், பப், சினிமா என திரிகிறார்கள். இந்த நேரத்தில் வீருவின் அப்பா அவனுக்கு கல்யாண