இடுகைகள்

வங்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்வது அவசியமா?

படம்
          பணம் - கையாளப் பழகுவோம் 3 முதலீடும் துணிச்சலும் வங்கியில் முதலீடு செய்வது , அதற்கான அதிக வட்டியை எதிர்பார்ப்பது ஆகியவற்றிலும் ஆபத்துகள் உண்டு . முதலீடு மூலம் கிடைக்கும் நிதி பயன்களை நினைத்து செய்யும் அனைத்து நிதி முதலீடுகளிலும் பல்வேறு அபாயங்கள் உண்டு . எனவே , திட்டத்தை ஆராயாமல் செயல்பட்டால் , முதலீடு செய்த பணம் கைவிட்டுப் போகும் அபாயம் உண்டு . நிதிப்பயன்களை குறைவாக வரையறுத்துக்கொண்டால் , நீங்கள் செய்யும் செயல்களில் ஆபத்துகளும் குறையும் . நிதி சார்ந்த முதலீடுகளில் முக்கியமான விதி இதுதான் . அதிக பணத்தை எதிர்பார்த்து முதலீடுகளை தேர்ந்தெடுத்தால் அதில் பெருமளவு இழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது . குறுகிய காலத்தில் அதிக வருமானம் தரும் திட்டங்களை நம்பி உடனே அதிகளவு பணத்தை முதலீடு செய்யாதீர்கள் . மேலும் , திட்டம் பற்றி நிறுவனங்கள் தரும் திட்ட அறிக்கையை முழுமையாக படித்து நிபந்தனைகளை நன்றாக யோசித்துவிட்டு நிதி முதலீடுகளைச் செய்யுங்கள் . நீங்கள் பணம் கட்டி வரும் நிறுவனம் உங்கள் முதலீட்டுத்தொகையை தர மறுத்துவிட்டால் , திட்டம் தொடர்பாக ஏதாவது பிரச்

எண்களே இல்லாத கிரடிட் டெபிட் கார்டுகள்! - மோசடிகளிலிருந்து தப்பிக்க புது ஐடியா

படம்
            நிதிமோசடிகளை தடுக்கும் புதிய தொழில்நுட்பம் ! கிரடிட் , டெபிட் கார்டுகளில் நடைபெறும் நிதி மோசடிகளைத் தடுக்க பல்வேறு நிறுவனங்கள் எண்களற்ற கார்டுகளை வெளியிட்டு வருகின்றன . நாம் தற்போது கடைகளில் நேரடியாக பொருட்களை பணம் கொடுத்து வாங்குவதை கைவிட்டு டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு மாறி வருகிறோ்ம் . வங்கி வழியை விட கிரடிட் , டெபிட் கார்டுகள் வழியாக நடைபெறும் பணப்பரிமாற்றம் பல்வேறு மோசடிகளுக்குள்ளாகி வருகிறது . இதில் ஒருவரின் பெயர் , எண்கள் , பாதுகாப்பு எண்கள் ஆகியவை உள்ளதால் , அவற்றை முறைகேடாக பெறுபவர்கள் மோசடிக்குப் பயன்படுத்தி வருகின்றனர் . இதனைத் தடுக்க எண்கள் இல்லாத அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன . இந்த அட்டையிலும் பின் (PIN) எண்ணை பயனர்கள் , ஓட்டல்களில் , மால்களில் பயன்படுத்தலாம் . இந்த அட்டை , ஸ்மார்ட்போனிலுள்ள செயலியோடு இணைக்கப்பட்டிருக்கும் என்பதால் முறைகேடுகளுக்கான வாய்ப்பு குறைவு . இந்தியாவில் இளைஞர்களுக்கான டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனமாக ஃபேம்பே உரு்வாக்கப்பட்டுள்ளது . இந்நிறுவனத்தின் ஃபேம்கார்டு , மூலம் பெற்றோர் தங்களது பிள்ளைகளின

இளைய தலைமுறையினர் சேமிக்கிறார்களா?

படம்
pixabay பூமர், ஜென் இசட் ,மில்லியனிய ஆட்கள் என அனைவரையும் இணைப்பது பணம்தான். ஆம். இவர்களின் சிந்தனைகள் வேறுபட்டவை. இன்று இயர்போன் மாட்டாத இளைஞர்களை நீங்கள் எங்கும் தேடித்தான் பிடிக்கவேண்டும். அதேபோலத்தான் அவர்கள் பயன்படுத்தும் டேட்டாவின் அளவும். ஜியோவை சல்லீசு ரேட்டில் வாங்கி அளவில்லாத இணையத்தை நுகர்பவர்கள், தனக்கான நலன்களையே முக்கியமாக கருதுகிறார்கள். சமூகத்தை இணையத்தின் வழியாக அறிந்துகொள்ள முடியும் என நினைக்கிறார்கள். இந்த விவகாரங்கள் எப்படியோ, ஆனால் கல்யாணம் ஆகி ஹீரோ பைக் வாங்கி செட்டில் ஆகும் விஷயத்தில் எந்த மாற்றமுமில்லை. பூமர் முதல் மில்லியனிய ஆட்கள் ஆட்கள் வரை காசு சேர்ப்பதிலும், அதனை முதலீடு செய்வதிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்கிறார்கள். இதில் ஜென் இசட் ஆட்கள் கில்லி என்கிறார் வலைத்தளத்தில் நிதி மேலாண்மை பற்றி எழுதி வரும் லாவண்யா மோகன். இவருக்கு எப்படி நிதிமேலாண்மை பற்றி பிறருக்கு சொல்வதில் ஆர்வம் வந்தது? என்று கேட்டோம். எங்கள் வீட்டில் செய்யும் செலவுகள், வருமானம் பற்றி சுதந்திரமாக பேசுவார்கள். இதன் அடிப்படையில்தான் நான் பொருளாதாரம் பற்றி எழுதத் தொடங்கினேன

பட்ஜெட்டை தீர்மானிக்கும் நிதி அமைச்சக குழு! - ஐவர் குழு இவர்கள்தான்

படம்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2020 - தீர்மானிப்பவர்கள் இவர்கள்தான். எதிர்வரும் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கலாகவிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையை இரண்டாம் முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த நிதிநிலை அறிக்கையை உருவாக்குவதில் முக்கியமான பங்களிப்பை அளிக்கும் அதிகாரிகள் சிலரைப் பார்ப்போம். ராஜீவ்குமார்,  நிதித்துறை செயலர்  நிதியமைச்சகத்தின் முக்கியமான அதிகாரி. பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்கும் சர்ச்சைக்குரிய சீர்த்திருத்தங்களை உருவாக்கி முன்மொழிந்ததில் இவருக்கு முக்கியப் பங்குண்டு. வாராக்கடன் பாதிப்பைக் குறைத்து வங்கிகள் தொழில்துறைக்கு கடன்களை வழங்குவதற்கான முயற்சிகளுக்கான பரிந்துரைகளை இவர் நிதி அமைச்சருக்கு வழங்குகிறார். வங்கித்துறையின் பின்னணியில் இருந்து கடன்களை வழங்க வைத்து மக்களின் நுகர்வு மூலம் பொருளாதாரத்தை மீட்கும் முக்கிய முயற்சியை இவர் செய்து வருகிறார். அதானு சக்ரபொர்த்தி,  பொருளாதார விவகாரங்கள் துறை செயலர். பொதுத்துறை பங்குகளை விற்கும் திறனில் அதானு வல்லுநர். மத்திய அரசு 1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை இ

சிறுகுறு தொழில்துறைக்கு என்னாச்சு? - அரசின் பாதகமான நிதி,பணக்கொள்கை!

 இந்தியாவிலுள்ள 6.3 கோடி சிறுதொழிலாளர்கள் ஆட்டோமேஷன், அல்காரிதம் என தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு ஏற்றபடி தொழில்களை மேம்படுத்தி, வருகிறார்கள். நாட்டின் நாற்பது சதவீத ஏற்றுமதிக்கும், 28 சதவீத உள்நாட்டு உற்பத்திக்கும் உதவுவது இவர்கள்தான். தோராயமாக 11 கோடிப்பேருக்கும் மேலாக வேலைவாய்ப்புகளை வழங்கும் சிறுகுறுகுறுந்தொழில் துறை, விவசாயத்துறைக்கு அடுத்து வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்குகிறது. மத்திய அரசு பதிவு செய்த குறுந்தொழில் நிறுவனங்களுக்கு புதிய கடனாக 350 கோடியை இரு சதவீத வட்டியுடன் வழங்குகிறது. கூடவே முத்ரா கடன் வசதியும் உள்ளது. ஆனால் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்காக இந்திய அரசு செய்த பணமதிப்பு நீக்க முயற்சியில் இத்துறையின் வளர்ச்சி முடங்கியது. இதன்விளைவாக, தொழில்துறை உற்பத்தி இண்டெக்ஸில் (IIP) 3.6 சதவீத வளர்ச்சி மட்டுமே இந்த ஆண்டில் பதிவாகியுள்ளது. இக்காலகட்டத்தில் வங்கிகளில் வாராக்கடன் அளவு அதிகரித்து வந்தது. இதைக் குறைக்க, ரிசர்வ் வங்கி கடன் தரும் முறைகளையும் மாற்றி அமைக்க உத்தரவிட்டது. இதனால், சிறுகுறு தொழிலாளர்கள் வங்கிக் கடன் கிடைக்காமல் தடுமாறினர்.  இதற்காகவே இந்திய அரசு, செபியின்

வங்கிகள் தேசியமயம் - 50 ஆண்டுகள்- என்ன நடந்தது?

படம்
வங்கிகள் தேசியமயம்: 50 ஆண்டுகள் நிறைவு! வங்கிகள் தேசியமயமாகி இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, 1969 ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று 14 வங்கிகளை அரசு வங்கிகளாக மாற்றியது. ரிசர்வ் வங்கி வரலாற்றில் 1947க்குப் பிறகு அமலான முக்கியமான நிதிச் சீர்த்திருத்தம் இதுவே. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை தொண்ணூறுகளில் நடைபெற்ற தாராளமயமாக்கலோடு பொருளாதார வல்லுநர்கள் ஒப்பிடுகின்றனர். வங்கிகள் தேசியமயமானது காங்கிரசுக்கு அன்று ஆதாயம் அளித்தது. ஆனால், பின்னாளில் அரசுகளுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தின.  அன்றைய இந்தியாவில்  தனியார் வங்கிகள் செயற்பட்டு வந்தாலும், அவற்றின் மீது பெரியளவு நம்பிக்கை உருவாகவில்லை. மக்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றுவது தினசரி செய்தியாக மாறி வந்தன. 1951-68 வரையிலான காலத்தில் தனியார் வங்கிகள் தொழில்துறைக்கு 68 சதவீத கடன் தொகைகளையும், விவசாயத்திற்கு 2 சதவீத கடன்களையும் அளித்தன. அக்காலகட்டத்தில்தான் கிராமங்களிலுள்ள விவசாயத்துறைக்கு உதவுவது போல வங்கிகள் தேசியமயம் என்ற இந்திய அரசின் உத்தரவு வெளியிடப்பட்டது.

பிட்ஸ் - ரிசர்வ் வங்கி

படம்
பிட்ஸ்! இந்தியாவிற்கான ரிசர்வ் வங்கி, 1947 ஆம் ஆண்டு வரை மியான்மருக்கும், 1948 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானுக்கும் வங்கிச்சேவையை வழங்கி வந்தது. பிரிட்டிஷார் ஆட்சியில் ரிசர்வ் வங்கிச்சட்டம் 1934 படி, மத்திய ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டது. ரிசர்வ் வங்கி செயல்படும் விதம், அதற்கான விதிமுறைகள் ஆகியவை டாக்டர் அம்பேத்கர் எழுதிய “The Problem of the Rupee – Its origin and its solution” என்ற நூலையொட்டி உருவானது. இந்த நூலை அம்பேத்கர், ஹில்டன் கமிஷனிடம் சமர்ப்பித்தார். இதனைப் பின்பற்றி 1926 ஆம்ஆண்டு ராயல் கமிஷன், ரிசர்வ் வங்கியை உருவாக்கும் திட்டத்தை உருவாக்கியது. ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டபோது, கோல்கட்டாவைத் தலைமையகமாகக் கொண்டு செயற்பட்டு வந்தது. பின்னர், 1937 ஆம் ஆண்டு முதல் மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படத் தொடங்கியது. ரிசர்வ் வங்கியின் நாக்பூர் கிளையில் இந்தியாவிலேயே அதிக அளவாக தங்கம் இருப்பில் சேமிக்கப்பட்டு வருகிறது.  நன்றி: பாலகிருஷ்ணன்

மூத்த குடிமகன்களுக்கான வட்டி குறைவது இயல்பானதுதான்!

படம்
சக்தி காந்த தாஸ் ஆர்பிஐ ஆளுநர் கரன்சி செயல்பாடு புதிய எல்லையைத் தொட்டுள்ளது? சதவீத அளவில் பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு குறைந்தளவே மக்களிடம் புழங்கி வருகிறது. வளர்ச்சி அடிப்படையில் பார்த்தால் ரூபாயின் புழக்கம் மக்களிடம் அதிகமாகத்தான் இருக்கிறது. இது விரைவில் குறையும் என நம்புகிறேன். வட்ட சதவீதம் குறைந்தால் அது மூத்தவர்களுக்கு பாதகமாகும் என்பதை அறிந்துள்ளீர்களா? பணவீக்கம் குறையும் போது வட்டி சதவீதமும் குறைவது வழக்கமானதுதான். பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருக்கும்போது வட்டி எட்டு சதவீதமாக இருக்கும். அது குறையும்போது வட்டி 4 சதவீதமாக குறைவது இயல்புதானே! வெளிநாடுகளிலும் கூட இந்திய கடன் பத்திரங்களை வாங்க முடியும் என பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறார்களே? நாங்கள் அரசு கடனை நிர்வாகம் செய்யும் மேலாண்மை அமைப்பு மட்டுமே. அதை மட்டுமே செய்கிறோம். கடன், வட்டி பிரச்னைகளை குறித்து அரசுடன் தொடர்ந்து பேசிவருகிறோம். அரசின் வேறு முடிவுகளை பற்றி நாங்கள் பதில் கூறமுடியாது. முழுக்க டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறை சரியாக செயல்படுகிறதா? நிறைய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதே? அவ

காமெடி திருடர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

படம்
காமெடி திருடர்கள்! உழைத்து சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டமோ, அதைவிட கஷ்டம் அதைத் திருடிக் கொள்ளையடித்து சென்று சோக்காளியாக வாழ்வது. திருடர்களின் அசகாயர்களும் உண்டு, அசடுகளும் உண்டு. அதில் சிலர்... கேட்காத காது! ஜெர்மனியில் நடந்த திருட்டுக் கதை இது. பெர்லினில் உள்ள வங்கியில் நுழைந்த திருடர் துப்பாக்கியைக் காட்டி பணத்தை பேக்கில் நிறைக்கச் சொன்னார். கேஷியரும் வியர்த்து வழிந்தபடி,  பணத்தை பேக்கில் போட்டார். அப்போது பேக் நிரம்ப, இன்னொரு பேக் வேண்டுமா என ஊழியர் கேட்டார். அதற்கு, அத்திருடர், கையில் வைத்திருக்குக்கும் துப்பாக்கி ஒரிஜினல்தான் என்று பதில் சொல்லியிருக்கிறார். காது டமாராமா? என புன்னகைத்தவர் உடனே போலீசை அழைக்கும் அலாரத்தை ஒலிக்கவிட, திருடர் மாட்டிக்கொண்டார். இலவச வலை! இங்கிலாந்தின் டெர்பிஷையரில் இருந்த சிலருக்கு தபாலில் வந்த கடிதம் ஆச்சரியமளித்தது. அவர்கள் போட்டியில் வென்றுள்ளதாகவும், அதற்குப் பரிசாக பீர் வழங்கப்படும் என்று எழுதியிருந்ததைப் படித்ததும் உச்சி குளிர்ந்து போயினர். சொன்ன இடத்திற்கு வந்தவர்களை போலீஸ் லத்தியில் முட்டிக்கு முட்டி தட்டி கெட்டியாய் காரில் ஏற்றி

காமெடி செய்த திருடர்கள்!

படம்
காமெடி திருடர்கள்! கம்பி எண்ண வைத்த கழுதை! கொலம்பியாவில் நடந்த கூத்து இது. மளிகைக் கடை ஒன்றை திருடர்களை சுழி சுத்தமாக கத்தி கபடாக்களை வைத்து கொள்ளையடித்தனர். அதெல்லாம் பிரச்னையில்லை. கல்லாவில் உள்ள பணத்தைக்கூட துடைத்து எடுத்தாயிற்று. ஆனால், போலீசில் பத்து நிமிடங்களில் மாட்டிக்கொண்டார்கள். உணவு மற்றும் ரம் பாட்டில்களை திருடிய கொள்ளையர்கள் அதனை மோட்டார் வண்டியில் ஏற்றியிருக்கலாம். எகானாமி முக்கியம் என்று நினைத்தார்களோ, மேக் இன் கொலம்பியா திட்டத்தை பின்பற்றலாம் என நினைத்தார்களோ மாட்டிக்கொண்டார்கள். காரணம் , கழுதைதான். ஏராளமாக சுமையை ஏற்ற, அது பச்சாவோ, ஆபத்து, ஐம் இன் டேஞ்சர் என அத்தனை மொழிகளிலும் ஆபத்தை கத்தி கதறி உலகிற்கு சொல்ல, அருகில் நின்ற போலீஸ் உஷாராகி திருடர்களை அடித்து உதைத்து வெளுத்து விட்டனர். முக்கியமான தகவல் அந்த கழுதையின் பெயர் எக்ஸேவி. ரெடியா இருங்க ப்ரோ! நம் நண்பர்களில் சிலர் கூட இப்படித்தான். எங்கு செல்லும்போதும் முன்னேற்பாடுகளை அடுக்கிக்கொண்டே இருப்பார்கள். பஸ் இருக்குமா, பாத்ரூமில் பக்கெட் வச்சுருப்பாங்களா, சில்லறை வச்சிருக்கியா, வழி தெரியுமா என