எதுவேண்டுமானாலும் செய்யுங்கள்
எதுவேண்டுமானாலும் செய்யுங்கள் பல்க்மான் எனும் நடிகர் சாலையோரத்தில் காரை ஓட்டி நடைபாதையில் படுத்திருந்த ஒருவர் இறந்துவிட்டார். ஒருவருக்கு கால் போய்விட்டது. மற்ற நான்கு பேருக்கு கடுமையான காயம். இது குறித்து பலரும் பலவிதமான பேசுகிறார்கள். பல்க்மானின் நண்பர்கள் அவருக்கு கண்ணீர் சிந்தி ஆதரவு தெரிவிக்கிறார்கள். பலர் ஏழை மனிதர்களின் பக்கம் நின்று செய்தித்தாளில் பல பக்கம் எழுதுகிறார்கள். நான் கேட்கிறேன். பல்க்மான்தான் காரை வேகமாக ஓட்டினார். அது ஒருவரின் மேல் ஏறி அவர் இறந்துவிட்டார். அதற்காக அவரை எப்படி நீங்கள் சிறையில் அடைக்க முடியும்? அவர் ஒரு கதாநாயகன் சினிமாவில் மட்டுமல்ல. நிஜத்திலும். பீயிங் ஹியுமன் எனும் நிறுவனத்தை நடத்தி பலருக்கு உதவிகள் செய்கிறார். ஓவியங்கள் வரைந்து விற்கிறார். இவருக்கு பல அரசியல்வாதிகள் தெரியும், அவர்களின் ஏகோபித்த அன்பு உண்டு. பிற்காலத்தில் தாமரைக்கட்சியில் சேர்ந்து எம்.பி கூட ஆகலாம். ஆனால் இறந்த மனிதர் யார்? அவருக்கு அடுத்தவேளை சாப்பிட சட்டைப்பையில் காசிருந்ததா? வானத்தை கூரையாக நினைத்து