இடுகைகள்

வக்கிரத்தின் அளவீடு எது?

படம்
                                                 வக்கிரத்தின் அளவீடு எது?               42 ஆண்டுகள் கோமாவில் இருந்து இறந்துபோன மும்பை நர்ஸ் அருணா ஷான்பாக் 66 வயதில் இறந்துவிட்டார். அதுகுறித்த ஏங்க இப்படி நடக்குது? என்று அதிர்ச்சியடைந்த முகத்துடன் ஒரு விஷயத்தை பகிர்ந்துகொண்டார். நண்பர் சுந்தரத்தின் சக தோழி ஒருவர் பிரைமரி ஸ்கூல் ஒன்றில் பணிபுரிகிறார். அவருக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் காதல் கடிதம் கொடுக்கிறான் இது எவ்வளவு வக்கிரமானது? என்று வருத்தப்பட்டார் அவர். ஏறத்தாழ பள்ளி பயின்ற நம்மைப்போல பலரும் ஆணோ, பெண்ணோ ஆசிரியர் எவராக இருந்தாலும் அவரது கம்பீரம், பழகும் முறை, கவர்ச்சி இதனால் கவர்ந்திழுக்கப் படாமல் இருக்கவே முடியாது. ஆண் என்பதை விட பெண் எனும் போது அது மாணவர்களுக்கு கூடுதல் பிணைப்பை அவர்களுடன் ஏற்படுத்துகிறது. தாயின்மேல் தந்தையிடம் இருப்பதைவிட ஆண் பிள்ளைகளுக்கு நெருக்கம் அதிகம்தானே! இதை ஏன் நாம் இந்தக்கோணத்தில் பார்க்கக்கூடாது? என்றேன். அதற்கு அவர், ''அப்படியா சரி, நெல்லை பேருந்து நிலையத்தில் நான் நடந்துபோய்க்கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் 45 வயது மதி

கூலி ஆட்கள் எங்கே போனார்கள்?

படம்
                                      கூலி ஆட்கள் எங்கே போனார்கள்?   விவசாயத்திற்கு கூலி ஆட்கள் கிடைக்கவில்லை என்று பலரும்  குறை கூறுகிறார்கள். சிலர் இதனை நேரடியாக டி.வி நிகழ்ச்சிகளிலும் கூறுகிறார்கள். அந்த நிகழ்ச்சி ஒன்றினை நண்பர் ஆர்.எம்  கலந்துகொண்ட பகுதியை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. ஏறத்தாழ அழுதுகொண்டே என் நிலத்தில் யாரும் வேலை செய்ய வரமாட்டேன் என்கிறார்கள் அதற்கு காரணம் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்தான் அதை நிறுத்தவேண்டும் என்கிற ரீதியில் பேசினார். அப்போது செந்தமிழன், ஆர்.எம் இருவரும் அதற்கான நேர்மையான காரணத்தை கூறியபோதும், நிலவுடைமையாளரால் உண்மையை ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. நேர்மையான காரணம் என்னவென்றால் நிலத்தில் வேலை செய்வது தாழ்த்தப்பட்ட வகுப்பினர்; தலித் மக்கள்தான். ஆனால் இந்த மேல்ஜாதி முதலாளிகள் அவர்களை கடுமையாக அதட்டி உருட்டி அடிமைபோல வேலை வாங்குகிறார்கள். மரியாதை கிடைக்காத வேலையை ஒருவர் ஏன் ஏற்க வேண்டும்? முதலில் வேறு வாய்ப்புகள் இல்லை. ஆனால் இன்று ஏராளமான வாய்ப்புகளை நகரம் வாரி வழங்குகிறது.  எனவே அவர்கள் அங்கே குறைந்த கூலி என்றாலும் அதை நாடி செல்கிறார்கள். அந்த வீட

திசை தேடி....

படம்
                                                                திசை தேடி....                   நகரத்தைப் பொறுத்தவரையில் திசை மிகவும் முக்கியம் என்று கூறலாம்.  அண்ணாநகர் மேற்கு என்றால் அங்கிருந்து மெயின் ரோட்டில் இருந்து பல சாலைகள் இடையறாது நூலகம் வரையில் பிரிந்து பிரிந்து ஒன்று சேரும். கிராமங்களில் உள்ள போக்குவரத்து சாலைகள் போன்றதல்ல இவை. நகரத்தில் பேருந்துகள் போக ஒரு வழி, திரும்பி வர ஒரு வழி. இவை ஏதோ ஒரு இடத்தில் ஒரு பொதுவான சந்திப்பில் சந்தித்துக்கொள்ளும். ஆனால் புதிதாக நகரத்திற்கு இடம்பெயர்ந்து வரும் ஒருவனுக்கு இவை பெரும் திகைப்பை அளிக்கும். அதாவது எனக்கு அளித்தது. அடிக்கடி தொலைந்துபோவதுதான் எனது வாடிக்கை. மிகத்துல்லியமாக தவறான வழியில் சென்று நூடுல்ஸ் அல்லது பாஸ்தா போன்றிருக்கிற மூளையை மேலும் நொச நொச வென முறுக்கிக்கொள்வேன். முதலில் மயிலாப்பூரில் வந்தபோது, வெஸ்டர்ன் டாய்லெட் போக ஒருவார பயிற்சியை எனது உடன்பிறப்பு அளித்தார். அப்படியிருந்தும் அதில் அமர்ந்து மலம் கழிப்பது என்பது பிராண சங்கடமாகவே இருந்தது. உட்கார்ந்தவாக்கில் மலம் கழிப்பது என்பது எப்படி பழகுவது என்று என்னால் பு

ஏத்துடா மெழுகுவத்திய!

படம்
                                                ஏத்துடா மெழுகுவத்திய!             இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது எப்போதும் நம்மிடையே இருக்கும் ஒரு உத்திதான். எல்லாமே தத்தமது இருப்பை உறுதி செய்து கொள்வதற்காகத்தான் தோழர்களே! இப்போது பாருங்கள்.  இறந்தவர்களை பாராட்டுபவர் அவரது கொள்கைக்கு விரோதியாக கூட இருக்கலாம். மோடி அம்பேத்கரை பாராட்டுவது போல. அதெல்லாம் நமக்கு ஒரு பிரச்சனையா என்ன. செத்தவன் எழுந்து வந்து ஏதாவது சொல்லவா போகிறான்? நேற்று நுங்கை முழுவதும் ஒருவர் பேனரில் மண்வெட்டி வைத்து நிற்கிறார். ஒன்றில் கட்சியின் அணிவகுப்பை பார்வையிடும் மேஜர் ஜெனரல் போல இருக்கிறார். ஆனால் கட்சியினர்க்கு இன்னும் திராவிடக் கட்சியினரைப் போன்ற படைப்புத்திறன் இல்லை. ஒசாமா, ஒபாமா, சே போன்று எல்லாம் முயற்சிக்கவில்லை. அட மறந்துவிட்டேன். அதை குருமா எடுத்துக்கொண்டு விட்டார் அல்லவா? அதனாலென்ன அலெக்ஸாண்டர், சீசர், நெப்போலியன் என வாய்ப்புகள் நிறைய நமக்கு காத்திருக்க என்ன இது மண்வெட்டி, மேஜர் ஜெனரல் வேஷம் எல்லாம். ஞாயிற்றுக்கிழமையை எப்படி கழிப்பது என்பவர்களுக்கு இதுபோன்ற போலி செயல்பாட்டுவாதிகள் பெரும்

எதுவேண்டுமானாலும் செய்யுங்கள்

படம்
                                                 எதுவேண்டுமானாலும் செய்யுங்கள்                  பல்க்மான் எனும் நடிகர் சாலையோரத்தில் காரை ஓட்டி நடைபாதையில் படுத்திருந்த ஒருவர் இறந்துவிட்டார். ஒருவருக்கு கால் போய்விட்டது. மற்ற நான்கு பேருக்கு கடுமையான காயம். இது குறித்து பலரும் பலவிதமான பேசுகிறார்கள். பல்க்மானின் நண்பர்கள் அவருக்கு கண்ணீர் சிந்தி ஆதரவு தெரிவிக்கிறார்கள். பலர் ஏழை மனிதர்களின் பக்கம் நின்று செய்தித்தாளில் பல பக்கம் எழுதுகிறார்கள். நான் கேட்கிறேன். பல்க்மான்தான் காரை வேகமாக ஓட்டினார். அது ஒருவரின் மேல் ஏறி அவர் இறந்துவிட்டார். அதற்காக அவரை எப்படி நீங்கள் சிறையில் அடைக்க முடியும்? அவர் ஒரு கதாநாயகன் சினிமாவில் மட்டுமல்ல. நிஜத்திலும். பீயிங் ஹியுமன் எனும் நிறுவனத்தை நடத்தி பலருக்கு உதவிகள் செய்கிறார். ஓவியங்கள் வரைந்து விற்கிறார். இவருக்கு பல அரசியல்வாதிகள் தெரியும், அவர்களின் ஏகோபித்த அன்பு உண்டு. பிற்காலத்தில் தாமரைக்கட்சியில் சேர்ந்து எம்.பி கூட ஆகலாம்.  ஆனால் இறந்த மனிதர் யார்? அவருக்கு அடுத்தவேளை சாப்பிட சட்டைப்பையில் காசிருந்ததா? வானத்தை கூரையாக நினைத்து

தேடலும் தேடல் நிமித்தமும்

படம்
                                                    தேடலும் தேடல் நிமித்தமும்                                        ஒரு ஊரில் அது முற்றிலும் அந்நியமாக இருக்கையில் அதனைத் தேடி அதனுள் ஒரு இடத்தை உறுதி செய்து நிழலில் அமருவது பெரும்பாடு. அப்படி அமர்ந்தவர்களின் உதவியில் அமருவது அதன் பின் வருபவர்களின் வழக்கம். நகரம் கிராமத்தின் பல மனிதர்களை வசீகரித்து இழுக்கிறது. ஆனால் அந்தக் கவர்ச்சியும் வசீகரமும் மாநகரத்தில் வாழும் சில நாட்களிலேயே அவர்களுக்கு பிடிக்காது போய்விடும். காரணம் பொருள் தேடும் பரபரத்து தடதடத்து பாயும் காட்டாற்று வாழ்க்கையில் இங்கே முகம் கொடுத்து பேச, புன்னகைக்க யாரிருக்கிறார்கள் இங்கே?  பெரும்பாலான  சமயங்களில் கடற்காற்றும் வானமும் துணையாக நிற்கின்றன. ஒவ்வொரு மனிதனும் ஏன் நகரத்தில் சலனமில்லாது மோட்டார்சைக்கிளை சிறிதும் கவனமேயில்லாது ஏதோ ஒரு வகையில் மற்றவர்களை ஈர்க்கும்படி வேகமாக ஓட்டிச்செல்கிறார்கள்? சைலன்ஸரின் ஒலியை மாற்றியமைத்து அரசியல் மேடையின் ஆபாச கூச்சல்களுக்கு இணையாக அதனை நம் காதில் கேட்க வைக்கிறார்கள்? அனைத்திற்கும் காரணம் உண்டு.                 நகரங்களி

நான் ஏன் விவசாயம் செய்யமாட்டேன்?

படம்
                    நான் ஏன் விவசாயம் செய்யமாட்டேன்?                    சி.ஏ படிப்பை வெற்றிகரமாக முடித்தவுடன் நண்பர் கதிரவன் என்பவர் தான் ஒரு அறக்கட்டளை நிறுவி ஏதாவது உதவிகளைச் செய்வதாக  கூறினார். ஆனால் நான் அதை பத்தாவது, பிளஸ் டூ மாணவர்களின் உற்சாக உளறல்களாக அப்போது நினைக்கவில்லை. ஆனால் அதன் பின் எனது வாழ்விலும், அவரது வாழ்விலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. இன்று நாங்கள் ஒன்றாக சந்தித்துப் பேசும்போது மூலமான கொள்கை எண்ணங்கள் செயல்பாடு என்பதிலேயே பெரும் மாற்றத்தைப் பார்த்தேன். என்னைப்போல அவர் இல்லை. அவருக்கு  கிராமத்தில் நிலங்களும் உண்டு. வழக்குச் சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கிறது. அதிலும் அவர்கள் தந்தை, தாய், அக்கா என எல்லோருமே விவசாய வேலைகளைச் செய்து வருகிறார்கள். அவருக்கு விடுமுறை என்று கிடைத்தால் அவரை நீங்கள் வீட்டில் சந்திக்கவே முடியாது. வீட்டிற்குச் சென்று அழைத்தால் தம்பி காட்டுல இருக்கறானப்பா என்றுதான் பலமுறை கூறியிருக்கிறார்கள். சென்னையிலிருந்து வந்த களைப்பு தீருவதற்குள் விவசாய வேலையில் மூழ்கிவிடுவார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் வேலையை விட்டுவிட்டு சிறிது முதலீ

இந்தியர்களை இணைப்பது எது?

படம்
                                         இந்தியர்களை இணைப்பது எது?           தேசியகீதம் என்கிறீர்களா? கிடையவே கிடையாது. உணவு  நிச்சயம் இல்லை. வேறென்ன? சினிமாதான். நான் தங்கியிருக்கும் அறையில் முதல் நாள் யாரும் என்னிடம் பேசவே இல்லை. சில விவரங்களை கேட்டார்கள் அந்த மூத்த அறைவாசிகள். என்ன வேலை? சம்பளம்? வேலையின் பெயர்? இதுபோன்றவை. அதில் ஒருவரின் பெயர் பதுமன் என்பதே நான் அவரிடம் தெலுங்கு படங்கள் தொடர்பான சில விஷயங்களை பேசியபின்னே அவர் முகம் மலர்ந்து தன் பெயரைக்கூறும் போதுதான் அறிந்துகொண்டேன். அதன் பிறகு அவர் தவிர்த்த மற்ற அறைவாசிகளிடம் நான் அதிகம் பேசுவது கிடையாது. அவர்களைப் பார்த்தால் கடப்பா ராஜூ உணர்ச்சிதான் மனதில் எழுகிறது. தவிர்க்கமுடியவில்லை.             ஒருவர் நல்ல யூரியா உரமூட்டை மாதிரி இருப்பார். அவர்  பெயர் தெரியவில்லை. ஆனால் படிக்கும் நேரம் தவிரத்து மூஞ்சியில் ஒரு க்ரீம் பூசுவார். ஆம்பாடுகளில் (தொடை இடுக்குகளில்) ஒரு க்ரீம் பூசுவார். ஒரு நாளாவது இந்த இரண்டும் மாற வாய்ப்பிருக்கிறதா என்று எனக்கு சந்தேகம் வந்தது. நாமதான் ஏறுக்குமாறா ஏதாவது பண்ணி கோமாளித்தனம் பண்ணுவமே? ப

பெத்த கண்ணு பேரழகி!

படம்
                                                        பெத்த கண்ணு பேரழகி!                 காலையில் அலங்க மலங்க எழுந்தால் அறையில் உள்ள ஆந்திர வாலாக்களில் ஒருவர் மூச்சு பயிற்சி செய்துகொண்டிருந்தார். திடீரென்று இவர்களுக்கு தேர்வு தொடங்கினால் மட்டும் மூச்சு பயிற்சி நினைவு எப்படி வருகிறது என்றே தெரியவில்லை. அது போதாதென்று தெலுங்கில் பவன் கல்யாணின் தமிழில் இளைய தளபதி நடித்த பத்ரியில் கிழங்கு தின்ற நாய் கத்துவது போல் அவர் உடற்பயிற்சி செய்யும்போது ஒருபாடல் வருமே  அந்த வர்ஷனில் அங்கே பவன் உடற்பயிற்சி செய்வார். அப்படியே அதே காட்சிகள் தமிழில் இருக்கும். அதைப்போட்டுக்கொண்டு ஷெல்பை பிடித்து அதைப் பெயர்த்து தரைக்கு கொண்டுவருவது போல புல் அப்ஸ் எடுத்து மிரட்சிக் குள்ளாக்குவது அடுத்த அவரது திட்டம்.  அறையில் இன்னும் இரு ஆந்திர வாலாக்கள் விடுமுறையில் இருப்பதால் மிரட்டல் அடி குறைவாக இருக்கிறது. இன்னும் பல மிரட்சிகள் காத்திருக்கின்றன என நினைக்கிறேன்.             பேருந்தில் ஏறினால் அங்கும் இஸ்லாமிய பெண்களில் முகத்தையும் கண்களிலேயே பார்த்து ஓகே ஒரு தடவை பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டே செ

தயிர்சாதம்

                                                              தயிர்சாதம்                              மம்மி மெஸ் போய் சாப்புடுப்பா என்று செயின்ட் கூறியபிறகு போய்த்தான் பார்ப்போமே என்று ஒரு எண்ணம். செரி என்று நண்பர் க. சு விடம் கூறிவிட்டு வேகமாக குளக்கரை சாலையில் நடந்தேன். அரக்க பரக்க செல்வதற்கு ஒரு காரணம் உண்டு. அலுவலக நிர்வாகி பி இரண்டு மணிக்குள்ளார வந்துருவியா என்று கேள்வி கேட்டுத்தான் சாப்பிட அனுமதித்தார். வேகமாக செல்ல நினைத்தாலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட வள்ளுவர் கோட்டம் செல்லும் வழி அது. சாலை தாண்டி உள்ளே சென்று பத்து ரூபாயை எடுத்து இந்தா வச்சுக்கோ என்று போஸில் நீட்டினால் எத்தனை என்றார் ஒரு பெண்மணி. எத்தனையா ஒன்னுதாங்க என்றேன். மூணு ரூபா எடு என்றார். சில்லறை கேட்கும் மனிதர்களுக்கு பெரிய தெம்பு ஏற்பட்டு விடுகிறது. தருவானா இருக்குமா பாப்போமே என்பதுதான் அது. தயிர்சாதம்தான் வாங்கினேன். நன்றாக கொதிக்கும் பதம். தயிர் சூடாக சாப்பிட்டால் என்ன என்ன பிரச்சனைகள் வரும் என்பதை சாப்பிட்ட பின் தினமணி கதிரில் ஆயுர்வேத மருத்துவரின் பதில்களை படித்து தெரிந்துகொள்ளலாம். அப்படி இல்லையென்ற

களமாடுவோமா தோழா

                                                                 களமாடுவோமா தோழா   லோகத்தின்ட தோஸ்த் வெளியிடுகின்ற லோகம் புத்தகம் முழுக்க அறிவியல் தகவல்களால் நிரம்பி வழிகிறது. ஒரு பக்கம் கூட படிக்கமுடியவில்லை. ஆனால் முக்கியமான சூழல் குறித்த விழிப்புணர்வு புத்தகம்தான். என்னால் ஒரு பத்தி கூட வாசிக்க முடியவில்லை. எப்படியோ உணவுத்திருவிழா என்று நடத்தி சோறு போட்டு புத்தகத்தை வாசிக்கச் சொல்லுகிறார்கள். நிறைய பேசுகிறார்கள். நல்ல வேலைக்குச் சென்று சம்பாதிக்கிறார்கள். ஞாயிறன்று ஒரு கூட்டம் போட்டு அந்நாளை வெற்றிகரமாக பொழுதுபோக்கு ஆக்குகிறார்கள். களப்பணி என்றால் காணாமல் போகும் ஆட்கள் இவர்கள். செய்பவர்கள் என்ன சொல்லிக்கொண்டா இருக்கிறார்கள்?  எல்லாமே அடையாளம் குறித்த சிக்கல்தான் என்று வடிவமைப்பாளர் கூறினார். எல்லாவற்றையும் ஒற்றைப்புள்ளியில் குவித்துவிடுவார் அந்த நண்பர். அவரின் தீர்மானங்கள் என்னைப்பொறுத்த வரையில் பெரிதாக தோற்றுப்போனதில்லை. வயிற்றுக்கு சோறு முதலில் வேண்டும். லட்சியத்தை காய்ந்த வயிற்றுடன் அடைய முடியாது என்பது அவர் என்னுடனான உரையாடலில் எப்போதும் கூறும் அருள்வாக்கு. அதை ந