தேனீக்காவலர் நிறைவுப்பகுதி: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்
ஒளிப்பதிவாளர் அர்வானிட் உடன் பவுலோஸ் ‘பேரிக்காய் மரத்தில் ஏறப்போகிறேன் ’ என்ற பாடல் குறித்து... என் குழந்தைப் பருவத்தில் கேட்ட இசைப்பாடல்களில் அதுவும் ஒன்று. என்னுடைய மகள்களுக்காக இதனைத் திரும்ப கூறுகிறேன். இது சர்ரியலிச பாடல் என்று கூறலாம். பேரிக்காய் மரம் ஏறமுடியாத அளவு சிறியதேயாகும். ‘பிறகு என் கையை வெட்டிக்கொள்வேன் ’ என்று வரும் வரிகளுக்கு உண்மையிலேயே என்ன அர்த்தம் என்று நான் அறியவில்லை. இப்போதும் படத்தின் இறுதியில் இப்பாடலை நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்களே? ஆமாம். ஆனால் என்னுடைய தனித்தன்மை என எதையும் குறிப்பிட அதைப் பயன்படுத்தவில்லை. மாஸ்ட்ரோய்யன்னி தன் மகளுக்கான செய்யுளாக பாடுகிறார். அவள் சிறு குழந்தையாக இருக்கும் போது இதே போன்ற பாடலைப் பாடி இருக்கிறார். செர்ஜ் ரெஜியனி காட்சி கடந்த காலத்தை நினைவூட்டும் ஒரே ஒரு காட்சியாக உள்ளது. ஸ்பைரோஸ் பள்ளி ஆசிரியர் பணியிலிருந்து விலகுகிறான் என்பது படத்தின் தொடக்கத்திலேயே காட்டப்பட்டு விடுகிறது. அவன் அனைவரிடமிருந்தும் அனைத்திடமிருந்தும் விடைபெறுகிறான் என்பதே இக்காட்சி கூறுவது. தன் பழைய நண்பர்களிடம் விடைபெற்றுக்