பிரிவினையின் தொடக்கம்!
இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் படுகொலை! இரண்டாம் உலகப்போர் முடிந்தபோது இங்கிலாந்து அரசு திவால் நிலையில் இருந்தது. தனது வீரர்களை இந்தியாவில் அதற்கு மேல் தங்க வைக்கமுடியாத சங்கடத்தில் தவித்தபோது பிரிவினை அவலம் நிகழ்ந்து 15 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். 1946, மார்ச் 1946 ஆங்கிலேய அரசு அதிகாரத்தை மாற்றுவது தொடர்பாக யோசித்து சிம்லாவில் இதுதொடர்பாக பேச முயற்சித்தது. காங்கிரஸ், முஸ்லீம் லீக் சார்பாக ஜின்னா, நேரு ஆகியோர் இதில் பங்கேற்றனர். சிறுபான்மையினரான முஸ்லீம்களின் தலைவரான ஜின்னா, காங்கிரசின் தலைமையில் இணைந்திருக்க சம்மதிக்காததால் மாநாடு தோல்வியுற்றது. அன்று ரேடியோவில் மக்கள் கேட்டது இச்செய்தியைத்தான். மாநாடு தோல்வியுற்றதும் பல்வேறு இடங்களில் கலவரங்கள் தொடங்கின. 1946 ஆகஸ்ட் பிரிவினை குறித்த செய்தியை காந்தி கேட்டபோது மகாராஷ்டிராவிலுள்ள சேவா ஆசிரமத்திலிருந்தார். விரைவிலேயே கல்கத்தாவில் இந்துகள் 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தபோது கலங்கிப்போனார். கண்ணுக்கு கண் என அடித்துக்கொண்டால் முழு உலகமும் பார்வையற்றுப்போய்விடும் என தனக்குள் வ