இடுகைகள்

மாற்றுப்பாலினத்தவரின் அம்மா இவர் - பிரெண்டா ஹோவர்டு

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள்! பிரெண்டா ஹோவார்டு அமெரிக்காவின் வடக்குப்பகுதியிலுள்ள பிரான்க்ஸ் பகுதியில் பிறந்தார். 1946 ஆம் ஆண்டு யூதக்குடும்பத்தில் பிறந்தார். இவரை இங்கு ஏன் குறிப்பிடுகிறோம் என்றால், நவீன மாற்றுப்பாலினத்தவருக்கான உரிமைகளுக்கு குரல் கொடுத்ததில் பிரெண்டா முக்கியமானவர். பல்வேறு பேரணிகளை அம்மக்களின் உரிமைகளுக்கான நடத்தியுள்ளார். 2005 ஆம் ஆண்டு காலமானார். சியோஸெட் பள்ளியிலும் மன்ஹாட்டன் கம்யூனிட்டி கல்லூரியிலும் படித்தார். நர்சிங் படிப்பில் பட்டம் பெற்றார். அப்போது வியட்நாம் போர் நடைபெற்றது. அதற்கு எதிராக நின்று குரல் கொடுத்தவர், பெண்ணிய இயக்கங்களிலும் பங்கு பெற்றார். ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான அமைப்புகளிலும், சங்கத்திலும் இடம்பிடித்தார். 1970 ஆம் ஆண்டு மாற்றுப்பாலினத்தவருக்கான முதல் பேரணியை நடத்தி அவர்களுக்கு அமெரிக்க அம்மா வானார். ஆம் மதர் ஆஃப் பிரைடு என்று இவரை அன்றும் இன்றும் நாளையும் உலகம் அழைக்கும். மேடமின் அர்ப்பணிப்பான உழைப்பு அப்படி. பாலின உறவுகள் பற்றி மிக வெளிப்படையாக பேசி இயங்கியவர் புற்றுநோயால் காலமானார். மாற்றுப்பாலினத்தவருக்கான சட்டங்க

உண்மை ஆய்வாளரின் குற்றவழிப் பயணம்- பியோம்கேஷ் பக்சி

படம்
பியோம்கேஷ்  ஹோய்சோய் ஒரிஜினல்ஸ் தமிழில்... இயக்கம் - சயானந்தன் கோசல் மூலக்கதை - சராதிந்து பந்தோபாத்யாய பியோம்கேஷ் - அனிர்பன் பட்டாச்சார்யா அஜித் - சுப்ரதா தத் ஷெர்லாக் ஹோம்ஸின் தமிழ் வடிவம் என்கிறார்கள். நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பியோம்கேஷ், உண்மை ஆய்வாளர். தன்னை டிடெக்டிவ் என்று கூட சொல்லிக்கொள்வதில்லை. அவருடன் எழுத்தாளர் அஜித் உடன் இருக்கிறார். அவர் அவ்வளவு சுதாரிப்பான புத்திசாலி அல்ல; ஆனால் பியோம்கேஷ் சொல்வதைச் செய்வார்.  கதை 1 முதல் கதை போதைப்பொருட்களை விற்கும் மருத்துவர், தன்னை தெரிந்துகொண்ட சிலரைக் கொலை செய்கிறார்.இதனைக் கண்டுபிடிக்கும் பியோம்கேஷ், அவரை கத்தியும் கையுமாக பிடித்து போலீசில் ஒப்படைக்கிறார். கதை நடப்பது 1930 ஆம் ஆண்டு. வேட்டி கட்டிக்கொண்டு ஓடுவது, உதைப்பது, நொடிக்கொருமுறை தீப்பெட்டியை தொடையில் தட்டி யோசிப்பது என அனிர்பன் பட்டாச்சார்யா நடிப்பில் பிரமிக்க வைக்கிறார். வயதான நிறைய சொத்துக்களை வைத்துள்ள பெருசுகளை வரிசையாக போட்டுத் தள்ளுகின்றனர். யார் காரணம் என்று தேடுகிறார்கள். ஆனால் பிடிக்க முடியவில்லை. அதி புத்திசால

கைகளைச் சுற்றிய பாம்பு - சாதிக்கயிறுகள் எதற்கு?

படம்
thewire இது ஒன்றும் புதிதல்ல. நாங்கள் இப்படி கைகளின் கயிறு பேண்ட் கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருவதில் என்ன தவறு இருக்கிறது? பத்தாண்டுகளுக்கு மேலாக இப்படித்தானே இருக்கிறது? எங்கள் சாதி பற்றி எங்களுக்கு பெருமை என்று பேசியது யாரோ அல்ல; நாளை இந்த சமூகத்தில் தலைமை தாங்கிச்செல்லக்கூடிய மாணவர் ஒருவரின் குரல்தான் இது. திருநெல்வேலி, தென்காசியில் சாதிக்கயிறுகளின் ஆட்சி அதிகம். அண்மையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், பள்ளிகளில் நெற்றியில் திலகம்,  பொட்டு, சாதியைக் குறிக்கும் கலர் கயிறுகள், பேண்டுகள் கட்டிவரக்கூடாது என தடை விதித்துள்ளது. சாதியைச் சொல்லும் இந்தப் பெருமை முதலில் பெரியவர்கள் பையன்களுக்குக் கற்றுத்தந்தனர். இந்த நச்சு பள்ளிக்குள் புகுந்தது. இப்போது இந்த விவகாரத்தில் ஒதுங்கியிருந்த மாணவிகளும் தம் தலையில் கலர் ரிப்பன்களை சூடி சாதியை பிறருக்கு சொல்லத் தொடங்கி விட்டனர். மாணவர்கள் ஒழுங்காகப் பேசவும், நடக்கவும் தொடங்கும் முன்னரே சாதிப்பெருமைக்கான சுழலில் சிக்கி விடுகின்றனர். அவர்களது சாதியைச் சேர்ந்த தலைவர்களது புகழ் பாடத்தொடங்குகின்றனர். இதுதான் இந்த சாதி நச்சுப்ப

தேக்கத்திற்கு காரணம் வாகன உற்பத்தியாளர்கள்தான்! - ருத்ரதேஜ் விளக்கம்!

படம்
நேர்காணல் ருத்ரதேஜ் பிஎம்டபிள்யூ இயக்குநர் உலகளவில் சொகுசு கார்களின் விற்பனை 4 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவில் விற்பனை 1 சதவீதமாக உள்ளது. என்னதான் பிரச்னை? கார் விற்பனை தேக்கம் என்பது அரசு உருவாக்கியதல்ல. கார் உற்பத்தியாளர்களால் உருவானது. ஒரு காரை பயனர் வாங்குகிறார் என்றால் அதில் முதலில் பார்ப்பதாக விலை எனும் அம்சம் இருக்கிறது. குறைந்த விலை என்றால் அது தவறாக சந்தைப்படுத்தப்படுகிறது என்றாகிறது. கார் வாங்குவது என்பது ஒரு வாழ்நாள் சாதனை போல மாற்றி வைத்திருக்கிறார்கள். எங்களுடைய கார்களை வாங்குபவர்கள் விலையை பொருட்டாக கொள்ளாதவர்கள்தான். கார் வாங்குபவர்களுக்கான ஊக்கத்தொகை பற்றி தங்கள் கருத்து என்ன? எங்களுடைய கார்களை வாங்குபவர்களில் 35 சதவீதம் கார்ப்பரேட் ஆட்கள்தான். மீதி 15 சதவீதம் பேர் பிற துறையினர், மக்கள் என வைத்துக்கொள்ளலாம். தற்போது விழாக்காலம் என்பதால் என்பதால் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எங்களுடைய பிராண்டை மக்கள் மனதில் பதிய வைப்பதே எங்களுக்கு முக்கியம். இப்போது நாங்கள் மற்றொரு போட்டியாளருடன் போட்டியிடப் போவதில்லை. காரணம், அப்படியொரு உறுதியான போட்டியாளர் ச

கருப்பர் என்று நினைக்க வற்புறுத்தாதீர்கள்! - ஜேம்ஸ் பேல்ட்வின்

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் ஜேம்ஸ் பேல்ட்வின்! அமெரிக்காவின் ஹர்லேமில் 1924 ஆம் ஆண்டு பிறந்த பேல்ட்வின் எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர். ஓவியரான பியுஃபோர்டு டெலனி, கருப்பினத்தில் எதிர்பார்க்காத கலைஞன் என்று இவரைப் பற்றி பெருமையாக கூறியிருக்கிறார். இவரது படைப்புகள் 1947 ஆம் ஆண்டில் முதன்முறையாக  வெளியாகின. பின்னர், கட்டுரைகள் வெளியாகி கவனம் பெற்றன. பின் நோட்ஸ் ஆஃப் நேட்டிவ் சன் என்ற நாவல் (1950) வெளியானது. ஜியோனிஸ் ரூம் என்ற இரண்டாவது நாவல் இவரை உலகறிய வைத்தது. காரணம் அதிலிருந்த பாலுறவு பற்றிய விஷயங்கள்தான். இதில் ஓரினச்சேர்க்கை விவகாரங்கள் ஏராளம் இருந்த்தால் சர்ச்சைகள் சுழன்றடித்தது. அதனால் நூலை வெளிநாடுகளில்தான் வெளியிட்டார்.  இருபதாம் நூற்றாண்டுகளில் மழை, பனி என சக கவிஞர்கள் எழுதி பிரசவிக்க, கருப்பினத்தவர்களின் வாழ்க்கை பற்றி எழுதி மிரட்டியவர் ஜேம்ஸ் பேல்ட்வின். இன்றும் அக்கால வாழ்க்கை பற்றி அறிய இவரது கட்டுரைகளைப் படித்தால் போதும்.  பேல்ட்வின் பிறக்கும்போது, தாய் தனியாக வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று வயதாகும்போது டேவிட் பேல்ட்வின் என்பவரை மணந

பௌர்ணமி மனிதர்களுக்கு பைத்தியம் பிடிக்கச் செய்யுமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி பௌர்ணமி நிலவு நம்மை பைத்தியமாக்குமா? நிலவுக்கும் மனநிலைக்குமான தொடர்பு இன்று தொடங்கவில்லை. குறிப்பிட்ட தினத்தன்று மனநிலை மருந்துகளை சாப்பிடுவது என்பது சிலரின் பழக்கம். ஆனால், கிரேக்கர்கள்தான் இதிலும் முன்னிலை வகிக்கிறார்கள். 2300 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் அரிஸ்டாட்டிலின் கருத்தான நிலவு, நம் எண்ணங்களை கட்டுப்படுத்துகிறது என்பதை நம்பினர். அதோடு, தொழுநோய் போன்றவற்றுக்கும் நிலவுக்கும் தொடர்புள்ளதாக கூறிவந்தனர். ஆனால் இதற்கு வலுவான எந்த அறிவியல் ஆய்வும் கிடையாது. ஆனால், மூளையிலுள்ள நீர்மத்தில் நிலவின் ஈர்ப்புவிசை பௌர்ணமியன்றி மாறுதல்களை ஏற்படுத்துவது உண்மைதான். ஆனால் அது குணநலன்களில் மாறுபாடு ஏற்படுத்தும் அளவு வலிமையானதல்ல என்கிறது அறிவியல்துறை. தற்போது நடைபெற்றுவரும் ஆராய்ச்சிப்படி, பௌர்ணமி தினத்தன்று ஒப்பீட்டளவில் கொலைகள் குறைந்து வருவதாக கூறுகிறது. எப்படிங்க ப்ரோ என்று கேட்டுவிடாதீர்கள். ஆய்வுகள் அப்படித்தான் டக்கென ஒரு விஷயம் சொல்லிவிட்டு செல்லும். பௌர்ணமி அன்று முடிந்தவரை உற்சாகமாக இருக்க முயற்சியுங்கள். அப்படியாவது பக்கத்து சீட

வலதுசாரி தீவிரவாதம் அதிகரித்து வருகிறது! - பல்கேரிய ஆய்வாளர் அறிக்கை!

படம்
ஆய்வாளர் ரஸ்லன் ட்ரான் பல்கேரியாவில் வலதுசாரி தீவிரவாதக்குழு தோன்றி செயல்பட்டு வருகிறது. இதுபற்றிய ஆய்வை குளோபல் வாய்ஸ் கட்டுரையாளர் ரஸ்லன் ட்ரான் மற்றும் கிரில் ஆரமோவ் ஆகியோர் இணைந்து செய்து அதனை வெளியிட்டனர். அதுபற்றி அவர்களிடம் பேசினோம். நீங்கள் ஆய்வு செய்த இயக்கம் எப்படிப்பட்டது? பல்கேரிய துருக்கி எல்லையில் செயல்படும் குழு இது. பல்கேரிய தேசிய இயக்கம் (BNO) பற்றியது எங்களது ஆய்வு. 2016 ஆம்ஆண்டு இதுபற்றி குளோபல் வாய்ஸ் வலைத்தளத்தில் கட்டுரை எழுதினேன். அந்த ஆண்டுதான் இக்குழு, அகதிகளை வேட்டையாடுபவர்களாக மாறியது. இவர்களுக்கு ஐரோப்பாவிலுள்ள அனைத்து வலதுசாரி இயக்கங்களுடனும் நல்ல தகவல் தொடர்பு உண்டு. மேலும் இளம் உறுப்பினர்களை ஈர்ப்பதிலும் இவர்கள் நல்ல வேகம் காட்டுகிறார்கள். டென்மார்க், ரோமானியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் கேம்புகளை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ரஷ்ய ராணுவம் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இவர்களின் செயல்பாடு எத்தகையது? நாங்கள் அகதிகள் அழிப்பு, இஸ்லாம் மயப்படுத்தல் போன்ற விஷயங்களை இதில் மையப்படுத்தவில்லை. இன்று பல்கேரியாவில் 600 அகதிகள் மட்டுமே உள

விந்தணுக்களைப் பெருக்கும் மரிஜூவானா!

படம்
truthout மரிஜூவானா குழந்தை பேறுக்கு உதவுமா? ஆம் என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். இன்று உலகமெங்கும் சோதனைக்குழாய் மருத்துவமனைகள் அதிகரித்து வருகின்றன. காரணம், ஆண், பெண் என தம்பதிகள் இருவருக்கும் ஏற்படும் உடலியல் பிரச்னைகள்தான் காரணம். பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டி எனில் ஆண்களுக்கு ஆணுறுப்பு எழுச்சி பெறாமை, விந்து முந்துதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இது உடலுறவில் திருப்தி என்பதைக் கடந்து குழந்தைப் பேற்றிலும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவின் போஸ்டனில் உள்ள டி.ஹெச். சான்ஸ் மையத்தில் இந்த ஆராய்ச்சி நடைபெற்றது. ஆராய்ச்சி நடைபெற்றபோது, அதில் ஆய்வுக்கு உட்பட்டவர்கள் மரிஜூவானா எடுத்துக்கொண்டனர். அதோடு அதனை புகைக்காதவர்களைக் கணக்கிலெடுத்தால் விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்த து. உடனே எங்கு கிடைக்கும் மரிஜூவானா என கூகுளிடம் கேட்காதீர்கள். அப்படி புகைப்பது தமிழகத்தில் சட்டவிரோதம். இந்த ஆய்வு நடக்கும்போது, ஆய்வுக்கு உட்பட்டவர்கள் மரிஜூவானா புகைத்தனர். இது அனைவருக்கும் பொருந்தும் என்று கூற முடியாது. தற்போது உலகின் பல்வேறு இடங்களில் கஞ்சா உள்ளிட

மக்களின் கவனத்தை சர்ச்சைகளால் ஈர்த்த போராட்டக்காரி! - சில்வியா ரிவேரா

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் 2 உரிமைக்காக குரல் கொடுத்த சர்ச்சைப் போராளி! சில்வியா ரிவேரா அமெரிக்காவில் பிறந்த லத்தீன் நாட்டுக்காரர். அங்கு வாழும் மாற்றுப்பாலினத்தவருக்கான அமைப்பை உருவாக்க முயற்சித்தவர். 1951 ஆம் ஆண்டு பிறந்தவர், 2002 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இவர் வீடற்ற மக்களுக்காக கோரிய காப்பக வசதி கோரிக்கை முக்கியமானது. நியூயார்க் நகரில் இதற்காக பல்வேறு போராட்டங்களை ஒருங்கிணைத்தார். வெனிசுலா நாட்டு உச்சரிப்பில் ஆங்கிலம் பேசுபவரின் சிறுவயது சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இவரின் தந்தை இவரின் மூன்று வயதிலேயே சில்வியா ரிவேராவைக் கைவிட்டுச்சென்றுவிட்டார். இவரது தாய் தற்கொலை செய்துகொண்டுவிட, காப்பாற்றி வளர்த்தது வெனிசுலாவில் வாழ்ந்த பாட்டிதான். ஆனால் ஆணாக இருந்தாலும் மனதளவில் பெண்ணாக உணர்ந்தவர், லிப்ஸ்டிக்கை எடுத்து பூசி பவுடர் போட்டு அழகு பார்த்தார். ஆனால் அது மரபு வழியில் வளர்ந்த பாட்டிக்கு பிடிக்கவில்லை. கேட்டுப்பார்த்தும் சில்வியாவுக்கு பாட்டி வழியில் வளரமுடியவில்லை. எனவே பாட்டி வீட்டை விட்டு துரத்த, பதினொரு வயதில் தெருவில் வாழ்க்கை தொடங்கியது. ஆணோ, பெண்ணோ வயிறு ஒன்றுதானே?

பிறர் என்னைப் பின்பற்றவேண்டும் என ஆசைப்பட்டேன்! - லாவெர்னே காக்ஸ்

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள்! இசைக்குயில் நான் - லாவெர்னே காக்ஸ்  ஆங்கில ஊடகங்களில் அதிகம் தென்படும் புகழ்பெற்ற மாற்றுப்பாலினத்தவர் லாவர்னே. இவரின் சமூக வலைத்தளக் கணக்கு முழுவதும் மாற்றுப்பாலினத்தவராக எப்படி சமூகத்தில் தனக்கான இடத்தைப் பிடித்தேன் என்பதைப் பற்றிய சிறுசிறு பதிவுகள் உள்ளன.  அவை படிப்பவர்களுக்கு மாற்றுப்பாலினத்தவர்களின் மீது கரிசனத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. டைம் வார இதழில் இடம் பிடித்த முதல் மாற்றுப்பாலினத்தவர், லாவர்னே காக்ஸ்தான்.  மேலும் டிவியில் ஆரஞ்ச் இஸ் தி நியூ பிளாக் எனும் டிவி தொடர் உட்பட பல்வேறு ஊடகத் தொடர்களில் பங்கேற்று சாதனை செய்துள்ளார். மேலும் டே டைம் எம்மி விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர் இவரே. மாற்றுப்பாலினத்தவருக்கான தொலைக்காட்சி தொடர்களிலும் லாவர்னே நடித்து வருகிறார். இவருக்கு சிறுவயதில் இவரது தாய் கருப்பினத்தவர்களின் வரலாற்று நூலை வாங்கிப் படிக்க கொடுத்துள்ளார். அதில் அவருக்குப் பிடித்தது, ஓபரா பாடகரான லியோன்டைன் பிரைஸைத்தான். ”எனக்கு அவரின் டர்பன், உதடுகள், பெரிய உதடுகள் என என்னை அவராக கற்பனை செய்துகொண்டு நிக

மரம் நடுவது கார்பனைக் குறைக்காது - புதிய ஆய்வு என்ன சொல்கிறது?

படம்
மரம் நடுவது மட்டுமே தீர்வல்ல! செய்தி: வெப்பமயமாதல் விளைவால் 2050 ஆம் ஆண்டு 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கலாம் என ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. மரக்கன்றுகள் நடுவதைக் கடந்து கார்பன் அளவைக் குறைப்பதற்கான முயற்சிகளை ஆராய்ச்சியாளர்கள் சோதிக்கத் தொடங்கியுள்ளனர்.  நீராதாரம் பெருகவும், வெப்பநிலை பாதிப்பைக் குறைக்கவும் சூழலியலாளர்கள் சொல்லும் ஒரே தீர்வு, மரக்கன்றுகளை நடுவதுதான். ஆனால் உலகில் வெளியாகும் டன் கணக்கிலான கார்பன் வெளியீட்டுக்கு மரக்கன்றுகள் நடுவது தீர்வாகுமா என ஆராய்ச்சியாளர்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். காரணம், வெப்பமயமாதலின் விளைவாக ஐரோப்பாவில் வெப்ப அலை பாதிப்புகள் தொடங்கிவிட்டன. விவசாயம், விமானத்துறை, இரும்பு மற்றும் சிமெண்ட் உற்பத்தி ஆகியவை மூலமாக வெளியேறும் கார்பன் வெளியீடு அதிகம். இதனைக் குறைந்த விலையில் சமாளிக்க மரங்கள் உதவலாம். இதற்கு மாற்றாக சூழலியலாளர்கள் சொல்லும் யோசனை, மரங்களை வளர்த்து, வெட்டி மின்சாரத்திற்கு பயன்படுத்தலாம். பின்னர், அதிலிருந்து வரும் கார்பனை சேகரித்துவைக்கும் இம்முறைக்கு பயோஎனர்ஜி கார்பன் கேப்சர் அண்ட் ஸ்டோரேஜ் (BECCS) என்று