இடுகைகள்

இனவெறியை சட்டம் மூலம் நீக்கிய ஆப்ரஹாம் லிங்கன்!

படம்
  ஆபிரஹாம் லிங்கன் ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க வரலாற்றில் ஆப்ரஹாம் லிங்கனுக்கு மகத்தான இடம் உண்டு. இவர்தான், துணிச்சலாக உள்நாட்டுப் போரையும் சமாளித்து அடிமை முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்.  தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களும் அடிமை முறையை ஒழிப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அரசுக்கும் மாகாணங்களுக்கும் போர் தொடங்கியது. 1861 தொடங்கி 1865 ஆம் ஆண்டு வரை உள்நாட்டுப்போர் நடந்தது.  அமெரிக்காவின் தெற்குப்பகுதியில் நிறைய ஜவுளித்துறை மில்கள் இயங்கி வந்தன. இதன் அடிப்படையே அடிமைகளை வைத்து வேலை வாங்கி கொழிப்பதுதான். இதனை அமெரிக்க அரசு ஒழித்தவுடன், இவர்கள் அதனை ஏற்கவில்லை. தங்களிடமுள்ள அடிமைகளை சுதந்திரமாக வாழ விடவில்லை. எனவே, வடக்கு புறமுள்ள மாகாணங்களோடு மோத தொடங்கினர்.  இந்த நேரத்தில் வடக்குப்புற மாகாணங்களை வழிநடத்துபவராக அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் இருந்தார். இவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.  1860ஆம் ஆண்டு லிங்கன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப்போரின் அடிப்படை ஆதாரமே , லிங்கன் அடிமை மக்களுக்கு வழங்கிய சுதந்திரம் என்ற அறிவிப்புதா

உண்மையைப் பேசத் தயங்கும் ஊடகங்கள்! - இந்தியாவில் சிறப்பாக நடக்கும் சம்பவங்கள் - ஆகார் படேல்

படம்
அண்மையில் என்டிடிவி தொகுப்பாளர் ரவிஷ்குமார் ஒரு செய்தியை சொன்னார். இன்றைய ஊடகங்கள் எதில் கவனம் செலுத்தவேண்டுமோ அதனை செய்வதில்லை என்றார். அது உண்மைதான். இன்னும் சில மாதங்கள் நாம் பாஜகவின் ஒன்பது ஆண்டு கால ஆட்சியை பார்க்கப்போகிறோம். இது ஒரு ஆட்சிக்கு நீண்ட காலம். அவர்கள் செய்ய நினைத்த திட்டங்களை நிச்சயமாக நிறைவேற்றியிருக்கமுடியும். இப்படி ஏதாவது செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.  பொருளாதார ரீதியாக நிறைய சீர்திருத்தங்கள் செய்திருக்கிறார்கள் என்று கூறி வந்தார்கள். பல்வேறு விலைபோன ஊடகங்களும் அதனை அப்படியே ஊதுகுழலாக ஒப்பித்தன. ஆனால் பொருளாதாரம் முன்னெப்போதையும் விட பாதிக்கப்பட்டுள்ளது. இதோடு ஒப்பிடுகையில் சீனா, தைவான், சிங்கப்பூர், தென்கொரியா ஆகிய நாடுகள் சிறப்பாக உள்ளன. அவ்வளவு தூரம் கூட போக வேண்டாம். 2014இல் இந்தியாவை விட உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் 50 சதவீதம் பின்தங்கிய வங்கதேசம் இன்று நம்மை விட முன்னேறியுள்ளது. இதேபோல வியட்நாம் நாட்டையும் சொல்லலாம்.  உற்பத்தித்துறை சார்ந்த வேலைகள் மிகவும் குறைந்துவிட்டன. இப்போது மிச்சமிருப்பது விவசாயம் மட்டுமே. தற்போது அதில்தான்

நண்பன், காதலி தூரம் தள்ளிப்போக இசைவாழ்க்கையை தக்க வைக்க போராடும் கலைஞனின் கதை! டிக் டிக் பூம்

படம்
  டிக் டிக் பூம் ஆண்ட்ரூ கார்பீல்ட் படம் அமெரிக்க இசைக்கலைஞரான ஜொனாதன் லார்சன், வாழ்க்கையைப் பேசுகிறது.  ஜொனாதன் லார்சனாக ஆண்ட்ரூ கார்பீல்ட் நிறைய பயிற்சி எடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் காட்சி தொடங்கி படம் முடியும் வரை அவரின் அர்ப்பணிப்பு உணர்வு அசத்தலாக இருக்கிறது.,  ஜொனாதனுக்கு சில நாட்களில் 30 வயது தொடங்கவிருக்கிறது. அதுநாள் வரை அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என அவருக்கே கேள்வி எழுகிறது. எனவே, அவர் இத்தனை நாட்களும் பிராட்வே நாடகங்களுக்கு இசையமைப்பும் வாய்ப்பை பெற முயன்று வந்தார். ஆனால் ஏதோ ஒரு விஷயம் இசையில் வேலை செய்யவில்லை. எனவே, வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் காதலியும் நடனம் சார்ந்த வேலைக்காக வேறு இடத்திற்கு போக நினைக்கிறாள். சிறுவயது நண்பன் நடிக்கும் வாய்ப்பு தேடி முயன்று தோற்று வேலை தேடி வேறு இடம் நோக்கி போகிறான்.  எனவே, தன் வாழ்க்கை சார்ந்து வேகமாக யோசிக்கும் நிலைக்கு ஜொனாதன் தள்ளப்படுகிறான். வாழ்க்கையை நடத்த இசை மட்டுமே போதாது அல்லவா? இதனால் துரித உணவகம் ஒன்றில் வெய்ட்டராக வேலை பார்க்கிறான்.  ஜொனாதனின் சிறப்பே, அவன் எழுதும் பாடல்கள் அனைத்துமே தினசரி வாழ்

அப்பாவைக் கொன்றவர்களை பழிவாங்கும் முரட்டு முட்டாள் பாண்டி சகோதரர்களின் கதை! கடசீல பிரியாணி

படம்
  கடசீல பிரியாணி கடசீல பிரியாணி படத்தின் மையக்கதை அப்பாவைக் கொன்றவர்களை தேடிப்பிடித்து கொல்வதுதான். அதனை படத்தின் இயக்குநர் அவல நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார். அதுதான் படத்தை தனித்துவமாக காட்டுகிறது.  ஆனால் தலைப்பு எதற்கு கடசீல பிரியாணி என வைத்திருக்கிறார்கள் என சிலர் கேட்கலாம். அதற்கான பதிலையும் இயக்குநர் இறுதியில் பதிலாக வைத்திருக்கிறார்.  பாண்டி குடும்பத்தார் மொத்தம் இருவகை. மனைவி, மாமனார், அத்தை என குடும்பமே வன்முறை கொண்டவர்களாக இருக்க கணவன், தனது கடைசிப்பிள்ளையை மட்டும் கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறார். மூன்றாவது பிள்ளையோடு தனியாக வாழ்கிறார். இவரது மூத்த இருபிள்ளைகளும் வன்முறையான ஆட்கள் என்பதால், அவர்களை அப்பா சந்திக்கவிரும்புவதில்லை. அவர்கள் தாயோடு வெட்டும் குத்தும் கறிச்சோறுமாக வாழ்கிறார்கள்.  இந்த நேரத்தில் அப்பா, தொழில் சார்ந்து சிலரால் படுகொலை செய்யப்படுகிறார். அதனால் மூத்த இருபிள்ளைகளுக்கும் அம்மா, கொன்றவர்களை பழிவாங்கவேண்டும் என்று சொல்லி பாடம் போட்டு அனுப்புகிறார். எனவே, அவர்கள் ஒரு எமோஷனல் சப்போர்ட்டுக்காக கடைசி பிள்ளையான தம்பியையும்  கூட்டிக்கொண்டு வருகிறார்கள். தம்பிக்க

இறந்துபோன விலங்குகளை பதப்படுத்தியது போல வைத்திருக்கும் நார்டன் ஏரி!

படம்
தி வாட் இஃப் ஷோ நாட்ரான் ஏரி கிழக்கு ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் அமைந்துள்ளது நாட்ரான் ஏரி ( ). உலகிலுள்ள வினோதமான தன்மை கொண்ட இடங்களில் இதுவும் ஒன்று.  ஏரியிலுள்ள நீர் வெப்பம் கொண்டதோடு, உப்பின் அளவும் அதிகமாக உள்ளது. இந்த நீர்நிலையிலுள்ள சிறிய பாக்டீரியாவகை, உப்பை  உட்கொள்கிறது.  மோசமான சூழ்நிலை இருந்தாலும் கூட இங்கு இனப்பெருக்கம் செய்ய ஃபிளாமிங்கோ  (flamingo)பறவைகள் ஆயிரக்கணக்கில் வருகின்றன. எவாசோ என்கிரோ (Ewaso ng'iro)ஆறு மூலம் ஏரி நீர்வளத்தைப் பெறுகிறது. நாட்ரான் ஏரி, 60 கி.மீ. அளவுக்கு பரந்து விரிந்தது. இதன் ஆழம் 3 மீட்டர்தான். நீரின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாக உள்ளது. நாட்ரான் ஏரியிலுள்ள நீர், கடலுக்கோ செல்வதில்லை. வெப்பநிலை காரணமாக ஆவியாகிறது. மிஞ்சுவது உப்பும், பிற கனிமங்களும்தான்.  ஏரியின் வெப்பத்திற்கு காரணம், அதன் கீழுள்ள ஆல் டோயினோ லெங்காய் (ol doinyo lengai)எரிமலைதான். இதன்  எரிமலைக் குழம்பு, ஏரி நீரை சூடாக்குகிறது. இதன் காரணமாக நீர், ஆவியாகிறது. ஏரி அமைந்துள்ள கிழக்கு ஆப்பிரிக்கா ரிப்ட் பள்ளத்தாக்கு பகுதியில் புவித்தட்டுகள் சந்திக்கின்றன. இதன் விளைவாக, இங்கு 

நிறுவனங்களின் இயக்குநர்களாக இந்தியர்கள் நியமிக்கப்பட என்ன காரணம்?

படம்
  pixabay சாதிக்கும் இந்திய இயக்குநர்கள்! அண்மையில் இந்தியரான லீனா நாயர், சானல் பிரெஞ்சு நிறுவனத்தின் முதல் பெண் இயக்குநராக பதவியேற்றார். இதன் மூலம், பெப்சிகோவின் இயக்குநராக இருந்த இந்திரா நூயிக்கு அடுத்ததாக பெண் இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.  இந்தியர்கள் இப்போது பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இயக்குநராக மாறிவருகிறார்கள். மைக்ரோசாஃப்டின்  சத்யா நாதெள்ளா, ஆல்பபெட்டின்  சுந்தர் பிச்சை ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். ஐபிஎம், நோவர்டிஸ், அடோப், ட்விட்டர், ஹார்மன், விமியோ ஆகிய நிறுவனங்களிலும் இந்தியர்கள் இயக்குநர்களாக உள்ளனர். ”பிறப்பு, கல்வி, வேலை என அனைத்து விஷயங்களுக்கும் இந்தியர்கள் போராடி வளர்வதால் இயற்கையாகவே அவர்கள் சிறந்த மேலாளர்களாக இருக்கிறார்கள்” என்றார் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஆர்.கோபாலகிருஷ்ணன். பியூ நிறுவன ஆய்வுப்படி(2016படி), 77 சதவீத இந்தியர்கள் குறைந்தப்பட்சம் ஒரு பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட பட்டங்களை இந்தியர்கள் பெற்றுள்ளனர் என கண்டறிந்தது. இந்த வகையில் 31 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே பட்டம் பெற்றவர்கள். ”தொழிலை நடத்திச் செல்ல புதுமைத்

தனது கிராம மக்களுக்கு அறிவுபுகட்ட நூலகத்தை அமைத்த பேராசிரியர்!

படம்
  pixabay கிராம மக்களுக்காக நூலகம் அமைத்த பேராசிரியர்!  உத்தரப் பிரதேசத்தின் கல்யாண்பூரில் கிராம மேம்பாட்டு நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை இங்கிலாந்தின் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் அருண்குமார் உருவாக்கியுள்ளார். அருணின் பூர்விக வீடு, இங்குதான் உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 750 நூல்களைக் கொண்ட நூலகத்தை கிராமத்தினருக்கு  அமைத்துக்கொடுத்துள்ளார். அருண், டில்லி பல்கலைக்கழகத்தில் படித்தபோது அங்கு முதல்முறையாக நூலகத்திற்கு சென்றார்.  அங்கு அடுக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நூல்களை பார்த்து வியந்திருக்கிறார். அதற்கு முன்பு வரை அவர் நூலகத்திற்கு சென்றதேயில்லை. அவரது கிராமத்திலும் நூலகம் அமைந்திருக்கவில்லை என்பதுதான் இதற்கு முக்கியமான காரணம்.  நூலகத்தைப் பயன்படுத்தும் மாணவர்களுக்கும் அவருக்கும் நிறைய இடைவெளி இருப்பதை உணர்ந்தார். “நூலக வாசிப்பு, மாணவர்களுக்கு பாடநூல்களைத் தாண்டி இலக்கிய அனுபவத்தையும் தரும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன் ” என்றார் பேராசிரியர் அருண்குமார்.  கல்யாண்பூரில் தொடங்கிய கிராம நூலகத்திற்கு முன்னோடி,  பன்சா கிராம நூலகம் ஆகும்.   இந்த நூல

காட்டுத்தீக்கும், பனிக்கும் உள்ள தொடர்பு!

படம்
  pixabay அலாஸ்காவின் காட்டுத்தீயால் ஆர்க்டிக்கில் உருகும் பனி! உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் நிகழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. இதன் மற்றொரு விளைவாக,  ஆர்க்டிக் பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. அதிக வெப்பநிலை, ஈரப்பதம் குறைந்த உலர்ந்த மண், அதிக மின்னல், இடி ஆகியவை ஏற்படுவது பெருமளவு காட்டுத்தீயை ஊக்குவிக்கின்றன. உலகின் ஒருபுறம் நடைபெறும் காட்டுத்தீ, துருவப் பகுதியில் பனிப்பாறைகளை உருக வைத்துக்கொண்டிருக்கிறது.   இதுபற்றிய சூழல் ஆய்வு ஒன்று ஒன் எர்த் (One earth) என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக கொலம்பியா பல்கலைக்கழக துணை பேராசிரியர் ரோய்சின் காமன், "எதிர்காலத்தில் நாடுகளின் வெளிப்புறத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளின் பாதிப்புகள் உள்ளேயும் எதிரொலிக்கும்" என்றார்.  ஆய்விதழ் கட்டுரையில், அலாஸ்கா பகுதியில், வெப்பமயமாதலின் பாதிப்பால் மீத்தேன், கார்பன் அளவு சற்றே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நாற்பது ஆண்டு வானிலை ஆய்வில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் ஆகும். அதிகளவு பசுமை இல்ல வாயுக்கள் உயராத காரணத்தால் சூழலியலாளர்கள் நிம்

திருமண ஏற்பாடுகளை செய்வதற்கான ஆப்கள்!

படம்
  பல்வேறு ஆப்களை எழுதியிருக்கிறோம். ஆனால் இப்போது கல்யாணம் செய்வதற்கான அமைப்புகள், சேவைகளைப் பற்றியும் எழுதுகிறோம் என்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? இதை ஆங்கில இதழ்கள் எழுதிவிட்டன என்பதல்ல. கல்யாண வேலைகளை கூட செய்வதற்கான ஆட்கள் கிடைப்பதில்லை. உறவுகள் நெருக்கமில்லாமல் தூரமாகிவிட்டன என்பதை நாம் மறைமுகமாக புரிந்துகொள்ளவேண்டியதுதான். சீரியசாக பேசிவிட்டோமே... ஒகே சில்லுகா உண்டன்டி.. ஆப்களை சூஸ்தம்..... வெட்மீகுட் 2014ஆம் ஆண்டு தொடங்கிய ஆப் இது. இதில் கல்யாண கார்ட் வடிவமைப்பு முதல் எந்த பொருட்களுக்கு எந்த வியாபாரிகளை அணுக வேண்டும் என்பது வரையிலான தகவல்கள் கிடைக்கின்றன. மாதத்திற்கு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவது போல ஆப்பை தரவிறக்கி வருகிறார்கள். 75 ஆயிரத்திற்கும் மேலான முறை தரவிறக்கி 30 லட்சத்திற்கு மேல் பயன்படுத்தி வருகிறார்கள்.  அப்பி கப்புள் 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சேவை. இதைப் பயன்படுத்தி திருமணமாகும் தம்பதிகள் தங்களுக்கென தனி ஆப் , வலைத்தளத்தை தொடங்கலாம். அப்புறம் என்ன செய்வது என்கிறீர்களா? கல்யாணம் செய்யவேண்டியதுதான். விருந்து சோறு சாப்பிட வேண்டியது தான்.  ஆர்எஸ்விபி மேனேஜர் 2

இஸ்லாமிய நாடுகளில் முகத்திரை அணியும் சட்டங்கள்!

படம்
  சௌதி அரேபியா  பொதுவாக இங்கு ஹிஜாப், நிகாப், பர்கா என்ற உடைகள் சாதாரணமானவை. இங்கு பெண்கள் இந்த  உடைகளில் எது தங்களுக்கு பிடித்ததோ அதை அணிகிறார்கள். 2018ஆம் ஆண்டு, சௌதி இளவரசர் முகமது பின் சல்மான், நாகரிகமாக பொறுப்புடன் உடை அணிந்தால் போதுமானது என கூறிவிட்டார்.  ஈரான் 1979ஆம் ஆண்டு நாட்டில் ஈரான் புரட்சி நடைபெற்றபிறகு, ஹிஜாப்பை பெண்கள் அணியவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. 1995ஆம் ஆண்டு ஒரு சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி பொதுஇடத்தில் முகத்திற்கு மறைப்பின்றி ஒரு பெண் வந்தால், அவர்களை அறுபது நாட்கள் சிறையில் அடைக்க முடியும்.  பாகிஸ்தான்  2019ஆம் ஆண்டு  பெஷாவர், ஹமீர்புர் ஆகிய இடங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு சுற்றறிக்கை  வந்தது. அதில், அனைத்து பெண் மாணவிகளும் அபயா எனும் உடையை அணிய வேண்டும் என கூறியிருந்தது. ஆனால் இதற்கு எதிராக போராட்டம் நடைபெற்றதால் சட்டம் திரும்ப பெறப்பட்டது.  இந்தோனேஷியா 2021ஆம் ஆண்டு பள்ளிகளில் மத ரீதியான உடைக்கட்டுப்பாடு இருக்காது என கூறப்பட்டு, முந்தைய சட்டங்கள் மாற்றப்பட்டன.  இந்தியா டுடே  பின்டிரெஸ்ட் 

முஸ்லீம் பெண்களின் மீது இறுகும் கட்டுப்பாடுகள்! - ஹிஜாப்பிற்குத் தடை

படம்
  ஹிஜாப்களை பொது இடத்தில் பயன்படுத்துவதை முதலில் அனுமதித்த மேற்கு நாடுகள், முஸ்லீம்கள் மீதான பயத்தின் காரணமாக அவர்களை இப்போது நெருக்கி வருகிறார்கள். அண்மையில் பிரான்சில் முஸ்லீம்களை முகத்தை மூடக்கூடாது என்று கூறியது நினைவு வருகிறதா?  பிரான்ஸ்   இங்கு 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று முஸ்லீம்கள் நிகாப், பர்கா ஆகிய உடை வகைகளை அணியக் கூடாது என அரசு கூறியது. இதில் ஹிஜாப் மட்டும் விதிவிலக்கு. முகத்தை மறைக்காமல் அணியவேண்டும் என கூறப்பட்டது.  அமெரிக்கா 1837ஆம் ஆண்டு அமெரிக்காவில் அனைத்து வகை முகத்தை மூடும் உடைகளும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது என சட்டம் உள்ளது.  2019ஆம் ஆண்டு இந்த சட்டம் மாற்றப்பட்டது. ஏனெனில் இல்கான் ஓமர் என்ற பெண்மணி தேர்தலில் வென்று மன்றத்திற்கு வந்தார். அவருக்கான சட்டத்தில் மாறுதல்களை செய்தனர்.  பெல்ஜியம் இங்கு 2011ஆம் ஆண்டு நிகாப் முதற்கொண்டு முகத்தை மூடும் அனைத்து உடைகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டன.  ஸ்விட்சர்லாந்து 2021ஆம் ஆண்டு இங்கு வாழும் மக்கள், பொது இடங்களில் முஸ்லீம் மக்கள் முகத்தை மூடும் உடைகளை அணிவதற்கு தடை விதிக்கலாம் பொது வாக்களிப்பு செய்