இடுகைகள்

பெண்களே நடத்தும் பூம்புகாரின் டால்பின் உணவகம்!

படம்
  டால்பின் உணவகம் நடத்தும் மீனவப் பெண்கள் பூம்புகாரில் உள்ள கடற்கரையோரமாக அமைந்துள்ளது. டால்பின் உணவகம். ஆஸ்பெஸ்டாஸ் போட்ட கூரைகளால் அமைந்து உணவகம் இது. கடற்கரையோரம் இதுபோல கடைகள் அமைவது பெரிய ஆச்சரியம் அல்ல. இதனை முழுக்க பெண்களே கூட்டாக பணம் போட்டு நடத்துவதுதான் ஆச்சரியமானது.  கடற்கரையோரமாக வாழும் பெண்கள், தொழில்முனைவோராக இருப்பது ஆச்சரியமல்ல. ஆனால் இப்படி முறையாக கடை தொடங்கி நடத்துவது வியப்பளிப்பதுதான். தங்களது இனக்குழுவில் உள்ள ஆண்கள், பெண்கள், போட்டி கடைகள் என நிறைய சவால்களைச் சந்தித்துத்தான் பெண்கள் டால்பின் உணவகத்தை நடத்தி வருகிறார்கள்.  பெருந்தொற்றுக்கு முன்னதாக, தினசரி 5 ஆயிரம் வரை வருமானம் வந்துகொண்டிருந்தது. ஆர்டர்களுக்கு ஏற்று உணவு தயாரித்தால்,  தொழிலில் உள்ள பெண்களுக்கு தலைக்கு 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என கூறுகிறார்கள்.  டால்பின் உணவகம் நடத்துவதற்கான ஐடியா, உதவிகளை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்னேகா என்ற அமைப்பின் எல் கிருஷ்ணன் செய்துகொடுத்துள்ளார். இந்த அமைப்பு, சமையலுக்குத் தேவையான பாத்திரங்களை கொடுத்து உதவியதோடு, பொருட்களை மதிப்புகூட்டி எப்படி விற்பனை செய்வது என பயிற்சி

கோவையின் குப்பைகளை மாற்றி சுத்தம் செய்யும் செர்கிள் எக்ஸ் ஸ்டார்ட்அப் குழு!

படம்
  கோயம்புத்தூர் தொழில்நகரம். சென்னைக்கு அடுத்தபடியாக தொழில் வாய்ப்புகளை ஈர்க்கும் முக்கியமான நகரம் கூட. இங்கு தினசரி குவியும் கழிவுகளின் எண்ணிக்கை அதிகம். இதனை எப்படி மறுசுழற்சி செய்வது என பலரும் யோசித்து வந்தனர். தற்போது இதற்காகவே செர்கிள் எக்ஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாகியுள்ளது. இந்த நிறுவனம், கோவை கார்ப்பரேஷன் மற்றும் ரெசிடென்ஸ் அவர்னெஸ் அசோசியேஷன்  - ராக் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.  இவர்கள் குறிப்பிட்ட குப்பைகள் கொட்டப்பட்டுள்ள இடத்தை தேர்ந்தெடுத்து அதனை சுத்தம் செய்து அங்கு சுவரோவியங்களை வரைகிறார்கள். இப்படித்தான் ஆர்எஸ் புரத்தில் உள்ள ஜிஎஸ் லே அவுட்டில் சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளை எழுதி அழகிய படங்களை வரைந்திருந்தனர். இதற்கு ஸ்பாட் பியூட்டிஃபிகேஷன் என்று பெயர்.  cercle x team பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாசுபட்ட இடத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனை தன்னார்வலர்களுக்கு தெரிவித்து விடுகிறார்கள். பிறகு அவர்களை ஒருங்கிணைத்தால் பாதி வேலை முடிந்துவிடுகிறது. செர்கிள் எக்ஸ் என கழிவு மேலாண்மை நிறுவனம் கழிவுகளை மீண்டும் சுத்தப்படுத்திய இடத்தில் யாரும் போடா

வரலாற்றை மாற்றும் அதிகாரம்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  pinterest முருகானந்தம் அன்புள்ள முருகு அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? நேற்று காலை மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் நல்ல கனமழை. நான் மழைக்கு முன்னமே ஆபீஸ் போய்விட்டேன். பட்டம் பதிப்பக பணிகள் இருந்தன. கூட்டுறவு வங்கிகளின் வீழ்ச்சி, உரிமம் ரத்து ஆகிய செய்திகளை படிக்க வேண்டியதுள்ளது. இவற்றையும் நூலில் இணைத்துவிடுவேன். நூலை எழுத தமிழ் இணையப் பல்கலைக்கழக வலைத்தளம் உதவியது. இதில் ஏராளமான நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இத்தகவல் முன்னமே தெரிந்திருந்தால் தொடராக எழுதும்போதே சிறப்பாக எழுதியிருக்கலாம். பரவாயில்லை. நூலாக எழுதி தொகுக்கும்போது, வலைத்தளம் உதவியது என வைத்துக்கொள்ளலாம்.  நகுலன் கதைகள் கொண்ட நூல் தொகுப்பை முத்து மாரியம்மன் பழைய பேப்பர் கடையில் நாற்பது ரூபாய்க்கு வாங்கினேன். ஒரு கதை மட்டுமே படித்தேன். இனிமேல்தான் நூலை முழுமையாக படிக்க வேண்டும்.  இந்தியாவைப் பற்றிய ஆய்வுச்செய்திகளை தேசிய ஆங்கிலமொழி இதழ்கள் சிறப்பாக உழைத்து எழுதுகிறார்கள். கட்டுரைகளை படிக்கும்போதே அதை அறிய முடிகிறது. உங்கள் உடல்நிலையைக் கவனித்துக்கொள்ளுங்கள்.  அன்பரசு 22.8.2021 -

தெரியுமா - உயிரி எரிபொருள்

படம்
  pixabay உயிரி எரிபொருள் உயிரி எரிபொருள்,  தாவரங்கள், பாசி, விலங்கின்  கழிவுப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கரிம எரிபொருட்களில் மாசுபாடு அதிகம். உயிரி எரிபொருட்களில் மாசுபாடு குறைவு என்பதோடு அதனை எளிதாக புதுப்பிக்க முடியும். உயிரி எரிபொருளைத் தயாரிக்க, பாசி  ஏற்ற இயற்கை ஆதாரம் என  சூழலியலாளர்கள் கூறுகின்றனர். சோளத்திலிருந்து எளிதாக உயிரி எரிபொருள் தயாரித்து வருகிறார்கள். இதற்கு, பயோ எத்தனால் என்று பெயர். அமெரிக்காவில் இம்முறையில்  உயிரி எரிபொருளைத் தயாரிக்கிறார்கள்.  உயிரி எரிபொருள் தயாரிக்கும் முறையைப் பார்ப்போம். சூரிய ஆற்றல், கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி பாசி வளர்ச்சி பெறுகிறது. பாசியை அறுவடை செய்து அதிலிருந்து எரிபொருளை சுத்திகரித்து பெறுகிறார்கள். இதனை எரிவாயு,பெட்ரோல், டீசல் போல வாகனங்களில் பயன்படுத்தலாம். இதனை எரிக்கும்போது குறைந்தளவு கார்பன் டைஆக்சைடு வாயு வெளியேறும். இது சுழற்சியாக நடைபெறும்.  எரிபொருளின் தேவைக்காகவே பயிர்களை விளைவித்தால் உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் பொருளாதார மற்றும் சூழலியலாளர்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.   த

தவளைகளை சோதனைக்குழாய் முறையில் உருவாக்க முயன்ற முதல் ஆராய்ச்சியாளர்!

படம்
  கூகுள் ஆர்ட் அண்ட் கல்ச்சர் - லாஸரோ லாஸரோ ஸ்பாலன்ஸானி (lazzaro spallanzani) லாஸரோ, வடகிழக்கு இத்தாலியில் 1729ஆம் ஆண்டு பிறந்தார். அப்பா சொன்னார் என்ற காரணத்திற்காக சட்டப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் படிப்பில் சேர்ந்தபிறகுதான் தனக்கு ஆர்வம் இருக்கும் துறைகளை அடையாளம் கண்டார். இயற்பியல், இயற்கை அறிவியல் ஆகியவற்றில் ஈடுபாடு இருந்ததால் சட்டப்படிப்பை கைவிட்டார்.   தனது முப்பது வயதில் கத்தோலிக்க பாதிரியாகியிருந்தார். கூடவே மாடனா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்தார். 1769ஆம் ஆண்டு பவியா பல்கலைக்கழகத்தில் பணி வாய்ப்பு கிடைத்தது. 1799ஆம் ஆண்டு காலமாகும் அவரை அப்பல்கலையில்தான் பணியாற்றினார். ஐரோப்பாவில் இயங்கி வந்த பல்வேறு அறிவியல் சங்கங்களில் லாஸரோ உறுப்பினராக இருந்தார். செரிமானம் பற்றி முதலில் ஆராய்ச்சியைத் தொடங்கிய லாஸரோ இறுதியில் விலங்குகளின் இனப்பெருக்கம் பற்றி கவனம் செலுத்தினார்.  தவளைகளை சோதனைக்குழாய் முறையில் உருவாக்க முடியுமா என்று சோதித்த முதல் அறிவியலாளர் லாஸரோ ஸ்பாலன்ஸானிதான். 1930ஆம் ஆண்டு வௌவால்கள் எப்படி எதிரொலி மூலம் பறக்கின்றன என்பதைப் பற்றிய கண்டுபிடிப்பு லாஸ

கற்பதில் வேகம் காட்டும் தங்கமீன்!

படம்
  Gold fish - Pinterest சூழலை அறிவால் அறியும் தங்கமீன்! நீருக்குள் அலைந்து திரிந்து உணவு தேடும் மீன்களுக்கு,  சரியாக வழிதேடி அடையும் திறன் உண்டு. இதனை இஸ்ரேலில் உள்ள பென் குரியன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு அறையில் செய்த சோதனையில் மீன்கள் எப்படி கப்பல் அல்லது வேறு வகை வாகனங்கள் எதிரே வந்தால் விலகி பாதுகாத்துக்கொள்கிறது என அறிந்தனர். இதுபற்றிய ஆராய்ச்சி, பிஹேவியரல் பிரெய்ன் ரிசர்ச் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.  ஆறு தங்க மீன்களை வைத்து அதன் திசையறியும் திறனை சோதித்தனர். சக்கரங்கள் பொருத்திய சிறு வண்டியில் மீன்தொட்டியை வைத்தனர். மீன்தொட்டியின் நடுவில் கம்பியை வைத்து, அதில் கேமராவைப் பொருத்தினர். இதன்மூலம், தங்கமீனின் இயக்கத்தை பதிவு செய்தனர். 30 நிமிடங்களுக்கு சிறுவண்டியை இயக்கி மீன்கள்  குறிப்பிட்ட திசையில் நகர்கிறதா எனப் பார்த்தனர். தொட்டியில் ரோஸ் நிற அட்டையை வைத்து அதனை நோக்கி மீனை செல்ல தூண்டினர். முதலில் கிடைத்த வெற்றி சதவீதம் 2.5 தான். பிறகு, தங்கமீனின் வெற்றி வாய்ப்பு 17.5 சதவீதமாக உயர்ந்தது.  அறையில் இடங்களை மாற்றுவது, வெவ்வேறு நிற அட்டைகளை வைப்பது, ரோஸ்

ஆலிவ் ரிட்லி ஆமைகளைப் பாதுகாக்கும் முயற்சி - ஒடிஷா மாநில அரசின் ஆமையைக் காக்கும் தடை!

படம்
  pinterest ஒடிசா மாநிலத்தின்  கேந்திரபாரா மாவட்டத்தில் கதிர்மாதா, எனும் கடல் உயிரினங்களுக்கான சரணாலயம் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 1,435 சதுர கி.மீ.ஆகும். இதில் பாதுகாக்கப்பட்ட காடுகள், வண்டல்மண் பரப்பு, மணல் திட்டுகள் உள்ளன. இக்கடல்பரப்பை, 1997ஆம் ஆண்டு கடல் சரணாலயமாக ஒடிஷா அரசு அறிவித்தது. இங்கு அழிந்து வரும் நிலையிலுள்ள உயிரினங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது ஆலிவ் ரிட்லி ஆமைகள். ஆண்டுதோறும் முட்டைகளை இட அதிகளவு எண்ணிக்கையில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் இங்கு வருகின்றன.  சரணாலயத்திற்கு வரும் ஆமைகளை பாதுகாக்கவென வனத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிட வரும் இடங்களில் கதிர்மாதா கடற்புரமும் ஒன்று. ஆண் ஆமைகள், பெண் ஆமைகளுடன் இனப்பெருக்கம் முடிந்தவுடன் கடலுக்குள் திரும்பிச்சென்று விடுகின்றன. கருவுற்ற பெண் ஆமைகள் சூரியன் வானில் மறைந்தபிறகு மணல் பரப்பிற்கு முட்டையிட வருகின்றன. நெடுநேரம் யோசித்து முட்டையிடுவதற்கான இடத்தைக் கண்டுபிடிக்கின்றன. தோராயமாக ஒரு ஆமை,  மணலில் குழிதோண்டி 120 முதல் 150 வரையிலான  முட்டைகளை  இடும். பிறகு, திரும்பி

மாநில பட்டாம்பூச்சி அந்தஸ்து!

படம்
  கோவாவின் மாநில பட்டாம்பூச்சி! உடலில் கருப்பு வரிகளைக் கொண்ட பேப்பர்கைட் (paperkite) எனும் பட்டாம்பூச்சியை கோவா  அரசு, மாநில பட்டாம்பூச்சியாக தேர்ந்தெடுத்துள்ளது. இதனை மலபார் ட்ரீ நிம்ப் (malabar tree nymph ) என குறிப்பிடுகிறார்கள் . இதன் செல்லப்பெயர்,  பேப்பர்கைட். கோவாவில் ஐந்தாவது ஆண்டாக பறவைத் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை கோவாவின் வனத்துறை நடத்தியது. அதில் பங்கேற்ற மாநில முதல்வர்  பிரமோத் சாவந்த், பேப்பர்கைட் பட்டாம்பூச்சியை மாநில பட்டாம்பூச்சியாக அறிவித்தார்.  பேப்பர்கைட் பட்டாம்பூச்சி, 120 முதல் 154 மி.மி. நீளம் கொண்ட இறகைக் கொண்டது. அழியும் அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரி என உலக இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN),தனது பட்டியலில் இதனை அறிவித்துள்ளது. பேப்பர்கைட் பட்டாம்பூச்சி நிம்பாலிடே (Nymphalidae)எனும் குடும்பத்தைச் சேர்ந்தது.   அழியும் அச்சுறுத்தல் நிலையில் உள்ள பட்டாம்பூச்சியை மாநில பட்டாம்பூச்சியாக கோவா அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் இப்பட்டாம்பூச்சியின் வாழிடம் பாதுகாக்கப்படும் முயற்சிகள் தொடங்கும் வாய்ப்புள்ளது. வனத்துறை உருவாக்கிய குழுவில் சூழல் வல்லுநர்கள் பலர் இடம்பெற்

பரிணாம வளர்ச்சியில் தாவரத்திலிருந்து பூச்சிக்கு மாறிய மரபணு!

படம்
  தொன்மை தாவரத்திலிருந்து பூச்சிக்கு மாறிய மரபணு! பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர், ஒயிட்ஃபிளை என்ற பூச்சி  மரபணு ஒன்றைப் பெற்றது. இதனை  தொன்மையான தாவரம் ஒன்றிலிருந்து பெற்றதாக தாவரவியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஆனால் இத்தாவரம் எதுவென இன்னும் கண்டறியப்படவில்லை. BtPMat1  என்ற மரபணுதான் ஒயிட் ஃபிளை பூச்சிக்கு மாறிய மரபணு என ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இது தாவர நச்சு வகையைச் சேர்ந்தது. ஆனாலும் பூச்சியை பாதிப்பதில்லை.  BtPMat1 என்ற மரபணு, தாவரத்திலிருந்து பூச்சி இனத்திற்கு மாறியுள்ளதை சீனா மற்றும் ஐரோப்பிய ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றிய செய்தி செல் இதழில் வெளியாகியுள்ளது. ஹரிஸோனல் ஜீன் டிரான்ஸ்பர் (HGT)முறையில் மரபணு மாற்றம் நடைபெற்றுள்ளது. இந்த முறையில் நடைபெறும் மரபணுமாற்றம் பாக்டீரியா இனங்களிலிருந்து தாவரம் மற்றும் விலங்குகளுக்கு நடப்பது இயல்பானதுதான்.   நச்சு கொண்ட தாவரங்கள், தங்களிடமுள்ள உணவைக் காக்க நச்சை சுரக்கிறது. இச்சமயத்தில் ஒயிட்ஃபிளை பூச்சியை நச்சு பாதிக்காமல் காப்பாற்றுவது  தாவர மரபணுதான்.  இப்பூச்சியிடமிருந்த தாவர மரபணுவை நீக்கி சோதித்தபோது, உணவிலுள்ள நச்சு காரணமாக

கடல்பேச்சு- மீன்கள் தகவல் பரிமாறிக்கொள்ளும் ரகசியம்!

படம்
  pinterest நீருக்கடியில் மீன்களின் பேச்சு!  கடலின் நீருக்கடியில் நீந்தும்போது, ஆய்வாளர்கள் பல்வேறு வித ஒலிகளைக் கேட்டுள்ளனர். ஆனால் அவற்றை பல்வேறு உயிரினங்கள் ஏற்படுத்துகின்றன என நினைத்தனர்.  இந்த உயிரினங்களில் மீன்கள் இருப்பது பலருக்கும் ஆச்சரியம் தரலாம்.   ”பல்லாண்டுகளாக  சிலவகை மீன்கள் ஒலியை எழுப்பி வந்துள்ளன. ஆனால் இப்படி மீன்கள் ஒலியெழுப்பது அரிதான ஒன்று” என்றார்  அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சூழலியலாளர் ஆரோன் ரைஸ். மீன்களின் தகவல் தொடர்பு எனும்போது பலரும் நினைப்பது அதன் உடல்மொழியும், தோல் நிறத்தின் வழியாக பிறருக்கு உணர்த்தும் குறிப்புகளும்தான். ஆனால் இவையல்லாமல் மீன்கள் பல்வேறு ஒலிகளை எழுப்பி தங்களுக்குள் கருத்துகளை பகிர்ந்துள்ளன.  விலங்குகளும், பறவைகளும் இந்த முறையில் தகவல் தொடர்புகொள்வது பலரும் அறிந்த செய்தி தான்.  மீன்களைப் பற்றிய ஆராய்ச்சி என்றால் திமிங்கிலமும், டால்பினும்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். உண்மையில் அதிகளவு ஆராய்ச்சி செய்யப்பட்ட உயிரினம் என்றால், அது இவை இரண்டும்தான்.  பிற மீன் இனங்களின் தகவல்தொடர்பு பற்றி பெரியளவு ஆராய்ச்சி செய்யப்படவில்லை

எஸ்ஓஎஸ் சிக்னல்- ஆபத்தில் உள்ளவர்களை காக்கும் அடையாளம்

படம்
  எஸ்ஓஎஸ் சிக்னல் (SOS Signal) கடலில் அல்லது மலைப்பகுதியில் அவசர நிலையின்போது, ஆபத்தில் உள்ளவர்கள் தீப்பந்தம் ஒன்றை எரிய விடுகிறார்கள். இதனை ஃபிளேர்ஸ் (flares) என்று அழைக்கின்றனர். இதிலுள்ள வேதிப்பொருட்கள் பல்வேறு நிறங்களில் எரியும் என்பதால், தொலைதூரத்தில் உள்ளவர்களும் இதனைப் பார்க்கலாம். ஆபத்து சமிக்ஞையைப் பார்க்கும் விமானப்படையினர், எளிதாக உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுகிறார்கள்.  ஃப்ளேர்ஸ், பெரும்பாலும் அடர்த்தியான சிவப்பு நிறத்தில் தயாரிக்கப்படுகிறது. பகல் மற்றும் இரவிலும் இதனை எளிதாக காணலாம். இதில் சிலவகை ஃபிளேர்ஸ், எரியும்போது புகையை மட்டுமே வெளிவிடும். காடுகளில் இவ்வகையைப் பயன்படுத்துகிறார்கள். வானில் விமானத்திலிருந்து பார்க்கும்போது காடுகளின் பகுதிகளை  துல்லியமாக பார்க்க முடியாது. இச்சமயங்களில், நெருப்பை விட புகையை எளிதாக அடையாளம் காணலாம்.   ஒருவர் கையில் பிடித்து ஃப்ளேர்ஸை எரித்தால் அது 1 நிமிடம் முழுதாக எரியும். அதனை ஐந்து கி.மீ. தூரத்தில் இருப்பவர்கள் பார்க்கலாம்.  ஃப்ளேர்ஸில் உள்ள வேதிப்பொருட்கள் எரியும்போது, ஆக்சிஜனை வெளியேற்றுகிறது. இதன் காரணமாகவே அதில் பற்றிவைக்கப்படும்