இடுகைகள்

இயற்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் பசுமைப்பரப்பை காக்க இந்திராகாந்தி எடுத்த நடவடிக்கைகளும், செயல்பாடுகளும்! - இந்திராகாந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு

படம்
              இந்திராகாந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு முடவன் குட்டி முகமது காலச்சுவடு மூல ஆசிரியர் - ஜெய்ராம் ரமேஷ் நூல் மொத்தம் 500 பக்கங்களைக் கொண்டது. அத்தனையிலும் நாம் அறிவது முழுக்க எதிர்மறையாக கூறப்படும் அரசியல் தலைவரைப் பற்றி.. இந்திரா பிரியதர்ஷினி எனும் நேருவின் மகளைப் பற்றியதுதான் நூல். நூலில் அவர் அதிகாரத்தில் இருந்தபோதும், இல்லாதபோதும் எப்படி சூழலியல் பற்றி கவனம் கொண்டிருந்தார், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு பிடித்த விஷயங்களை செய்யாமல், மாநில முதல்வர்களுக்கு இயற்கை சூழலியல் பற்றி எடுத்துச்சொல்லி அவர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்க வைத்தது பற்றி நூலில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எமர்ஜென்சி நிலையை உருவாக்கியவர் என்று மட்டுமே இந்திராவை ஊடகங்கள் அடையாளப்படுத்தி அவரது பிற செயல்களை மறைத்துவிட்டனர். ஜெய்ராம் ரமேஷ் ஆங்கிலத்தில் எழுதிய இந்திரா பற்றிய இந்த நூல் சூழலியல் பல்வே்று ஆபத்துக்குள்ளாகி வரும் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. நூலில் இந்திரா எழுதிய பல்வேறு கடிதங்கள் இயற்கை அமைப்புகள், பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம், ஆவணக் காப்பகங்கள் ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டு

வாசிக்க வேண்டிய நூல்கள்! இயற்கை சார்ந்தவை

படம்
  வைல்டர்  மில்லி கெர் ப்ளூம்ஸ்பரி பத்திரிகையாளர், கானுயிர் பாதுகாப்பாளர் மில்லி கெர் எழுதிய நூல். காடுகளில் செயல்படுத்தும் திட்டங்கள், காடுகளை வளர்ப்பது ஆகியவை பற்றி நூலில் கூறியுள்ளார். அர்ஜென்டினா தேசியப் பூங்காக்களுக்கு ஜாகுவார்கள் கொண்டு வரப்பட்டதையும், தென் ஆப்பிரிக்காவில் எறும்பு தின்னிகள் கொண்டு வரப்பட்டதையும் சுவாரசியமாக எழுதியிருக்கிறார் வில்லி கெர்.  இல்லுமினேட்டட் பை வாட்டர்  மலாச்சி தாலக் டிரான்ஸ் வேர்ல்ட் மீன் பிடிப்பது அனைவருக்கும் ஏற்றதல்ல. ஆனால் அதை செய்பவர்கள் அனுபவித்து செய்வார்கள். எழுத்தாளர் மலாச்சி தாலக்கும் ஆங்கில கணவாயில் தான் மீன் பிடித்த அயர்ச்சியான அனுபவத்தை நூலாக எழுதியிருக்கிறார். கலாசார வேறுபாடுகள் இந்த பணியில் எப்படி இருக்கின்றன என்பதையும் கூறியிருக்கிறார்.   வைல்ட்லிங்க்ஸ்  ஸ்டீவ் பேக்ஷால், ஹெலன் குளோவர்  ஜான் முர்ரே  குழந்தைகளும் பெற்றோர்களும் சேர்ந்து செய்யவேண்டிய பல்வேறு ஆக்டிவிட்டிகள் நூலில் உள்ளன. அவற்றை வீட்டைவிட்டு வெளியில் தான் செய்யவேண்டும். இந்த நூல் அதுபோல நிறைய செயல்பாடுகளை பரிந்துரைக்கிறது. இதை செய்தால் குழந்தைகளுடன் பெற்றோருடன் பிணைப்பு அதி

கனடாவில் சூழல் விருது பெற்ற இரண்டு சூழலியலாளர்கள்!

படம்
  ஏமி லின் ஹெய்ன் விருது பெற்ற சூழலியலாளர்கள்! மேரி அசெல்ஸ்டின் ஸ்கொம்பெர்க், கனடா 35 ஆண்டுகளாக கிராம மக்களின் இனக்குழு சார்ந்து செயல்பட்டுவருகிறார். டஃப்ரின் மார்ஸ் அமைப்பைத் தோற்றுவித்த உறுப்பினர்கள் ஒருவர். இயற்கைச்சூழலைக் காப்பதற்கான பல்வேறு பிரசாரங்கள், செயல்பாடுகளை செய்து வருகிறார். இவருக்கு, ஸ்கோம்பெர்க் கிராமத்திலுள்ள பள்ளிக்குழந்தைகள் வைத்த செல்லப்பெயர், தவளை அத்தை. யார்க் பல்கலைக்கழகத்தில் புவியியல் படிப்பில் முதுகலைப்பட்டம் பெற்றவர் மேரி அசெல்ஸ்டின். நடப்பு ஆண்டில் மேரி  செய்த பல்வேறு சூழல் பணிகளை பாராட்டி,  கனடா காட்டுயிர் கூட்டமைப்பு (CWF) சூழல் பணிகளுக்காக ரோலண்ட் மிச்னர் கன்சர்வேஷன் விருது (Roland Michner Conservation Award) வழங்கியுள்ளது.  ”இயற்கை மீதான நேசம் பற்றிய சிந்தனைகளை நான் பிறருக்கு பகிர்ந்து வருகிறேன். இயற்கை  வழங்கிய  ஆச்சரியமான அனுபவங்களே அதைப் பாதுகாக்கும் ஊக்கத்தை பிறருக்கு தரத்தூண்டியது ” ஏமி லின் ஹெய்ன் கல்காரி, கனடா தாவரங்களை ஓவியங்களாக வரையும் ஓவியக்கலைஞர். வரைவதற்கான இங்கையும் இயற்கையான பொருட்களிலிருந்து  தயாரித்து பயன்படுத்துகிறார். எ பின்ட் சைஸ்டு இ

புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பவளப்பாறைகளைக் காக்கலாம்!

படம்
  பவளப்பாறைகளைக் காக்கும் முயற்சி!  மத்திய அமெரிக்காவில் உள்ள நாடு, பெலிஸ். இங்கு கடல்பரப்பில் உள்ள பவளப்பாறைகள் சூழல் அமைப்பில் முக்கியமானவை. சூழலியலாளர் லிசா கார்ன், கடலில் பவளப் பாறைகளை ஆய்வு செய்து வருகிறார். இவர், காலநிலை மாற்றத்தில் அவை அழிந்துவருவதைக் கண்டார். இதைத் தடுக்க, 2013ஆம் ஆண்டு ஃபிராக்மென்டேஷன் ஆஃப் ஹோப் எனும் தன்னார்வ அமைப்பைத் தொடங்கினார். இதன் மூலம், அழிந்த பவளப்பாறைகளை மீட்கும் செயல்பாடுகளை செய்து வருகிறார்.  லிசாவின் வீடருகே லாஃபிங் பேர்ட் கயே (Laughing Bird Caye) எனும் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள கடல்பகுதியில் உள்ள பவளப்பாறைகளை மீண்டும் வளர்க்க முயன்றுவருகிறார் லிசா. அறிவியலாளர்களின் ஆராய்ச்சி நுட்பங்களைப் பயன்படுத்தி, பவளப்பாறைத்துண்டுகளை வளர்த்து வருகிறார். சிமெண்டில் செய்த அடித்தட்டு கற்களில் பவளப்பாறைகளிலிருந்து சேகரித்த பகுதிகளை பொருத்தி வளர்க்கிறார்.  அழிந்துவரும் எல்க்ஹார்ன், பவளப்பாறைகளின் மரபணுக்களை சேகரித்து 28 மரபணு வங்கி  நர்சரிகளை உருவாக்கியுள்ளார்.  அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த கடல் உயிரினங்கள் ஆராய்ச்சியாளர், டேவிட் வாகன். இவர், 45

முக்கியமான சூழல் வலைத்தளங்கள்!

படம்
  சூழல் வலைத்தளங்கள்! www.afforestt.com 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம். பெங்களூரு மற்றும் நியூ டில்லியில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 12. இயற்கையான சூழலை மீட்டெடுக்க மண்ணுக்கு உகந்த மரக்கன்றுகளை நட்டு பசுமை பரப்பை உருவாக்கிவருகின்றனர். இதன் நிறுவனர் , சுபேந்து ஷர்மா. Greenyatra.org இந்த அமைப்பு, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில்மரக்கன்றுகளை நடும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மியாவகி காடுகளை, நிலப்பரப்பிற்கான ஆய்வுகளைசெய்து மரக்கன்றுகளை, தாவரங்களை நட்டு பராமரிக்கிறது. இதன் நிறுவனர், பிரதீப் திரிபாதி.  Careearthtrust.org 2000ஆம் ஆண்டு தொடங்கி செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பு. பள்ளிக்கரணை சதுப்புநிலம், நன்மங்கலம் காடுகளை பாதுகாத்து மேம்படுத்தியதில் முக்கிய பங்காற்றியுள்ளது.  இப்பணிக்காக , மத்திய அரசின் சூழல், வனத்துறை அமைச்சகத்தில் இந்திராகாந்தி பார்யவரனன் விருது (The Indira Gandhi Paryavaran Puraskar) பெற்றுள்ளது. கேர்எர்த்ட்ரஸ்ட் அமைப்பு, பல்லுயிர்த்தன்மை கொண்ட காடுகளை வளர்ப்பது பற்றிய கொள்கைகளை உருவாக்கி மத்திய, மாநில அரசுகளுக்கு

இயற்கைச் சூழல் என்பது அனைத்து உயிரினங்களுக்குமானது! - நிதின்சேகர்

படம்
  நேர்காணல் நிதின் சேகர் இயற்கை செயல்பாட்டாளர், எழுத்தாளர் காட்டுக்குள் நீங்கள் தங்கியிருந்திருக்கிறீர்கள். அதில் உங்களுக்கு பிடித்தமான நினைவுகள் ஏதேனும் இருக்கிறதா? நாங்கள் ஒரு யானையைப் பிடித்து கட்டி வைத்திருந்தோம். அதன் பெயர், திகாம்பர். ஒருநாள் நான் அதன் நின்றபடி நோட்டில் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென எனது நெஞ்சில் ஏதோ ஒன்று வேகமாக வந்து பட்டது. கீழே விழுந்த பொருளைப் பார்த்தேன். அப்போதுதான் பிடுங்கி எறியப்பட்ட செடி.  திகாம்பர் தான் சலிப்பு தாங்காமல் என்மேல் செடியை எறிந்துள்ளது என புரிந்துகொண்டேன். திரும்ப அதே செடியை அதன் காலடியில் போட்டேன். திரும்ப திகாம்பர் என் மீது செடியை தும்பிக்கையால் பற்றி என் மீது எறிந்தது. ஆம் இப்போது நாங்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை சில நிமிடங்களுக்கு பிறகே அறிந்தேன். யானையை சுதந்திரமாக வைத்திருக்க நினைக்கிறோம். அதற்காக சூழலியலாளர்களாக நாங்கள் நிறைய உழைக்கிறோம்.  காட்டின் நடுவே சிறு குடிலைக் கட்டிக்கொண்டு வாழ்ந்திருக்கிறீர்கள். அதுவும் அங்கு வாழும் மக்களின் மொழியும் கூட உங்களுக்குத் தெரியாது அல்லவா? மேற்கு வங்கத்தில

இயற்கையுடனான மனிதர்களின் தொடர்பு வரலாற்று ரீதியானது! - கிரெச்சன் காரா டெய்லி

படம்
  நேர்காணல்  கிரெச்சன் காரா டெய்லி (Gretchen cara daily) சூழலியல் அறிவியலாளர், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நீங்கள் செய்துவரும் நேச்சுரல் கேபிடல் புராஜெக்ட் பற்றி கூறுங்கள். மனிதர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்புகளை வெளிச்சமிட்டு காட்டுவதுதான் எனது திட்ட நோக்கம். நம் அனைவருக்குள்ளும் தனித்துவமான இயற்கைத்தொடர்பு இருந்தாலும் அதை மறைந்திருக்கிறது. எனவே, நாம் மண், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றை கைகளால் தொடுவதற்கான உந்துதல் கொண்டுள்ளோம். இப்படி தொடுவது மனிதர்களின் உடல், மனம் இரண்டிற்கும் பயன்களைத் தருகிறது. நமக்கு பயன்தரும் இயற்கையை அறிந்துகொள்ள உதவும் கொள்கை, திட்டம், முதலீடு தேவைப்படுகிறது.  இயற்கை அனுபவம் மனிதர்களின் அறிவாற்றலை மேம்படுத்துகிறதா? இன்று ஆராய்ச்சி செய்யப்படும் முக்கியமான துறை இதுதான். அமெரிக்காவின் இலினாய்ஸில் உள்ள பள்ளியில் மாணவர்களிடையே சோதனை ஒன்று செய்யப்பட்டது. இதில், இரு வகுப்பு மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினர், இயற்கை காட்சிகளை பார்க்கும்படியும், மற்றவர்களுக்கு அந்த வசதி இல்லாமலும் வகுப்புகளை அமைத்தனர். இறுதியில், இயற்கை காட்சிகளை பார்த்த மாணவர

நிலப்பரப்பு சார்ந்த இயல்புகளைக் கண்டறிந்த ஆய்வாளர்! - ஃபிராங்க் மரியன் ஆண்டர்சன்

படம்
ஃபிராங்க் மரியன் ஆண்டர்சன் (Frank Marian Anderson 1863-1945) ஃபிராங்க், அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் பிறந்தார். பெற்றோருக்கு இவர் ஏழாவது பிள்ளை. பெற்றோர், சிறுவயதில் காலமாகிவிட மாமாவின் பராமரிப்பில் வளர்ந்தார். தான் வாழ்ந்த ரோக் ரிவர் வேலி பகுதியில் உள்ள கனிமங்கள், படிமங்களை சேகரிக்கத் தொடங்கினார். 1889ஆம் ஆண்டு ஒரேகானின் சேலத்தில் இருந்த வில்லமெட்டெ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். பள்ளியில் ஆசிரியராகி இலக்கணம் கற்பித்துக்கொண்டிருந்தபோதுதான் பேராசிரியர் தாமஸ் காண்டன் அறிமுகம் கிடைத்தது. போர்ட்லேண்டில் நடைபெற்ற டேவிட் ஸ்டார் ஜோர்டான் என்பவரின் உரையைக் கேட்டபிறகு, புவியியல் துறையை தொழிலாக ஏற்றார் ஃபிராங்க்.  அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் ஜே.எஸ். டில்லரின் உதவியாளராக பணியாற்றினார். 1897இல் எம்.எஸ். பட்டத்தைப் பெற்றவர்,  கலிஃபோர்னியா மாகாண சுரங்க அமைப்பில் களப்பணி உதவியாளராக பணியாற்றினார். 1930ஆம் ஆண்டு, கிரிடாசியஸ் டெபாசிட்ஸ் ஆஃப் நார்த்தர்ன் ஆண்டிஸ் (Cretaceous deposits of northern andes) என்ற ஆய்வை செய்து முனைவர் பட்டம் பெற்றார். துலேர் (Tulare),

சூழல் தொடர்பான அருஞ்சொற்களின் தொகுப்பு !

படம்
  அருஞ்சொல்.... கிளைமேட் சேஞ்ச் (Climate Change) குறிப்பிட்ட காலகட்டத்தில் அளவிடப்படும்  காலநிலை மாற்றம். இதில் வெப்பநிலை, மழைப்பொழிவு, காற்று ஆகியவை உள்ளடங்கும்.   கிளைமேட் ஃபீட்பேக் (Climate Feedback) காலநிலை மாற்றத்தின் விளைவுகளை அதிகரிக்க அல்லது குறைக்க செய்யும் செயல்முறைகள்.  கிளைமேட் லேக் (Climate Lag) காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மெதுவாக நடப்பது. வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கரியமில வாயு, வெப்பமயமாதல் பாதிப்பை மெதுவாக ஏற்படுத்துகிறது. இதற்கு 25 முதல் 50 ஆண்டுகளாகும்.  கிளைமேட் மாடல் (Climate Model) கணித முறைகளைப் பயன்படுத்தி காலநிலை மாற்றங்களைக் கணக்கிட காலநிலை மாதிரி (Climate Model) உதவுகிறது. எ.டு: பருவக்காலங்களில் ஏற்படும் புயல்களை முன்னமே அறிந்து நிலச்சரிவு ஆபத்தை தடுப்பது. கிளைமேட் சென்சிடிவிட்டி (Climate Sensitivity) வளிமண்டலத்தில் கரியமில வாயு குறிப்பிட்ட அளவு அதிகரித்தபிறகு பூமி வெப்பமாக உள்ளதா அல்லது குளிர்ந்துள்ளதா என அளவிடுவது.  https://polarpedia.eu/en/climate-lag/ https://www.climate.gov/maps-data/climate-data-primer/predicting-climate/climate-models

மண்ணிலுள்ள அமிலங்கள், பாதுகாக்கப்பட்ட உயிரியல் பகுதி! - தெரியுமா?

படம்
  மண்ணிலுள்ள அமிலங்கள்! இந்தியாவில் உள்ள அனைத்து நிலங்களும் ஒரேமாதிரியான சத்துக்களை கொண்டிருப்பவை அல்ல. சில இடங்களிலுள்ள நிலங்களில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். மண்ணிலுள்ள அமிலத்திற்கு எதிரிடையான வேதிப்பொருளை மண்ணில் பயன்படுத்தும்போது மண், பயிர்களை விளைவிப்பதற்கு ஏதுவான நிலையைப் பெறும். பெரும்பாலான பயிர்கள் அமிலம், காரம் என அதிகம் மிகாத மண்ணில்தான் சிறப்பாக விளைகிறது.  மண்ணில் தாவரங்கள் வளர்வதற்கும் அதிலுள்ள அமில, கார அளவுகள் முக்கியமானவை. ஆசியா மற்றும் அமெரிக்காவில் அதிகம் விளையும் பூ தாவரம், ஹைட்ரேஞ்சியா (Hydrangea). இந்த தாவரம் அமிலம் நிரம்பிய மண்ணில் விளைந்தால், நீலநிற பூக்களும், காரம் நிரம்பிய மண்ணில் விளைந்தால் ரோஸ் நிற பூக்களையும் பூக்கின்றன. மண்ணிலுள்ள அமில, கார அளவை பிஹெச் அளவுகோல் மூலம் எளிதாக கணக்கிடலாம்.  மேற்குலகில் நிலத்திலுள்ள அமிலத்தன்மையை சீர்படுத்த சுண்ணாம்பை பயன்படுத்துகின்றன. இதன் விளைவாக, நிலத்தின் அமிலத்தன்மை நடுநிலையாக பிஹெச் 7 என்ற அளவுக்கு மாறுகிறது.  பாதுகாக்கப்பட்ட உயிரியல் பகுதி ( Biome Domes )  உலகில் பாலைவனங்கள், காடுகள் என பல்வேறு நிலப்பரப்புகள்  உண்டு.

காலநிலை மாற்றத்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டுமா? உங்களுக்காகவே இந்த நூல்கள் இதோ!

படம்
  காலநிலை மாற்றம் பற்றி வாசிக்க வேண்டிய நூல்கள் தி நியூ க்ளைமேட் வார் - தி ஃபைட் டு டேக் பேக் அவர் பிளானட் மைக்கேல் இ மன் காலநிலை மாற்ற வல்லுநர் மைக்கேல் இ மன், டோன்ட் லுக் அப் என்ற டிகாப்ரியோவின் பட பாத்திரம் போலவே இருக்கிறார். அதாவது நாயகனாக இருக்கிறார் என சொல்ல வருகிறோம். மைக்கேல், நடப்பு கால காலநிலை மாற்ற செயல்பாடுகள் எதை செய்தன எதை தவறவிட்டன என்பதை தெளிவாக விளக்குகிறார்.  தி அன் இன்ஹேபிட்டபிள் எர்த் டேவிட் வாலஸ் வெல்ஸ்  காலநிலை மாற்றம் பற்றிய பயத்தை ஏற்படுத்துகிற நூல் என இதனை தாராளமாக கூறலாம். இரண்டு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால் என்னவாகும் என்பதை துல்லியமாக விளக்கியிருக்கிறார் டேவிட். பயம்தானே நம்மை முன்கூட்டியே செயல்படத்தூண்டும். அந்த வகையில் காலநிலை மாற்றத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு செயல்பட டேவிட்டின் இந்த நூல் ஊக்கமாக அமையலாம்.  தி நட்மெக்ஸ் கர்ஸ் - பாரபிள்ஸ் ஃபார் எ பிளானட் இன் கிரிசிஸ்  அமிதவ் கோஷ் காலனிய காலம் தொடங்கி இன்றுவரை முதலாளித்துவ பொருளாதாரம் எப்படி இயற்கையை அழிக்கிறது என அமிதவ் கோஷ் விலாவாரியாக தகவல்களை சேகரித்து எழுதியிருக்கிறார். இதேபோல அமிதவ் எழுதிய தி

இயற்கை பற்றி அறிந்துகொள்ள உதவும் நூல்கள்!

படம்
  ரீவைல்டிங் ஆப்பிரிக்கா கிரான்ட் ஃபோவிட்ஸ் - கிரஹாம் ஸ்பென்ஸ் ராபின்சன் சூழலியலாளர் கிரான்ட் மற்றும் ஸ்பென்ஸ் ஆகியோர் இணைந்து  பெருந்தொற்று காலத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் வனப்பாதுகாப்பு எப்படியிருந்தது என விளக்கியிருக்கிறார்கள்.  வொய் ஷார்க்ஸ் மேட்டர் டேவிட் ஷிஃப்மேன் ஜான் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி பிரஸ்  விருது பெற்ற தாவரவியலாளர் டேவிட், சுறாக்கள் பற்றி பல்வேறு விஷயங்களைப் பேசியுள்ளார். சுறாக்களைப் பற்றித்தான் நாம் நிறைய தவறான தகவல்களைப் பேசி வருகிறோம். புரிந்துகொள்ளாமல் வாழ்கிறோம். நம்மிடமிருந்துதான் சுறாக்கள் பயப்பட்டு வாழ வேண்டுமென பகடியாக எழுதியிருக்கிற தொனியில் நிறைய தகவல்களை வாசகர்களுக்கு கூறுகிறார்.  பிளாட்டிபஸ் மேட்டர்ஸ்  ஜாக் ஆஸ்பை ஹார்பர் கோலின்ஸ் பதிப்பகம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாலூட்டிகள் படிக்கவும் அறியவும் வினோதமானவை. இதில் பிளாடிபஸ் என்ற விலங்கு பற்றி ஆய்வாளர் ஜாக் விரிவாக விளக்கி இதன் பின்னணியில் உள்ள புராண புனைவுகளையும் பேசியுள்ளார்.  எண்ட்லெஸ் ஃபார்ம்ஸ்  சீரியன் சம்னர்  ஹார்பர் கோலின்ஸ்  குளவிகள் பற்றி நிறைய சுவாரசியமான விஷயங்களை ஆசிரியர் விளக்கியுள்ளார். பலரும் பா

மனிதர்களும் இயற்கையில் ஒரு பகுதி என்பதை மறந்துவிடக்கூடாது

படம்
              மார்க் கார்னே Mark carney former central banker மார்க் கார்னே என்றால் என்ன ? இந்தப் பெயரைக் கேட்டதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது ? ஏதோ பெரிய வங்கியை நடத்துகிற அல்லது தலைவராக இருக்க வாயப்புள்ள ஒருவரைத்தானே ? உண்மைதான் . 2008 ஆம் ஆண்டில் கனடாவின் பேங்க் ஆப் கனடா வங்கிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார் . 2011-2018 காலகட்டத்தில் குளோபல் ஃபினான்சியல் ஸ்டேபிளிட்டி போர்டின் தலைவராக செயல்பட்டார் . 2013 ஆம் ஆண்டு பேங்க் ஆப் இங்கிலாந்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் . 1694 ஆம் ஆண்டு தொடங்கி பிரிட்டிஷ்கார ர்களை மட்டுமே ஆளுநராக நியமித்த மரபை உடைத்தவர் மார்க் கார்னி தான் . 2020 ஆம் ஆண்டு தனது பதவியை விட்டு விலகியவர் கனடாவில் உள்ள ப்ரூக்ஃபீல்டு அசெஸ்மென்ட் என்ற தனியார் நிறுவனத்தில் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார் . வால்யூஸ் - பில்டிங் எ பெட்டர் வேர்ல்ட் ஃபார் ஆல் என்ற நூலை எழுதியுள்ளார் .    நீங்கள் எழுதியுள்ள நூலுக்கான அர்த்தம் என்ன? நான் பேங்க் ஆஃப் கனடாவில் வேலை செய்தபோது பொருளாதார சீர்குலைவு சூழ்நிலையைப் பார்த்திருக்கிறேன். பேங்க் ஆஃப் இங்கிலாந்திலு

வலசைப் பறவைகளைப் பற்றி அறிய உதவும் ஆய்வு நூல்! - ஏ.சண்முகானந்தம்

படம்
  வலசை செல்லும் பறவைகளின்  வாழ்விடச்சிக்கல்கள் ஏ.சண்முகானந்தம் பாரதி புத்தகாலயம் 160 காடு, உயிர் ஆகிய இயற்கை சார்ந்த மாத இதழ்களை நடத்திய, நடத்தி வரும் ஏ.சண்முகானந்தம் எழுதிய நூல் இது.   நூலில் பல்வேறு பறவைகள், அதன் சரணாலயங்கள், ஏரிகள், சதுப்புநிலங்கள் பற்றிய ஏராளமான தகவல்கள் உள்ளன. பறவைகள் பற்றிய ஆதி முதல் அந்தம் வரையிலான நிறைய தகவல்கள் உள்ளன. நூல்களை இன்னும் அறிவியல் தகவல்களை சேர்த்து மேம்படுத்தியிருக்கலாம் என்பதை  வாசிக்கும் போது யாவரும் உணர முடியும்.  வலசை செல்லும் பறவைகளைப் பற்றிய தகவல்களை ஆராய்ச்சி செய்பவர்களை இந்த நூலை வாங்கிப் படித்தால் நிறைய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். மேலும் தகவல்களை ஆசிரியர் கூறிய இடங்களுக்கு சென்று கூட தெரிந்துகொள்ளலாம்.  வலசை என்றால் என்ன, எதற்காக பறவைகள் வலசை செல்கின்றன என்பதுபோன்ற தகவல்களை சிறப்பாக எழுதியிருக்கிறார். ஏ.சண்முகானந்தம் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளை பிறர் எளிதாக புரிந்துகொள்வது கடினம். பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருபவர், அதற்கான மொழியில் நூலை எழுதியிருக்கிறார். பயப்படவேண்டியதில்லை. அடிப்படையாக என்ன தெரிந்துகொள்ளவேண்டுமோ அதை நாம் தெரிந்துகொண

மரபான நெற்பயிர் ரகங்களை சேகரிக்கும் விவசாயி!

படம்
  கரிமங்கலம் தாலூக்காவைச் சேர்ந்த ஜே பாளையத்தைச் சேர்ந்தவர் அமர்நாத்.  தனது நிலத்தில், நாட்டுரக பயிர்களை பயிர்செய்து வருகிறார். சிறுவயதில் தனது தாத்தா பயிரிட்ட கத்தரி செடிகளை பார்வையிட்ட நினைவு அவருக்கு இப்போதும் இருக்கிறது.  விவசாயத்தை பட்டப்படிப்பில் எடுத்து படித்தவருக்கு, வேலை எளிதாக கிடைக்கவில்லை. சரி இருக்கும் நிலத்தில் பயிர்களை பயிரிடலாம் என்று நினைத்து உழைத்த உழைப்பும் கைகொடுக்கவில்லை. எனவே, நாட்டு ரக பயிர்களைத் தேடி தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களுக்கு சென்றார்.  நான் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று விவசாயம் செய்பவர்களிடம் பேசினேன். அதில் நாட்டு ரக பயிர்கள் பலவும் அழிந்துவிட்டதை அறிந்தேன். ஆனால் அதை நான் ஏற்கவில்லை. அந்த நிலையை மாற்ற விரும்பினேன். நினைத்ததோடு அல்லாமல் அதற்காக உழைக்க விரும்பினார். அப்படித்தான் ஐந்து ஆண்டுகளில் 26 நாட்டு ரகங்களை சேகரித்தார்.  பழங்குடிகள் வாழும் ஊர்களான மோதுர், வத்தல்மலை, சித்தேரி, பெத்தமுகிலாலம் சென்று நாட்டு நெற்பயிர் ரகங்களை சேகரித்திருக்கிறார். இவை அதிக பராமரிப்பு கோராதவை. எளிதாக பூச்சிகளையும், நோய்களையும் சமாளிக்க முடியும் திறன் கொண்

இயற்கை, சூழல் சார்ந்த நூல்கள்- வாசிப்போம் வாங்க!

படம்
  ஐ பாட் எ மௌண்டைன் தாமஸ் ஃபிர்பேங்க் ஷார்ட் புக்ஸ்  1940ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட நூலின் மறுபதிப்பு. கிளாஸிக்கான நூலை, இயற்கை காதலர்களுக்காக புதிய தலைமுறைக்காக பதிப்பித்து இருக்கிறார்கள். ஸ்னோடோனியா என்ற மலைமீது உள்ள பண்ணை ஒன்றை தாமஸ் வாங்குகிறார். இதனால் அவரும், அவர் மனைவியும் சந்திக்கும் நிறைய சிக்கல்களை கூறியிருக்கிறார்.  தி ஸ்லாத் லெமூர்ஸ் சாங்க்ஸ்  அலிசன் ரிச்சர்ட் ஹார்ப்பர் கோலின்ஸ்  லெமூர் பற்றி 50 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருபவர் அலிசன் ரிச்சர்ட். நூலில் காட்டுயிர் வாழ்க்கை, புவியியல், சூழல் இவற்றை உள்ளடக்கிய சமூகம் என நிறைய விஷயங்களைப் பேசுகிறார். மடகாஸ்கர்தான் நூலில் பேசப்படும் முக்கியமான இடம். அதன் ரகசியங்களை அறிய நூலை வாங்கி வாசியுங்கள்.  டீர் மேன் ஜியோப்ராய் டெலோர்ம் லிட்டில் ப்ரௌன் புக் க்ரூப் புகைப்படக்காரர் டெலோர்ம் நார்மண்டியில் உள்ள லூவியர் காட்டுக்கு செல்கிறார். அங்கு சென்று தங்கி மான்களுடன் பழகுகிறார். அதன் வாழ்க்கையைக் கவனிக்கிறார். அதைப்பற்றிய குறிப்புகள், அனுபவங்கள் நூல் முழுவதும் விரவிக்கிடக்கிறது.  வைல்ட் சிட்டி ஃப்ளோரன்ஸ் வில்கின்சன் ஓரியன் பப்ளிசிங் மனிதர

ஆயிரம் மரங்களை வளர்த்த பொள்ளாச்சி அரசு உதவிபெறும் பள்ளி

படம்
  பொள்ளாச்சியில் ரெட்டியாரூர் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. இதில், மாணவர்களை மரக்கன்றுகளை ஊன்ற வைத்து ஆயிரம் மரங்களை வளர்த்துள்ளனர். இவற்றை நட ஊக்கப்படுத்தியவர் விவசாய ஆசிரியர் டி பாலசுப்பிரமணியன்.   இதனை நட்டவர்கள் அனைவருமே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தானே? ஆயிரம் மரங்கள் இப்போது வளர்ந்துள்ளது ஆச்சரியம் என்றாலும் இதற்கான திட்டமிடல் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியிருக்கிறது. இதனை பள்ளி நிர்வாகம் முன்னெடுத்து அருகிலுள்ள கிராமங்களில் விதைகளை பெற்றிருக்கிறது. தனியார் நிறுவனங்களிடமும் நிறைய விதைகளைப் பெற்றிருக்கிறது. விதைகளை முளைக்க வைத்து அவை முளைவிட்டதும் கிராமத்தினருக்கும், அருகிலுள்ள பள்ளிகளுக்கும் இலவசமாக அரசுப்பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது.  பள்ளியில் விளையும் காய்கனிகளை பறித்து சமைத்து சாப்பிட சமையல் அறையும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மதிய உணவு தயாரித்து மாணவர்களுக்கு வழங்குகிறார்கள். இயற்கை விவசாயம் சார்ந்த வல்லுநர்கள், பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். மாணவர்

பவளப்பாறை, பருவ மழைக்காடு பற்றி அறிவோம்!

படம்
  தெரியுமா? பவளப்பாறை கடலின் ஆழ்கடலில் உள்ள முக்கியமான சூழல் அமைப்பு. ’கடலில் அமைந்துள்ள மழைக்காடுகள் ’என சூழலியலாளர்கள் இதனைக் கூறுகிறார்கள். பவளப்பாறைகளைப் பார்க்க பாறைகள் போல தோற்றமளிக்கும். ஆனால் அவை உண்மையில் விலங்குதான். இதன் மேல்பகுதி கால்சியம் கார்பனேட் வேதிப்பொருளால் ஆனது. இதுவே அதன் ஓடுபோல தோற்றமளிக்கிறது.  இதன் அடிப்பரப்பில் நண்டு, ஆமை, மீன் என ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. பவளப்பாறை, எளிதில் அழியக்கூடியவை. கடலில் ஏற்படும் மாசுபாடு இதனை எளிதாக பாதித்து அழிவை உருவாக்குகிறது.  பருவ மழைக்காடு இங்கு, வெப்பமும், ஈரப்பதமும் சரிபாதி அளவில் இருப்பதால், தாவரங்களும்  உயிரினங்களும் அதிகளவில் இங்கு வாழ்கின்றன.  உலகில் வாழும் தாவரம் மற்றும் விலங்கு இனங்களில்  பாதியளவு பருவ மழைக்காடுகளில் காணப்படுகின்றன.  தாவரம், விலங்கு, பூஞ்சை, நுண்ணுயிரிகள் என பல்லுயிர்த்தன்மை கொண்ட இடம் இது. மத்திய தெற்கு அமெரிக்கா, மேற்கு மத்திய ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, நியூகினியா தீவு ஆகியவற்றில் பருவ மழைக்காடுகள் அமைந்துள்ளன.   தகவல் https://climatekids.nasa.gov/10-th

ஆற்றைக் காக்கும் கருப்பு நிற பந்து! - ஆவியாதலைத் தடுக்கும் சிந்தனை

படம்
  தெரியுமா? கருப்பு நிற பந்து வறட்சியான, சூரிய வெப்பம் அதிகம் கொண்ட பகுதிகளில் நீர்நிலைகளை பாதுகாக்கும் தேவை உள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள நீர்நிலைகளில் நீர் ஆவியாதலைக் குறைக்க கருப்பு நிற பந்துகளை பயன்படுத்துகின்றனர். இதற்கு ஷேட் பால்ஸ் (shade balls)என்று பெயர்.  இப்பந்துகள் நீர் ஆவியாதலைக் குறைப்பதோடு, பாசிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது. கூடுதலாக, சூரிய வெப்பத்தால் நீரில் ஏற்படும் பல்வேறு வேதியியல் மாற்றங்களும் குறைகிறது. இதனால் நீரை குடிநீராகவும் பயன்படுத்தமுடியும்.  கருப்பு பந்துகளை பயன்படுத்துவதால், நீர் ஆவியாதலின் அளவை 85 முதல் 90 சதவீதம் வரை குறைக்கலாம். அதேசமயம் பிளாஸ்டிக் பந்துகளை நீரில் மிதக்கவிடுவது, காலப்போக்கில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் என சூழலியலாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.  கருப்புநிற பந்துகள், பாலிமர் பாலிஎத்திலீனால் (polymer polyethylene) என்ற வேதிப்பொருளால் உருவாக்கப்படுகிறது. இவை எத்திலீன் (Ethylene)மூலக்கூறுகளைக் கொண்டவை. இப்பொருட்களைக் கொண்டு பைகள், பாட்டில்கள் உருவாக்கப்படுகின்றன.    தகவல் Super Science Encyclopedia Book pinteres

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பசுமைத் திட்டங்கள்!

படம்
  பசுமை கொஞ்சும்  தமிழ்நாடு ! தமிழ்நாடு அரசு, அடுத்த பத்து ஆண்டுகளில்  265 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளது. இதற்கு, பசுமை தமிழ்நாடு திட்டம் என பெயரிட்டுள்ளனர். இந்த வகையில் காடுகளின் பரப்பை  23 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக அதிகரிக்கவுள்ளனர். கடந்த ஆண்டு 47 லட்சம் மரக்கன்றுகளை மாநிலமெங்கும் நட ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டு, பணிகளைத் தொடங்கினர்.  மண்ணுக்கான மரங்களை அறிந்து, அதன் மரக்கன்றுகளை நடுவதுதான் இதன் சிறப்பம்சம். இதற்கு முந்தைய காலங்களில் வேகமாக வளரும் மரங்களை அரசு தேர்ந்தெடுத்து வந்தது.  அரசு திட்டங்களை வேகமாக அறிவித்தாலும் இதனை செயல்படுத்துவதில் ஏராளமான சவால்கள் உள்ளன. 13,500 ச.கி.மீ. அளவில் 265 கோடி மரக்கன்றுகளை நட்டு அதனை மரங்களாக்க முடியும் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இதில், 4,500 ச.கி.மீ. பரப்பில் அரசு மரக்கன்றுகளை எளிதாக நடமுடியும். மீதியுள்ள பகுதிகள் தனியாருக்கு சொந்தம் என்பதால் திட்டத்தை நிறைவேற்ற அவர்களின் ஒப்புதலும் பங்கேற்பும் தேவை. கூடவே அரசின் பல்வேறு அமைச்சகங்களின் ஆதரவும் தேவைப்படும்.  “மரக்கன்றுகளை நடுவதும், அதனை பராமரித்து வளர்ப்பதும் வேறு வேறான பணிகள். அரசு