இடுகைகள்

கார்பன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காற்று வேதியியலின் தந்தை - ஜான் பாப்டிஸ்டா வான் ஹெல்மான்ட்

படம்
  ஜான் பாப்டிஸ்டா வான் ஹெல்மான்ட் ( Jan Bapista van Helmont   1580 -1644 ) 1580ஆம் ஆண்டு ஸ்பானிய நெதர்லாந்து நாட்டின் (தற்போது பெல்ஜியம்) ப்ரூசெல்ஸ் நகரில் பிறந்தார். லூவெய்ன் நகரில் அமைந்திருந்த கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு படித்தார். 1599ஆம் ஆண்டு படிப்பை நிறைவு செய்தவர், மருத்துவராக பணியாற்றத் தொடங்கினார். ஐரோப்பா முழுவதும் பயணித்து தன் மருத்துவத் திறன்களை மெருகேற்றிக்கொண்டார்.  அக்காலகட்டத்தில் உடலுக்கு ஏற்படும் நோய்களுக்கான மருந்து, தாவரங்களில் இருந்து மட்டுமே பெறப்பட்டது. இதனை ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பாராசெல்சஸ் (Paracelsus)மாற்றினார். இவர், நோய்களுக்கு மருந்தாக வேதிப்பொருட்களைப் பயன்படுத்தலாம் என கூறினார். இதன்படியே செயல்பட்டார். இவரை ஹெல்மான்ட் வழிகாட்டியாகப் பின்பற்றினார்.  ஒயின் தயாரிப்பில் வெளியாகும், வாயு, குடலில் உருவாகும் வாயு ஆகியவற்றை முதன்முதலில் ஹெல்மான்ட்  கண்டறிந்தார். இந்த வாயுக்கள்தான் , மீத்தேன் மற்றும் கார்பன்டை ஆக்சைட். இதனால் ஆராய்ச்சியாளர்கள், இவரை காற்று வேதியியலின் தந்தை என்றும் கூறுகின்றனர். கிரேக்க வார்த்தையான Chaos

சூழல் தொடர்பான அருஞ்சொற்களின் தொகுப்பு !

படம்
  அருஞ்சொல்.... கிளைமேட் சேஞ்ச் (Climate Change) குறிப்பிட்ட காலகட்டத்தில் அளவிடப்படும்  காலநிலை மாற்றம். இதில் வெப்பநிலை, மழைப்பொழிவு, காற்று ஆகியவை உள்ளடங்கும்.   கிளைமேட் ஃபீட்பேக் (Climate Feedback) காலநிலை மாற்றத்தின் விளைவுகளை அதிகரிக்க அல்லது குறைக்க செய்யும் செயல்முறைகள்.  கிளைமேட் லேக் (Climate Lag) காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மெதுவாக நடப்பது. வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கரியமில வாயு, வெப்பமயமாதல் பாதிப்பை மெதுவாக ஏற்படுத்துகிறது. இதற்கு 25 முதல் 50 ஆண்டுகளாகும்.  கிளைமேட் மாடல் (Climate Model) கணித முறைகளைப் பயன்படுத்தி காலநிலை மாற்றங்களைக் கணக்கிட காலநிலை மாதிரி (Climate Model) உதவுகிறது. எ.டு: பருவக்காலங்களில் ஏற்படும் புயல்களை முன்னமே அறிந்து நிலச்சரிவு ஆபத்தை தடுப்பது. கிளைமேட் சென்சிடிவிட்டி (Climate Sensitivity) வளிமண்டலத்தில் கரியமில வாயு குறிப்பிட்ட அளவு அதிகரித்தபிறகு பூமி வெப்பமாக உள்ளதா அல்லது குளிர்ந்துள்ளதா என அளவிடுவது.  https://polarpedia.eu/en/climate-lag/ https://www.climate.gov/maps-data/climate-data-primer/predicting-climate/climate-models

கடலின் தனித்துவம் அறிவோம்!

படம்
  கடலின் தனித்துவம்! கடலில் சூழல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது பற்றி உலக பொருளாதார கூட்டமைப்பு, தி ஓசன் எகானமி  2030 என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள சில அம்சங்கள் இதோ.. நிலப்பரப்பை விட கடற்பரப்பு பெரியது. சூழல் அமைப்பும், உயிரினங்களும் வேறுபட்டவை. கடல் பரப்பில் உள்ள எல்லைகளும் நாடுகளுக்கு நாடு மாறுபடும்.  கடலில் உள்ள நீரில்,  ஒளிபுகும் தன்மை குறைவாகவே இருக்கும். கடல்படுகைகளை செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பதும் பல்வேறு சவால்களைக் கொண்டது.  கடல் பரப்பில் சூழல் பாதுகாப்பு திட்டங்களை திட்டமிடுவது, அதனை வரைபடமாக்குவது, மேலாண்மை செய்வது கடினம்.  கடல் நீரில் மாசுபாடு எளிதாக பிற இடங்களுக்கு பரவும். வேறு இனங்களைச் சேர்ந்த தாவர இனங்கள் இதன் வழியாக எளிதாக பரவ வாய்ப்புள்ளது.  கடல்வாழ் உயிரினங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பு சவால்களைக் கொண்டது.  சட்டவிரோதமான செயல்பாடுகளை தடுப்பது கடினம். கடல் பரப்புக்கு உரிமை, பொறுப்பு என வரையறுப்பது சிக்கலானது.  புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி வந்தால், மனிதர்கள் கடலில் வாழ்வது சாத்தியமாகலாம்.  New scientist  23 apr 2022 Image - surfertoday

பயன்பாடு இல்லாத கைவிடப்பட்ட சுரங்கத்திலிருந்து மின்சாரம்!

படம்
  பயன்பாடற்ற சுரங்கத்திலிருந்து மின்சாரம்! பிரான்சில் உள்ள நகரம், ஏவியன். இங்கு முன்னர் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது பயன்பாடற்ற அதிலிருந்து வெளியாகும் மீத்தேன் வாயுவை சேகரித்து மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறார்கள். 50 அடி ஆழத்தில் குழாய்களைப் பதித்து அதன் மூலம் மீத்தேன் வாயுவை சேகரித்து பயன்படுத்துகிறார்கள்.  பொதுவாக பயன்பாடற்ற நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெளியாகும். இதனைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் சிலர் முயன்று வருகிறார்கள். மீத்தேனிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது புதிய முயற்சி அல்ல. 1950ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்தில் பயன்பாடற்ற சுரங்கங்களிலிருந்து மீத்தேன் வாயுவிலிருந்து மின்சாரத்தை பெற்று வருகிறார்கள். ஜெர்மனியில் இப்படி பெறும் மின்சாரம் மூலம் 1,50,000 வீடுகள் பயன்பெறுகின்றன.  சுரங்கத்தில் வெளியாகும் மீத்தேனை தடுப்பது கடினம். இந்த வாயு, நீருடன் சேர்ந்தால் நச்சுத்தன்மையை உருவாக்கும். வாயுவை அப்படியே வளிமண்டலத்தில் சேருமாறு விட்டால், பசுமை இல்ல வாயுக்களின் அளவு கூடும். பிரான்ஸில் ஃபிராங்கைஸ் டி எனர்ஜி என்ற அமைப்பு, மீத்தேனை சேகர

சூழல் சொற்களுக்கான அர்த்தம் அறிவோம்!

படம்
  அருஞ்சொல் Albedo சூரியனின் கதிர்வீச்சு பொருளின் மீது அல்லது பரப்பின் மீது எந்தளவு படுகிறது என்பதைக் குறிக்கும் அளவு. வானியலில் அதிகம் பயன்படுகிறது.  Alternative Energy சூரியன், காற்று, நீர் ஆகிய இயற்கை வள ஆதாரங்களிலிருந்து பெறும் ஆற்றல் Anthropogenic மனிதர்களின் செயல்பாட்டால் இயற்கையில் ஏற்படும் மாறுதல் அல்லது பாதிப்பு. பொதுவாக, மனிதர்களால் உருவாகும் பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.  Atmosphere பூமியின் வளிமண்டலம். காற்றிலுள்ள நைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைட் உள்ளிட்ட வாயுக்களைக் குறிப்பிடுகிறது.  Atmospheric Lifetime வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களின் ஆயுட்காலத்தைக் குறிக்கிறது. பசுமை இல்ல வாயுக்கள் ஒருமுறை வெளியானால், வளிமண்டலத்தில் பல்லாண்டுகள் இயக்கத்தில் இருக்கும். எடு. கார்பன் டை ஆக்சைட்  அப்சார்ப்ஷன் (Absorption) உறிஞ்சுதல். ஒரு பொருள் இன்னொரு பொருளை தனக்குள் ஈர்த்துக்கொள்வது. எ.டு. கரிம எரிபொருட்களால் உருவாகும் நைட்ரஜன் டையாக்சைட், சூரிய ஒளியில் நீலநிற ஒளியை ஈர்ப்பது. ஆசிட் (Acid) பிஹெச்  அளவுகோலில் எண் 7க்கும் குறைவாக உள்ள பொருள். நீ

இயற்கைச் சூழலைக் காக்க வேகமாக உருவாக்கப்படும் மியாவகி காடுகள்!

படம்
  நகரங்களில் பெருகும் மியாவகி காடுகள்! பெருநகரங்களில் இயற்கையான காடுகளை உருவாக்க  அதிக நிலப்பரப்பு தேவை. இப்பிரச்னையைத் தீர்க்க மியாவகி காடுகள் உதவுகின்றன. 1970ஆம் ஆண்டு ஜப்பானிய உயிரியலாளர் அகிரா மியாவகி(Akira Miyawaki), மரக்கன்றுகள், புற்கள், புதர் தாவரங்களை இணைத்து வளர்க்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.  மியாவகி முறையில், தாவரங்கள் நெருக்கமாக நடப்படுவதால், வெளிச்சத்திற்கு போட்டிபோட்டு வளர்கின்றன. இதன்மூலம்,பெருநகரங்களில் சிறு காடுகளை வேகமாக உருவாக்கலாம். அகிரா, தன் வாழ்நாளில்  பல்வேறு நாடுகளில் 1,500க்கும் மேற்பட்ட சிறு காடுகளை உருவாக்கியுள்ளார்.  இந்தியாவில், ஹைதராபாத் நகரில் பிரமாண்டமாக 10 ஏக்கரில் மியாவகி காடு உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெருநகர மாநகராட்சி 1,000 மியாவகி காடுகளை உருவாக்க திட்டங்களை உருவாக்கி வருகிறது. இதில், மண்ணுக்குப் பொருத்தமான தாவரங்கள், மரக்கன்றுகளைத் தேர்ந்தெடுப்பதே இலக்காக உள்ளது.  பிற முறைகளை விட மியாவகி முறையில் தாவரங்கள் வேகமாக வளர்கின்றன. இதை யாரும் எளிதாக ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம் என்கிறது அஃபாரஸ்ட் சூழல் அமைப்பு. இந்த அமைப்பின் நிறுவனரான சு

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கார்பனை மரங்களால் உட்கிரகிக்க முடியாது!

படம்
  காடுகளால் உள்ளிழுக்கப்படும் கார்பன் அளவு! உலக நாடுகள் அனைத்துமே கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. தொழில்துறை சார்ந்த கார்பன் வெளியீட்டைக் குறைப்பதோடு, மாசடைந்த காற்றிலிருந்து பசுமை இல்ல வாயுக்களை தனியாக பிரிப்பதும் முக்கியமானது. இதற்காக மரங்கள் உதவுகின்றன. ஒளிச்சேர்கை செயல்பாடு மூலமாக தாவரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைட்டை உள்ளிழுக்கின்றன. ஒளிச்சேர்க்கை செயல்பாடு வழியாக,கார்பன் எந்தளவு உள்ளிழுக்கப்படுகிறது, அதனால் கார்பன் அளவு கட்டுப்படுத்தப்படுகிறதா என்பது பற்றிய விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.  சூழலில் கார்பன் டை ஆக்சைட் நிரம்பியிருப்பது தாவரங்களுக்கு முக்கியம். அப்போதுதான், அதன் ஒளிச்சேர்க்கை நடைபெற முடியும். மனிதர்களின் செயல்பாட்டால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைட் அதிகரிப்பதும், அதனை தாவரங்கள் அதிகளவு உள்ளிழுக்கின்றன. இதற்கு, கார்பன் ஃபெர்டிலைசேஷன் (Carbon Fertilization)என்று பெயர்.  வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைட் அளவு அதிகரிப்பது, தாவரத்தின் வளர்ச்சி வேகத்தை பாதிக்கிறது. வளர்ச்சி காலம் அதிகரிப்பதால், வளிமண்டலத்தில் க

சூழல் பற்றிய முக்கியமான ஆங்கில வார்த்தைகள்!

படம்
  தெரியுமா? Net Zero கார்பன் உமிழ்வை முற்றிலும் ஜீரோவாக்கும் திட்டத்தைப் பற்றி கூறும் வார்த்தை. கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் குறிப்பிட்ட ஆண்டை இலக்காக வைத்துள்ளன. நடைமுறையில், கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறோம் என நிறுவனங்களும் அரசுகளும் கூறுகின்றன.  Sustainability எதிர்கால தலைமுறையினர் தங்களது தேவைகளை சமரசம் இல்லாமல் பெறுவது என ஐ.நா அமைப்பு, இந்த வார்த்தைக்கு விளக்கம் அளிக்கிறது. சூழலுக்கு இசைவான  முறையில் நாம் வாழும் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவேண்டியது அவசியம்.  Mitigation and adaptation பசுமை இல்ல வாயுக்களை குறைக்கும் செயல்கள் என்பது இதற்கான பொருள்.  நிலக்கரியிலிருந்து காற்று, சூரிய ஆற்றல் புதுப்பிக்கும் வழிக்கு மாறுவதை உதாரணமாகக் கூறலாம்.  அடாப்டேஷன் என்ற வார்த்தை, வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகளை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பதைக் கூறுகிறது. சூழலுக்கு ஏற்ப சாலைகளை, வீடுகளை அமைப்பதை இதற்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.   Nature based solutions மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கான தீர்வுகளை இயற்கையிலிருந்து பெறலாம்.  கார்பனை உறிஞ்சு

பூமி மீது மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு!

படம்
  பூமி மீது மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கம்! உலகம் தோன்றியது முதல் பல்வேறு சூழல் மாற்றங்களை எதிர்கொண்டு வந்திருக்கிறது. வளமான நிலம் வளமிழந்து பாலையாவதும், பாலையான மண் மெல்ல வளம் பெறுவதும் இயற்கையின் சுழற்சிதான். இப்படி மாறுவதில் மனிதர்களின் பங்களிப்பு என்ன என்பதை புவியியல் வல்லுநர்கள் கண்டறிய முயன்று  வருகின்றனர். இதற்கு ஆந்த்ரோபோசீன் (Anthropocene) என்று பெயர்.  நிலத்தில் மனிதர்கள் ஏற்படுத்திய தாக்கத்தை அளவிடுவதன் மூலம் வெப்பமயமாதல், மாசுபாடு, வேதிப்பொருட்களின் பாதிப்பு, அணு ஆற்றல் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை அறியலாம்.  கடந்த 11,650 ஆண்டுகளாக பூமியில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு,  மனிதர்கள் காரணம் என புவியியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.  இதனை சில மானுடவியல் ஆய்வாளர்கள் மறுக்கிறார்கள். அணு ஆயுத வெடிப்பு,  நிலக்கரியை எரிப்பது, பிளாஸ்டிக் துகள்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களின் தாக்கத்தை அளவிடுவதே சரி என்கிறார்கள். இவ்வகையில்  1950ஆம் ஆண்டிலிருந்து மனிதர்களின் தாக்கத்தை அளவிடலாம் என்கிறார்கள். வாதங்களை நிரூபிக்க, மனிதர்கள் தாக்கம் கொண்ட  இடங்களைக் கண்டுபிடிப்பது அவசியம். கடந்த 2021ஆ

டிவி பார்ப்பதால் கார்பன் அளவு அதிகரிக்குமா?

படம்
பதில் சொல்லுங்க ப்ரோ? அருங்காட்சியகங்களில் ஃபிளாஷ் போட்டு போட்டோ எடுப்பதை எதற்கு தடை செய்திருக்கிறார்கள்? இந்தியாவில் எப்படியோ, வெளிநாடுகளில் ஃபிளாஷ் போட்டு புகைப்படம் எடுக்க கூடாது என்பதை உறுதியான விதியாக வைத்திருக்கிறார்கள். இதன்மூலம்,  அருங்காட்சியகங்களிலுள்ள தொன்மையான ஓவியங்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஒவியங்களிலுள்ள வண்ணங்கள் வெளிச்சத்துடன் வினைபுரியும் வேதிப்பொருட்களை கொண்டுள்ளன. இவை ஃபிளாஷில் வரும் ஒளியோடு சேர்ந்து வினைபுரிவதால் ஓவியம் அழிய வாய்ப்புள்ளது. எனவே, புகைப்படம் எடுக்காதீர்கள். அதற்கு பதிலாக ஓவியம் அச்சிடப்பட்ட அஞ்சல் அட்டை, புகைப்படங்களை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார்கள்.  டிவி பார்ப்பதால் கார்பன் அளவு அதிகமாகுமா? இன்று டிவி மட்டுமல்லாது இணையம் கூட வேகமாக ஸ்ட்ரீமிங் சேவைகளை தந்து வருகிறது. சன்டிவி, விஜய், கலர்ஸ், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றை ப் பார்த்தால் ஒரு மணிநேரத்திற்கு 56 கிராம் கார்பன் உருவாகிறது என பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்படியே தினசரி பார்த்தால் ஆண்டுக்கு 41 கி.கி அளவுக்கு கார்பன் வெளியாகிறது என கொள்ளலாம்.  சயின்ஸ் போகஸ்  

மியாவாகி காடுகளை நகரங்களை பசுமையாக்குமா?

படம்
  மியாவாகி காடுகளை பல்வேறு மாநிலங்களிலும் சோதனை செய்து பார்த்து வருகிறார்கள். சாதாரண மரங்களை விட 30 மடங்கு கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சுகிறது.  ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 30 ஆயிரம் விதைகளை ஊன்றி மியாவாக முறையில் மரக்கன்றுகளை வளர்க்க முடியும்.  சிறிய நிலப்பரப்பில் அடுக்கடுக்காக நிலப்பரப்பு சார்ந்த தாவரங்களை வளர்ப்பதுதான் மியாவாகி காடுகள் வளர்ப்பு முறை.  இந்த முறையில் இந்தியாவில் 24.3 சதவீதமும், சீனாவில் 23.4 சதவீதமும் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளன. ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாகி என்பவர், இந்த காடு வளர்ப்பு முறையை உருவாக்கினார்.  குறிப்பிட்ட ஏரியாவை தேர்ந்தெடுக்க வேண்டும். எங்கு விதைகளை ஊன்ற வேண்டுமோ அந்த மண்ணின் தரம், கார்பன் அளவு, மண்ணிலுள்ள பிஹெச் அளவு ஆகியவற்றை கணக்கிடுகிறார்கள்.  மனிதர்களின் இடையூறின்றி தாவரங்கள் வளருமா என்று பார்த்துத்தான் மியாவாகி காடுகளை வளர்க்க முடியும்.  பாகிஸ்தான், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மியாவாகி காடு வளர்ப்பு முறையை உடனே எடுத்துக்கொண்டு செயல்படுத்தியுள்ளனர்.  சத்தீஸ்கர், குஜராத், கேரளா, தெலங்கானா ஆகிய இந்திய மாநிலங்களில் இந்த முறையை முயன்றுள்ளனர்

கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் பல்வேறு நிறுவனங்களின் முயற்சி! - உணவு, ஆடை ஆகியவற்றில் பரவும் புதிய பாணி

படம்
                  சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்தும் உலகம் ! கடந்த மார்ச்சில் ஆங்கிலேயரான ஸ்டெல்லா மெக்டார்டினி தன்னுடைய உடையில் மைலோ காளான்களை பயன்படுத்தினார் . இதுதான் உலகில் முதல் சூழலுக்கு உகந்த பொருள் என்று கூறப்படுகிறது . ஆய்வகத்தில் வளர்க்கப்படும் மைசீலியம் என்ற பொருளைப் பயன்படுத்தி தோலுக்கு பதிலாக இதனை உருவாக்கியுள்ளனர் . எதற்கு இந்த முயற்சி , சூழலில் ஏற்படும் மாசுபாடுகளை குறைக்கும் முயற்சிதான் . பெரும் ஃபேஷன் பிராண்டுகளும் இந்த முயற்சியில் இணைந்துள்ளன . பிரெட்டில் பயன்படுத்தும் சீஸைக்கூட பாலிலிருந்து தயாரிக்காமல் அதனை தாவர புரதம் சார்ந்து உருவாக்கி பயன்படுத்தினால் கார்பன் வெளியீடு குறையும் என கண்டுபிடிப்பாளர்கள் மூலையில் உட்கார்ந்து யோசித்து செயல்படுத்தி வருகிறார்கள் . விலை சற்று அதிகமாக இருந்தாலும் சூழலுக்கு அதிக மாசுபாடு ஏற்படுத்தாத பொருள் என்பதில் பெருமை கொண்டவர்களாக இருக்கிறார்கள் . இந்தியாவில் இப்படி சூழலுக்கு உகந்த இறைச்சியை தயாரிக்கும் பல்வேறு பிராண்டுகள் உருவாகியுள்ளன . எவால்வ்டு புட்ஸ் , வெஜ்ஜி சாம்ப் , குட் டாட் , வெஸ்லே , வெஜி

வணிகரீதியான மின்விளக்குகள் கடந்து வந்த பாதை! - இதில் பங்களித்த முக்கியமான அறிவியலாளர்கள்

படம்
              வணிக ரீதியான மின் விளக்குகள் சர் ஹம்பிரி டேவி 1802 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அறிவியலாளர் டேவி , பிளாட்டினம் இழை மீது தனது பேட்டரியைப் பயன்படுத்தினார் . அவரது சோதனை பயன் கொடுத்தது . பின்னாளில் இந்த முறை நல்ல பயன் கொடுத்தது என்றால் அச்சமயம் பிளாட்டினம் பெரியளவு ஒளிரவில்லை . ஆனாலும் பின்னாளில் இந்த முறை மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது . வாரன் டி லா ரூ 1840 ஆம் ஆண்டு வேதியியலாளரும் , வானியலாளருமான ரூ , பிளாட்டினம் காயில் பொருத்தப்பட்ட வேக்குவம் குழாயில் மின்சாரத்தை செலுத்தினார் . இன்று நாம் பயன்படுத்தி வரும் மின் விளக்குகளுக்கான அடிப்படை இதுதான் . ஆனால் இதற்கான செலவுதான் கூடுதல் . எனவே மக்களிடையே புகழ்பெறவில்லை . ஜீன் ராபர்ட் ஹூடின் 1852 ஆம் ஆண்டு ஹூடின் தனது எஸ்டேட்டில் மின் விளக்குகளை வெளிப்படையா ஒளிர வைத்தார் . ஆனால் இந்த மின்விளக்குக்கான முறையான தொழிற்சாலை , விலைகுறைந்த பல்புகள் என அவர் திட்டமிடவில்லை . எனவே வணிக ரீதியான பல்புளள் விற்பனைக்கு வரவில்லை . ஜோசப் ஸ்வான் பிரிட்டிஷ் இயற்பியலாளர் சூழலுக்கு உகந்த பல்புகளை கண்ட

வைரம் ஏ டூ இசட் தகவல்களை அறியலாம் வாங்க!

படம்
  வைரம் ஏ டூ இசட்! கோகினூர் வைரம் இந்தியாவின் பெருமைக்குரிய அடையாளம். தங்கம் மட்டுமல்ல வைரத்திற்கும் இந்தியா புகழ்பெற்றது என உலகம் அறிந்தது பின்னர்தான். வைரத்தைக் குறிக்கும் ஆங்கிலச்சொல்லான டைமண்ட் என்பது கிரேக்க வார்த்தையான அடமாவோவிலிருந்து(Adamao) உருவானது. இதன் பொருள், வலிமையானது.  இது ஒன்றும் புதிய விஷயமல்ல. வைரம் என்பது கடினமானது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது மிகப்பழமையானது. வைரங்கள் பிரித்தெடுக்கப்படும் பாறைகளின் வயது 1600 மில்லியனாகவும், வைரங்களின் வயது 3.3 பில்லியன் ஆண்டுகள் ஆகவும் உள்ளது. கடுமையான வெப்பநிலை மற்றும் அழுத்தம் காரணமாக வைரங்கள் உருவாகின்றன. இப்படிக் கிடைத்த வைரங்களில் சில நம் சூரியமண்டலத்தைவிட காலத்தால் முந்தையவை என்பது ஆச்சரியம்தானே! கார்பன் அழகு! வைரத்தின் உறுதியான கட்டுமானத்திற்கு கார்பன் காரணம் என்பதை அறிந்திருப்பீர்கள். நியூட்ரலான கார்பன் அணுவில், ஆறு புரோட்டான்கள், ஆறு நியூட்ரான்கள் இதன் அணுக்கருவில் உள்ளன. இதற்கு பதிலீடான எண்ணிக்கையில் எலக்ட்ரான்களும் உள்ளன.  இதிலுள்ள எலக்ட்ரான் கட்டமைப்பு 1s22s22p2 என்று குறிப்பிடுகின்றனர். கார்பன் அணுக்கள் க்யூப

சிவப்பு இறைச்சி இதய நோய்களை அதிகரிக்கிறது! - பேராசிரியர் வால்டர் சி வில்லெட்

படம்
                  வால்டர் சி வில்லெட் நோயியல் துறை பேராசிரியர் இறைச்சி சாப்பிடுவது பற்றி ஈட் லான்செட் ஆய்வு வெளியாகியுள்ளது . அது எந்த வகையில் உலகிற்கு ஆபத்தானது ? 2050 இல் உலக மக்கள் தொகை பத்து பில்லியனாக உயரவிருக்கிறது . நாம் தற்போது சாப்பிடும் அளவுக்கு இறைச்சியை உணவாக எடுத்துக்கொண்டால் , காடுகள் நிறைய அழிக்கப்படும் விலங்குகளுக்கான உணவுக்காக நிறைய தொழில்துறை நிறுவனங்கள் உருவாக்கப்படும் ஆபத்து உள்ளது . பசுமை இல்ல வாயுக்களும் அதிகரிப்பதால் பருவச்சூழல் மாறுபாடுகளும் ஏற்படும் . நாம் இறைச்சியை விட்டு தானியங்கள் , பருப்புகள் , காய்கறிகளை சாப்பிடுவது இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத அணுகுமுறை . மக்கள் தங்கள் உடல்நலனுக்கு பொருத்தமான உணவுமுறையை தேர்ந்தெடுத்துக்கொள்வது அவசியம் . இதற்கு நாங்கள் காய்கறி சார்ந்த உணவுமுறையை மக்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என பரிந்துரைக்கிறோம் .    காய்கறிகள் சார்ந்த உணவு எப்படி உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் போதுமானவையாகும் ? நீங்கள் உங்கள் உணவுகளை விலங்குகளுக்கு கொடுத்துவிட்டு பின்னர் அவற்றை உணவாக கொள்வதை விட பயனளிக்க கூடியதுதா

உலகில் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவது கார்பன் அளவல்ல, மக்களின் பெருக்கம்தான்! - உடைத்துப் பேசிய ஆஸ்திரேலிய சூழலியலாளர்

படம்
            மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது இன்றைய அவசர தேவை ! கார்பன் வெளியீடு , வெப்பமயமாதல் ஆகிய பிரச்னைகளைவிட மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது அவசிய தேவை என ஆஸ்திரேலிய சூழலியலாளர் பாப் ப்ரௌன் கூறியுள்ளார் . 2100 ஆம் ஆண்டுக்குள் அனைத்து நாடுகளும் மக்கள்தொகை அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய சூழலியலாளர் பாப் ப்ரௌன் கூறியுள்ளார் . பல சூழலியலாளர்கள் இதுபற்றி பேசாமல் இருக்கும்போது , அதிரடியாக வெளிப்பட்டுள்ள இக்கருத்து தீர்க்கமாக யோசிக்கவேண்டியது ஆகும் . ‘’ இந்த உலகம் மனிதர்களுக்கு கொடுத்துள்ள விஷயங்கள் தீர்ந்துவருகின்றன . அதனால்தான் தினசரி நாம் எழும்போது பல்வேறு விலங்குகளின் அழிவு , காடுகள் சுருங்கி வருவது , மீன்கள் குறைவது ஆகிய செய்திகளை கேட்கிறோம்’’ என்று நாளிதழில் பேசியிருந்தார் பாப் ப்ரௌன் . பெருந்தொற்றுகளால் மக்கள் இறப்பது அதிகரித்தாலும் , உலகளவில் பிறப்பு சதவீதத்தோடு ஒப்பிட்டால் அது சிறிய அளவுதான் . 1900 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை நூறு கோடிக்கும் சற்றே அதிகம் . ஆனால் 2023 இல் இந்த எண்ணிக்கை 800 கோடியாக அதிகரிக்கும் . 2

கார்பன் இல்லாத உலகை அணு உலைகள் மூலம் உருவாக்கலாம்!

படம்
cc  எதிர்காலம் இப்படித்தான்!   கார்பன் இல்லாத உலகை அணு உலைகள் மூலம் உருவாக்கலாம். பலருக்கும் இப்படி ஒரு தலைப்பைக் கேட்டதும் எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழும். ஆனால் உண்மையில் கார்பனைக் குறைக்கும் திட்டத்தில் அணுஉலைகள் நிறைய உதவ முடியும். பொதுவாக ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பார்த்தால் பிரிட்டன், அ்மெரிக்காவிற்கு எதிராக ரஷ்யா அணு உலை திட்டங்களை செய்துகொண்டிருக்கும். அணுஉலைகள் என்பதன் மறைவில் புளுட்டோனியம், யுரேனியம் ஆகியவற்றை செறிவூட்டி அணுகுண்டுகளை தயாரிக்கிறார்கள் என்று கூறுவார்கள். ஆனால் இந்த கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ஆணால் மேற்சொன்னவற்றுக்கு மாற்றாக தோரியத்தை ரியாக்டர்களாக பயன்படுத்தும் போக்கு மெல்ல தொடங்கி வருகிறது. ஏன், இந்தியாவில் கூட இந்த செயல்பாடு 2018ஆம் ஆண்டு தொடங்கியது. சூரியனில் எப்படி வெப்பம் உருவாகிறது? அணுக்கள் பிளவுபடுவதனால்தான். அந்த கான்செப்ட்தான் தோரியம் ரியாக்டர்களிடம் நடைபெற வைக்க முயல்கிறார்கள். இதற்கான முயற்சி அமெரிக்காவின் கலிபோர்னியாவிலும், பிரான்சிலும் நடைபெற்று வருகிறது. இந்த முயற்சி வெற்றிபெற்றால் மாசு இல்லாத ஆற்றல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மிதக்கும் சோலார்

இனி தொழில்நுட்பத்தை பொருளாதாரத்தை இ வாகனங்களே தீர்மானிக்கும்!

உதய் சிங் மேத்தா, கூடுதல் இயக்குநர், கட்ஸ் நீங்கள் கூறும் சூழலுக்கு உகந்த மாறுதல்கள், போக்குவரத்து வாகனங்களால் வேலையிழப்பு ஏற்படுமே? வேலையிழப்பு மட்டுமே நேராது. புதிய வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். அதுபற்றியும் நீங்கள் யோசிக்கவேண்டும். எலக்ட்ரிக் வாகனங்களின் கொள்கையிலேயே இதில் உருவாகும் வேலைவாய்ப்புகளையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். புதிய எலக்ட்ரிக் வாகனங்கள், அதற்கான உதிரிபாகங்கள், பேட்டரிகள், பழைய வண்டிகள் என இச்சந்தையில் மாறுதல்களை ஏற்படுத்தும் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. குறைந்த கார்பனை வெளியிடுவது நகர்ப்புற அளவிலேனும் சாத்தியமாகுமா? நகர்ப்புறங்களுக்கும் கிராம ப்புறங்களுக்கும் போக்குவரத்து வசதி அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் உண்டு. உள்ளூர் அளவில் வாகனங்களை தயாரிப்பது மட்டுமே இதற்கான தேவையை ஈடுகட்டும். மாநில போக்குவரத்துத்துறை, மண்டலரீதியான போக்குவரத்துத்துறை அலுவலகம், போக்குவரத்து காவல்துறை, நகராட்சி ஆகியோரின் ஆதரவின்றி வாகனங்களை பயன்படுத்துவது கடினம். இதில் அதிர்ஷ்டவசமாக அரசு இ - வாகனங்களை ஆதரிக்கிறது. இதனால் , கோல்கட்டா போன்ற மாநிலத்தில் இ வாகனங்கள் அதிகரித்து வ

இயற்கையில் சிதையும் பிளாஸ்டிக்கு மதிப்பு கிடையாதா?

படம்
giphy உலக நாடுகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் கடுமையான சிக்கலில் சிக்கி வருகின்றனர். காரணம் என்ன? வாங்க பார்ப்போம். பிளாஸ்டிக் என்பது என்ன? ஏராளமான கார்பன் மூலக்கூறுகள் இணைந்ததுதான். அதில் பாலிதீன், எத்திலீன் ஆகிய மூலக்கூறுகளின் இணைப்புதான் பிளாஸ்டிக் பொருட்களை உறுதியானதாகவும், வலுவாகவும், நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும் மாற்றுகிறது. ஆனால் இந்த இணைப்பை பாக்டீரியா உண்ணும்படியான தன்மையில் மாற்றினால் என்னாகும்? அரிசியும் அதில் உள்ள ஸ்டார்ச்சும் ஒன்றுக்கொன்று தொடர்பானது. அவற்றை நீங்கள் பிரிக்கலாம். ஆனால் அதன் தன்மை மாறும் அல்லவா? அதைத்தான் இங்கு கூறவருகிறோம். பாலிமர் எனும் பிளாஸ்டிக்குக்கான மூலப்பொருட்கள் பெட்ரோல், டீசல் கிடைக்கும் கச்சா எண்ணெய்தான். பிளாஸ்டிக் பொருட்களின் வெற்றி அவை வெப்பம், ஈரப்பதம், வறட்சியான சூழ்நிலை ஆகியவற்றிலும் பொருட்களை கெடாமல் வைத்திருப்பதுதான். அதுவும் பிளாஸ்டிக் பிற பொருட்களை விட சல்லீசு ரேட்டில் கிடைக்கும். ஆனால் இப்போது பாக்டீரியா உண்ணும்படியான பொருட்களைக் கொண்டு  பிள