இடுகைகள்

குழந்தை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெற்றோர்களின் தவறான வளர்ப்பால் சிலுவை சுமக்கும் இரட்டையர்கள்! இரட்டா - ஜோஜூ ஜார்ஜ்

படம்
  இரட்டா -ஜோஜூ ஜார்ஜ், அஞ்சலி இரட்டா ஜோஜூ ஜார்ஜ் இடுக்கி மாவட்டத்திலுள்ள வாகாமன் காவல்நிலையம். அங்கு, பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொடுத்து அதை ஒப்படைக்க விழா ஒன்றை நடத்துகிறார்கள். வனத்துறை அமைச்சர் வருவதாக இருக்கிறது. அந்த நேரத்தில் காவல்நிலையத்தின் உள்ளே ஒரு கொலை நடக்கிறது. அதை செய்தவர்கள் என அங்கு நிற்கும் மூன்று போலீஸ்கார்களைப் பிடிக்கிறார்கள். சந்தேகப்படுகிறார்கள். உண்மையில் யார் குற்றவாளி என கண்டறிவதே படம். இறந்துபோனவரான வினோத், வாகாமனில் உதவி ஆய்வாளர். அவருக்கு சகோதரரான பிரமோத், அதே காவல்துறையில் டிஎஸ்பியாக இருக்கிறார். இறந்தவரான வினோத், கொலையை விசாரிக்கும் பிரமோத் இருவருமே இரட்டையர்கள். ஆனால், 17 ஆண்டுகளுக்கு மேலாக துவேஷமாக வன்மத்தோடு வாழ்கிறார்கள். வினோத் கொல்லப்பட என்ன காரணம் என்பதை எஸ்பி விசாரிக்க, மூன்று போலீஸ்காரர்களின் வாக்குமூலம் வழியாக கதை நகர்கிறது. இறந்துபோன வினோத் பற்றிய காட்சிகள் படத்தில் அதிகம். அவர், மனதில் சகோதரர் பிரமோத் பற்றிய ஒரு தீராத கோபம் இருந்துகொண்டே இருக்கிறது. அதை காவல்நிலையத்தில் அனைவரும் அறிந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில், விசாரணையில் பிரமோத்தைக் கூட

இருளர் குழந்தைகளை படிக்க வைக்க அரும்பாடுபடும் ஆசிரியர்!

படம்
  கிருஷ்ணகிரியிலிருந்து அறுபது கிலோமீட்டர்களைக் கடந்தால் கேளமங்களம் கிராமத்தை அடையலாம்.இங்கு, மலை மீது அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்பது பிள்ளைகள் படிக்கிறார்கள். இங்கு ஆசிரியராக இருந்தவர், அதிக தூரம் பயணித்து வந்து மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதை சித்திரவதையாக நினைத்து பணிமாறுதல் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். இதனால், ஓராசிரியர் பள்ளியாக செயல்பட்ட தொடக்கப்பள்ளியை அப்படியே விட்டுவிட முடியாது அல்லவா? அப்படித்தான் ஓசூரிலிருந்து டி ஜான்சன் என்ற ஆசிரியர் இங்கு மாறுதல் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஆசிரியராக பொறுப்பேற்றவர், இன்றுவரை அங்கிருந்து கிளம்புவதற்கான வழியைத் தேடாதது ஆச்சரியம். பள்ளியில் படிக்கும் இருளர் குழந்தைகளுக்கு கல்வியை சிறப்பாக சொல்லித் தரவே முயன்றார். ஜான்சன், ஓசூரைச் சேர்ந்தவர். அங்கிருந்து இரு நாட்களுக்கு சோறு கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருகிறார். ஒருமுறை வந்துவிட்டால், பிறகு அந்த வாரம் முழுக்க ஊருக்கு செல்லமாட்டார். அங்கேயே தங்கி பாடம் கற்றுக்கொடுத்துவிட்டு வகுப்பறையில் தங்கிக் கொள்கிறார். பிறகு, வார விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று வருகிறார்.

பொது விவகாரங்களில் பிரபலங்களின் கருத்து!

படம்
  வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குற்றச்செயல்களை செய்த இளையோர் ஆகியோரைப் பற்றிய செய்திகளை எழுதும்போது கவனம் தேவை. சிறுவர்களைப் பற்றிய செய்தியை எழுதுகிறீர்கள் என்றால் முறையாக பெற்றோர், ஆசிரியர், சட்டரீதியான பாதுகாவலர் ஆகியோரிடம் அனுமதி பெற்று புகைப்படங்களை எடுத்து பிரசுரிக்கலாம். சில குற்ற வழக்குகளில் இளையோர் தொடர்பு இருந்தால் அதில் நீதிமன்றத் தலையீடுகள் இருக்கலாம். எனவே, செய்திக்காக அவர்களின் புகைப்படங்களை எடுத்து பிரசுரிக்க கூடாது. அப்படி பிரசுரம் செய்தால், தொடர்புடைய இளையோருக்கு பாதிப்பு நேரிடலாம். எனவே, இந்த விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். சினிமா பிரபலங்களை, அவர்களின் கருத்துகளை   வெளியிட்டு சம்பாதிக்கும் நிறைய வார, மாத இதழ்கள் உண்டு. இந்த வகையில்   செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு அடையாளமே குறிப்பிட்ட பிரபலங்களை தேடிப்பிடித்து பேசியதால் கிடைத்த புகழ்தான். எனவே, இதுபற்றிய செய்தியில்   ஜாக்கிரதை தேவை.   பிரபலங்களைப் பற்றிய தொழில் சார்ந்த செய்திகளால் இதழ் வளரலாம். அதேசமயம் பிரபலங்களின் குடும்பம் பற்றி எழுதும்போது, கவனமாக இருப்பது நல்லது. பொது விவகாரங்

திட்டமிடாமலேயே குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் சைக்கோபாத்கள் - காரணம் என்ன?

படம்
    சைக்கோபாத்கள் எப்படி உருவாகிறர்கள் என்று பார்த்தால் இன்னும் அதற்கான விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வறுமை, வளரும் சூழல் என்று பார்த்தாலும் அதிலுமும்முழுமையான திருப்தியான வரையறை கிடைக்கவில்லை.   மரபணு சார்ந்து யோசித்தாலும் அதிலும் விடை இல்லை. ஆனால் இரண்டுமே ஏதோ ஒருவகையில் சைக்கோபாத் விஷயத்தில் பங்களிக்கிறது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சைக்கோபாத்கள் குற்றங்களை செய்தாலும் கூட மணவாழ்க்கை அடிப்படையில் கவனமாக இருப்பவர்கள்தான். விலக்கப்பட்ட கனிகள் சுவையுடையவை என எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் சொல்வது போல, சைக்கோபாத்கள் மீது காதல் கொண்டு ஈர்ப்பு கொண்டு மணம் செய்துகொள்ளும் பெண்கள் பலருண்டு. இவர்களைப் பயன்படுத்திக் கொண்டு கழற்றிவிட்டு செல்லும் ஆட்கள் நிறையப் பேர் உண்டு.   இதனால் குழந்தைகளுக்கு குறைவேதும் கிடையாது. இப்படி வளருபவர்கள் பின்னாளில் என்னவாகிறார்கள் என்பதுதான் முக்கியமான கேள்வி. இதுபோல ஒரு குற்றவாளியின் கதையைப் பார்ப்போம்.   இந்த குற்றவாளி, இசைக்கலைஞர்களை அறிமுகம் செய்துகொண்டிருந்தார். எனவே, அவர்களுடன் இருந்த தொடர்பை பயன்படுத்தி அடுத்த தலைமுறை இசைக்கலைஞர்களாக ஆக

மூளையில் ஏற்படும் தவறான சிக்னல்களே ஆளுமை பிறழ்வுக்கு காரணம்!

படம்
  பொய்கள், ஏமாற்றுவது ஆகியவற்றுக்கு காலாவதி காலம் என்று ஒன்றுண்டு. எனவே, தங்களது பொய்கள் பிறருக்கு தெரிந்தால் பிரச்னையாகிவிடும் என சைக்கோபாத்கள் , வேறு வேறு நகரங்களுக்கு நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இப்படி செல்லும் பயணத்தில்தான் காதலும், உடலுறவும், அடுத்த தலைமுறையும் உருவாகின்றனர். சீனு வைட்லாவின் படத்தின் பாத்திரங்கள் போல தாங்கள் உருவாக்கிய பொய் உலகத்தில் அவர்களே மாட்டிக்கொள்ள நேரிடும்போது, உடனே அதிலிருந்து விலகி காணாமல் போய்விடுகின்றனர். வேறு நகர், வேறு நண்பர்கள். நட்புக்குழுக்கள், காதலிகள், திருமணங்கள் என வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். இதில் சில கோட்பாடுகளைச் சொல்லுகிறார்கள். அதாவது, சைக்கோபாத்களுக்கு மூளையில் குறிப்பிட்ட பகுதி முழுமையான வளர்ச்சி பெறுவதில்லை.இதனால்தான் அவர்களால் அவர்கள் பெற்ற குழந்தையைக் கூடன வளர்க்க முடிவதில்லை. மேலும் அவர்களின் தூக்கம் குறைவு என்பதால் மூளையின் வளர்ச்சியும் மிக குறைவாகவே உள்ளது என வாதிடுகிறார்கள். இதை தன்முனைப்பு அதிகம் கொண்ட, கோபம் கொண்ட குழந்தைகளுக்கும் கூட பொருத்திப் பார்க்கலாம். இயல்பு, ஊக்கம், நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றை பலரும் கு

குழந்தைக்கு பெற்றோர்தான் அனைத்தையும் கற்றுத்தரவேண்டும் - மாயாஸ் அம்மா - ஸ்வாதி ஜெகதீஷ்

படம்
  ஸ்வாதி ஜெகதீஷ், எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார். அங்கு அவரின் கருவில் உள்ள குழந்தையை சோதித்தவர்கள், பிறப்புறுப்பையும் (அல்குல்) அனுமதியின்றி தொட்டு பார்த்தனர். இது ஸ்வாதியின் மனதை பாதித்தது. பிறகு அவர் தனது குழந்தையை கோவாவில் நீரில் குழந்தையை பெறும் முறையில் பெற்றெடுத்திருக்கிறார். அதற்கும் இப்போது அவரைப் பற்றி பேசுவதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்கிறீர்களா? இன்றைக்கும் திரைப்படம் பார்ப்பதில் குடும்ப படம், இளவயதினர் பார்ப்பது என சில தடைகள் உண்டு. சமூகத்தில் பொது இடத்தில் செக்ஸ், வஜினா என்று பேசிப்பாருங்கள். உங்களை ஒதுக்கிவிடுவார்கள். அதுபோன்ற பாலியல் சொற்களைக்   கொண்ட கல்வியை ஸ்வாதி பேசி வருகிறார். இதற்கெனவே கோயம்புத்தூர் பேரன்டிங் நெட்வொர்க் என்ற தன்னார்வ நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு மூலம் பெண்கள், பெற்றோர் என பலருக்கும் குழந்தை நலம், குழந்தை வளர்ப்பு பற்றி கல்வியைக் கற்றுத் தந்து வருகிறார். ஸ்வாதியை எப்படி அடையாளம் காண்பது, மாயாஸ் அம்மா என்றால் கோவையில் தன்னார்வ தொண்டு வட்டாரத்தில் இவரை அடையாளம் காணலா

இரு கைகள் இல்லாமல் காலில் தேர்வு எழுதி ஆங்கில முதுநிலைப்பட்டம் வென்ற பெண்!

படம்
  நெருங்கிய உறவில் திருமணம் செய்வது மருத்துவ அறிவியல் அடிப்படையில் குழந்தைகள் ஊனமாக முக்கிய காரணம் என அறிந்திருப்பீர்கள். ஆனால் கிராமங்களில் இன்றும் சொத்து, உறவு என ஏதோ காரணம் காட்டி பெண்ணை அவளது தாய்மாமனுக்கு திருமணம் செய்வது நடந்து வருகிறது. ஆர்காடு கிராமம் முகையூர் கிராமத்தில் வாழ்ந்த வீரம்மாளின் மகள் மாயாவுக்கும் இப்படித்தான் அவளது மாமாவுடன் திருமணம் நடந்தது. ஆனால் குழந்தை பிறந்தபோதுதான் திருமணத்தில் கோரமான விளைவு தெரிய வந்தது. பிறந்த குழந்தைக்கு இரண்டு கைகளும் இல்லை. குழந்தையைப் பார்க்க வந்த உறவினர்கள், குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம் என கூறியிருக்கிறார்கள். ஆனால் பேத்தியை வீரம்மாள் அப்படியெல்லாம் கைவிடவில்லை. நான் உயிரோடு இருக்கும்வரை பேத்தி என்னோடு இருக்கட்டும் என நினைத்து குழந்தையை துணியில் பொதிந்து தூக்கி வந்துவிட்டார். இப்படி குழந்தை ஊனமாக பிறப்பதற்கு காரணம், உறவுமுறை திருமணம் என உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் கூறியிருக்கிறார். இப்படித்தான் வளர்ந்த பெண் குழந்தை வித்யா ஶ்ரீ இன்று ஆங்கிலப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவராக, அரசு ஆசிரியையாக மு

குழந்தை கடத்தலைத் தடுத்து அப்பாவின் களங்க கறையைத் துடைக்கும் மகன் - ட்ரிகர் - அதர்வா, தான்யா - சாம் ஆண்டன்

படம்
  ட்ரிகர் இயக்கம் சாம் ஆண்டன் நடிப்பு அதர்வா, தான்யா பாலச்சந்திரன், முனீஸ்காந்த், சின்னிஜெயந்த் இசை ஜிப்ரான்   அப்பாவின் கடந்த கால அவமானத்தை துடைக்கப் போராடும் மகனின் கதை. அல்சீமரால் அதர்வாவின் அப்பா அருண்பாண்டியன் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார். அவருக்கு இருக்கும் நினைவு எல்லாம் தான் ஒரு வழக்கு தொடர்பாக விசாரித்த தகவல்கள் மட்டுமே. அதை மட்டுமே காகிதத்தில் கிறுக்கி சுவற்றில் மறக்கக் கூடாது என ஒட்டி வைத்திருக்கிறார். அதை அதர்வா பார்த்து அதில் உள்ள மர்மம் என்ன என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். அதற்கான வாய்ப்பு இயல்பாகவே அவருக்கு ஆயுதக்கடத்தல் மூலமாக கிடைக்கிறது. அந்த வழக்கை ஆராயும்போது அதர்வாவுக்கு வழக்கின் அடிப்படை விஷயமாக பேரல்லல் கிரைம் என்பது புரிய வருகிறது. இதை வைத்து வழக்கை எப்படி தீர்த்தார் என்பதே படம்.   வேகமாக காட்சிகள் நகரவேண்டிய படம். அதை ஒளிப்பதிவாளரும், சண்டைப்பயிற்சி கலைஞரான திலீப் சுப்பராயனும் புரிந்துகொண்டு பணியாற்றி இருக்கிறார்கள். இதனால் சண்டைக்காட்சிகள் என வரும்போது   பார்ப்பவர்கள் வயிற்றில் அட்ரினலின்   சுரக்கிறது. சாம் ஆண்டனின் இயக்கத்தில் ஹ

தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகரிக்கிறது!

படம்
           ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகரிக்கிறது! இந்தியாவில் தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலம், சுதந்திரமடைந்த காலம் தொட்டு தமிழ்நாடு மத்திய அரசுக்கு ஈட்டித்தரும் வரி வருவாய் அதிகம். மக்கள்நலத்திட்டங்களால் மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சி கிடைத்துள்ளது. ஆனால் குழந்தைகள், பெண்களின் ஆரோக்கியம் பற்றிய விவகாரத்தில் இன்னும் பின்தங்கியே உள்ளது. அண்மையில் ஐசிடிஎஸ் - தமிழ்நாடு அரசு இணைந்து செய்த மருத்துவ ஆய்வில் தமிழ்நாட்டில் மதுரை மாநகரம் குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் முதலிடத்தில் உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளில் 2.5 சதவீதம் பேர் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் பாடிமாஸ் இன்டெக்ஸ் என்ற அளவுகோல் மூலம் அங்கன்வாடிகளில் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம் உள்ள நகரங்களாக மதுரை - 3,322, திருவண்ணாமலை - 2,369, சேலம் - 2,175, கடலூர் - 2,128, திண்டுக்கல் - 1,917 அடையாளம் காணப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து பற்றாக்குறை குறைவாக உள்ள மாநிலங்கள் தூத்துக்குடி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை

கெவூடில் நாயைப் பராமரிப்பது எப்படி?

படம்
  பெரும்பாலான மக்கள் இன்று  அபார்ட்மெண்ட், வில்லா என வசிக்கத் தொடங்கிவிட்டனர். இவர்களுக்கு ஏற்றதுபோலத்தான் செல்லப்பிராணிகளையும் வளர்க்கிறார்கள். அப்படியல்லாதபோது அது தனிப்பிரச்னையாக மாறிவிடும். கெவூடில், கெவாலியர் கிங் சார்லஸ் ஸ்பேனியல், பூடில் என இரு நாய் இனங்கள் சேர்ந்து உருவான நாய் இனம். சிம்பிளாக கிராஸ் ப்ரீட். சாலா கலப்பினம் ....லயன் +டைகர் = லைகர் போலத்தான்.  வீட்டுக்குள் இருந்தாலே போதும்.... கெவூடில் பெரும்பாலும்  வீட்டுக்குள் அறைக்குள் இருக்க நினைக்கும் நாய் தான். கூடவே அதன் சகாவாக மனிதர்கள் இருக்கவேண்டும். இல்லையெனில் விரைவில் ஏங்கிப்போய்விடும்.  பொதுவாக இதன் உயரம் 40 செ.மீ. எடை 5 முதல் 12 கி.கி தான். சிறியதாக இருக்கும். எளிதாக கையாளலாம். கன்றுக்குட்டி போல இருந்தால் பாசத்தால் மேலே தாவினால் ஓனரை ஐசியூவில் வைத்து காப்பாற்ற வேண்டியிருக்கும். சில கட்டளைகளை சொல்லி முதலிலேயே பழக்கினால், அதை கெவூடில் கேட்கும். பின்பற்றும். குறிப்பாக வெளியில் சென்று மலம் கழிப்பது, சிறுநீர் பெய்வது ஆகியவற்றை.... வியாபாரம் வேண்டாமே? எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். அவர் குடும்பத்தொழிலே ஆடை வி

பதில் சொல்லுங்க ப்ரோ! - தூக்க மாத்திரைகள் எப்படி வேலை செய்கின்றன?

படம்
  இல்லஸ்டிரேஷன் - டங்கா பாலமுருகன் பதில் சொல்லுங்க ப்ரோ? தூக்கமாத்திரைகள் எப்படி வேலை செய்கின்றன? மென்மையான வேதிப்பொருட்களைக் கொண்ட தூக்க மாத்திரைகள் அனைத்திலும் ஆன்டிஹிஸ்டாமைன் சமாச்சாரங்கள் இருக்கும். இவை, நியூரோடிரான்ஸ்மீட்டரான ஹிஸ்டாமைன் செயல்பாட்டை நிறுத்தி வைக்கிறது. இதனால் உங்களுக்கு உடல் களைப்பானது போல தோன்றும். இந்த மாத்திரைகள், காபா எனும் மூளையில் தூக்கத்தை வரவைக்கும் ரிசெப்டருடன் இணைந்து வேலை செய்கின்றன.  குழந்தைகள் அதிக நேரம் தூங்குவது ஏன்?  புதிதாக பிறந்த குழந்தைகள் தினசரி 20 மணி நேரம் தூங்குவார்கள். பிறகு அவர்களின் வயது ஒன்றாகும்போது தூங்கும் நேரம் 11-12 மணிநேரம் என குறையும். இப்படி வெறித்தனமாக குழந்தைகள் தூங்குகிறார்களே சிலர் ஆச்சரியப்படுவார்கள், தூக்கம் வராதவர்கள் இதனை சற்றே டோன் மாற்றிக்கூட சொல்லுவார்கள். இதற்கு முக்கியமான அறிவியல் காரணம், குழந்தைகளின் மூளை மெல்ல உருவாகி மேம்பாடு அடைவதுதான். எனவே வயது வந்தவர்களை விட குழந்தைகள் அதிக நேரம் தூங்குகிறார்கள். இந்த தூக்கத்திற்கு ஆர்இஎம் தூக்கம் என்று பெயர். இதோடு உடல் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்களும் பொங்கிப் பெருகிப் பாய

தனது நாவல் பாத்திரங்களை ஒரே நாவலில் வலம் வரச்செய்த பாலபாரதி! - கடிதங்கள் - த.சீனிவாசன்

படம்
    10 திடீரென நேர்ந்த விபத்து ! 26.2.2021 அன்பு நண்பர் சீனிவாசன் அவர்களுக்கு , வணக்கம் . நலமா ? அறிவியல் நேர்காணல்களை எழுதிக் கொண்டு இருக்கிறேன் . இதனை ஓராண்டுக்கு முன்னரே எழுதினேன் . நான் வேலை செய்யும் தினசரிக்காக எழுதினேன் . ஆனால் அங்கு பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை . தற்போது தனி நூலாக மாற்றி வெளியிட நினைத்துள்ளேன் . புத்தக காட்சியில் காமிக்ஸ் நூல்களை தேடிப்பார்க்க வேண்டும் . இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் அங்கு செல்வேன் என்று நினைக்கிறேன் . எனது ஆசான் குங்குமம் ஆசிரியர் கே . என் . சிவராமன் அவர்களை சந்திக்க நினைத்தேன் . ஆனால் அவர் ஏதோ விபத்தில் சிக்கி கையில் காயத்துடன் இருந்தார் . அவரது அம்மாவின் நலம் பற்றிக் கேட்டபோது அடிபட்ட தகவலை சொன்னார் . வருத்தமாக இருந்தது . டிஸ்கவரி இந்தியா நூலை மெல்லத்தான் படிக்கக முடிகிறது . நடப்பு ஆண்டில் உடல் மனம் உள்ளே போன்ற இயல்பிலான உளவியல் நூலை எழுதி தொகுக்க வேண்டும் . நான் எழுதிய மருத்துவம் சார்ந்த நூல்களில் பரவாயில்லை என்று எனக்குத் தோன்றிய நூல் அதுவே . 2021 ஆம் ஆண்டில் நூலை செம்மைப்பட