இடுகைகள்

பாதிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனிமைப்படுத்தலால் பிரபலமான எழுத்தாளர்கள்!

படம்
giphy நோய் தாக்காமல் தனியாக இருக்கச்சொல்லி அரசு உத்தரவிட்டிருக்கிறது. உற்சாகமாக வேலை பார்க்கும் மனிதர்களையும் இந்த காலகட்டம் சோம்பேறிகளாக்கி விடக்கூடும். இதனால் இப்படி நோய் பரவிய,  போர் காலகட்டங்களில் சாதனைகள் படைத்த எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் பற்றிய செய்திகள் இதோ.. ஷேக்ஸ்பியர் தனது கிங் லியர் எனும் படைப்பை எழுதும்போது நோய்களுக்கு பயந்து தனிமையில் இருந்தார். அப்போது வெளியில் பிளேக் நோய் வேகமாக பரவி வந்தது. அப்பாதிப்பிலிருந்து தப்பிக்க நினைத்தார் ஷேக்ஸ்பியர். அப்போது அரசு பொது இடங்கள் அனைத்தையும் மூடியிருந்தது. இதனால் இவர் பங்குதாரராகவும், எழுத்தாளராகவும் இருந்த கிங் நாடக கம்பெனியை நடத்த முடியவில்லை. இக்காலகட்டத்தில் கிங் லியர், மேக்பத், ஆன்டனி அண்ட் கிளியோபாட்ரா ஆகிய படைப்புகளை எழுதி முடித்தார். ஐசக் நியூட்டன்  இவர் ஷேக்ஸ்பியருக்கு பின்னர் இதே போல தனியாக இருந்து அறிவியல் சாதனைகளை செய்தார். 1665ஆம்ஆண்டு இங்கிலாந்தில் வாழ்ந்த ஐசக் நியூட்டனுக்கு சோதனை பிளேக் வடிவில் வந்தது. அப்போது அவருக்கு இருபது வயது. கேம்பிரிட்ஜ் பல்கலையில் வகுப்புகள் நிறுத்தப்பட்டன. அங்கிருந்த

கோடையில் கொரோனா பரவுமா?

படம்
giphy கொரோனா இறப்பில் இத்தாலி சீனாவை முந்தி முன்னுக்கு வந்துகொண்டிருக்கிறது. இறப்பை தடுக்க முடியுமா என்பதை விட பரவுவதை தடுக்கவே ஆராய்ச்சியாளர்கள் முயன்று கொண்டிருக்கின்றனர். அதனால் பல்வேறு சூழல்களில் கொரோனா வைரஸ் பரவுமா என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்து வருகின்றனர். உடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நீர்த்திவலைகள் வழியாக பரவும் கொரோனாவை எதிர்க்கும்  பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். ”கொரோனா வைரஸ் இன்ஃப்ளூயன்சா வைரஸ் போலவேதான் பரவுகிறது. நீர்த்திவலைகளை வழியாக பரவும் அதன் வேகத்தை கட்டுப்படுத்த சூழல்களின் பங்கு உண்டா என ஆராய்ந்து வருகிறோம் ” என்கிறார் ஆய்வாளர் சவீஸ் சஃபாரியன். வைரஸ்களின் மேலோட்டை வெப்பம் பாதிக்குமா என ஆராய்ச்சி செய்வதற்காக  இரண்டு லட்சம் டாலர்களை உதவித்தொகையாக சவீஸ் பெற்றிருக்கிறார். வைரஸ் தானாக எதையும் செய்யும் திறன் கொண்டது அல்ல. பிற உயிரிகளின் செல்களில் நுழைந்து அதன் செயல்பாட்டை முடக்கி தன்னைப் பெருக்கிக் கொள்கிறது. மேற்சொன்ன ஆய்வுக்காக வைரஸ்களின் மேலோடுகளை செயற்கையாக உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாக, இதில் வைரஸ் மரபணுக்கள் இருக்காது. எனவே, வைரஸ் பாதிப்

வீட்டிலேயே தனியறையில் இருப்பது சரியா?

படம்
கொரோனா பாதிப்பு ஏற்பட்டவுடன் பலரும் பரிந்துரைப்பது வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்றுதான். வீட்டிலேயே அலுவலக வேலையைப் பார்ப்பது என்பது அனைவருக்கும் பொருந்தாது. காரணம், அதற்கான அடிப்படை வசதிகளை பலரும் உருவாக்கி வைத்திருக்க மாட்டார்கள். மேலும், வேலை செய்வதற்கான மனநிலையை வீட்டில் உருவாக்கிக்கொள்வது கடினம்,. வீட்டில் இருக்கும்போது, மனைவி பேசுவதைக் கேட்கவேண்டியிருக்கும். குழந்தைகளோடு விளையாட நேரம் ஒதுக்கவேண்டும். இதற்கிடையில் கவனமான ஆபீஸ் வேலையையும் பார்க்கவேண்டும் என்பது பெரும் சுமையாகவே இருக்கும். கணியம் சீனிவாசன் எழுதியுள்ளது போலவே, நேர மேலாண்மை இதில் முக்கியமானது. அதை கடைப்பிடித்து வேலை செய்வது உடனே அனைவருக்கும் சாத்தியமாகாது. மேற்கு நாடுகளில் குழந்தைகளுக்கு தனி அறை உண்டு. அவர்களுடைய பணியை அங்கு வைத்து செய்வார்கள். சாப்பிட, பேச என ஹாலுக்கு வருவார்கள். இந்திய வீடுகளில் இப்படி தனி அறைகளை எதிர்பார்க்க முடியாது. நேரடியாக சொன்னால் இங்கு அந்தரங்கம் என்பதே பொதுவாகத்தான் இருக்கும். வீடு என்பது குறைந்தபட்சம் ஹால், ஒரு அறை, சமையலைறை, கழிவறையோடு இணைக்கப்பட்ட குளியலறை என்றே பொதுவாக இ

Whole foods புகழ்பெற்றது எப்படி?

படம்
pixabay மிஸ்டர் ரோனி முழுமையான உணவு என்று ஒன்று உண்டா? முழுமையான உணவு என்பது அறுசுவையும் சேர்ந்து பாரதி மெஸ்சிலும், சரவணபவனிலும் சாப்பிடுகிறோமே அதுதான். இதுதான என திட்டவட்டமாக கூறமுடியாது. ஆனால் அத்தனை பொருட்களிலும் அளவு குறைத்து வைக்கும் தாராள மனசுக்காரர்கள் இவர்கள்தான். முழுமையான உணவு இயக்கம் 1940ஆம் ஆண்டு தொடங்கி புகழ்பெற்றது. இது எந்த வகையான உணவுமுறை என்றால் பதப்படுத்தாத பொருட்களை சாப்பிடுவதை வலியுறுத்துகிற முறை. இதில் ஆர்கானிக் என்ற வகை, அப்படி இல்லாத வகையும் உண்டு. ஆர்கானிக் என்றால் விலங்குகளின் கழிவுகளை, மரங்களின் இலைகளை உரமாக போட்டு பயிர்களை விளைவிப்பது. முழுமையான உணவு முறையில் செயற்கை உரங்களையும் பயன்படுத்துகிறார்கள். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைய உண்டு. ஆனாலும் இது முழுமையான உணவு முறை என கூற முடியாது. இதில் பதப்படுத்தும் முறைகள் உண்டா? தக்காளியை அப்படியே சாப்பிட  அனைவராலும் முடியாது. அப்படி சமைத்தாலும் குறைந்தளவு வெப்பநிலையை பரிந்துரைக்கின்றனர். காரணம் அதிலுள்ள சத்துகள் இழக்கப்படுவதுதான்.ஆப்பிளைக் கூட தோலை உரிக்காமல் கழுவிவிட்டு அப்படியே சாப்பிடச்

காடுகளை அழித்தால் இனி வரும் காலத்தில் நுண்ணுயிரிகளின் தாக்குதல் கூடும்!

படம்
மரங்களை அழித்தால் நோய் பரவும் ! சோனியா ஷா , எழுத்தாளர் . ஆங்கிலத்தில் : சோபிதா தர் நீங்கள் 2016 ஆம் ஆண்டு எழுதிய பான்டெமிக் என்ற நூலில் கொரோனா தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது என்று முன்னரே கணித்து எழுதியுள்ளீர்கள் . எப்படி ? 2010 ஆம் ஆண்டு ஹைதியில் காலரா பாதிப்பு ஏற்பட்டது . பொதுவாக நாம் காலராவை ஏழைகளுக்கு வரும் நோய் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம் . ஆனால் காலரா பாதிப்பு நியூயார்க் , லண்டன் , பாரிஸ் ஆகிய பகுதிகளை பாதித்தது . இதனை நீங்கள் எப்படி புரிந்துகொள்வீர்கள் . நான் சீனாவில் இன்று நோய் பாதித்துள்ள பகுதிகளை முன்னரே சென்ற பார்வையிட்டுள்ளேன் . த வைரஸ் தாக்குதல்கள் பலமுறை ஒருவரைத் தாக்கும் என்பதை நோய்களின் வரலாறு பற்றி படித்தாலே அறிய முடியும் . நீங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் 300 வைரஸ் கிருமிகள் உருவாகியுள்ளதாக கூறுகிறீர்களே ? அது எப்படி ? நான் கூறியது உண்மைதான் . ஏறத்தாழ உலகில் பரவிய நோய்களில் 60 சதவீதம் விலங்குகள் மூலம் பரவியதுதான் . மிருகங்கள் இன்று வெப்பமயமாதல் மூலம் மனிதர்களின் வாழிடங்களுக்கு நெருக்கமாக வாழ்ந்த

கொரோனோ வைரசை முன்னரே கணித்த அமெரிக்க எழுத்தாளர்!

படம்
pixabay பொதுவாக எழுத்தாளர்களை தீர்க்கதரிசிகள் என்று சொல்லுவதுண்டு. காரணம், அவர்கள் கற்பனையாக யோசித்த விஷயங்கள் திடீரென நிஜத்தில் நடக்கத்தொடங்கும். இதுபோல உலகம் முழுக்க நடப்பது உண்டு. அண்மையில் கொரோனா வைரஸ் உலகம் முழுக்க வேகமாக பரவிவருகிறது. இதன் பாதிப்பை அமெரிக்க எழுத்தாளர் டீன் கூட்ஸ் 1981இல் தான் எழுதிய ஐஸ் ஆஃப் டார்க்னெஸ் என்ற நாவலில் குறிப்பிட்டுள்ளார். இதில் கொலைகார வைரஸின் பெயர் வூஹான் 400. இப்போது உலகம் முழுக்க பரவி வரும் வைரஸ் முதன்முதலில் பரவியது வூஹான் நகரத்திலிருந்துதான் என்பது நினைவுக்கு வருகிறதா? இந்நேரத்தில் மனதில் திகிலும் உடலில் நடுக்கம் இருந்தாலும் நீங்கள் வாசிக்கவேண்டிய இத்தகைய திகில் நாவல்களை சொல்லவேண்டியது எங்கள் கடமை. தி இலியட், ஹோமர் ஹோமர் எழுதிய கிரேக்க கவிதை. இது பிளேக் நோயால் அழிந்த மக்களின் துயர் பற்றி பேசுகிறது. அப்போலோவை கிரேக்க மக்கள் அவமரியாதை செய்ய அவர் கொடுக்கும் சாபத்தால் ஒன்பது நாட்களில் ஏராளமானவர்கள் இறக்கிறார்கள். இத்துயரத்தை இந்த நூல் பேசுகிறது.  தி கோப்ரா ஈவன்ட் – ரிச்சர்ட் பிரிஸ்டன் 1998 நியூயார்க் நகரில் கோப

சிலந்தி தான் கட்டிய வலையில் எப்படி மாட்டிக்கொள்ளாமல் இருக்கிறது?

படம்
giphy மிஸ்டர் ரோனி சிலந்தி தன் வலையில் இரைகளை எளிதாக வீழ்த்துகிறது. ஆனால் அதில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது எப்படி? சிலந்தி பசையை வாயிலிருந்து குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே குவித்து வைக்கிறது. அந்த இடங்களில் மட்டும் சிலந்தி நடந்து செல்வதில்லை. மேலும், அதன் கால்களில் வலையிலுள்ள பசையில் இருந்து விடுபடும்படியான அமைப்பு உள்ளது. நகம் போன்ற அமைப்பு அது. எனவே, சிலந்தி தான் கட்டியவலையில் சிக்கிக்கொள்வதில்லை. வைரஸ்கள்தான் நோயை ஏற்படுத்துகிறதா? அறிவியல்படி இல்லை என்றே கூறவேண்டும். ஆனால் அந்த பாதிப்பிற்கான தூண்டுதலாக இருக்கிறது என சொல்லலாம். எப்படியெனில், வைரஸ் பிற விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. நோய் பரப்பிய குறிப்பிட்ட விலங்குகளான வௌவால், பன்றி, கொசு ஆகியவற்றுக்கு எந்த பாதிப்பும் நேருவதில்லை. ஆனால் மனிதர்களுக்கு வாந்தி, பேதி, காய்ச்சல், உடல் கொப்புளங்கள் ஏற்படுகிறது. இதன் விளைவாக உள்ளுறுப்புகள் சேதமடைந்து மரணம் நேருகிறது. வைரஸை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்திதான் காய்ச்சலை, உடல்நலிவை ஏற்படுத்துகிறது. வைரஸை முழுமையாக உடல் எதிர்ப்பதால் நமக்கு உடல் நலிவின் தீவ

கொரோனா வைரஸ் - கேள்வி பதில்கள்!

படம்
படம்: jPharmaceutical Technology மிஸ்டர் ரோனி ஃப்ளூவுக்கான தடுப்பூசியை கொரோனாவுக்குப் பயன்படுத்தலாமா? குறிப்பிட்ட வைரசுக்கான ஊசி, அந்த வைரசை மட்டுமே தடுக்கும். கொரோனாவுக்கான மருந்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எனவே நீங்கள் ஃப்ளூவுக்கான மருந்தை பயன்படுத்தினால் கொரோனா கட்டுப்படாது. அதற்கு தனி மருந்துகள் சிகிச்சை தேவை. யாரை எல்லாம் தாக்கும்? இப்போதுவரை இதனால் பாதிக்கப்பட்டவர்களின் தோராய வயது 65. இதுதான் வயது என்றில்லை. நமக்கு இப்போது கிடைத்த தகவல்படி இந்த வயது என புரிந்துகொள்ளலாம். ஃப்ளூ காய்ச்சலைப் பொறுத்தவரை இரண்டு வயதிலிருந்து பாதிப்பு தொடங்குகிறது. இதை என்ன சொல்லுவீர்கள்? கர்ப்பிணி பெண்களையும் ஃப்ளூ பாதிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை பல்வேறு நுண்ணுயிரிகளும் பாதிக்கும். எந்த விலங்குகளிலிருந்து வைரஸ் பரவுகிறது? பாம்பு என நண்பர் கொரோனா வைரஸைக்குறிப்பிட்டு அதிரடியாக சொன்னார். ஆனால் உண்மையில் வௌவால்கள், பன்றிகள், கொசு, ஈக்கள் ஆகியவற்றிலிருந்தே அதிகளவு வைரஸ் தொடர்பான நோய்கள் மனிதர்களுக்கு பரவுகின்றன. வைரஸ்களுக்கு உயிருண்டா? செல்களை சுயமாக பெரு

இந்தியாவை மிரட்டும் தொழுநோய்!

படம்
இந்தியாவுக்கு புதிய பெருமை கிடைத்திருக்கிறது. ஆம் வேதனையான பெருமைதான். உலகில் 58 சதவீத தொழுநோய் நோயாளிகள் இந்தியாவில்தான் உள்ளனர். ஹான்சன்ஸ் என குறிப்பிடப்படும் இந்த நோய் மைக்ரோபாக்டீரியம் காலரே என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. கண்கள், மூக்கு, கை, கால்கள் ஆகியவற்றைப் பாதிக்கிறது. இதை ஓராண்டு மல்ட் டிரக் முறையில் மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் கட்டுப்படுத்த முடியும்.  தோலில் ஏற்படும்போது உணர்ச்சியற்ற தன்மை உருவாகும். பின்னர் மெல்ல பல்வேறு உறுப்புகளுக்கு பரவி, அதன் செயல்பாடுகளை பாதிக்கும். கண்களில் தொற்றும்போது, பார்வையிழப்பை ஏற்படுத்துகிறது. 2005ஆம் ஆண்டு தொழுநோய் முற்றிலும் அழிக்கப்பட்டது என்று கூறினர். ஆனால் இந்தியாவில் தொழுநோய் பாதிப்பு முற்றிலும் போகவில்லை. இதனை எளிமையாக ஒழித்துவிட்டோம் என ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் சொன்னாலும் இதனை முற்றிலும் கணிக்க முடியவில்லை என்பதே கள யதார்த்தம். உடல் உறுப்புகளின் உணர்வு குறைவது, வலியற்ற குடல் புண், ஆகியவை ஏற்படும். முன்னமே மருத்துவர்களைக் கண்டு நோய்க்கு மருந்து சாப்பிடாதபோது, நோய் பாதிப்பு இன்னும் கூடுதலாகும். நோய்த்த

வைரஸ்கள் ஏற்படுத்தும் பாதிப்பு!

படம்
giphy மிஸ்டர் ரோனி வைரஸ்கள் நம்மை எப்படி பாதிக்கின்றன? வைரஸ்கள் என்பதை புரதத்தை தம்முள் கொண்டவை. இவை வாழும் செல்களில் உள்ளே புகுந்து தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன. இவை முதலில் உள்ளே புகுந்தவுடன் நோய் எதிர்ப்பு சக்தியுடன் மோதுகின்றன. அவை பலவீனமாக இருந்தால் நமக்கு நோய் ஏற்பட்டுவிடும். உயிருள்ள செல்களில் உள்ளே புகும் வைரஸ், ஸ்டார் ஜெராக்ஸ் போல ஏராளமான காப்பிகளை தன்னைப்போலவே எடுத்து முஸ்லீம்கள் போல குடும்பத்தைப் பெருக்குகின்றன. அந்த செல்களுக்கும் வேலை என சில விஷயங்கள் உண்டு. அவை இயங்காமல் போகும்போது உடலில் பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது, அந்த இடத்தில் வலி, காய்ச்சல், எரிச்சல், சொல்ல முடியாத உணர்வு ஆகியவை ஏற்படும். சார்ஸ், கொரோனா ஆகிய வைரஸ் பாதிப்புகளில் சுவாசப்பாதை பாதிக்கப்படும். கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நிம்மோனியா ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உடலை குலைக்கும் நோய்! - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
pixabay 9 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம். நான் இங்கு நலம். நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வெயில் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகம் காய்கிறது. பருத்தி உடையைத் தவிர வேறெதுவும் அணிய முடியவில்லை. பருத்தியானாலும் பதினைந்து நிமிடத்தில் நனைந்து வியர்வை வாடை மூக்கைத் துளைக்கிறது. இந்த ஞாயிறு எங்கும் வெளியில் செல்லவில்லை. அறையில் ஜனா சமைத்தார். இரவில் உள்ளே படுக்க முடிவதில்லை. கடுமையான புழுக்கம். மழை, வெயில் இரண்டையும் அப்படியே இந்த அறை அப்படியே கண்ணாடி போல பிரதிபலித்துவிடுகிறது. சில நாட்களாக மாடியில்தான் தூக்கம். நான் எழுதும் கட்டுரைகளை நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள். கவனிப்பீர்கள் என்று நம்புகிறேன். முத்தாரத்திற்கு எந்த விளம்பரமும் வருவதில்லை. இதனால் இதற்கு விற்பனையும் கிடையாது. மஞ்சள் காமாலைக்காக கீழாநெல்லி மருந்தை தினசரி குடித்து வருகிறேன். வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்டாலே உடல் சரியாகிவிடும். முழு உடல் பரிசோதனையை நீங்கள் செய்யப்போவதாக அம்மா சொன்னார். இதற்கான சோதனைகளை மருத்துவமனைக்கு மருத்துவமனை மாற்றிச் சொல்லுகின்றனர். பொரித்தல், வறுத்தல் இல்லாத

எஸ்பிரஸ்ஸோ காபி குடித்திருக்கிறீர்களா? - தெரிஞ்சுக்கோ டேட்டா

படம்
giphy தெரிஞ்சுக்கோ! எஸ்பிரஸ்ஸோ காபியை பனகல் பார்க் அருகிலுள்ள ஸ்டார் பக்ஸில் கூட நீங்கள் அருந்தியிருக்கலாம். அக்காபி பற்றி மேலதிகமாக நமக்கு என்ன தெரியும்? காபியின் விலை பற்றி புகார் சொல்லாதீர்கள். அதைத்தவிர வேறுவிஷயங்கள் பற்றி இங்கே பார்ப்போம். ஒரு அவுன்ஸ் எஸ்பிரஸ்ஸோ காபி குடித்தால், அதேயளவு  திராட்சையில் உள்ள 2.66 கலோரி சக்தி கிடைக்கும்.  30 மி.லி. காபியில் உள்ள காபீன் 5.7 மணிநேரம் வயது வந்தோருக்கு ஊக்கமூட்டியாக உள்ளது. எஸ்பிரஸ்ஸோ காபியை 20 முதல் 30 நொடிகளில் தயாரித்து மக்களுக்கு வழங்குகிறார்கள்.  இக்காபியில் ஒரு ஷாட் என்பது 30 மி.லி., இரண்டு ஷாட் என்பது 60 மி.லி. இந்த இரண்டு விதங்களில் காபியை கடைகளில் வழங்குகிறார்கள்.  30 மி.லி காபியில் 1500 வேதிப்பொருட்கள் உள்ளன.  இத்தாலியர்கள் ஆண்டுக்கு 14 பில்லியன் கப்புகள் காபியை குடிக்கிறார்கள். வயது வந்தோருக்கு தலைக்கு தலா 275 கப்புகள் காபி என்பது தோராய அளவு.  தொடக்கத்தில் காபி மெஷின்கள் மணிக்கு ஆயிரம் கப்புகள் காபியை தயாரித்து வழங்கின.  ஜென்னாரோ பெலிசியா என்ற காபியின் சுவையை தரம் பிரிப்பவர், தன் நாக்கை 10 ம

மனநல பிரச்னைகளை சினிமாவில் சரியாக காட்டுவதில்லை! - ஷகீன் பட்

படம்
மன அழுத்தம், விரக்தி, மனச்சோர்வு ஆகியவற்றை இன்று அனைவரும் பேசி வருகிறோம். காரணம், பணி, குடும்பம் என பல்வேறு விஷயங்கள் இடியாப்பம் போல ஒன்றாக கலந்து நம் மனதைப் பாதிக்கின்றன.   திரைப்பட எழுத்தாளர் ஷகீன் பட் இதுபற்றிய ஐ ஹேவ் நெவர் பீன் அன் ஹேப்பியர் என்ற நூலை எழுதியுள்ளார். தன் இருபது ஆண்டு, மனச்சோர்வு விடுதலைப்போராட்டம் பற்றிய நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார். இதுபற்றிய தகவல்களைப் பார்ப்போம். நீங்கள் எழுதியுள்ள நூலில் மனச்சோர்வு எப்படி உறவுகளை பாதித்தது என்று கூறியுள்ளீர்கள். உங்கள் குடும்பத்தில் இதனை எப்படி எதிர்கொண்டார்கள்.? என் குடும்பத்தில் எனக்கு ஏற்பட்ட மனச்சோர்வு பிரச்னை பற்றி அனைவருக்கும் தெரியும். இதனால் நூல் வெளியானபோது எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் அறையில் இருக்கும்போது, தனியாக இருக்க விரும்ப அதிகம் விரும்பியிருக்கிறேன். மனதிற்கு நெருக்கமானவரிடம் கூட சில விஷயங்களை நாம் பகிர்ந்துகொள்ள முடியாது. இதனால்தான் நான் பிறருக்கு சொல்லவேண்டிய விஷயங்களை நூலாக்கியுள்ளேன். இதனை படிக்கும்போது குழந்தை வளர்ப்பை ஆண்களும் செய்யவேண்டும், மனச்சோர்வு காலகட்டம், பாதிப்பு ஆக

வெறும் வயிற்றில் காபி குடித்தால் செரிமானம் பாதிக்கப்படுமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி காபியை வெறும் வயிற்றில் குடிக்கலாமா? நெஸ்லே சன்ரைஸ், ப்ரூ இன்று பலரின் காலை நேரங்கள் விடிவதில்லை. ஆனால் இது சரிதானா? தண்ணீருக்கு அடுத்து அதிகப்படியாக உலகமெங்கும் பருகப்படுவது காபிதான். இதற்கு சாதகமான ஆராய்ச்சிகள் உலகமெங்கும் உண்டு. எப்படி கோலா பானங்களில் பாதிப்பில்லை என்று சொல்கிறார்களோ அதேபோல காபியையும் சொல்வதுண்டு. வெறும் வயிற்றில் காபியை குடித்தால் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அதிகரிக்கும். அதுவும் கூட தற்காலிகமாகத்தான். பின்னர் தொடர்ந்து நீங்கள் காபியை வெறித்தனமாக காலையில் குடித்து வந்தால், இதன் அளவு குறைந்துவிடும், காஃபீன் அளவு தினசரி 400 மி.கி அளவுக்கு குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது. எதற்கு தெரியுமா? அப்போதுதான் காபிக்கு நீங்கள் அடிமையாக இல்லாமல் இருப்பீர்கள். இதன்விளைவாக காபியை குடித்தே ஆகவேண்டும் என்ற நிலை வராது. காபி குடித்தால் எந்த விளைவும் ஏற்படாமல் இருந்தால் எப்படி? பதற்றம், கழிச்சல், ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னைகள் ஏற்படும். இதற்கு பதிலாகத்தான் தூக்கம் வராமல் சக்திமானாக உட்கார்ந்து வேலை செய்வதற்கான சக்தியை காபி வழங்குகிறது. வெறும்

ஆட்டிச பாதிப்பைக் குறைக்கும் புதிய மருந்து!

படம்
ஆட்டிச பாதிப்பை குறைக்கும் மருந்து சோதனை முறையில் செயல்படுத்தி வெற்றி கொண்டுள்ளது உலக ஆராய்ச்சியாளர்கள் குழு. ஆட்டிசம் என்பதை தன்முனைப்பு குறைபாடு என தமிழில் கூறலாம். இதில் பிற குழந்தைகள் இயல்பாக செய்வதை குறிப்பாக பட்டன் போடுவது, உடை விலகுவதை நாமாக உணர்ந்து சரி செய்வது போன்ற விஷயங்களை இவர்களால் செய்ய முடியாது. ஒருங்கிணைந்த செயல்பாடுகளாக இவர்களின் செயல்பாடுகள் இருக்காது. இப்படி பல்வேறு விஷயங்களில் கூட்டுச் செயல்பாடாக ஆட்டிசம் உள்ளதால், இதற்கு மருந்து அளித்து முன்னேற்றம் காண்பது கடினமாக உள்ளது. ஆனாலும் இதற்கான சரியான தெரபிகளை அளித்தால், உலகில் பிறருடன் கலந்து வாழ்வதற்கான திறன்களை ஆட்டிசக் குழந்தைகள் பெற்றுவிட முடியும்.  மூளையிலுள்ள முக்கியமான நரம்பு தகவல் தொடர்பு மையம் ஜிஏபிஏ. இதன் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் ஆட்டிசம் ஸ்பெக்டரம் டிஸ்ஆர்டராக மாறுகிறது.. சோதனையில் பயன்படுத்திய பூமெட்டனைடு எனும் மருந்து குழந்தைகளுக்கு சிறப்பான செயல்பாட்டால் முன்நிற்கிறது. ஏறத்தாழ ஆட்டிசத்திற்கு கடந்த 50 ஆண்டுகளில் சிறப்பான பலன்களைக் கொடுத்த மருந்து என இதனைக் குறிப்பிடுகிறார்கள்.  இம்மருந்த

குழந்தைகளைக் கொல்லும் இந்திய மாவட்டம்!

படம்
தி வீக் மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம், வேதனையான விஷயங்களுக்கு முதன்மை பெற்றுள்ளது. ஆம் இங்கு ஏறத்தாழ 2016-18 காலக்கட்டத்தில் மட்டும் 1, 100 குழந்தைகள் இறந்துபோயுள்ளனர். காரணம் வறுமை, வேலைவாய்ப்பின்மையால் ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறைதான். ஏழு வயதான ஜானேஷ் என்ற சிறுவனின் எடை பத்து கிலோ. தன் தாய் தலைவருடினால் மட்டுமே கண்திறந்து பார்க்கிறான். புன்னகைக்க மட்டுமல்ல அழக்கூட உடலில் சத்தில்லை. அவனுக்கு தர ஊட்டச்சத்தான சோறு தாயிடம் இல்லை. என்ன செய்ய முடியும்? இங்குள்ள ஐந்து பழங்குடி கிராமங்களில் குழந்தைகள் தினத்தன்று செய்த ஆய்வில் மருத்துவர்களே அதிர்ந்து போனார்கள். அங்கு வந்த பெரும்பாலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்குறைபாடு இருந்தது. பால்கர் மாவட்டம் எங்கோ தூரதேசத்தில் இருக்கிறது என்று நினைக்காதீர்கள். மும்பையிலிருந்து நூறு கி.மீ தொலைவில்தான் இருக்கிறது. அகமதாபாத்திலிருந்து மும்பைக்கு விரைவில் அமைக்கப்படவிருக்கும் புல்லட் ரயில் இந்த ஊரின் பாதையில்தான் அமையவிருக்கிறது. இதற்கான மதிப்பீடு 2 லட்சம் கோடி ரூபாய்கள். மும்பை தன் வருமானத்தில் 15 ஆயிரம் கோடிக்கும் குறைவாகத்தான் மக

நஞ்சுக்கொடியை கர்ப்பிணிகள் சாப்பிடலாமா ?

படம்
pixabay மிஸ்டர் ரோனி குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணிகள், தங்கள் நஞ்சுக்கொடியை சாப்பிட விரும்புகிறார்கள் என்று செய்தியில் படித்தேன்.உண்மையா? நஞ்சுக்கொடி குழந்தைக்கு ஊட்டம் தருவதற்காக உருவாகிறது. அப்பணி முடிந்த தும் அது கழிவாக உடலிலிருந்து வெளியேறுகிறது. அதனை சாப்பிடுவது மூலம் கர்ப்பிணிகள் இழந்த ரத்தத்தை, சத்துக்களை பெறுகிறார்கள் என்பது தவறான வதந்தி. எனவே, நஞ்சுக்கொடியை சாப்பிடுவதை விடுத்து சத்தான பழங்கள், தின்பண்டங்களை வாங்கி அல்லது செய்து சாப்பிடுங்கள். நஞ்சுக்கொடியில் ஈகோலி பாக்டீரியா, காட்மியம் எனும் சிக்கல்கள் உள்ளன. எனவே, மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது. நன்றி -பிபிசி 

இந்திய அரசிடம் ஊட்டச்சத்து பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை!

படம்
ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதே எங்கள் லட்சியம்! டிஜிட்டல் இந்தியா என்ற நாளிதழ்களில் விளம்பரம் செய்தாலும், இந்தியா குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து விஷயங்களில் தடுமாறி வருகிறது. அண்மையில் வெளியான உலகளவிலான பட்டினி நாடுகளின் தொகுப்பு பட்டியலில் இந்தியா 102 வது இடத்தைப் பெற்றுள்ளது. மொத்தம் 112 நாடுகள் கொண்ட இப்பட்டியலில் இந்தியாவின் இடம் பரிதாபகரமானது. தெற்காசிய நாடுகளில் மிகவும் கீழே சரிந்துள்ளது இந்தியா. போஷன் அபியான் திட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர் சந்திரகாந்த் எஸ் பாண்டேவிடம் இதுபற்றி பேசினோம். உத்தரப்பிரதேசத்தில் உள்ள பத்து மாவட்டங்களில் ஆறு மாவட்டங்கள் தீவிரமான ஊட்டச்சத்து பற்றாக்குறையை வெளிப்படுத்தியுள்ளன. அதனைத் தீர்க்க என்ன முயற்சிகளை எடுத்துள்ளீர்கள்.  உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஊட்டச்சத்து பிரச்னை கொண்ட மாவட்டங்கள் நாங்கள், இதற்கான குழுக்களை அமைத்து இப்பிரச்னையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். இதற்கான களப்பணியில் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டீர்கள்? நாங்கள் என்ஆர்சி எனும் மையங்களை அமைத்து ஊட்டச்சத்து பற்றாக்குறையான குழந்தைகளை பராமரித்து அவற்றை நீக