இடுகைகள்

பெரும் கேள்விகளுக்கு எளிய பதில்கள்!

படம்
புத்தகம் புதுசு! The Poison Squad: One Chemist's Single-Minded Crusade for Food Safety at the Turn of the Twentieth Century Deborah Blum 352 pp,Penguin Press 1883 ஆம் ஆண்டு விவசாயத்துறையில் வேதியியலாளராக பொறுப்பேற்ற டாக்டர் ஹார்வி வாஷிங்டன் வில்லி, பாலில் கலந்த பார்மால்டிஹைடு, இறைச்சியில் பதப்படுத்த சேர்த்த போரக்ஸ் உள்ளிட்ட வேதிப்பொருட்களை தடை செய்து உணவுப்பொருட்களுக்கான விதிகளை(1906, வில்லி சட்டம்) வலுவாக்கினார். அவர் தொடங்கிய நச்சுதடுப்புதுறை பற்றிய சுவாரசிய தகவல்களை இந்நூல் பகிர்கிறது. Brief Answers to the Big Questions Stephen Hawking 144 pages, Bantam ஐன்ஸ்டீனுக்கு பிறகு உலகறிந்த விஞ்ஞானி அமரர் ஸ்டீபன் ஹாக்கிங், விண்வெளியில் மனிதர்கள் வசிக்கமுடியுமா? கடவுள் உண்டா? என ஏராளமான கேள்விகளுக்கு பதில் கூறியுள்ள நூல் இது.

பன்னாட்டு நிறுவனங்களின் சூழல் படுகொலை!

படம்
மாசுபாட்டில் நெ.1! உலகளவில் இயற்கைச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களின் பட்டியலை க்ரீன்பீஸ் அமைப்பு மற்றும்   Break Free From Plastic (2016)    எனும் இரு அமைப்புகளும் இணைந்து வெளியிட்டுள்ளன. உலகம் முழுவதும் 42 நாடுகளில் 239 கழிவுகளை அகற்றும் திட்டங்களின் கீழ் 1,87,000 பிளாஸ்டிக் கழிவுகளை ஆராய்ந்து இவ்வமைப்பினர் பட்டியலை உருவாக்கியுள்ளனர்.  குளிர்பான நிறுவனமான கொககோலா முதலிடத்தையும் குளிர்பானம், சிப்ஸ், ஃபாஸ்ட்புட் உணவகங்களை நடத்தும் பெப்சி இரண்டாவது இடத்தையும், உணவுப்பொருட்களை தயாரித்து வரும் நெஸ்லே மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. “பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பன்னாட்டு நிறுவனங்களை வரிசைப்படுத்துவதன் காரணம், அவை இயற்கை வளங்களை அழித்து பிளாஸ்டிக் மாசுபாட்டை வளர்ப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கத்தான். இனிமேலும் குப்பைகளை உருவாக்குவதாக மக்களை குற்றவுணர்வுக்கு உள்ளாக்க முடியாது. பிளாஸ்டிக் பொருட்கள் அதிகரிப்பதில் நுகர்பொருள் நிறுவனங்களுக்கும் பங்குண்டு” என்கிறார் பிரேக் ப்ரீ ஃப்ரம் பிளாஸ்டிக் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான வான் ஹெர்னான்டெஸ்.

நிகரகுவா பாரஸ்ட் கம்ப்!

படம்
அடக்குமுறைக்கு எதிராக ஓட்டம்! உங்களுடைய தாய்நாடு சிறியதாக இருக்கலாம்; ஆனால் கனவு பெரியதாக இருக்கலாம் என்று கூறிய நிகரகுவா கவிஞர் ரூபம் டாரியோவின் வரிகளை சொல்லிக்காட்டியபடி ஓடுகிறார் நிகரகுவாவைச் சேர்ந்த வனேகஸ். நிகரகுவா ஆட்சியாளர் ஆர்டேகாவின் வன்முறை ஆட்சிக்கு எதிராக நூறு டிகிரி வெயிலில் தன் நீரிழிவு நோயையும் பொருட்படுத்தாமல் ஓடுபவரை போலீஸ் புன்னகையோடு பார்க்கின்றனர். “ஆர்டேகாவின் ஊழல் ஆட்சிக்கு எதிரான என்னுடைய முயற்சியை மக்களும் வரவேற்கிறார்கள்” எனும் 63 வயதான வனேகஸ், தினசரி 21 கி.மீ ஓடுகிறார். அண்மையில் நடந்த மாணவர்களின் போராட்டத்தை காவல்துறை கொண்டு முடக்கிய அரசின் மூர்க்கமான வன்முறையால் 36 பேர் இறந்துபோனதை வனேகஸ் மறக்கமுடியாமல் தவித்து ஃபாரஸ்ட்கம்ப் பட டாம் ஹேங்க்ஸ் போல ஓட முடிவெடுத்திருக்கிறார். வணிக மேலாண்மையாளராகவும் டிஜேவாகவும் பார்ட்டியில் பரபரப்பான இருந்தவருக்கு ஏற்பட்ட நிரீழிவு பிரச்னை அவரது வாழ்வை மாற்றியது. பக்கத்து வீட்டிற்கு கூட பெயர்தெரியாமலிருந்த வனேகஸ் இன்று நிகரகுவாவின் தேசிய நாயகனாக மாறியிருக்கிறார். இருமுறை கைது செய்யப்பட்டு கொலைமிரட்டல் விடுக

டெக் புதுசு!

படம்
டெக் புதுசு! Jaquet Droz Signing Machine சினிமா, எழுத்து, தொழில் என பிரபலமாக இருந்தால் நன்கொடை, ரசிகர்கள் என கையெழுத்து கேட்டு வரும் கூட்டத்தை சமாளிக்க 585 பாகங்களைக் கொண்ட இக்கருவி உதவும். இதன் மூலம் ஈசியாக கையெழுத்து போட்டு கைவலியிருந்து தப்பிக்கலாம். ரூ. 3,59,04,015 BllocZero18 ஸ்மார்ட்போன் போதையிலிருந்து மீட்க வந்த ப்ளோக்ஜீரோ போன், ரூட் எனும் நுட்பத்தை பயன்படுத்துகிறது. மோனோகுரோம் ஸ்கிரீன் முதல் பயன்படுத்தும் ஆப்ஸ் வரை சிம்பிளாக இருக்கும். 13 எம்பி கேமரா, 4K வீடியோ என ஸ்மார்ட்போன் அம்சங்களுக்கும் குறைவில்லை. ரூ.35,073 RedKey கணினிகளில் உங்களது   முக்கியமாக தகவல்கள் அழிக்கமுடியாதபடி மாட்டிக்கொண்டுவிட்டதா? சிம்பிளாக ரெட்கீயை வாங்கி யுஎஸ்பியில் பொருத்தினால் அத்தனை தகவல்களும் நிரந்தரமாக அழிந்துவிடும். பிரைவசிக்கேற்ற மென்பொருள். ரூ.6,057 Sennheiser CX Sport விளையாட்டு வெறியர்களுக்கான இயர்போன். சிம்பிளான எடையில் இயங்கும் இயர்போனை ரிமோட் மூலம் இயக்கலாம். ரூ. 11,626

இளைஞர்களை புரிந்துகொள்வது ஈஸி!

படம்
 நேர்காணல் இளைஞர்களை புரிந்துகொள்வது ஈஸி! பேராசிரியர் சாராஜேன் பிளாக்மோர். தமிழில்: ச.அன்பரசு நம்மில் பலருக்கும் இளைஞர்களை புரிந்துகொள்ள முடியாத அங்கலாய்ப்பு உள்ளது. ஏன்? இளைஞர்களின் மூளை தொடர்ச்சியாக வளர்ந்துவருகிறது. மூளையை எம்ஆர்ஐ ஸ்கேன் வழியாக ஆராய்ச்சி செய்யும் வரை மூளை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வளர்வதில்லை என பல ஆராய்ச்சியாளர்கள் கூறினர். ஆனால் மூளை இருபது வயதுக்கு பிறகும் வளர்ச்சியடைவதே உண்மை. குழந்தைகளின் மூளை –- இளைஞர்களின் மூளை என்ன வேறுபாடு? குழந்தைகளின் மூளையிலிருந்து இளைஞர்களின் மூளை உறுதியான பல்வேறு மாற்றங்களை(வடிவம், ஆற்றல் உட்பட) காண்கிறது. இவை ஒரே நாளில் மாற்றங்களைப் பெறுவதில்லை. என்ன மாற்றங்கள் என கூறுங்கள். வெள்ளை, கருப்பு என இருபகுதிகளால் மூளை உருவாகியுள்ளது என உதாரணமாக கொள்வோம். மூளையின் நியூரான்களை இணைப்பதற்கு சினாப்செஸ் என்று பெயர். வெள்ளை நிறப்பகுதியில் உள்ள பல்வேறு இழைகள் மூலம் பிறருடன் தொடர்புகொள்வதற்கான விஷயங்கள் நடக்கின்றன. டீன் ஏஜ் பருவத்தில் வெள்ளைநிறப்பகுதி அதிவேகமாக வளர்ச்சிபெறுகிறது.  அதேநேரம் கறு

ஆக்ரோஷ காளைச்சுறா!

படம்
ஆபத்தான சுறா! காளைச்சுறா(அல்லது நிகரகுவா சுறா), Carcharhinus leucas எனும் குடும்பத்தைச் சேர்ந்தது. மிதவெப்ப சூழலில் வாழ விரும்பும் காளைச்சுறா, உலக இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தால் அழியும் நிலையிலுள்ள விலங்காக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆண் சுறா 2.25 மி.மீ நீளமும், 95 கி.கி எடையும் கொண்டது. பெண் சுறாக்கள் ஆண் சுறாக்களை விட நீளமும் எடையும் அதிகம் கொண்டவை. நன்னீர், கடல்நீர் இரண்டிலும் உடலின் ஆக்சிஜனை கட்டுப்படுத்தி வாழும் திறன் கொண்ட காளைச்சுறா, கணிக்கமுடியாத ஆக்ரோஷ நடத்தை கொண்டவை. பகலிலும் இரவிலும் வேட்டையாடும் டேலன்ட் கொண்ட காளைச்சுறா, தன் இன சுறாக்கள், டால்பின்கள், சிறுமீன்களை ஆசையாக சாப்பிடும். பதினாறு ஆண்டுகள் வாழும் காளைச்சுறாவுக்கு வெள்ளைச்சுறா, புலிச்சுறா, முதலைகள் கடும் சவால் கொடுக்கின்றன. மனிதர்களை சுறாக்கள் தாக்கின என்று செய்தி வந்தால் கண்ணை மூடிக்கொண்டு காளைச்சுறா தாக்கியது என புரிந்துகொள்ளலாம். மனிதர்களை தாக்குவதில் காளைச்சுறா, வெள்ளைச்சுறா, புலிச்சுறா ஆகிய மூன்றும் முன்னணி வகிக்கின்றன. தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, நியூகினியா ஆகிய நாடுகளில் பரவல

ஸ்மார்ட்போனில் பிஸினஸ்! - அத்.24

படம்
ஸ்டார்ட்அப் மந்திரம் 24! –  கா.சி.வின்சென்ட்     இணையம் உள்ளங்கையளவு ஸ்மார்ட்போனில் சுருங்கிவிட எதற்கு தயக்கம்? இந்த டெக்னாலஜியை நன்கு புரிந்துகொண்டதால்தான் தாரிகா ஃபேஸ்புக்கிலேயே தன் கேக்குகளை விற்பனை செய் து சாதிக்கிறார்.   ஸ்விட்சர்லாந்தில் வசித்தபோது எக்லெஸ் கேக்குகளை செய்து விற்றுவந்த தாரிகா , கணவரின் வேலைமாற்றம் காரணமாக பெங்களூருவுக்கு வந் தார். அப்போது வீட்டிலேயே கேக்குகளை தயாரித்து விற்கலாமே என முடிவு செய்தார் . ஃபேஸ்புக் உதவியது; தயாரித்த கேக்குகளின் புகைப்படத்தை ஷேர் செய்ய , ஆர்டர்கள் குவிந்தன.   ஃபேஸ்புக் இதற்கென மார்க்கெட் பிளேஸ் என்ற வசதியை வழங்குகிறது . ஆர்டர்களுக்கான தொகையை மொபைல் வாலட் மூலம் பெறமுடியும் . ஃபேஸ்புக் , வாட்ஸ்அப் , இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பயன்படுத்தி கேக் , சோப்பு , கைவினைப்பொருட்கள் ஆகியவற்றை வீட்டிலேயே செய்து பலரும் விற்று வருகின்றனர் . " நான் ஃபேஸ்புக்கில் 2012 ஆம் ஆண்டு என் பிஸினஸைத் தொடங்கினேன் . இன்று இ தன்வழியாக மட்டுமே 60% வாடிக்கையாளர்கள் எனக்கு உண்டு " என்கிறார் ஜெய்ப்பூரைச் சேர்ந்த பேஷன் டிசைனரான கீர்த்திச

இளைஞர்கள் வேலையில் எதிர்பார்ப்பது என்ன?

படம்
இளைஞர்களின் வேலை ரகசியங்கள்! இன்ஸ்டாகிராமில் நொடிக்கு நொடி செல்பி போட்டோக்களை பதிவிடும் உழைப்போ, மெசஞ்சர்களில் வீடியோகாலில் ஆரவாரமாக கொண்டாடும் பர்த்டே பார்ட்டியோ இன்றைய யூத்களின் அதிரிபுதிரி செயல்பாடுகளுக்கு பெற்றோர் உட்பட உலகில் யாருமே அணைபோட முடியாது. இதில் அவர்களின் வேலை, ஹாபி, ஆபீஸ் சூழல் என அனைத்துமே உள்ளடங்கும். எல்லையில்லாத சுதந்திரம் என்பதையே பல்வேறு வார்த்தைகளில் விதவிதமான தொனிகளில் எதிரொலிக்கும் யூத் கூட்டம், 9 டூ 10 வேலையை விட ஷிப்ட் வேலைகளை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. சுதந்திரமும், பணமும் கிடைக்கும் கால்டாக்சி(உபர்,ஓலா), உணவு டெலிவரி வேலைகளையும்(ஸ்விக்கி, உபர் ஈட்ஸ்) இன்று இளைஞர்கள் ஏற்று செய்ய முன்வந்துள்ளது மாறிவரும் வேலைக் கலாசாரத்தின் முக்கிய அறிகுறி. "காலையில் கிளம்பி மாலை வீடு திரும்பும் 9 டூ 5 வேலை எனக்கு அலர்ஜி. வேலை செய்யும் அனுபவம் அனுதினமும் ப்ரெஷ்ஷாக இருந்தால் சூப்பர்தானே!" என உற்சாகமாக குரல் கொடுக்கிறார் மேக் மை பெயிண்டிங் நிறுவனத்தைச் சேர்ந்த ஆதித்யா தங். முதலில் வியட்நாமில் அதிகாரியாக வேலை செய்து வந்தவர்

ஊட்டச்சத்துக்குறைவால் தவிக்கும் இந்தியா!

படம்
ஊட்டச்சத்துக்குறைவால் தடுமாறும் குழந்தைகள்! - புதிய இந்தியாவின் மறுபக்கம்  தியேட்டரில் பாடும் தேசியகீதத்திற்கான மரியாதையை விட பள்ளிகளின் பிரேயரில் ரத்தசோகையால் மயங்கி விழும் மாணவிகளின் உடல்நலனில் இந்திய அரசு அக்கறை காட்டவேண்டும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறது. நவ.4 அன்று வெளியாகியுள்ள குளோபல் நியூட்ரிஷியன் ரிப்போர்ட் 2017. ஐந்து வயதுக்குட்பட்ட 38% குழந்தைகளும், அதில் 21% குழந்தைகள் உயரத்திற்கேற்ப எடையின்றி தவிப்பதாக பொட்டில் அறையும் நிஜத்தை கூறுகிறது ஊட்டச்சத்து அறிக்கை. இதில் 6-59 மாதக்குழந்தைகளில் 58.4% பேருக்கு ரத்தசோகை பிரச்னையும் உண்டு என்பது ஷாக் தகவல். மக்கள்தொகையில் 6 வயதுக்கும் குறைந்த குழந்தைகளின் விகிதம் 13.6%. ஊட்டச்சத்துக்குறைவு அச்சுறுத்தலை 2022க்குள் ஒழித்துவிட நிதி ஆயோக், குடும்பநல அமைச்சகம் பிளான் செய்து செயல்பட்டு வருவதால் பலன்களை இனிமேல்தான் அறியமுடியும். நாட்டிலுள்ள 14 லட்சம் அங்கன்வாடிகளிலும் இதுவரை   கர்ப்பிணி தாய்களின் வீடுதேடி ஊட்டச்சத்துப் பொருட்களை வழங்கிவந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட்டிருக்கிறது. கடும் சர்ச்சை கிளம்பிய தனது செ

அடையாளமற்ற இந்தியர்கள்! - அவலவாழ்வும் துயரும் அலசல் பார்வை!

அடையாளமற்ற இந்தியர்கள்!  உழைத்து அடையாளமற்று இறக்கும் வட இந்தியர்களின் அவல வாழ்க்கை. தமிழகத்தின் பெருநகரங்களிலுள்ள ஹோட்டல், பழச்சாறு கடை, பாலகம், தேநீர்க்கடை என அனைத்து இடங்களிலும் மாறாத ஒற்றுமை, மேற்சொன்ன அனைத்து இடங்களிலும் வேலை செய்யும் பணியாளர்கள்தான். இவர்கள் ஒருவர் கூட தமிழர்களாக இருக்க வாய்ப்பு கிடையாது. அனைவருமே உ.பி, பீகார், மேற்கு வங்கத்திலிருந்து இடம்பெயர்ந்த வட இந்தியர்கள்தான். இந்தி, போஜ்புரி பாடல்கள் ஒலிக்க எந்திரமாய் சுழன்று பிரமிக்க வைக்கிறார்கள். தமிழகம் மட்டுமல்ல கர்நாடகம், ஆந்திரா, கேரளா என சொந்த ஊர்க்காரர்கள் பலரும் நவீன பணம் கொழிக்கும் வேலைகளுக்கு மாறிவிட உடலுழைப்பு தொடர்பான வேலைகளுக்காகவே பல்லாயிரக்கணக்கான வட இந்தியர்கள் ரயில்களில் முட்டிமோதி ஏறிவருகின்றனர். இதற்கு முக்கியக்காரணம், கல்வி அறிவால் தென்னிந்தியர்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொண்டதும், கல்வியறிவின்மையால் வட இந்தியர்கள் அதனை தவிர்த்ததும்தான். அதிகரிக்கும் கிடுகிடு மக்கள்தொகை வட இந்தியாவில் வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்த வளம்மிகுந்த சமூகத்திட்டங்கள் செழித்த தென் மாநிலங்கள் வட இந்தியர்களை

படேல் தேசத்தில் என்ன நடக்கிறது?

படம்
படேல் தேசம் உடைகிறது! இந்தியாவின் ஒற்றுமைக்கு  உதாரணம் என குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை இந்திய அரசு கூவிவரும்போது. அங்கிருந்து பீகார் உத்தரபிரதேச தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர். சர்தார் சரோவர் அணையில் உருவாகியுள்ள சிலையின் மதிப்பு 2 ஆயிரத்து 900 கோடி. இதன் தொடக்கவிழாவின் போது, ஹர்திக் படேல் தொடங்கவிருக்கும் கிசான் சத்தியாகிரகமும் நடைபெறவிருக்கிறது. குஜராத்தில் படேலின் சிலையை செய்வதிலும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் உழைப்பு உண்டு. மாநிலத்தின் பொருளாதாரத்திலும் 4 மில்லியன் தொழிலாளர்களின் பங்களிப்பு உள்ளது. குஜராத்தின் 5 தாலுக்காக்களில் வறுமை தாண்டவமாடுகிறது. நர்மதா பகுதியில் மக்கள் நீர்தட்டுப்பாட்டால் நாயாய் அலைந்து வரும் இடங்களில்தான் 430 மில்லியன் டாலர் செலவில் இந்தியாவின் ஒற்றுமையை புகைப்படங்களில் பதிவு செய்ய படேல் சிலை உருவாகியுள்ளது. குஜராத்தில் நடந்த சிறுமி கற்பழிப்பு விவகாரத்தால் பீகார், உ.பி தொழிலாளர்கள் அனைவரும் போலீசாரின் வற்புறுத்தல் மற்றும் தாக்குதல் பயத்தால் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர். படேல் சிலை செய்ய ஒப்பந்தமான 4500 பேரில் பாதிப்